search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பல்"

    உத்தர பிரதேச மாநிலத்தில் ஸ்வீட் கொடுப்பதுபோல் வந்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மற்றும் அவரது உறவினரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பிஜ்னோர்:

    உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் சட்டமன்ற தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பாளர் ஹாஜி முகமது அஷன். இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இன்று பிற்பகல் ஹாஜி முகமது அஷன் நஜிபாபாத் நகரில் உள்ள தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். உடன் அவரது உறவினர் ஷதாப் மற்றும் ஊழியர்கள் இருந்தனர். 

    அப்போது 3 நபர்கள் ஸ்வீட் பாக்சுடன் வந்துள்ளனர். பிஜ்னோர் பாராளுமன்றத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதால், இனிப்பு வழங்க வருவதாக அனைவரும் நினைத்துள்ளனர். ஆனால், வந்தவர்கள் ஸ்வீட் பாக்சுக்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஹாஜி முகமது அஷனை நோக்கி சுட்டனர். அவரை காப்பாற்றுவதற்காக அவரது உறவினர் ஷதாப் குறுக்கே சென்றார். இதனால் இருவரின் உடல்களையும் தோட்டாக்கள் துளைத்தன. 

    உயிருக்கு போராடிய இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். 

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். சொத்து பிரச்சினையால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 
    7-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ததாக 5 பேர் கும்பலில் ஒருவரை மாணவியின் தந்தை கத்தியால் குத்தினார்.

    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த நெக்கினி மலை கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது மாணவி. அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவருடைய தந்தைக்கும் அதே பகுதியை சேர்ந்த குமார் குடும்பத்துக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

    நேற்று இரவு மாணவி மற்றும் அவரது தந்தை வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலை 2 மணியளவில் குமார் உள்பட 5 பேர் கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் மாணவியை தூக்கி கொண்டு மலை பகுதிக்கு சென்றனர். அங்கு வைத்து மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. திடீரென கண் விழித்து பார்த்த மாணவியின் தந்தை தூங்கி கொண்டிருந்த மகள் இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    அப்போது இளம்பெண் அந்த கும்பலிடம் இருந்து தப்பி வீட்டுக்கு ஓடிவந்தார். நடந்த சம்பவம் குறித்து தனது தந்தையிடம் கூறினார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை அங்கு நின்று கொண்டிருந்த குமாரிடம் சென்று தட்டிக்கேட்டார். வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பாக மாறியது.

    அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் தந்தை குமாரின் வயிற்றில் குத்தினார். இதில் குமார் படுகாயமடைந்தார்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மாணவியின் தந்தையை பிடித்து மரத்தில் கட்டி வைத்தனர். இது குறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் நெக்கினி மலை கிராமத்திற்கு சென்று மரத்தில் கட்டி வைத்திருந்த மாணவியின் தந்தையை மீட்டனர். பாதிக்கப்பட்ட மாணவி அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம் அருகே தாயின் கண்முன்னே இளம்பெண்ணை காரில் வந்த கும்பல் கடத்தி சென்ற சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கைலவணம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களது மகள் பார்த்திபா (வயது 19). இவர் பி.இ. படித்துள்ளார்.

    கடந்த 3-ந் தேதி காலை தமிழ்ச்செல்வியும், பார்த்திபாவும் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த கலைச்செல்வன், சரவணன், மாரிமுத்து, புகேழேந்தி, சுப்பிரமணியன், தங்கம்மாள், சங்கீதா, மாதவன் ஆகிய 8 பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் வந்து பார்த்திபாவை கடத்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அவரது தாய் தடுத்துள்ளார். ஆனால் அவரை தள்ளிவிட்டு பார்த்திபாவை கடத்தி சென்று விட்டனர்.

    இதுகுறித்து தாயார் தமிழ்செல்வி கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ் பெக்டர் ஜெகதீஸ்வரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அகோரம் ஆகியோர் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை கடத்தி சென்ற கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    பள்ளி மாணவியை திருமணத்துக்காக கடத்திச் சென்ற போது பறக்கும்படை அதிகாரிகள் அவர்களை பிடித்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கெச்சானிப்பட்டி பிரிவு அருகே இன்று பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த காரில் பள்ளி சீருடையில் ஒரு மாணவியும், 3 வாலிபர்களும் இருந்தனர்.

    இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்கள் கொண்டு வந்த பையை பிரித்து சோதனையிட்டனர். அதில் மணப்பெண்ணுக்கு தேவைப்படும் பட்டுச் சேலை, திருமாங்கல்யம், நகை, மாப்பிள்ளைக்கு தேவையான பட்டு வேஷ்டி, சட்டை ஆகியவை இருந்தது.

    இது குறித்து அவர்களிடம் விசாரித்த போது கரூர் மாவட்டம் கடவூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்றும், தனது அத்தை மகளான 10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்வதற்காக காரில் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. அவர்களுக்கு உடந்தையாக வந்த தாமரைச் செல்வன், செந்தில்குமார் ஆகியோரையும் பறக்கும்படையினர் பிடித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    காரில் கடத்தி வரப்பட்ட மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று அவருக்கு கடைசி தேர்வான சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது. தேர்வு எழுத வந்த நேரத்தில் அவரை ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் காரில் கடத்தி வந்தது தெரிய வந்தது. மாணவியின் பெற்றோருக்கு தெரியாமல் கடத்தி வரப்பட்டார்களா? என்ற கோணத்திலும் மைனர் பெண்ணை கடத்தி வந்த குற்றத்துக்காக அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். சம்பவம் நடந்த பகுதி கடவூர் என்பதால் இது குறித்து அப்பகுதி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    10-ம் வகுப்பு அரசு கடைசி தேர்வை எழுத முடியாமல் தவற விட்டு வாலிபர்களுடன் வந்த மாணவி போலீஸ் நிலையத்தில் கதறி அழுதார்.

    தேனி அருகே கல்லூரி மாணவியை கடத்திய 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி அருகே சங்க கோணான்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவணான்டி. இவரது மகள் கிருத்திகா. இவர் தேனியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வெளியே சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிச்சென்றுள்ளார்.

    வெகுநேரமாகியும் மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை சிவணான்டி பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார்.

    அந்த புகாரில் பெரியபாண்டி மகன் பார்த்திபன் (வயது29), சிவக்குமார் மகன் சத்யா(33), ஈஸ்வரன் மற்றும் அவரது மனைவி ஆகியோர்தான் கடத்திச்சென்றிருக்ககூடும் என்று கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் பழனி செட்டிபட்டி போலீசார் இந்த 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் தேனி அருகே டொம்புச்சேரி பிள்ளைமார்சாவடியை சேர்ந்தவர் ராசு. இவரது மகள் சுகப்பிரியா(17). ராசு தனது குடும்பத்தினருடம் கோவையில் வசித்து வருகிறார். விசே‌ஷத்திற்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.

    அப்போது சிறுமி தனது பெரியம்மா வீட்டிற்கு சென்றுவருவதாக கூறிச்சென்றுள்ளார். அதிக நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    சிறுமியை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவரது அண்ணன் வேல்முருகன் பழனிசெட்டிபட்டி போலீசில் வருசநாடு பவளநகர் பகுதியை சேர்ந்த முத்துராஜ் மகன் சுரேஷ் என்பவர்தான் கடத்திச்சென்றிருக்ககூடும் என்று புகார் அளித்துள்ளார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சிறுமி மற்றும் அவரை கடத்திச் சென்ற சுரேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் 4 இளைஞர்கள் துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #UPGirlMolested
    முசாபர்நகர்:

    உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் மன்சூர்பூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கால்நடைகளுக்கு தீவனம் சேகரிப்பதற்காக நேற்று வயல்வெளிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு சென்ற 4 இளைஞர்கள், அந்த சிறுமியை அருகில் உள்ள கரும்புத் தோட்டத்திற்கு தூக்கிச் சென்றுள்ளனர்.

    அங்கு துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, சிறுமியை நான்குபேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளனர்.

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 இளைஞர்களையும் தேடி வருகின்றனர். அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. #UPGirlMolested
    திருவெண்ணைநல்லூர் அருகே மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வீடுகளை சூறையாடிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் காலனியை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 22). இவர் கடலூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் அதே பகுதியை சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர் எம்.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் தினமும் ஒரே பஸ்சில் கல்லூரிக்கு சென்றுவந்தனர்.

    இவர்கள் கடந்த 21-ந் தேதி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றனர். அன்று மாலை அவர்கள் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை மாணவர் திருமூர்ததி கடத்தி சென்று விட்டார். கடத்தப்பட்ட தனது மகளை மீட்டு கொடுக்கும்படி கூறியிருந்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியை தேடி வந்தனர். மாணவி கடத்தப்பட்டு 4 நாட்கள் ஆகியும் அவர் எங்கு இருக்கிறார் என தெரியாததால் அவரது உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். நேற்று மதியம் மாணவியின் உறவினர்கள் சுமார் 15 பேர் ஒன்று திரண்டனர்.

    பின்பு அவர்கள் ஆனத்தூர் காலனிக்கு சென்று அங்கிருந்த வீடுகளை அடித்து உடைத்து சூறையாடினர். இதில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் 2 மோட்டார் சைக்கிள்கள், 2 ஆட்டோக்கள் அடித்து உடைக்கப்பட்டன. ஒரு மினி லாரியின் கண்ணாடியும் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. பின்னர் காலனிபகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு திடீர் போராட்டத் தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருவெண்ணை நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, உளுந்தூர்பேட்டை இன்ஸ் பெக்டர் சாகுல்ஹமீது ஆகியோர் விரைந்து சென்றனர்.

    இதற்கிடையே இந்த தகவல் தெரியவந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் ஆகியோர் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது வீடுகளை சூறையாடியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வீடுகளை சூறையாடிய மதுசூதனன் (வயது 31), இளையராஜா (26), புருஷோத்தமன் (27), தேவ நாதன் (43), வேலு (34) ஆகிய 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவான 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆனத்தூர் காலனி பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடிப்பதால் அங்கு 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 5 இன்ஸ்பெக்டர்கள், 20 சப்-இன்ஸ் பெக்டர்கள் மற்றும் 100-க் கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    திருச்சி அருகே இன்று அதிகாலை தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த 5 மாத பெண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.

    திருவெறும்பூர்:

    திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள வள்ளூவர் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். செப்டிக் டேங்க் லாரி டிரைவர். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது. 3-வது பெண் குழந்தை லத்திகா, பிறந்து 5 மாதமே ஆகிறது.

    நேற்றிரவு ராமச்சந்திரன் வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து சத்யா லத்திகாவை தொட்டிலில் படுக்க வைத்து விட்டு, மற்ற 2 குழந்தைகளுடன் தூங்கி விட்டார். இன்று அதிகாலை 3 மணியளவில் குழந்தை லத்திகா அழத்தொடங்கவே, சத்யா எழுந்து தாய்ப்பால் கொடுத்து விட்டு, மீண்டும் தொட்டிலில் படுக்க வைத்து விட்டு, அவரும் தூங்கி விட்டார்.

    அதிகாலை 4 மணியளவில் பணிக்கு சென்றிருந்த ராமச்சந்திரன் வீட்டிற்கு வந்தார். அப்போது தொட்டிலில் குழந்தையை பார்த்த போது, குழந்தையை காணவில்லை. இதுபற்றி சத்யாவிடம் கேட்டபோது, தொட்டிலில்தானே தூங்கி கொண்டிருக்கிறது என்று கூறியவாறு, அவரும் தொட்டிலை பார்த்த போது குழந்தையை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த கணவன்-மனைவி இருவரும், உறவினர்கள் யாராவது தூக்கி சென்றிருக்கலாம் என்று எண்ணி, அப்பகுதியில் உள்ள உறவினர்களின் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் குழந்தை லத்திகாவை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    உடனே இது குறித்து ராமச்சந்திரன் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதராணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இன்று அதிகாலை சத்யா குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து விட்டு தூங்கியதும் நைசாக வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், குழந்தையை தூக்கி கடத்தி சென்றுள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்கள் யார், எதற்காக கடத்தி சென்றார்கள்? என்று தெரியவில்லை.

    அவர்கள் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஏதாவது பிரச்சினை காரணமாக குழந்தையை கடத்தி சென்றார்களா ? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 5 மாத குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    அரசு பள்ளி மாணவர்கள் கடத்தல் கும்பலுடன் சேர்ந்து சக மாணவனை கடத்தி கொத்தடிமையாக அனுப்பிய சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கோடியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தஞ்சையில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறான்.

    அதேபள்ளியில் திருக்கருக்காவூரை சேர்ந்த ராஜா (17), வளையபேட்டையை சேர்ந்த சரவணன், மாத்தூரை சேர்ந்த சந்திரன், கரந்தட்டான் குடியை சேர்ந்த சுந்தர் (மேலே உள்ள 4 மாணவர்களின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது) இவர்கள் 4 பேரும் அதே அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    கடந்த டிசம்பர் 4-ந் தேதி தினேஷ் காலை வழக்கம் போல்பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். மீண்டும் மாலை வீடு திரும்பவில்லை. தினேசின் தந்தை வெளியூரில் வேலை பார்த்து வந்ததால் அவரது தாய் மகனை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை. இதையடுத்து தன்னுடைய கணவருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து ஊருக்கு வந்த தினேசின் தந்தை மாயமான மகனை சில நாட்கள் தேடி அலைந்துள்ளார். ஆனால் மகன் எங்கு சென்றான் என்ற தகவல் கிடைக்காததால் தஞ்சையில் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்த நிலையில் போலீசில் புகார் அளித்து நீண்ட நாட்கள் ஆகியும் போலீசார் தினேசை கண்டு பிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து இனி போலீசாரை நம்பி பயன் இல்லை என தன்னுடய மகனை கண்டுபிடிக்க தானே களத்தில் இறங்கி விசாரணையில் இறங்கினார்.

    அதன்படி தினேஷ் படித்த அரசு பள்ளிக்கு சென்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தியபோது டிசம்பர் 4-ந் தேதி பள்ளிக்கு வந்த தினேஷ் அதேபள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் ராஜா, சரவணன், சந்திரன், சுந்தர் ஆகிய 4 மாணவர்களுடன் பள்ளியை விட்டு சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த 4 மாணவர்களது வீடுகளுக்கும் சென்று தன்னுடைய மகனை எங்கு அழைத்து சென்றீர்கள் என கேட்டுள்ளார். அப்போது தாங்கள் அழைத்து செல்லவில்லை என அடித்து கூறினர்.

    அதனை தொடர்ந்து அந்த 4 மாணவர்கள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரித்த போது அவர்கள் 4 பேரும் அடிக்கடி பள்ளிக்கு வராமல் ஊர் சுற்றுபவர்கள் அவர்கள் தீய பழக்கங்கள் உள்ளவர்கள் என தெரிவித்தார்.

    இதற்கிடையே தினேசின் தந்தைக்கு, 4 மாணவர்கள் மீதும் சந்தேகம் ஏற்பட்டது.

    இதனால் கடந்த மாதம் 14-ந் தேதி மாணவர் சந்திரனின் வீட்டிற்கு சென்ற தினேசின் தந்தை உங்களுடைய மகனும் அவனது நண்பர்களும் சேர்ந்து எனது மகனைகொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறேன். எனவே நிதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்ய உள்ளேன் என கூறி விட்டு வந்தார்.

    இந்நிலையில் கடந்த 18-ந்தேதி காலையில் தினேசின் தந்தை செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட அந்த 4 மாணவர்களில் ஒருவரான ராஜா உங்களுடைய மகன் கரம்பத்தூர் பகுதியில் பார்த்ததாக கூறிவிட்டு போனை கட் செய்துள்ளான்.

    இதையடுத்து அங்கு சென்று தேடி பார்த்த போது தினேஷ் ஆவூர் சாலையில் உள்ள பாலத்தில் சுய நினைவை இழந்தபடி மயக்கத்தில் இருந்தான். அவனது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன.

    தினேசை மீட்டு அவனுடைய தந்தை விசாரித்தார். அப்போது சம்பவத்தன்று தனது நண்பர்கள் 4 பேரும் தன்னை பள்ளியை விட்டு வெளியே வா. முக்கியமான இடத்திற்கு அழைத்து செல்கிறோம் என வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர்.

    பின்னர் 4 பேரும் என்னை கொடிமரத்து மூலை அருகே உள்ள டீக்கடைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவர்கள் கும்பகோணத்தை சேர்ந்த மணி என்பவரிடம் தன்னை அறிமுகம் செய்தனர். அவர்கள் தனியாக சென்று பேசினர். மணி அவர்கள் 4 பேருக்கும் பணம் கொடுத்தார். அதன்பின்னர் தனக்கு டீ வாங்கி கொடுத்தனர். அதன்பிறகு நான் மயக்கம் அடைந்துவிட்டேன். முழித்து பார்த்த போது திருப்பூரில் ஒரு அறையில் கிடந்தேன்.

    அங்கிருந்த சிலர் தனக்கு சாப்பாடு போட்டு அடித்து துன்புறுத்தி கொத்தடிமையாக வேலை வாங்கியதாக கூறியுள்ளான்.

    இதையடுத்த தினேசின் தந்தை அந்த 4 மாணவர்களிடமும் சென்று இதுகுறித்து மிரட்டி விசாரித்த போது தங்களுக்கும் இதுபோன்ற மாணவர்களை கடத்தும் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் நாங்கள் அழைத்து விடும் மாணவர்களுக்கு ஏற்றாற்போல் பணம் தருவார்கள் என கூறியுள்ளனர். நாங்கள் இதுபோன்று இனிமேல் செய்யமாட்டோம். தங்களை போலீசில் மாட்டி விட வேண்டாம் என கெஞ்சியுள்ளனர்.

    பள்ளி மாணவர்கள் என்பதால் தினேசின் தந்தை அவர்களை கண்டித்து விட்டு சென்றுவிட்டார்.

    முத்தியால்பேட்டை வாலிபர் கொலையில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட்டை மாணிக்க முதலியார் தோட்டம் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மணி. இவரது மகன் பிரதிஷ் (வயது26) ஏ.சி. மெக்கானிக்கான இவர் பிளம்பிங், எலக்ட்ரிக்கல்ஸ் வேலையும் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்த போது 5 பேர் கொண்ட கும்பல் பிரதீஷை ஓட ஓட அரிவாளால் வெட்டி கொலை செய்தது.

    இந்த கொலை தொடர்பாக புதுவை கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரதீசை கொலை செய்தவர்கள் மற்றும் கொலைக்கான காரணம் தெரியவந்தது.

    ரவுடியான பிரதீஷ் மீது ஆரோவில் போலீசில் கொலை வழக்கு உள்ளது. மேலும் பிரதீசும் சாமிபிள்ளை தோட்டம் அணைக்கரை பகுதியை சேர்ந்த ராஜேசும் நண்பர்களாக இருந்தனர். இருவரும் சேர்ந்து ரவுடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் நாளடைவில் யார் தாதா என்பது போட்டி ஏற்பட்டது. இதுதொடர்பாக அடிக்கடி இருவரும் மோதிக் கொண்டனர்.அதுபோல் மாட்டு பொங்கலன்று இவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

    அப்போது ராஜேசை பிரதீஷ் மற்றும் அவரது தரப்பினர் வெட்டி கொல்ல முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் பிடியில் ராஜேஷ் தப்பி ஓடிவிட்டார். அதேவேளையில் நேற்று முன்தினம் மாலை ரஜேஷ் முத்தியால்பேட்டைக்கு வந்தபோது அவரை பிரதீஷ் கத்தியால் வெட்டினார்.

    இதையடுத்து ராஜேஷ் இதுபற்றி தனது அண்ணன் முரளியிடம் முறையிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த முரளி தனது கூட்டாளிகளான அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற குஞ்சுமணி, பாண்டியன், விஜய் மற்றும் கிளியனூரை சேர்ந்த பிரதாப் ஆகியோருடன் சென்று பிரதீஷை வெட்டி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து தலைமறைவான கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிரதேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கொலையாளிகள் வில்லியனூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று இரவு விரைந்து சென்று முரளி மற்றும் அவரது கூட்டாளிகளான மணிகண்டன் என்ற குஞ்சுமணி, பாண்டியன், விஜய், பிரதாப் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

    டெல்லியில் லிப்ட் கேட்டு காரில் சென்ற ஜிம் பயிற்சியாளரிடம் துப்பாக்கி முனையில் பணத்தை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #YouthRobbed #DelhiGymInstructor
    புதுடெல்லி:

    டெல்லியின் துவாரகா பகுதியில் இருந்து என்எஸ்ஐசி செல்வதற்காக, 24 வயது ஜிம் பயிற்சியாளர் ஒருவர் பேருந்திற்கு காத்திருந்தார். பேருந்து நீண்டநேரம் வராததால், அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளார். காரில் இருந்தவர்கள், அவருக்கு லிப்ட் கொடுத்து ஏற்றிச் சென்றுள்ளனர்.



    ஆனால், அவர் இறங்க வேண்டிய இடம் வந்ததும், காரை நிறுத்தாமல் டிடியு கல்லூரி நோக்கி சென்றுள்ளனர். அங்கு காரை நிறுத்தி, துப்பாக்கியை காட்டி மிரட்டி, ஜிம் பயிற்சியாளரிடம் இருந்த பணம், செல்போன் மற்றும் பேக் ஆகியவற்றை பறித்துள்ளனர். பின்னர் அவரிடம் 20 ரூபாய் மட்டும் கொடுத்து, வீடு போய் சேரும்படி கூறிவிட்டு, அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுள்ளனர். வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஜிம் பயிற்சியாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர். #YouthRobbed #DelhiGymInstructor

    கண்ணமங்கலத்தில் செம்மரம் கடத்த திட்டம் திட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். 3 பேரை தேடி வருகிறார்கள்.

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா, சப் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் காட்டுக்காநல்லூர் நாமக்கார மலையடிவாரத்தில் ரோந்து சென்றனர்.

    அங்கு கும்பலாக நின்று கொண்டிருந்த 5 பேர் போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனர். இதில் இரண்டு பேர் மட்டும் பிடிபட்டனர். 3 பேர் தப்பி விட்டனர்.

    பிடிபட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது ஜமனாமருதூர் குமார் (36), இரும்புலி சத்யராஜ் (24) எனவும், அவ்வழியே வரும் பொதுமக்களை மிரட்டி, வழிப்பறி செய்து ஆந்திர மாநிலம் சென்று செம்மரம் வெட்டி கடத்தி வர திட்டம் திட்டியதாக தெரிவித்தனர்.

    மேற்கண்ட 2 பேர் மீதும் கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.

    மேலும் தப்பி ஓடிய கொளத்தூர் அண்ணாமலை, இளங்கோ, இரும்பிலி பெருமாள் (எ) வெள்ளை பெருமாள் ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    ×