search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sale"

    • து அருந்துபவர்கள் ஒயினின் சுவைக்காக எவ்வளவு விலைக் கொடுத்தும் வாங்கி அருந்துகின்றனர்.
    • ஒவ்வொரு பாட்டிலிலும் எனது பாதத்தின் ஒரு சிறிய பகுதி உள்ளது.

    உலகெங்கிலும் உள்ள மது பிரியர்களுக்கு விருப்பப்படும் பானமாக ஒயின் உள்ளது. மது அருந்துபவர்கள் ஒயினின் சுவைக்காக எவ்வளவு விலைக் கொடுத்தும் வாங்கி அருந்துகின்றனர்.

    இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த 30 வயதான எமிலி ரே என்ற மாடல் தனது கால்களால் நசுக்கப்பட்ட திராட்சைகளால செய்யப்பட்ட ஒயின் சுவையை பலர் விரும்புவதாகக் கூறியுள்ளார். எமிலி கால் மாடலாக புகழ் பெற்றவர். எமிலி வெறும் கால்களால் திராட்சை பழங்களை நசுக்கி அதில் மது மது தயாரிக்கிறார். சொந்தமாக ஒரு ஒயின் பிராண்டை ஆரம்பித்து அதற்கு சிம்ப் ஒயின் என்றும் பெயரிட்டுள்ளார்.

     இந்நிலையில் கூட்டு ஒயின் திட்டத்திற்காக ரெனிகேட் அர்பன் வைனரி என்ற லண்டனை தளத்தை ஒயின் தயாரிக்கும் மாடல் எமிலி தொடர்பு கொண்டார். அவர் சமீபத்தில் ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்பு மதுவை அறிமுகத்தியுள்ளார். திராட்சைகளை தனது கால்களால் நசுக்கி தயாரிக்கப்படுகிறது. அந்த ஒயின் ஒரு பாட்டிலின் விலை சுமார் 100 பவுண்டுகள் (தோராயமாக ரூ. 10,662). என்று தெரிவித்துள்ளார்.

    "ஒவ்வொரு பாட்டிலிலும் எனது பாதத்தின் ஒரு சிறிய பகுதி உள்ளது, அதைத்தான் கால் ரசிகர்கள் விரும்புவார்கள் என்று நான் நினைக்கிறேன்" என்றும் கூறியுள்ளார்.

    • இந்த விற்பனை மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் தேவாலயத்துக்கு வந்து குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • அவருக்கு கடவுள் அங்கீகாரம் அளித்தார் எனவும் கூறி தேவாலயம் இந்த விற்பனையில் இறங்கியுள்ளது.

    மெக்சிகோவில் உள்ள தேவாலயம் ஒன்று சொர்க்கத்தில் உள்ள மனைகள் ஒரு சதுரடி 100 டாலர் [சுமார் 8,336 ருபாய்] என்ற கணக்கில் விற்பனை செய்து வருவது அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளது. மெக்சிகோ நாட்டின் இக்லேசியா டிஎம்போஸ் தேவாலயதில் நடந்து வரும் இந்த விற்பனை மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் தேவாலயத்துக்கு வந்து குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அந்த தேவாலயத்தின் பாதிரியார் கடந்த 2017 ஆம் ஆண்டு கடவுளை சந்தித்தார் எனவும் அப்போது சொர்க்கத்தில் உள்ள மனைகளை விற்பனை செய்ய அவருக்கு கடவுள் அங்கீகாரம் அளித்தார் எனவும் கூறி தேவாலயம் இந்த விற்பனையில் இறங்கியுள்ளது.

     

    சொர்க்கத்தில் ஒரு சதுரடியின் ஆரம்ப விலை நூறு டாலர்கள், ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஜி.பே ஆப்பிள் பே உள்ளிட்ட தளங்களின் மூலம் ஆன்லைனிலேயே பணம் செலுத்தலாம் என்று விளம்பரப்படுத்தியுள்ளது.

    சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கி வரும் இந்த தேவாலயம் விளையாட்டாகவே இந்த வியாபாரத்தை தொடங்கியுள்ளது. ஆனால் இதை சீரியஸாக எடுத்துக்கொண்ட பக்தர்கள் - வாடிக்கையாளர்கள் சொர்க்கத்தில் உள்ள மனைகளை வாங்கிக் குவித்து வருகின்றனர். இதற்கிடையில் இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • ராகுல் காந்தி பிரச்சாரங்களில் கையில் வைத்துக்கொண்டு வளம் வந்த பாக்கெட் சைஸ் அரசியலமைப்புச் சட்டப் புத்தகம் அனைவரின் கவனத்தையும் ஈர்ததது.
    • ஒரு வருடத்தில் விற்கப்பட்ட அளவுக்கு கடந்த ஒரே மாதத்தில் விற்கப்பட்டுள்ளது.

    இந்திய மக்களவைத் தேர்தல் வழக்கம்போல பரபரப்புக்கும் ஆரவாரத்துக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாத வகையில் நடந்து முடிந்துள்ளது. வெற்றி தோல்வி என்பதையும் தாண்டி பிரச்சாரத்தின்போது மக்களை வசீகரிப்பதற்கு தேசிய அளவிலும் மாநில அளவிலும் மினி முதல் மெகா அரசியல் தலைவர்கள் தங்களால் என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் பிரச்சாரத்தின்போது செய்து வாக்குகளை அறுவடை செய்துள்ளனர். அந்த வகையில் இந்தியா கூட்டணி சார்பில் ராகுல் காந்தியும், என்.டி.ஏ கூட்டணி சார்பாக நரேந்திர மோடியும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக்கொண்டனர்.

    இந்த மொத்த தேர்தலிலும் ராகுல் காந்தி பேட்டிகளிலும் பிரச்சாரங்களிலும் கையில் வைத்துக்கொண்டு வளம் வந்த சிவப்பு அட்டையிடப்பட்ட பாக்கெட் சைஸ் அரசியலமைப்புச் சட்டப் புத்தகம் அனைவரின் கவனத்தையும் ஈர்ததது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலும் ராகுல் காந்தியின் மைக்கின் அருகே அந்த சட்டப் புத்தகம் இருந்தது.

     

    இந்நிலையில் ராகுல் காந்தியால் கவனம் பெற்ற இந்த சிறிய சைஸ் பாக்கெட் சட்டப்புத்தக எடிஷனை அதிகம் பேர் வாங்கிவருவதால் வேகமாக விற்றுத் தீர்ந்து வருகிறது. லக்னோவைச் சேர்ந்த EBC புத்தக நிறுவனம் தயாரித்த இந்த 624 பக்கங்கள் கொண்ட சட்டப்புத்தக 16 வது எடிஷன் கடந்த ஒரு வருடத்தில் விற்கப்பட்ட அளவுக்கு கடந்த ஒரே மாதத்தில் விற்பக்கட்டு மொத்தமாக தீர்ந்துள்ளது. கோபால் சங்கரநாராயணன் தொகுத்த இந்த புத்தகத்துக்கான முன்னுரையை முன்னாள் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

     

    • விதிகளை மீறும் உணவு வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • சமூக வலைதளங்கலின் மூலம் தாய்ப்பால் விற்பனையை விளமப்பரப்படுத்தி ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் போக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது

    வணிக ரீதியான தாய்ப் பால் விற்பனைக்குத் தடை - FSSAI அதிரடி

    உணவுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்தும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI, வணிக ரீதியாக தாய்ப்பால் விற்கப்படுவதை தடை செய்து உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக FSSAI வெளியிட்டுள்ள அறிக்கையில், , FSS சட்டம்- 2006 விதிமுறைகளின் படி வணிக ரீதியாக மனித பாலை பதப்படுத்துதல், விற்பனை செயதல் சட்டவிரோதமானதாகும் . எனவே, தாய்ப்பால் மற்றும் அதில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை வணிகமயமாக்குவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

     

    மேலும் விதிகளை மீறும் உணவு வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாய்ப் பாலை பதப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதை நிறுத்த மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளது.

     

    பாலூட்டும் தாய்மார்களிடம் இருந்து தாய்ப் பாலை சேகரித்து லாப நோக்கத்துடன் பால் வங்கிகள் அமைத்து சமூக வலைதளங்கலின் மூலம் தாய்ப்பால் விற்பனையை விளமப்பரப்படுத்தி ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் போக்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் FSSAI இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் உள்ள பால் வங்கியில் தூய்மையான தாய்ப்பால் இலவசமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

     

    • நெல்லூர் இன பசுக்கள் கடந்த 1868-ம் ஆண்டு பிரேசிலுக்கு கொண்டு செல்லப்பட்டன.
    • பிரேசில் நாட்டில் 1.60 கோடி நெல்லூர் இன பசுக்கள் உள்ளன.

    திருப்பதி:

    ஆந்திராவில் ஓங்கோல் மற்றும் நெல்லுரை சேர்ந்த சில வகை இன மாடுகள் உலக அளவில் பிரபலமாக உள்ளது.

    நெல்லூர் இன வகையான பாஸ் இண்டிகஸ் என்ற இன பசு வெளிப்புறத் தோற்றத்தில் வெண்மை நிறத்தில் இருக்கும். இந்த வகை பசு பிரேசில் நாட்டில் நடந்த ஏலத்தில் 4.8 மில்லியன் டாலருக்கு விற்பனையானது.

    இது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.40 கோடி ஆகும். ரூ.40 கோடிக்கு விற்பனையாகி உலக சாதனை படைத்தது.

    நெல்லூர் இன பசுக்கள் கடந்த 1868-ம் ஆண்டு பிரேசிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு இந்த வகை பசுக்கள் அதிக அளவில் இனவிருத்தி செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி பிரேசில் நாட்டில் 1.60 கோடி நெல்லூர் இன பசுக்கள் உள்ளன.

    இந்த வகை பசுக்கள் அதிக வெப்பத்தை தாங்கக் கூடியவை. எளிதில் நோய்கள் தாக்க முடியாத அளவுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவையாகும். 

    • பல்வேறு மாநிலங்களில் மஞ்சள் உற்பத்தி பெருகி ஒரு குவின்டால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையானது.
    • கர்நாடகா மாநிலம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து மட்டுமே புதிய மஞ்சள் வரத்தாகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடம், பெரு ந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடம், கோபிசெட்டிபாளையம் என 4 இடங்களில் மஞ்சள் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏல விற்பனை நடந்து வருகிறது. கடந்த 2010-11ம் ஆண்டுகளில் தங்கம் விலைக்கு இணையாக மஞ்சள் குவிண்டால் ரூ.18 ஆயிரம் வரை விற்பனையானது.

    அதன் பின்னர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மஞ்சள் உற்பத்தி பெருகி ஒரு குவின்டால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையானது. இதே நிலை சில ஆண்டுகள் நீடித்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு தொடக்கத்தில் பல்வேறு மாநிலங்களில் பலத்த மழை, பல மாநிலங்களில் போதிய மழை இன்மை போன்ற காரணங்களால் மஞ்சள் உற்பத்தி குறைந்து ஈரோடு மஞ்சள் குவிண்டால் ரூ.15 ஆயிரம் முதல் ரூ15 ஆயிரத்து 500 வரை விற்பனையானது.

    அதன்பின் கடந்த 6 மாதங்களாக குவிண்டால் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை விற்பனை ஆகி வந்தது. கடந்த வாரம் ரூ.15 ஆயிரத்தை தொட்டது. பின்னர் படிப்படியாக உயர்ந்து மீண்டும் குவிண்டால் ரூ.16 ஆயிரத்து 36-க்கு விற்பனையானதால் மஞ்சள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.12 ஆயிரத்து 678 முதல் ரூ.16 ஆயிரத்து 36 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.11 ஆயிரத்து 599 முதல் ரூ.13 ஆயிரத்து 800 வரையும் விற்பனையானது.

    இங்கு கொண்டுவரப்பட்ட 3 ஆயிரத்து 387 மஞ்சள் மூட்டைகளில் 1,938 மூட்டைகள் ஏலம் போன தாக நிர்வாகிகள் தெரிவித்தனர். கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.11 ஆயிரத்து 200 முதல் ரூ.13 ஆயிரத்து 799 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.11 ஆயிரத்து 200 முதல் ரூ.11 ஆயிரத்து 133 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

    பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.10 ஆயிரத்து 545 முதல் ரூ.15 ஆயிரத்து 89 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.8 ஆயி ரத்து 889 முதல் 13 ஆயிரத்து 739 வரையும் விற்பனையானது. இதைப்போல் ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ. 12 ஆயிரத்து 633 முதல் 15 ஆயிரத்து 499 வரையும், கிழ ங்கு மஞ்சள் ரூ.10 ஆயிரத்து 556 முதல் ரூ.13 ஆயிரத்து 519 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

    இது குறித்து ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-தற்போது கர்நாடகா மாநிலம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து மட்டுமே புதிய மஞ்சள் வரத்தாகிறது. இதற்கு தரத்தின் அடிப்படையில் சற்று விலை அதிகமாக கிடைக்கிறது.

    பழைய மஞ்சள் இருப்பில் இருந்தவை ரூ.9 ஆயிரத்துக்கு விலை போகிறது. ஈரோடு மாவட்டத்தில் இன்னும் புதிய மஞ்சள் அறுவடையாகவில்லை. சில மஞ்சள் புதிய ரகம் பெரு வட்டாக வரத்தாகி ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் ரூ.16 ஆயி ரத்து 36 வரை விற்பனையானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பறிமுதல் செய்யப்பட்ட போதை ஸ்டாம்ப்களின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும் என்று கூறப்படுகிறது.
    • போதை ஸ்டாம்ப் சப்ளை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறிவைத்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் 'ஸ்டாம்ப்' வடிவிலான போதைப் பொருள் புதுச்சேரி தாகூர் நகர் பகுதியில் விற்பனை செய்யப்படுவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் ஓட்டம் பிடித்தார். போலீசார் அந்த வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், தாகூர் நகரை சேர்ந்த இசை கலைஞர் சுசீந்திரன் (வயது 28) என்பதும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எல்.எஸ்.டி. எனப்படும் போதை 'ஸ்டாம்ப்' விற்பனை செய்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சுசீந்திரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 போதை 'ஸ்டாம்ப்'கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் சென்னையை சேர்ந்த ஆஷிக் (23) என்பவரிடம் இருந்து போதை ஸ்டாம்பை வாங்கியதாக தெரிவித்தார்.

    இதையடுத்து ஆஷிக்கை கைது செய்து விசாரித்த போது, அவரது நண்பர் சென்னையை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் சந்தோஷ்(22) என்பவரிடம் இருந்து வாங்கியதாக கூறினார்.

    உடனே போலீசார் சென்னைக்கு விரைந்து சென்று, அவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் 2 பேரிடம் இருந்து 13 போதை ஸ்டாம்ப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.

    மருத்துவ மாணவர் ஆஷிக், டி.ஜே . நிகழ்ச்சியை பார்க்க செல்லும் போது சுசீந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    அப்போது சுசீந்திரன் தனக்கு போதை ஸ்டாம்ப் வேண்டும் என்று ஆஷிக்கிடம் கேட்டுள்ளார்.

    அவர் தனது நண்பர் சந்தோசின், கல்லூரியில் படிக்கும் கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் அதனை பயன்படுத்துவதாக கூறியுள்ளார்.

    இதற்கிடையே சந்தோஷ் தனது நண்பர் ஆஷிக்கை பார்ப்பதற்காக புதுச்சேரி வந்தார். அப்போது இவர்கள் 3 பேரும் சந்தித்து பேசினர்.

    பின்னர் காரில் சென்னை சென்று அங்கிருந்து 20 போதை ஸ்டாம்ப்களை வாங்கி புதுச்சேரி வந்தனர். அதில் 7-ஐ சுசீந்திரனிடம் கொடுத்தனர்.

    மேலும் 13 போதை ஸ்டாம்புகளை அவர்கள் பயன்படுத்த வைத்திருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட போதை ஸ்டாம்ப்களின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும் என்று கூறப்படுகிறது.

    இவர்களுக்கு போதை ஸ்டாம்ப் சப்ளை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பகல் நேரங்களில் வெளியே செல்பவர்கள் குளிர்பான கடைகளில் பழஜூஸ், மோர் உள்ளிட்டவற்றை பருகி தாகம் தீர்த்து வருகிறார்கள்.
    • தினந்தோறும் 20க்கும் மேற்பட்ட லாரிகளில் சுமார் 200டன் அளவுக்கு தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது.

    போரூர்:

    தமிழகத்தில் தற்போது பனி சீசன் முடிந்து கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் வாட்டி எடுக்க தொடங்கி விட்டது. இதனால் சாலை ஓரங்களில் நீர் மோர், இளநீர், கரும்புச்சாறு, பழச்சாறு, நுங்கு, தர்பூசணி பழங்கள் விற்பனை அதிக அளவில் முளைத்து உள்ளன.

    பகல்நே ரங்களில் வெளியே செல்பவர்கள் குளிர்பான கடைகளில் பழஜூஸ், மோர் உள்ளிட்டவற்றை பருகி தாகம் தீர்த்து வருகிறார்கள். தொடர்ந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் சாலையோர குளிர்பான கடைகளில் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.

    மேலும் சாலையோரங்களில் ஆங்காங்கே தற்போது வெயிலுக்கு இதமான தர்பூசணி விற்பனையும் அதிகரித்து உள்ளன. குவித்து வைத்து விற்கப்படும் தர்பூசணியை முழுபழங்களாகவும் வீடுகளுக்கு அதிக அளவில் வாங்கி செல்வதை காணமுடிகிறது.

    இந்த நிலையில் கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து அதிகரித்து உள்ளது. கடந்த 10 நாட்களாகவே செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து தர்பூசணி பழங்கள் அதிகளவில் விற்பனைக்கு குவியத் தொடங்கி உள்ளன.

    தற்போது தினந்தோறும் 20க்கும் மேற்பட்ட லாரிகளில் சுமார் 200டன் அளவுக்கு தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது. மொத்த விற்பனையில் தர்பூசணி ஒரு கிலோ ரூ.18-க்கு விற்கப்படுகிறது.

    வெளி மார்கெட்டில் உள்ள கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தர்பூசணி ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் இனி வரும் நாட்களில் தர்பூசணி பழங்களின் வரத்து மேலும் அதிகரித்து விற்பனை சூடு பிடிக்கும் என்று பழ வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • பூண்டு வரத்து குறைந்ததன் காரணமாக தமிழகத்தில் பூண்டு விலை திடீரென அதிகரித்து வருகிறது.
    • ஈரோடு பூண்டு மண்டிக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டுகள் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பூண்டு விளைச்சல் உள்ள நிலையில் வட மாவட்டங்களில் இருந்தும் பூண்டுகள் வரத்து காரணமாக பூண்டு விலை கட்டுக்குள் இருந்தது.

    இந்நிலையில் தமிழகத்தில் பூண்டு விளைச்சல் குறைவு மற்றும் வட மாநிலங்களில் இருந்து வரக்கூடிய பூண்டு வரத்து குறைந்ததன் காரணமாக தமிழகத்தில் பூண்டு விலை திடீரென அதிகரித்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக ஈரோடு வ.உ.சி. காய்கறி சந்தைக்கு தமிழகம், கர்நாடக, காஷ்மீர் உட்பட வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் வரக்கூடிய பூண்டு மூட்டை வரத்து கடந்த சில மாதங்களாக குறைந்து கொண்டே வந்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்த பூண்டு கடந்த வாரம் ஒரு கிலோ 400 ரூபாய் அதிகரித்து விற்பனையானது. இதனால் மொத்தம் வியாபாரம் மற்றும் சில்லரை வியா பாரம் பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

    சமையலில் மிக இன்றியமையாததாக உள்ள பூண்டின் விலை ஏற்றதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் தாக்கம் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

    இந்நிலையில் இன்று ஈரோடு பூண்டு மண்டிக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டுகள் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பூண்டின் விலை கிலோ ரூ.100 வரை குறைந்து உள்ளது. இன்று ஒரு கிலோ பூண்டு சில்லரை விற்பனையில் ரூ.300-க்கு விற்பனையானது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

    இதுகுறித்து பூண்டு வியாபாரிகள் கூறும்போது,

    விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு காரணமாக கடந்த வாரம் பூண்டின் விலை புதிய உச்சத்தை தொட்டு ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று முதல் மத்திய பிரதேசத்தில் இருந்து பூண்டு வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதன் எதிரொலியாக இன்று ஒரு கிலோ பூண்டு கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.300-க்கு விற்பனை ஆகிறது. இன்னும் சில நாட்களில் ராஜஸ்தானில் இருந்து பூண்டு வரத்து அதிகரிக்க தொடங்கி விடும். இதனால் அடுத்த வாரம் பூண்டின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றனர்.

    • பெரிய அளவில் வருவாய் இல்லை என்றாலும், இதிலிருந்து மீள வழியின்றி பல குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் சாகுபடி செய்யப்பட்ட தர்பூசணி அறுவடை பணி தற்போது தொடங்கியுள்ளது.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. 70 சதவீதம் பேர் விவசாயம், கால்நடை வளர்ப்பை சார்ந்தே உள்ளனர். பெரிய அளவில் வருவாய் இல்லை என்றாலும், இதிலிருந்து மீள வழியின்றி பல குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் மழை மற்றும் சீசனுக்கு தகுந்தாற்போல், விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பட்டணம், வெள்ளிமேடு பேட்டை, ஒலக்கூர் உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் மரக்காணம் அடுத்த ஆலத்துார், நடுக்குப்பம், முருக்கேரி பகுதிகளிலும், வானுார் அடுத்த ரங்கநாத புரம், விநாயகபுரம், பரங்கனி, எடப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், தர்பூசணி சாகுபடி செய்யப் பட்டது.

    கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் சாகுபடி செய்யப்பட்ட தர்பூசணி அறுவடை பணி தற்போது தொடங்கியுள்ளது. அறுவடை செய்யப்படும் தர்பூசணி புதுச்சேரி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஒரு டன் 7,500 ரூபாய் முதல் 8,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஒரு டன் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப் படுகிறது. திண்டிவனம், மரக்காணம் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி அறுவடை செய்யப்படுகிறது

    இது குறித்து தர்பூசணி சாகுபடி செய்யும் விவசாயிகள் கூறுகையில், '2 மாத பயிர் தான் தர்பூசணி. எங்களிடம் இருந்து வியாபாரிகள் குறைந்த விலைக்கு தர்பூசணி பழங்களை கடந்த ஆண்டு வாங்கிச் சென்றனர். இதனால் தர்பூசணி செடிக்கு மருந்து தெளித்தல், தண்ணீர் பாய்சுவது மற்றும் ஆட்கள் கூலிக்கே கடந்த ஆண்டு சரியாகி விட்டது .இதில் எந்த லாபமும் கிடைக்க வில்லை. ஆனால் இந்த ஆண்டு ஒரு டன் தற்போது 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப் படுகிறது என தெரிவித்தனர்.

    • உணவு பாதுகாப்பு துறையில் பீர்பாட்டில்களை கொடுத்து சோதனை செய்தார்.
    • தனியார் மதுபான விற்பனையாளர், தயாரிப்பு நிறுவனத்தின் மீது நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை வேல்ராம்பட்டை சேர்ந்தவர் பீமாராவ். இவர் கடந்த 2021-ம் ஆண்டு லாஸ்பேட்டை கொட்டுப் பாளையத்தில் உள்ள தனியார் மதுக்கடையில் 6 பீர் பாட்டில் வாங்கினார்.

    அதில் 2 பாட்டில் காலாவதியாக இருந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறையில் பீர்பாட்டில்களை கொடுத்து சோதனை செய்தார்.

    சோதனை முடிவில் புதுவை மாவட்ட நுகர்வோர் தீர்வு ஆணையத்தில் மனு தாக்கல் செய்து, தனியார் மதுபான விற்பனையாளர், தயாரிப்பு நிறுவனத்தின் மீது நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு அமர்வு தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம் ஆகியோர், மதுபான கடை ரூ.75 ஆயிரத்து 240 இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    • எப்படி ரூ.600-க்கு விற்கப்படுகிறது என்பதற்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
    • உயிரோடு உள்ள ஆடுகளை வெட்டி பயன்படுத்துவது தான் பாதுகாப்பானதாகும்.

    சென்னை:

    சென்னை புளியந்தோப்பில் மாநகராட்சியின் இறைச்சி கூடம் செயல்பட்டு வருகிறது. அங்கு ஆடு மற்றும் மாடுகள் வெட்டப்பட்டு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. சென்னை நகரில் உள்ள பெரும்பாலான இறைச்சி கடைகளுக்கு இங்கிருந்து தான் விற்பனைக்கு இறைச்சி கொண்டு செல்லப்படுகிறது.

    மற்ற நாட்களைவிட ஞாயிற்றுக்கிழமைகளில் 5 ஆயிரம் ஆடுகள் அங்கு வெட்டப்படுகின்றன. கிலோ ரூ.700 வரை விற்கப்படுகிறது. ஆனால் இறைச்சி கடைகளில் ஆட்டு இறைச்சி கிலோ ரூ.900 வரை விற்கப்படுகிறது.

    புளியந்தோப்பு இறைச்சி கூடத்தின் முன் பகுதியில் சிலர் ஆட்டு இறைச்சி விற்பனை செய்து வருகின்றனர். அங்கு கிலோ ரூ.600-க்கு ஆட்டு இறைச்சி கிடைக்கிறது.

    மட்டன் கடைகளில் கிலோ ரூ.900-க்கு விற்கும்போது அங்கு எப்படி ரூ.600-க்கு விற்கப்படுகிறது என்பதற்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

    ராஜஸ்தான், சூரத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஞாயிற்றுக் கிழமைகளில் விற்பனைக்கு சனிக்கிழமை ஆடுகள் கொண்டு வரப்படும். ஒரு லாரிக்கு 350 ஆடுகள் வீதம் கொண்டு வரும்போது நெரிசலில் சிக்கி அவற்றில் 4 அல்லது 5 ஆடுகள் செத்து விடுவது வழக்கம். ஒரு லாரியில் 5 ஆடுகள் என்றால் 10, 15 லாரிகளில் வரும் போது 50 ஆடுகளுக்கு மேல் வழியில் இறந்து விடுகிறது.

    இறந்துபோன ஆடுகளை அந்த பகுதியில் உள்ள சிலர் குறைந்த விலைக்கு வாங்கி, சுத்தம் செய்து பிரீசரில் வைத்து பாதுகாக்கின்றனர்.

    மறுநாள் காலையில் அதனை வெட்டி விற்பனைக்கு கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    இறந்த ஆடுகளை பதப்படுத்தி உண்பது சுகாதார மற்றதாகும். உயிரோடு உள்ள ஆடுகளை வெட்டி பயன்படுத்துவது தான் பாதுகாப்பானதாகும்.

    ஆனால் இறைச்சி கூடத்தின் முன்பு சிலர் இதனை தொழிலாக செய்து வருகின்றனர். செத்து போன ஆட்டு இறைச்சிக்கும் உயிரோடு வெட்டிய ஆட்டு இறைச்சிக்கும் பார்க்கும் போது வேறுபாடு தெரியாது.

    இறைச்சி கடைகளை விட கிலோவிற்கு ரூ.300 குறைவாக கிடைப்பதால் அதனை மக்கள் தெரியாமல் வாங்கி சென்று பயன்படுத்துகின்றனர்.

    ஆனால் இதுபோன்ற சாகின்ற ஆடுகளை இறைச்சி கூடத்தில் தூக்கி எறிந்து விடுவார்கள். கூடத்தில் உள்ள வியாபாரிகள் இந்த செயலில் ஈடுபடுவது இல்லை. ஆனால் வெளியே சிலர் கடை வைத்து சுகாதாரமற்ற ஆட்டு இறைச்சி விற்பதை அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை.

    மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் தான் இறைச்சி கூடம் முழுவதும் உள்ளது. அப்படி இருக்கும் போது மலிவான விலையில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்வதை ஏன் தடுக்க முடியவில்லை என்று வியாபாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

    ×