search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medal"

    • அரியானா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான பலாலி [Balali] கிராமத்துக்கு வினேஷ் போகத் சென்றடைந்துள்ளார்.
    • வினேஷின் வருகையை கொண்டாட 750 கிலோ லட்டுகளும் தயாராகி உள்ளது

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை அதிகரிப்பால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் நேற்றைய தினம் நாடு திரும்பினார். டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து அரியானா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான பலாலி [Balali] கிராமத்துக்கு வினேஷ் போகத் சென்றடைந்துள்ளார். அங்கு ஊர் மக்கள் திரண்டு வினேஷ் போகத்தின் வருகையை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். மாலை மரியாதைகள், பரிசுப் பொருட்கள் என வழங்கி ஊர் மக்கள் வினேஷ் போகத்தை உச்சி முகர்ந்து வருகின்றனர். வினேஷின் வருகையை கொண்டாட 750 கிலோ லட்டுகளும் தயாராகி உள்ளது.

    வினேஷ் போகத்தை கவுரவிக்கும் விதமாக ஊர் மக்கள் ஒன்றிணைத்து அவருக்கு தங்கப் பதக்கத்தையும் வழங்கினர். ஊர் மக்கள் ஒன்றுசேர்ந்து காசு போட்டு வினேஷ் போகத்துக்கு பரிசுத்தொகை வழங்கியுள்ளனர்.

    தனது உறவினரும் குருவுமாக மகாவீர் சிங் கிடம் ஆசி பெற்ற அவர் கண்ணீர் விட்டு அழுதார். ஊர் மக்களின் அன்பு குறித்து வினேஷ் போகத் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் பதக்கம் வெல்ல முடியாதது எனது வாழ்க்கையில் ஆறாத வடுவாக இருக்கும். இனியும் நான் மல்யுத்தத்தில் ஈடுபடுவேனா மாட்டேனா என்று தெரியவில்லை.

    எனக்கு இங்கு வந்தவுடன் கிடைத்த அன்பு எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அந்த நபிக்கையை கொண்டு சரியான திசையில் பயணிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் முன்னதாக வினேஷ் கூறியபடி மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவாரா அல்லது மீண்டும் போட்டிகளில் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

    • இன்னும் ஒரு வாய்ப்பு இருப்பதாக அவருக்காக இந்த வழக்கில் ஆஜரான இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வழக்கறிஞர் விதுஸ்பாத் சிங்கானியா [Vidushpat Singhania] தெரிவித்துள்ளார்.
    • இன்னும் 10-15 நாட்களுக்குள் நடுவர் நீதிமன்றம் தரப்பில் இருந்து முழுமையான விளக்கம் கிடைக்கும்

    பாரீஸ் ஒலிம்பிக்சில் பெண்கள் மல்யுத்தத்தில் [50 கிலோ எடைப்பிரிவில்] இறுதிப்போட்டி வரை முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்று பெருமையைப் பெற்ற வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகமாக உள்ளதாக கடைசி நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்த வினேஷ் போகத், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.

    அவரது மனுவை நேற்று முன் தினம் [ஆகஸ்ட் 14] ஆம் தேதி நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது இந்தியாவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத அடியாக அமைந்தது. மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வினேஷ் போகத் தற்போது நாடு திரும்பியுள்ளார். இந்த நேரத்தில் பதக்கம் கிடைக்க வேறு எந்த வழியும் இல்லையா என்று பலருக்குக் கேள்வி எழுவது இயல்பே.

    அந்த வகையில் வினேஷ் போகத் பதக்கம் பெற இன்னும் ஒரு வாய்ப்பு இருப்பதாக அவருக்காக இந்த வழக்கில் ஆஜரான இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வழக்கறிஞர் விதுஸ்பாத் சிங்கானியா [Vidushpat Singhania] தெரிவித்துள்ளார். அதாவது, நடுவர் நீதிமன்றத்தின் [CAS] தீர்ப்பை எதிர்த்து ஸ்விஸ் ஃபெடரல் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்ய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இன்னும் 30 நாட்களுக்குள் இந்த மேல் முறையீட்டினை செய்ய வேண்டும். ஆனால் தற்போது 'வினேஷ் போகத் மனு தள்ளுபடி' என்று ஒற்றை வரியில் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வேறு எந்த விளக்கமும் தற்போதுவரை தரப்படவில்லை. இன்னும் 10-15 நாட்களுக்குள் நடுவர் நீதிமன்றம் தரப்பில் இருந்து முழுமையான விளக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எனவே முழுமையான விளக்கம் கிடைத்தவுடன், ஸ்விஸ் தீர்ப்பாயத்தில் இந்தியா மேல்முறையீடு செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • பிரிஜ் பூசனின் நண்பரும் ஆர்எஸ்எஸ் புள்ளியுமான சஞ்சய் சிங் மல்யுத்த சம்மேளன தலைவர் ஆனார்.
    • 'இந்த வருட ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் இந்தியா 6 பதகங்களுக்கும் மேல் வென்றிருக்கும்.. ஆனால்'

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் - ஒரு இந்தியக் கனவு

    பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்த இறுதிப்போட்டியில் உடல் எடை அதிகரித்த காரணத்துக்காக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியது.

     

    பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். ஆனால் வினேஷ் போகத் உடல் எடை 50 கிலோவுக்கு 100 கிராம்கள் அதிகமாக இருந்ததால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.

     

    இதையடுத்து வெள்ளிப் பதக்கம் வழங்கக்கோரி வினேஷ் போகத்தின் முறையீட்டை விளாயாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பான தீர்ப்பு வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரும் என எதிர்பார்க்கலாம். இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் [57 கிலோ எடைப்பிரிவில்] அமன் சேராவத் மட்டுமே பதக்கம் [வெண்கலம்] வென்றுள்ளார்.

     

    அதிகாரத்தோடு நடக்கும் மல்யுத்தம்

    வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் முக்கியத்துவம் பெறுவதற்கு மற்றோரு காரணமும் உள்ளது. அதாவது இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் பாஜக முன்னாள் எம்.பியுமான பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்தது. இதனால் பாதிக்கப்பட்ட வீராங்கனைகளுக்கு நியாயம் கேட்டு சக மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் கடந்த வருட தொடக்கத்திலிருந்து டெல்லியில் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     

    அரசியல் விளையாட்டு 

    இந்த போராட்டத்தின் முக்கிய முகமாக அறியப்பட்டவர் வினேஷ் போகத். அவர் மீதும் மற்றைய வீரர் வீராங்கனைகள் மீதும் மத்திய அரசானது அவர்கள் மீது கடுமையான அடக்குமுறையைப் பிரயோகித்தது. ஆனால் மாதக்கணக்கில் அவர்கள் நடத்திய போரட்டம் ஓரளவு வெற்றி அடைந்தது என்றே கூற வேண்டும். அதாவது, பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து விலகிய பின் தேர்தல் நடத்தப்பட்டு அவரது நண்பரும் ஆர்எஸ் எஸ் பின்னணி கொண்ட புள்ளியான சஞ்சய் சிங் நியமிக்கப்பட்டார்.  

    இடையில் சில காலம் மல்யுத்த சம்மேளனம் செயலிழந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் சஞ்சய் சிங் தலைமையில் செயல்படத் தொடங்கியது. இந்நிலையில் வினேஷ் போகத்தின் தற்போதைய தகுதி நீக்கத்தில் அரசியல் சதி ஒளிந்துள்ளதாகப் பலர் சந்தேகிக்கின்றனர். வினேஷ் போகத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவாக மற்ற விளையாட்டு வீரர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

     

    கைவிரித்த இந்திய ஒலிம்பிக் சங்கம் 

    இதற்கிடையே வினேஷ் போகத் தகுதி நீக்கத்துக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் பொறுப்பல்ல என்று அதன் தலைவர் பி.டி.உஷா கைவிரித்தது அனைவரிடையேயும் கோபத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி , அதிக செலவு செய்தும், திறமையான வீரர் வீராங்கனைகள் இருந்தும் பாரீஸ் ஒலிம்பிக்சில் இந்தியா 6 பதக்கங்களை மட்டுமே பெற்று பதக்கப்பட்டியலில் மிகவும் பின்தங்கியுள்ள ஆதங்கமும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இது மத்திய அரசு மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அக்கறையின்மையினாலேயே நடந்துள்ளது என்ற பொதுக்கருத்தும் மக்களிடையே நிலவி வருகிறது.

     

    அவர்தான் பொறுப்பு.. 

    இந்த நிலையில்தான் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் சஞ்சய் சிங், பாரீஸ் ஒலிம்பிக்சில் மல்யுத்தத்தில் ஒரே ஒரு பதக்கம் மட்டுமே பெற்று இந்தியா பிந்தங்கியுள்ளதற்கு கடந்த வருடம் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் நடத்திய போராட்டமே காரணம் என்ற கருத்தை தற்போது தெரிவித்துள்ளார்.

     

    'இந்த வருட ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் இந்தியா 6 பதகங்களுக்கும் மேல் வென்றிருக்கும். ஆனால் கடந்த 15-16 மாதங்களாக ஏற்பட்ட தொந்தரவுகளால் நாம் பாதகங்களை இழந்துள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.மேலும் வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து பேசியபோது, தகுதி நீக்கத்திற்கு 'அவர்தான் [வினேஷ் போகத்தான்] பொறுப்பு. தீர்ப்பு சரியாக வந்தால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்கும்' என்று தெரிவித்துள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாரீஸ் ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற மொத்த நாடுகளில், 184 நாடுகளை விட அதிக தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் லியான் மர்ச்சண்ட்.
    • 22 வயதே ஆகும் லியான் மர்ச்சண்ட் பங்கேற்கும் முதல் ஒலிம்பிக்சே இந்த பாரீஸ் ஒலிம்பிக்ஸ் தான்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இந்த வருடம் நடைபெற்றுவந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நேற்று முன் தினம் நிறைவு பெற்றது. சுவாரஸ்யமான தருணங்கள் பல நிறைந்ததாக இந்த வருட ஒலிம்பிக்ஸ் போட்டிகள் அமைந்தன.

    அந்த வகையில் அனைவரையும் வாயடைக்க வைக்கும் வகையில் பிரான்ஸ் நீச்சல் வீரர் லியான் மர்ச்சண்ட் அதிரடியான சாதனைக்குச் சொந்தக்காரராக உள்ளார்.

     

    அதாவது, பாரீஸ் ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற மொத்த நாடுகளில், 184 நாடுகளை விட அதிக தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் லியான் மர்ச்சண்ட்.

    இந்த வருட ஒலிம்பிக்சில், 200 Ľ Breaststroke, 200 L Butterfly, 200 LLi Individual Medley, 400 மீட்டர் Individual Medley ஆகிய போட்டிகளில் லியான் மர்ச்சண்ட் தங்கம் வென்று அசத்தியுள்ளார். மேலும் 4x400 மீட்டர் Medley Relay-வில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார்.

     

    22 வயதே ஆகும் லியான் மர்ச்சண்ட் பங்கேற்கும் முதல் ஒலிம்பிக்சே இந்த பாரீஸ் ஒலிம்பிக்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகை அதிகரிக்கப்படுகிறது.
    • இந்த முறை இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்வதைக் குறிவைத்து இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.

    புதுடெல்லி:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ம் தேதி ஒலிம்பிக் திருவிழா தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் 102 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கிறார்கள்.

    கொரோனாவால் ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கம் வென்றது.

    இந்த ஒலிம்பிக்கில் இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்வதைக் குறிவைத்து இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.

    இந்நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகையை அதிகரிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி, பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.1 கோடியும், வெள்ளிப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.75 லட்சமும், வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றுபவர்களுக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்படுகிறது.

    ஹாக்கி போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தால் ரூ.2 கோடியும், வெள்ளிப்பதக்கம் வென்றால் ரூ.1 கோடியும், வெண்கலப்பதக்கம் பெற்றால் ரூ.75 லட்சமும் வழங்கப்பட இருக்கிறது.

    • 2 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 3 சக்கர சைக்கிள் போட்டி நடைபெற்றது.
    • 2,3,4,5-ம் இடங்களை பிடித்த குழந்தைகளுக்கு வெள்ளி பதக்கம் பரிசாக வழங்கப்பட்டது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் 2 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 3 சக்கர சைக்கிள் போட்டி நடைபெற்றது.

    போட்டியில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    போட்டியானது 3 நிலைகளாக நடைபெற்றது.

    போட்டியில் முதல் இடம் பிடித்த குழந்தைக்கு தங்க பதக்கமும், முறையே 2,3,4,5-ம் இடங்களை பிடித்த குழந்தைகளுக்கு வெள்ளி பதக்கமும் பரிசாக வழங்கப்பட்டது.

    விழாவில் கார்த்தி வித்யாலயா பள்ளி தலைவர் கார்த்திகேயன் கலந்து கொண்டு வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    மேலும், கலந்து கொண்ட அனைத்து குழந்தை களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    இதுகுறித்து பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் கூறுகையில்:-

    போட்டியானது குழந்தைகளை ஊக்கு விக்கும் வகையிலும், புத்துணர்ச்சி அளிக்கும் விதமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்றார்.

    முன்னதாக பள்ளி முதல்வர் அம்பிகாபதி அனைவரையும் வரவேற்றார்.

    விழாவில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • போட்டியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • யோகா போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.

    நாகப்பட்டினம்:

    மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் அகில இந்திய தடகள போட்டிகள் கோவாவில் நடைபெற்றது.

    போட்டியில் பல மாநிலங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் ஜனனி என்ற மாணவி யோகா போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.

    வெற்றிபெற்ற மாணவியை இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி குழும இணைச்செயலாளர் சங்கர் கணேஷ், துறை தலைவர் கணேசன், அருள் செல்வன், முதலாம் ஆண்டு துறை தலைவர் தீபா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • நாடு முழுவதும் இருந்து வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர்.
    • சப்- ஜூனியர் 59 கிலோ பிரிவில் சென்னையை சேர்ந்த அபிஷேக் பால்ஜோஸ்வா தங்கம் வென்றார்.

    ஜாம்ஷெட்பூர்:

    இந்திய வலுதூக்குதல் சம்மேளனம் சார்பில் தேசிய சீனியர், சப்- ஜூனியர் வலுதூக்குதல் போட்டி ஜாம்ஷெட்பூரில் 3 தினங்கள் நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நடைபெற்ற இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இதில் தமிழக அணிக்கு 2 பதக்கம் கிடைத்தது. சப்- ஜூனியர் 59 கிலோ பிரிவில் சென்னையை சேர்ந்த அபிஷேக் பால்ஜோஸ்வா தங்கம் வென்றார்.

    சீனியர் 59 கிலோ பிரிவில் நந்தகோபால் வெண்கல பதக்கம் பெற்றார். பதக்கம் வென்ற இருவரையும் தமிழ்நாடு வலுதூக்குதல் சங்க பொதுச் செயலாளர் இளங்கோவன், சென்னை மாவட்ட வலுதூக்குதல் சங்க செயல் தலைவர் விஜயபாஸ்கர் ஆகியோர் பாராட்டினார்கள்.

    • 12 நாடுகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
    • வேதாரண்யம் மாணவி மஹாதி 2-ம்இடம் பெற்றுகோப்பை பெற்றார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி ராஜாளி காடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் - வேதா தம்பதியினரின் மகள் மஹாதி (வயது 11).இவர் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சென்ற ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற மனநிலை வேக எண்கணித போட்டியில் (அபாகஸ்) முதலிடம் பெற்றார்.

    தற்போது சென்னை மகாபலிபுரத்தில் உலக அளவில் நடந்த அபாகஸ் போட்டியில் பங்கு பெற்றார்.

    இதில் 12 நாடுகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

    இதில் வேதாரணியம் மாணவி மஹாதி இரண்டாம் இடம் பெற்றுகோப்பை மற்றும் வெள்ளி பதக்கத்தை பெற்றார்.

    வெற்றி பெற்ற மாணவி மஹாதியை நாகை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ் பாராட்டினார் .

    • அருள் ஆனந்தர் கல்லூரி மாணவி வெள்ளி, வெண்கல பதக்கம் வென்றார்.
    • வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    மதுரை

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளை–யாட்டு போட்டிகள் சென் னையில் நடைபெற்று வரு–கின்றன. இதில் தமிழகத்தின் பல்வேறு பள்ளி, கல்லூ–ரிகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற–னர்.

    இதில் மதுரை அருகே உள்ள கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் முத–லாம் ஆண்டு பயின்று வரும் மாணவி மாரிச்செல்வி சென்னை யில் 100 மீட்டர் ஓட்டப்ப ந்தயத்தில் வெள் ளிப் பதக்கத்தையும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்க ல பதக்கத்தையும் வென்றார்.

    பதக்கங்கள் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவியை அதிபர் ஜான் பிரகாசம், செயலர் அந்தோ–ணிசாமி, கல்லூரி முதல்வர் அன்பரசு, இணை முதல்வர் சுந்தரராஜன், கல்லூரி விளையாட்டுத்துறை ஒருங் கிணைப்பாளர் இன் னாசி ஜான், உடற்கல்வி இயக்கு–னர் வனிதா, உடற் கல்வித் துறை தலைவர் வீர பர–மேஸ்வரி மற்றும் சக மாணவ, மாணவிகள், பெற் றோர்கள் பாராட்டி–னர்.

    • சிலம்ப பயிற்சியாளரிடம் 7 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகின்றனர்.
    • பதக்கம் வென்றவர்களை ஊர் மக்கள் பாராட்டினர்.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்த சேகர் என்ற விவசாயி மகன் கணேஷ் திருச்சியில்தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.

    அதேபோன்று கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராமதுரை, என்ற விவசாயியின் மகள் வினிதா தஞ்சை தனியார் கல்லூரியில் பி.காம்., சிஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .

    2 பேரும் சரவணன் என்ற சிலம்பு பயிற்சியாளரிடம் 7 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகின்றனர்.

    தமிழ்நாடு இளைஞர்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் முதலமைச்சர் கோப்பைக்கான மாநிலஅ ளவிலான கல்லூரி மாணவர்கள் பிரிவில் சிலம்பு போட்டியில் பங்கேற்றனர்.

    இதில்கணேஷ் முதலிடமும் வெற்றி பெற்று தங்க பதக்கமும் ரூ 1 லட்சம் பரிசு பெற்றார்.

    அதேபோன்று கல்லூரிபயிலும் பெண்கள் பிரிவில் சிலம்பு போட்டியில் பங்கேற்று2-ம் வது இடத்தைப் பிடித்து வெள்ளிபதக்கமும் பெற்று இரண்டு மாணவர்களும் தங்களுடைய கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    பதக்கம் வென்ற இருவரையும் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் பாராட்டி சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

    • சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள், போலீசாரை ஊக்கு விக்கும் வகையில், முதல்-அமைச்சர் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என, அறிவித்தார்.
    • உயர் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு, முதல்-அமைச்சரின் பதக்கம் வழங்க, தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    நாமக்கல்:

    தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், சட்டசபையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானிய கோரிக்கையின்போது, சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையா கவும் உழைக்கும் அதிகாரி கள், போலீசாரை ஊக்கு விக்கும் வகையில், முதல்-அமைச்சர் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என, அறிவித்தார்.

    2023-ம் ஆண்டு, சர்வ தேச போதை ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தை யொட்டி, உயர் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு, முதல்-அமைச்சரின் பதக்கம் வழங்க, தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரிநாரா யணன், தேனி எஸ்.பி. டோங்கரே பிரவின் உமேஷ், சேலம் சப்-டிவிஷன் ரெயில்வே டி.எஸ்.பி. குணசேகரன், நாமக்கல் எஸ்.ஐ. முருகன், புதுச்சத்தி ரம் போலீஸ் குமார் ஆகியோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதன் முறையாக மாநில அளவிலான விருது பட்டி யலில், நாமக்கல் மாவட் டத்தை சேர்ந்த எஸ்.ஐ., மற்றும் போலீஸ் என 2 பேர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    முதல்-அமைச்சர் பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள எஸ்.ஐ., முருகன், போலீஸ் குமார் ஆகியோருக்கு, போலீஸ் உயர் அதிகாரிகள், சக போலீசார் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

    ×