search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shashi tharoor"

    • அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி உக்ரைன் செல்கிறார்.
    • பிரதமர் மோடி செயலுக்கு உக்ரைன் அதிபர் கடும் அதிருப்தி தெரிவித்து இருந்தார்.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகிற 21 ஆம் தேதி போலாந்துக்கு பயணம் மேற்கொள்கிறார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு 23 ஆம் தேதி பிரதமர் மோடி, உக்ரைன் செல்ல இருக்கிறார். ரஷியா உக்ரைன் இடையே தீவிர போர் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி உக்ரைன் நாட்டுக்கு செல்கிறார்.

    முன்னதாக அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி ரஷியா சென்றிருந்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தற்போது உக்ரைன் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து தெரிவித்தார்.

    இது குறித்து பேசும் போது, "நான் அதை ஏற்கனவே வரவேற்று இருந்தேன். அது நல்ல விஷயம் என்று நான் நம்புகிறேன். உக்ரைன் மருத்துவமனைகளில் ரஷியா நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி குழந்தைகள் உயிரிழந்த போது, பிரதமர் மோடி ரஷிய அதிபரை கட்டியணைத்த சம்பவதத்துக்கு உக்ரைன் அதிபர் கடுமையான அதிருப்தி தெரிவித்து இருந்தார்."

    "உலகில் இன்று நடைபெறும் ஏராளமான மோதல்களில் இந்தியாவுக்கும் சமபங்கு வகிக்கிறது. இதனால், மாஸ்கோ சென்றதை போல் பிரதமர் மோடி கீவ் நகருக்கும் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திப்பது நல்ல விஷயமாகவே இருக்கும். மேலும், இருதரப்பு மீதும் அக்கறை செலுத்துவதாக இருக்கும். அமைதிக்கான விருப்பம் உள்ளிருந்து வரவேண்டும்."

    "அந்த வகையில் அவர்கள் இது குறித்து சிக்னல்களை அனுப்பினால் அதை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டு, அதற்கு ஏற்ப செயல்படலாம். ஆனால், இத்தகைய முன்னெடுப்பே சாதனை தான். அமைதிக்கு தேவையான அளவுக்கு ஏதேனும் நடந்தால் நல்லது தான். ஆனால் அதுமட்டுமே அளவுகோலாக இருக்கக்கூடாது என்று நம்புகிறேன்," என்று தெரிவித்தார்.

    • காங்கிரசை சேர்ந்த மணி சங்கர் ஐயருக்கும், வங்காளதேசத்துடன் இந்தியாவை ஒப்பிட்டு சர்ச்சையைக் கிளப்பினார்
    • அண்டை நாட்டில் நடப்பது நமது பாரத் - திலும் நடக்கும் என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சி நடந்து வருகிறது.

    வங்காளதேசத்தில் நடந்ததது இந்தியாவிலும் நடக்கலாம் என்று கருத்துக்கு ஜெகதீப் தன்கர் கண்டனம் 

    வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடங்கிய போராட்டம், ஷேக் ஹசீனா அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரானதாக மாறியது. இது ஆட்சிக் கவிழ்ப்புக்கு வழிவகுத்தது. மாளிகையைப் போராட்டக்காரர்கள் சூறையாடிய நிலையில் ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பி வந்தார்.

    வங்காளதேச ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம், முகமது யூனிஸ் தலைமையில் இடைக்கால அரசை அமைத்துள்ளது. இந்நிலையில்தான் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த புத்தக வெளியீடு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், இப்போது பார்ப்பதற்கு எல்லாம் சாதாரணமாக இருப்பது போல் உள்ளது. ஆனால் வங்காள தேசத்தில் தற்போது நடந்து வருவது இந்தியாவிலும் நடக்கலாம் என்று தெரிவித்தார்.

     

    மேலும் காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் ஐயருக்கும், வங்காளதேசத்துடன் இந்தியாவை ஒப்பிட்டு சர்ச்சையைக் கிளப்பினார். மேலும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திருவனந்தபுர எம் .பி சசி தரூர், வங்காள தேசத்தில் கடந்த ஜனவரியில் நடந்த தேர்தலில் வெளிப்படைத் தன்மை இல்லாததைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

    தற்போது இந்த கருத்துக்கள் குறித்து, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற பவள விழாவில் பேசிய ஜககீத் தன்கர், ஜாக்கிரதையாக இருங்கள், அண்டை நாட்டில் நடப்பது நமது பாரத் - திலும் நடக்கும் என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சி நடந்து வருகிறது.

    இந்த நாட்டின் குடிமகனாகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து கொண்டு இவ்வாறு பேச முடிகிறது என்று கேள்வியெழுப்பினார். மேலும், தேச விரோத சக்திகள் அரசியலமைப்பைப் பயன்படுத்தி நாசகர வேலைகளை நியாயப்படுத்தி வருகிறது என்று எச்சரித்துள்ளார். 

    • இந்த தொடருக்கான அணியில் ருதுராஜ், அபிஷேக் சர்மா, சாம்சன் (ஒருநாள்) ஆகியோர் இடம் பெறவில்லை.
    • சாம்சன் கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார்.

    இந்திய அணி இம்மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலில் டி20-யும் அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரும் நடைபெற உள்ளது. முதல் டி20 போட்டி வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.

    இதற்கான டி20 அணியையும் ஒருநாள் அணியையும் பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதன்படி டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவும் ஒருநாள் கேப்டனாக ரோகித் சர்மாவும் நியமிக்கப்பட்டனர். இந்த தொடருக்கான அணியில் ருதுராஜ், சாம்சன், அபிஷேக் சர்மா ஆகியோர் இடம் பெறாதது ரசிகர்களிடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணியின் தேர்வுக்கு லோக் சபா எம்.பி.யும் கிரிக்கெட் ரசிகருமான சசி தரூர் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இம்மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் சுவாரசியமான அணி தேர்வு. சாம்சன், தனது கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்தவர். ஆனால் அவர் ஒருநாள் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படவில்லை.

    அதேபோல அபிஷேக் சர்மா, ஜிம்பாப்வே தொடரில் நடந்த டி20 போட்டியில் சதம் அடித்தவர். அவரும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த வீரர்களின் வெற்றி, தேர்வாளர்களுக்கு மிகவும் குறைவாகவே தெரிகிறது. எப்படியும் அணிக்கு வாழ்த்துக்கள் என கூறினார்.

    இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய டி20 அணி:

    சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது. சிராஜ்.

    இந்திய ஒருநாள் அணி:

    ரோகித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.

    • காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுர மக்களவைத் தொகுதி எம்.பி.-யுமான சசி தரூர் பாஜகவை கிண்டலடித்து உள்ளார்.
    • மக்களவைத் தேர்தலில் 400 இடங்களை கைப்பற்ற இலக்கு வைத்து பிரச்சாரம் செய்த பாரதிய ஜனதா கட்சி 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது

    பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் பிரதான இடதுசாரி எதிர்க்கதசியான தொழிலாளர் கட்சி மொத்தம் உள்ள 650 இடங்களில் 411 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. மாறாக ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி இதுவரை இல்லாத அளவில் 121 இடங்களை மட்டுமே கைப்பற்றி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

    இதை மேற்கோள்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுர மக்களவைத் தொகுதி எம்.பியுமான சசி தரூர் பாஜகவை கிண்டலடித்து உள்ளார். அதாவது சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலில் 400 இடங்களை கைப்பற்ற இலக்கு வைத்து பிரச்சாரம் செய்த பாரதிய ஜனதா கட்சி வெறும் 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று கூட்டணி காட்சிகளில் தயவில் மீண்டும் ஆட்சியமைத்தது. மோடி முன்மொழிந்த இந்த தேர்தல் முழக்கம் தேர்தலோடு காலாவதியானதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத்தொடங்கின.

    இந்த பின்னணியிலேயே, 'ஒரு வழியாக 400 இடங்களில் வெற்றி என்பது நடந்துவிட்டது ஆனால் வேறொரு நாட்டில்' என்று பாஜகவை கிண்டலடித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்த முறை 400 இடங்கள் உறுதி என்ற பாஜகவின் தேர்தல் பிரச்சார வசனத்தை அவர்கள் பக்காமே திருப்பிவிட்டுள்ள சசி தரூரின் பதிவுக்கு இணையவாசிகள் அதிகம் கமெண்ட் செய்து வருகின்றனர். 

    • பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
    • பாரளுமன்றத்தில் எங்களுடன் அவர் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசின் இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றார். இதனால் இரண்டில் ஒன்றை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வடக்கில் காங்கிரசை வலுப்படுத்தவேண்டிய கட்டாயத்தால் வயநாடு தொகுதியை தனது தங்கை பிரியங்கா காந்திக்கு விட்டுக்கொடுக்க முடிவெடுத்துள்ளார் ராகுல்.

    நேற்று அவரின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அடுத்த 6 மாதத்துக்குள் வயநாட்டில் மறு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் முதல் முறையாக பிரியங்கா காந்தி வேட்பாளராக களம் இறங்க உள்ளார். இதுநாள்வரை உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் பொறுப்பாளராக செயல்பட்டு வந்த பிரியங்கா காந்தி பொதுக்கூட்டங்களில் நாட்டின் பிரச்சனைகள் குறித்து தனது துணிகரமான பேச்சுகளால் பாஜகவின் செய்லகளை சரமாரியாக கேள்வி எழுப்புபவராக அறியப்படுகிறார்.

    மக்களவைத் தேர்தலில் அவரின் சூறாவளிப் பிரச்சாரம் உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கூறலாம். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் திருவானந்தபுர எம்.பியுமான சசி தரூர் பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரவேசம் குறித்து மனம் திறந்துள்ளார்.

     

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராகுல் காந்தி ரேபரேலியை தேர்வுசெய்தது காங்கிரசுக்கு அவசியமான நகர்வு. அவர் அதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றே நான் ஆரம்பத்தில் இருந்து விரும்பினேன். அதேசமயம் பிரியங்கா காந்தி வாரணாசியில் போட்டியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அங்கு நின்ற காங்கிரஸ் வேட்பாளரை விட மோடி குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வென்றிருக்கிறார்.

    தற்போது பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பாராளுமன்றத்தில் ஒரு சக்தி வாய்ந்த குரலாக பிரியங்கா காந்தி இருப்பார். அவர் தேர்தல் பிரச்சரத்தின்போது எப்படி செயல்பட்டார் என்று நாம் அனைவரும் பார்த்திருப்போம். பிரியங்கா ஒரு சிறந்த பேச்சாளர். பாரளுமன்றத்தில் எங்களுடன் அவர் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், இது குடும்ப அரசியல் என்று கூறி வரும் பாஜக சார்பில் வெற்றிபெற்றுள்ள 15 எம்.பிக்கள் அரசியல் பின்னணி கொண்ட குடும்பங்களைச் சேர்த்தவர்கள் என்றும் சசி தரூர் தெரிவித்துள்ளார். 

    • பாஜக-வுக்கு கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் ஆகிய தென் மாநிலங்களில் ஒரு சீட் கூட கிடைக்காது.
    • தெற்கில் 2019-ஐ விட மிகவும் மோசமான முடிவுதான் பா.ஜனதாவுக்கு கிடைக்கும்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சசி தரூர் போட்டியிட்டுள்ளார். வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கைக்காக காத்திருக்கிறார்.

    இவர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    பா.ஜனதா சொல்லும் 400 இலக்கு என்பது ஜோக். 300 என்பது சாத்தியமற்றது. 200 என்பது கூட அந்த கட்சிக்கு சவாலானதாக இருக்கும்.

    கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் ஆகிய தென் மாநிலங்களில் ஒரு சீட் கூட கிடைக்காது. தெற்கில் 2019-ஐ விட மிகவும் மோசமான முடிவுதான் பா.ஜனதாவுக்கு கிடைக்கும். கடந்த மாதம் 26-ந்தேதி வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு மூலம் 190 இடங்களில் தேர்தல் முடிந்துள்ளது. என்னுடைய தரவுகள்படி, எங்கள் கூட்டணிக்கு மிகப்பெரிய அளவில் நேர்மறையாக முடிவு கிடைக்கும் என தெரியவந்துள்ளது. மிகப்பெரிய அலையாக இருக்கும் என நாங்கள் கூறவில்லை. ஆனால், அரசாங்கத்திற்கு ஆதரவாக இல்லை. தற்போது வரை நாங்கள் முன்னணியில் உள்ளோம். தேவையில்லாத இந்த நீண்ட கால தேர்தலில் இன்னும் ஐந்து கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    இவ்வாறு சசி தரூர் தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம் தொகுதியில் சசி தரூர் வெற்றி பெற்றால், இந்த தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றவர் என்ற பெருமையையும், நீண்ட காலம் இந்த தொகுதியின் எம்.பி.யாக இருந்தவர் என்ற பெருமையையும் பெறுவார்.

    • சட்டமன்றத்தில் அரசு மெஜாரிட்டியை இழந்தால் அந்த ஆட்சி கவிழும்.
    • அதற்கு ஒரே தீர்வு மறு தேர்தல்தான்.

    மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ஜனதா நேற்று வெளியிட்டது அதில் "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்ற வாக்குறுதியை கொடுத்துள்ளது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் "ஒரே நாடு ஒரே தேர்தல்" முறை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவை எம்.பி.-யுமான சசி தரூர் கூறியதாவது-

    யுசிசி (பொது சிவில் சட்டம்) சட்டத்தில் என்ன இருக்கிறது? அதன் வரைவு வராமல் அது குறித்து ஏதும் கூற முடியாது. மற்ற சமூகங்கள் வரைவு சட்டத்தை எதிர்க்கவில்லை என்றால் ... நமது சமூகத்தை பிளவுபடுத்தும் எதையும் நாங்கள் விரும்பவில்லை, அதை ஒருங்கிணைக்க வேண்டும்... என்பது நமக்கு இருக்க வேண்டும்.

    "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்பதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. சட்டமன்றத்தில் அரசு மெஜாரிட்டியை இழந்தால் அந்த ஆட்சி கவிழும். அதற்கு ஒரே தீர்வு மறு தேர்தல்தான். ஆனால் "ஒரே நாடு ஒரே தேர்தல்" கருத்தின்படி ஐந்து வருடத்திற்கு ஒருமுறைதான் தேர்தல் என நிர்ணயத்து விட்டால், மெஜாரிட்டியை இழந்த அரசு வீழ்ந்த பிறகு, ஆறு மாதத்திற்கு பிறகு அவர்கள் குடியரசு ஆட்சியை அமல்படுத்துவார்களா?. இது ஜனநாயக விரோதம் இல்லையா?.

    இவ்வாறு சசி தரூர் தெரிவித்துள்ளார்.

    • கேரள தேர்தலில் இடது சாரி ஜனதாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனதாயக முன்னணி இடையே தான் போட்டி உள்ளது.
    • மக்களவை தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. ஆனால் அரசியலில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போதைய எம்.பி.யான சசி தரூர், பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் உள்பட 12 பேர் போட்டியிடுகின்றனர். அங்கு மும்முனைப்போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்றும் 12 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில ஈடுபட்டிருக்கின்றனர்.

    இந்நிலையில் மக்களவை தேர்தலில் இனி போட்டியிடமாட்டேன் என்று சசி தரூர் தெரிவித்துள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கேரள தேர்தலில் இடது சாரி ஜனதாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனதாயக முன்னணி இடையே தான் போட்டி உள்ளது. வருகிற மக்களவை தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் நான் போட்டியிடுவதே இறுதியாகும். இனி மக்களவை தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. ஆனால் அரசியலில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    • சசிதரூர் ரூ.49.3 கோடி அசையும் சொத்துகளும், ரூ.6.75 கோடி அசையா சொத்துகளும் இருப்பதாக கூறியுள்ளார்.
    • ரூ.2 கோடி மதிப்பிலான அமெரிக்க முதலீடுகள், ரூ.1.1 கோடிக்கான அமெரிக்க கடன்களையும் குறிப்பிட்டு இருந்தார்.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களையும் வெளியிட்டு இருந்தார். அதில் ரூ.49.3 கோடி அசையும் சொத்துகளும், ரூ.6.75 கோடி அசையா சொத்துகளும் இருப்பதாக கூறியுள்ளார். இதில் முக்கியமாக ரூ.5,11,314 மதிப்பிலான பிட்காயின் இருப்பதாக கூறியுள்ளார்.

    மேலும் ரூ.2 கோடி மதிப்பிலான அமெரிக்க முதலீடுகள், ரூ.1.1 கோடிக்கான அமெரிக்க கடன்களையும் குறிப்பிட்டு இருந்தார். இவற்றை தவிர ரூ.9.33 கோடி பங்கு முதலீடுகள், ரூ.3.46 கோடி கார்பரேட் பத்திரங்கள், ரூ.91.7 லட்சம் டெபாசிட் ஆவணங்கள், ரூ.36 ஆயிரம் கையிருப்பு போன்றவையும் இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • மீண்டும் ஒரு பத்திரிகையாளர் என்னிடம், பிரதமர் மோடிக்கு மாற்று தனிநபர் யார்? என்பதை குறிப்பிடும்படி கேட்டார்.
    • பாராளுமன்ற முறையில் இந்த கேள்வி பொருத்தமற்றது.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சசி தரூர். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மூன்று முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது 4-வது முறையாக களம் இறக்கப்பட்டுள்ளார்.

    இந்த மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இருந்த போதிலும் பிரதமர் மோடிக்கு எதிராக களம் இறங்கும் பிரதமர் வேட்பாளர் யார்? என்பதை எதிர்க்கட்சிகள் தெரிவிக்கவில்லை. தேர்தல் முடிந்த பின், பிரதமர் பதவிக்கு யார் நிறுத்தப்படுவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளன.

    இந்த நிலையில் சசி தரூரிடம் பிரதமர் மோடிக்கான மாற்று யார்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சசி தரூர் பதில் அளித்துள்ளார்.

    சசி தரூர் தனது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    மீண்டும் ஒரு பத்திரிகையாளர் என்னிடம், பிரதமர் மோடிக்கு மாற்று தனிநபர் யார்? என்பதை குறிப்பிடும்படி கேட்டார். பாராளுமன்ற முறையில் இந்த கேள்வி பொறுத்தமற்றது. பாராளுமன்ற முறையில் நாம் தனி நபரை தேர்வு செய்வதில்லை. இந்தியாவின் பன்முகத்தன்மை, பன்மைத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பாதுகாக்க விலைமதிப்பற்ற கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகளின் தொகுப்பை பிரதிபலிக்கும் கட்சி அல்லது கூட்டணி கட்சிகளை தேர்ந்தெடுக்கிறோம்.

    மோடிக்கு மாற்று அனுபவம் வாய்ந்த, திறமையான, பன்முகத்தன்மை கொண்ட, மக்களின் பிரச்சனைகளுக்கு பதில் அளிக்கக் கூடியவர்கள்.

    பிரதமர் தேர்வு என்பது 2-வது கட்டம்தான். எந்த குறிப்பிட்ட நபரை அவர்கள் பிரதமராக தேர்ந்தெடுப்பார்கள் என்பது 2-வது பட்சம்தான். நம்முடைய ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மையை பாதுகாப்பதுதான் முன்னமையானது.

    • வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும் எனப் பிரதமர் மோடி கூறினார்
    • இந்துக்களை ஒடுக்கும் விதிகள் மற்றும் சட்டங்களை திருத்த அரசியலமைப்பில் மாற்றங்களை செய்யவேண்டும் - பாஜக எம்.பி ஆனந்த குமார்

    வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும் எனப் பிரதமர் மோடி கூறினார்.

    அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என ராஜஸ்தான் மாநிலம் நாகூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஜோதி மிர்தா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஜோதி மிர்தா மக்களிடையே பேசுகையில், "அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும். அதற்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பாஜகவுக்கு பலம் வேண்டும். அதற்கு பெரியளவில் பெரும்பான்மை பெற்று இம்முறை நாம் வெற்றி பெற வேண்டும்" என கூறியுள்ளார்.

    இதற்கு முன்னதாக இதே போல அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என்று கர்நாடகா பாஜக எம்.பி அனந்த் குமார் ஹெக்டே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மார்ச் 9-ம் தேதி கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தின் சித்தாபுராவில் உள்ள ஹலகேரி என்ற கிராமத்தில், முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க எம்.பியுமான அனந்த் குமார் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.

    அப்போது, "வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும். இந்த முறை 400-க்கும் மேற்பட்ட இடங்களை பெற வேண்டும் எனப் பிரதமர் மோடி ஏன் கூறினார். தற்போது மக்களவையில் 2/3 பெரும்பான்மையாக நாம்தான் இருக்கிறோம். ஆனால், மாநிலங்களவையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை. மாநில அரசுகளிலும் நமக்குத் தேவையான பெரும்பான்மை இல்லை.

    எனவே, அரசியலமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், மாநில அரசுகளிலும் கணிசமான பெரும்பான்மையைப் பெறுவது அவசியம். இந்துக்களை ஒடுக்கும் விதிகள் மற்றும் சட்டங்களை திருத்த அரசியலமைப்பில் மாற்றங்களை செய்யவேண்டும். அதற்கு, இந்த பெரும்பான்மை போதாது." எனப் பேசினார். இவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையானது.

    இதனையடுத்து 6 முறை எம்.பி ஆக இருந்த ஆனந்த குமாருக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்தது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "பெரும்பான்மை பெற பாஜக விரும்புவதன் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தியதும் ஆனந்த் ஹெக்டேவை வேட்பாளர் பட்டியலிலிருந்து பாஜக நீக்கியது. இப்போது இன்னொரு பாஜக வேட்பாளர், அரசியல் சாசனத்தை மாற்றுவதே பாஜகவின் நோக்கமென வெளிப்படையாக பேசியிருக்கிறார். உண்மையை எத்தனை நாள் பாஜக மறைக்க முயலும்?" என தெரிவித்துள்ளார். 

    • கேரளாவின் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் சார்பில் சசி தரூர் போட்டியிடுகிறார்.
    • பா.ஜ.க. ஆட்சியின் விலைவாசி உயர்வு பற்றி பேச வேண்டிய நேரம் இது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் கேரளாவின் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசி தரூர் போட்டியிடுகிறார். தேர்தல் பிரசாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சசி தரூர் எக்ஸ் தளத்தில், பா.ஜ.க. ஆட்சியின் விலைவாசி உயர்வு பற்றி பேச வேண்டிய நேரம் என பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக சசி தரூர் வெளியிட்டுள்ள பதிவில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆட்சியில் நிலவும் விலைவாசி உயர்வு பற்றி குறிப்பிட்டுள்ளார்.

    காங்கிரஸ் ஆட்சியில் ஒரு லிட்டர் பால் 34 ரூபாய்க்கு விற்றது, பா.ஜ.க. ஆட்சியில் 58 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கிலோ டீத்தூள் 143 ரூபாய்க்கு விற்றது, பா.ஜ.க. ஆட்சியில் 284 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கிலோ சர்க்கரை 30 ரூபாய்க்கு விற்றது, பா.ஜ.க. ஆட்சியில் 44 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    காங்கிரஸ் ஆட்சியில் சிலிண்டர் விலை 413 ரூபாய்க்கு விற்றது, பா.ஜ.க. ஆட்சியில் 903 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கிலோ இஞ்சி 63 ரூபாய்க்கு விற்றது, பா.ஜ.க. ஆட்சியில் 240 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கிலோ ஏலக்காய் 557 ரூபாய்க்கு விற்றது, பா.ஜ.க. ஆட்சியில் 1113 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

    ×