search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Social Networking"

    • மாணவர்கள் மனரீதியாக துன்புறுத்தப்படுவதற்கும், உணர்ச்சிவசப்படுவதற்கும் இதுவே காரணம்.
    • போலி விவரங்களை வைத்து இன்று சமூக வலைத்தளங்களில் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    தற்போதைய காலக்கட்டத்தில் குழந்தைகள் சமூக வலைதளங்களில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இதன் காரணமாக அவர்கள் சந்திக்கும் எதிர்மறையான விளைவுகளானது அவர்களின் படிப்பை மோசமாக பாதிக்கிறது.

    இன்றைய நவீன உலகில் இளம் வயதினர் மற்றும் குழந்தைகள் உட்பட எல்லா வயதினரும் சமூக ஊடகங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அது முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக கோவிட்-19 இன் தொடக்கத்தில் இருந்து, மக்களிடையே இன்டர்நெட் அக்சஸ் பயன்பாடு வேகமாக அதிகரித்தது, ஏனெனில் அந்த காலகட்டத்தில் நாம் ஒரு நபரிடம் தொடர்பு கொள்ளவோ அல்லது சமூக ரீதியாக தொடர்பு கொள்ளவோ ஒரே வழி இதுதான். அதேசமயம் இதனை பயன்படுத்துவதால் பல்வேறு தீமைகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், மன வளர்ச்சிக்கு சமூக ஊடகங்கள் பெரும் தீங்கு விளைவிக்கிறது. அத்துடன் சமூக ஊடகங்களிலேயே அவர்கள் நேரத்தை வீணடிக்கின்றனர்.


    சமூக ஊடகங்கள் குழந்தைகளுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன. குறிப்பாக மாணவர்கள் பல விஷயங்களைக் கண்டறியவும், அவர்களின் அறிவை மேம்படுத்தவும், தொலைதூரத்திலிருக்கும் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும் மற்றும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுடன் தொடர்பு கொள்ளவும் உதவும் மிகப்பெரிய தளங்களாகும். நாம் அனைவரும் அறிந்தபடி, சமூக ஊடகங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன, ஏனெனில் இது மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்க உதவுகிறது. இப்போதெல்லாம் குழந்தைகள் சமூக தளங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் சந்திக்கும் எதிர்மறையான விளைவுகளானது அவர்களின் படிப்பை மோசமாக பாதிக்கிறது.

    சைபர்புல்லிங் என்பது உலகளவில் உள்ள முக்கிய கவலைகளில் ஒன்றாகும். இது சமூக ஊடகங்களில் இணையத்தில் மற்றொரு நபரைக் கையாளவும், அவமானப்படுத்தவும் மற்றும் தீங்கு விளைவிக்கவும் நிறைய நடக்கிறது. மாணவர்கள் மனரீதியாக துன்புறுத்தப்படுவதற்கும், உணர்ச்சிவசப்படுவதற்கும் இதுவே காரணம். மேலும் குழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும், மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தும். சமூக ஊடகங்களில் அதிகப்படியான ஈடுபாடு மாணவர்களை அவர்களின் கல்வியிலிருந்து திசை திருப்புகிறது.

    சாதாரணமாக 13 வயது நிறைவடைந்தவுடன் மட்டுமே சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க முடியும். ஆனால் போலி விவரங்களை வைத்து இன்று சமூக வலைத்தளங்களில் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் 13 வயது நிறைவடைந்தாலும், பெரும்பாலான வெப்சைட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கற்பிக்க வேண்டும்.


    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சமூக ஊடக செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். அவர்கள் பயன்படுத்தும் ஆப்ஸின் நன்மை தீமை குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கற்பிக்க வேண்டும்.

    13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் அல்லது அதற்கும் குறைவான நேரம் மட்டுமே இன்டர்நெட் பயன்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது அவசியமாகும்.

    பாதுகாப்பான இன்டர்நெட் அக்சஸை பெற்றோர்கள் பயன்படுத்துவதும், அதன் நன்மைகளை குழந்தைகளுக்கு கற்பிப்பதும் அவசியம் ஆகும். ஏனெனில், குழந்தைகள் அதன் நன்மைகளை புரிந்துகொண்டு அவற்றை பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

    சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் குழந்தைகளின் தூக்க முறை பாதிக்கப்படுகிறது.சமூக ஊடகங்களின் முக்கிய எதிர்மறை விளைவுகளில் ஒன்று, மாணவர்களுக்குத் தேவையான தூக்கத்தின் அளவு குறைவதாகும். தூக்கமின்மை மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது. குறிப்பாக மாணவர்கள் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க ஆரோக்கியமான தூக்கம் கட்டாயமாகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சைலேந்திரபாபு புகைப்படத்தை பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சி
    • விழிப்புடன் இருக்க சைலேந்திரபாபு அறிவுரை.

    சைபர் கிரைம் மோசடி கும்பல் பல்வேறு விதமாக பொதுமக்களிடம் பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சுங்கத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், சி.பி.ஐ. அதிகாரிகள் என தொடர்பு கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் பெற்றோர்களை குறிவைத்து சைபர் கிரைம் மோசடி கும்பல் நூதன முறையில் மிரட்டி பணம் பறிக்கின்றனர்.

    வாட்ஸ் அப் கால் மூலமாக தொடர்பு கொண்டு உங்களது மகன் அல்லது மகள் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும். குறிப்பாக மகள் என்றால் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், வங்கி மோசடியில் தொடர்பு இருப்பதாகவும் கூறி மிரட்டுகின்றனர்.

    வாட்ஸ் அப் காலில் சுங்கத்துறை அதிகாரிகள் போல் பேசி பெற்றோர்களை பயப்பட வைக்கின்றனர். அதுமட்டுமல்லாது அழுகுரல் ஒன்றையும் ஒளிபரப்பி மகன் அழுவது போன்ற ஒன்றையும் ஒலிபரப்பி அவர்களை நம்ப வைக்கின்றனர்.

    உண்மையை அறியாத சில பெற்றோர்கள் அவர்களது மகன் வழக்குகளில் கைது செய்யப்பட்டிருப்பதாக நினைத்து வாட்ஸ் அப் காலில் பேசும் நபர் கூறியபடி செய்து மகனை காப்பாற்றலாம் என நினைக்கின்றனர்.

    பணத்தை கொடுத்தால் வழக்கில் இருந்து தப்பிக்கலாம் என கேட்டு நினைக்கும் போது, பணத்தை கொடுத்து பெற்றோர்கள் சிலர் ஏமாறுகின்றனர்.

    இந்த நிலையில் முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதோடு ஏமாற்றி பணம் பறித்த வீடியோ ஆதாரத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

    அதில் பாகிஸ்தான் சைபர் குற்றவாளிகள் தனது புகைப்படத்தை பயன்படுத்தி இந்தியர்களிடம் பணம்பறிக்க முயற்சி செய்கிறார்கள். எனவே விழிப்புடன் இருக்க வேண்டும். இதுபோன்ற வீடியோ அழைப்பு வந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

    • பெண்ணின் உணர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலானது.
    • பெண்ணிடம் ஒரு பரிசு பையை கொடுத்து திறக்க சொல்கிறார்.

    ஏழைகளுக்கு உணவு, உடை கொடுத்து பலரும் உதவி செய்வார்கள். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த சமூகவலைதள பிரபலம் ஒருவர் வீடற்ற ஒரு பெண்ணுக்கு குடியிருப்பு வழங்கி உள்ளார்.

    இதுதொடர்பாக அந்த பெண்ணின் உணர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வைரலானது. இன்ஸ்டாகிராமில் இசாஹியா கிராஸா என்ற பயனர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், அவர் தனது வாகனத்தில் ஒரு பெண்ணை வாழ்த்தும் காட்சிகள் உள்ளது.

    அப்போது அந்த பெண்ணிடம் ஒரு பரிசு பையை கொடுத்து திறக்க சொல்கிறார். அந்த பையில் வீட்டு சாவி இருக்கிறது. அப்போது, நான் உங்களுக்கு ஒரு குடியிருப்பை தருகிறேன் என கூறுகிறார். இதைகேட்டதும் அந்த பெண்ணின் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது.

    தொடர்ந்து வீடியோவில், அந்த பெண்ணை கிராஸா புதிய வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அந்த வீட்டில் படுக்கை வசதி, டி.வி. உள்ளிட்ட கூடுதல் வசதிகள் இருக்கிறது.

    வீடியோவுடன் கிராஸாவின் பதிவில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு இல்லாமல் தெருக்களில் வாழ்ந்து வந்த பெண்ணுக்கு வீட்டை கொடுத்து ஆச்சரியப்படுத்துகிறேன். அந்த பெண் ஒரு அற்புதமானவர். இந்த அழகான தருணத்தை என்னால் மறக்க முடியாது.

    சமூக வலைதளங்களில் 200 மில்லியன் பார்வைகளை பெற்றதன் விளைவாக இந்த சிறிய மாற்றத்தை ஏற்படுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு 1.10 கோடிக்கும் மேல் பார்வைகளையும், 9 லட்சம் விருப்பங்களையும் குவித்துள்ளது. பயனர்கள் பலரும் கிராஸாவை வாழ்த்தியும், பாராட்டியும் பதிவிட்டு வருகின்றனர்.

    • அலுலலக ஊழியர் அருள் என்பவரை திருப்புளியால் தாக்கியுள்ளார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் மதிகோண்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எம்.ஒட்டப்பட்டி பகுதியில் 1998-ம் ஆண்டு முதல் ஒட்டப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது.

    இந்த சங்கத்தின் இடத்தினை பெருமாள் என்பவர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு தானமாக வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பெருமாள் மற்றும் அவரின் சகோதரர் முனியப்பன் என்பவருக்கு சொந்தமான இடத்தினை சுமார் 20 வருடத்திற்கு முன்பு இரண்டாக பிரித்து விவசா யம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் முனியப்பன் மகன் தொழிலாளியான மணி என்பவர் அடிக்கடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வந்து இது தன் தந்தைக்கு சொந்தமான இடம், காலி செய்து கொடுங்கள் என அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனையடுத்து மதிகோண் பாளையம் போலீசார் மணியை அழைத்து சமதானம் செய்து அனுப்பியுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்ற மணி என்பவர் இன்னும் நீங்கள் காலி செய்யவில்லையா என அலுலலக ஊழியர் அருள் என்பவரை திருப்புளியால் தாக்கியுள்ளார்.

    உடனடியாக அருள் என்பவர் அவரை தள்ளி விட்டு வெளியே சென்றதையடுத்து அருகே இருந்தவர்களும் மணியை தடுக்க முற்பட்ட போது அவர்களையும் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாக்கி உள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் இருந்தவர்களும் மணியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதனால் அலுவலக ஊழியர் உட்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் மதிகோண்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று மணியும், கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தன்னை தாக்கியதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

    தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிக்குள் புகுந்து தொழிலாளி ஒருவர் ஊழியர்களை கத்தியால் சரமாரியாக தாக்கிய சி.சி.டி.வி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பொது தேர்தலில் தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்றது.
    • தொழில் அதிபரான இவர் குஜராத்தை சேர்ந்தவர்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த பொது தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை வீழ்த்தி தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்றது.

    தொழிலாளர் கட்சி தலைவர் கீர் ஸ்டார்மர் புதிய பிரதமராக பதவி ஏற்றார். இந்த தேர்தலில் இது வரை இல்லாத வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 28 பேர் வெற்றி வாகை சூடினார்கள்.

    லீ செஸ்டர் கிழக்கு தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளி பெண்ணான ஷிவானி ராஜா (வயது 29) வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தொழிலாளர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் அகர்வால் தோல்வி அடைந்தார். இவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தான்.

    1987 -ம் ஆண்டு முதல் லீ செஸ்டர் கிழக்கு தொகுதி தொழிலாளர் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது. 37 ஆண்டுகளுக்கு பிறகு இதனை தகர்த்து ஷிவானி ராஜா முதல் முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். தொழில் அதிபரான இவர் குஜராத்தை சேர்ந்தவர்.

    இங்கிலாந்து பாராளுமன்றத்தில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா நடந்தது. அப்போது ஷிவானி ராஜா பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவி ஏற்றுக்கொண்டார். இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாராளுமன்றத்தில் எம்.பி.யாக பதவி ஏற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    • கைலாசா நாடு பற்றிய பரபரப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை.
    • நாட்டுக்கென தனி பாஸ்போர்ட், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றை அறிவித்தார்.

    புதுடெல்லி:

    சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் கைலாசா நாடு பற்றிய பரபரப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை.

    கடந்த 2019-ம் ஆண்டு நித்யானந்தா இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாடு சென்ற நிலையில் அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    மேலும் அந்த நாட்டுக்கென தனி பாஸ்போர்ட், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றை அறிவித்தார். அதைத்தொடர்ந்து கைலாசா சார்பில் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறி, இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலை தளங்களில் அவரது சிஷ்யைகள் பதிவிட்டனர்.

    அதோடு, கைலாசா நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்துள்ளதாக கூறியிருந்தனர்.

    இதைத்தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் கைலாசா பெண் பிரதிநிதிகள் பங்கேற்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கைலாசா சார்பில் பேசிய பெண் பிரதிநிதிகளின் பேச்சு நீக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை சார்பில் அறிவிக்கப்பட்டது. இல்லாத ஒரு நாட்டின் பெயரில் நித்யானந்தாவும், அவரது சிஷ்யைகளும் ஒரு பிம்பத்தை உருவாக்கி வருவதாக சமூக வலைதளங்களில் ஏராளமானோர் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்நிலையில் கைலாசா இருக்கும் இடத்தை வருகிற 21-ந்தேதி அறிவிக்க போவதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    அதில், கைலாசா திறக்கப்பட்டுள்ளது. வருகிற 21-ந்தேதி குருபூர்ணிமா நன்னாளில் கைலாசா இருக்கும் இடம் அறிவிக்கப்படும். உங்களை அன்போடு வரவேற்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

    மேலும் கைலாசா வாசியாக இப்போதே பதிவு செய்யுங்கள் என்று ஒரு ஆன்லைன் லிங்கும் குறிப்பிட்டுள்ளனர்.

    இதன் மூலம் கைலாசா எங்கே உள்ளது என்ற கேள்விக்கு 21-ந்தேதி விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • டாப்சி சமூக வலைதளங்களிலும் தீவிர ஆர்வம் கொண்டவர்.
    • அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

    ஆடுகளம், வந்தான் வென்றான். ஆரம்பம் உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் டாப்சி பன்னு. லாரன்ஸ் நடித்த முனி 3 படத்தில் பேயாக நடித்து மிரட்டினார்.

    தொடர்ந்து தெலுங்கு மொழியில் பல படங்களில் நடித்து வந்தார். ஷாருக்கானுடன் அவர் இணைந்து நடித்த 'டங்கி' என்ற படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் டென்மார்க் பேட்மின்டன் விளையாட்டு வீரர் மத்தியாஸ் போவை டாப்சி காதலித்து வந்தார். இவர்களது திருமணம் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி உதய்பூரில் நடந்தது.

    திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் டாப்சி சமூக வலைதளங்களிலும் தீவிர ஆர்வம் கொண்டவர். அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் டாப்சி.

    அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உச்சக்கட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டு என் உதடுகளும் உள்ளங்கால்களும் சிவந்திருக்கும் போது பச்சையாக என்னை நோக்கி வராதே என தலைப்பிட்டு படத்தை பகிர்ந்துள்ளார் டாப்சி.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமூக ஊடகங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.
    • கடந்த 2017-ம் ஆண்டு கடவுளை சந்தித்ததாக கூறியுள்ளார்.

    மெக்சிகோவில் உள்ள ஆலயத்தை சேர்ந்த போதகர் ஒருவர், சொர்க்கத்தில் உள்ள மனைகளை விற்பனை செய்து வருவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் பேசு பொருளாகி இருக்கிறது. அங்குள்ள ஒரு தேவாலயத்தை சேர்ந்த போதகர் கடந்த 2017-ம் ஆண்டு கடவுளை சந்தித்ததாக கூறியுள்ளார்.

    அப்போது சொர்க்கத்தில் உள்ள நிலங்களை விற்பனை செய்ய கடவுள் அவருக்கு அதிகாரம் அளித்ததாகவும், அவர் தெரிவித்த வீடியோ காட்சிகள் பரவி வருகிறது.

    இதன் அடிப்படையிலேயே அந்த தேவாலயத்தினர் சொர்க்கத்தில் நிலங்களை விற்பனை செய்து வருவதாகவும், இதன் மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் குவிந்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

    முதலில் இதை ஆலய நிர்வாகத்தினர் விளையாட்டாக தொடங்கியதாகவும், பின்னர் இதை சீரியசாக எடுத்துக்கொண்ட சிலர் மனைகளை வாங்கி குவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

    • கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் ஆர்டர் செய்தார்.
    • ஆர்டர் நிலை ‘இன்று வந்து சேர்ந்துவிடும்’ என்று காட்டி உள்ளது.

    ஆன்-லைன் தளங்களில் பொருட்களை ஆர்டர் செய்து வினியோகம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் ஆன்-லைன் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு விரைந்து சேவையை வழங்கி வருகின்றனர்.

    ஆனால் மும்பையை சேர்ந்த ஒரு வாலிபர் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டர் செய்த பொருள் தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மும்பையை சேர்ந்த ஆஹ்சன் கர்பாய் என்ற வாலிபர் பிளிப்கார்டில் ஒரு ஜோடி ஸ்பார்க்ஸ் ஸ்லிப்பர்களை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் ஆர்டர் செய்தார். ஆனால் அவை உடனடியாக வினியோகம் செய்யப்படவில்லை.

    பல ஆண்டுகளாக அவரது ஆர்டர் நிலை 'இன்று வந்து சேர்ந்துவிடும்' என்று காட்டி உள்ளது. ஆனால் அந்த நிலை மட்டும் மாறாமலேயே இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் திடீரென பிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து அவருக்கு கடந்த சில நாட்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், அவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டர் செய்த ரூ.485 மதிப்புள்ள ஒரு ஜோடி செருப்பு வினியோகத்திற்காக அனுப்பப்பட்டுள்ளதாக கூறி உள்ளனர்.

    அதன்படி அவருக்கு அந்த ஆர்டர் வினியோகிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தனது அனுபவத்தை அவர் எக்ஸ் தளத்தில் தனது ஆர்டரின் வரலாற்றுடன் கூடிய ஸ்கிரீன்ஷாட்டுகளை பகிர்ந்தார்.

    அவரது இந்த பதிவு வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

    • எக்ஸ் வலைதள பக்கத்தில் மின்கட்டணம் செலுத்தியது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.
    • மெழுகுவர்த்திகளுக்கு மாறி விடலாம் என்று நினைக்கிறேன்.

    அரியானா மாநிலத்தின் குருகுராம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்வீர்சிங். இவர் செயலி ஒன்றில் இணை நிறுவனராக பணியாற்றி வருகிறார். இவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் மின்கட்டணம் செலுத்தியது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.

    அதில், கடந்த 2 மாதங்களில் மொத்தமாக ரூ.45 ஆயிரத்து 491 ரூபாய் செலுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதோடு மின் கட்டணம் செலுத்தியதற்கான ஸ்கிரின்ஷாட்டையும் அந்த பதிவில் பகிர்ந்துள்ளார். அதனுடன், அதிக மின் கட்டண உயர்வு காரணமாக மெழுகுவர்த்திகளுக்கு மாறி விடலாம் என்று நினைக்கிறேன் என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

    அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பதிவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சில பயனர்கள் எப்படி இவ்வளவு கட்டணம் வந்தது என கேள்வி எழுப்பி உள்ளனர். சில பயனர்கள் தங்கள் வீடுகளுக்கும் அதிகப்படியான மின் கட்டணம் செலுத்துவது குறித்து பதிவிட்டு வருகின்றனர். 

    • சுடிதார் உடையில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுவது.
    • பல ஆயிரம் பேர் பாராட்டி விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    சுவிட்சர்லாந்து ஓட்டலில் இந்தியர்களை கவர்வதற்காக சுடிதார் உடையில் சேவை செய்யும் பெண்களின் வீடியோ வலைத்தளவாசிகளை கவர்ந்துள்ளது. ஜெர்மனியில் வசிக்கும் இந்திய தம்பதியான சினேகா-வீரு ஆகியோர் சுவிட்சர்லாந்து பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    அப்போது ஒரு இந்திய உணவகத்திற்கு சென்றபோது அங்கு பணியாற்றும் பெண்கள் அனைவரும் சிவப்பு நிற சுடிதார் உடையில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுவது அவர்களை வெகுவாக கவர்ந்தது. அதை வீடியோவாக பதிவு செய்து வலைத்தளத்தில் வெளியிட்டனர்.

    "வெளிநாட்டில் இந்திய உணவகங்களில் நுழைவது ஒரு கலாசார நேரமாக இருக்கும். சில ஓட்டல்களில் பணக்கார மரபுகள் மற்றும் பகட்டு அலங்காரங்கள் இந்தியாவை விட்டு வெளியேறியதாக தோன்ற வைக்கும்.

    ஆனால் சுவிட்சர்லாந்து இந்திய உணவகத்தில் பணிப்பெண்கள் இந்தியர்களாக (சுடிதார்உடையில்) இருந்தபோது...." என்று பதிவிட்டு உள்ளனர்... அந்த பதிவு லட்சக்கணக்கானவர்களின் பார்வையைப் பெற்றது. பல ஆயிரம் பேர் பாராட்டி விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    • புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
    • எனது வேடிக்கையான குறும்பு விளையாட்டு என்று பகிர்ந்துள்ளார்.

    ரஜினி நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

    இதையடுத்து தெலுங்கு, மலையாள மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருக்கிறார். அவரது தோற்றம் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்றது.

    சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்டவரான மாளவிகா மோகனன் அடிக்கடி தனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

    வெளிநாடுகளில் சுற்றுலா சென்ற படங்கள் மற்றும் சிலம்ப பயிற்சி எடுத்துக் கொண்ட படங்கள் உள்பட பல வீடியோக்களை வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன் தாய்லாந்தில் சைக்கிள் ரிக்சா முன்பு நின்று எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். புகைப்படத்துடன் எனது வேடிக்கையான குறும்பு விளையாட்டு என்று புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×