search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இந்திய அணியை மையமாக வைத்து நடப்பதால் மற்ற அணிகளுக்கு அநியாயம் நடக்கிறது.
    • மேலும், இந்தியாவுக்கு சாதகமாக ஐ.சி.சி. அட்டவணை தயாரித்துள்ளது என்றார் வாகன்.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு பார்படாசில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    இதற்கிடையே, இந்தியாவுக்கு சாதகமான வகையில் ஐ.சி.சி. அட்டவணையை தயாரித்துள்ளது. இந்த டி20 உலக கோப்பை தொடர் இந்திய அணியை மையமாக வைத்து நடப்பதால் மற்ற அணிகளுக்கு அநியாயம் நடக்கிறது என குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில், மைக்கேல் வாகனின் கருத்து குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:

    மைக்கேல் வாகன் எனக்கு மிகவும் அன்பான நண்பர். இரவு 8 மணிக்கு இந்திய கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதன் மூலம் ஐ.சி.சி எப்படி இந்தியாவுக்கு கிரிக்கெட் போட்டிகளை வெல்ல உதவுகிறது என்று எனக்குத் தெரியவில்லை.

    ஒளிபரப்பு கிரிக்கெட் போட்டிகளை எப்படி வெல்லும் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் இன்னும் நடுவில் விளையாடி வெற்றிபெற வேண்டும்.

    இரண்டாவதாக, அவர்கள் எல்லா இடங்களிலும் சுற்றிச் சென்று வெற்றி பெற்றபோது கயானாவை ஏன் வெற்றிக்கான இடமாக நினைக்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை.

    உலக கிரிக்கெட்டில் இந்தியா அனைத்து அம்சங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக உள்ளது.

    ஒரு நிறுவனத்தின் 80 சதவீத பங்கு ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்குச் சொந்தமானதாக இருந்தால் அவர்கள் அதிக லாபத்தை எதிர்பார்ப்பார்கள் என தெரிவித்தார்.

    • இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோத உள்ளன.
    • இன்றைய இறுதிப்போட்டியை ரசிகர்களும் கிரிக்கெட் வீரார்களும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

    டி 20 உலகக் கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காமல் இந்த இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. பலம் வாய்ந்த இந்த இரு அணிகளுக்கும் இடையில் அணல் பறக்கும் வகையில் நடக்க உள்ள இன்றைய இறுதிப்போட்டியை ரசிகர்களும் கிரிக்கெட் வீரார்களும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

    ரோகித் சர்மா மற்றும்  இந்திய அணியை பற்றிய கருத்துகளை தென் ஆப்பிரிக்க அணிகள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தனர். தென் ஆப்பிரிக்காவிக் அணியின் கேப்டன் ஆன ஐடன் மார்க்ரம் இதுவரை கேப்டனாக போட்டியிட்டு விளையாடிய எந்த போட்டியிலும் தோற்றது கிடையாது.

    யூ19 உலகக் கோப்பை 2014 ஆம் ஆண்டு 6 போட்டி, ஓடிஐ உலகப்கோப்பை 2023 2 போட்டி, டி20 உலகக் கோப்பை 2024 8 போட்டியிலும் இதுவரை மொத்தம் 16 போட்டிகளில் வெற்றியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று இந்திய அணியுடன் மோத இருக்கும் தென் ஆப்பிரிக்கா அணி இந்த தொடர் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளுமா? இல்லை இந்திய அணியிடம் தோற்று தொடர் வெற்றியை இழக்குமா ? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    • கேப்டன் ரோகித் சர்மா குறித்து தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் பேசியுள்ளனர்
    • தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் கசிகோ ரபாடா, டேவிட் மில்லர், ஹெயின்ரிச் க்ளாஸன், கேசவ் மகராஜ் ஆகியோர் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.

    டி 20 உலகக் கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காமல் இந்த இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. பலம் வாய்ந்த இந்த இரு அணிகளுக்கும் இடையில் அணல் பறக்கும் வகையில் நடக்க உள்ள இன்றைய இறுதிப்போட்டியை ரசிகர்களும் கிரிக்கெட் வீரார்களும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

    அணியில் உள்ள ஒவ்வொருவரின் பலம் மற்றும் பலவீனம் குறித்த விவாதமே இப்போது திரும்பிய இடத்திலெல்லாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹிட்மேன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறித்து தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் கசிகோ ரபாடா, டேவிட் மில்லர், ஹெயின்ரிச் க்ளாஸன், கேசவ் மகராஜ் ஆகியோர் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.

    ரோகித் சர்மா பயம் என்பதையே அறியாத சிறந்த ஆட்டக்காரர் என்றும் தான் அவரின் பெரிய ரசிகன் என்றும் கேசவ் மஹராஜ் கூறியுள்ளார். க்ளாஸன் ரோகித் பற்றி கூறுகையில், அவர் கிரிக்கெட்டில் நம்பமுடியாத வகையில் சிறந்த மூளைக்காராக உள்ளார். அவருடன் விளையாட்டின் நுணுக்கங்கள் பற்றி பேச நான் ஆர்வமாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

    டேவிட் மில்லர் பேசுகையில், ரோகித் டி- 20 யில் சிறந்த பினிஷராக உள்ளார். களத்தில் பதற்றம் அடையாத அவரின் நிதானத்தைப் பார்த்து வியக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், ரபாடா ரோகித்தை தலைசிறந்த பேட்டர் என்றும் உலகின் தலைசிறந்த பவுலர் என்றும் புகழ்ந்துள்ளார்.  

    • ஷபாலி வர்மா இரட்டை சதம் அடித்து, 205 ரன்னில் வெளியேறினார்.
    • இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    சென்னை:

    இந்தியா-தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை திறம்பட சமாளித்தனர். பொறுப்பாக ஆடிய இருவரும் சதமடித்து அசத்தினர்.

    ஷபாலி வர்மா-ஸ்மிரிதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் சேர்த்த நிலையில், மந்தனா 149 ரன் எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய சுபா சதீஷ் 15 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷபாலி வர்மாவுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தார்.

    நிதானமாக ஆடிய ஷபாலி வர்மா இரட்டை சதம் அடித்து, 205 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஜெமிமா 55 ரன்னிலும் அவுட்டானார்.

    இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 98 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 525 ரன்கள் குவித்தது. இதன்மூலம் மகளிர் டெஸ்ட் போட்டியில் 1 நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையை இந்திய மகளிர் அணி படைத்தது.

    இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 69 ரன்னும், ரிச்சா கோஷ் 86 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    இதன்மூலம் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோர் (603) விளாசிய அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

    இதற்குமுன் 2024 பிப்ரவரியில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், ஆஸ்திரேலிய அணி 575 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

    அடுத்ததாக தனது முதல் இன்னிங்கில் களமிறங்கியுள்ள தென்னாப்பிரிக்கா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் அடித்துள்ளது.

    • உலகிற்கே ரிவர்ஸ் ஸ்விங்கை கற்றுக்கொடுத்ததே பாகிஸ்தான் தான்.
    • நடுவர்கள் இந்திய பவுலர்கள் மீது கண்ணை வைத்துக் கொள்ள வேண்டும்.

    டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இன்று இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன.

    இந்நிலையில், இந்த உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா அணியை இந்தியா எதிர்கொண்டது. அப்போட்டியில், இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் பந்தை சேதப்படுத்தினாரா என்பதை நடுவர்கள் கண்காணிக்கவில்லை என முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் விமர்சித்திருந்தார்.

    ஏனெனில் புதிய பந்தை போலவே 15வது ஓவரில் பழைய பந்தை அர்ஷ்தீப் சிங் ரிவர்ஸ் ஸ்விங் செய்ததாக இன்சமாம் குற்றம் சாட்டினார்.

    இதற்கு பதிலடி கொடுத்த ரோகித் சர்மா, சூரியனுக்கு கீழே பிட்ச் காய்ந்திருந்தால் ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். நாங்கள் ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்தில் விளையாடவில்லை. இங்கு அனைத்து அணிகளுக்குமே ரிவர்ஸ் ஸ்விங் கிடைக்கிறது. எனவே இந்த அடிப்படையான விஷயங்களை புரிந்து கொள்ள கொஞ்சம் மூளையை பயன்படுத்துங்கள்" என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் உலகிற்கே ரிவர்ஸ் ஸ்விங்கை கற்றுக்கொடுத்த பாகிஸ்தானை சேர்ந்த எங்களுக்கு நீங்கள் சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று ரோஹித் சர்மாவுக்கு இன்சமாம்-உல்-ஹக் பதிலடி கொடுத்துள்ளார்.

    பாகிஸ்தானி டிவி எனும் தொலைக்காட்சியில் இன்சமாம்-உல்-ஹக் பேசினார். அப்போது, "முதல் விஷயம் ரிவர்ஸ் ஸ்விங் நடந்ததாக ரோகித் ஒப்புக்கொண்டார். எனவே நான் அதை சரியாக கவனித்தது உறுதியாகியுள்ளது. இரண்டாவதாக சூரியனுக்கு கீழே பிட்ச்சில் எப்படி பந்து ரிவர்ஸ் ஆகிறது என்பதை ரோகித் எங்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த உலகிற்கு அதைச் சொல்லிக் கொடுத்தவர்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. எனவே இது போன்றவற்றை பேசுவது சரியல்ல என்று அவரிடம் சொல்லுங்கள்.

    செய்தியாளர் அவரிடம் தவறான கேள்வியை கேட்டுள்ளார். உண்மையில் நடுவர்கள் இந்திய பவுலர்கள் மீது கண்ணை வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் நான் பரிந்துரைத்தேன். ஏனெனில் 15வது ஓவரிலும் பந்து ரிவர்ஸ் ஸ்விங்கானது. இப்போதும் நடுவர்கள் கண்ணையும் மனதையும் திறந்து வைத்து இந்திய பவுலர்களை கண்காணிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆலோசனை. ரோகித் மூளையைப் பற்றி பேசினார். நான் கண்கள் மற்றும் மனதை திறந்து பார்க்குமாறு மட்டுமே சொன்னேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • இன்றைய ஆட்டத்தில் வெற்றி வாகை சூடும் அணிக்கு ரூ.20¼ கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
    • 2 அணிகளும் குறைந்தது 10 ஓவர்கள் விளையாடினால் மட்டும் தான் ஆட்டத்தின் முடிவு தெரியவரும்.

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 1-ம்தேதி தொடங்கியது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 20 அணிகள் பங்கேற்றன.

    லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதியை எட்டின.

    அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், இந்திய அணி 68 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தையும் விரட்டியடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

    இந்த நிலையில் இன்று இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.

    2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பைக்கு பிறகு இந்தியா எந்த ஐ.சி.சி. கோப்பையும் வென்றதில்லை என்பதால் இந்த இறுதிப்போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதே போல் முதல்முறையாக டி20 உலகக்கோப்பையை தென் ஆப்பிரிக்கா அணி கைப்பற்றுமா என்று ஆவலும் அதிகரித்துள்ளது.

    இன்றைய ஆட்டத்தில் வெற்றி வாகை சூடும் அணிக்கு ரூ.20¼ கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.10½ கோடி கிடைக்கும்.

    ஆனால், போட்டி நடைபெறும் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒருவேளை இன்று மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் நாளை ரிசர்வ் நாளில் போட்டி விட்ட இடத்தில இருந்து மீண்டும் துவங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. ரிசர்வ் நாளிலும் மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் உலகக்கோப்பை 2 அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.

    2 அணிகளும் குறைந்தது 10 ஓவர்கள் விளையாடினால் மட்டும் தான் ஆட்டத்தின் முடிவு தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜூலை 5-ந்தேதி தொடங்குகிறது.
    • 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன.

    சென்னை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜூலை 5-ந்தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 4-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

    சேலம், கோவை, நெல்லை, திண்டுக்கல், சென்னை ஆகிய 5 இடங்களில் போட்டி நடக்கிறது. குவாலிபையர் -1 மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்கள் திண்டுக்கல்லிலும், குவாலி பையர்-2 மற்றும் இறுதிப்போட்டி சேப்பாக்கம் மைதானத்திலும் நடக்கிறது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 'லீக்' முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    போட்டிகள் தினசரி இரவு 7.15 மணிக்கு தொடங்கும். ஒரே நாளில் 2 ஆட்டங்கள் இருந்தால் பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கும். 7 நாட்கள் மட்டுமே 2 போட்டிகள் நடக்கிறது.

    டி.என்.பி.எல். கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். 2-வது இடத்துக்கு ரூ.30 லட்சம் கிடைக்கும். 3-வது மற்றும் 4-வது இடங்களுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பரிசு தொகை கிடைக்கும்.

    டி.என்.பி.எல். போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.
    • வெற்றி வாகை சூடும் அணிக்கு ரூ.20¼ கோடி பரிசுத்தொகை.

    பிரிட்ஜ்டவுன்:

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 1-ம்தேதி தொடங்கியது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 20 அணிகள் பங்கேற்றன.

    லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதியை எட்டின.

    அரைஇறுதியில் தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், இந்திய அணி 68 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தையும் விரட்டியடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

    இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்தியா எப்படி?

    முன்னாள் சாம்பியனும், 'நம்பர் ஒன்' அணியுமான இந்தியா, நடப்பு தொடரில் தோல்வி பக்கமே செல்லாமல் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது.

    லீக்கில் பாகிஸ்தான் உள்பட 3 அணிகளையும், சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 3 அணிகளையும் தோற்கடித்தது. கனடாவுக்கு எதிரான லீக் மட்டும் மழையால் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது.

    அரைஇறுதியில் குல்தீப், அக்ஷர் பட்டேலின் சுழல் ஜாலத்தால் இங்கிலாந்தை போட்டுத்தாக்கிய இந்தியா அதே உத்வேகத்துடன் தென்ஆப்பிரிக்காவையும் எதிர்கொள்ள ஆயத்தமாக உள்ளது.

    கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் கடந்த இரு ஆட்டங்களில் பேட்டிங்கில் அசத்தினர். ஆனால் விராட் கோலியின் செயல்பாடு தொடர்ந்து கவலைக்குரியதாக இருக்கிறது. 7 ஆட்டங்களில் 75 ரன் மட்டுமே எடுத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர் வரிசைக்கு தாவிய பிறகு அவரது இயல்பான பேட்டிங்கே காணாமல் போய் விட்டது.

    இருப்பினும் அவருக்கு ஆதரவாக உள்ள கேப்டன் ரோகித் சர்மா, 'கோலியின் தரம் குறித்து எங்களுக்கு தெரியும். 15 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடுபவருக்கு பார்ம் ஒரு பிரச்சினையே இல்லை. அனேகமாக இறுதிப்போட்டியில் ஒட்டுமொத்தமாக தனது சிறந்த இன்னிங்சை வெளிப்படுத்துவார்' என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

    இதே போல் ஷிவம் துபேவும் கணிசமாக ரன் சேர்க்க வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (13 விக்கெட்), அர்ஷ்தீப்சிங் (15), குல்தீப் யாதவ் (10), அக்ஷர் பட்டேல் பிரமாதப்படுத்துகிறார்கள்.

    கடந்த ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 50 ஓவர் உலகக் கோப்பை இரண்டிலும் இறுதிப்போட்டியில் கோட்டை விட்ட இந்தியா இந்த முறை கோப்பையை கையில் ஏந்தி நீண்ட கால ஏக்கத்தை தணிக்குமா என்பதே ரசிகர்களின் பேராவலாகும். விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு இதுவே கடைசி 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியாகும். அதனால் அவர்களும் வெற்றியுடன் நிறைவு செய்ய வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுவார்கள்.

    2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை உச்சிமுகர்ந்த பிறகு இந்தியா எந்த ஐ.சி.சி. கோப்பையும் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    தென்ஆப்பிரிக்கா

    உலக தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் தென்ஆப்பிரிக்க அணி மீது ஆரம்பத்தில் பெரிய அளவில் எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. உலகக் கோப்பைக்கு முன்பாக 20 ஓவர் கிரிக்கெட்டில் 11 ஆட்டங்களில் ஆடி 9-ல் தோற்று இருந்தது.

    ஆனால் உலகக் கோப்பைக்குள் நுழைந்ததும் பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளங்கள் அவர்களுக்கு புதுதெம்பை கொடுத்தது. லீக்கில் 4 வெற்றி, சூப்பர் 8 சுற்றில் 3 வெற்றி, அரைஇறுதி என்று அந்த அணியும் சறுக்கலின்றி வீறுநடை போடுகிறது.

    அது மட்டுமின்றி உலகக் கோப்பை போட்டி ஒன்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். இதற்கு முன்பு அரைஇறுதியை தாண்டியதில்லை. அவர்களின் பேட்டிங் சீரற்றதாக காணப்பட்டாலும் ககிசோ ரபடா (12 விக்கெட்), ஷம்சி (11), அன்ரிச் நோர்டியா (13) மார்கோ யான்சென், கேஷவ் மகராஜ் ஆகிய பந்து வீச்சு கூட்டணி அவர்களுக்கு பக்கபலமாக இருந்து வெற்றியை தேடிக்கொடுத்திருக்கிறது.

    இதில் அரைஇறுதியில் ஆப்கானிஸ்தானை 56 ரன்னில் சுருட்டியது கவனிக்கத்தக்கது. பந்து வீச்சில் வலுவாக உள்ள நிலையில் குயின்டான் டி காக், கிளாசென், மில்லர், கேப்டன் மார்க்ரம், ஹென்ரிக்ஸ் ஆகியோரது பேட்டிங் ஒருசேர கிளிக் ஆகும் பட்சத்தில், இன்னும் அபாயகரமான அணியாக மாறி விடுவார்கள். அதனால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    மொத்தத்தில் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். ஆனால் நெருக்கடியை திறம்பட சமாளிக்கும் அணிக்கே வெற்றி வாய்ப்பு கிட்டும்.

    தென்ஆப்பிரிக்காவின் உலகக் கோப்பை கனவு நனவாகுமா? வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் உலகக் கோப்பையை வெல்லும் முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்தியா வசப்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    இந்த மைதானத்தை பொறுத்தவரை நடப்பு தொடரில் இங்கு 8 ஆட்டங்கள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 181 ரன்கள் எடுத்து வெற்றி கண்ட ஆட்டமும் அடங்கும். அந்த அனுபவம் இந்தியாவுக்கு கூடுதல் அனுகூலமாக இருக்கும்.

    20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 14-ல் இந்தியாவும், 11-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    இன்றைய ஆட்டத்தில் வெற்றி வாகை சூடும் அணிக்கு ரூ.20¼ கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.10½ கோடி கிடைக்கும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: விராட் கோலி, ரோகித் சர்மா (கேப்டன்), ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப்சிங், பும்ரா.

    தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், ரீஜா ஹென்ரிக்ஸ், மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ யான்சென், கேஷவ் மகராஜ், ககிசோ ரபடா, அன்ரிச் நோர்டியா, தப்ரைஸ் ஷம்சி.

    இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டி.டி. ஸ்போர்ட்ஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • டாஸ் வென்று பேட் செய்த இந்தியா முதல் நாள் முடிவில் 525 ரன்கள் குவித்தது.
    • தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா இரட்டை சதமடித்து, 205 ரன்னில் அவுட்டானார்.

    சென்னை:

    இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை திறம்பட சமாளித்தனர். பொறுப்பாக ஆடிய இருவரும் சதமடித்து அசத்தினர்.

    ஷபாலி வர்மா-ஸ்மிரிதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் சேர்த்த நிலையில், மந்தனா 149 ரன் எடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய சுபா சதீஷ் 15 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷபாலி வர்மாவுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தார்.

    நிதானமாக ஆடிய ஷபாலி வர்மா இரட்டை சதம் அடித்து, 205 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஜெமிமா 55 ரன்னிலும் அவுட்டானார்.

    இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 98 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 525 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 42 ரன்னும், ரிச்சா கோஷ் 43 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    • ரோகித் 5 ஐ.பி.எல். பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
    • உலகக் கோப்பை தொடரில் அவர் முன்னணியில் இருந்து வழிநடத்தினார் என்றார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

    ரோகித் சர்மாவை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க்கை என்பது முழு வட்டம். 6 மாதத்துக்கு முன் அவர் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாகக்கூட இல்லை, அதே மனிதர் இப்போது இந்தியாவை உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    அவர் 2 உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ளார். அங்கு அவர் தோல்வி அடையாமல் இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளார். இது அவரது கேப்டன்சி மற்றும் தலைமைத்துவத் தரத்தைப் பற்றி பேசுகிறது.

    நான் பி.சி.சி.ஐ. தலைவராக இருந்தபோதும், விராட் இனி இந்திய அணிக்கு கேப்டனாக இருக்க விரும்பாதபோதும், அவர் கேப்டனாக ஆனதால் எனக்கு ஆச்சரியமில்லை.

    அவர் கேப்டனாக தயாராக இல்லாததால் அவரை கேப்டனாக்க அதிக நேரம் பிடித்தது. அவரை கேப்டனாக்க அனைவரிடமிருந்தும் நிறைய உந்துதல் தேவைப்பட்டது, அவருக்கு கீழ் இந்திய கிரிக்கெட்டின் முன்னேற்றத்தைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    ரோகித் 5 ஐ.பி.எல். பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இது மிகப்பெரிய சாதனை ஆகும். ஐ.பி.எல். வெல்வது சில நேரங்களில் மிகவும் கடினம். சர்வதேச கிரிக்கெட்டை விட ஐ.பி.எல். சிறந்தது என்று நான் கூறவில்லை.

    ஆனால் ஐ.பி.எல்.லில் வெற்றி பெற 16-17 (12-13) போட்டிகளில் வெற்றிபெற வேண்டும். உலகக் கோப்பையை வெல்ல 8-9 போட்டிகளில் வெற்றிபெற வேண்டும். உலகக் கோப்பையை வெல்வதில்தான் கவுரவம் அதிகம். நாளை ரோகித் அதை வெல்வார் என நம்புகிறேன்.

    உலகக் கோப்பை தொடரில் அவர் முன்னணியில் இருந்து வழிநடத்தினார். அற்புதமாக பேட்டிங் செய்தார். அது நாளை தொடரும் என நம்புகிறேன். இந்தியா மிக சரியாக முடிக்கும் என நம்புகிறேன். அவர்கள் சுதந்திரமாக விளையாட வேண்டும்.

    அவர்கள் போட்டியின் சிறந்த பக்கமாக இருந்தனர். நான் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். பெரிய போட்டிகளை வெல்வதற்கு அது அவசியம் என்பதால் நாளை அவர்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்புகிறேன் என குறிப்பிட்டார்.

    • இங்கிலாந்து அணிக்கு சுழலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது தெரியாது.
    • இந்த பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உகந்தது கிடையாது என்றார் அக்தர்.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் கயானாவில் நேற்று நடந்த 2-வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

    இந்தியர்களால் சுழலை சமாளிக்க முடியும். ரோகித் சர்மா இங்கிலாந்தின் அதில் ரஷீத்தை சமாளித்தார்.

    ஆனால் இங்கிலாந்து அணியினருக்கு எப்படி சுழலை எதிர்கொள்ள வேண்டும் என்பது தெரியாது.

    இந்த பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உகந்தது கிடையாது.

    அங்கே இங்கிலாந்து முதலில் பேட் செய்து 150 ரன்கள் எடுத்து இந்தியாவை அழுத்தத்தில் தள்ளியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் 2-வது பேட்டிங் செய்வதாக அடம் பிடித்தனர்.

    மறுபுறம் இந்தியா வெற்றிக்கு தகுதியானவர்கள். இந்த தொடரை அவர்கள் வெல்ல வேண்டும் என்று நானும் விரும்புகிறேன்.

    கடந்த ஆண்டு வென்றிருக்க வேண்டிய உலகக் கோப்பையில் இந்தியா தோல்வியை சந்தித்ததால் நானும் மனமடைந்தேன். ஏனெனில் அவர்கள் வெல்வதற்கு தகுதியானவர்கள்.

    தொடர்ச்சியாக தாக்கத்தை ஏற்படுத்தி கோப்பையை வெல்லவேண்டும் என ரோகித் சர்மா சொல்லி வருகிறார். அதை வெல்வதற்கு அவர் தகுதியானவர்.

    இந்நேரம் அவர் 2 உலகக் கோப்பையை கையில் வைத்திருக்க வேண்டும். இம்முறை அவர்கள் கோப்பையை விடக்கூடாது.

    மிகவும் பெரிய வீரராகவும், சுயநலமற்ற கேப்டனாக தன்னுடைய அணிக்காக விளையாடும் அவர் தனது கேரியரை உச்சமாக முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் விராட் கோலியின் தங்க சிலை அமைக்கப்பட்டுள்ளது.
    • இதுதொடர்பான புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலாகி வருகின்றன.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் தங்க சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலாகி வருகின்றன. விசாரணையில், அந்தச் சிலை போலி என தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில், விராட் கோலியின் உருவச் சிலை டைம்ஸ் சதுக்கத்தில் அமைக்கப்படவில்லை என்ற உண்மை கண்டறியப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், நாளை நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி நன்றாக விளையாடக் கோரி சிலை அமைத்துள்ளோம் டுயூரோபிளக்ஸ் மெத்தை கம்பெனி தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பான வீடியோவில் விராட் கோலியின் நல்ல உறக்கத்துக்கு டுயூரோபிளக்ஸ் மெத்தை என விளம்பரமும் செய்திருந்தது.

    கம்ப்யூட்டர் அனிமேஷன் மூலம் விராட் கோலியின் சிலை உருவாக்கப்பட்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    டுயூரோபிளக்ஸ் மெத்தை கம்பெனியின் விளம்பர தூதராக கடந்த ஆண்டு விராட் கோலி நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×