search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
    • கோலி 125 போட்டிகளில் விளையாடி மைல்கல்லை கடந்தார்.

    இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவ். முழு நேர கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தனது பயணத்தை வெற்றியுடன் துவங்கியுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 43 ரன்களில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 58 ரன்களை விளாசி இருக்கிறார். போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து, போட்டியின் ஆட்ட நாயகன் விருது சூர்யகுமார் யாதவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது வென்றதன் மூலம் சூர்யகுமார் யாதவ் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளார். சூர்யகுமார் யாதவ் 69 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். மறுபக்கம் விராட் கோலி 125 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை கடந்தார்.

    விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடிய கடைசி போட்டி 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த போட்டி முடிந்ததும் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    அதிக ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள்:

    சூர்யகுமார் யாதவ் 69 போட்டிகளில் 16 முறை (இந்தியா)

    விராட் கோலி 126 போட்டிகளில் 16 முறை (இந்தியா)

    சிக்கந்தர் ராசா 91 போட்டிகளில் 15 முறை (ஜிம்பாப்வே)

    முகமது நபி 129 போட்டிகளில் 14 முறை (ஆப்கானிஸ்தான்)

    ரோகித் சர்மா 159 போட்டிகளில் 14 முறை (இந்தியா)

    • திருப்பூர் தமிழன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை எடுத்தது.
    • அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றின் கடைசி கட்ட போட்டிகள் திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் முதலில் பேட் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை எடுத்தது. திருப்பூர் சார்பில் மான் பாப்னா 50 ரன்களை எடுத்தார். 170 ரன்களை துரத்திய திருச்சி அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது.

    அந்த அணியின் வசீம் அகமது, ராஜ்குமார் முறையே 10 மற்றும் 8 ரன் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த ஷியாம் சுந்தர் 1 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் திருச்சி அணி 16.5 ஓவர்களில் 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இதன் மூலம் திருப்பூர் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திருப்பூர் சார்பில் நடராஜன் மற்றும் அஜித் ராம் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூம் திருப்பூர் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

    • சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் பொறுப்புடன் ஆடினர்.
    • பதும் நிசங்கா 79 ரன்களை விளாசினார்.

    இலங்கை நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

    பல்லகெலெவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் சிறப்பாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 74 ரன்களை எடுத்த போது சுப்மன் கில் 34 ரன்களில் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் 40 ரன்களை எடுத்த போது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

    அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் பொறுப்புடன் ஆடினர். இருவரும் முறையே 58 மற்றும் 49 ரன்களை எடுத்து அவுட் ஆகினர். இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை குவித்தது.

     


    கடின இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. அந்த அணியின் பதும் நிசங்கா 79 ரன்களையும், குசல் மென்டிஸ் 45 ரன்களையும் விளாசினர். அடுத்து வந்தவர்களில் குசல் பெரரா மற்றும் கமின்டு மென்டிஸ் முறையே 20 மற்றும் 12 ரன்களை எடுத்து அவுட் ஆகினர்.

    இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இவர்களில் யாரும் இரட்டை இலக்க ரன்களை எட்டாத நிலையில், கேப்டன் சரித் அசலங்கா மற்றும் தசுன் சனகா, தில்ஷன் மதுசனகா ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர்.

    இந்தியா சார்பில் ரியான் பராக் 1.2 ஓவர்களை மட்டும் வீசி 5 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    இலங்கை அணி 19.2 ஓவர்களில் 170 ரன்களை எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக இந்திய அணி 43 ரன்களில் வெற்றி பெற்று அசத்தியது.

    • டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்தியா 213 ரன்களை குவித்தது.

    பல்லகெலே:

    இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், சுப்மன் கில் இறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் பவர்பிளே முடிவில் இந்திய அணி 74 ரன்களை சேர்த்தது.

    முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 34 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஜெய்ஸ்வால் 40 ரன்னில் அவுட்டானார்.

    தொடர்ந்து இறங்கிய சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் ஜோடி பொறுப்புடன் ஆடியது. அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 26 பந்தில் அரை சதம் அடித்து 58 ரன்னில் ஆட்டமிழந்தார். பாண்ட்யா 9 ரன்னில் அவுட்டானார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களைக் குவித்தது.

    இலங்கை அணி சார்பில் பதிரனா 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய சேலம் அணி 171 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய கோவை 175 ரன்களை எடுத்து வென்றது.

    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல்லில் நடந்து வருகின்றன. இன்று நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பர்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கோவை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. ராஜேந்திரன் விவேக் 43 ரன்கள் எடுத்தார்.

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஹரிஷ்குமார் 19 பந்தில் 42 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுஜய் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஷாருக் கான் 18 பந்தில் அரை சதம் கடந்து அவுட்டானார்.

    கடைசி 11 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சேலம் அணி சிறப்பாக பந்து வீசியது. இதனால் கோவை அணி கடைசி பந்தில் பவுண்டரி அடித்து திரில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் கோவை அணி பெற்ற 6வது வெற்றி இதுவாகும்.

    சேலம் சார்பில் பொய்யாமொழி 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    • இந்திய டி20 அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுகிறார்.
    • தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற கம்பீருக்கு இது முதல் தொடராகும்.

    பல்லகெலே:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இந்திய டி20 அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுகிறார்.

    இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது.

    டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கவுதம் கம்பீருக்கு இது முதல் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்தார்.
    • சுப்மன் கில் கடின உழைப்பாளி, அது அவரை எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு உயர்த்தப் போகிறது என்றார்.

    புதுடெல்லி:

    தமிழக கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வுபெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்தார். ஐ.பி.எல். தொடரில் 257 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4,842 ரன்கள் குவித்துள்ளார்.

    மேலும், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக தனது பிறந்தநாள் அன்று தினேஷ் கார்த்திக் அறிவித்தார்.

    இதற்கிடையே, ஆர்.சி.பி. அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு தினேஷ் கார்த்திக் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சுப்மன் கில் சில காலமாக சர்வதேச கிரிக்கெட்டில் சுற்றி வருகிறார். அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பது அவருக்கு நன்கு தெரியும். அவர் ஒரு துணை கேப்டன். அவருக்கு திறமை இருப்பதாக நான் நம்புகிறேன்.

    அவர் தனது பேட்டிங்கில் தொடர்ந்து பணியாற்றினால், பல ஆண்டுகளாக கேப்டனாக அவர் இன்னும் நிறைய மேம்படுத்த முடியும். கேப்டனாகவும் சிறப்பாக செயல்படும் திறன் அவருக்கு உள்ளது.

    இந்த ஆண்டு அவர் குஜராத்துக்காக (டைட்டன்ஸ்) தொடங்கினார். களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வைப்பது கொஞ்சம் வேலை என அவருக்குத் தெரியும். அதை நோக்கி அவர் செயல்படுவார். சுப்மன் கில் பற்றிய ஒரு விஷயம் என்னவென்றால் அவர் மிகவும் கடின உழைப்பாளி. அது அவரை எதிர்காலத்தில் நல்ல நிலைக்குத் தள்ளப் போகிறது என தெரிவித்துள்ளார்.

    • டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 282 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பர்மிங்காம்:

    இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான பிராத்வெயிட் அரை சதமடித்து 61 ரன்னில் அவுட்டானார். ஜேசன் ஹோல்டர் 59 ரன்னும், ஜோஷ்வா டா சில்வா 49 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 75.1 ஓவரில் 282 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இங்கிலாந்து சார்பில் கஸ் அட்கின்சன் 4 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், மார்க் வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணிக்கு ஆரம்பத்திலேயெ அதிர்ச்சி காத்திருந்தது.

    தொடக்க வீரர்கள் ஜாக் கிராலி 18 ரன்னிலும், பென் டக்கெட் 3 ரன்னிலும் அவுட்டாகினர். மார்க் வுட் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்துள்ளது. ஒல்லி போப் 6 ரன்னும், ஜோ ரூட் 2 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜேடன் சீல்ஸ் 2 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதல் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக விளையாடிய பதிரனா 19 விக்கெட் எடுத்தார்.
    • சி.எஸ்.கே. அணிக்காக நான் விளையாடியது கடவுள் எனக்கு அளித்த பரிசு என்றார் பதிரனா.

    கொழும்பு:

    இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டி20 அணியும், ரோகித் சர்மா தலைமையிலான ஒருநாள் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை டி20 அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளரான மதிஷா பதிரனா இடம்பெற்றுள்ளார்.

    பதிரனா 2022-ம் ஆண்டில் அறிமுகமான முதல் ஐ.பி.எல். தொடரில் சிஎஸ்கே அணிக்காக 19 விக்கெட் எடுத்து அசத்தியிருந்தார்.

    இந்நிலையில், இலங்கை பந்துவீச்சாளர் பதிரனா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    என் 19 வயது வரையிலும் எந்த இலங்கை கிரிக்கெட் அணியிலும் நான் இடம்பெறவில்லை. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வானதைத் தொடர்ந்து, இலங்கையின் பிரதான அணிக்குத் தேர்வாகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.

    சி.எஸ்.கே. அணிக்காக நான் விளையாடியது கடவுள் எனக்கு அளித்த பரிசு. சி.எஸ்.கே. அணிக்காக விளையாடும் வரை பலருக்கு என்னை தெரியாது. ஓய்வறையில் டோனியிடம் விஷயங்களைப் பகிர்ந்து கொண்டது என்னைப் போன்ற இளம் வீரர்களுக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று.

    நான் அடுத்த ஆண்டு சி.எஸ்.கே. அணியில் இருப்பேனா என தெரியாது. ஆனால் 2025 ஐ.பி.எல். தொடரை சி.எஸ்.கே. அணி நிச்சயம் வெல்லும் என தெரிவித்தார்.

    • பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இலங்கை முன்னேறியது
    • இலங்கை அணியின் கேப்டன் சமாரி அட்டப்பட்டு ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    தம்புல்லா:

    9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையில் நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

    முதல் அரையிறுதியில் வங்காளதேசத்தை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

    இந்நிலையில், 2-வது அரையிறுதிப் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் நிதானமாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த நிலையில் குல் பெரோசா 25 ரன்னில் அவுட்டானார். ஓரளவு தாக்குப் பிடித்த முனீபா அலி 37 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் நிதா தர் 23 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.

    இதையடுத்து, 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான விஸ்மி குணரத்னே டக் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சமாரி அட்டப்பட்டு 63 ரன்கள் விளாசினார். கடைசி ஓவரில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 19.5 ஓவர்கள் முடிவில் 141 ரன்கள் அடித்து இலங்கை அணி த்ரில் வெற்றி பெற்றது.

    பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்த இலங்கை அணியின் கேப்டன் சமாரி அட்டப்பட்டு ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த வெற்றியின் மூலம் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி முன்னேறியது.

    நாளை நடைபெறும் மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதுகின்றன. 

    • நடப்பு டி.என்.பி.எல். தொடரில் முதல் சதமடித்தார் ஷிவம் சிங்
    • சுரேஷ் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்தார்.

    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல்லில் நடந்து வருகின்றன. நேற்று நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, திண்டுக்கல் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிவம் சிங் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

    விமல் குமார் 23 ரன்னிலும், பாபா இந்திரஜித் 29 ரன்னிலும், சரத் குமார் 19 ரன்னிலும் அவுட்டாகினர்.

    பொறுப்புடன் ஆடிய ஷிவம் சிங் 56 பந்தில் சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ரன்களைக் குவித்துள்ளது. நடப்பு தொடரில் முதல் சதமடித்த ஷிவம் சிங் 106 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதில் 10 சிக்சர், 6 பவுண்டரிகளும் அடங்கும்.

    இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான சுரேஷ் பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்தார். ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை மட்டுமே எடுத்து மதுரை அணி தோல்வியடைந்தது.

    சிறப்பாக விளையாடி சதமடித்த திண்டுக்கல் வீரர் ஷிவம் சிங் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் போட்டிகளுக்கு திண்டுக்கல் அணி தகுதி பெற்றது.

    • டாஸ் வென்ற மதுரை பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய திண்டுக்கல் அணி 201 ரன்களை குவித்தது.

    திண்டுக்கல்:

    டி.என்.பி.எல். தொடரின் லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல்லில் நடந்து வருகின்றன. இன்று நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, திண்டுக்கல் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிவம் சிங் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.

    சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

    விமல் குமார் 23 ரன்னிலும், பாபா இந்திரஜித் 29 ரன்னிலும், சரத் குமார் 19 ரன்னிலும் அவுட்டாகினர்.

    பொறுப்புடன் ஆடிய ஷிவம் சிங் 56 பந்தில் சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், திண்டுக்கல் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ரன்களைக் குவித்துள்ளது. நடப்பு தொடரில் முதல் சதமடித்த ஷிவம் சிங் 106 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதில் 10 சிக்சர், 6 பவுண்டரிகளும் அடங்கும்.

    இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.

    ×