search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் 2010-ம் ஆண்டு அறிமுகம் ஆனார்.
    • 2022-க்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஷிகர் தவான். இவர் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக 34 டெஸ்ட், 167 ஒருநாள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    50 ஓவர் போட்டிகளில் 6,793 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 44.11 ஆகும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2315 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 40.61 ஆகும்.

    38 வயதாகும் ஷிகர் தவான் 2010-ம் ஆண்டு இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார். கடைசியாக 2022 ஒருநாள் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். டெஸ்ட் போட்டியில் 2018-ம் ஆண்டுக்குப்பின் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2021-க்குப் பிறகு டி20 கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 சதங்களும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களும் அடித்துள்ளார்.

    • இரு அணிகளும் 164 ரன்னில் ஆல்அவுட் ஆனதால் சூப்பர் ஓவர்.
    • முதன்முறை இரு அணிகளும் தலா 10 ரன்களும், 2-வது முறை தலா 8 ரன்களும் அடித்தன.

    கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மகாராஜா டிராபி என்ற பெயரில் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஹூப்ளி டைகர்ஸ்- பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

    முதலில் விளையாடிய ஹூப்ளி டைகர்ஸ் அணி 20 ஓவரில் 164 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஒரு கட்டத்தில் அந்த அணி திணறியபோது மணிஷ் பாண்டே 33 ரன்களும், அனீஷ்வர் கவுதம் 30 ரன்களும் சேர்த்தனர். பெங்களூரு டைகர்ஸ் அணி சார்பில் லாவிஷ் கவுசல் சிறப்பாக பந்து வீசி 17 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார்.

    பின்னர் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. மயங்க் அகர்வால் 34 பந்தில் 54 ரன்கள் விளாசினார். என்ற போதிலும் போட்டியை வெற்றிகரமாக முடிக்கவில்லை. பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியும் 164 ரன்னில் ஆல்அவுட் ஆனதால் போட்டி "டை"யில் முடிந்தது.

    இதனால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் இரண்டு அணிகளும் தலா 10 ரன்கள் அடித்தன. இதனால் 2-வது முறை சூப்பர் ஓவரை கடைபிடிக்கப்பட்டது. 2-வது முறை இரு அணிகளும் தலா 8 ரன்கள் அடித்தன. இதனால் 3-வது முறை ஓவர் கடைபிடிக்கப்பட்டது.

    இந்த முறை பெங்களூரு பிளாஸ்டர்ஸ் 12 ரன்கள் அடித்தது. ஆனால் ஹூப்ளி அணி இதை சேஸிங் செய்து வெற்றி பெற்றது. டி20 கிரிக்கெட்டில் இதுவரை மூன்று முறை சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டதா? எனத் தெரியவில்லை. இதனால் இநத் போட்டி வரலாற்றில் இடம் பெறும் ஒரு போட்டியாக அமைந்துள்ளது.

    • தென்ஆப்பிரிக்காவின் ஸ்டப்ஸ் 42 பந்தில் 76 ரன்கள் விளாசினர்.
    • நிக்கோலஸ் பூரன் 7 சிக்சர்கள் விளாசி தென்ஆப்பிரிக்கா பவுலர்களை திணறடித்தார்.

    வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்தது.

    தொடக்க வீரர்கள் ரிக்கெல்டன் (4), ரீஸா ஹென்ட்ரிக்ஸ் (4) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த கேப்டன் மார்கிராமுமம் 14 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.

    டிரஸ்டன் ஸ்டப்ஸ் 42 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 76 ரன்கள் விளாசினார். பாட்ரிக் க்ருகர் 32 பந்தில் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 44 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் மேத்யூ ஃபோர்டு 3 விக்கெட்டும், ஷமர் ஜோசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. அலிக் அதானஸ், ஷாய் ஹோப் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அதானஸ் 30 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 40 ரன்களும், ஷாய் ஹோப் 36 பந்தில் 51 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்.

    விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரன் ஆட்டமிழக்காமல் 26 பந்தில் 2 பவுண்டரி, 7 சிக்சருடன் 65 ரன்கள் விளாச வெஸ்ட் இண்டீஸ் 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நிக்கோலஸ் பூரன் ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 2-வது போட்டியில் நாளை நள்ளிரவும், 3-வது போட்டி 27-ந்தேி நள்ளிரவும் நடைபெறுகிறது.

    முன்னதாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா 1-0 என வெற்றி பெற்றது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 448 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
    • அந்த அணியின் முகமது ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான், வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. சயீம் அயூப் அரை சதம் அடித்து 56 ரன்னில் அவுட்டானார். சவுத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினர்.

    4-வது விக்கெட்டுக்கு இணைந்த சேர்ந்த சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான் ஜோடி 240 ரன்கள் எடுத்தது. சவுத் ஷகீல் 141 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 448 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    வங்கதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, வங்கதேச அணி முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷட்மன் இஸ்லாம் பொறுப்புடன் ஆடினார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 93 ரன்னில் அவுட்டானார். மொமினுல் ஹக் 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மூன்றாம் நாள் முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 316 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 55 ரன்னும், லிட்டன் தாஸ் 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    வங்கதேசம் முதல் இன்னிங்சில் இன்னும் 132 ரன்கள் பின்தங்கியுள்ளது.

    • முதலில் ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுத்துள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன்னில் ஆல் அவுட்டானது. தனஞ்ஜெயா டி சில்வா 74 ரன்னும், மிலன் ரத்னாயகே 72 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், சோயிப் பஷீர் தலா 3 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்று இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 61 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்துள்ளது. ஜேமி ஸ்மித் 72 ரன்னும், அட்கின்சன் 4 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். ஹாரி ப்ரூக்56 ரன்னும், ஜோ ரூட் 42 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 111 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து 122 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இலங்கை அணி சார்பில் அஷிதா பெர்னாண்டோ 4 விக்கெட்ம், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    • ஆப்கானிஸ்தான் அணி துணை பயிற்சியாளராக ஆர்.ஸ்ரீதர் நியமிக்கப்பட்டார்.
    • இவர் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளராக இருந்தவர்.

    காபூல்:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளரான ஆர்.ஸ்ரீதர் ஆப்கானிஸ்தான் அணியின் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களுக்கான ஆப்கானிஸ்தான் அணியின் துணை பயிற்சியாளராக இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இவருடன் நீண்ட காலம் ஒப்பந்தம் மேற்கொள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.

    • நான் விக்கெட் கீப்பரை மறந்துவிட்டேன். அதிர்ஷ்டமாக ராகுல் டிராவிட் அணியில் இருந்தார்.
    • நான் பகுதி நேர விக்கெட் கீப்பரை தேர்வு செய்திருப்பதாக எல்லோரும் நினைத்திருப்பார்கள்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் சில நாட்களுக்கு முன், ஆல் டைம் இந்தியா லெவன் அணியை வெளியிட்டார். அதில் எம்.எஸ். டோனிக்கு இடம் கொடுக்கவில்லை.

    தினேஷ் கார்த்திக் ஆல் டைம் ஆல் ஃபார்மட் இந்திய அணி:-

    வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அனில் கும்ப்ளே, ஜஸ்ப்ரித் பும்ரா, ஜஹீர் கான். 12-வது வீரர்: ஹர்பஜன் சிங்

    கேப்டன் யார் என்றும் அறிவிக்கவில்லை. விக்கெட் கீப்பர் யார் என்றும் அறிவிக்கவில்லை. அத்துடன் 1983-ம் ஆண்டு முதன்முறையாக இந்தியாவுக்கு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்று கொடுத்த கபில் தேவ் அணியில் இடம் பெறவில்லை. ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வாங்கிக் கொடுத்த எம்.எஸ். டோனியுடன் பெயரும் இடம்பெறவில்லை.

    இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அத்துடன் ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளானது. இந்த நிலையில் டோனியை சேர்க்காதது மிகப்பெரிய தவறு எனத் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தினேஷ் கார்த்திக் கூறுகையில் "நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். உண்மையாகவே இது மிகப்பெரிய தவறு. என்னுடைய இந்த பேச்சு வெளியானது பின்னர், இது குறித்து உணர்ந்தேன். நான் 11 பேர் கொண்ட அணியை தேர்வு செய்யும்போது பல்வேறு விசயங்கள் நடைபெற்றன.

    நான் விக்கெட் கீப்பரை மறந்துவிட்டேன். அதிர்ஷ்டமாக ராகுல் டிராவிட் அணியில் இருந்தார். நான் பகுதி நேர விக்கெட் கீப்பரை தேர்வு செய்திருப்பதாக எல்லோரும் நினைத்திருப்பார்கள். நான் உண்மையாகவே ராகுல் டிராவிட்டை விக்கெட் கீப்பர் என நினைக்கவி்லை. விக்கெட் கீப்பராக இருந்த நான் விக்கெட் கீப்பர் இருப்பதை மறந்துவிட்டேன் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? இது ஒரு தவறு" எனத் தெரிவித்துள்ளார்.

    • டோனி தொடங்கி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள யுவராஜ் சிங் பயோபிக் வரை இந்த டிரண்ட் தொடர்ந்து வருகிறது.
    • பயோபிக்கில் ஹீரோவாக நடிக்க யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராகச் இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. உலகக்கோப்பையுடன் தனது பதவிக்காலத்தை முடித்துள்ள ராகுல் டிராவிட் மும்பையில் நடந்த கிரிக்கெட் வீரர்களுக்கான  தனியார் விருது விழாவில் தனது பயோபிக் படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

    சமீப காலமாக விளாயாட்டு வீரர்களின் வாழ்க்கையை படமாக எடுப்பது டிரண்ட் ஆகி வருகிறது. டோனி தொடங்கி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள யுவராஜ் சிங் பயோபிக் வரை இந்த டிரண்ட் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ட்ராவிட் -இடம், உங்களின் பயோபிக் படமாக்கப்பட்டால் யாரை உங்களின் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்ந்தெடுப்பீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு சிரித்தபடி பதிலளித்த டிராவிட், நல்ல சம்பளம் கொடுத்தால் நானே எனது பயோபிக்கில் நடித்து விடுகிறேன் என்று தெரிவித்தார். இதனால் விருது அரங்கம் சிரிப்பலையில் ஆழ்ந்தது. தொடர்ந்து பேசிய டிராவிட் நாடு முழுவதும் பயணித்து ரசிகர்களின் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் அனுபவிக்க விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார். 

    • முதல் இன்னிங்சில் ஷகீல், ரிஸ்வான் அபாரமாக விளையாடி சதம் விளாசினர்.
    • பாகிஸ்தான் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்யும்போது ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்திருந்தார்.

    பாகிஸ்தான்- வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதன் இன்னிங்சில் பாகிஸ்தான் 448 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஸ்வான் அப்போது 171 ரன்கள் எடுத்திருந்தார். இன்னும் 29 ரன்கள் எடுத்தால் இரட்டை சதம் அடித்திருப்பார். அதற்குள் கேப்டன் மசூத் டிக்ளேர் செய்து அவரது இரட்டை சதத்தை தடுத்துவிட்டார் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

    அதேவேளையில் 141 ரன்கள் விளாசிய பாகிஸ்டதான் அணியின் ஷகீல் கூறியதாகவது:-

    நாம் ரிஸ்வான் டபுள் செஞ்சூரி அடிக்கவில்லை என்று பார்க்கிறோம். முதல் இன்னிங்ஸ் டிக்ளேர் ரிஸ்வான் இரட்டை சதம் அடிப்பதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட முடிவு என்று நான் நினைக்கவில்லை.

     ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் டிக்ளேர் செய்ய இருக்கிறோம் என்பதை ரிஸ்வானிடம் தெளிவாக சொல்லப்பட்டது. அதனால் எப்போது அறிவிப்போம் என யோசனை அவருக்கு இருந்தது. நாம் குறைந்தபட்சம் 450 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இவ்வாறு ஷகீல் தெரிவித்துள்ளார்.

    ரசிகர்கள் பாகிஸ்தானின் டிக்ளேர் முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை. 500 ரன்களை தொட்டதும் டிக்ளேர் செய்திருக்கலாம். அப்படியிருந்திருந்தால் ரிஸ்வான் டபுள் செஞ்சூரி அடித்திருப்பார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • ஹாரி ப்ரூக் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • ஜேமி ஸ்மித் 72 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

    இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி நேற்றுதினம் மான்செஸ்டரில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தனஞ்ஜெயா டி சில்வா 74 ரன்களும், மிலன் ரத்னாயகே 72 ரன்களும் சேர்க்க இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன்னில் ஆல்அவுட் ஆனது. கிறிஸ் வோக்ஸ், சோயிப் பஷீர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்று முன்தினம் முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து விக்கெட் ஏதும் இழக்காமல் 22 ரன்கள் எடுத்திருந்தது.

    நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடக்க வீரர் பென் டக்கெட் 18 ரன்னிலும், லாரன்ஸ் 30 ரன்னிலும் வெளியேறினர். கேப்டன் ஒல்லி போப் 6 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    நட்சத்திர வீரர் ஜோ ரூட் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஹாரி ப்ரூக் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். அதபின் வந்த விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித்தும அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது.

    நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 61 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்துள்ளது. ஜேமி ஸ்மித் 72 ரன்னுடனும், அட்கின்சன் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணியில் அதிகபட்சமாக அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற இருக்கிறது.

    • வங்கதேசம் அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தது.
    • முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 448 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

    பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது. ராவல்பிண்டியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு சுமாரான துவக்கம்தான் கிடைத்தது. அந்த அணியின் அப்துல்லா ஷபிக் 2 ரன்களிலும் அடுத்து வந்த கேப்டன் ஷான் மசூத் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவரைத் தொடர்ந்து களணிறங்கிய பாபர் அசாம் ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

    இரண்டாவது வீரராக களமிறங்கிய சயிம் ஆயுப் நிதானமாக ஆடி அரைசதம் கடந்தார். இவரும் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சௌத் ஷகீல் பொறுமையாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டுள்ளார். இவருடன் ஆடிய முகமது ரிஸ்வான் பொறுப்பாக ஆடினார்.

    முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து158 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷகீல் மற்றும் ரிஸ்வான் முறையே 57 மற்றும் 24 ரன்களை எடுத்த நிலையில் களத்தில் உள்ளனர். வங்காளதேசம் சார்பில் ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஹசன் மஹ்மூத் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், ஷகீல் மற்றும் ரிஸ்வான் தொடர்ந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இருவரும் சதம் அடித்த நிலையில், ஷகீல் 141 ரன்களை எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த சல்மான் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    ஒருபக்கம் ரிஸ்வான் தொடர்ச்சியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். முதல் இன்னிங்ஸில் 113 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி 448 ரன்களை எடுத்த போது முதல் இன்னிங்ஸில் டிக்ளேர் செய்தது. வங்கதேசம் சார்பில் மெஹ்டி ஹாசன் மற்றும் ஷகிப் அல் ஹாசன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 27 ரன்களை சேர்த்துள்ளது. வங்கதேசம் அணி முதல் இன்னிங்ஸில் 421 ரன்கள் பின்தங்கியுள்ளது. 

    • இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
    • இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா கடைசியாக 2007 ஆம் ஆண்டு வெற்றிப்பெற்றது.

    அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இந்த தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இன்று வெளியிட்டுள்ளது.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா கடைசியாக 2007 ஆம் ஆண்டு வெற்றிப்பெற்றது. அதைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடந்த போட்டி டிராவில் முடிந்தது. கடசியாக ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலயாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்றது.

    இந்நிலையில் தற்போது இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20 -ம் தேதி லீட்ஸ் மைதானத்திலும், 2-வது போட்டி ஜூலை 2-ம் தேதி பர்மிங்காமிலும், 3-வது போட்டி ஜூலை 10-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்திலும், 4-வது போட்டி மான்செஸ்டரிலும், 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜூலை 31-ம் தேதி ஓவல் மைதானத்திலும் நடைபெற உள்ளது.

    முன்னதாக இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    ×