search icon
என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    லண்டன்

    டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பிய வீரர் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் அலெக்சின் பாப்ரின் உடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 4-6, 6-3, 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே, பிரான்ஸ் வீரர் குயிண்டென் ஹேல்ஸ் உடன் மோதினார். இதில் 1-6, 6-7 (4-7), 6-4, 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 243 ரன்களை பாகிஸ்தான் குவித்தது.
    • உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கோப்பை தொடரின் புள்ளிபட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது.

    உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கோப்பை 2024 தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 6 அணிகள் விளையாடுகின்றன.

    இந்த லெஜண்ட்ஸ் கோப்பை தொடரின் 8 ஆவது போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி பர்மிங்காம் நகரின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கம்ரான் அக்மல் மற்றும் சர்ஜீல் கான் இந்திய அணியின் பந்துவீச்சை நாலா பக்கமும் சிதறடித்தனர். 30 பந்துகளில் 72 ரன்கள் குவித்து சர்ஜீல் கான் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய கம்ரான் அக்மல் 77 ரன்களும் சோயப் மக்சூத் 51 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்களை பாகிஸ்தான் அணி குவித்தது.

    244 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

    இந்திய அணியில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 52 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணியில் வஹாப் ரியாஸ், சோயப் மாலிக் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த சர்ஜீல் கான் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் கோப்பை தொடரில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது. விளையாடிய 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா 2-ம் இடத்திலும் இந்தியா 3-ம் இடத்திலும் உள்ளது.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் வென்றார்.

    லண்டன்

    டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கியது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ், இங்கிலாந்தின் கேமரூன் நூரியுடன் மோதினார்.

    பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வரேவ் 6-4, 6-4, 7-6 (17-15) என்ற செட் கணக்கில் நூரியை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இந்தப் போட்டியை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கண்டு களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • டென்னிஸ் கோர்ட்டில் அறிமுகப்படுத்தியபோது சச்சின் எழுந்து நின்று கையசைத்தார்.

    லண்டன்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பல முன்னணி, வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இதில் நடைபெற்று வரும் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், இங்கிலாந்தின் கேமரூன் நூரி ஆகியோர் விளையாடினர்.

    இந்தப் போட்டியை நேரில் காண இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சென்றார். அப்போது அவரை டென்னிஸ் கோர்ட்டில் அறிமுகப்படுத்தியபோது எழுந்து நின்று கை அசைத்தார். அவருடன் இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோரும் இந்தப் போட்டியை கண்டுகளித்தனர்.

    • து அருந்துபவர்கள் ஒயினின் சுவைக்காக எவ்வளவு விலைக் கொடுத்தும் வாங்கி அருந்துகின்றனர்.
    • ஒவ்வொரு பாட்டிலிலும் எனது பாதத்தின் ஒரு சிறிய பகுதி உள்ளது.

    உலகெங்கிலும் உள்ள மது பிரியர்களுக்கு விருப்பப்படும் பானமாக ஒயின் உள்ளது. மது அருந்துபவர்கள் ஒயினின் சுவைக்காக எவ்வளவு விலைக் கொடுத்தும் வாங்கி அருந்துகின்றனர்.

    இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த 30 வயதான எமிலி ரே என்ற மாடல் தனது கால்களால் நசுக்கப்பட்ட திராட்சைகளால செய்யப்பட்ட ஒயின் சுவையை பலர் விரும்புவதாகக் கூறியுள்ளார். எமிலி கால் மாடலாக புகழ் பெற்றவர். எமிலி வெறும் கால்களால் திராட்சை பழங்களை நசுக்கி அதில் மது மது தயாரிக்கிறார். சொந்தமாக ஒரு ஒயின் பிராண்டை ஆரம்பித்து அதற்கு சிம்ப் ஒயின் என்றும் பெயரிட்டுள்ளார்.

     இந்நிலையில் கூட்டு ஒயின் திட்டத்திற்காக ரெனிகேட் அர்பன் வைனரி என்ற லண்டனை தளத்தை ஒயின் தயாரிக்கும் மாடல் எமிலி தொடர்பு கொண்டார். அவர் சமீபத்தில் ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்பு மதுவை அறிமுகத்தியுள்ளார். திராட்சைகளை தனது கால்களால் நசுக்கி தயாரிக்கப்படுகிறது. அந்த ஒயின் ஒரு பாட்டிலின் விலை சுமார் 100 பவுண்டுகள் (தோராயமாக ரூ. 10,662). என்று தெரிவித்துள்ளார்.

    "ஒவ்வொரு பாட்டிலிலும் எனது பாதத்தின் ஒரு சிறிய பகுதி உள்ளது, அதைத்தான் கால் ரசிகர்கள் விரும்புவார்கள் என்று நான் நினைக்கிறேன்" என்றும் கூறியுள்ளார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் அமெரிக்க வீராங்கனையான கோகோ காப், பிரிட்டிஷ் வீராங்கனை சோனா கர்தால் உடன் மோதினார்.

    இதில் கோகோ காப் 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ், உக்ரைன் வீராங்கனை மார்தா கோஸ்டியூக்கை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
    • இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அல்காரஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் மிகவும் கவுரவமிக்கதாகக் கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், செர்பியா வீரர் மியோமிர் உடன் மோதினார்.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னர் 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபேவை எதிர்கொண்டார். முதல் மற்றும் 3வது செட்டை தியாபே கைப்பற்றினார். சுதாரித்து ஆடிய அல்காரஸ் 2,4 மற்றும் 5வது செட்டை கைப்பற்றினார்.

    இறுதியில் அல்காரஸ் 5-7, 6-2, 4-6, 7-6 (7-2), 6-2 என்ற செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சிதான் இந்திய வம்சாவளி எம்.பி.க்களையும் அதிகமாக பாராளுமன்றத்துக்கு கொடுத்து இருக்கிறது.
    • பிரிட்டனை சேர்ந்த சீக்கியரான பிரீத்தி கவுர் கில், தன்மன்ஜீத் சிங் தேசி ஆகியோரும் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

    லண்டன்:

    பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் இந்த முறை அதிகமான இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்று எம்.பி.க்களாகி இருக்கின்றனர். அந்தவகையில் எப்போதும் இல்லாத அளவாக சுமார் 26 இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை அலங்கரிக்க உள்ளனர்.

    இதில் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான ரிஷி சுனக் முக்கியமானவர். இவர் யார்க்ஷைர் கவுண்டியில் உள்ள தனது ரிச்மாண்ட்-நார்தலர்டன் தொகுதியை தக்க வைத்தார்.

    இதைப்போல முன்னாள் மந்திரிகள் சுவெல்லா பிரேவர்மன், பிரீதி படேல், கிளேர் கவுண்டினோ ஆகியோரும் கன்சர்வேட்டிவ் கட்சியில் இருந்து வெற்றி பெற்றனர். மேலும் ககன் மகிந்திரா, சிவானி ராஜா உள்ளிட்டோரும் வெற்றி பெற்றனர்.

    ஒட்டுமொத்தமாக அதிக இடங்களில் வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சிதான் இந்திய வம்சாவளி எம்.பி.க்களையும் அதிகமாக பாராளுமன்றத்துக்கு கொடுத்து இருக்கிறது.

    அந்த கட்சியை சேர்ந்த சீமா மல்கோத்ரா, வலேரி வாஸ், லிசா நண்டி ஆகியோர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்துள்ளனர். இதைப்போல பிரிட்டனை சேர்ந்த சீக்கியரான பிரீத்தி கவுர் கில், தன்மன்ஜீத் சிங் தேசி ஆகியோரும் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

    வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியினரில் புதுமுகங்களும் கணிசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் யுகி பாம்ப்ரி ஜோடி தோல்வி அடைந்தது.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி-பிரான்சின் ஆல்பனோ ஆலிவெட்டி ஜோடி, ஜெர்மனியின் கெவின் கிராவிட்ஸ்-டிம் புட்ஸ் ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் யுகி பாம்ப்ரி ஜோடி 6-4, 4-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் இத்தாலி வீராங்கனை 3-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி, கனடா வீராங்கனை பியன்கா ஆண்ட்ரிஸ் உடன் மோதினார்.

    இதில் பவுலினி 7-6 (7-4), 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் இந்த முறை எட்டு தமிழர்கள் களம் கண்டனர்.
    • இதில் தொழிலாளர் கட்சி சார்பில் ஸ்டராட்போர்டு தொகுதியில் உமா குமரன் போட்டியிட்டார்.

    லண்டன்:

    பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 410 இடங்களிலும், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 119 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பிற கட்சிகள் 112 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

    பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில்நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் என மொத்தம் 8 தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

    இந்நிலையில், பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன், லண்டன் ஸ்டராட்போர்டு தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்தத் தொகுதியில் 19,145 வாக்குகள் பெற்று வெற்றியைப் பதிவுசெய்துள்ளார் உமா குமரன். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான கேன் பிளாக்வெல் 3,144 வாக்குகள் மட்டும் பெற்று 4-வது இடம் பெற்றார்.

    ஈழத் தமிழ்ப் பெண்ணான உமா குமரன் பிரிட்டன் வரலாற்றில் முதல் தமிழ் எம்.பி. ஆவார். இவரது குடும்பம் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்கு பின் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் தோற்றார்.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த எமில் ரூசுவோரி உடன் மோதினார்.

    இதில் சிட்சிபாஸ் 6-7 (6-8), 6-7 (10-12), 6-3, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    ×