search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Keir Starmer"

    • இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
    • அதிபர் ஜோ பைடனை இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று சந்தித்தார்.

    வாஷிங்டன்:

    இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

    இந்நிலையில், அதிபர் ஜோ பைடனை இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது அவருக்கு விருந்து அளிக்கப்பட்டது.

    ரஷிய ஆக்கிரமிப்புக்கு எதிரான பாதுகாப்பில் உக்ரைனுக்கு தொடர்ந்து வலுவான ஆதரவு வழங்குதல், பிணைக்கைதிகளை விடுவித்தல் மற்றும் காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர போர்நிறுத்த ஒப்பந்தம், சர்வதேச கப்பல் போக்குவரத்தைப் பாதுகாத்தல் உள்ளிட்ட உலகளாவிய பிரச்சனைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

    • இந்தியர்கள் உட்பட அங்கு குடியேறியுள்ளவர்களுக்கு எதிரான இனவெறி கருத்துக்கள் பொதுவெளியில் உலா வந்தது.
    • வதந்திகள் மூலம் வெறுப்பைப் பரப்பும் வலதுசாரி அமைப்புகளை பிரதமர் கெயர் ஸ்டார்மர் எச்சரித்தார்.

    சவுத்போர்ட் கொலைகள் 

    இங்கிலாந்தின் வட மேற்கு பகுதியில் உள்ள சவுத்போர்ட்[Southport] நகரில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி நடன வகுப்பை முடித்து வெளியே வந்த சிறுமிகள் மீது மர்ம நபர் கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கியதில் 3 சிறுமிகள் உயிரிழந்தனர். இறந்த சிறுமிகளுக்கு முறையே, 9, 7, மற்றும் 6 வயது இருக்கும். மேலும் 10 சிறுமிகள் கத்திக்குத்தில் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

     

    வெறுப்பு - வன்முறை - வெறியாட்டம் 

    இதைத்தொடர்ந்து இங்கிலாந்தில் குடிபெயர்ந்த இஸ்லாமியர் ஒருவர் தான் இளம்பெண்களை கொன்றார் என்று பரவிய வதந்தியால் நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைகளை முன்னெடுத்துச் சென்ற அந்நாட்டின் தீவிர வலதுசாரி அமைப்புகள், நாட்டில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினர். ஆனால் சிறுமிகளை தாக்கிய 17 வயது இங்கிலாந்து சிறுவன் பிடிபட்ட நிலையில் அவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். ஆனால் நாட்டில் நடந்து வந்த வன்முறையோ கையை மீறி சென்றுகொண்டிருந்தது.

     

    இணையத்தில் இனவெறி 

    நாடு முழுக்க ஆசியர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு சமூக வலைதளங்களின் மூலம் திட்டமிட்டு பரப்பப்பட்டது. இதனால் இந்தியர்கள் உட்பட அங்கு குடியேறியுள்ளவர்களுக்கு எதிரான இனவெறி கருத்துக்கள் பொதுவெளியில் உலா வந்தது. வதந்திகள் மூலம் வெறுப்பைப் பரப்பும் வலதுசாரி அமைப்புகளை பிரதமர் கெயர் ஸ்டார்மர் எச்சரித்தார். இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக நடந்து வந்த கலவரத்தை போலீஸ் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

     

     

    நாடு முழுவதும் வன்முறைகளில் ஈடுபட்ட, இணையத்தில் இனவெறி கருத்துக்களையும் வெறுப்பையும் பரப்பிய, கலவரத்தோடு தொடர்புடைய சுமார் 1000 பேரை இங்கிலாந்து போலீஸ் கைது செய்துள்ளது. அவர்களில் சுமார் 575 ஓர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக நேற்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

    • பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டாமருக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
    • இரு நாட்டு உறவை வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளோம் என்றார் பிரதமர் மோடி.

    புதுடெல்லி:

    பிரிட்டன் பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கீர் ஸ்டாமர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற கீர் ஸ்டாமருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது பிரதமர் மோடி, இரு நாட்டு உறவை வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளோம் என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    கீர் ஸ்டாமரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து இரு தலைவர்களும் நினைவுகூர்ந்த அவர்கள், இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை இன்னும் வலுப்படுத்தவும் உறுதிபூண்டனர்.

    இரு நாடுகளும் பலனடையும் இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் ஏற்படுத்த விரைந்து பணியாற்றுவது என முடிவுசெய்யப்பட்டது.

    பிரிட்டனின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இந்தியர்களின் பங்களிப்பை பாராட்டிய இருவரும், இருநாட்டு மக்களுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டனர் என தெரிவித்துள்ளது.

    • பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது.
    • அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.

    பிரிட்டனில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் பிரதமராக இருந்து வந்தார். பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொர்ந்து பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது.

    650 உறுப்பினர்களை கொண்ட பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த எட்டு பேர் களம் கண்டனர். இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவில் தொழிலாளர் கட்சி வெற்றிக்கு தேவையானதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.

    தேர்தலில் போட்டியிட்ட பிரதமர் ரிஷி சுனக் வெற்றி பெற்ற போதிலும், அவரது கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர்கள் பல இடங்களில் தோல்வியை தழுவினர். தேர்தலில் தோல்வியுற்ற நிலையில், ரிஷி சுனக் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதைத் தொடர்ந்து பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சியை சேர்ந்த கீர் ஸ்டாமர் பிரிட்டனின் புதிய பிரதமர் ஆக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், "மாற்றத்திற்கான பணிகள் துவங்குகின்றன. ஆனால் நாம் பிரிட்டனை மீண்டும் கட்டமைப்போம் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம்," என்றார்.

    "நம் நாட்டின் முதல் பிரிடிஷ்-ஆசிய பிரதமராக அவர் செய்த சாதனைகளுக்கு தேவையான கூடுதல் முயற்சியை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அதற்கு இன்று அடையாளம் காண்கிறோம். மேலும் அவர் தனது தலைமையின் கீழ் கொண்டு வந்த அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கிறோம்."

    "எனது அரசாங்கத்தில் நாட்டிற்கு முன்னுரிமை அளித்து, கட்சி மீது அதன்பிறகே கவனம் செலுத்தப்படும். இன்றைய உலகம் நிலையற்ற ஒன்றாக இருக்கிறது. இதற்கு சிறிது காலம் தேவைப்படும், ஆனால் மாற்றத்திற்கான பணிகள் உடனே துவங்கிவிடும் என்பதில் சந்தேகம் கொள்ளாதீர்கள்," என்று தெரிவித்தார்.

    • பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
    • தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

    பிரிட்டனில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தான் நிறைவடைகிறது. எனினும், பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதைத் தொர்ந்து பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. 650 உறுப்பினர்களை கொண்ட பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த எட்டு பேர் களம் கண்டனர். இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

    இதில் தொழிலாளர் கட்சி வெற்றிக்கு தேவையானதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. தேர்தலில் போட்டியிட்ட பிரதமர் ரிஷி சுனக் வெற்றி பெற்ற போதிலும், அவரது கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர்கள் பல இடங்களில் தோல்வியை தழுவினர்.

    தேர்தல் தோல்வி காரணமாக கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியை ரிஷி சுனக் ராஜினாமா செய்தார். பிரிட்டன் பிரதமராக 20 மாதங்கள் பதவி வகித்த ரிஷி சுனக், தேர்தல் தோல்விக்கு மன்னிப்பு கோரினார். மேலும், தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார். இதோடு பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

    பிரதமராக அவர் ஆற்றிய கடைசி உரையில், "நான் முதலில் கூறப்போவது, என்னை மன்னித்துவிடுங்கள். இந்த பதவியில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன், ஆனால் நீங்கள் பிரிட்டனில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்தி இருக்கின்றீர்கள்."

    "உங்களின் தீர்ப்பு மட்டுமே முக்கியமான ஒன்று. உங்களின் கோபம், ஏமாற்றம் உள்ளிட்டவைகளை கேட்டேன். இந்த தோல்விக்கு முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன். இந்த முடிவை தொடர்ந்து நான் கட்சி தலைவர் பதவியில் இருந்தும் விலகிக் கொள்கிறேன். "

    "அரசியலில் எனது எதிரணியை சேர்ந்தவர் என்ற போதிலும், சர் கீர் ஸ்டார்மர் விரைவில் நமது பிரதமர் ஆக போகிறார். இந்த பணியில் அவர் பெறும் வெற்றிகள், நமக்கான வெற்றிகளாக இருக்கும். அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்"

    "பொது வெளியில் எங்களிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், அவர் நல் குணம் வாய்ந்தவர். பொதுப்படையில் அவர்மீது நான் மரியாதை கொண்டுள்ளேன்," என்று தெரிவித்தார்.

    • பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி 408 இடங்களில் வெற்றி பெற்றது.
    • தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.

    புதுடெல்லி:

    பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சி மொத்தமுள்ள 650 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களையும் தாண்டி 408 இடங்களில் வெற்றி பெற்று, 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.

    தற்போது வெற்றி பெற்றுள்ள தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    இந்நிலையில், பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ள கெய்ர் ஸ்டார்மருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இங்கிலாந்து பொதுத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற கெய்ர் ஸ்டார்மருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பரஸ்பர வளர்ச்சி மற்றும் செழிப்பை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் இந்தியா-இங்கிலாந்து விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த தங்களின் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    மேலும், தேர்தலில் தோல்வி அடைந்த கன்சர்வேடிவ் கட்சி தலைவருக்கு விடுத்துள்ள செய்தியில், இங்கிலாந்தின் போற்றத்தக்க தலைமைத்துவத்திற்கும், உங்கள் பதவிக்காலத்தில் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான உறவுகளை ஆழப்படுத்துவதில் உங்களின் தீவிர பங்களிப்புக்கும் நன்றி ரிஷி சுனக். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

    • 14 வருடங்கள் கழித்து தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்கும் நிலையில் அக்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
    • தற்போதைய அரசர் மூன்றாம் சார்லஸ்தான் அவர் பிரதமராக ஆகவேண்டுமா வேண்டாமா என்று முடிவெடுப்பார்.

    பிரிட்டன் நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று [ஜூன் 4] நடந்து முடிந்தது. பிரிட்டனில் மொத்தம் உள்ள 650 பாராளுமன்றத் தொகுதிகளிலும் நேற்று பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தொடக்கம் முதலே இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி மிகவும் பின்னிலையில் இருந்து வந்த நிலையில் தற்போது பிரதான இடதுசாரி எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சியமைக்கத் தேவையான 326 இடங்களையும் கடந்து 408 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 2010 ஆம் ஆண்டில் இருந்து பிரிட்டனில் ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 136 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

    பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து 14 வருடங்கள் கழித்து தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்கும் நிலையில் அக்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். 61 வயதாகும் கெய்ர் ஸ்டார்மர் தொழில்முறையாக வழக்கறிஞராக இருந்தவர்.

    இரண்டாம் எலிசபெத் மாகாராணியிடமிருந்து கிநைட் பட்டம் பெற்றவர். கடந்த 2015 இல் முதல் முறையாக பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். தற்போது லண்டனில் ஹோல்பார்ன் மற்றும் st. பங்கிராஸ் தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளார்.

    இவரின் வெளியுறவுக் கொள்கைகள் இந்தியாவிற்கு சாதகவமானதாகவே இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருத்துகின்றனர். தொழிலாளர் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் உலக நாடுகளுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவுடனான புதிய ஸ்டிராடஜிக் பார்ட்னர்ஷிப், ஹிந்துக்கள் பண்டிகைகளை பிரிட்டனில் கொண்டாட முழு சுதந்திரம் உள்ளிட்டவை இவரின் கொள்கைகளில் அடங்கும். ஆனால் ரிஷி சுனக்கை போல், அதிகப்படியான இந்திய குடியேற்றத்துக்கு எதிரான கருத்துள்ளவராக கெய்ர் ஸ்டார்மர் பார்க்கப்படுகிறார்.

    இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், வென்ற கட்சியை, பிரிட்டன் அரசர் ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பது வழக்கமாக உள்ளது. ஜனநாயகத்துக்கு அப்பாற்பட்டு அரசர் தான் விரும்புபவரை பிரதமராக நியமிக்க முழு அதிகாரம் உள்ளது. தொழிலாளர் கட்சி சார்பில் கெய்ர் ஸ்டார்மர் வெற்றி பெற்றாலும் தற்போதைய அரசர் மூன்றாம் சார்லஸ்தான் அவர் பிரதமராக ஆகவேண்டுமா வேண்டாமா என்று முடிவெடுப்பார்.   

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொடக்கம் முதலே இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி மிகவும் பின்னிலையில் இருந்து வந்தது
    • ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 136 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

    பிரிட்டன் நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று [ஜூன் 4] நடந்து முடிந்தது. பிரிட்டனில் மொத்தம் உள்ள 650 பாராளுமன்றத் தொகுதிகளிலும் நேற்று பதிவான வாக்குகளை என்னும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தொடக்கம் முதலே இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி மிகவும் பின்னிலையில் இருந்து வந்த நிலையில் தற்போது பிரதான இடதுசாரி எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சியமைக்கத் தேவையான 326 இடங்களையும் கடந்து 408 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 136 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

    முன்னதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தொழிலாளர் கட்சி 410 இடங்களையும், கன்சர்வேட்டிவ் கட்சி 131 இடங்களில் வெற்றி பெரும் எனவும் கணிக்கப்பட்டது குறிப்பிடத்தத்க்கது. பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து கடந்த 14 வருடங்கள் கழித்து தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்கும் நிலையில் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

    வெற்றி குறித்து பேசிய கெய்ர் ஸ்டார்மர், தேச புத்தாக்கத்துக்காக நாங்கள் பாடுபடுவோம் என்றும், நாடுதான் முதலாவது, கட்சி இரண்டாம் பட்சம்தான் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தோல்விக்கு தான் முழு பொறுப்பேற்பதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். ரிசிமண்ட் மற்றும் நார்தலெர்ட்டான் தொகுதிகளில் போட்டியிட்ட ரிஷி சுனக் அங்கு வெற்றி பெற்று தனது எம்.பி பதவியை தக்கவைத்துள்ளார்.

    ×