search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ரூட் 32-வது சதத்தைப் பதிவுசெய்தார்.
    • இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 136 ரன்களை ரூட் சேர்த்துள்ளார்.

    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஒல்லி போப், பென் டக்கெட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்சில் 416 ரன்களைக் குவித்து ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது கேவம் ஹாட்ஜின் சதத்தின் மூலமும் அலிக் அதானாஸ், ஜோஷுவா டா சில்வா ஆகியோரது அரைசதத்தின் மூலமாக முதல் இன்னிங்சில் 457 ரன்களைக் குவித்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    பின்னர் 41 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர்கள் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் சதமடித்து அசத்தினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 425 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 385 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    ஆனால் இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 143 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 241 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

    இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி, இப்போட்டியில் சதமடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் தனது 32-வது சதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கேன் வில்லியம்சன், ஸ்டிவ் ஸ்மித் ஆகியோரது சத சாதனையை சமன்செய்ததுடன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய 11-வது வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார்.

    இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 136 ரன்களை ரூட் சேர்த்துள்ளார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹிலா ஜெயவர்த்னே, வெஸ்ட் இண்டீஸின் சந்தர்பால் ஆகியோரது வாழ்நாள் சாதனையை முறியடித்து 8-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதன்படி இதுவரை 142 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் 32 சதங்கள் மற்றும் 62 அரைசதங்கள் என 11,940 ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.

    • அவர்கள் இருவரிடமும் இன்னும் நிறைய கிரிக்கெட் உள்ளது.
    • நல்ல பார்மில் இருந்தால் அனைத்து போட்டிகளிலும் கூட அவர்கள் விளையாடுவார்கள்.

    மும்பை:

    நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதே சமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் (இந்தியா தகுதி பெற்றால்) விராட் மற்றும் ரோகித் கண்டிப்பாக விளையாடுவார்கள் என பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார்.

    இந்நிலையில் 2027 உலகக் கோப்பையில் விராட் கோலி, ரோகித் சர்மா உடல்தகுதியுடன் இருந்தால் விளையாடுவார்கள் என இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்கள் சந்திப்பில் கவுதம் கம்பீர் கூறியதாவது:-

    ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை அவர்கள் காண்பித்துள்ளார்கள். அவர்கள் இருவரிடமும் இன்னும் நிறைய கிரிக்கெட் உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி விரைவில் வருகிறது. ஆஸ்திரேலியாவில் பெரிய டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதில் விளையாடுவதற்கு அவர்கள் உத்வேகத்துடன் இருப்பார்கள்.

    ஒருவேளை பிட்னஸை தொடர்ந்து கடைபிடிக்கும் பட்சத்தில் 2027 உலகக் கோப்பையிலும் அவர்களால் விளையாட முடியும். அது அவர்களுடைய சொந்த முடிவு. எவ்வளவு காலம் அவர்களால் விளையாட முடியும் என்பதை என்னால் சொல்ல முடியாது. இருப்பினும் விராட் மற்றும் ரோகித் ஆகியோர் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் அவர்களிடம் இன்னும் ஆட்டம் இருக்கிறது.

    ரோகித் மற்றும் விராட் ஆகியோர் டி20 போட்டிகளில் விளையாட மாட்டார்கள். இருப்பினும் அவர்கள் இந்தியாவுக்காக மற்ற முக்கியமான போட்டிகளில் விளையாடுவார்கள். நல்ல பார்மில் இருந்தால் அனைத்து போட்டிகளிலும் கூட அவர்கள் விளையாடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அபிஷேக் நாயர், ரியான் டென் டோஸ்கேட் போன்றவர்களுடன் மிக நெருக்கமாக பணியாற்றியிருக்கிறேன்.
    • கடந்த இரண்டு மாதங்களில், குறிப்பாக ஐபிஎல்லில், அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைந்தேன்.

    டி20 உலகக்கோப்பை 2024 தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் நிறைவடைந்தது. இதனையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் தேர்வு செய்யப்பட்டார். இலங்கை அணிக்கு எதிரான தொடர் முதல் அவரது பயிற்சி காலமும் தொடங்குகிறது. அதே சமயம் மற்ற பயிற்சியாளர்கள் குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    இந்நிலையில் இந்திய அணியின் செய்தியாளர்கள் சந்திப்பில் மற்ற பயிற்சியாளர்கள் யார் என்பது குறித்த கேள்வியானது எழுப்பட்டது.

    அந்த கேள்விக்கு கவுதம் கம்பீர் கூறியதாவது:-

    இலங்கை தொடர் உதவி ஊழியர்களின் முக்கிய அம்சமாக இருக்கும். நான் சொன்னது போல், இலங்கை சுற்றுப்பயணத்திற்கு பிறகு அணியின் கூடுதல் பயிற்சியாளர் குறித்து முயற்சி செய்து முடிப்போம்.

    ஆனால், அபிஷேக் நாயர், ரியான் டென் டோஸ்கேட் போன்றவர்களுடன் மிக நெருக்கமாக பணியாற்றியிருக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களில், குறிப்பாக ஐபிஎல்லில், அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைந்தேன். அவர்கள் இதில் கைதேர்ந்த வல்லுநர்கள். ரியான் மற்றும் அபிஷேக் வெற்றிகரமான நிலைப்பாட்டை பெற முடியும் என்று நம்புகிறேன். பயிற்சியாளர்களாக நாங்கள் வெற்றிகரமான பதவிக் காலத்தை பெற முடியும் என்று நம்புகிறோம்.

     

    பிசிசிஐ குறித்து உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் எனது பெரும்பாலான கருத்துக்களுடன் அவர்கள் உடன்பட்டனர். ஆனால் எனது பரிந்துரைகளை பிசிசிஐ நிராகரித்ததாக செய்திகள் வெளிவந்தது. இதை எல்லாம் படிக்கும் போது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

    அபிஷேக், உதவி பயிற்சியாளராக, ரியான், துணை பயிற்சியாளராக பணியாற்றுகின்றனர். உதவி பயிற்சியாளர்கள் ஒரு குறிப்பிட்ட துறையை விட மூன்று துறைகளிலும் கவனம் செலுத்த முடியும் என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன்.

    அதனால்தான் இப்போது இந்த இந்திய அணியில் இரண்டு உதவிப் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். இப்படித்தான் இலங்கை அணிக்கு எதிரான தொடரையும் நாங்கள் எதிர்கொள்ள உள்ளோம். மேலும் இலங்கைச் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு சரியான துணைப் பணியாளரை நாங்கள் தேர்வு செய்வோம்.

    என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    • ஹர்திக் பாண்ட்யா விஷயத்தில் பிட்னஸ்தான் சவாலாகும்.
    • காயமின்றி அதிகமாக விளையாடக்கூடிய ஒருவரை விரும்புகிறோம். We want someone who can play a lot without injury.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    டி20-யில் இருந்து ரோகித் ஓய்வு பெற்றதால் அடுத்த கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் துணை கேப்டன் பதவியும் பாண்ட்யாவிடம் இருந்து பறிக்கப்பட்டு இருக்கிறது. சுப்மன் கில் இனி துணை கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா முழுமையான பிட்னஸ் கொண்டிருக்கவில்லை என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். அதனாலயே சூர்யகுமாரை புதிய கேப்டனாக நியமித்ததாகவும் அவர் அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

    ஹர்திக் பாண்ட்யா இப்போதும் எங்களுக்கு மிகவும் முக்கியமான வீரர். இருப்பினும் பிட்னஸ் என்பது அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அது அவரை தேர்வு செய்ய பயிற்சியாளர் அல்லது தேர்வுக்குழுவுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. அவரது விஷயத்தில் பிட்னஸ்தான் சவாலாகும்.

    ஏனெனில் நாங்கள் அடிக்கடி காயமின்றி அதிகமாக விளையாடக்கூடிய ஒருவரை விரும்புகிறோம். அந்த வகையில் சூர்யகுமார் கேப்டனாக செயல்படுவதற்கு தேவையான தகுதிகளைக் கொண்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம்.

    அதே சமயம் ஹர்திக் பாண்ட்யாவை நாங்கள் சிறப்பாக கையாள்வோம் என்று கருதுகிறோம். டி20 உலகக்கோப்பையில் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் அவர் என்ன செய்தார் என்பதை நாங்கள் பார்த்தோம். கேப்டன்ஷிப் பற்றி ஹர்திக் பாண்ட்யாவிடமும் நாங்கள் பேசியுள்ளோம்.

    சூர்யகுமார் யாதவ் சிறந்த டி20 பேட்டர்களில் ஒருவர். நீங்கள் அனைத்து ஆட்டங்களிலும் விளையாடக்கூடிய ஒரு கேப்டனை விரும்புவது முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும்.

    இவ்வாறு அஜித் அகார்கர் கூறினார்.

    • இந்தியா இலங்கை அணிகள் மோதும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் விரைவில் துவங்க இருக்கிறது.
    • இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் செயல்பட உள்ளார்.

    இந்தியா இலங்கை அணிகள் மோதும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் விரைவில் துவங்க இருக்கிறது. இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் செயல்பட உள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று அவர் வழிநடத்த இருக்கும் முதல் தொடரை ஒட்டி, கவுதம் காம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    தலைமை பயிற்சியாளர் காம்பீர், மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் செய்தியாளர்களை சந்தித்தனர். பயிற்சியாளராக பொறுப்பேற்றபின் காம்பீர் பங்கேற்கும் முதல் செய்தியாளர் சந்திப்பு இதுவே.

    "நான் மிகவும் வெற்றிபெற்ற அணியை வழி நடத்துகிறேன். டி20 உலக கோப்பை சாம்பியன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போன்ற தொடர்களில் இரண்டாம் இடம் பிடித்தது மகிழ்ச்சி. ஆனால் இன்னும் பல வெற்றிகளை நாம் காண வேண்டும்."

    "விளையாட்டு வீரர்களுக்கு சுதந்திரம் என்பது மிகவும் முக்கியம் என்பதை நான் நம்புகிறேன். எனக்கும், வீரர்ளுக்கும் நல்ல நம்பிக்கையை வளர்த்துக் கொள்வேன். அவர்களுக்கு பின்னால் உறுதுணையாக எப்போதும் இருப்பேன்."

    "ரோகித் மற்றும் விராட் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் அவர்களின் முழு திறமையை காண்பித்து உள்ளனர். டி20 ஆகட்டும் 50 ஓவர் உலக கோப்பை போட்டியாகட்டும், அவர்களுக்குள் இன்னும் நிறய கிரிக்கெட் மீதம் இருக்கிறது."

    "அவர்கள் நினைத்தால் 2027 உலக கோப்பையிலும் விளையாடும் சக்தி இருக்கிறது. ஆனால் அவர்கள் விளையாடுவதும் விளையாடாமல் இருப்பதும் அவர்களின் தனிப்பட்ட விருப்பம் ஆகும். அவர்கள் நிச்சயம் உலக தரமிக்க வீரர்கள். எந்த வகை கிரிக்கெட் போட்டிகளிலும் அவர்கள் எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் விளையாடலாம்," என்று கூறியுள்ளார்.

    • பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா வரும் 26-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது.
    • 16 விளையாட்டுகளில் சுமார் 117 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள்.

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா வரும் 26-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது. ஜூலை 26-ல் தொடங்கும் 33-வது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள், ஆகஸ்ட் 11-ம் தேதி முடிவடையும்.

    ஒலிம்பிக்ஸ் போட்டிகளை ஒட்டி செய்ன் நதிக்கரையில் 3 லட்சம் பேர் முன்னிலையில் பிரமாண்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    206 நாடுகளைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதில், 16 விளையாட்டுகளில் சுமார் 117 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள்.

    இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு உதவும் வகையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு பிசிசிஐ சார்பில் ரூ. 8.5 கோடி வழங்கவுள்ளதாக செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜெய்ஷா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளதாவது:-

    2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நம் விளையாட்டு வீரர்களுக்கு பிசிசிஐ ஆதரவளிக்கும் என்பதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இதற்காக, இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ரூ. 8.5 கோடி நிதியுதவி வழங்குகிறோம் என்பதை பிசிசிஐ அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

    நம் முழு குழுவிற்கும் நல்வாழ்த்துக்கள். இந்தியாவை பெருமைப்படுத்துங்கள்! ஜெய் ஹிந்த்!

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • 2வது இன்னிங்சில் இங்கிலாந்து 425 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • ஹாரி புரூக், ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி சதமடித்தனர்.

    நாட்டிங்காம்:

    இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஒல்லி போப் 121 ரன்னும், பென் டக்கெட் 71 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 69 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட், ஜெய்டன் சீலஸ், சின்க்ளெர், ஹாட்ஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 457 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கவெம் ஹாட்ஜ் சதமடித்து 120 ரன்னில் அவுட் ஆனார். ஜோஷ்வா டா சில்வா 82 ரன்னும், அலிக் அத்தானாஸ் 82 ரன்னும், பிராத்வைட் 48 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், கஸ் அட்கின்சன், சோயப் பஷீர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 41 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2வது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 76 ரன்னும், ஒல்லி போப் 51 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    ஹாரி புருக் சதமடித்து 109 ரன்னும், ஜோ ரூட் சதமடித்து 122 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    இறுதியில், இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 425 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீலஸ் 4 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 385 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.

    • முதலில் ஆடிய கோவை அணி 172 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய திண்டுக்கல் அணி 176 ரன் எடுத்து வென்றது.

    நெல்லை:

    8-வது டி என் பி எல் டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. தொடரின் 3-வது சுற்று லீக் ஆட்டங்கள் நெல்லையில் நடந்து வருகின்றன. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தது. ஷாருக் கான் 25 பந்தில் 51 ரன்கள் குவித்தார்.

    6-வது விக்கெட்டுக்கு இணைந்த சேர்ந்த ஷாருக் கான், அதிக் உர் ரகுமான் ஜோடி அதிரடியாக ஆடி 67 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 33 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    இதையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. கடந்த போட்டியில் அரை சதம் கடந்த பாபா இந்திரஜித் இந்தப் போட்டியிலும் அதிரடியை தொடர்ந்தார்.

    பாபா இந்திரஜித் 49 பந்தில் 5 சிக்சர், 11 பவுண்டரியுடன் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஷிவம் சிங் 36 ரன் எடுத்தார்.

    இறுதியில், திண்டுக்கல் 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 176 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் திண்டுக்கல் அணி பெறும் 3வது வெற்றி இதுவாகும்.

    • முதலில் ஆடிய இந்தியா 201 ரன்களைக் குவித்தது.
    • அந்த அணியின் ஹர்மன்பிரித் கவுர், ரிச்சா கோஷ் அரை சதம் கடந்தனர்.

    தம்புல்லா:

    9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகமும், 'பி' பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதில் இந்திய நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்தியா, யு.ஏ.இ அணிகள் மோதின. டாஸ் வென்ற யு.ஏ.இ. அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ரன்களைக் குவித்தது. ரிச்சா கோஷ் 64 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அரை சதம் கடந்த ஹர்மன்பிரித் கவுர் 66 ரன்னில் வெளியேறினார். ஷபாலி வர்மா 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யு.ஏ.இ. அணி களமிறங்கியது. இந்திய அணியினரின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கால் யு.ஏ.இ. அணி சிரமப்பட்டது.

    ஈஷா ரோகித் 38 ரன்கள் எடுத்தார். கவிஷ்கா எகோடகே பொறுப்புடன் ஆடி கடைசி வரை அவுட்டாகாமல் உள்ளார்.

    இறுதியில், யு.ஏ.இ. அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    • டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய கோவை அணி 172 ரன்கள் குவித்தது.

    நெல்லை:

    8-வது டி என் பி எல் டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. தொடரின் 3-வது சுற்று லீக் ஆட்டங்கள் நெல்லையில் நடந்து வருகின்றன. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி கோவை முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். இதனால் 26 ரன்களுக்குள் 3 விக்கெட் இழந்து தத்தளித்தது. ராம் அரவிந்த் 25 ரன்னும், சாய் சுதர்சன் 33 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    6-வது விக்கெட்டுக்கு இணைந்த சேர்ந்த ஷாருக் கான், அதிக் உர் ரகுமான் ஜோடி அதிரடியாக ஆடி 67 ரன்கள் குவித்தது.

    இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தது. ஷாருக் கான் 25 பந்தில் 51 ரன்கள் குவித்தார்.

    • நடப்பு தொடரில் இருந்து ஷ்ரேயங்கா பாட்டீல் காயம் காரணமாக விலகினார்.
    • அவருக்கு பதிலாக தனுஜா கன்வர் மாற்று வீராங்கனையாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    கொழும்பு:

    மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இதில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 19.2 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய இந்திய அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையான ஷ்ரேயங்கா பாட்டீல் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியானது.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இடது கை விரலில் ஏற்பட்ட காயத்தால் அவர் எஞ்சிய ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவருக்கு பதிலாக தனுஜா கன்வர் மாற்று வீராங்கனையாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    • டாஸ் வென்ற யு.ஏ.இ. அணி பந்துவீசுவதாக அறிவித்தது.
    • அதன்படி முதலில் ஆடிய இந்தியா 201 ரன்களைக் குவித்தது.

    தம்புல்லா:

    9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகமும், 'பி' பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதில் இந்திய நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்தியா, யு.ஏ.இ அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற யு.ஏ.இ. அணி பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஷபாலி வர்மா, ஸ்மிர்தி மந்தனா தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    மந்தனா 13 ரன்னிலும், ஹேமலதா 2 ரன்னிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 14 ரன்னிலும் அவுட்டாகினர். ஷபாலி வர்மா 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    5-வது விக்கெட்டுக்கு இணைந்த ஹர்மன்பிரித் கவுர், ரிச்சா கோஷ் ஜோடி அதிரடியாக ஆடியது. ஹர்மன்பிரித் அரை சதம் கடந்தார்.

    இந்த ஜோடி 75 ரன் சேர்த்த நிலையில் கவுர் 66 ரன்னில் வெளியேறினார்.

    கடைசி ஓவரில் ரிச்சா கோஷ் 5 பவுண்டரிகள் விளாசியதுடன் அரை சதம் கடந்தார்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ரன்களைக் குவித்தது. ரிச்சா கோஷ் 64 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யு.ஏ.இ. அணி களமிறங்குகிறது.

    ×