search icon
என் மலர்tooltip icon

    T20 உலகக் கோப்பை திருவிழா 2024

    • இந்தியா தோல்வியடைந்தாலும் ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    • இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறும்.

    செயின்ட்லூசியா:

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் 'சூப்பர் 8' சுற்று ஆட்டத்தில் 'குரூப் 1' பிரிவில் உள்ள இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ரன்ரேட்டும் நன்றாக இருக்கிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினாலே அரையிறுதிக்கு முன்னேறிவிடும். தோல்வியடைந்தாலும் ரன்ரேட் வலுவாக உள்ளதால் இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகம். அதனால் தோல்வியடைந்தாலும் ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    மாறாக இந்த ஆட்டத்தில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறும். இந்தியா 2-வது இடத்திற்கு சரியும். அதே நேரம் ஏற்கனவே ஒரு வெற்றி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் 83 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தினால் ரன்ரேட் அடிப்படையில் இந்தியாவை முந்தி அரையிறுதிக்கு முன்னேறும். இந்தியா அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேற நேரிடும். இதனால் இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெறவே முழு மூச்சுடன் போராட உள்ளது.

    • கடந்த 12 மாதங்களாக சிறந்த கிரிக்கெட்டை தொடர்ச்சியாக விளையாடி வந்திருக்கிறோம்.
    • கடைசி வரை வெற்றிக்காக போராடிய எங்கள் வீரர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

    ஆண்டிகுவா:

    டி20 உலகக்கோப்பை தொடரில், கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியுள்ளது.

    இதன் மூலமாக சொந்த மண்ணில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியுள்ளது.

    இந்நிலையில் நடப்பு டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்குள் நாங்கள் நுழையாவிட்டாலும் கடந்த 12 மாதங்களாக சிறந்த கிரிக்கெட் போட்டிகளை ஆடினோம் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோமன் பவல் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடைசி வரை வெற்றிக்காக போராடிய எங்கள் வீரர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஒரு பேட்டிங் குழுவாக இன்றைய ஆட்டத்தை மறக்க நினைக்கிறோம். பவுலர்கள் கொஞ்சம் கூட மனம் தளராமல் கட்டுப்படுத்தலாம் என்று போராடினார்கள். அது பாராட்டுக்குரியது. நாங்கள் இந்த டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு கூட முன்னேறவில்லை.

    ஆனால் கடந்த 12 மாதங்களாக சிறந்த கிரிக்கெட்டை தொடர்ச்சியாக விளையாடி வந்திருக்கிறோம். வெஸ்ட் இண்டீஸ் அணி மீதான நம்பிக்கை எங்கள் ரசிகர்களுக்கு மீண்டும் வந்துள்ளதை பார்க்க முடிகிறது. தோல்வியின்போது, பாசிட்டிவான விஷயமாக அதனை பார்க்கிறேன். வெவ்வேறு மைதானங்களில் விளையாடியபோது ரசிகர்கள் நேரடியாக ஆதரவு அளித்ததோடு, சோசியல் மீடியாவில் கொண்டாடினார்கள் எங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி.

    இவ்வாறு ரோமன் பவல் கூறினார்.

    • தாலிபன்களின் ஆட்சியை காரணம் காட்டி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு போட்டிகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒத்தி வைத்தது.
    • விளையாட்டு தேசத்தை ஒன்றிணைக்கிறது, அனைவரையும் ஒன்றிணைக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

    உலகக் கோப்பை டி20 தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் நாளையுடன் சூப்பர் 8 சுற்றும் முடிவடைய உள்ளது. இதன் முடிவில் குரூப் 2-ல் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 2 அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. குரூப் 1-ல் இடம் பெற்றுள்ள 4 அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பு உள்ளது.

    இந்த குரூப்-ல் ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவால் உலக கோப்பையில் எங்களுடன் விளையாட முடியும்போது, இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் ஏன் விளையாட முடியாது என ரஷித் கான் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தாலிபன்களின் ஆட்சியை காரணம் காட்டி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு போட்டிகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தொடர்ச்சியாக ஒத்திவைத்து வந்த நிலையில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் இந்த கேள்வியை முன் வைத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாங்கள் கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். விளையாட்டு தேசத்தை ஒன்றிணைக்கிறது, அனைவரையும் ஒன்றிணைக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

    எனவே, என்னைப் பொறுத்தவரை, எந்த அணிக்கு எதிராகவும் விளையாடுவதில் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியடைகிறோம். சில விஷயங்கள், அரசாங்கம் மற்றும் அரசியல் விஷயங்கள், எனக்கு இந்த விஷயங்களைப் பற்றி அதிகம் தெரியாது. எனக்கு அது பிடிக்கவில்லை.

    ஆஸ்திரேலியாவால் உலக கோப்பையில் எங்களுடன் விளையாட முடியும்போது, இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் ஏன் விளையாட முடியாது. நான் எப்போதும் பெரிய அணிகளுக்கு எதிராக விளையாட விரும்புகிறேன். பிக்பாஷ் கிரிக்கெட் மூலம், அங்குள்ள ரசிகர்களிடமிருந்து எனக்கு அன்பும் ஆதரவும் கிடைத்திருப்பதாக நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு ரஷித் கான் கூறினார்.

    • இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
    • இன்றைய போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும் ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    செயின்ட் லூசியா:

    9-வது டி20 உலகக்கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் 2-ல் இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதியை உறுதி செய்துள்ளது.

    குரூப் 1-ல் நான்கு அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பு உள்ளது. இந்திய அணி மட்டுமே தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. மற்ற அணிகளான ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் 2-ல் ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. வங்காளதேசம் 2 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது.

    இந்நிலையில் அரையிறுதிக்கு எந்த அணி தகுதி பெறும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த வகையில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் மிக முக்கியமான ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

    குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ரன்ரேட்டும் நன்றாக இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினாலே அரையிறுதிக்கு முன்னேறிவிடும். தோல்வியடைந்தாலும் ரன்ரேட் வலுவாக உள்ளதால் இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகம். அதனால் தோல்வியடைந்தாலும் ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    மாறாக இந்த ஆட்டத்தில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறும். இந்தியா 2-வது இடத்திற்கு சரியும். அதே நேரம் ஏற்கனவே ஒரு வெற்றி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் 83 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தினால் ரன்ரேட் அடிப்படையில் இந்தியாவை முந்தி அரையிறுதிக்கு முன்னேறும். இந்தியா அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேற நேரிடும்.

    இதனால் இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை பழி தீர்க்க கடுமையாக போராடும்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணியின் கைல் மேயர்ஸ் 35 ரன்களை சேர்த்தார்.
    • ஷம்சி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீசியது.

    இதைத் தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர் கைல் மேயர்ஸ் 35 ரன்களை சேர்த்தார். இவருடன் களமிறங்கிய ஷாய் ஹோப் ரன் ஏதும் எடுக்காமலும், நிக்கோலஸ் பூரன் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரோஸ்டன் சேஸ் 52 ரன்களை விளாசினார்.

    இவரை தொடர்ந்து வந்தவர்களில் ஆண்ட்ரே ரசல் மட்டும் 9 பந்துகளில் 15 ரன்களை சேர்த்தார். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை சேர்த்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் தப்ரைஸ் ஷம்சி 3 விக்கெட்டுகளையும், யான்சென், மார்க்ராம், கேசவ் மகராஜ், ரபாடா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    136 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு தொடக்க வீரரான ஹென்டிரிக்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும், குவின்டன் டி காக் 12 ரன்களிலும் அவுட் ஆகினர். தென் ஆப்பிரிக்கா 2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 15 ரன் எடுத்த போது ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து மழை நின்றதால் போட்டி மீண்டும் துவங்கியது. ஆனால் மழை காரணமாக போட்டி தடைப்பட்டதால் ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 17 ஓவர்களில் 123 ரன்கள் அடிக்க வேண்டும் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

    இதை அடுத்து பேட்டிங் செய்த கேப்டன் மார்க்ரம் 18 ரன்களையும், ஸ்டப்ஸ் 29 ரன்களையும் அடித்து அவுட் ஆகினர். அடுத்து வந்த கிளாசன் 22 ரன்களையும், மார்கோ யான்சென் 21 ரன்களையும் அடித்தனர்.

    இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணி 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை குவித்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி டக்வெர்த் லீவிஸ் முறைப்படி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஆண்ட்ரே ரசல், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளையும், ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்கா அணி  டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. இன்றைய போட்டியில் தோல்வியுற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

    • நிதிஷ் குமார் 30 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.
    • க்ரிஸ் ஜோர்டான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய அமெரிக்க அணிக்கு ஸ்டீவன் டெய்லர் மற்றும் ஆண்ட்ரிஸ் கௌஸ் முறையே 12 மற்றும் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த நிதிஷ் குமார் 30 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.

    கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் 10 ரன்களிலும் கோரி ஆண்டர்சன் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஹர்மீத் சிங் 21 ரன்களை சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக அமெரிக்க அணி 18.5 ஓவர்களில் 114 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இங்கிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய க்ரிஸ் ஜோர்டான் 2.5 ஓவர்களில் 10 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார். இதில் ஒரு ஹாட்ரிக் விக்கெட்டும் அடங்கும். இவர் தவிர சாம் கர்ரன் மற்றும் ஆதில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளையும், ரீஸ் டோப்லெ மற்றும் லியம் லிவிங்ஸ்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 பந்துகளில் 25 ரன்களை எடுத்தார். மறுபுறம் கேப்டன் ஜாஸ் பட்லர் 38 பந்துகளில் 83 ரன்களை விளாசினார். இதில் 6 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது.

    எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 9.4 ஓவர்களில் 117 ரன்களை குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர் பில் சால்ட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 பந்துகளில் 25 ரன்களை எடுத்தார். மறுபுறம் கேப்டன் ஜாஸ் பட்லர் 38 பந்துகளில் 83 ரன்களை விளாசினார். இதில் 6 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய அமெரிக்கா 115 ரன்களில் சுருண்டது.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் பார்படாசில் நடக்கும் போட்டியில் இங்கிலாந்து, அமெரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்த் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய அமெரிக்கா 18.5 ஓவரில் 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நிதிஷ் குமார் 30 ரன்னும், கோரி ஆண்டர்சன் 29 ரன்னும் எடுத்தனர்.

    கடைசி கட்டத்தில் கிறிஸ் ஜோர்டான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் ஜோர்டான் 4 விக்கெட்டும், சாம் கர்ரன், அடில் ரஷித் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.

    • முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 148 ரன்களை எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 127 ரன்களில் ஆல் அவுட்டானது.

    கிங்ஸ்டவுன்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 148 ரன்களை எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்ரேலியாவை ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு 127 ரன்களில் ஆல் அவுட்டாக்கினர்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் குல்பதின் நைப் 4 விக்கெட்டும், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர். குல்பதின் நைப் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின் ஆடும் லெவனை மாற்றாமல் விளையாடியதே இந்த வெற்றிக்கு காரணம் என கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரஷித் கான் கூறியதாவது:

    இன்று என்னால் நன்றாக தூங்கமுடியும் என நினைக்கிறேன். கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியால் மும்பையில் நான் தூங்கவில்லை. மேக்ஸ்வெல் தனி ஆளாக அப்படிப்பட்ட உணர்வை எனக்கு தந்துவிட்டார். ஆனால் இன்று நாங்கள் அதற்கு வெற்றி பெற்றுள்ளோம். இப்பொழுது என்னால் மகிழ்ச்சியால் தூங்கமுடியாது என நினைக்கிறேன்.

    இது உலகக் கோப்பை தொடர். 2021-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற அணிக்கு எதிரான வெற்றி இது. இப்படிப்பட்ட அணியை நீங்கள் தோற்கடித்தால் அது உங்களுக்கு எப்போதும் பெரிய ஆற்றலை தருகிறது. மேலும் அது உங்களை தூங்க விடாது.

    எங்களுடைய நாட்டுக்கும், அணிக்கும் இது மிகப்பெரிய வெற்றி. இந்த வெற்றியால் மகிழ்ச்சி. எங்கள் வீரர்களால் பெருமைப்படுகிறேன். இது எங்களுடைய நாட்டில் இருக்கும் மக்களுக்கு மிகவும் முக்கியமானது. அவர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடுவார்கள் என தெரிவித்தார்.

    • முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய வங்காளதேசம் 146 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

    ஆன்டிகுவா:

    ஆன்டிகுவாவில் நேற்று இரவு நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய பாண்ட்யா அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். விராட் கோலி 37 ரன், ரிஷப் பண்ட் 36 ரன், ஷிவம் துபே 34 ரன், ரோகித் 23 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து ஆடிய வங்காளதேசம் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ 40 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் அர்ஷ்தீப் சிங், பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக வெற்றிகள் பெற்ற இலங்கையின் சாதனையை இந்தியா சமன்செய்துள்ளது.

    இலங்கை அணி 53 போட்டிகளில் 33-ல் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 49 போட்டிகளில் 33-ல் வெற்றி பெற்றுள்ளது.

    அடுத்த இடங்களில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகியவை தலா 30 போட்டிகளில் வென்றுள்ளன.

    • நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின.
    • இந்திய அணியின் கேப்டன் ரோகித்தின் விக்கெட்டை ஷகிப் அல் ஹசன் வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று நடந்து வருகிறது.

    ஆன்டிகுவாவில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின. அப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித்தின் விக்கெட்டை ஷகிப் அல் ஹசன் வீழ்த்தினார்.

    இதன் மூலம் டி20 உலக கோப்பை தொடரில் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பவுலர் என்ற சாதனையை ஷகிப் அல் ஹசன் படைத்தார்.

    டி20 உலகக்கோப்பையில் 40 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 19.50 பவுலிங் சராசரியுடனும் 6.89 எக்கனாமியுடன் சிறப்பாக பந்துவீசி 50 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    • ஆப்கானிஸ்தான் சார்பில் குர்பாஸ் மற்றும் இப்ராகிம் அரைசதம் அடித்தனர்.
    • பேட் கம்மின்ஸ் இந்த போட்டியிலும் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்தார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    பேட்டிங்கை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களான ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராகிம் ஜத்ரன் அரைசதம் அடித்து சிறப்பான துவக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முறையே 60 மற்றும் 51 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தனர்.

     


    அடுத்து வவந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ் இந்த போட்டியிலும் ஹாட் ட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

    அந்த வகையில், உலகக் கோப்பை தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையை பேட் கம்மின்ஸ் பெற்றார். இவர் தவிர ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டாயினிஸ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

    149 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் ரன் ஏதும் எடுக்காமலும், டேவிட் வார்னர் 3 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் மிட்செல் மார்ஷ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

     


    இவரை தொடர்ந்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். இவர் 59 ரன்களில் நடையை கட்ட ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    போட்டி முடிவில் ஆஸ்திரேலியா அணி 19.2 ஓவர்களில் 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் குலாப்தீன் நயிப் 4 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அஸ்மதுல்லா ஓமர்சாய், முகமது நபி மற்றும் ரஷித் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

    • டி20 உலகக்கோப்பையில் 32 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 1,207 ரன்கள் குவித்துள்ளார்.
    • 2014 மற்றும் 2016 டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருதை விராட் கோலி வென்றுள்ளார்.

    நேற்று இரவு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின. அப்போட்டியில் விராட் கோலி 37 ரன்கள் அடித்தார்.

    இதன் மூலம் உலகக்கோப்பை போட்டிகளில் 3000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் விராட் கோலி படைத்துள்ளார். இதில் 20 ஓவர் மற்றும் ஒருநாள் உலக்கோப்பைகளும் அடங்கும்.

    டி20 உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனையையும் விராட் கோலி தன்வசம் வைத்துள்ளார்.

    டி20 உலகக்கோப்பையில் 32 போட்டிகளில் விளையாடி 129.78 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 63.52 என்ற பிரமிக்க வைக்கும் சராசரியுடன் 1,207 ரன்கள் குவித்துள்ளார் விராட் கோலி. இதில் 14 அரைசதங்களும் அடங்கும்.

    2014 மற்றும் 2016 டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருதை விராட் கோலி வென்றுள்ளார்.

    50 ஓவர் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் விராட் கோலி 2-ம் இடத்தில் உள்ளார். 37 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 1795 ரன்கள் அடித்துள்ளார்.

    2023 ஒருநாள் உலகக்கோப்பையில் விராட் கோலி தொடர் நாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×