search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rohit sharma"

    • தென் ஆப்பிரிக்கா அணிக்கு 30 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது.
    • அந்த நேரத்தில் ரிஷப் பண்ட் தனது புத்திசாலிதனத்தை உபயோகித்து ஆட்டத்தை சிறிது நேரம் நிறுத்தினார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி உலகக் கோப்பையை தட்டிச் சென்றது. 2008-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

    இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பும்ரா, சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ரோகித் சர்மா என பலரும் முக்கிய காரணமாக இருந்தனர். அந்த வகையில் இறுதிப்போட்டியில் ரிஷப் பண்ட்டின் மாஸ்டர் பிளான் இந்திய வெற்றி பெற முக்கிய பங்காக இருந்தது என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தென் ஆப்பிரிக்கா அணிக்கு 30 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் ரிஷப் பண்ட் தனது புத்திசாலிதனத்தை உபயோகித்து ஆட்டத்தை சிறிது நேரம் நிறுத்தினார். காலில் காயம் ஏற்பட்டதாக கூறி அதில் டேப் போடப்பட்டது. ஆட்டம் அதிரடியாக சென்ற நிலையில் இந்த சம்பவத்தால் ஆட்டம் மெதுவாகியது.

    சிறிது நேரம் கழித்து ஆட்டம் தொடங்கியதால் முதல் பந்திலேயே கிளாசன் அவுட் ஆனார். அதனால் தென் ஆப்பிரிக்கா அணிக்கு பதட்டம் ஏற்பட்டது. இந்திய அணி வீரர்கள் எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்தனர். இதனால் ஆட்டம் எங்கள் பக்கம் திரும்பியது. ரிஷப் பண்ட்டின் புத்திசாலித்தனம் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.

    இவ்வாறு ரோகித் கூறினார்.

    • டோனி, விராட் கோலி போன்று வேறு எந்த இந்திய கேப்டனும் செய்யாதை ரோகித்சர்மா செய்து காட்டியுள்ளார்.
    • ரோகித் சர்மா முதல் பந்தில் இருந்தே வெற்றிக்காக அதிரடியாக விளையாட வேண்டும் என்ற அணுகுமுறையை பின்பற்றுகிறார்.

    புதுடெல்லி:

    கான்பூர் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் மழையால் சில மணி நேரங்களே நடந்தது. 2-வது மற்றும் 3-வது நாள் போட்டி மழையால் ரத்தானது. இதனால் இந்த டெஸ்ட் 'டிரா'வை நோக்கி செல்வது தெளிவாக தெரிந்தது.

    ஆனால் நேற்றைய 4-வது நாளில் இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20 ஓவர் போட்டியை போல ஆடியது. கடைசி நாளில் முடிவு ஏற்பட்டு விட வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடியது.

    கேப்டன் ரோகித்சர்மா 2 சிக்சர்களுடன் 2-வது ஓவரில் அதிரடியை வெளிப்படுத்தினார். அவரும் ஜெய்ஷ்வாலும் 23 பந்தில் 55 ரன் தொடக்க விக்கெட்டும் எடுத்தனர். ரோகித் சர்மா 11 பந்தில் 3 சிக்சருடன் 23 ரன் எடுத்தார். ஜெய்ஷ்வால், கே.எல். ராகுல் ஆகியோரும் மிகவும் அதிரடியாக விளையாடினார்கள். டெஸ்ட் போட்டிக்கு உயிர் கொடுத்த இந்த அதிரடி ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது.

    ரோகித்சர்மாவின் இந்த அணுகுமுறையை முன்னாள் கிரிக்கெட் கீப்பரும், முன்னாள் தேர்வாளருமான சபாகரீம் பாராட்டி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டோனி, விராட் கோலி போன்று வேறு எந்த இந்திய கேப்டனும் செய்யாதை ரோகித்சர்மா செய்து காட்டியுள்ளார். அவரது அணுகுமுறை பாராட்டத்தக்கது. அவரது குணாதியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் உலகக்கோப்பையை தொடர்ந்து அவர் டெஸ்டிலும் தற்போது மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை நாம் பார்க்கிறோம். இதுதான் ரோகித் சர்மாவின் தலைமையில் ஏற்பட்டுள்ள புத்துணர்ச்சியான விஷயமாகும்.

    கடந்த காலத்தில் இருந்த கேப்டன்கள் நல்ல நிலையில் இருக்கும்போது தான் வெற்றியை நோக்கி செல்வோம் என்ற மனநிலையை கொண்டிருந்தனர். முதல் 6 ஓவர்கள் நேரம் எடுத்து பின்னர் அதிரடி காட்டுவோம் என்ற அணுகு முறையை பின்பற்றினர். ஆனால் ரோகித் சர்மா முதல் பந்தில் இருந்தே வெற்றிக்காக அதிரடியாக விளையாட வேண்டும் என்ற அணுகுமுறையை பின்பற்றுகிறார்.

    இவ்வாறு சபாகரீம் கூறியுள்ளார்.

    • பந்து எப்படி வரும் என்று தெரியாத பிட்ச்சில் முதல் பந்திலேயே அவர் மிகப்பெரிய சிக்சரை பறக்க விட்டார்.
    • அப்படி விளையாடும் போது எப்படிப்பட்ட எதிரணியும் ஒரு கால் பின்னே வைக்கும்.

    கான்பூரில் நடைபெற்று வரும் இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது மொமினுல் ஹக்கின் அபாரமான சதத்தின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 233 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ரோகித் சர்மா 23, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 72, விராட் கோலி 47, கேஎல் ராகுல் 68 ரன்களைச் சேர்க்க, 34.4 ஓவர்களில் 285 ரன்களைக் குவித்ததுடன் இன்னிங்சையும் டிக்ளர் செய்தது. வங்கதேச அணி தரப்பில் மெஹிதி ஹசன், ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    அதன்பின் 52 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்துள்ள வங்கதேச அணியானது நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் சாத்மான் இஸ்லாம் 7 ரன்களுடனும், மொமினுல் ஹக் ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்நிலையில் ரோகித் போன்று ஒரு லீடர் தேவை என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கவுதம் கம்பீர் கண்ணோட்டத்திலும் நாங்கள் முடிந்தளவுக்கு போட்டியை வேகமாக முன்னோக்கி எடுத்துச் செல்ல முடிவெடுத்தோம். அதை முன்னோக்கி நின்று செய்ய உங்களுக்கு ஒரு லீடர் தேவை. அதை பலமுறை செய்தது போல் இன்றும் ரோகித் செய்தார். குறிப்பாக பந்து எப்படி வரும் என்று தெரியாத பிட்ச்சில் முதல் பந்திலேயே அவர் மிகப்பெரிய சிக்சரை பறக்க விட்டார்.

    அப்படி விளையாடும் போது எப்படிப்பட்ட எதிரணியும் ஒரு கால் பின்னே வைக்கும். எனவே எங்களுடைய கேப்டன் முன்னோக்கி அணியை எடுத்துச் சென்றதைப் பார்த்தது நன்றாக இருந்தது. அவரின் அதிரடி பேட்டிங் அற்புதம். வங்கதேசம் இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எப்போதும் வெற்றியை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்பது எங்களுடைய திட்டத்தின் ஒரு அங்கமாகவே இருக்கிறது.

    இவ்வாறு மோர்கல் கூறினார்.

    • இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக 50, 100, 150, 200, 250 ரன்களை கடந்து சாதனை படைத்தது.
    • ஒரே ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.

    இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) துவங்கியது இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் நாளிலேயே மழை காரணமாக போட்டி தடைப்பட்ட நிலையில், வங்கதேசம் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை எடுத்திருந்தது.

    இதைத் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் நாள் ஆட்டங்கள் மழை, ஆடுகளம் ஒத்துழைக்காத காரணங்களால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டன. இந்த நிலையில், இன்று காலை போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் துவங்கியது. இன்றைய ஆட்டம் துவங்கியது முதலே இந்திய வீரர்கள் விக்கெட் வீழ்த்துவதில் கவனம் செலுத்தினர்.

    இதன் காரணமாக வங்கதேசம் அணி முதல் இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக 50, 100, 150, 200, 250 ரன்களை கடந்து சாதனை படைத்தது.

    இதைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆக இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்களை அடித்த போது, கேப்டன் ரோகித் சர்மா டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இந்திய அணி 52 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் 2 ஆவது இன்னிங்சில் களமிறங்கிய வங்கதேச அணி 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 2 விக்கெட்டுகளை அஷ்வின் கைப்பற்றினார்.

    இப்போட்டியில் இந்திய அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.

    1. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இந்தியா 3 ஓவரில் 51 ரன்களை குவித்தது. இதற்கு முன்பு இந்தாண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 4.2 ஓவரில் 50 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

    2. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இந்தியா 10.1 ஓவரில் 103 ரன்களை குவித்தது. கடந்தாண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 12.2 ஓவரில் 100 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

    3. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இந்தியா 18.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 155 ரன்கள் குவித்தது. கடந்தாண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 21.1 ஓவரில் 150 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

    4. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இந்தியா 24.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்தது. இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டு சிட்னியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் 28.1 ஓவரில் 200 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

    5. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 250 ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. 30.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் குவித்தது. 2022ல் பாகிஸ்தானுக்கு எதிரான ராவல்பிண்டி டெஸ்டில் இங்கிலாந்து அணி 34 ஓவரில் 250 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

    6. சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், குமார் சங்கக்காராவிற்கு அடுத்தபடியாக சர்வதேச கிரிக்கெட்டில் 27000 ரன்களை கடந்த நான்காவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27000 ரன்களை கடந்த சச்சின் டெண்டுல்கர் (623 இன்னிங்ஸ்) சாதனையை விராட் கோலி (594 இன்னிங்ஸ்) முறியடித்தார்.

    7. டெஸ்ட் போட்டியில் தான் சந்தித்த முதல் 2 பந்துகளில் சிக்ஸர் அடித்த 4 ஆவது வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். 1948 இல் ஃபோஃபி வில்லியம்ஸ், 2013 இல் சச்சின் டெண்டுல்கர் மற்றும் 2019 இல் உமேஷ் யாதவ் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

    8. டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 7 ஆவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ரவீந்திர ஜடேஜா பெற்றார். அனில் கும்ப்ளே (619), அஸ்வின் (524), கபில்தேவ் (434), ஹர்பஜன் சிங் (417), இஷாந்த் சர்மா (311), ஜாகீர் கான் (311) ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

    9. 2024 ஆம் ஆண்டில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் 96 சிக்ஸர்கள் அடித்துள்ளது. இதன்மூலம் ஒரே ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன்பு 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி 89 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

    • லிட்டன் தாஸ் 30 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • இவரது விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார்.

    கான்பூர்:

    இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதலில் விளையாடிய வங்காளதேசம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்து இருந்தது. மொமினுல் ஹக் 40 ரன்னும், முஷ்பிகுர் ரகீம் 6 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    மழையால் முதல் நாள் ஆட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. 90 ஓவர்களில் 35 ஓவர் மட்டுமே வீச முடிந்தது. 2-வது நாள் போட்டியும், நேற்றைய 3-வது நாள் ஆட்டமும் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. நேற்று ஆடுகளத்தின் வெளிப்புற பகுதி ஈரப்பதமாக இருந்தது.

    இன்றைய 4-வது நாள் ஆட்டம் மழை எதுவும் இல்லாததால் போட்டி திட்டமிட்டபடி காலை 9.30 மணிக்கு தொடங்கியது. மொமினுல் ஹக்கும், முஷ்பி குர் ரகீமும் தொடர்ந்து ஆடினார்கள். ஸ்கோர் 112 ஆக இருந்த போது இந்த ஜோடியை பும்ரா பிரித்தார். முஷ்பிகுர் ரகீம் 11 ரன்னில் அவரது பந்தில் போல்டு ஆனார்.

    இதனையடுத்து மொமினுல் -லிட்டன் தாஸ் பொறுமையாக விளையாடினார்கள். விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர். அப்போது ரோகித் சர்மா லிட்டன் தாஸை அவுட் செய்ய ஒரு புது யுக்தியை கையில் எடுத்தார். அந்த வகையில் லிட்டன் தாஸ் அருகில் விராட் கோலியை பீல்டிங் நிற்க சொன்னார். இதனால் தடுப்பாட்டாம் ஆடுவதில் சிரமமாக இருந்தது.

    உடனே அடுத்தை பந்தை இறங்கி வந்து தாஸ் அடித்தார். இதை லாங் ஆப் திசையில் இருந்த ரோகித் சர்மா ஒற்றை கையில் பிடித்து அசத்தினார். இதனை பார்த்த சிராஜ், விராட், கில் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை கட்டியணைத்து பாராட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்திய அணியில் எந்தவித மாற்றமும் இல்லை.
    • 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி அதே அணியுடன் களமிறங்குகிறது.



    • கங்குலிக்கு திறமையான வீரர்கள் யார் என தெரியும்.
    • டோனி கேப்டனாக இருந்தபோது எங்களிடம் கேரி கிர்ஸ்டன் என்ற சிறந்த பயிற்சியாளர் இருந்தார்.

    கிளப் ப்ரேரி ஃபயர் யூடியூப் சேனலில் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் மைக்கேல் வாகனுடன் யுவராஜ் சிங் கலந்துரையாடினார். அப்போது தனக்கு பிடித்த இந்தியாவின் சிறந்த கேப்டன் யார் என்பதை யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். அந்த வகையில் சவுரவ் கங்குலி, டோனி, ராகுல் டிராவிட், கும்ப்ளே ஆகியோரில் இருந்து தனக்குப் பிடித்த கேப்டனை யுவி தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி சௌரவ் கங்குலி மற்றும் டோனியின் தலைமையின் கீழ் நான் அதிகம் விளையாடினேன். சவுரவ் இருந்த நேரத்தில் நான் அணிக்கு வந்தேன். கங்குலியின் கேப்டன்சியின் நல்ல விஷயம் என்னவென்றால், அந்த நேரத்தில் கங்குலி எனக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கினார்.

    கங்குலி எனக்கு, சேவாக் மற்றும் பஜ்ஜிக்கு ஆகியோருக்கு பல வாய்ப்புகளை வழங்கி தொடர்ந்து போட்டிகளில் களமிறக்கினார், இதனால் எங்களுக்கு நம்பிக்கை தொடர்ந்து வளர்ந்தது. மேலும் ஜாகீர் கானையும் அவர் ஊக்குவித்தார். கங்குலிக்கு திறமையான வீரர்கள் யார் என தெரியும்.

    கங்குலிக்கு பிறகு ராகுல் சில காலம் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். அதன் பிறகு டோனி கேப்டனானார்.

    டோனி கேப்டனாக இருந்தபோது எங்களிடம் ஒரு சிறந்த பயிற்சியாளர் இருந்தார். கேரி கிர்ஸ்டன்.. அவர் அணியுடன் சேர்ந்து எங்களை முன்னோக்கி அழைத்துச் சென்று எங்களை வீரராக ஆக்கினார். ஒரு அணியாக நாம் உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்பதை உணர்த்தியவர் கேரி கிர்ஸ்டன்.

    டோனி ஒரு சிறந்த கேப்டன். சௌரவ் மிகவும் ஆக்ரோஷமானவர். அணியை முன்னோக்கி கொண்டு செல்வது பற்றி எப்போதும் சிந்தித்தவர். டோனியிடம் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால், அவரிடம் எப்போதும் 'பிளான் பி' இருந்தது. எனது கேரியரில் பல்வேறு வகையான கேப்டன்களுடன் விளையாடினோம்.

    பின்னர் கும்ப்ளே டெஸ்ட் கேப்டனானார். அணி சிக்கலில் இருந்தால், அவர் முன்னோக்கி வந்து பந்து வீசுவார். கும்ப்ளே இக்கட்டான சமயங்களில் முன்னுக்கு வரும் திறன் கொண்ட ஒரு சிறந்த கேப்டன்.

    எனக்கு அணியை கட்டமைத்த கேப்டன் சவுரவ் என்று நான் கூறுவேன். அவர் இளம் வீரர்களை முன்னோக்கி உருவாக்கி அவர்களை மேட்ச் வின்னர்களாக மாற்றினார். நான் சௌரவை எனக்கு பிடித்த கேப்டன் என்று அழைப்பேன்.

    டி-20யின் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு யுவராஜ் சிங் அளித்த பதில்:-

    ஒரு வீரராக, நான் டி20 கிரிக்கெட்டுக்கு ரோகித் சர்மாவை தேர்வு செய்வேன். அவர் ஒரு சிறந்த கேப்டன் மற்றும் அவர் தனது பேட்டிங்கின் மூலம் ஆட்டத்தை மாற்ற முடியும். அவர் எனது முதல் தேர்வாக இருப்பார்.

    இவ்வாறு யுவாராஜ் கூறினார்.

    • டிராவிட்டுடன் ஒப்பிடும்போது கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர்கள் வித்தியாசமான பாணியைக் கொண்டுள்ளனர்.
    • நல்ல புரிதல்தான் முக்கியம். அது கம்பீரிடம் இருக்கிறது.

    இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் புதிய பயிற்சியாளர்கள் வித்தியசமாக யுக்தியை கொண்டுள்ளதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டிராவிட்டுடன் ஒப்பிடும்போது கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர்கள் வித்தியாசமான பாணியைக் கொண்டுள்ளனர். ஆனால் எந்த பிரச்சனையும் இல்லை. நல்ல புரிதல்தான் முக்கியம். கம்பீரிடம் அது இருக்கிறது.

    நாட்டிற்காக விளையாடும் போது ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. இது ஆஸ்திரேலியா தொடருக்கான ஆடை ஒத்திகை அல்ல.

    இவ்வாறு ரோகித் கூறினார்.

    • பும்ராவின் தலைப்பு இவை அனைத்தையும் விட முக்கியமானது என்று கம்பீர் கூறினார்.
    • இதில் ரோகித் சர்மா மற்றும் டோனியின் பெயர்கள் இடம் பெறவில்லை.

    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி பிரீமியர் லீக் டி20 தொடரில் ஈஸ்ட் டெல்லி ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரின் போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் ஷிகர் தவான் ஒரு வேடிக்கையான உரையாடலில் கலந்து கொண்டார்.

    அதில் 'பாலிவுட் திரைப்பட தலைப்புகளில் இந்திய கிரிக்கெட் வீரர்களில் மிகவும் பொருத்தமானவர் யார் என கூற வேண்டும்.

    அந்த வகையில் கோலிக்காக, கம்பீர் "ஷாஹென்ஷா" (பேரரசர்) என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தார். யுவராஜ் சிங்கை "பாட்ஷா" என்று அழைத்தார் மற்றும் நகைச்சுவையாக தன்னை "கோபமான இளைஞன்" என்று குறிப்பிட்டார். சச்சின் டெண்டுல்கர் "தபாங்" என்று அழைக்கப்பட்டார். அதே நேரத்தில் பும்ரா "கிலாடி" என்ற பட்டத்தை பெற்றார். பும்ராவின் தலைப்பு "இவை அனைத்தையும் விட முக்கியமானது" என்று வலியுறுத்தினார்.

    துல்லியம் மற்றும் நம்பகத்தன்மைக்காக ராகுல் டிராவிட்டை "மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட்" என்று பெயரிட்டார். டைகர் சவுரவ் கங்குலி, கப்பார் ஷிகர் தவானை தேர்வு செய்தார்.

    ஆச்சரியம் என்னவென்றால், இந்த பிரிவின் போது ரோகித் சர்மா மற்றும் எம்.எஸ். டோனியின் பெயர்கள் காணாமல் போனது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.


    இந்த பட்டியலில் ஷிகர் தவானிடமும் கேட்கப்பட்டது. அதற்கு தவான் அளித்த பதில் பின்வருமாறு:-

    பாட்ஷா: கிங் கோலி

    கோபமான இளைஞன்: சிராஜ்

    தபாங்: ஹர்திக் பாண்ட்யா

    ஷாஹென்ஷா: பும்ரா

    கிலாடி: சுப்மன் கில்

    மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட் (Mr. Perfectionist): சச்சின் டெண்டுல்கர்

    கப்பர்: சூர்யகுமார் யாதவ்

    என தவான் கூறினார்.

    • விராட் கோலியை நான் பெரிதும் மதிக்கிறேன்.
    • ஒரு பந்துவீச்சாளராக இருக்கும் போது விராட் கோலியை விட ரோகித் சர்மா சிறந்த பேட்ஸ்மேனாக தெரிகிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களாக பார்க்கப்படுகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக மிகச் சிறப்பான செயல்பாட்டை இவர்கள் இருவரும் வெளிப்படுத்தி வருவதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மரியாதையை பெற்று வருகின்றனர்.

    அதேபோன்று தற்போது இருவருமே 35 வயதை கடந்த நிலையில் இன்றளவும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இன்னும் சில ஆண்டுகள் விளையாட விரும்புவதாக கூறி தற்போது இந்திய அணியில் விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில் விராட் கோலியை விட ரோகித் சர்மாவின் பேட்டிங் டைமிங் சிறந்ததாக இருக்கும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோஹைல் கான் தெரிவித்துள்ளார்.


    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலியை நான் பெரிதும் மதிக்கிறேன். ஏனென்றால் அவர் மிகப்பெரிய பேட்ஸ்மேன். ஆனால் ஒரு பந்துவீச்சாளராக இருக்கும் போது விராட் கோலியை விட ரோகித் சர்மா சிறந்த பேட்ஸ்மேனாக தெரிகிறார். ஏனெனில் உலகில் எந்த ஒரு பேட்ஸ்மேனை விட ரோகித் சர்மாவிடம் நல்ல டெக்னிக் இருக்கிறது. விராட் கோலி தன்னுடைய உடற்தகுதியை வைத்து ரன்களை குவிக்கிறார்.

    அதாவது ஒரு ரன் எடுத்தால் மீண்டும் மற்றொரு ரன் ஓட அவர் எப்பொழுதுமே தயாராக இருப்பார். ஆனால் ரோகித் அப்படி கிடையாது ஒரு ரன் அடித்து விட்டால் அதற்கு அடுத்து பந்துவீச்சாளரை அதிரடியாக எதிர்கொண்டு ரன்களை குவிப்பார். என்னை பொறுத்தவரை விராட் கோலியை விட டைமிங் செய்வதில் ரோகித் சர்மா சிறந்தவர்.

    என சோஹைல் கான் கூறினார்.

    • எம்.எஸ். டோனியை விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ளார்.
    • விராட் கோலிக்கு பேட்டிங் வரிசையில் 5-வது இடம் கொடுத்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை தொடக்க பேட்ஸ்மேனாக விளங்கியவர் கவுதம் கம்பீர். இவர் தற்போது இந்திய தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.

    இவர் ஆல்-டைம் இந்தியா லெவன் அணியை வெளியிட்டுள்ளார். இதில் ரோகித் சர்மா, கங்குலி ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. அவர்கள் மட்டுமல்ல பும்ராவுக்கும் இடம் கொடுக்கவில்லை.

    அவருடன் (கம்பீர்) சேவாக் தொடக்க வீரராக இடம் பிடித்துள்ளார். 3-வது இடம் ராகுல் டிராவிட்டுக்கும், 4-வது இடம் சச்சின் தெண்டுல்கருக்கும் கொடுத்துள்ளார். 5-வது இடத்தை விராட் கோலிக்கு வழங்கியுள்ளார். யுவராஜ் சிங் 6வது இடத்தை பெற்றுள்ளார். கம்பீரின் அணியில் யுவராஜ் சிங் மட்டுமே ஆல்-ரவுண்டர் ஆவார். பந்து வீச்சில் கும்ப்ளே, அஸ்வின், பதான், ஜாகீர் கான் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். எம்.எஸ். டோனியை விக்கெட் கீப்பராக சேர்த்துள்ளார்.

    கவுதம் கம்பீரின் ஆல்-டைம் இந்தியா லெவன்:-

    1. சேவாக், 2, கம்பீர், 3. ராகுல் டிராவிட், 4. சச்சின் தெண்டுல்கர், 5. விராட் கோலி, 6. யுவராஜ் சிங், 7. எம்.எஸ். டோனி (வி.கீப்பர்), 8. அனில் கும்ப்ளே, 9. அஸ்வின், 10. இர்பான் பதான், 11. ஜாகீர் கான்.

    கவுதம் கம்பீர் 2003-ம் ஆண்டு வங்காளதேசம் அணிக்கெதிராக டாக்காவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இநதிய அணியில் அறிமுகம் ஆனார். இந்திய அணிக்காக 147 ஒருநாள், 58 டெஸ்ட், 37 டி20 போட்டிகளில் விளையாடி 10,324 ரன்கள் அடித்துள்ளார். 2007-ல் டி20 உலகக் கோப்பையையும், 2011-ல் 50 ஓவர் உலகக் கோப்பையையும் வென்றவர் ஆவார்.

    • 5 முறை ஐ.பி.எல். தொடரை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த முறை லீக் சுற்றோடு வெளியேறியது.
    • மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ரோகித் சர்மாவை தக்க வைக்குமா இல்லையா என்று தெரியவில்லை.

    18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான மெகா ஏலம் நடக்கிறது. டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் 2 கட்டங்களாக ஏலம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    5 முறை ஐ.பி.எல். தொடரை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த முறை லீக் சுற்றோடு வெளியேறியது. இதற்கு கேப்டன் பதவிதான் காரணம் என்று கூறப்பட்டது. ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யாவுக்கு அந்த பதவி கொடுக்கப்பட்டது. இது போட்டியின் போது கடுமையாக எதிரொலித்தது.

    மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தற்போது 20 ஓவர் உலக கோப்பையை வென்ற ரோகித்சர்மா, 20 ஓவர் அணி இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் வேகப் பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 4 வீரர்களையும் தக்க வைத்துக் கொள்ளுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரோகித் சர்மாவை ஏலத்தில் வந்தால் அவரை எடுக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தயாராக இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், "ஐபிஎல் ஏலத்தில் ரோகித் இடம்பெற்றால் அவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக எடுக்க தயாராக இருக்கிறோம். அவர் தலைசிறந்த வீரர். எந்த அணியும் அவரை மகிழ்ச்சியாக ஏலத்தில் எடுக்கும்" என்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஜாண்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

    ×