search icon
என் மலர்tooltip icon

    T20 உலகக் கோப்பை திருவிழா 2024

    • கோப்பையை வென்றால் தரவரிசையில் மேம்பாடு அடைந்து ஸ்பான்சர்கள் கிடைப்பார்கள்.
    • நிதி நெருக்கடியை குறைத்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு நன்மை கிடைக்கும்.

    கயானா:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் இன்று காலை தொடங்கியது.

    முதல் ஆட்டத்தில் அமெரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் கனடாவை (ஏ பிரிவு) தோற்கடித்தது.

    2-வது போட்டி வெஸ்ட் இண்டீசில் இன்று நடக்கி றது. கயானாவில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத் தில் 'சி' பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ்-பப்புவா நியூ கினியா அணிகள் மோதுகின்றன.

    2 முறை 20 ஓவர் உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் வெற்றியுடன் கணக்கை தொடங்க இருக்கிறது.

    இந்த நிலையில் உலக கோப்பையை வெல்வது வெஸ்ட் இண்டீசுக்கு நிதி நெருக்கடியை குறைத்து பெரும் ஊக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்த அணி கேப்டன் போவெல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலக கோப்பையை 3-வது முறையாக வெல்வது வெஸ்ட் இண்டீசுக்கு நல்லதாக இருக்கும். சொந்த மண்ணில் கோப்பையை வென்றால் சிறப்பாக இருக்கும். கோப்பையை வென்றால் எங்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகளிடம் நினைவு கூர்வோம்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் நிதி நிலைப்பாடு குறித்து நாங்கள் அறிவோம். உலக கோப்பையை வெல்வது நிதி ரீதியாக எங்களுக்கு ஊக்கம் கிடைக்கும். நிதி நெருக்கடியை குறைத்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு நன்மை கிடைக்கும்.

    மேலும் கோப்பையை வென்றால் தரவரிசையில் மேம்பாடு அடைந்து ஸ்பான்சர்கள் கிடைப்பார்கள்.

    இவ்வாறு போவெல் கூறியுள்ளார்.

    • வங்காள தேசத்துடனான பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • சாஹிப் அல் ஹசன் - மஹமதுல்லா ஜோடி சிறப்பாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினர்

     டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் நேற்று (ஜூன் 1) தொடங்கியது. நேற்றைய தினம் அமெரிக்கா - கனடா மற்றும் இந்தியா- வங்காள தேச அணிகள் பயிற்சி ஆட்டத்தில் மோதின. வங்காள தேசத்துடனான பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

     

    ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சஞ்சு சாம்சன் 6 பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் எம்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். அடுத்து ரோகித் சர்மா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 32 பந்தில் 53 ரன்கள் (தலா நான்கு பவுண்டரி, சிக்ஸ்) எடுத்து ரிட்டையர்டு அவுட் மூலம் வெளியேறினார்.

    அடுத்து சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார். ரோகித் சர்மா 19 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் தனது பங்கிற்கு 18 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். ஷிவம் டுபே 16 பந்தில் 14 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 40 ரன்கள் (2 பவுண்டரி, 4 சிக்ஸ்) அடிக்க இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.

     

    இதைதொடர்ந்து பேட்டிங் இறங்கிய வங்காள தேச அணிக்கு வலுவான பந்துவீச்சின் மூலம் டஃப் கொடுக்கும் வகையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. இதனால் வங்காள தேச அணி பேட்டிங்கில் திணறியது. களமிறங்கிய முதல் ஓவரிலேயே சவுமியா சர்கார் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து லிட்டன் தாஸும் ஆட்டமிழந்தார்.

    தவ்ஹித் ஹரிதோய் சற்று அதிக நேரம் களத்தில் நீடித்தாலும் அது அணிக்கு பெரிதாக பலனளிக்கவில்லை. சாஹிப் அல் ஹசன் - மஹமதுல்லா ஜோடி சிறப்பாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புதான் 122 ரன்களை மட்டுமே வங்காளதேசத்தால் எட்ட முடிந்த நிலையில் 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 

    • இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கனடா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது.
    • நவ்நீத் தலிவால் 61 ரன்களுக்கும் , நிக்கோலஸ் கிர்டன் 51 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

    டல்லாஸ்:

    9-வது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடத்தப்படுகிறது.

    இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மகாணத்தில் இருக்கும் டல்லாசில் இன்று தொடங்கியது. வருகிற 29-ந் தேதி வரை இந்த கிரிக்கெட் திருவிழா நடக்கிறது. அமெரிக்காவில் முதன் முறையாகவும், வெஸ்ட் இண்டீசில் 2-வது தடவையாகவும் 20 ஓவர் உலக கோப்பை நடைபெறுகிறது.

    இந்தப் போட்டியில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது ரவுண்டான சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் உள்ள போட்டியை நடத்தும் அமெரிக்கா-கனடா அணிகள் மோதின. டாஸ் வென்ற அமெரிக்க கேப்டன் மோனக் படேல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    முதலில் விளையாடிய கனடா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன் குவித்தது. தொடக்க வீரரான நவநீத் தல்வால் 44 பந்தில் 61 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்) நிக்கோலஸ் கிர்டன் 31 பந்தில் 51 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), ஸ்ரேயாஸ் மோவா 16 பந்தில் 32 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), எடுத்தனர். அலிகான், ஹர்மித் சிங், கோரி ஆண்டர்சன் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    195 ரன் என்ற கடினமான இலக்குடன் அமெரிக்கா களம் இறங்கியது. தொடக்கமே அந்த அணிக்கு அதிர்ச்சி அளித்தது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஸ்டீவன் டெய்லர் ரன் எதுவும் எடுக்காமல் கலீம்சானா பந்துவீச்சில் வெளியேறினார்.

    7-வது ஓவரில் மற்றொரு தொடக்க வீரரும், கேப்டனுமான மோனக் படேல் 16 ரன்னில் தில்லான் ஹெய்லிகர் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    அமெரிக்க அணி 6.3 ஓவர்களில் 42 ரன் எடுப்பதற்குள் 2 விக்கெட்டை இழந்து திணறியது. 3-வது விக்கெட்டான ஆண்ட்ரிஸ் கூஸ்-ஆரோன் ஜோன்ஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி அமெரிக்க அணியை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சென்றது.

    வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த போது தான் இந்த ஜோடி பிரிந்தது. ஆந்த்ரே கூஸ் 65 ரன்னில் நிகில் தத்தா பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் 46 பந்தில் 7 புவுண்டரி, 3 சிக்சர்களுடன் இந்த ரன்னை எடுத்தார். அப்போது ஸ்கோர் 173 ஆக இருந்தது. 3-வது விக்கெட் ஜோடி 131 ரன் எடுத்தது. அடுத்து கோரி ஆண்டர்சன் களம் வந்தார்.

    அமெரிக்கா 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 197 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 14 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 195 ரன் இலக்கை எடுத்து முத்திரை பதித்தது. ஆரோன் ஜோன்ஸ் 40 பந்தில் 94 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவரது ஸ்கோரில் 4 பவுண்டரி, 10 சிக்சர்கள் அடங்கும்.

    அமெரிக்க அணி அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 6-ந் தேதி மோதுகிறது. இதே டல்லாஸ் மைதானத்தில் தான் அந்த போட்டியும் நடக்கிறது. கனடா அணி 2-வது போட்டியில் அயர்லாந்தை வருகிற 7-ந் தேதி சந்திக்கிறது.

    • ஸ்கோர் 59 ரன்னாக உயர்ந்த போது (6.4 ஓவரில்) ரோகித் சர்மா (23 ரன், 19 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) மக்முதுல்லா பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.
    • இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை வருகிற 5-ந்தேதி நியூயார்க்கில் சந்திக்கிறது.

    இதையொட்டி இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை நியூயார்க்கில் நேற்று சந்தித்தது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் களம் புகுந்தனர்.

    2-வது ஓவரிலேயே சஞ்சு சாம்சன் (1 ரன்) ஷோரிபுல் இஸ்லாம் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இதைத்தொடந்து ரிஷப் பண்ட், ரோகித் சர்மாவுடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடினர். ஸ்கோர் 59 ரன்னாக உயர்ந்த போது (6.4 ஓவரில்) ரோகித் சர்மா (23 ரன், 19 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) மக்முதுல்லா பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

    அடுத்து சூர்யகுமார் யாதவ் வந்தார். சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 53 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தவருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் வெளியேறினார். அடுத்து களம் கண்ட ஷிவம் துபே (14 ரன், 16 பந்து, ஒரு சிக்சர்) நிலைக்கவில்லை. சற்று நேரத்தில் சூர்யகுமார் யாதவ் 31 ரன்னில் (18 பந்து, 4 பவுண்டரி), தன்விர் இஸ்லாம் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.

    20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்தது. தன்விர் இஸ்லாம் பந்து வீச்சில் ஹாட்ரிக் சிக்சர் விளாசிய ஹர்திக் பாண்ட்யா 40 ரன்களுடனும் (23 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), ரவீந்திர ஜடேஜா 4 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்காளதேசம் தரப்பில் மெஹிதி ஹசன், ஷோரிபுல் இஸ்லாம், மக்முதுல்லா, தன்விர் இஸ்லாம் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

    இதனையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்காளதேச அணியில் அதிகபட்சமாக மக்முதுல்லா 40 ரன் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப்சிங், ஷிவம் துபே தலா 2 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த போது ரோகித் சர்மா ரசிகர் ஒருவர் அத்துமீறி மைதானத்திற்குள் நுழைந்தார். அவர் உள்ளே வந்ததை பார்த்ததும் ஐந்து அமெரிக்க போலீசார் மைதானத்திற்குள் ஓடி வந்தனர். அதில் இருவர் அந்த ரசிகரை தரையில் சாய்த்து, அவர் மீது அமர்ந்தனர். ரசிகரின் இரண்டு கைகளையும் பின்புறமாக மடக்கினர். பின்பு அவரை தரையோடு இருக்குமாறு எச்சரித்தனர். அவர் லேசாக அசைந்ததால் அவர் மீது முழு எடையையும் கொடுத்து அழுத்தம் கொடுத்தனர். அப்போது, அருகில் நின்று கொண்டிருந்த ரோகித் சர்மா அந்த ரசிகரை விட்டு விடுமாறு போலீசாரிடம் கேட்டுக்கொண்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. வீடியோ காட்சியை பார்த்த அனைவருக்கும் பதைபதைப்பை ஏற்படுத்தியது.

    அமெரிக்காவில் இது போன்று அத்துமீறுபவர்கள் மீது வழக்குப் பதியப்படும். உடனடியாக அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


    • 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
    • தொடக்கம் முதல் கனடா அணி வீரர்கள் அதிரடி காட்டினர்.

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று தொடங்கியது. தொடக்க போட்டியில் அமெரிக்கா கனடா அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனக் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , கனடா முதலில் பேட்டிங் செய்தது .

    தொடக்கம் முதல் கனடா அணி வீரர்கள் அதிரடி காட்டினர். அந்த அணியின் நவ்நீத் தலிவால்,நிக்கோலஸ் கிர்டன் ஆகியோர் அமெரிக்கா அணியின் பந்துவீச்சை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர்.சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதமடித்தனர்.

    தொடர்ந்து நவ்நீத் தலிவால் 61 ரன்களுக்கும் , நிக்கோலஸ் கிர்டன் 51 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.கடைசியில் ஷ்ரேயாஸ் மொவ்வா அதிரடி காட்டி 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கனடா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 195 ரன்கள் இலக்குடன் அமெரிக்கா விளையாடுகிறது.

    • அதிரடிக்கு பெயர் போன 20 ஓவர் வடிவிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம் ஆனது.
    • இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று தொடங்கியது.

    அதிரடிக்கு பெயர் போன 20 ஓவர் வடிவிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. தென்ஆப்பிரிக்காவில் நடந்த முதலாவது உலகக் கோப்பையில் டோனி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்து வரலாறு படைத்தது.

    இதன்படி 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகின்றன.

    நேற்று தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை நடைபெறும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று தொடங்கியது. தொடக்க போட்டியில் அமெரிக்கா கனடா அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனக் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , கனடா முதலில் பேட்டிங் செய்து வருகிறது . கனடா பேட்ஸ்மேனான ஆரோன் ஜான்சன் முதல் பாலை எக்ஸ்ட்ரா கவரில் அடித்து அதிரடியாக் ஆட்டத்தை தொடங்கினார்.

    17 ஓவர்கள் கடந்த நிலையில் கனடா அணி 156 ரன்கள் 3 விக்கெட் இழப்பில் ஸ்கோர் செய்துள்ளது. 

    • ரோகித் சர்மா 19 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • சூர்யகுமார் யாதவ் தனது பங்கிற்கு 18 பந்தில் 31 ரன்கள் எடுத்தார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியா இன்று பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை எதிர்கொண்டது.

    டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சஞ்சு சாம்சன் 6 பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் எம்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.

    அடுத்து ரோகித் சர்மா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 32 பந்தில் 53 ரன்கள் (தலா நான்கு பவுண்டரி, சிக்ஸ்) எடுத்து ரிட்டையர்டு அவுட் மூலம் வெளியேறினார்.

    அடுத்து சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார். ரோகித் சர்மா 19 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் தனது பங்கிற்கு 18 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். ஷிவம் டுபே 16 பந்தில் 14 ரன்கள் எடுத்தார்.

    ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 40 ரன்கள் (2 பவுண்டரி, 4 சிக்ஸ்) அடிக்க இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.

    • ஜூன் 9 ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள நாசவ் கவுண்ட்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
    • நாசவ் சர்வதேச கிரிக்கெட் மைதானம் சீரமைக்கப்பட்டு புதுப் பொலிவுடன் மாறியுள்ளது.

    அதிரடிக்கு பெயர் போன 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. தென்ஆப்பிரிக்காவில் நடந்த முதலாவது உலகக் கோப்பையில் டோனி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்து வரலாறு படைத்தது. ஒரு சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டதை தவிர்த்து, 2 ஆண்டுக்கு ஒரு முறை 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    இதன்படி 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகின்றன. இன்று  தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை நடைபெறும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. அணிகள் ஏ, பி, சி, டி என 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

     

    'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய 5 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர்-8 சுற்றுக்கு வரும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும்.

    இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதி முன்னேறும். வெஸ்ட் இண்டீசில் 6 மைதானங்களில் இறுதிப்போட்டி உள்பட 39 ஆட்டங்களும், அமெரிக்காவில் 3 மைதானங்களில் 16 ஆட்டங்களும் நடக்கின்றன. அமெரிக்காவில் உலகக் கோப்பை போட்டி அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும்.

     

    இந்த தொடரில் வரும் ஜூன் 9 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நாசவ் கவுண்ட்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (Nassau County International Cricket Stadium) வைத்து இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் நாசவ் சர்வதேச கிரிக்கெட் மைதானம் சீரமைக்கப்பட்டு புதுப் பொலிவுடன் மாறியுள்ளது.

    பனி மூடிய மைதானத்தை கடந்த பிப்ரவரி மாதம் புதுப்பிக்க ஆரம்பிக்கும்போது எடுத்த புகைப்படமும், மே மாத முடிவில் புதுப்பிக்கப்பட்டதற்கு பிந்தைய படமும் வெளியாகி இரண்டிலும் உள்ள வித்தியாசம் மலைக்க வைக்கக் கூடியதாக உள்ளது. இந்த மைதானத்தின் மதிப்பு ரூ.250 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அமெரிக்கா- கனடா அணிகள் இன்று களம் காணுகின்றன.
    • உலகக் கோப்பை போட்டியை வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா இணைந்து நடத்துகின்றன.

    20 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் அமெரிக்கா- கனடா அணிகள் களம் காணுகின்றன.

    அதிரடிக்கு பெயர் போன 20 ஓவர் வடிவிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. தென்ஆப்பிரிக்காவில் நடந்த முதலாவது உலகக் கோப்பையில் டோனி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்து வரலாறு படைத்தது.

    ஒரு சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டதை தவிர்த்து, 2 ஆண்டுக்கு ஒரு முறை 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    இதன்படி 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகின்றன.

    இன்று (சனிக்கிழமை) தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை நடைபெறும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன.

    இதில் அமெரிக்கா, உகாண்டா, கனடா ஆகிய குட்டி அணிகள் 20 ஓவர் உலகக் கோப்பையில் முதல்முறையாக அடியெடுத்து வைக்கின்றன.

    அணிகள் ஏ, பி, சி, டி என 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய 5 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும்.

    சூப்பர்-8 சுற்றுக்கு வரும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதி முன்னேறும்.

    வெஸ்ட் இண்டீசில் 6 மைதானங்களில் இறுதிப்போட்டி உள்பட 39 ஆட்டங்களும், அமெரிக்காவில் 3 மைதானங்களில் 16 ஆட்டங்களும் நடக்கின்றன. அமெரிக்காவில் உலகக் கோப்பை போட்டி அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும்.

    முன்னணி அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு வருவதில் பெரிய அளவில் சிக்கல் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு தான் நீயா-நானா குடுமிபிடி ஆரம்பிக்கும்.

    இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுடன் பாகிஸ்தான் அல்லது வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு வரும் என்பதே பெரும்பாலான கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்பாகும்.

    அதே சமயம் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, அயர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட அணிகள் ஏதாவது அதிர்ச்சி வைத்தியம் அளித்தால், கணிப்புகள் மாறலாம்.

    இந்திய அணி ஐ.சி.சி. கோப்பையை வென்று 11 ஆண்டுகள் ஆகி விட்டது. 2013-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணிக்கு ஐ.சி.சி. உலக போட்டிகளில் ஒரே சறுக்கல் தான். ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி அந்த நீண்டகால ஏக்கத்தை தணிக்குமா என்பதே ரசிகர்களின் ஆவலாகும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வருகிற 5-ந்தேதி நியூயார்க்கில் எதிர்கொள்கிறது.

    இன்றைய தொடக்க நாளில் புதுமுக அணிகளான அமெரிக்காவும், கனடாவும் டல்லாஸ் நகரில் உள்ள கிரான்ட் பிராரி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

    அமெரிக்க அணியின் கேப்டன் மோனக் பட்டேல் இந்தியாவைச் சேர்ந்தவர். மேலும் 3 இந்தியர்கள் அந்த அணியில் உள்ளனர். நியூசிலாந்து அணிக்காக விளையாடிய ஆல்-ரவுண்டர் கோரி ஆண்டர்சன் ஓய்வுக்கு பிறகு அமெரிக்க அணியில் இணைந்து விட்டதால் அந்த அணி வலுப்பெற்றுள்ளது. உள்ளூர் சூழலில் சமீபத்தில் வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை கைப்பற்றியதால் கூடுதல் நம்பிக்கையுடன் வரிந்து கட்டுவார்கள்.

    கனடா அணி சாத் பின் ஜாபர் தலைமையில் களம் இறங்குகிறது. இவ்விரு அணிகள் 20 ஓவர் கிரிக்கெட்டில் 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5-ல் அமெரிக்காவும், 2-ல் கனடாவும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    அமெரிக்கா: மோனக் பட்டேல் (கேப்டன்), ஆரோன் ஜோன்ஸ், ஆன்ட்ரியாஸ் கவுஸ், நிதிஷ்குமார், ஷயான் ஜஹாங்கிர், ஸ்டீவன் டெய்லர், கோரி ஆண்டர்சன், ஹர்மீத் சிங், மிலிண்ட் குமார், நிசார்க் பட்டேல், ஷட்லே வான் ஸ்சால்க்விக், அலிகான், ஜஸ்தீப்சிங், நோஸ்துஸ் கென்ஜிகே, சவுரப் நெட்ராவல்கர்.

    கனடா: சாத் பின் ஜாபர் (கேப்டன்), நவ்னீத் தலிவால், ஆரோன் ஜான்சன், ஸ்ரேயாஸ் மோவா, ரவிந்தர்பால் சிங், தில்பிரீத் பஜ்வா, ஜூனைட் சித்திக், நிகோலஸ் கிர்டான், பர்கத் சிங், ரேயான் பதான், ஹர்ஷ் தாகெர், நிகில் தத்தா, ஜெரிமி கார்டன், திலோன் ஹெய்லிஜர், ரிஷிவ் ஜோஷி, கலீம் சனா.

    • 14 வீரர்கள் பயிற்சி போட்டியில் விளையாட தயாராக உள்ளனர்.
    • சூழலை சாதகமாக பயன்படுத்தி சிறப்பாக செயல்படுவோம் என்று கேப்டன் ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்தார்.

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி இந்திய அணி ஒரேயொரு பயிற்சி ஆட்டத்தில் ஆடுகிறது. இதன்படி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையிலான வங்காளதேசத்தை நியூயார்க் நகரில் இன்று சந்திக்கிறது. நட்சத்திர வீரர் விராட் கோலி நேற்று தான் இந்திய அணியுடன் இணைந்தார். இதனால் அவர் உடனடியாக ஆடுவாரா என்பது சந்தேகம் தான். மற்ற 14 வீரர்கள் பயிற்சி போட்டியில் விளையாட தயாராக உள்ளனர். பயிற்சி ஆட்டத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடையாது என்பதால் 14 வீரர்களையும் மாற்றி மாற்றி பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு.

    தொடக்க ஆட்டத்திற்கு சரியான ஆடும் லெவன் அணியை கண்டறிய இந்த பயிற்சி போட்டி உதவிகரமாக இருக்கும் என்பதால் இந்திய வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள். இதற்கு முன்பு இந்திய அணியினர் நியூயார்க்கில் விளையாடியதில்லை. அதனால் அங்குள்ள சீதோஷ்ண நிலையை புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப தங்களை சீக்கிரம் மாற்றிக்கொள்வது முக்கியம். இங்குள்ள சூழலை சாதகமாக பயன்படுத்தி சிறப்பாக செயல்படுவோம் என்று கேப்டன் ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்தார்.

    இந்திய அணி வருமாறு:-

    ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

    இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த பயிற்சி ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • இந்தியாவின் முதல் பயிற்சி அமர்வில் ஹர்திக் பாண்டியா கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் பந்து வீசினார்.
    • இந்திய அணி, தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை ஜூன் 5-ம் தேதி நியூயார்க்கில் எதிர்கொள்கிறது.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற ஜூன் 2-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்க உளள்து.

    இந்த தொடரில் இந்திய அணி, தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை ஜூன் 5-ம் தேதி நியூயார்க்கில் எதிர்கொள்கிறது. இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 9-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்த போட்டிகளுக்கு முன்னதாக இந்திய அணி நாளை சனிக்கிழமை நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டியானது நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, இந்திய அணி வீரர்கள் நியூயார்க்கில் உள்ள கான்டியாக் பார்க் மைதானத்தில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நியூயார்க்கில் நடந்த இந்தியாவின் முதல் பயிற்சி அமர்வில் ஹர்திக் பாண்டியா கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் பந்து வீசினார். நடப்பு ஐ.பி.எல் சீசனில் அவரது ஆல்ரவுண்டர் திறம் பெரும் விவாதப் பொருளாக மாறி இருந்த நிலையில், அவரது பந்துவீச்சு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    ஹர்திக் கணிசமான நேரத்தை நெட்ஸில் பேட்டிங்கிற்கு செலவிட்டதாகவும், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை வரும் 5-ம் தேதி சந்திக்கிறது.
    • இந்திய வீரர்கள் அனைவரும் சில நாட்கள் முன்பே நியூயார்க் சென்று பயிற்சிகளைத் தொடங்கிவிட்டனர்.

    நியூயார்க்:

    9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை வரும் 5-ம் தேதி சந்திக்கிறது.

    இந்நிலையில் விராட் கோலி முதல் போட்டியில் விளையாட முடியாது என தகவல் வெளியாகி உள்ளது. நாளை நடைபெறவுள்ள வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய வீரர்கள் அனைவரும் சில நாட்கள் முன்பே நியூயார்க் சென்று பயிற்சிகளைத் தொடங்கிவிட்ட நிலையில், விராட் கோலி நேற்று இரவுதான் நியூயார்க் புறப்பட்டார். இதனால் அவர் பங்கேற்பது கடினம் என தெரிய வந்துள்ளது. ஆனால் ஜூன் 5-ம் தேதி நடைபெறும் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

    ×