என் மலர்
நீங்கள் தேடியது "Lightning"
- மாதேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான கூரை வீடு மீது மின்னல் தாக்கி வீடு முழுவதும் எரிந்து போனது.
- வீட்டின் உரிமையாளர்கள் அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் வேலை பார்த்து வந்ததால் உயிர் தப்பினார்கள்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள திருக்குன்றம் கிராமத்தில் நேற்று இடி மின்னலுடன் பெய்ந்த கனமழையால் காற்று கொட்டாய் பகுதியில் வசிக்கும் மாதேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான கூரை வீடு மீது மின்னல் தாக்கி வீடு முழுவதும் எரிந்து போனது . வீட்டின் உரிமையாளர்கள் அருகில் உள்ள நிலத்தில் விவசாயம் வேலை பார்த்து வந்ததால் உயிர் தப்பினார்கள். இந்த தீ விபத்தில் ஒரு லட்சம் பணம் 4 பவுன் நகை ,நிலத்தின் பத்திரம் மோட்டார் சைக்கிள், சைக்கிள், வெங்காய மூட்டைகள் அனைத்தும் எரிந்து சேதமானது. இதன் மதிப்பு2 லட்சத்திற்கு மேல் எனக் கூறப்படுகிறது. இன்று காலை சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ. உதய சூரியன் எரிந்து போன வீட்டை நேரில் பார்வையிட்டு வீட்டின் உரிமையாளர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களுக்கு அரசு மூலம் புதிய வீடு கட்டித் தருவதாக உறுதி அளித்தார். பின்னர் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணை சேர்மன் அன்புமணி மாறன் ,தாசில்தார் இந்திரா, சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் தென்னரசி பாண்டியன் ,துணைத் தலைவர் தன பாலகிருஷ்ணன், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள்மொழி ஆகியோர் உடன் இருந்தனர்.
- தீ வேகமாக பரவியதால் உடனடியாக செவ்வாய்ப் பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
- அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.
சேலம்:
சேலம் எருமாபாளையம் ராமானுஜர் கோவில் செல்லும் வழியில் ஜெயகோபால் என்பவருக்கு சொந்தமான காட்டன்மில் உள்ளது. இந்த மில்லில் பஞ்சு மற்றும் நூல் குவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்று இரவு சேலத்தில் தொடர் மழை பெய்தபோது மின்னல் மற்றும் பயங்கர சத்தத்துடன் இடி இடித்தது. அப்போது காட்டன் மில் மொட்டை மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஏ.சி. அவுட்டர் மிஷின் மீது மின்னல் தாக்கியதில், அதில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு, மில்லில் உள்பகுதியில் இருந்த பால்சீலிங் தீப்பி டித்தது. இந்த தீ குபு, குபுவென எரிய தொடங்கியது. இதனால் ஆலை முழுவதும் கரும்புகை மூட்டம் நிலவியது.
இதை பார்த்த ஊழியர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் முடியவில்லை. தீ வேகமாக பரவியதால் உடனடியாக செவ்வாய்ப் பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
உதவி மாவட்ட அதிகாரி சிவகுமார், தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்ட காரணத்தினால், தீ ஆலையில் உள்ள பஞ்சு மற்றும் நூல்களில் பரவாமல் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
- இரவு 7 மணி அளவில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
- பூதலூரில் அதிகபட்சமாக 102.60 மி.மீ. மழை பதிவானது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் சுட்டெரித்து வந்தது.
பகல் முழுவதும் அடிக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் நீடித்தது.
இந்த நிலையில் தஞ்சையில் நேற்று பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. மாலையில் வானத்தில் கரு மேகங்கள் திரண்டு குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது.
7 மணி அளவில் இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது.
ஆரம்பத்தில் லேசாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக மாறியது.
தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டியது.
தஞ்சை அருகே பூதலூர் ,திருக்காட்டுப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
மாவட்டத்தில் பூதலூரில் அதிகபட்சமாக 102.60 மி.மீ. மழை பதிவானது.
இதேபோல் வல்லம், குருங்குளம், ஒரத்தநாடு, கும்பகோணம், திருவிடை மருதூர், பட்டுகோட்டை, அதிராம்பட்டினம் , மதுக்கூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடைவிடாமல் மழை பெய்தது.
ஒரே நாளில் மாவட்டத்தில் 517.40 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது.
இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு:-
பூதலூர் -102.60, திருக்காட்டுப்பள்ளி -69.20, நெய்வாசல் தென்பாதி-39.20, கும்பகோணம் -35.60, திருவிடைமருதூர் -33.60, குருங்குளம் -30.60, வல்லம் -23, தஞ்சாவூர் -19.
- 11 கோவில்களில் இருந்து சுவாமிகள் சிறப்பு அபிஷேகத்திற்கு பின்னர் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கில் எழுந்தருளினர்.
- தஞ்சையில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் முத்துப்பல்லக்கு வீதி உலா நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான முத்து பல்லக்கு திருவிழா நேற்று தொடங்கியது.
தஞ்சை சின்ன அரிசிக்காரத்தெருவில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் இருந்து விநாயகர், முருகன், மானம்புச்சாவடி விஜயமண்டப தெருவில் உள்ள ஜோதி விநாயகர் கோவிலில் இருந்து விநாயகர், முருகப்பெரு மான், குறிச்சி தெருவில் உள்ள முருகன், மேல அலங்கம் சுப்ரமணிய சாமி கோவிலில் உள்ள முருகர், கீழவாசல் வெள்ளை விநாயகர், உஜ்ஜையினி காளி கோவிலில் இருந்து கல்யாண கணபதி, தெற்கு ராஜ வீதி கமலரத்தின விநாயகர், காமராஜர் காய்கறி மார்க்கெட் செல்வ விநாயகர், வடக்கு வாசல் வட பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து முருகர், விநாயகர், மேல வெளி ரெட்டிப்பாளையம் சாலை வெற்றி முருகன் உள்பட 11 கோவில்களில் இருந்து சுவாமிகள் சிறப்பு அபிஷேகத்திற்கு பின்னர் அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்கில் எழுந்தருளினர்.பல்லக்குகள் பூக்களாலும், பல வண்ண காகிதங்களாலும், மின் விளக்குகளாலும் கலைநயத்துடன் வடிவ மைக்கப்பட்டு இருந்தன.
பல்லக்குகள் அனைத்தும் தெற்கு வீதி, கீழவீதி ,மேல வீதி, வடக்கு வீதி ஆகிய 4 ராஜ வீதிகளிலும் மேள தாளங்கள் முழங்க வலம் வந்தன.
அப்போது தஞ்சையில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது.
இருந்தாலும் மழையையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முத்து பல்லுக்கு வீதி உலாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இரவில் தொடங்கிய வீதி உலா விடிய விடிய இன்று காலை வரை நடைபெற்றது.
வீதி உலா முடிந்த பின்னர் மீண்டும் பல்லக்குகளில் இருந்து
சுவாமிகள் தங்களது கோவில்களுக்கு சென்ற டைந்தன.
- மதுரை திருப்பரங்குன்றம் அருகே மின்னல் தாக்கி இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.
- இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
திருப்பரங்குன்றம் அருகேயுள்ள கொம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி தேவிகா(வயது38). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
மதுரையில் நேற்று மாலை வெப்ப சலனம் காரணமாக இடி, மின்னலுடன் மழை பெய்தது. கொம்பாடி பகுதியில் மழை பெய்தபோது கண்மாயில் துணி துவைத்துக் கொண்டிருந்த தேவிகா அவசர அவசரமாக வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது இடி தாக்கியதில் தேவிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெருங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராமநாதபுரம் எஸ்.பி.பட்டிணத்தில் மின்னொளி கபாடி போட்டி நடந்தது.
- 2-ம் பரிசான ரூ. 30 ஆயிரம் சுழற்கோப்பையை சென்னை புதுக்கல்லூரி அணி பெற்றது.
கீழக்கரை
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டிணத் தில் 12-ம் ஆண்டு ஃபிரண் ட்ஸ் ஸ்டார் அணியினர் நடத்திய மின்னொளியில் கபாடி போட்டி நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ. 35 ஆயிரமும் சுழற்கோப்பையையும் எஸ்.பி. பட்டிணம் வி.ஆர். எஸ். ஒய் பிரதர்ஸ் அணி பெற்றது.
இரண்டாம் பரிசான ரூ. 30 ஆயிரம் சுழற்கோப்பையை சென்னை புதுக்கல்லூரி அணி பெற்றது. மூன்றாம் பரிசு ரூ.25 ஆயிரம் சுழற் கோப்பையை சோழகன் பேட்டை அணி பெற்றது.
நான்காம் பரிசான ரூ.20 ஆயிரம் சுழற்கோப்பையை எஸ்.பி.பட்டிணம் ஸ்பார் டன்ஸ் அணி பெற்றது.
ஐந்தாம் பரிசு ரூ.15 ஆயிரம் சுழற்கோப்பையை எஸ்.பி.பட்டிணம் லெஜண்ட் அணி பெற்றது.
வெற்றி பெற்ற அணி வீரர்களை த.மு.மு.க. மாநில செயலாளர் சாதிக்பாட்சா, மாவட்ட துணை செயலாளர் நிஸார் அஹமது, இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பாக்கி, தொண்டி இந்து தர்ம பரிபாலன சபை தலைவர் ராஜ சேகர், த.மு.மு.க. ஒன்றிய செயலாளர் ஜின்னா இளையோர் அணி புஹாரி தமிம், ம.ம.க. செயலாளர் பரக்கத் அலி ஆகியோர் வாழ்த்தினர்.
- பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது அன்ஷிகா (11) உயிரிழந்தார்.
- ரேபரேலியில், திஹ், படோகர் மற்றும் மில் பகுதி காவல் நிலையப் பகுதிகளில் மூன்று பேர் இறந்தனர்.
உத்தரபிரதேசத்தின் புடான், எட்டா மற்றும் ரேபரேலி மாவட்டங்களில் நேற்று மின்னல் தாக்கியதில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
விவசாயிகள் பப்லு (30) மற்றும் வர்ஜீத் யாதவ் (32) ஆகியோர் உஷைத் பஜாரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பலத்த மழையுடன் அப்பகுதியில் மின்னல் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உஷைத் நகரில் நடந்த மற்றொரு மின்னல் சம்பவத்தில், பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது அன்ஷிகா (11) உயிரிழந்தார். மூன்று உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ரேபரேலியில், திஹ், படோகர் மற்றும் மில் பகுதி காவல் நிலையப் பகுதிகளில் மூன்று பேர் இறந்தனர். மேலும், மூன்று பேர் மின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்தனர்.
திஹ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெண்டலால் கிராமத்திற்கு அருகில் உள்ள வயல்வெளியில் மோஹித் பால் (14) என்பவர் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மில் பகுதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூர்வா கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஜமுனா பிரசாத் (38) என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
ரேபரேலியின் சராய் டாமோ கிராமத்தில் படோகர் காவல் நிலையப் பகுதியில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், ராமகாந்தி (38) மின்னல் தாக்கி இறந்தார். மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் மேலும் மூவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
- இறந்தோர் குடும்பத்திற்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்தார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பீகாரில் மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழந்தனர்.
ரோடாஸ் மாவட்டத்தில் 5 பேர், அவுரங்காபாத், பக்சர் மாவட்டங்களில் தலா 2 பேர் உயிரிழந்தனர். அர்வால், கிஷன்கஞ்ச், கைமூர், வைஷாலி, ஷிவன், பாட்னா, அராரியா, ஷரண் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் பலியாகினர்.
மின்னல் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். அத்துடன் தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், இடி, மின்னல், மழை போன்ற இயற்கை சீற்றங்களின்போது பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
- ஒடிசாவின் 6 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது.
- அடுத்த நான்கு நாட்களில் மாநிலத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு.
ஒடிசாவின் இரட்டை நகரங்களான புவனேஸ்வர் மற்றும் கட்டாக் உட்பட ஒடிசாவின் கடலோரப் பகுதியில் மின்னல் தாக்குதலுடன் கனமழை பெய்துள்ளது. மதியம் 90 நிமிட இடைவெளியில் முறையே 126 மிமீ மற்றும் 95.8 மிமீ மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், ஒடிசாவின் 6 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்ததில் மின்னல் தாக்கியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில், குர்தா மாவட்டத்தில் 4 பேரும், போலங்கிரில் 2 பேரும், அங்குல், பௌத், ஜகத்சிங்பூர் மற்றும் தேன்கனல் ஆகிய இடங்களில் தலா ஒருவர் உயிரிழந்ததாக சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதைத்தவிர, குர்தாவில் 3 பேர் மின்னல் தாக்கியதில் காயமடைந்தனர்.
அடுத்த நான்கு நாட்களில் மாநிலத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கடலூர்:
பண்ருட்டி தனபால் செட்டி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). இவர், பண்ருட்டி காந்தி ரோட்டில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவர் பண்ருட்டியை அடுத்த பணிகன்குப்பம் பகுதியில் வரும்போது மழை பெய்தது. இதனால் மரத்தடியில் நின்று அவரது நண்பர்களுடன் செல் போன் மூலம் வீடி யோ காலில் பேசினார். அப்போது பயங்கர சத்தத்து டன் இடி இடித்து மின்னல் மின்னியது.இதில் செந்தில்குமார் மீது மின்னல் தாக்கியது. இதனால் அவர் படுகாயம் அடைந்தார்.
அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகசேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் கொண்டு செல்லப்பட் டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.இந்ததிடீர் மழையால் பண்ருட்டி 4 முனை சந்திப்பு, காந்தி ரோடு, ராஜாஜி சாலை, கடலூர் ரோடு ஆகிய இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள்ஊர்ந்து சென்றனர். இந்ததிடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
- இரவு முழுவதும் கடலில் தங்கி மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
- திருமுல்லைவாசல் மீனவர்கள் படகுகளில் கடலுக்குள் சென்று தஷ்விந்தை தேடி வருகின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 41).
இவரது தம்பி செல்வமணி.(40), மகன் தஷ்விந்த் (20). இவர்கள் 3 பேரும் தமிழ்மணிக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று மாலை திருமுல்லைவாசல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இரவு முழுவதும் கடலில் தங்கி மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது திடீரென இடி மின்னல் படகை தாக்கியது. இதில் படகை இயக்கிய தஷ்விந்த் நிலை தடுமாறி கடலில் விழுந்து மாயமாகியுள்ளார்.
இதுகுறித்து மற்ற இருவரும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து திருமுல்லைவாசல் மீனவர்கள் படகுகளில் கடலுக்குள் சென்று தஷ்விந்தை தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து கடலோர காவல் குழும போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- அமுதமலர் நேற்று முன்தினம் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
- அமுதமலர் குடும்பத்தினருக்கு அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல் கூறி, ரூ.4 லட்சத்திற்கான காசோலை மற்றும் சொந்த நிதியும் வழங்கினார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள கே.துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் மனைவி அமுதமலர் (வயது 35). இவர் நேற்று முன்தினம் விவசாய பணிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பி கொண்டிருக்கும்போது திடீரென மின்னல் தாக்கியதில் அமுதமலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் மின்னல் தாக்கி உயிரிழந்த அமுதமலர் குடும்பத்தினருக்கு அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல் கூறி, மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலை மற்றும் சொந்த நிதியும் வழங்கினார். அப்போது மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கோவில்பட்டி ஆர்.டி.ஓ. ஜோன் கிறிஸ்டிபாய், தாசில்தார் ராமகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
அப்போது, மின்னல் தாக்கி உயிரிழந்த அமுதமலரின் உறவினர்களிடம் குழந்தைகளை பார்த்து கொள்ளும்படி அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல் கூறினார்.
அப்போது புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிக்குமார், வெங்கடாசலம், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன் ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், மாவட்ட பிரதிநிதி இராமலிங்கம், ஒன்றிய பிரதிநிதி செல்வகுமார், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் மாரீஸ்வரி, புதூர் வாசுதேவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.