search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Haryana Assembly election"

    • பா.ஜ.க. சார்பில் ஜுலானா தொகுதியில் கேப்டன் யோகேஷ் பைரகி போட்டியிடுகிறார்.
    • இதுவரை 87 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது பா.ஜ.க.

    புதுடெல்லி:

    மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். பஜ்ரங் புனியாவுக்கு விவசாயப் பிரிவு செயல் தலைவர் பொறுப்பு தரப்பட்டது.

    அரியானாவில் அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜுலானா சட்டசபை தொகுதியில் வினேஷ் போகத் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஜுலானா தொகுதியில் வினேஷ் போகத்துக்கு எதிராக பா.ஜ.க. வேட்பாளராக கேப்டன் யோகேஷ் பைரகி அறிவிக்கப்பட்டுள்ளார்.

    அரியானா மாநில பா.ஜ.க. இளைஞர் பிரிவு துணை தலைவராகவும், அரியானா பாஜகவின் விளையாட்டு பிரிவின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பா.ஜ.க. இதுவரை 87 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    • அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
    • அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, பிரசார வியூகம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளன.

    சண்டிகர்:

    90 தொகுதிகளைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, பிரசார வியூகம் வகுப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, 67 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க சமீபத்தில் வெளியிட்டது. சில வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால் அதிருப்தி தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில், முன்னாள் துணை பிரதமரான தேவி லாலின் பேரன் ஆதித்யா தேவி லால் இன்று பா.ஜ.க.வில் இருந்து விலகி, இந்திய நேஷனல் லோக் தளம் கட்சியில் இணைந்தார். அவருக்கு அரியானாவின் தப்வாலி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஒரு வாரத்தில் பா.ஜ.க.வில் இருந்து விலகிய 2வது தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கலனூர் தொகுதியில் வேட்பாளர் ரேணு பாலாவை மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க. தொண்டர்கள் கட்சித் தலைமையை வலியுறுத்தியுள்ளனர்.
    • ரேவாரி தொகுதியில் வேட்பாளர்கள் லட்சுமண் யாதவை மாற்றுமாறு முன்னாள் எம்.எல்.ஏ. ரண்டீர் கப்திவாஸ், அரவிந்த் யாதவ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

    அரியானா:

    90 தொகுதிகளை கொண்ட அரியானா சட்டசபைக்கு வருகிற அக்டோபர் 5-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அங்கு தேர்தல் சூடு பிடித்துள்ளது.

    அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, பிரசார வியூகம் வகுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. பா.ஜ.க கட்சி, 67 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

    இந்த நிலையில் சில வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். சில தகுதியற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    முன்னாள் எம்.எல்.ஏ நரேஷ் கவுசிக், ஜஜ்ஜரின் பஹதுர்கர் தொகுதியில் தனது தம்பியை வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    கலனூர் தொகுதியில் வேட்பாளர் ரேணு பாலாவை மாற்ற வேண்டும் என்று பா.ஜ.க. தொண்டர்கள் கட்சித் தலைமையை வலியுறுத்தியுள்ளனர்.

    ரேவாரி தொகுதியில் வேட்பாளர்கள் லட்சுமண் யாதவை மாற்றுமாறு முன்னாள் எம்.எல்.ஏ. ரண்டீர் கப்திவாஸ், அரவிந்த் யாதவ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

    இல்லையென்றால் தங்களில் ஒருவர் சுயேட்சையாக போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதிருப்தி தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க. கட்சி தலைமை ஈடுபட்டு உள்ளது.

    • அரியானா சட்டமன்ற தேர்தல் வினேஷ் போகத் பேட்டியிட வாய்ப்புள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின.
    • தற்போது ராகுல் காந்தியை சந்தித்த நிலையில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடலாம் எனத் தெரிகிறது.

    இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை வினேஷ் போகத். பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் 100 கிராம் எடை கூடியதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார் வினோஷ் போகத். அதன்பின் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்தியா வந்ததும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

    இருவரும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் வினேஷ் போகத் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில்தான் பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை இன்று காலை நேரில் சந்தித்துள்ளனர்.

    இதன்மூலம் அரியானா தேர்தலில் இருவரும் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே நேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் தீபக் பபாரியாவிடம் இதே கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது வியாழக்கிழமை (நாளை) இந்த கேள்விக்கு தெளிவு கிடைத்தும் என பதில் அளித்திருந்தார்.

    நேற்று பபாரியா இவ்வாறு தெரிவித்த நிலையில் இன்றைய சந்திப்பு அதை உறுதிப்படுத்துவதாக உள்ளதாக அரசியல் தரப்பில் கூறப்படுகிறது.

    மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக முன்னணியில் நின்று போராட்டம் நடத்தியவர்கள் பஜ்ரங் புனியா மற்றும் வினோஷ் போகத் ஆவார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.ஜனதா அரசுக்கு எதிராக அலை வீசுவது காங்கிரசுக்கு சாதகமாக இருக்கிறது.
    • பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரசும், ஆம் ஆத்மியுடன் பல மாநிலங்களில் கூட்டணி அமைத்தன.

    புதுடெல்லி:

    90 தொகுதிகளை கொண்ட அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ந்தேதி தேர்தல் நடக்கிறது. 8-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.

    ஆளும் பா.ஜனதா தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் ஆர்வத்தில் உள்ளது. பா.ஜனதாவிடம் இருந்து இந்த முறை ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் காங்கிரஸ் இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்து களம் இறங்கியுள்ளது.

    இதற்கிடையே ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைப்பதில் ராகுல்காந்தி தீவிரமாக இருக்கிறார். பா.ஜனதா வெற்றிக்கு சிறிய வாய்ப்பும் தரக்கூடாது என கருதி அவர் ஆம்ஆத்மியை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்.

    பா.ஜனதா அரசுக்கு எதிராக அலை வீசுவது காங்கிரசுக்கு சாதகமாக இருக்கிறது. ஆனாலும் பா.ஜனதாவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் ஒன்றிணைக்க ஆம்ஆத்மி கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்பதில் அவர் ஆர்வமாக உள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆம்ஆத்மிடன் கூட்டணிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரியானா மாநில காங்கிரஸ் தலைவர்களிடம் ராகுல்காந்தி கருத்து கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரசும், ஆம் ஆத்மியுடன் பல மாநிலங்களில் கூட்டணி அமைத்தன. கெஜ்ரிவாலும், குமாரி செல்ஜாவும் ஆம் ஆத்மி கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில் ராகுல்காந்தி கூட்டணிக்கான ஆர்வத்தில் உள்ளார்.

    ஜம்மு காஷ்மீரிலும் இதே போல தேசிய மாநாட்டுக் கட்சி தனித்தே போட்டி என்று அறிவித்து வந்தது. ஆனால் ஸ்ரீநகருக்கு சென்ற ராகுல்காந்தி நேரடியாக தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி அமைத்தார். இதே வியூகத்தைத்தான் அரியானாவிலும் ராகுல் காந்தி கையில் எடுத்து உள்ளார்.

    • இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி தனித்தனியாக களம் காண்கிறது.
    • பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவையான நிலையில், அரியானாவில் 4 முனை போட்டி உருவாகியது.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக ஆம் ஆத்மி கட்சி சமீபத்தில் அறிவித்துள்ளது.

    ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், எம்.பியுமான சஞ்சய் சிங், பஞ்சாப் முதல் மந்திரி பகவத் மான் ஆகியோர் கூட்டாக இந்த முடிவை அறிவித்தனர்.

    பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவையாக உள்ள நிலையில், அரியானாவில் 4 முனை போட்டி உருவாகியுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும் வென்றது. துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சி 10 இடங்களைக் கைப்பற்றியது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஜேஜேபி கட்சி மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது.

    வரும் சட்டசபைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் உள்ள காங்கிரசும், ஆம் ஆதிமியும் தனித்தனியாக களம் காண்கிறது. பாஜக மற்றும் துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சி தனித்து போட்டியிடுகிறது.

    எனவே பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜேஜேபி என 4 முனை போட்டி இந்த தேர்தலில் உருவாகியுள்ளது.

    இந்நிலையில், அரியானா மாநிலத்தின் பஞ்சகுலா பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது அவர் இலவச மின்சாரம், இலவச கல்வி, இலவச மருத்துவம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பெண்களுக்கு மாதம் 1000 வழங்கப்படும் என்ற 5 வாக்குறுதிகளை வெளியிட்டார்.

    இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஏற்கனவே தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    ×