search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இங்கிலாந்தில் அதிவேகமாக டெஸ்ட் ஓவரை வீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை மார்க் வுட் படைத்துள்ளார்.
    • முதல் ஓவரில் படைத்த சாதனையை தனது 2 ஆவது ஓவரில் மார்க் வுட் முறியடித்தார்.

    வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

    இப்போட்டியில், பந்துவீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் மார்க் வுட் அதிவேக ஓவரை வீசி சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தில் அதிவேகமாக டெஸ்ட் ஓவரை வீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய மிகைல் லூயிஸுக்கு தனது முதல் ஓவரை வீசினார் மார்க் வுட். முதல் பந்தை 151.1 கிமீ வேகத்தில் அவர் வீசினார். 2 ஆவது பந்தை 154. 65 கிமீ வேகத்திலும் மூன்றாவது பந்தை 152.88 கிமீ வேகத்திலும் 4 ஆவது பந்தை 148.06 கிமீ வேகத்திலும் 5 ஆவது பந்தை 155.30 கிமீ வேகத்திலும் கடைசி பந்தை 153.20 கிமீ வேகத்திலும் வீசினார்.

    இதன் மூலம் இங்கிலாந்தில் அதிவேகமாக ஓவரை வீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    மார்க் வுட் தனது 2 ஆவது ஓவரை முதல் ஓவரை விடவும் அதிவேகத்தில் வீசினார். அந்த ஓவரில் 152, 149.66, 152, 154.49, 156.26, 151.27 கிமீ வேகத்தில் அவர் வீசினார். இதன் மூலம் முதல் ஓவரில் படைத்த சாதனையை தனது 2 ஆவது ஓவரில் மார்க் வுட் முறியடித்தார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாய்ப்பு கிடைக்கும்போதுதான் என்னை நிரூபிக்க முடியும்.
    • நீங்கள் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீர்கள். நான் மூன்று போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தினேன்.

    ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியர்களின் பட்டியலில் முகமது ஷமி முதலிடத்தில் உள்ளார்.

    வெறும் 18 போட்டிகளில் மட்டுமே விளையாடி 55 விக்கெட்களை முகமது ஷமி வீழ்த்தியுள்ளார். ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் தற்போது 5 ஆவது இடத்தில் அவர் உள்ளார்.

    ஆனால், டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் காயம் காரணமாக முகமது ஷமி இடம்பெறவில்லை.

    இந்நிலையில், தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து யூடியூபர் சுபாங்கர் மிஸ்ராவிற்கு முகமது ஷமி பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

    அதில், 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் முதல் சிலபோட்டிகளில் நான் விளையாடவில்லை. அடுத்த ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட்களையும், பின் ஐந்து மற்றும் 4 என அடுத்தடுத்த போட்டிகளில் விக்கெட்களை எடுத்தேன். 2023 ஆம் ஆண்டும் இதே போன்று நடந்தது. முதல் சில போட்டிகளில் விளையாடவில்லை. பின் அதிகமான விக்கெட்களை வீழ்த்தினேன்.

    நான் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு அணிக்கும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்கள் தேவைதான். மூன்று போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தியுள்ளேன். என்னிடம் இருந்து இன்னும் என்ன எதிர்பார்க்கிறீர்கள். என்னிடம் அதற்கான கேள்விகளும் இல்லை, பதில்களும் இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போதுதான் என்னை நிரூபிக்க முடியும். நீங்கள் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீர்கள். நான் மூன்று போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தினேன்" என தெரிவித்துள்ளார்.

    2019 உலகக் கோப்பையில் விராட் கோலியின் தலைமையில் முகமது ஷமி விளையாடினார். அப்போது ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார்.

    • நாட்டுக்காக விளையாடுவது ஒரு சிறந்த உணர்வு, அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
    • இந்த புதிய பதவி பல பொறுப்புகளையும், உற்சாகத்தையும் கொண்டுவந்துள்ளது.

    இந்திய அணி டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை செல்ல உள்ளது. இதில் முதலில் தொடங்கும் முதல் டி20 போட்டி 27-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் இருந்துதான் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார்.

    இந்நிலையில் இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், கேப்டன் பொறுப்பை குறித்து சூரியகுமார் யாதவ் மனம் திறந்துள்ளார்.

    இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் கேப்டன் பொறுப்பை ஏற்கும் என் மீது அன்பையும், ஆதரவையும் பொழிந்த அனைவருக்கும் நன்றி.

    கடந்த வாரங்களில் நடந்தது கனவுபோல் இருக்கிறது. நாட்டுக்காக விளையாடுவது ஒரு சிறந்த உணர்வு, அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

    இந்த புதிய பதவி பல பொறுப்புகளையும், உற்சாகத்தையும் கொண்டுவந்துள்ளது. எல்லா புகழும் இறைவனுக்கே" என்று தெரிவித்துள்ளார்.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • அடுத்து ஆடிய இந்தியா அதிரடியாக ஆடி வெற்றி பெற்றது.

    தம்புல்லா:

    9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையின் தம்புல்லாவில் இன்று தொடங்கியது. இன்று இரவு நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டும், ரேணுகா தாகூர் சிங், பூஜா வஸ்த்ராகர், ஷ்ரேயங்கா பாட்டீல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 109 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர்.

    முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் குவித்த நிலையில் ஸ்மிரிதி மந்தனா 45 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து ஷபாலி வர்மா 40 ரன்னில் வெளியேறினார். ஹேமலதா 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்திய அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், நடப்பு தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் 108 ரன்கள் எடுத்தது.
    • இந்தியாவின் தீப்தி சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    தம்புல்லா:

    9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையின் தம்புல்லாவில் இன்று தொடங்கியது.

    இந்நிலையில், இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டும், ரேணுகா தாகூர் சிங், பூஜா வஸ்த்ராகர், ஷ்ரேயங்கா பாட்டீல் தலா 2 விக்கெட்டு வீழ்த்தினர்.

    இதையடுத்து, 109 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    • வங்காளதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்கிறது.
    • அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    கராச்சி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்யும் வங்காளதேச அணி, அந்த அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்குகிறது.

    முன்னதாக, கனடிய லீக் தொடர் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்க முன்னணி வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷாஹீன் ஷா அப்ரிடி உள்ளிட்டோருக்கு என்.ஓ.சி. சான்றிதழ் வழங்கப்படவில்லை.

    அனைத்து வடிவங்களிலும் விளையாடும் வீரர்களுக்கு பாலிசியின்படி சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதே என்ஓசி மறுக்கப்படக் காரணம் என கூறிய பிசிபி, வீரர்களுக்கு உடல் தகுதி மற்றும் செயல்திறன் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படும். அளவுகோல்களுக்கு பொருந்தாத வீரர்களுக்கு இடமில்லை. ஒழுக்கத்திலும் எந்த சமரசமும் இருக்காது என தெரிவித்துள்ளது.

    வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடிக்கு குழந்தை பிறக்க உள்ளதால் வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் என பிசிபி தெரிவித்துள்ளது.

    • டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்குகிறது.

    தம்புல்லா:

    9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையின் தம்புல்லாவில் இன்று தொடங்கியது. முதல் லீக் ஆட்டத்தில் நேபாளம், யு.ஏ.இ. அணிகள் மோதின. இதில் நேபாளம் அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்குகிறது.

    • டாஸ் வென்ற நேபாளம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த யு.ஏ.இ. 20 ஓவரில் 115 ரன்கள் எடுத்தது.

    தம்புல்லா:

    9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. டாஸ் வென்ற நேபாளம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த யு.ஏ.இ. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக குஷி சர்மா 36 ரன்கள் அடித்தார்.

    நேபாளம் சார்பில் கேப்டன் இந்து பர்மா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    இதையடுத்து, 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி நேபாளம் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன சம்ஜானா கட்கா பொறுப்புடன் ஆடினார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சம்ஜானா கட்கா தனி ஆளாக போராடி அணிக்கு வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில் நேபாளம் 16.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சம்ஜானா கட்கா 72 ரன்கள் அடித்தார்.

    யு.ஏ.இ. சார்பில் கவிஷா எகொடகே 3 விக்கெட் வீழ்த்தினார்.

    • இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம்பிடித்துள்ளனர்.
    • இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட உள்ளார்.

    புதுடெல்லி:

    இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    இந்திய அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவ் பொறுப்பேற்றுள்ளார். தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட உள்ளார்.

    இதற்கிடையே, ஆக்ரோஷமான விளையாட்டு காரணமாக விராட் கோலி, கவுதம் கம்பீர் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது குறித்து ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில், கவுதம் கம்பீருடன் பணியாற்றுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என பிசிசிஐயிடம் விராட் கோலி தெரிவித்தார்.

    விராட் கோலி கம்பீருடன் பணிபுரிய வசதியாக இருக்கிறார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பிசிசிஐ அதிகாரிகளிடம் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்.

    கடந்த காலங்களில் ஐ.பி.எல். போட்டிகளின்போது கேமராக்களால் கைப்பற்றப்பட்ட கசப்பான மோதலால் குறிக்கப்பட்டது, முந்தைய சிக்கல்கள் டிரஸ்சிங் அறையில் அவர்களின் தொழில்முறை உறவைப் பாதிக்காது.

    இருவரும் நாட்டின் நலன்களுக்காகச் செயல்படுவதை அங்கீகரிக்கிறோம். முந்தைய கருத்து வேறுபாடுகளில் இருந்து முன்னேறத் தயாராக உள்ளோம் என சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உறுதியளித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியா 17 ஆண்டுகள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்றது.
    • இந்த வெற்றிக்கு அனைத்து வீரர்களுமே முக்கிய பங்காற்றினர்.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 17 ஆண்டு கழித்து உலகக் கோப்பையை வென்றது. இந்த வெற்றிக்கு அனைத்து வீரர்களுமே முக்கிய பங்காற்றினர்.

    இறுதிப்போட்டியில் 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா அணி தடுமாறியபோது 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் அக்சர் படேல் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய அக்சர் படேல் 31 பந்தில் 47 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் 4-வது இடத்தில் களமிறங்கியது குறித்து அக்சர் படேல் சமீபத்திய அளித்த பேட்டியில் கூறியதாவது:

    போட்டியின் ஆரம்பத்திலேயே 3 விக்கெட் விழுந்ததும் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் தன்னை முன்கூட்டியே பேட்டிங் செய்ய அனுப்பினர்.

    ரிஷப் பண்ட் அவுட்டானபோது என்னுடைய பின்புறத்தில் நின்று கொண்டிருந்த ரோகித் பாய் பேட்டிங் செய்யத் தயாராகுமாறு சொன்னார்.

    அடுத்த சில நிமிடங்களில் என்னிடம் ஓடி வந்த சஹால், பயிற்சியாளர் ராகுல் பாய் பேட்டிங் செய்வதற்கு தயாராகுமாறு சொன்னதாக சொன்னார். அப்போது எனக்கு என்ன செய்வதென தெரியவில்லை. ஏனெனில் 2 விக்கெட் விழுந்த பின்பும் பிட்ச் எப்படி இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த நேரத்தில் சூரியகுமாரும் அவுட்டானார்.

    எதைப் பற்றியும் யோசிக்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை. அப்போது களத்திற்குச் சென்ற என்னிடம் "எதற்காகவும் பதறாமல் பந்தை பார்த்து அடி" என ஹர்திக் பாண்ட்யா குஜராத்தி மொழியில் சொன்னார். அது என்னுடன் ஒட்டிக்கொண்டது. அதன்பின் நான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தேன். அது எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சமீப காலமாக ரவீந்திர ஜடேஜாவின் பார்ம் சரியில்லை.
    • பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சொதப்பி வருகிறார்.

    புதுடெல்லி:

    உலக அளவில் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவும் ஒருவர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் அதிரடி காட்டி வருகிறார்.

    ஆனால், சமீப காலமாக ரவீந்திர ஜடேஜாவின் பார்ம் சரியில்லை. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சொதப்பி வருகிறார். பீல்டிங்கிலும் தடுமாறி வருகிறார் என்பது இந்திய அணிக்கு கவலை அளிக்கக்கூடிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

    நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத ரவீந்திர ஜடேஜா, இந்திய டி20 அணியில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டார்.

    இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ரவீந்திர ஜடேஜா பெயர் இடம்பெறவில்லை.

    அக்சர் பட்டேல் சிறப்பாக பேட்டிங் செய்வதால் ஜடேஜாவின் இடத்தைப் பிடித்துள்ளார். வாஷிங்டன் சுந்தரும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். எனவே இவர்கள் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

    டி20 போட்டியில் ஜடேஜா ஓய்வை அறிவித்து விட்டதால், இனி ஒருநாள் போட்டிகளில் அவருக்கு இடம் கிடைப்பது கஷ்டம்தான். ரவிச்சந்திரன் அஸ்வின் போல டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.

    • பெரும்பாலான பங்குகளை விற்க இருப்பதாக தகவல்.
    • தக்கவைத்துக் கொள்ளும் முடிவில் குஜராத் டைட்டன்ஸ்.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் 2022 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டமும், 2023 ஆம் ஆண்டு இரண்டாம் இடம் பிடித்த அணி குஜராத் டைட்டன்ஸ். சிவிசி கேப்பிட்டல் பார்ட்னர்ஸ் என்ற தனியார் நிறுவனம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் உரிமையாளராக உள்ளது. இந்நிறுவனம் பெரும்பாலான பங்குகளை விற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான கவுதம் அதானியின் அதானி குழுமம் மற்றும் டொரென்க் குழுமம் சிவிசி கேப்பிட்டல்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அணியில் பெரும்பான்மை பங்குகளை தக்கவைத்துக் கொள்ளும் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி உள்ளது.

    எனினும், அதானி குழுமம் மற்றும் டொரென்ட் குழுமம் குஜராத் அணியில் அதிக பங்குகளை வாங்க ஆர்வம் செலுத்துவதாக தெரிகிறது. தற்போதைய மதிப்பீட்டின் படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் மொத்த மதிப்பு 1 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரத்து 363 கோடியே 25 லட்சம் துவங்கி அதிகபட்சம் 1.5 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 12 ஆயிரத்து 544 கோடியே 87 லட்சத்து 50 ஆயிரம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

    முன்னதாக 2021 ஆம் ஆண்டு சிவிசி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் இந்த அணியை ரூ. 5 ஆயிரத்து 625 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

    ×