search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandrababu Naidu"

    • திருப்பதி லட்டு தொடர்பாக விரிவான விளக்கம் தர ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
    • எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியில் நடந்த டெண்டர் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.

    அமராவதி:

    திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமான லட்டு உலகப்புகழ் பெற்றதாகும்.

    300 ஆண்டுகள் பாரம்பரிய சிறப்பு வாய்ந்த திருப்பதி லட்டுகள் ஆலயத்தின் அருகில் உள்ள பிரத்யேகமான மடப்பள்ளியில் சுத்தமான நெய் மற்றும் பொருட்களால் தயாரித்து வழங்கப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 முதல் 15 கோடி லட்டுகள் வரை திருப்பதி ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பதி ஆலயத்தில் தயாரிக்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு சேர்ந்து இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை லட்டுகளில் கலந்து இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவே இந்த தகவலை வெளியிட்டு இருப்பதால் நாடு முழுவதும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    தரமற்ற நெய்யில் விலங்குகளின் கொழுப்பை கலந்து திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தன்மையை முந்தைய ஆட்சியாளர்களான ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி சீரழித்து விட்டதாக சந்திரபாபு நாயுடு முக்கிய குற்றச்சாட்டை வெளியிட்டு இருந்தார்.

    அதோடு திருப்பதி ஆலயத்தில் தயாரிக்கப்படும் லட்டுகளில் உள்ள கலவைகளை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டார். அதன்படி குஜராத் ஆய்வகத்தில் சோதனை நடத்தப்பட்டது. 5 கட்டங்களாக சோதனை நடந்தது.

    அப்போது திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது ஆந்திர அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. இதையடுத்து இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலை யிட்டுள்ளது.

    திருப்பதி லட்டு தொடர்பாக விரிவான விளக்கம் தர ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

    அதன் அடிப்படையில் ஆந்திர மாநில அரசு திருப்பதி லட்டுகள் தொடர்பாக விரிவான அறிக்கை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் இன்று (சனிக்கிழமை) காலை அமராவதியில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதில் ஆந்திர மாநில மந்திரிகள், அனைத்து துறை அதிகாரிகள் ஆகம வைதீக அமைப்பு நிர்வாகிகள் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நெய் கொள்முதல் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த தெலுங்கு தேசம் ஜனசேனா பா.ஜ.க. கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் தனி குழு ஏற்படுத்தப்படுகிறது.

    இந்த எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியில் நடந்த டெண்டர் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். இந்த குழுவினர் தலைமையில் அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசிடம் வழங்கப்படும். இந்த ஆலோசனைக்கு பிறகு திருப்பதி லட்டு சர்ச்சை குறித்த அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவிப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே சந்திரபாபு நாயுடு இந்த விவகாரத்தில் அடுத்தடுத்த அதிரடிகளை மேற்கொள்ள தொடங்கி இருக்கிறார். திருப்பதி ஆலய அர்ச்சகர்களிடம் தொடர்பு கொண்டு பேசினார். திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடமும் நேற்றும் இன்றும் ஆலோசனை நடத்தினார்.

    லட்டுகள் தயாரிக்க வாங்கப்படும் நெய் கொள்முதல் தொடர்பாக முழுமையான விளக்கமும், அறிக்கையும் தருமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். இதனால் திருப்பதி தேவஸ்தானத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஆட்சியில் எவ்வளவு டெண்டர் கோரப்பட்டு நெய் வாங்கப்பட்டது. எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டன. லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் மற்ற மூலப்பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்த முழு தகவல்களை புள்ளி விவரத்துடன் தெரிவிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

    ஏழுமலையான் கோவிலின் புனிதத்தை காக்கும் விஷயத்தில் ஆகம வைதிக தார்மீக அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

    • உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழுமலையானின் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
    • பேராசைக்கு ஏழுமலையான் சாமியும் விதிவிலக்கல்ல என தெரிய வந்துள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் திருப்பதி கோவில் லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தியதாக முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கூறினார்.

    அதற்கான வாய்ப்பே கிடையாது என முன்னாள் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாமிச கொழுப்பு, மீன் எண்ணெய், பாமாயில் ஆகியவை கலந்திருந்தது உண்மைதான் என்பதற்கான ஆய்வக ஆதாரத்தை தெலுங்கு தேசம் கட்சி நேற்று மாலை வெளியிட்டது.

    இதனால் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழுமலையானின் பக்தர்கள் வேதனை அடைந்தனர். ஏழுமலையான் கோவிலின் புனிதத் தன்மையை கெடுத்து விட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் விஜயவாடாவில் உள்ள தலைமைச் செயலகம் அருகே அண்ணா கேண்டினை முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்.

    ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியில் பிரசாதம் தயாரிப்பில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த செயல் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதத் தன்மைக்கு கேடு விளைவிப்பதாகும். கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது வரம்பு மீறிய தவறுகளை செய்துள்ளனர்.

    அவர்களின் பேராசைக்கு ஏழுமலையான் சாமியும் விதிவிலக்கல்ல என தெரிய வந்துள்ளது. திருப்பதி கோவிலின் புனித தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உண்மை எனில், முழு வீச்சில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளியை அடையாளம் காண வேண்டும்.
    • உள்நோக்கத்துடன் குற்றம்சாட்டப்படிருந்தால், லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் நம்பிக்கை மீதான அவதூறுக்காக மன்னிக்கமாட்டார்கள்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டுகளில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சிக் காலத்தில் நெய்க்குப் பதில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார். அதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், அரசியல் ஆதாயத்திற்காக சந்திரபாபு நாயுடு எந்த நிலைக்கும் செல்வார் என பதிலடி கொடுத்திருந்தது.

    அதேவேளையில் ஆய்வு முடிவில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் ஏழுமலையான் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் குற்றச்சாட்டுக்கு உடனடியாக தீர்வு எட்டப்படவில்லை என்றால், பாஜக-வின் பிரித்தாளும் சதி கொள்கைக்கு அனுமதிப்பது போன்றதாகிவிடும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கெர்ரா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி லட்டை அவமதிக்கும் வகையிலான இந்த குற்றச்சாட்டு உண்மை எனில், முழு வீச்சில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளியை அடையாளம் காண வேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அதேவேளையில் தவறாக அல்லது உள்நோக்கத்துடன் குற்றம்சாட்டப்படிருந்தால், லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் நம்பிக்கை மீதான புனிதத்தன்மையை களங்கப்படுத்தியதற்காக மன்னிக்கமாட்டார்கள்.

    அதுவரை தேர்தல் சீசனில் பிரித்தாளும் சதி கொள்கை அனுமதிக்கும் வகையில் பாஜக-விற்கு வசதியாக அமைந்திவிடும்.

    இவ்வாறு பவன் கெர்ரா தெரிவித்துள்ளார்.

    • திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டிறைச்ச கொழுப்பு இருப்பதாக ஆய்வில் தெரிவித்துள்ளது.
    • திருப்பதி லட்டுவின் தரம் முற்றிலுமாக கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.

    ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் அங்கு கொடுக்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாத்தியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக பேசிய சந்திரபாபு நாயுடு, "கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன்மோகனும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் வெட்கப்பட வேண்டும். திருமலையின் ஒவ்வொரு அம்சமும் ஜெகன் அரசால் இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. திருப்பதி லட்டுவின் தரம் முற்றிலுமாக கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக சுத்தமான நெய்யை பயன்படுத்த உத்தரவிட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.

    சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இதுப தொடர்பாக பேசிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை எம்.பி சுப்பா ரெட்டி, "திருப்பதியின் புனிதம் மற்றும் கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையை சேதப்படுத்தும் வகையில் சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார். திருமலை பிரசாதம் தொடர்பான அவரது கருத்து மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியது. எந்தவொரு நபரும் இது போன்ற வார்த்தைகளை பேசமாட்டார்கள். அல்லது குற்றச்சாட்டை உருவாக்கமாட்டார்கள்.

    அரசியல் ஆதாயத்திற்கு சந்திரபாபு நாயுடு எந்த அளவிற்கும் செல்வார் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில், நான், எனது குடும்பத்தினருடன் திருமலை பிரசாதம் குறித்து எல்லாம் வல்ல இறைவனிடம் சத்தியம் செய்ய தயாராக உள்ளோம். சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்துடன் இதைச் செய்ய தயாரா?" என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், திருப்பதி கோயில் பிரசாதம் லட்டு தயாரிப்புக்கான நெய்யில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்டதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    கால்நடை தீவனம் மற்றும் பால் மற்றும் பால் பொருட்களை சோதனை செய்வதில் கவனம் செலுத்தும் தனியார் ஆய்வகமான NDDB CALF திருப்பதி லட்டை ஆய்வு செய்தது. ஆய்வு அறிக்கையில், "திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யின் மாதிரிகளில் பாமாயில், மீன் எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கொழுப்பு உள்ளிட்ட கொழுப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

    • லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கிடைத்த தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
    • கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன்மோகனும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் வெட்கப்பட வேண்டும்.

    "திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் மிக புனிதமானது. முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் அங்கு கொடுக்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கிடைத்த தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

    கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன்மோகனும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் வெட்கப்பட வேண்டும். திருமலையின் ஒவ்வொரு அம்சமும் ஜெகன் அரசால் இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. திருப்பதி லட்டுவின் தரம் முற்றிலுமாக கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக சுத்தமான நெய்யை பயன்படுத்த உத்தரவிட்டோம்" ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு விமர்சித்திருந்தார்.

    இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மறுத்துள்ளது. சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு தொடர்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான ஒய்.வி. சுப்பா ரெட்டி பதில் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக ஒய்.வி. சுப்பா ரெட்டி கூறியதாவது:-

    சந்திரபாபு நாயுடு திருப்பதியின் புனிதம் மற்றும் கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையை மிகவும் மோசமான வகையில் சேதப்படுத்தியுள்ளார். திருமலை பிரசாதம் தொடர்பான அவரது கருத்து மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியது. எந்தவொரு நபரும் இது போன்ற வார்த்தைகளை பேசமாட்டார்கள். அல்லது குற்றச்சாட்டை உருவாக்கமாட்டார்கள்.

    அரசியல் ஆதாயத்திற்கு சந்திரபாபு நாயுடு எந்த அளவிற்கும் செல்வார் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில், நான், எனது குடும்பத்தினருடன் திருமலை பிரசாதம் குறித்து எல்லாம் வல்ல இறைவனிடம் சத்தியம் செய்ய தயாராக உள்ளோம். சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்துடன் இதைச் செய்ய தயாரா?.

    இவ்வாறு சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • ஆந்திர சட்டசபை உறுப்பினர்களுக்கான சிறப்புக் கூட்டம் மங்களகிரியில் நடந்தது.
    • அப்போது பேசிய சந்திரபாபு, திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டது கண்டு அதிர்ந்தேன் என்றார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது.

    இந்நிலையில், ஆந்திர சட்டசபை உறுப்பினர்களுக்கான சிறப்புக் கூட்டம் மங்களகிரியில் இன்று நடந்தது. இதில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பங்கேற்று கடந்த 100 நாட்களில் நிறைவேற்றிய திட்டங்கள், எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் பேசியதாவது:

    திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் மிக புனிதமானது. முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் அங்கு கொடுக்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கிடைத்த தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன்மோகனும், ஒய்எஸ்ஆர் காங்கிரசும் வெட்கப்பட வேண்டும்.

    திருமலையின் ஒவ்வொரு அம்சமும் ஜெகன் அரசால் இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. திருப்பதி லட்டுவின் தரம் முற்றிலுமாக கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக சுத்தமான நெய்யை பயன்படுத்த உத்தரவிட்டோம் என தெரிவித்தார்.

    சந்திரபாபு நாயுடு முன்வைத்த இந்தக் குற்றச்சாட்டு பக்தர்கள் மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்குத் தெலுங்கு திரைப் பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர்.
    • நடிகர் பிரபாஸ் தெலங்கானா- ஆந்திரா பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் மழையை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களும் குறிப்பாக விஜயவாடா கடுமையாக பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்குத் தெலுங்கு திரைப் பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் தனது சொந்த பணத்திலிருந்து ரூ.1 கோடியை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இதேபோல் நடிகர் பிரபாஸ் தெலங்கானா- ஆந்திரா பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.

    முன்னதாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர்கள் பொது நிவாரண நிதிக்கு நடிகர்கள் மகேஷ் பாபு, சிரஞ்சீவி, பாலய்யா, பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர். அல்லு அர்ஜுன் ஆகியோர் தலா ரூ.50 லட்சம் நிதியுதவி அளிப்பதாக தெரிவித்தனர்.

    ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்ற தெலுங்கு தேசம் வெற்றி பெட்ரா நிலையில் சாநிரபாபு நாயுடு முதலமைச்சர் ஆனார். அதே கூட்டணியில் இடம்பெற்ற ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வராக பணியேற்றது குறிப்பிடத்தக்கது.

    • விஜயவாடா நகரப் பகுதியில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
    • வெள்ளம் பாதித்த பகுதிகளை படகு மற்றும் JCB-யில் சென்று சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார்.

    ஆந்திரா, தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் வெள்ளக்காடாக மாறியது.

    விஜயவாடா நகரப் பகுதியில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் உணவு குடிநீர் மருந்து கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஹெலிகாப்டர் டிரோன்கள் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து தற்போது தண்ணீர் வடியத் தொடங்கி உள்ளது. இதனால் நிவாரண முகாம்களில் இருந்த பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

    விஜயவாடாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை படகு மற்றும் JCB-யில் சென்று சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார்.

    இந்நிலையில், விஜயவாடா மதுரா நகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார். அப்போது ரயில் தண்டவாளத்தின் அருகே உள்ள பாலத்தில் நின்று கொண்டிருந்த சமயத்தில் ரயில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆந்திரா மழை வெள்ளத்தில் அதிக அளவு பாதிக்கப்பட்டு உள்ளதால் மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். முதல் தவணை வெள்ள நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார். 

    • வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் உணவு குடிநீர் மருந்து கிடைக்காமல் அவதி.
    • ஹெலிகாப்டர் டிரோன்கள் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

    திருப்பதி:

    ஆந்திரா, தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக பெய்தபலத்த மழையால் வெள்ளக்காடாக மாறியது.

    விஜயவாடா நகரப் பகுதியில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் உணவு குடிநீர் மருந்து கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஹெலிகாப்டர் டிரோன்கள் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து தண்ணீர் வடியத் தொடங்கி உள்ளது.

    இதனால் நிவாரண முகாம்களில் இருந்த பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். வீடுகளுக்கு திரும்பிய மக்கள் தங்கள் வீடுகளில் இருந்த பொருட்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்து இருப்பதைக் கண்டு கண்ணீர் வடித்தனர்.

    வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்த கார் ஆட்டோ லாரி உள்ளிட்டவை 4 நாட்களாக தண்ணீரில் மூழ்கியதால் சேதம் அடைந்து உள்ளது.

    மேலும் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டு இருந்த பைக்குகள் மழை வெள்ளத்தில் அடித்துச் சென்று ஆங்காங்கே குவியல் குவியலாக காணப்படுகிறது.

    வீடு முழுவதும் சேறு படிந்து உள்ளதால் வீட்டை சுத்தம் செய்ய தண்ணீர் இல்லாமல் வீட்டிற்கு வெளியே குழந்தைகள் முதியவர்களுடன் காத்துக் கொண்டு உள்ளனர்.

    வீடுகளை சுத்தம் செய்வதற்காக விஜயவாடாவிற்கு 100 தீயணைப்பு வாகனங்களும் மற்ற மாவட்டங்களில் இருந்து நகராட்சி, மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் 400 பேரும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வீடுகளில் உள்ள சேற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மழை வெள்ளம் வடிந்த பகுதிகளில் சகதியில் பாதிப்பு குறைந்த நிலையில் மனித உடல்கள் கிடந்தன. அவற்றை தீயணைப்பு வீரர்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் ஆங்காங்கே ஆடு மாடுகள் செத்துக்கிடக்கின்றன. இதனால் விஜயவாடா நகரப் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

    கடந்த 4 நாட்களாக மனித உடல்கள் தண்ணீரில் இருந்ததால் அழுகி அடையாளம் காண முடியாமல் சிதைந்து கிடப்பதாக தெரிவித்தனர். இதனால் மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


    மழை வெள்ளம் குறித்து முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

    மழை வெள்ளத்தால் சுமார் 7 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடைசி நபர் வரை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான நிவாரணம் வழங்குவதே எனது அரசின் லட்சியம். வெள்ள நிவாரணம் வழங்கி வரும் அனைவருக்கும் நன்றி.

    ஆந்திரா மழை வெள்ளத்தில் அதிக அளவு பாதிக்கப்பட்டு உள்ளதால் மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். முதல் தவணை வெள்ள நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கி கடன்களை வங்கி அதிகாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அஜித் சிங் நகர் போன்ற சில இடங்கள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளன.
    • மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்து வருகிறது.

    இந்த மழை காரணமாக ஆந்திர மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. எனவே பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக புடமேரு மற்றும் கிருஷ்ணா ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    மாநிலத்தின் தலைநகரான அமராவதி நகரை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. புடமேரு ஆற்று வெள்ளமும், கிருஷ்ணா ஆற்று வெள்ளமும் விஜயவாடா நகரை சூழ்ந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகிறார்கள்.

    என்டிஆர், குண்டூர், கிருஷ்ணா, எலுரு, பல்நாடு, பாபட்லா மற்றும் பிரகாசம் ஆகிய மாவட்டங்கள் மிகவும் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளன. சுமார் 4½ லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள். மீட்கப்பட்டவர்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரெயில் தண்டவாளங்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் பாலங்களை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றதால் பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

     

    இந்நிலையில் ஆந்திர பிரதேசம் விஜயவாடாவில் பெய்த கனமழை மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், தனது அரசியல் வாழ்க்கையில் மாநிலத்தில் கண்ட மிகப்பெரிய பேரழிவு என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார். மேலும் அவர் கூறியதாவது:

    அஜித் சிங் நகர் போன்ற சில இடங்கள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளன. அப்பகுதிகளில் வெள்ள நீர் மெதுவாக வடிந்து வருகிறது.

    கிருஷ்ணா நதி மற்றும் புடமேரில் வெள்ள நீர் மெதுவாக குறைந்து வருவதாக கூறிய அவர், அடுத்த இரண்டு நாட்களில் நிலைமை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திர மாநிலத்தின் வடக்கு பகுதியில் கலிங்கப்பட்டினம் அருகே கரையை கடந்தாலும், என்டிஆர் மற்றும் குண்டூர் மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்துள்ளது.

    32 பிரிவுகளுக்கு 32 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும், வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள கிராமங்கள் மற்றும் வார்டுகளுக்கு 179 அதிகாரிகளும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நேற்று முதல் உணவு விநியோகத்திற்காக படகுகள், டிராக்டர்கள் மற்றும் வேன்கள் போன்ற அனைத்து போக்குவரத்து முறைகளும் பயன்படுத்தப்பட்டது. அணுக முடியாத இடங்களுக்கு உணவு பொட்டலங்களை கீழே போடுவதற்கு ஆறு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டது.

    மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ளச்சேதத்தை, தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    வெள்ள பாதிப்பு தொடர்பான அனைத்து அறிக்கைகளும் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்றும், இழப்பில் இருந்து மீள மாநிலத்திற்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    • குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை பெய்தது.
    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை JCB-யில் சென்று முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார்.

    வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை பெய்தது.

    இதனால் ஆந்திராவில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இன்று ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விஜயவாடா பகுதிகளை JCB-யில் சென்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார்.

    இந்நிலையில், விஜயவாடாவில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ட்ரோன் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த மழை வெள்ளம் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லக்கூடிய ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தில் இருந்து செல்லக்கூடிய 18 ரெயில்களை தெற்கு ரெயில்வே இன்று ரத்து செய்துள்ளது.

    • குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை பெய்தது.
    • கனமழையால் ஆந்திராவில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

    வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை பெய்தது.

    இதனால் ஆந்திராவில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அதிகாரிகளின் அறிவுறுத்தலை மீறி வெள்ளம் பாதித்த இடங்களுக்கு படகுகளில் சென்று சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார்.

    இந்நிலையில், இன்று ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விஜயவாடா பகுதிகளை JCB-யில் சென்று சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார்.

    இந்த மழை வெள்ளம் காரணமாக சென்னையில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லக்கூடிய ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தில் இருந்து செல்லக்கூடிய 18 ரெயில்களை தெற்கு ரெயில்வே இன்று ரத்து செய்துள்ளது.

    ×