search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Airplane"

    • விமானத்தில் மொத்தம் 140 பயணிகள் இருந்தனர்.
    • விமானம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு அனைத்தையும் சீரானதும் டெல்லிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது.

    ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் இருந்து ஏர்இந்தியா விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. விமானம் புறப்படும் போது பயணி ஒருவரின் செல்போன் திடீரென வெடித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் புகை வந்ததை தொடர்ந்து விமானி விமானத்தை அவசரமாக தரை இறக்கினார்.

    அந்த விமானத்தில் மொத்தம் 140 பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் விமானம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு அனைத்தையும் சீரானதும் டெல்லிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது.

    அவசரமாக தரை இறக்கப்பட்ட அந்த விமானம் 1 மணி நேரத்துக்குள் உதய்ப்பூரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. கடந்த ஜூன் 21-ந் தேதி டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் டோராடூனுக்கு புறப்பட்ட உடனேயே இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரை இறக்கப்பட்டது. அதை சரி செய்த பிறகு விமானம் புறப்பட்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விபத்தில் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.
    • விமானத்தின் மீது மோதிய பறவை ஆண்டியன் காண்டன் வகை ராட்சத பறவையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    லாஸ்ரியோஸ்:

    ஈக்வாட்டார் நாட்டின் லாஸ் ரியோஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென அந்த விமானத்தின் மீது ராட்சத பறவை ஒன்று மோதியது.

    பறவையின் காலும், இறக்கையும் மோதியதில் விமானத்தின் காக்பிட் அறை சேதமடைந்தது. இதில் கண்ணாடிகள் சிதறி விழுந்ததில் விமானி படுகாயம் அடைந்தார். அவரது முகத்தில் ரத்தம் கொட்டியது. உடனே அவர் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. விமானம் தரை இறங்கியதும், விமானி ரத்தம் சொட்ட, சொட்ட விமானத்தில் இருந்து வெளியே வந்தார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.

    விமானத்தின் மீது மோதிய பறவை ஆண்டியன் காண்டன் வகை ராட்சத பறவையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் விமானி அதிர்ஷ்டசாலி என்றும், அதனால் தான் அவர் உயிருடன் மீண்டார் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

    தற்போது விமானத்தின் காக்பிட் பகுதியில் பறவை மோதி நிற்கும் காட்சி சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

    • வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள்.
    • போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    கொல்கத்தா:

    கத்தார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை 3.29 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 541 பயணிகள் இருந்தனர்.

    அப்போது ஒரு பயணி திடீரென எழுந்து விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூச்சலிட்டார். இதனால் மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்,

    இது பற்றி உடனடியாக மத்திய தொழில்பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டனர். பின்னர் வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள். ஆனால் இந்த சோதனையில் வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதை அறிந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இதையடுத்து போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் பக்கத்தில் இருந்த ஒருவர் தன்னிடம் இதுபற்றி கூறியதாக தெரிவித்தார்.

    உடனே போலீசார் அவரது தந்தையை விமானநிலையத்துக்கு வரவழைத்து விசாரித்த போது அந்த பயணிக்கு சற்று மனநலம் பாதிக்கப்ட்டு இருந்தது தெரியவந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாக தந்தை தெரிவித்தார்.

    அந்த பயணி செய்த களேபாரத்தால் லண்டன் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    • தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
    • வாலிபர் நசீமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், பெங்களூரு, சென்னை, மும்பை, டெல்லி, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் சிலர் தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் வரும் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து துபாய் விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த நசீம் என்ற பயணியின் பையை சோதனை செய்தனர். அப்போது அதில் பேஸ்ட் வடிவில் ஒரு கிலோ 565 கிராம் தங்கம் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.96 லட்சத்து 18 ஆயிரம் ஆகும். அதனை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், அதனை கொண்டு வந்த நசீமிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் சட்ட விரோதமாக தங்கத்தை கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாலிபர் நசீமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அசோக்கின் முழு முயற்சியால் அவர் சொந்தமாக விமானத்தை தயாரித்து முடித்தார்.
    • ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் அவர் சொந்த விமானத்தில் சுற்றுலா சென்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. தாமராக்ஷன். இவரது மகன் அசோக், மெக்கானிக்கல் என்ஜினீயர். இவரது மனைவி அபிலாஷா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    அசோக் படித்து முடித்ததும் இங்கிலாந்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கேயே குடும்பத்துடன் தங்கி இருந்தார். அப்போது விமானிக்கான பயிற்சி எடுத்து கொண்டார். பின்னர் பிரிட்டிஷ் சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் விமானம் ஓட்டும் லைசென்ஸ் பெற்றார்.

    அதன்பின்பு அசோக்குக்கு சொந்தமாக விமானம் தயாரிக்க ஆசை ஏற்பட்டது. கொரோனா லாக்-டவுன் காலத்தில் விமானம் தயாரிக்கும் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தார்.

    இதற்காக பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களின் கட்டுரைகளை படித்து விமானம் தயாரிப்பு பற்றி முழுமையாக தெரிந்து கொண்டார். தொடர்ந்து அதனை தயாரிக்கும் பணியை தொடங்கினார்.

    அசோக்கின் முழு முயற்சியால் அவர் சொந்தமாக விமானத்தை தயாரித்து முடித்தார். இதற்கு ஒரு கோடியே 26 லட்சம் செலவானது. விமான தயாரிப்பு முடிந்ததும் அதனை முறையான அனுமதி பெற்று ஓட்டி பார்த்தார். அதிலும் வெற்றி கிடைக்க அந்த விமானத்தில் வெளிநாடுகளுக்கு செல்ல தேவையான அனைத்து நடைமுறைகளையும் முடித்தார்.

    இதையடுத்து அந்த விமானத்திற்கு தனது மகள் தியாவின் பெயரை சூட்டினார். பின்னர் அசோக் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஓய்வு நாட்களில் உலகம் சுற்ற தொடங்கினார். சொந்த காரில் சுற்றுலா செல்வது போல சொந்த விமானத்தில் வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் பறக்க தொடங்கினார்.

    ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் அவர் சொந்த விமானத்தில் சுற்றுலா சென்றார். இதனை அவர் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டார்.

    பெரும் தொழில் அதிபர்கள் மட்டுமே சொந்தமாக விமானம் வைத்துள்ள நிலையில் கேரள முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரின் மகன் சொந்தமாக அவரே விமானம் தயாரித்து அதில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

    • பயணிகள் விமானத்திலிருந்து இறங்குவதற்கு முற்பட்டபோது விமானத்தின் கதவு திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
    • உடனடியாக தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு 10.10 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் 158 பயணிகளுடன் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அப்போது பயணிகள் விமானத்திலிருந்து இறங்குவதற்கு முற்பட்டபோது விமானத்தின் கதவு திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் 30 நிமிடம் பயணிகள் விமானத்திற்கு உள்ளேயே தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பின்னர் உடனடியாக தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு விமானத்தின் கதவை திறந்தனர்.

    இதையடுத்து நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் விமானத்தின் கதவு திறக்கப்பட்டது. இதனால் நிம்மதி பெருமூச்சுவிட்ட பயணிகள் கீழே இறங்கி புறப்பட்டு சென்றனர். மீண்டும் 178 பயணிகளுடன் அந்த விமானம் கோலாலம்பூருக்கு இரவு 10.30 மணிக்கு பதிலாக நள்ளிரவு 1.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.

    • கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
    • முககவசம் அணிவது நல்லது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    புதுடெல்லி :

    இந்தியாவில் விமான பயணங்களின்போது பயணிகள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இதுவரை நடைமுறையில் இருந்து வந்தது.

    ஆனால் அந்தக் கட்டுப்பாடு இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இனி விமான பயணங்களில் பயணிகள் முககவசம் அணிவது கட்டாயம் கிடையாது. இதையொட்டிய தகவலை விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகம் அனுப்பி உள்ளது.

    கொரோனா வைரஸ் பெருந்தொற்று மேலாண்மை தொடர்பான அரசின் கொள்கைக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் தருணத்திலும், முககவசம் அணிவது நல்லது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    ×