search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருஷ்ணசாமி"

    கே.வீரக்குமார் இயக்கத்தில் வரலட்சுமி நடித்து வரும் `சேஸிங்' என்ற ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் வரலட்சுமி டூப் ஏதுமில்லாமல் சண்டைபோடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து வரும் வரலட்சுமி, தற்போது கே.வீரக்குமார் இயக்கத்தில் சேஸிங் என்ற ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். வரலட்சுமியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து முழுக்க முழுக்க மலேசியாவில் இந்த படம் உருவாகிறது. 

    இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் சண்டைக்காட்சி ஒன்றை படக்குழு சமீபத்தில் படமாக்கியுள்ளது. அதில் வரலட்சுமி கயிறு பயன்படுத்தாமல், டூப் ஏதுமில்லாமல் சண்டை போடுகிறார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வரலட்சுமி அதில், கடுமையான உழைப்புக்கு கிடைத்த பலன், இதை யாரும் வீட்டில் முயற்சிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.


    வரலட்சுமியின் இந்த ஸ்டண்ட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர் சூப்பர் சுப்புராயன் இந்த படத்திற்கான சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். தஷி இசையமைக்க, கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். 

    இது தவிர ‘டேனி’, ‘வெல்வெட் நகரம்’, ‘ராஜபார்வை’, ‘கன்னித்தீவு’, ‘கன்னிராசி’, ‘காட்டேரி’, ‘தெனாலி ராமன் பி.ஏ.பி.எல்’, ‘ரணம்’ உள்ளிட்ட படங்களும் வரலட்சுமியின் கைவசம் உள்ளது.

    ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் செல்லாது என தொடரப்பட்ட வழக்கை டாக்டர் கிருஷ்ணசாமி வாபஸ் வாங்குவதாக தெரிவித்ததையடுத்து, வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #OttapidaramCase #HC #Krishnasamy
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறாது என்று தேர்தல் கமி‌ஷன் விளக்கம் அளித்தது.

    வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு விட்டால் அந்த 3 தொகுதிகளிலும் இடைத் தேர்தலை நடத்திவிடலாம் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். எனவே, மூன்று தொகுதிகளிலும் நிலுவையில் உள்ள வழக்குகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

    ஒட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜன் வெற்றியை எதிர்த்து, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் அந்த தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

    இந்நிலையில், ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி இன்று உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத்தாக்கல் செய்தார். அதில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் செல்லாது என தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என கூறியிருந்தார். வழக்கை ரத்து செய்து தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியிருந்தார்.



    கிருஷ்ணசாமியின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, ஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தேர்தல் தொடர்பான வழக்கு எதுவும் இல்லாததால் தேர்தல் ஆணையம் அதன் நடைமுறைப்படி முடிவெடுக்கலாம் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். #OttapidaramCase #HC #Krishnasamy
    அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தென்காசி தொகுதியில், கிருஷ்ணசாமி தனி சின்னத்தில் போட்டியிட உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #LSPolls #AdmkAlliance #PuthiyaThamilagam #Krishnasamy
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மொத்தம் 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    மீதமுள்ள 20 தொகுதிகளில் பாமகவுக்கு 7 தொகுதிகள், பாஜக-வுக்கு 5, தேமுதிக-வுக்கு 4 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்ஆர் காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் இன்று காலை அறிவித்தார். அதன்படி, புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்றார்.

    இந்நிலையில், தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி தனி சின்னத்தில் போட்டியிட உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய தமிழகம் கட்சி சார்பில் தென்காசி தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறேன் என குறிப்பிட்டுள்ளார். #LSPolls #AdmkAlliance #PuthiyaThamilagam #Krishnasamy
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் தேவை இல்லை என்று கிருஷ்ணசாமி தெரிவித்தார். #Krishnasamy #ThiruvarurByElection #GajaCyclone
    தேனி:

    தேனியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் இன பிரிவில் இருந்து விலக்கி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இணைக்க வேண்டும், அவர்களுக்கு இட ஒதுக்கீடு, சலுகை தேவை இல்லை, எங்களுக்கான அடையாளமும் உரிமையும் வேண்டும். தமிழகத்தில் கஜா புயலால் 10 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்த சூழ்நிலையில் திருவாரூர் தொகுதிக்கு பிப்ரவரி 7-ந் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது. திருவாரூர் தொகுதி உள்பட 20 தொகுதிகளுக்கும் தற்போது இடைத்தேர்தல் நடத்த கூடாது. அவ்வாறு நடத்தினால் முறைகேடு நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது.

    மக்களவை தேர்தலுடன் சேர்த்து 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். புயல் நிவாரண பணிகளில் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஒரு சிலரின் தூண்டுதலால் போராட்டங்கள் நடந்து வருகிறது.


    நடிகர் கமல்ஹாசன் ஒரு தரப்பினரை கொம்பு சீவிவிட்டு வருகிறார். அதனால்தான் அவரது தேவர்மகன்-2 படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். நான் கமல்ஹாசனுக்கு எதிரானவன் இல்லை. சினிமா மூலம் தத்துவம் அறிவுரைகளை எடுத்துகூறிய காலம் மாறி தற்போது தனிநபர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து விட்டது. காதல் தற்கொலைகள், ஆணவ படுகொலைக்கு சினிமாவே முக்கிய காரணமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Krishnasamy #ThiruvarurByElection #GajaCyclone
    கஜா புயல் குறித்து முன் எச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசு மிக சிறப்பாக செயலாற்றி உள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். #TNGovt #GajaCyclone #Krishnasamy
    தூத்துக்குடி:

    புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தூத்துக்குடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:‍-

    தேவந்திரகுல வேளாள‌ர்களை பட்டியலில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்ப்பதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறோம். பட்டியல் இனத்தில் 7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என மாற்றம் செய்யவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி தாலுகா அலுவலகங்களில் மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகின்ற‌ன.

    20 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பை தீர்மானிக்கும் கட்சியாக புதிய தமிழகம் உள்ளது. 8 தொகுதிகளில் எங்கள் கட்சி வெற்றிபெறும். தேர்தலில் இணைந்தோ அல்லது தனித்தோ தேர்தலை சந்திக்க தயார் நிலையில் புதிய தமிழகம் கட்சி உள்ளது.

    கஜா புயல் குறித்து முன் எச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசு மிக சிறப்பாக செயலாற்றி உள்ளது. அதற்கு பாராட்டுக்கள். புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண பணிகளை அரசு இன்னும் தீவிர‌மாக செயல்படுத்தவேண்டும்.

    தமிழகத்தில் அநாகரீக‌மான அரசியல் நடைபெறுகிறது. புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு உதவி செய்யுங்கள். அதை வைத்து அரசியல் செய்யாதீர்கள். நிவாரண உதவிகள் வழங்குவதிலும் அமைச்சர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். ஆனால் சிலர் தூண்டுதலின்பேரில் நல உதவிகள் வழங்கப்படுவது தடுக்கப்படுகிறது.


    சில கட்சிகள் மக்களை தூண்டி விடுகின்றன. டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வரப்போகும் சட்டமன்ற தேர்தல் குறித்து அரசியல் சின்னங்களை பொது, அரசு இடங்களிலும் வரைவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNGovt #GajaCyclone #Krishnasamy
    தேவர் மகன் 2 படம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள கிருஷ்ணசாமிக்கு முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார். #Karunas #Krishnasamy #Thevarmagan2
    சென்னை:

    முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, வெளியிட்ட அறிக்கையில் கமல்ஹாசன் தேவர் மகன்-2 படம் எடுக்கப்போவதாகவும், அப்படி எடுத்தால் அப்படம் முடங்கும் எனவும் தெரிவித்திருந்ததார்.

    தமிழகத்தில் யார் என்ன படம் எடுக்கணும், என்ன பெயர் வைக்கணும் என்பதை கதாநாயகனும், தயாரிப்பாளரும் முடிவு செய்வார்கள் தவிர நீங்கள் இல்லை.

    தேவர் மகன் படத்தால் தென் தமிழகத்தில் பெரிய கலவரம் ஏற்பட்டதாக கூறியிருந்தீர்களே... ஏதேனும் இரு சமூகத்திடையே கலவரம் வரும் மாதிரி எந்த ஒரு காட்சியாவது அப்படத்தில் இருக்கிறதா? தேவர் மகன் படம் என்பது கிராமத்தில் இரு குடும்பத்தினரிடம் உள்ள பகையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். அதில் கூட இறுதி காட்சியில் அனைவரும் பிள்ளைகளை படிக்க வைக்க சொல்லி அறிவுரையே வழங்கியிருப்பார் கமல்ஹாசன்.

    மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூட தன் சாதியினரை உயர்வாக படம் எடுக்கலாம் தவிர எந்த சாதியையும் குறைத்து படம் எடுக்க கூடாது என கூறியிருந்தார்.

    அதன்படி பார்த்தால் சமீபகாலமாக சில டைரக்டர்கள் தேவர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாகவே படம் எடுக்கின்றனர். அச்சமயம் தங்களை போன்றவர்கள் வாயை பொத்திக்கொண்டு இருப்பது ஏன்?


    தேவர் மகன் படத்தின் காரணமாக 25 ஆண்டுகளாக இரு சமூகத்தினரிடையே பகை தீராமல் இருப்பதாக பொய்யான கருத்தை விதைக்கும் நீங்கள் 1957-ல் இருந்த காங்கிரஸ் அரசு இரு சமூகத்தினரிடையே தீராத பகையை ஏற்படுத்த காரணமாக இருந்ததை பற்றி பேச திராணி இருக்கிறதா? உங்களுக்கு...

    புராண கதைகளில் உள்ள வீரவாகுத்தேவர், புலித்தேவன், வெள்ளையத்தேவன், ரீபெல்முத்து ராமலிங்க சேதுபதி, வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், பசும்பொன் திருமகனார் உட்பட பல வரலாற்று பெருமைகளுக்கு சொந்தக்காரர்களான எங்களை பற்றி அக்காலம் முதல் இந்த யுகம் இருக்கும் வரை திரைப்படங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். உங்களுக்கு ஏதாவது வரலாறு இருந்தால் தாங்களும் படம் எடுக்கலாம். யாரும் தடுக்க போவதில்லை.

    தற்சமயம் அரசியல் அனாதையாக இருக்கும் தாங்கள் மாஞ்சோலை தொழிலாளர்கள் சம்பவத்தை வைத்து அரசியல் செய்ததது போல் தேவர் மகன்-2 படத்தை வைத்து தங்களை சாதி தலைவராக காட்டவும், தங்கள் சுயலாபத்திற்காக நீங்கள் சார்ந்த சாதியினரை பலிகடாவாக்க நினைப்பதும் கடும் கண்டனத்துக்குரியது.

    இவ்வாறு கருணாஸ் கூறியுள்ளார். #Karunas #Krishnasamy #Thevarmagan2
    நடிகர் கருணாசை கைது செய்தது சரியானது தான் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். #PuthiyaTamilagamKatchi #Krishnasamy #Karunas
    கொடைரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் புதிய தமிழகம் கட்சி திண்டுக்கல், தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் சரவணன், நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் அய்யர்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சவுந்திரராஜன் வரவேற்றார்.

    அதன்பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவர் பதிலும் வருமாறு:-

    கேள்வி:-தமிழக அமைச்சர்கள் சிலர் மேடை பேச்சில் சர்ச்சை ஏற்படுகிறதே?

    பதில்:- அமைச்சர்களை குற்றம்சாட்ட முடியாது. ஒருவர் மட்டுமே பேசி வந்த கட்சி என்பதால் மேடையில் பேச்சு சில தடுமாற்றம் வருகிறது.

    கேள்வி:- நடிகர் கருணாஸ் கைது பற்றி?

    பதில்:- ஒரு சட்டமன்ற உறுப்பினர் மேடையில் அப்படி பேச கூடாது. முதல் அமைச்சரைப் பற்றியும் பேசுவது தமிழக அரசை பற்றி பேசுவதற்கு சமம், ஆனால் நாகரீகமாக பேச வேண்டும். கைது நடவடிக்கை சரியானது தான்.

    கேள்வி:-தமிழகத்தில் நர்சிங் படிப்புக்கு தகுதி திறன் தேவையா?

    பதில்:-நீட் தேர்வை வரவேற்கிறேன். பொறியியல் படிப்பு, டாக்டர் படிப்பு உட்பட அனைத்து படிப்புகளுக்கும் தகுதி திறன் மாணவர்களுக்கு அவசியம், அப்படி தகுதி திறன் வளர்த்து கொள்ள வேண்டும். செவிலியர்களுக்கு தகுதி திறன் முக்கியமானது. இப்படிப்பட்ட கல்லூரி இல்லை, நீட் தேர்வுக்கான அடிப்படை கல்வி கொடுக்க வேண்டும்.

    கேள்வி:-பெட்ரோல், டீசல் விலை கட்டுப்படுத்த நடவடிக்கை?

    பதில்:- மத்திய மாநில அரசு தான் கட்டுப்படுத்த வேண்டும். இந்திய பிரதமர் நேரில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Krishnasamy #Karunas
    கருணாசின் எம்.எல்.ஏ. பதவியை பறித்து கடுமையான சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். #PuthiyaTamilagam #Krishnasamy #Karunas
    கரூர்:

    புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கரூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேவேந்திர குல வேளாளர்கள் 6 பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். எனவே தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைக்க அரசாணை வெளியிட வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.

    மேலும் எஸ்.சி. பட்டியலில் இருந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை இதர பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 6-ந்தேதி திருச்சி உழவர் சந்தையில் மாநாடு நடத்தப்படுகிறது. தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பெயரை அறிவிக்கும் முழு அதிகாரம் தமிழக அரசின் கையில் உள்ளது.

    இந்திய அளவில் வேலை வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும் திறன் இல்லாததால் வேலை வாய்ப்புகளை நிரப்ப முடியவில்லை. ஆண்டுக்கு 5 லட்சம் என்ஜினீயர்கள் படிப்பை முடிக்கிறார்கள். ஆனால் அதில் 10 சதவீதம் பேர் மட்டுமே திறன் உள்ளவர்கள் வெளியே வருகிறார்கள். மருத்துவம் போன்று நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு நடத்துவதில் எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால் 2, 3 வருடங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்.


    திறன் பயிற்சிக்கு மத்திய மாநில அரசுகள் நிதி ஒதுக்கினாலும் அதனை வெளியில் இருந்து நடத்தி வருகிறார்கள். பள்ளி-கல்லூரி கல்வியிலேயே திறன் வளர்ப்பு கல்வியை போதிக்க வேண்டும்.

    எச்.ராஜா விவகாரமானது உடனடியாக கைது செய்வதும், பின்னர் கைது செய்வதும் வழக்கின் தன்மையை பொறுத்து உள்ளது. கருத்துரிமைக்கும் எல்லை, வரம்பு, நாகரீகம் உள்ளது. முதல்வர் -காவல் துறை பற்றி நடிகர் கருணாஸ் பேசியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். எம்.எல்.ஏ. பதவியை பறிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது. எனவே கருணாசின் எம்.எல்.ஏ. பதவியை பறித்து கடுமையான சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PuthiyaTamilagam #Krishnasamy #Karunas
    எச்.ராஜாவை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். #hraja #drkrishnasamy

    சேலம்:

    புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று சேலத்திற்கு வந்தார். கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் முன்னதாக நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் எஸ்.சி. பட்டியலில் உள்ள பள்ளர், காலாடி, தேவேந்திரகுல வோளாளர் உள்பட 6 இனத்தவரையும் அதில் இருந்து நீக்கி இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில் வருகிற 6-ந் தேதி திருச்சியில் கட்சியின் இளைஞரணி சார்பில் மாநாடு நடக்கிறது.

    எஸ்.சி. பட்டியலில் சேர்க்கப்பட்டதால் இட ஒதுக்கீட்டில் வேலை கிடைத்தவர்கள் தவிர மற்றவர்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளனர். பட்டியல் பிரிவில் வைத்துள்ளது அடிமை தனத்திற்கு சமம். எனவே அதில் இருந்து நீக்க வேண்டும். வருகிற தேர்தலில் புதிய தமிழகம் புதிய தளம் அமைத்து அரசியல் களம் காணும்.


    வழக்கு பதிவு செய்யப்பட்ட உடனே அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது போல எச்.ராஜா வழக்கிலும் அரசு எந்த முடிவையும் எடுக்கலாம் என்றார். #hraja #drkrishnasamy

    இந்திய அளவில் தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலேயே நீட் தேர்வை ஆதரிப்பதாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். #NEET #Krishnasamy
    நெல்லை:

    புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி நெல்லையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேவேந்திரகுல வேளாளர் இனத்தை சேர்ந்த 6 பிரிவினரை பட்டியலினத்தில் இருந்து நீக்கி தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயரில் இதர பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இதை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பாக மாநாடுகள் நடத்தி வருகிறோம். வருகிற அக்டோபர் மாதத்திற்குள் இதை நிறைவேற்றாவிட்டால் பின்னர் போராட்டம் நடத்தப்படும்.

    தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய பாட திட்டம் நன்றாக உள்ளது. முந்தைய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள் சரி செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலேயே ‘நீட்’ தேர்வை ஆதரித்தோம். பல தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரம் குறைவாக உள்ளதால் ‘நீட்’ தேர்வை அமல்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.


    புதிய தமிழகம் கட்சி யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம். தமிழகத்திற்கென தனி அடையாளம் உள்ளது. அதை அழிக்க பல சக்திகள் முயற்சிக்கின்றன. தமிழ்தேசியம் பேசுபவர்கள் தமிழை பயன்படுத்தி தமிழகத்தில் கபளீகரம் செய்ய முயல்கிறார்கள். யார் தமிழர் என்பதை தெளிவுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிலை உருவாகி உள்ளது.

    பல மதவாத சக்திகள் பெயரை மாற்றி அன்னிய நாட்டு நிதி உதவியை பெற்று தமிழகத்தில் புகுந்து தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இதை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த முன்வர வேண்டும்.

    பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள், துணை வேந்தர்கள் நியமிப்பதில் முறைகேடுகள் நடந்து வருகிறது. இதனால் உயர் கல்வியின் தரம் குறைந்து வருகிறது. இதை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #NEET #Krishnasamy
    கோவை-மதுரை இடையே 8 வழிச்சாலை அமைக்க வலியுறுத்தி அடுத்த மாதம் மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
    பழனி:

    புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பழனி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இமானுவேல் சேகரன், சுதந்திர போராட்ட தியாகி சுந்தரலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து 7, 8, 9-ம் வகுப்பு பாடத்திட்டங்களில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற தலைவர்கள் போல் இவர்கள் குறித்த விவரங்களையும் அனைத்து வகுப்புகளுக்கும் துணை பாடதிட்டமாக சேர்க்க வேண்டும்.

    அதே போல் அனைத்து தலைவர்களின் பெயரிலும் அரசு விழா கொண்டாடப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

    கல்வி, மின்சாரம், சுகாதாரம் ஆகிய அடிப்படை வசதிகளுடன் சாலை வசதியும் பொதுமக்களுக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். எனவே 8 வழிச்சாலை அமைப்பது மிகவும் அவசியம். இதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் கையகப்படுத்த வேண்டும். 8 வழிச்சாலை அமைக்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    முதல்கட்டமாக கோவை-மதுரை இடையே 8 வழிச்சாலை அமைக்க வலியுறுத்தி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 24-ந்தேதி மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதன் பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் விவரம் வருமாறு:-

    கேள்வி:- 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் பற்றி உங்கள் நிலைப்பாடு?


    பதில்:-ஒரு கட்சியின் சின்னத்தை நம்பியே மக்கள் வாக்களித்து எம்.எல்.ஏ.க்களை உருவாக்குகின்றனர். அந்த கட்சி மீது எம்.எல்.ஏ.க்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் அவர்களே தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட வேண்டும்.

    கேள்வி:-பழனி சிலை மோசடி வழக்கில் அரசு ஒத்துழைக்கவில்லை என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறியது பற்றி?

    பதில்:- அரசு கட்டுப்பாட்டில் தான் காவல்துறை உள்ளது. எனவே அரசின் உத்தரவுக்கு யாராக இருந்தாலும் கீழ்படிந்தே ஆக வேண்டும்.

    கேள்வி:-கவர்னர் அடுத்து எங்கு ஆய்வு செய்தாலும் போராட்டம் நடத்துவேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே?

    பதில்:-சில கேள்விகளுக்கு உடனே பதில் அளித்துவிட முடியாது. அடுத்து நாம் சந்திக்கும் போது இதற்கான பதிலை நிச்சயம் அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.#Krishnasamy
    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களின் சந்தேகங்களை மத்திய- மாநில அரசுகள் போக்க வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். #Sterliteprotest
    மதுரை:

    புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து நியூட்ரினோ, நெடுவாசல் ஓ.என்.ஜி.சி. குழாய் பதிப்பு போன்ற தொழில் சார்ந்த நிறுவனங்கள் தொடங்க கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக இயற்கை வளத்தை பயன்படுத்தி மத்திய-மாநில அரசுகள் தொழிற்சாலைகளை உருவாக்கி உள்ளன. ஆனாலும் இதில் நல்லது எது? கெட்டது எது? என ஆய்வு நடத்தப்படவில்லை.

    தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் சுற்றுச்சூழல் அனுமதியுடன் தொடங்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் கடும் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது.


    ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரை பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில்தான் அமைக்கப்பட வேண்டும். ஆனால் இந்த நிறுவனம் 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

    இதற்காக மத்திய அரசு ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்துக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்தது. அதுபற்றி எந்த விவரங்களும் வெளியாகவில்லை.

    1994-ம் ஆண்டு முதல் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்தில் என்ன நடந்தது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். எல்லா நோய்களுக்கும் ஸ்டெர்லைட் ஆலை தான் காரணம் என தூத்துக்குடி மக்கள் நினைக்கிறார்கள். அதை போக்க வேண்டியது மத்திய-மாநில அரசின் கடமை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மதுரை மாவட்ட செயலாளர் தெய்வம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். #Sterliteprotest
    ×