search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    • முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
    • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    கோவை மாவட்டம் வால்பாறையில் 4 வயது சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    ஊசிமலை மட்டம் எஸ்டேட் பகுதியில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளியின் 4 வயது மகள் அப்சராவை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் பரபப்பை ஏற்படுத்தியது.

    சிறுமியின் குடும்பத்திற்கு முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.

    மேலும், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கவும், இரவில் வெளியே வர வேண்டாம் எனவும் வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    • டிடி தமிழ் நிகழ்ச்சியில் திராவிடநல் திருநாடும்' என்ற வரியை நீக்கிவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னருக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் நேற்று மாலை தொலைக்காட்சி பொன் விழா கொண்டாடப்பட்டது. அதனுடன் இந்தி மொழி மாதம் கொண்டாட்டத்தின் நிறைவு விழாவும் நடந்தது.

    விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழா தொடங்கும்போது தேசிய கீதத்தை தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.

    அப்போது 'தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரியை நீக்கிவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

    இது தமிழக அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. திராவிடம் என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் கவர்னருக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "தமிழ்நாட்டின் சட்டத்தை மீறிய கவர்னரை உடனே திரும்ப பெற வேண்டும்" என்று போர்க்கொடி தூக்கினார்.

    இந்நிலையில், நாட்டின் பிரதமரே திராவிடர்தான் என்று பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா புதிய விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.

    இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய எச்.ராஜா, "திராவிடம் என்பது இடத்தை குறிக்கும். இனத்தை அல்ல. தர் என்றால் சமஸ்கிருதத்தில் மரம் என்று அர்த்தம். தக்காண பீடபூமிக்கு தெற்கே உள்ள காடுகள் நிறைந்த பகுதியில் 56 தேசங்கள் இருந்தது. அங்கு 2 பெரிய நிலப்பரப்புகள் இருந்தது. அதற்கு பெயர் பஞ்ச திராவிடம். இதில் முதல் மாநிலமே கூர்ஜரம் அதாவது குஜராத். அதனால் இந்த நாட்டின் பிரதமரே திராவிடர் தான். இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வேண்டும்.
    • கட்சி வழக்கறிஞர் அணி மாநில துணை தலைவர் சந்தீப், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வேண்டும் என பகுஜன் சமாஸ் கட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    5 நாட்களுக்குள் கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்காவிட்டால் சட்ட ரீதியாக நவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    த.வெ.க தலைவர் விஜய்க்கு பகுஜபன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் அணி மாநில துணை தலைவர் சந்தீப், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    த.வெ.க. இன்னும் பதிவு செய்யப்படாத நிலையில், கட்சி கொடி விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    • அரசியலும் – ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது.
    • ‘டி.டி. தமிழை’ப்போல் - அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்குகிறார்

    திருவண்ணாமலை மாநகரில் மக்களின் பொதுப் போக்குவரத்து வசதிக்காக சுமார் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகளை இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

    அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், அடி அண்ணாமலை கிராமத்தின் அருகே, 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன சுகாதார வளாகம், நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மையம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "தம்பி உதயநிதி ஸ்டாலின், நேற்று கிரிவலம் போயிருக்கிறார். பவன் கல்யாண் சொன்னது உதயநிதி மனதில் தைத்துவிட்டது என்று நினைக்கிறேன். அதனால் அதிகப்படியான மக்கள் கிரிவலம் வரும் நிலையில் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதில் மகிழ்ச்சி. கடந்த முறை கிரிவலத்தில் மக்கள் பேருந்துகள் கிடைக்காமல் அவதிப்பட்டார்கள். இன்று தங்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு அவர்கள் கிரிவலம் போக ஆரம்பித்திருக்கிறார்கள் என்ற வகையில் எங்களுக்கு மகிழ்ச்சி தான்." எனக் கூறியுள்ளார்.

    இந்நிலையில், தமிழிசையின் கருத்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

    அவரது பதிவில், "இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் ஆளுநர் அக்காவுக்கு கோபம் வருகிறது!

    அக்கா அவர்களே, திருவண்ணாமலையில் 'கிரி'வலம் வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் 'சரி'யாக இருக்கிறதா என்று ஆய்வு தான் செய்தோம். நீங்கள் குதூகலிப்பது போல அது கிரிவலம் அல்ல – 'சரி' வலம்!

    ஓடாத தேரை ஓட வைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்! ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு திருப்பணிச் செய்தவர் எங்கள் முதல்வர்!

    'எல்லோருக்கும் எல்லாம்' என உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்தால், மக்களால் பல முறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும். நியாயம் தானே...!

    நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் – ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது.

    ஒன்றிய அரசின் 'டி.டி. தமிழை'ப்போல் - அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்! #StopHindiImposition" என்று பதிவிட்டுள்ளார்.

    • பலத்த காயங்களுடன் குழந்தை உள்பட 6 பேர் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • காரை ஓட்டி வந்தவர் மற்றும் அவரது மகன் என இருவரும் கைதாகி உள்ளனர்.

    சென்னை எழும்பூர் அருகே சொகுசு கார் ஒன்று தறிகெட்டு ஓடி விபத்தை ஏற்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், காவல் ஆணையர் அலுவலகம் முன்பு விபத்து ஏற்படுத்தியுள்ளது. இதில், பலத்த காயங்களுடன் குழந்தை உள்பட 6 பேர் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்தில், ஆட்டோவின் முன்பகுதி நசுங்கியுள்ளது. மேலும், கார், இரண்டு பைக்குகளும் பலத்த சேதமடைந்துள்ளன.

    விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோட முயன்றவர்களை பொதுமக்களே பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

    காரை ஓட்டி வந்தவர் மற்றும் அவரது மகன் என இருவரும் கைதாகி உள்ளனர்.

    மேலும், காரின் முகப்பில் உகாண்டாவுக்கான தூதரக அலுவலகம் என குறிப்பிடப்பட்ட போஸ்டர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஏற்படுத்திய சர்ச்சையால் கவர்னருக்கும், முதலமைச்சருக்கும் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை தூர்தர்ஷன் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
    • நேற்று கவர்னர் விழாவில் அந்த மூத்த பெண் பாடகி தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கு அழைக்கப்படவில்லை.

    சென்னை:

    சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் நேற்று மாலை தொலைக்காட்சி பொன் விழா கொண்டாடப்பட்டது. அதனுடன் இந்தி மொழி மாதம் கொண்டாட்டத்தின் நிறைவு விழாவும் நடந்தது.

    விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழா தொடங்கும்போது தேசிய கீதத்தை தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.

    தூர்தர்ஷன் அலுவலகத்தில் பணிபுரியும் 4 பெண்கள் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை பாடினார்கள்.

    "நீராருங் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்

    சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்ட மிதில்............." இவ்வாறு முதல் இரண்டு வரிகளை பாடிய அந்த 4 பெண்களும் 3-வது வரியான,

    தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநல் திருநாடும்- என்ற வரியை படிக்க தொடங்கும் போது சற்று திணறலுக்குள்ளனார்கள். 3 வினாடிகள் திணறிய அந்த பெண்கள் அந்த வரியை தவிர்த்து விட்டு அடுத்து 4-வது வரியான,

    "தக்கசிறு பிறைநுதுலும் தரித்தநறுந் திலகமுமே...." -என்று அடுத்த வரிக்கு தாவி சென்று விட்டனர்.

    இது தமிழக அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. திராவிடம் என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் கவர்னருக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "தமிழ்நாட்டின் சட்டத்தை மீறிய கவர்னரை உடனே திரும்ப பெற வேண்டும்" என்று போர்க்கொடி தூக்கினார்.

    இதையடுத்து கவர்னர் ஒரு விளக்கம் வெளியிட்டார். அதில் அவர் முதலமைச்சரின் கருத்து இனவாதமானது. அவரது கண்ணியத்தை குறைக்கும் வகையில் இருக்கிறது என்று குறிப்பிட்டார். அதோடு தமிழ் மொழிக்கு செய்து வரும் சேவைகளை பட்டியலிட்டு இருந்தார்.

    கவர்னரின் அந்த விளக்கத்துக்கு முதலமைச்சர் நேற்று இரவு 11 மணிக்கு உடனடியாக சுட... சுட... பதிலடி கொடுத்தார். அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "தமிழ்த் தாய் வாழ்த்தை பக்தி சிரத்தையுடன் பாடுவேன் என்று விளக்கம் அளித்துள்ள கவர்னர் முழுமையாக பாடப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உடனே மேடையிலேயே ஏன் கண்டிக்கவில்லை" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    மேலும் பிளவுவாத சக்திகளிடம் இருந்து விலகி அரசியல் சட்ட நெறிமுறைகளின்படி கடமையாற்றுங்கள் என்றும் கூறி இருந்தார்.

    தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஏற்படுத்திய சர்ச்சையால் கவர்னருக்கும், முதலமைச்சருக்கும் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை தூர்தர்ஷன் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், "கவனகுறைவாக நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை. இந்த விஷயத்தில் கவர்னருக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து கவர்னர் தரப்பிலும், முதலமைச்சர் தரப்பிலும் சற்று அமைதி ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த சலசலப்புக்கு வித்திட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய 4 பெண்களிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கவர்னர் மாளிகை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

    அதன் அடிப்படையில் சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் இன்று விசாரணை நடத்தப்பட்டது. சென்னை தூர்தர்ஷனில் விழாக்கள் நடைபெறும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசை நாடக பிரிவில் உள்ள மூத்த பெண் ஊழியர் ஒருவர்தான் வழக்கமாக பாடுவது உண்டு.

    ஆனால் நேற்று கவர்னர் விழாவில் அந்த மூத்த பெண் பாடகி தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கு அழைக்கப்படவில்லை. அதற்கு பதில் நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவுகளில் உள்ள 4 பெண் ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியதாக தெரிய வந்துள்ளது.

    அவர்களில் 2 பேர் தமிழ்த்தாய் வாழ்த்தின் 3-வது வரியை பாடாமல் விட்டுவிட்டதுதான் இவ்வளவு குழப்பத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த 2 பெண்களும் 3-வது வரியை பாடாததால் மற்ற 2 பெண்களும் அவர்களுடன் சேர்ந்து அந்த வரியை நழுவ விட்டதாக தூர்தர்ஷன் ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள்.

    இந்த விவகாரத்தில் தமிழ்த் தாய் வாழ்த்தின் 3-வது வரியை அந்த பெண்கள் எப்படி பாடாமல் விட்டார்கள் என்பதுதான் கேள்வியாக உள்ளது. இதற்கு விடை காண இன்று தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த 4 பெண்களிடமும் தூர்தர்ஷன் மூத்த அதிகாரி கள் அடுத்தடுத்து விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. அதில் எத்தகைய விடை கிடைத்தது என்ற விவரத்தை தூர்தர்ஷன் அதிகாரிகள் வெளியிடவில்லை.

    திராவிடம் திட்டமிட்டு மறைக்கப்பட்டதா? அல்லது தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பெண்களிடம் ஏற்பட்ட திணறலா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • தமிழக அரசு சிறப்பாக செயல்பட பல தடைகளை ஆளுநர் உருவாக்கி இருக்கிறார்.
    • இரு மொழிக் கொள்ளைதான் திராவிட இயக்கங்களின் கொள்கை.

    புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் "இந்தி மொழிக்கு நாங்கள் எதிரிகள் கிடையாது" என துரை வைகோ எம்.பி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியதாவது:-

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அமைச்சரவையில் தீர்மானத்தை நிறைவேற்றுகிறார்கள் என்றால் அதற்கு ஆளுநர் முழு ஆதரவுடன் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக ஆளுநரால் பல்வேறு திட்டங்கள் தடைப்பட்டு உள்ளன. தமிழக அரசு சிறப்பாக செயல்பட பல தடைகளை ஆளுநர் உருவாக்கி இருக்கிறார். நீதிமன்றத்திற்கு சென்றுதான் தீர்ப்புகளை பெறவேண்டி இருக்கிறது.

    கனமழையில் இருந்து சென்னை மீண்டிருக்கிறது என்றால், அரசு நிர்வாகிகள், மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் தான் காரணம்.

    இந்தி மாத தினம் கொண்டாட்டும். இந்தி மொழிக்கு நாங்கள் எதிராளிகள் கிடையாது. ஆனால், அதே வேளையில் இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். இரு மொழிக் கொள்ளைதான் திராவிட இயக்கங்களின் கொள்கை.

    இருமொழிக் கொள்கை இருப்பதால்தான், உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் ஆளுமைகளாக இருக்கின்றனர். அதற்கு காரணம் ஆங்கில புலமை.

    மும்மொழிக் கொள்கையே இந்தியை திணிப்பதற்காக தான்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் முழுக்க முழுக்க திசை திருப்பும் செயலாகும்.
    • திருக்குறளுக்கு உலகம் முழுவதும் கலாசார மையம் ஏற்படுத்த வேண்டும் என்று அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறார்.

    சென்னை:

    சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில நேற்று மாலை நடந்த இந்தி மாத கொண்டாட்டம் நிறைவு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடும்போது 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்...' என்ற வரியை விட்டு விட்டு பாடியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததோடு பிரதமருக்கும் கடிதம் எழுதினார். கவர்னரை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கமளித்தார். அதில் அவர், 'எனக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடத் தெரியும். பக்தி சிரத்தையுடன் அதை பாடுவேன்' என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த விளக்கத்துக்கு நேற்று நள்ளிரவு உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், 'தமிழ்த்தாய் வாழ்த்து தெரிந்திருந்தால், அதில் ஒரு வரியை பாடாமல் விட்ட போது நிறுத்தி இருக்கலாமே அதை ஏன் கவர்னர் செய்யவில்லை?' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    இதனால் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் கவர்னருக்கும், முதலமைச்சருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் பெங்களூரு விமான நிலையத்தில் நிருபர்கள் அவரிடம் தமிழ்த்தாய் வாழ்த்து-கவர்னர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு எல்.முருகன் பதில் அளித்து கூறியதாவது:-

    தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் முழுக்க முழுக்க திசை திருப்பும் செயலாகும். இந்தி மாதம் மத்திய அரசு துறைகளில் கொண்டாடப்படுவது வழக்கம்.

    2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் மத்தியில் தி.மு.க.வினர் மந்திரியாக இருந்தார்கள். தி.மு.க. அமைச்சர்கள் இருந்த காலத்தில் இந்த விழாக்கள் நடந்து கொண்டுதான் இருந்தது. இந்த விழா ஒவ்வொரு வருடமும் நடப்பதுதான்.

    தமிழை பாதுகாப்பதிலும், உலகளவில் எடுத்து சென்றதிலும் முதன்மையாக இருப்பது பிரதமர் நரேந்திரமோடிதான். திருக்குறளுக்கு உலகம் முழுவதும் கலாசார மையம் ஏற்படுத்த வேண்டும் என்று அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறார்.

    சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிரதமர் சுற்றுப் பயணம் செய்கின்ற அனைத்து நாடுகளிலும் கலாசார மையம் தொடங்கப்பட்டு வருகிறது. 35 நாடுகளில் திருக்குறளை உலக மொழிகளில் மொழிபெயர்த்து தமிழின் பெருமையை உலக நாடுகளுக்கு அறிய செய்தவர்.

    ஐ.நா. சபையில் பிரதமர் உரையாற்றும் போது 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று பேசி தமிழுக்கு பெருமை சேர்த்தார். தமிழை காப்பாற்றுவதில் பிரதமருக்கே முதல் இடம்.

    முதலமைச்சரின் குற்றச்சாட்டுகள் மலிவானது. இப்போது எங்கே பிரச்சனை என்றால் நமது இந்த விவகாரத்தை இந்தியா கூட்டணியினர் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    காலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் டுவிட் போடுகிறார். அதனை தொடர்ந்து தி.மு.க.வை சேர்ந்தவர்களும், காங்கிரசை சேர்ந்தவர்களும் ஒரு கடிதம் எழுதுகிறார்கள். அதைத் தொடர்ந்து ஒரு சிறிய ஆர்ப்பாட்டத்தையும் செய்கிறார்கள். இதைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் ஏதாவது கிடைக்குமா? என்று தேடுகிறார்கள். அந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் செய்த தவறு எல்லோருக்கும் தெரியும். அந்த தவறுக்கு அவர்கள் மன்னிப்பும் கேட்டு விட்டார்கள்.

    ஆனால் இதில் கவர்னரை தொடர்புபடுத்துவது எந்தவிதத்திலும் நியாயம் கிடையாது. எந்த விதத்திலும் தர்மமும் கிடையாது. எல்லா விஷயங்களிலும் அரசியல் செய்யக்கூடாது.

    இன்று மழை வெள்ளத்தை தி.மு.க. அரசாங்கம் சரியாக கையாளவில்லை. ஒருநாள் மழையை சமாளிக்கவே அவர்கள் சரியாக திட்டமிடவில்லை. இதையெல்லாம் மக்களிடம் திசை திருப்ப வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

    இந்தியா கூட்டணியினர் கொஞ்சம் கூட யோசிக்காமல், அடிப்படை யோசனை கூட இல்லாமல் இந்த விஷயத்தை கையாண்டு கொண்டிருக்கிறார்கள்.

    ஒரு சின்ன தவறு நடந்து விட்டது. அந்த தவறுக்கு கவர்னர் எப்படி பொறுப்பாக முடியும். நிகழ்ச்சியில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர் எப்படி அதற்கு பொறுப்பேற்க முடியும்.

    இதில் அரசியல் செய்வது மிக தெளிவாக தெரிகிறது. இது 1960 கால கட்டங்கள் அல்ல. தி.மு.க. நினைக்கும் அரசியலை இப்போது பண்ண முடியாது. மக்கள் ரொம்ப தெளிவாக இருக்கிறார்கள்.

    நாம் யாருமே இந்திக்கு ஆதரவாளர்கள் கிடையாது. அதே நேரத்தில் எதிர்ப்பாளர்களும் கிடையாது.

    இந்தியை எதிர்க்கும் தி.மு.க.வினர் தாங்கள் நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளை நடத்த மாட்டோம் என இழுத்து மூடத் தயார் இல்லை. ஏனென்றால் அதன் மூலம் வருமானம் கிடைக்கிறது.

    மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனி நடக்காது. ஆக்கப்பூர்வமான அரசியல் செய்யுங்கள். டாஸ்மாக்கை ஒழியுங்கள். நீங்கள் இந்த நாடகத்தை எதற்காக நடத்துகிறீர்கள். சென்னை மழை வெள்ள பாதிப்பை தி.மு.க. சரியாக கையாளவில்லை. எனவே மக்களின் கவனத்தை திசை திருப்ப இதை செய்கிறீர்கள். அதனால் கவர்னர் பக்கம் திசை திருப்புகிறார்கள்.

    சென்னையில் கூவம், அடையாறு ஆறுகளை சீர் செய்யாமல் மழை வெள்ளத்தை தடுக்க முடியாது. 60 ஆண்டுகள் ஆண்டு விட்டு இந்த சின்ன யோசனை கூட அவர்களுக்கு இல்லை.

    தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை தி.மு.க.வினர் திசை திருப்புவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தூத்துக்குடி நீதித்துறை நடுவர் சக்திவேல் 36-வது அரசு சாட்சியாக வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
    • 100 பக்கம் சாட்சியம் உள்ளது. இதனை எவ்வாறு குறுக்கு விசாரணை செய்வீர்கள்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் காவலர் ரகு கணேஷ் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருந்ததாவது:-

    சாத்தான்குளம் தந்தை -மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற வரும் நிலையில், தூத்துக்குடி நீதித்துறை நடுவர் சக்திவேல் 36-வது அரசு சாட்சியாக வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

    என் தரப்பிலிருந்து நீதித்துறை நடுவர் சக்திவேலை குறுக்கு விசாரணை செய்ய இயலவில்லை. தற்போது நீதித்துறை நடுவர் சக்திவேலை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க கோரி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். ஆனால் விசாரணை நீதிமன்றம் எனது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    இது நியாயமான விசாரணையை மறுக்கும் வகையில் உள்ளது. ஆகவே கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து நீதித்துறை நடுவர் சக்திவேலை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தத.

    இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் மாஜிஸ்திரேட் அளித்த சாட்சியம் 100 பக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பலமுறை வாய்ப்பளித்தும் ரகு கணேஷ் தரப்பில் குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை. ஆகவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

    ரகு கணேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாஜிஸ்திரேட் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும். எனவே அதற்கு அனுமதிக்க வேண்டுமென வாதிட்டார்.

    அப்போது நீதிபதி கூறுகையில், 100 பக்கம் சாட்சியம் உள்ளது. இதனை எவ்வாறு குறுக்கு விசாரணை செய்வீர்கள். திறந்த நீதிமன்றத்தில் தான் நீதிபதி சாட்சியும் அளித்துள்ளார். அவ்வாறு இருக்கும்போது மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த கேட்பது வழக்கை இழுத்தடிக்கும் மாதிரி உள்ளது என கூறிய நீதிபதி இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கோரி தீர்ப்புக்காக வழக்கை வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    • கால் நூற்றாண்டு கோரிக்கையை நிறைவேற்றாமல் நிலக்கரி நிறுவனம் தொடர்ந்து ஏமாற்றி வருவது வன்மையாக கண்டனத்துக்குரியது.
    • அனைவரையும் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் 10000 ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கால் நூற்றாண்டு கோரிக்கையை நிறைவேற்றாமல் நிலக்கரி நிறுவனம் தொடர்ந்து ஏமாற்றி வருவது வன்மையாக கண்டனத்துக்குரியது.

    ஆகவே தமிழர்களின் நிலத்தையும், வளத்தையும், உடல் உழைப்பையும் உறிஞ்சி ஆண்டிற்கு ரூ.2,378 கோடி நிகர லாபம் ஈட்டும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், ஒப்பந்த பணியாளர்கள் அனைவரையும் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • தமிழகத்தில் நாளை அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழகத்தில் நாளை அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 21-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள்; நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 22, 23-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வரும் 24-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 25-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிதம்பரம் கோவில் ஆரூத்ரா தரிசனத்திற்கு முன்பை போல பக்தர்கள் கூட்டம் வருவதில்லை.
    • கோவிலில் காசு போட்டால்தான் பூ கிடைக்கும்.

    சென்னை:

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் செவிலியரைத் தாக்கியதாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய உதவியதாக கூறி, நடராஜ தீட்சிதர் என்பவரை சஸ்பெண்ட் செய்து பொது தீட்சிதர்கள் குழு உத்தரவிட்டது.

    இதனை எதிர்த்து நடராஜ தீட்சிதர் இந்து அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்திருந்தார். அதனை விசாரித்த கடலூர் இணை ஆணையர், நடராஜ தீட்சிதரின் சஸ்பெண்டை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து பொது தீட்சிதர்கள் குழுவின் செயலாளர் வெங்கடேச தீட்சிதர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

    அதில், பொது தீட்சிதர் குழுவின் முடிவில், தலையிட இந்து அறநிலைத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் இணை ஆணையரின் உத்தரவு ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணை வந்தது. அப்போது நடராஜ தீட்சிதர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின்னர் கோவில் தங்களுக்கு சொந்தமானது என பொது தீட்சிதர்கள் நினைப்பதாகவும் நீதிமன்றம் தான் இதனை கட்டுப்படுத்த வேண்டு மெனவும் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து நீதிபதி கூறியதாவது:-

    தீட்சிதர்களால் எனக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மன கஷ்டங்களுக்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்கும் அவமானப்படுத்தப்படுகின்றனர்.

    தீட்சிதர்கள் ஆணவத்துடன் செயல்படுகின்றனர். இது ஒரு நல்ல அறிகுறி கிடையாது. சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வருபவர்கள் எல்லாம் சண்டைக்கு வருவது போலவே தீட்சிதர்கள் நினைக்கின்றனர்.

    சிதம்பரம் நடராஜர் கோவில் நமக்கு சொந்தமானது என பொது தீட்சிதர்கள் நினைக்கின்றனர். அவர்கள் தங்களை கடவுளுக்கு மேலானவர்கள் என கருதுகின்றனர்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஆரூத்ரா தரிசனம் தற்போது பல கோவில்களில் நடத்தப்படுகிறது.

    சிதம்பரம் கோவில் ஆரூத்ரா தரிசனத்திற்கு முன்பை போல பக்தர்கள் கூட்டம் வருவதில்லை. இப்படியே இருந்தால் பக்தர்களுடைய வருகை குறைந்து கோவில் பாழாகி விடும். கோவிலில் காசு போட்டால்தான் பூ கிடைக்கும். இல்லையென்றால் விபூதி கூட கிடைக்காது.

    இவ்வாறு நீதிபதி கூறினார்.

    இதனையடுத்து, இந்த வழக்கில் பதிலளிக்குமாறு இந்து அறநிலைத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தார்.

    ×