search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை கொள்ளை"

    • திருமங்கலம் அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • அவர்கள் தங்களை உறவினர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டதோடு திருமணத்திற்காக பத்திரிகை கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி‌ கல்லுப்பட்டி மேட்டு தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி ருக்மணி வயது (70). இவர்களது மகன், மகள்களுக்கு திருமணம் ஆகி விட்டது.

    இதன் காரணமாக ரவி- ருக்குமணி தம்பதி தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை ரவி வெளியே புறப்பட்டு சென்றார். ருக்மணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் தங்களை உறவினர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டதோடு திருமணத்திற்காக பத்திரிகை கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தனர்.

    ருக்மணி 3 பேரையும் இதுவரை பார்த்ததில்லை. இருப்பினும் வீட்டுக்குள் அழைத்து அமரச் செய்தார்.

    உறவினர்கள் போல் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த 3 வாலிபர்கள் திடீரென்று ருக்மணியை கத்தியை காட்டி மிரட்டி அவரது வாயில் துணியை வைத்து அடைத்து கையை துண்டால் கட்டினர். பின்னர் அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு 3 பேரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பினர்.

    இதை சற்றும் எதிர்பாராத ருக்மணி செய்வதறியாது திகைத்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் ருக்மணி கட்டிப்போட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து டி. கல்லுப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

    உறவினர்கள் போல் நடித்து மூதாட்டியை கட்டிப்போட்டு நகையை பறித்துச் சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பத்மாவதி அணிந்து இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்து விட்டு கொலை மிரட்டல் விடுத்து மர்ம வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
    • விஷ்ணு காஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், கோபால் சாமி தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் பத்மாவதி. இவர் ராஜாஜி மார்க்கெட் அருகே பூ வியாபாரம் செய்து வருகிறார்.

    நேற்று இரவு அவர் வியாபாரம் முடிந்ததும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த மர்ம வாலிபர் பத்மாவதியிடம் பேச்சு கொடுத்தார். திடீரென அவன் பத்மாவதி அணிந்து இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்து விட்டு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

    இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். மீன் வியாபாரி. இவர் நேற்று அதிகாலை "டிரை சைக்கிளில்" வானகரம் மீன் மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 3பேர் கும்பல் கத்தியால் வெட்டி பணம் பறிக்க முயன்றனர் ஆனால் அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் திரண்டதால் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த சீனிவாசனுக்கு கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மதுரவாயல் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு தப்பி ஓடிய நெற்குன்றம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்கிற திருட்டு விக்கி (21) என்பவனை கைது செய்தனர்.

    அவன் மீது ஏற்கனவே பல்வேறு வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக உள்ள அவனது கூட்டாளிகளான சாமுவேல், நிஷாந்த் ஆகிய இருவரையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • மர்மநபர்களை தேடி வருகிறர்கள்.
    • பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    கோவை

    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விநாயகாபுரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 65). டிரைவர்.

    சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். அப்போது ராமகிருஷ்ணன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், மோதிரம் உள்பட 6½ பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.

    மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய ராமகிருஷ்ணன் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் வீட்டில் 6½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    போத்தனூர் அருகே உள்ள கார்மல் நகரை சேர்ந்தவர் காணிக்கைமேரி ( 62). இவர் சிட்கோவில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு தூத்துக்குடிக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த 1¼ பவுன் மோதிரம், வெள்ளி செயின், ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    இது குறித்து காணிக்கை மேரி போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ஆசிரியை வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறர்கள். 

    • சுரேஷ் குமார் கால்நடை மருத்துவமனையில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
    • சுரேஷ் குமார் இரவு 11 மணி அளவில் வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    திருச்சி,

    திருச்சி பாலக்கரை சண்முகா ஹாஸ்பிடல் ரெசிடென்ஸ் அருகில் வசித்து வருபவர் சுரேஷ் குமார் (வயது45). இவர் கால்நடை மருத்துவமனையில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

    இவர் சம்பவதன்று மாலை தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு சகோதரன் திருமணத்திற்கு திருமண அழைப்பிதழ் வைப்பதற்காக வெளியே சென்றுள்ளார். மீண்டும் அவர் இரவு 11 மணி அளவில் வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5.5 பவுன் நகை மற்றும் 390 கிராம் வெள்ளி என மொத்தம் ரூ. 2 லட்சம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து சுரேஷ்குமார் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

    • வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை
    • இரவு ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை

    நாகர்கோவில்:

    வெள்ளிச்சந்தை அம்மாண்டிவிளை சாந்தான் விளை பகுதியை சேர்ந்தவர் கவியரசு (வயது 34). தேங்காய்வியாபாரி. இவர் தற்பொழுது நாகர்கோவில் செட்டிகுளம் கணபதி நகர் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 10-ந்தேதி கவியரசு தனது மனைவியுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். இன்று அதிகாலை அவர்கள் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கவியரசு வீட்டிற்குள் சென்று பார்த்தார்.அப்போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. படுக்கை அறையில் உள்ள சிலாப்பில் துணிப்பையில் கட்டி போடப்பட்டிருந்த 15 பவுன் நகையும் திருடப்பட்டிருந்தது. திருட்டு போன நகையின் மதிப்பு ரூ 7 லட்சம் ஆகும். இதுகுறித்து கவியரசு கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கைரேகை பதிவு செய்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது.

    கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.கவியரசு வீட்டிலிருந்து வெளியே செல்வதை நோட்டமிட்டே மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது.

    ஏற்கனவே நேற்று முன்தினம் அடுத்தடுத்து 2 பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தது .இந்த நிலையில் வீட்டை உடைத்தும் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர் .அடுத்தடுத்து நடந்து வரும் இந்த கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.கொள்ளை சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • இளம்பெண்கள் உள்பட 3 பேரும் திடீரென ஹேமலதாவை சரமாரியாக தாக்கி கயிற்றால் கட்டிப்போட்டனர்.
    • டியூசன் எடுக்க சென்ற ஹேமலதாவின் மகள், வீட்டுக்கு வந்து கதவை நீண்ட நேரம் தட்டியும் தாயார் திறக்கவில்லை.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் கத்தார் நாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஹேமலதா(வயது 42). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    மதுரையில் உள்ள விடுதியில் தங்கி மகன் படித்து வருகிறார். ஹேமலதா அவரது மகளுடன் கீழவளவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் ஹேமலதாவின் மகள் அருகில் உள்ள வீட்டுக்கு டியூசன் எடுக்க சென்றிருந்தார். ஹேமலதா வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்டு அறிந்து, 40 வயது ஆண் மற்றும் 20 வயதுடைய 2 இளம்பெண்கள் அவரது வீட்டுக்கு வந்தனர்.

    ஹேமலதாவிடம், கத்தார் நாட்டில் உங்கள் கணவர் பணிபுரியும் நிறுவனத்தில் நான் வேலை பார்க்கிறேன் என்று அந்த ஆண் கூறியதுடன், தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க வந்தேன் என தெரிவித்துள்ளார்.

    அதனை நம்பி ஹேமலதா, 3 பேரையும் வீட்டுக்குள் அழைத்து உபசரித்தார். அப்போது அந்த இளம்பெண்கள் உள்பட 3 பேரும் திடீரென ஹேமலதாவை சரமாரியாக தாக்கி கயிற்றால் கட்டிப்போட்டனர்.

    பின்பு அவரது வாயில் பிளாஸ்திரியை ஒட்டி கத்தியை காட்டி மிரட்டி பீரோ சாவியை பறித்தனர். பீரோவை திறந்து அதில் இருந்த 17 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கம், ஹேமலதாவின் செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    டியூசன் எடுக்க சென்ற ஹேமலதாவின் மகள், வீட்டுக்கு வந்து கதவை நீண்ட நேரம் தட்டியும் தாயார் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து அருகில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். ஜன்னல் வழியாக பார்த்த போது, ஹேமலதாவை கட்டி போட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கீழவளவு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆர்லியாஸ் ரொபோனி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து ஹேமலதாவை மீட்டு விசாரணை நடத்தினர். திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் வந்து பெண்ணை கட்டிப்போட்டு நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, தப்பிச்சென்ற இளம்பெண்கள் உள்பட 3 பேரை தேடிவருகின்றனர்.

    • சம்பவத்தன்று பூசாரி சாரதா தேவி வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றார்.
    • மர்ம நபர்கள் கோவிலின் மேல்கூரை வழியாக புகுந்து இந்த துணிகர செயலை செய்துள்ளனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் மேலவாடியக்காடு கிராமத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீஅமிர்த வள்ளியம்மன் கோவில் உள்ளது.

    சம்பவத்தன்று பூசாரி சாரதா தேவி வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றார்.

    இந்நிலையில் மீண்டும் கோவிலை திறக்க வந்தவர் அங்கு கருவறை கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்கு அம்மன் கழுத்தில் இருந்த 1½ பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    மேலும் மர்ம நபர்கள் கோவிலின் மேல்கூரை வழியாக புகுந்து இந்த துணிகர செயலை செய்துள்ளனர்.இது குறித்து கோவில் நிர்வாகி குணசேகரன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், பசீர், தலைமை காவலர் ராமலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • கொள்ளையர்கள் 3 பேர் கூட்டாக சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
    • நகைக்கடைக்கு எதிரில் தங்கி இருப்பதாகவும் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்ததாகவும் திடுக்கிடும் தகவல்.

    தாம்பரம் சேலையூர் அருகே உள்ள கவுரிவாக்கத்தில் வேளச்சேரி பிரதான சாலையில் 'புளு ஸ்டோன்' என்ற பெயரில் நகைக் கடை உள்ளது.

    அப்பகுதியில் பிரபலமான இந்த நகைக்கடையில் வைர கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகைகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    நேற்று இரவு இந்த நகைக்கடையில் பணிகளை முடித்துவிட்டு கடை ஊழியர்கள் புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கடை பொறுப்பாளரான ஜெகதீசன் என்பவரின் செல்போனில் அலாரம் ஒலித்தது.

    நகைக் கடைக்குள் யாரோ புகுந்துவிட்டதை உணர்த்தும் வகையில் அலாரம் அடித்ததால் அதிர்ச்சி அடைந்த ஜெகதீசன் இது பற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக சேலையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது புளுஸ்டோன் நகை கடையில் துணிகர கொள்ளை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது.

    நகைக் கடையில் உள்ள பைப் லைன் வழியாக ஏறி மர்ம நபர்கள் நகைக்கடை மாடிக்கு சென்றதும், பின்னர் அங்கிருந்து லிப்ட் இணைப்பு அறை வழியாக நகைக் கடைக்குள் சென்று கைவரிசை காட்டியதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    நகை கடையில் புகுந்த கொள்ளையர்கள் ரூ.1 கோடி மதிப்பிலான தங்க- வைர நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    கொள்ளையர்கள் 3 பேர் கூட்டாக சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் யார்? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் 3 பேரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    கொள்ளையர்கள் அணிந்துருந்த டி சர்ட்டை வைத்து அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. இதில் கொள்ளையர்களில் ஒருவன் சிக்கினான். அருகில் உள்ள டீக்கடை ஒன்றில் வைத்து போலீசார் அவனை மடக்கி பிடித்தனர்.

    அவனிடம் நடத்திய விசாரணையில் நகைக்கடைக்கு எதிரில் தங்கி இருப்பதாகவும் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்ததாகவும் திடுக்கிடும் தகவலை தெரிவித்தான்.

    நகைக்கடையில் கொள்ளை அடித்தபின் கொள்ளையர்கள் அருகில் உள்ள நகைக்கடை மாடியில் குதித்து தப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய மேலும் இருவரையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.

    இந்நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அசாமை சேர்ந்த 2 சிறார்களையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    • பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 5,1/2 பவுன் நகை,வீட்டில் இருந்த பத்திரம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடுபோய் இருந்தது.
    • சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் சப்.இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஏப்பாக்கம் கிராமத்தைசேர்ந்தவர் செல்வம் (வயது 47).விவசாயி. இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு அருகே இருக்கும் ஏப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது பூர்வீக ஊருக்கு சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் பீேராவை திறந்து அதில் இருந்த பணம்- நகையை கொள்ளையடித்து சென்றனர். மாலை நேரம் செல்வம் வீடு திரும்பினார். அப்போது வீட்டுக்கதவு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அடைந்துஉள்ளே சென்று பார்த்தபோது பீேராவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 5,1/2 பவுன் நகை,வீட்டில் இருந்த பத்திரம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடுபோய் இருந்தது. இதுகுறித்துஒலக்கூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் சப்.இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    இதேபோல பாதிரி கிராமத்தை சேர்ந்த காளி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை,5000 ரூபாய் பணம்,ஆகியவை திருடிச் சென்றுள்ளனர்.மேலும் பாதிரி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் வீட்டை உடைத்து 2 பவுன் நகை மற்றும் 250 கிராம் கிலோவெள்ளி பொருட்கள் கொள்ளைபோய் இருந்தது. இதுதவிர நீலகண்டன் என்பவரது வீட்டிலும்கொள்ளையர்கள் 6 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று உள்ளனர். தேபோ மேலும் பாங்களத்தூர் பாதிரி,போன்ற பல்வேறு இடங்களில் பூட்டை உடைக்க கொள்ளையர்கள் முயற்சி செய்து உள்ளனர்.அங்கு எந்த பொருளும்இல்லாததால் அங்கிருந்து சென்றுள்ளனர். திண்டிவனம் பகுதியில் ஒரே நாளில் 4 வீடுகளில் கொள்ளைபோன சம்பவம் அந்த பகுதியில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சூரிய நாராயணன் வீட்டில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 70 பவுன் நகை கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.
    • சூரியநாராயணன் வெளியூர் சென்று இருப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

    போரூர்:

    சென்னை, மேற்கு மாம்பலம் மூர்த்தி தெரு விரிவு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சூரிய நாராயணன். என்ஜினீயரான இவர் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் கடந்த 25-ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஜம்மு-காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலுக்கு சென்றார். இந்த நிலையில் சூரிய நாராயணனின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அவரது வீட்டு வந்த வேலைக்கார பெண் விஜயா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக சூர்யநாராயணனுக்கும், அசோக்நகர் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் சூரிய நாராயணன் வீட்டில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 70 பவுன் நகை கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.

    சூரியநாராயணன் வெளியூர் சென்று இருப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்த ரேகைகளை பதிவு செய்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ராஜேந்திரன் அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி 9-வது வார்டில் கவுன்சிலராக உள்ளார்.
    • வீட்டில் இருந்த ரூ.4 ½ லட்சம் பணத்தையும் எடுத்துச் சென்றனர்

    சூலூர்,

    கோவை சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன் பட்டி மகாலட்சுமி கார்டனை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 58). தி.மு.க.வை சேர்ந்த இவர் அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி 9-வது வார்டில் கவுன்சிலராக உள்ளார்.

    நேற்று காலை 11 மணியளவில் ராஜேந்திரன் தனது வீட்டை பூட்டி விட்டு உறவினரான செந்தில்குமார் இறந்து ஒரு வருடம் ஆனதையொட்டி திதி காரியத்துக்காக கதிர்நாயக்கன் பாளையத்துக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த கம்மல், மோதிரம், செயின் உள்பட 22 பவுன் தங்க நகைகள் மற்றும், ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பட்டப்பகலில் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    மாலை 6 மணிக்கு வீட்டிற்கு திரும்பிய ராஜேந்திரன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த 2 பீரோவை திறந்து அதில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இதனை வைத்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு தி.மு.க. கவுன்சிலரின் வீட்டின் கதவை உடைத்து 22 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    மேலும் போலீசார் அந்த பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களில் மர்மநபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள்.

    பட்டப்பகலில் கவுன்சிலர் வீட்டில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • 8 பவுன் தங்க நகை 2 கிலோ வெள்ளி உள்ளிட்ட பொருட்களை அள்ளி சென்றனர்
    • தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் தாதுசாகிப் தெருவை சேர்ந்தவர் ஜாகிர்உசேன் பழைய இரும்பு வியாபாரி.

    நேற்று மதியம் நேரத்தில் அருகில் உள்ள தங்களின் மற்றொரு வீட்டிற்கு செல்வதற்காக வீட்டின் முன்பக்க கதவை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

    மேலும் மீண்டும் மாலையில் வீட்டிற்கு வந்தனர். அப்போது பின்பக்க கதவை உடைத்து இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து அதில் இருந்த சுமார் 8 பவுன் தங்க நகை 2கிலோ வெள்ளி உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இச்சம்பவம் குறித்து இரும்பு கடை வியாபாரி கொடுத்த புகாரின் பேரில் ஆரணி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து திருவண்ணா மலையிலிருந்து கைரேகை நிபுணர் வரவழைக்கபட்டு கைரேகை தடயத்தை சேகரித்து விசாரணை மேறகொண்டனர்.

    ஆரணியில் கடந்த 20 நாட்களில் கோவில் மற்றும் வீட்டின் பூட்டை உடைத்தும் சாலையில் நடந்து சென்ற பெண்ணின் வழிப்பறி செய்த சம்பவம் தொடர்கதையாக நடந்தேறி வருகிறது.

    தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×