search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெயில்"

    • இரவில் தொடங்கும் பனிப்பொழிவு காலை 8 மணி வரை நீடிக்கிறது.
    • வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் கார்த்திகை, மார்கழி, தை, மாசி மாதங்கள் வரை கடும் குளிர் இருக்கும்.

    தஞ்சை மாவட்டத்தில் கார்த்திகை மாதம் தொடக்கத்தில் இருந்தே கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. இடையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து ஓய்ந்தாலும் பனியின் தாக்கம் குறையவில்லை.

    இந்த மாத தொடக்கத்தில் நான்கு நாட்கள் பருவம் தவறி மழை பெய்தது. தற்போது மழை ஓய்ந்து பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறது.இருப்பினும் இரவில் தொடங்கும் பனிப்பொழிவு காலை 8 மணி வரை நீடிக்கிறது.

    அதன் பிறகு வெயில் சுட்டெரிக்க தொடங்குகிறது. தஞ்சையில் இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. வயல்வெளிகள் காலை 7 மணி வரை தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு காணப்பட்டது.

    புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பனியால் வெண்மேகங்கள் போல் படர்ந்து பாதி அளவே தெரிந்தது. பின்னர் வெயில் அடிக்க தொடங்கிய பிறகு கோபுரம் முழுவதுமாக தெரிந்தது.

    இதேபோல் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனியின் பக்கம் இருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றனர். தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதே போன்று பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டன.

    பஸ்களும் காலை நேரத்தில் விளக்கை எரியவிட்டபடி சென்று வந்தன. அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி செல்பவர்களும் இந்த பனிபொழிவு காரணமாக கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. புதுச்சேரியிலும் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது.
    தமிழகத்தில் சென்னை, மதுரை, கடலூர், தர்மபுரி, கரூர், நாகை, நாமக்கல், பாளையங்கோட்டை, சேலம், திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக திருத்தணியில் 113.18 டிகிரி வெயில் கொளுத்தி எடுத்தது. புதுச்சேரியிலும் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. முக்கிய நகரங்களில் நேற்றைய வெயில் நிலவரம் வருமாறு:-

    சென்னை நுங்கம்பாக்கம் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)

    சென்னை மீனம்பாக்கம் - 104.54 டிகிரி (40.3 செல்சியஸ்)

    கோவை - 98.6 டிகிரி (37 செல்சியஸ்)

    குன்னூர் - 79.7 டிகிரி (26.5 செல்சியஸ்),

    கடலூர் - 100.94 டிகிரி (38.3 செல்சியஸ்)

    தர்மபுரி - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

    கன்னியாகுமரி - 90.68 டிகிரி (32.6 செல்சியஸ்)

    கரூர் - 105.8 டிகிரி (41 செல்சியஸ்)

    கொடைக்கானல் - 73.22 டிகிரி (22.9 செல்சியஸ்)

    மதுரை - 105.8 டிகிரி (41 செல்சியஸ்)

    நாகை - 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்)

    நாமக்கல் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

    பாளையங்கோட்டை - 102.38 டிகிரி (39.1 செல்சியஸ்)

    புதுச்சேரி - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

    சேலம் - 104.54 டிகிரி (40.3 செல்சியஸ்)

    தஞ்சை - 95 டிகிரி (35 செல்சியஸ்)

    திருச்சி - 107.24 டிகிரி (41.8 செல்சியஸ்)

    திருத்தணி - 113.18 டிகிரி (45.1 செல்சியஸ்)

    தூத்துக்குடி - 91.76 டிகிரி (33.2 செல்சியஸ்)

    ஊட்டி - 53.42 டிகிரி (11.9 செல்சியஸ்)

    வால்பாறை - 81.5 டிகிரி (27.5 செல்சியஸ்)

    வேலூர் - 110.48 டிகிரி (43.6 செல்சியஸ்)

    ஈரோட்டில் 106 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி புதிய உச்சத்தை தொட்ட நிலையில் வெயிலின் தாக்கம் தாக்க முடியாமல் பொதுமக்கள் செய்வது தெரியாமல் தவித்து வருகின்றனர்.
    ஈரோடு:

    அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் மே 4-ம் தேதி தொடங்கியது. இதன் மூலம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 104 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கும் முன்பே கடும் அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியது. அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கியதும் மேலும் கூடுதலாக வெயில் கொளுத்தி வந்தது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 104 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி இருந்தது.

    இந்நிலையில் கடந்த வாரம் மூன்று நாட்களாக தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் முழுவதும் இடி சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    இதனால் வெயிலின் தாக்கம் ஓரளவு தனிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டு வருகிறது.

    வெயிலை தாக்குப்பிடிக்க முடியாத ஒரு சில மக்கள் ஊட்டி கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா பார்க்க சென்ற வண்ணம் உள்ளனர். வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கரும்பு பால், சர்பத், மோர், இளநீர் ஜூஸ் கடைகளில் மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

    காலை 9 மணி முதலே அனல் காற்றுடன் வெயில் கொளுத்த தொடங்கி விடுகிறது. வீட்டில் மின்விசிறி போட்டாலும் வெயிலின் தாக்கத்தால் புழுக்கம் அதிகமாக உள்ளது இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் ஈரோட்டில் 106 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி புதிய உச்சத்தை தொட்டது. வரும் 29-ம் தேதி வரை அக்னி நட்சத்திர வெயில் கொளுத்த உள்ளதால் பொதுமக்கள் செய்வது தெரியாமல் தவித்து வருகின்றனர்.
    தமிழகத்தில் சென்னை உள்பட 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. கரூர், திருத்தணி, வேலூரில் அதிகபட்சமாக தலா 108.5 டிகிரி பதிவானது.
    முக்கிய நகரங்களில் நேற்றைய வெயில் நிலவரம் வருமாறு:-

    சென்னை நுங்கம்பாக்கம் - 96.08 டிகிரி (35.6 செல்சியஸ்)

    மீனம்பாக்கம் - 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்)

    கோவை - 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்)

    குன்னூர் - 79.7 டிகிரி (26.5 செல்சியஸ்)

    கடலூர் - 95.72 டிகிரி (35.4 செல்சியஸ்)

    தர்மபுரி - 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்)

    கன்னியாகுமரி - 91.04 டிகிரி (32.8 செல்சியஸ்)

    கரூர் - 108.5 டிகிரி (42.5 செல்சியஸ்)

    கொடைக்கானல் - 71.6 டிகிரி (22 செல்சியஸ்)

    மதுரை - 106.52 டிகிரி (41.4 செல்சியஸ்)

    நாகை - 97.34 டிகிரி (36.3 செல்சியஸ்)

    நாமக்கல் - 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்)

    பாளையங்கோட்டை - 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்)

    புதுச்சேரி - 95.36 டிகிரி (35.2 செல்சியஸ்)

    சேலம் - 104.54 டிகிரி (40.3 செல்சியஸ்)

    தஞ்சை - 104 டிகிரி (40 செல்சியஸ்)

    திருச்சி - 105.98 டிகிரி (41.1 செல்சியஸ்)

    திருத்தணி - 108.5 டிகிரி (42.5 செல்சியஸ்)

    தூத்துக்குடி - 92.84 டிகிரி (33.8 செல்சியஸ்)

    ஊட்டி - 78.8 டிகிரி (26 செல்சியஸ்)

    வால்பாறை - 84.2 டிகிரி (29 செல்சியஸ்)

    வேலூர் - 108.5 டிகிரி (42.5 செல்சியஸ்)

    திண்டுக்கல்லில் வரத்த குறைந்ததால் எலுமிச்சை விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே சிறுமலை மற்றும் கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான பன்றிமலை, ஆடலூர், அய்யம்பாளையம், மருதாநதி, தேவரப்பன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் எலுமிச்சை சாகுபடி செய்து வருகின்றனர்.

    இந்த பழங்கள் திண்டுக்கல் சிறுமலை செட் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு வியாபாரிகளால் ஏலம் எடுக்கப்படுகிறது. மேலும் இந்த எலுமிச்சை பழங்கள் வெளியூர்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் எலுமிச்சை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மழை இல்லாததால் பழங்கள் விளைச்சல் இன்றி காணப்படுகிறது.

    இது குறித்து விவசாயி அழகு என்பவர் கூறுகையில், சிறுமலைசெட்டுக்கு வாரத்துக்கு 3 முறை எலுமிச்சைகளை ஏலமிட கொண்டு வருகிறேன். வழக்கமாக 150 சிப்பம் ஏலம் விடப்படும். ஆனால் தற்போது விளைச்சல் இல்லாததால் வரத்து குறைந்துள்ளது. இதனால் 18 சிப்பம் மட்டுமே கொண்டு வருகிறேன்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறிய எலுமிச்சை ஒரு சிப்பம் ரூ.1500-க்கு விற்கப்பட்டது. தற்போது அது ரூ.4,000 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் முதல் தர எலுமிச்சை ரூ.3,000-க்கு விலை கேட்கப்பட்டது. தற்போது ரூ.6,000 முதல் ரூ. 7,000 வரை விலை போகிறது.

    சிறிய எலுமிச்சை சில்லறையில் ரூ5 முதல் ரூ.7 வரை விலை உயர்ந்துள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இருந்தபோதும் தொடர்ந்து விவசாயத்தை செய்து வருகிறோம் என்றார்.

    ஒடிசா மாநிலத்தில் அதிகபட்சமாக தொழிற்சாலைகள் நிறைந்த தல்செர் பகுதியில் 115.34 டிகிரி வெயில் சுட்டெரித்தது. #OdishaHeatWate
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் குறிப்பாக மேற்கு பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெயில் கொளுத்தி வருகிறது. மாநிலத்தில் உள்ள 14 நகரங்களில் நேற்று 104 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. இதில் அதிகபட்சமாக தொழிற்சாலைகள் நிறைந்த தல்செர் பகுதியில் 115.34 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதனால் பகல் நேரத்தில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். மாநிலத்தின் மேற்கு பகுதியில் அனல் பறப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தல்செருக்கு அடுத்த படியாக தித்லகார் பகுதியில் 112.1 டிகிரி வெயில் பதிவானது.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மையம், “மாநிலத்தில் பகல் நேர வெயில் குறைவதற்கான வாய்ப்பு இல்லை. அடுத்த சில நாட்களும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.
    வெண்ணந்தூர் அருகே கடும் வெயில் காரணமாக ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    வெண்ணந்தூர்:

    நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்துள்ளது கல்கட்டானூர் ஏரி. இந்த ஏரியில் கட்லா, ரோகு, பட்டை, கெளுத்தி போன்ற மீன்கள் குத்தகைதாரர்கள் மூலம் வளர்க்கப்பட்டு வருகிறது.

    ஏரியில் நீர்மட்டம் குறைந்ததாலும், வெயிலின் அளவு 100 டிகிரிக்கு மேல் இருப்பதாலும் தண்ணீர் வெப்பமானது. இதனால் அந்த ஏரியில் நேற்று மீன்கள் செத்து மிதந்தன. இதை அறிந்ததும் அந்த பகுதி மக்கள் ஏரிக்கு சென்று செத்து மிதந்த மீன்களை பார்த்து வேதனை அடைந்தனர்.

    சேர்வராயன் மலைப்பகுதியில் உற்பத்தியாகும் தண்ணீர் மணிமுத்தாறு வழியாக ஆட்டையாம்பட்டி, மதியம்பட்டி, அக்கரைப்பட்டி, ஓ.சவுதாபுரம் சுற்றுவட்டார பகுதி ஏரிகளை வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து தண்ணீர் கல்கட்டானூர் ஏரியை வந்து சேருகிறது. கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால் தண்ணீர் வரத்து குறைந்து ஏரியில் நீர்மட்டம் குறைவாக இருந்தது.

    தற்போது கல்கட்டானூர் சின்ன ஏரியில் வளர்க்கப்பட்ட மீன்கள் செத்து மிதந்து வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் தண்ணீர் முற்றிலும் வற்றி மீன்கள் அனைத்தும் செத்து போகும் அபாயம் உள்ளது. மீன்கள் செத்து மிதப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    மதுரையில் கடந்த 2 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினமும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அளவு பதிவாகிறது. #Summer
    மதுரை:

    தமிழகத்தில் பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்கள் கோடை காலம். இந்த காலத்தில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும்.

    அதிலும் சித்திரையில் வரும் அக்னி நட்சத்திர காலம் வெயிலின் உச்சமாக இருக்கும். ஆனால் தற்போது வெயில் எப்போதும் உச்சமாகவே உள்ளது.

    புவி வெப்பமயமாதல், காற்று மாசு போன்றவற்றால பருவநிலை மாறிவிட்டது தான் காரணம். பங்குனியில் வெயிலின் தாக்கம் சாதாரணமாக இருக்கும் நிலை மாறி ஆரம்பத்திலேயே அக்னி நட்சத்திரம் போன்று வெயில் வாட்டி வதைக்கிறது. அனல் காற்றும் வீசுவதால் இரவில் கூட அதன்பிடியில் இருந்து மக்களால் விடுபட முடியவில்லை. சித்திரை தொடங்கும் முன்பே வெயில் தாக்கம் அதிகமாகி வருகிறது.

    மதுரை நகரில் கடந்த 2 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினமும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அளவு பதிவாகிறது. வெயிலுக்கு பயந்து பொதுமக்களும் காலை நேரங்களில் வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். மாலையிலும் அதன் தாக்கம் உள்ளது.

    வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள குளிர்பானம் கடைகளை நோக்கி படையெடுக்கின்றனர். #Summer
     
    திண்டுக்கல்லில் எலுமிச்சை வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. ஒரு எலுமிச்சை ரூ.6 முதல் ரூ.8 வரை விற்பனையாகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் அய்யம்பாளையம், சிறுமலை, வெள்ளோடு, கொடைக் கானல் கீழ்மலை பகுதியில் அதிக அளவு எலுமிச்சை விளைவிக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து திண்டுக்கல் சிறுமலை செட் பகுதிக்கு கொண்டு வரப்படுகிறது.

    இங்கு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. எலுமிச்சையின் தரத்தால் வெளியூர் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.

    கடந்த சில வருடங்களாகவே திண்டுக்கல் மாவட்டத்தில் பருவமழை போதிய அளவு பெய்ய வில்லை. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    வறட்சி காரணமாக எலுமிச்சை விளைச்சலும் குறைந்துள்ளது. தற்போது வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை விரும்பி அருந்துகின்றனர். இதனால் எலுமிச்சையின் தேவையும் அதிகரித்துள்ளது. ஆனால் விளைச்சல் இல்லாததால் குறைந்த அளவே எலுமிச்சைகள் சிறுமலை செட் பகுதிக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு 50 கிலோ கொண்ட சிப்பம் ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.6 ஆயிரம் வரை விலை கேட்கப்படுகிறது. சில்லரையாக ஒரு எலுமிச்சை ரூ.6 முதல் ரூ.8 வரை விற்பனையாகிறது. ஆனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை.

    கோடை காலத்தில், நீர்ச்சத்து இழப்பால் உடலில் பல்வேறு உபாதைகள் தோன்றும். இதையொட்டி இதய நோயாளிகள், வயதானவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
    பொதுவாக மனிதனின் ஆரோக்கியம் தட்பவெப்பநிலையை போன்றே மாறுதலுக்கு உட்பட்டது. குளிர், மழை, வெயில் என அந்தந்த பருவ காலத்துக்கு தக்கவாறு ஆரோக்கிய பாதிப்பு ஏற்படுவது வழக்கம். அத்தகைய தட்பவெப்ப நிலைக்கேற்றவாறு நம்மை தற்காத்து கொண்டால் உடல்நல பாதிப்பில் இருந்து தப்பித்து கொள்ளலாம். குளிர், மழை காலத்தில் சளி, இருமல், காய்ச்சலாலும், கோடை காலத்தில் உடலின் நீர்ச்சத்து குறைவினால் பல்வேறு உபாதைகளும், சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

    இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து தற்காத்து கொள்ள முன்னெச்சரிக்கையாக நமது பழக்க, வழக்கத்தை மாற்றிக்கொண்டால் போதும். ஆரோக்கிய குறைபாட்டில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சிவக்குமார் கூறியதாவது:-

    கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் உடல் பல உபாதைகளை சந்திக்கிறது. குறிப்பாக உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு ரத்தம் கெட்டிப்பட்டு அதன் ஓட்டம் பாதிக்கிறது. அதனால் மூளைக்கு ரத்தம் செல்வது தடைபடுவதால் சட்டென்று தலைச்சுற்றல், மயக்கம் ஏற்பட்டு சில சமயங்களில் உயிரிழப்பும் கூட ஏற்படுகிறது. உடலில் இதுபோன்று ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்க, குறிப்பாக உடல், தனது நீர்ச்சத்தை இழக்காமல் காத்து கொள்ள வேண்டும்.

    குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். வெயிலில் நடமாட்டத்தை குறைத்து கொள்வது நல்லது. பகலில் நடமாடும் போது குடைகளை பயன்படுத்த வேண்டும். அதேபோல் ‘பாலிஸ்டர்’ ரக ஆடைகளை தவிர்த்து தளர்வான பருத்தி ஆடைகளை பயன்படுத்துவது நல்லது. பருத்தி ஆடைகள் வியர்வையை நன்கு உறிஞ்சும் தன்மை கொண்டது. மற்ற ரக ஆடைகள் வியர்வையை உறிஞ்சாது. அதனால் உடலில் அரிப்பு, கொப்பளங்கள் உண்டாகி தோல் நோய்கள் ஏற்படும். இதை தவிர்க்க காலை, மாலை என 2 முறை குளிப்பது நல்லது.

    அதேபோல் டீ, காபி, குளிர்பானங்களை தவிர்த்து மோர், இளநீர், பதநீர், நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை உண்ணுவது உடலுக்கு மிகுந்த நன்மை அளிக்கும். வெயிலில் சென்று விட்டு வீட்டிற்குள் நுழைந்ததும் குளிர்சாதன பெட்டிகளில் ஜில்லென்று இருக்கும் தண்ணீரை எடுத்து குடிக்க கூடாது. சிறிது நேரம் கழித்து மண்பானை தண்ணீரை அருந்தலாம்.

    பொதுவாக சிறு குழந்தைகளுக்கு தாகம் எடுப்பது தெரியாது. அதனால் அவர்களின் தாகம் அறிந்து வீட்டில் உள்ள பெரியவர்கள் அவர்களை தண்ணீரை குடிக்க வைக்க வேண்டும்.
    தமிழகத்தில் இந்த ஆண்டும் வெயில் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். #MeteorologicalCenter #Summer
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் நேற்று உலக வானிலை தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் சூரிய சந்திர ராவ் தலைமை தாங்கினார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் முன்னிலை வகித்தார்.



    நிகழ்ச்சிக்கு பின்னர் பாலசந்திரன் நிருபர்களிடம் கூறும்போது, “இந்தியாவில் கடந்த 1980-ம் ஆண்டுக்கு பின்னர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டும் தமிழகத்தில் வெயில் அதிகமாக இருக்கும். ” என்றார்.

    உலக வானிலை தினத்தை முன்னிட்டு சென்னை வானிலை ஆய்வு மையத்தில் சிறப்பு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியில் காற்றின் வேகத்தை அளக்கும் கருவி உள்ளிட்ட கருவிகள், கஜா புயல் குறித்த வானிலை படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார். #MeteorologicalCenter #Summer
    வியர்வை ஏன் வருகிறது? வெயில் அடித்ததும் அதிகமாக வியர்ப்பது ஏன்? வியர்வைக்கு நிறம் உண்டா? இன்னும் நாம் வியர்வைப் பற்றி அறிய வேண்டிய சங்கதிகள் என்னென்ன? கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.
    வெயில் அதிகரித்ததும் உடலில் அதிகமாக வியர்க்கிறதா? வியர்வை ஏன் வருகிறது? வெயில் அடித்ததும் அதிகமாக வியர்ப்பது ஏன்? வியர்வைக்கு நிறம் உண்டா? இன்னும் நாம் வியர்வைப் பற்றி அறிய வேண்டிய சங்கதிகள் என்னென்ன? கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா...

    வியர்வை ஏன்?

    நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் விதமாகவும், உடலின் வெப்பநிலையை சீர்படுத்தும் ஒரு அமைப்பாகவும் வியர்த்தல் நிகழ்வு உடலில் நடக்கிறது. உடல் தோலின் அடிப்பகுதியில் காணப்படும் வியர்வைச் சுரப்பிகள் வியர்வையை உருவாக்கி வெளியேற்றுகின்றன. சில சத்துக்கள் மிகுந்தால் கழிவுடன் கலந்து வெளியேற்றப்படுவது உண்டு.

    வாசனை கிடையாது

    வியர்வைக்கு உண்மையில் வாசனை கிடையாது. ஆனால் சருமத்தில் வாழும் பாக்டீரியாக்கள் அதனுடன் கலந்து நாற்றத்தை உருவாக்குகிறது. இதுவே சிலருடைய வியர்வை கெட்ட நாற்றம் அடிக்க காரணமாகும்.சைவ உணவு சாப்பிடுபவர்களின் வியர்வை அதிகமாக நாற்றம் அடிப்பதில்லை என்று ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

    வியர்வையும், வெப்பமும்

    வெளியில் வெப்பம் அதிகமாக இருந்தால், அந்த வெப்பம் உடலைத் தாக்காதவாறு தற்காத்துக் கொள்வதற்காக அதிகமாக வியர்வை வெளியேற்றப்படும். அதனால்தான் இந்த வெயில்காலத்தில் நம்மை வியர்வை பாடாய்ப்படுத்துகிறது. வியர்வையால் உடலின் நீர்ச்சத்து வெகுவாக குறைந்துவிடுவதால் தாகம் எடுக்கும். தண்ணீர் குடித்தாலும் தாகம் தீர்ந்ததுபோல உணர முடியாது. அதனால் தாதுக்கள் நிறைந்த ஜூஸ் மற்றும் பானங்களை பருகினால் உடலின் தாதுத் தேவை ஈடுகட்டப்படும். பழரசங்கள் மற்றும் இயற்கை குளிர் பானங்களை பருகி கோடையை சமாளிக்கலாம்.

    வியர்வை எவ்வளவு?

    வியர்வையின் அளவு ஒவ்வொருவரின் உடல் வெப்பம் மற்றும் சுற்றுப்புற வெப்பநிலைக்கு ஏற்ப மாறுபடும். 85 டிகிரி வெப்பநிலையிலும், 40 சதவீத ஈரப்பதத்திலும் ஒரு மனிதர் சராசரியாக 1.8 லிட்டர் வியர்வையை ஒரு மணி நேரத்தில் வெளியேற்றுவார் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    வியர்வை வியாதி

    சிலருக்கு அதிகமாக வியர்த்துக் கொட்டும். இப்படி அதீத வியர்வை வெளியேற்றப் பாதிப்பு ‘கைபர்விட்ராசிஸ்’ எனப்படுகிறது. உலகில் 3 சதவீதம் பேருக்கு இப்படி அதீத வியர்வைப் போக்கு பாதிப்பு இருக்கிறதாம்.

    அதேபோல சில மனிதர்களுக்கு, நீர்யானைபோல ரத்தச் சிவப்பில் வியர்ப்பது உண்டு. இது ஹீமடோஹைட்ராசிஸ் எனப்படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களின் வியர்வைச் சுரப்பியானது, ரத்த செல்களை சேதப்படுத்துவதால் வியர்வையுடன் கலந்து ரத்தமும் வெளியேறுகிறது. அதிக மன அழுத்தத்தால் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

    ராணுவ வீரர்கள் போரை எதிர்கொள்ளும் முன்பு அவர்களுக்கு வியர்வை சிவப்பாக வெளியேறும் என்று லியானார்டோ டாவின்சி தெரிவித்து உள்ளார். அதேபோல மாலுமிகள் புயல்சின்னம், கடும் அலைகளை எதிர்கொள்ள நேரிட்டால் இது போன்ற பாதிப்புக்கு உள்ளாவதாகவும் கருத்து உள்ளது. ஆனால் இவை ஆதாரப்பூர்வமாக மெய்ப்பிக்கப்படவில்லை.



    லட்சக்கணக்கில் வியர்வை சுரப்பிகள்

    மனித உடலில் கண், வாய், வாய், மூக்கு உள்ளிட்ட நவ துவாரங்கள் இருப்பதாக கூறப்படுவது உண்டு. வியர்வை வெளியேறும் வழிகளும் உடலின் துவாரங்களே. ஆனால் அவை சாதாரணமாக கண்களுக்குத் தெரிவதில்லை. வியர்வையை வெளியேற்றுவதற்காக உடலில் பல லட்சம் நுண்துளைகள் உள்ளன. 25 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலான வியர்வை சுரப்பிகள் இவற்றின் அடியில் இருந்துசெயல்பட்டு வியர்வையை வெளியேற்றுகின்றன.

    மஞ்சள் வியர்வை

    கை உடலுடன் இணையும் பகுதியின் அடிப்புறம் அக்குள் எனப்படுகிறது. அதிகமாக வியர்க்கும் பகுதிகளில் இதுவும் ஒன்று. இந்த பகுதியில் வழியும் வியர்வையால் உடையில் மஞ்சள் கறை தோன்றினால் உடலில் புரதம் மற்றும் கொழுப்பு அமிலங்கள் மிகுந்துவிட்டதாக அர்த்தம்.

    சிவப்பு வியர்வை

    நமது வியர்வைக்கு நிறம் கிடையாது. ஆனால் சில பொருட்களின் சேர்க்கையால் வியர்வை நிறம் மாறுவது உண்டு. உதாரணமாக நீர் யானைகளின் வியர்வை சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. ஆரம்ப காலத்தில் அதை வியர்வை என்று அறியாமல் பலவித கதைகள் புனையப்பட்டன. நவீன அறிவியல் அவற்றின் சிவப்பு வியர்வைக்கு காரணத்தை கண்டறிந்து கூறி உள்ளது. வியர்வையுடன் சிவப்பு நிறமிப் பொருளும் கலந்து வெளியேறுவதே அதன் வியர்வை சிவப்பாக இருக்கக் காரணமாகும். மேலும் அவற்றின் சிவப்பு வியர்வை, சூரிய வெப்ப தாக்குதலை மிகுதியாக கட்டுப்படுத்துவதும், தீமை செய்யும் பாக்டீரியா கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    உணவும், வியர்வையும்...

    சாப்பிடுவது வியர்வையை தூண்டும். சாப்பிடும்போது வளர்ச்சிதை மாற்றங்கள் அதிகமாகிறது. அப்போது உடல் வெப்பம் அதிகரிக்கிறது. எனவே உடலை குளிர்விக்கும் விதமாக வியர்வை அதிகமாக சுரக்கத் தொடங்குகிறது.

    வியர்வையில் உப்பு

    ஆண்களுக்கு பெண்களைவிட அதிகமாக வியர்க்கும். ஆண்களுக்கு சுமார் 40 சதவீதம் அதிகமாக வியர்க்கிறதாம். மேலும் ஆண்களின் வியர்வையில் உப்புத்தன்மையும் சற்று அதிகமாக இருக்கும்.
    ×