என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாக்குப்பதிவு"
- காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
- முன்னாள் கிரிக்கெட் வீரருமான அர்பஜன் சிங் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.
இந்தியாவில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6 கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் 7 ஆம் கட்டமும் கடைசி கட்டமுமான தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1) காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. இன்று மாலை மாலை 6 மணி வரை வாக்குப்பதிவானது நடைபெறும்.
இன்றைய தேர்தலில் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 57 தொகுதிகளும் பீகார் (8), இமாச்சல பிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3), ஒடிசா (6), பஞ்சாப் (13), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (9), ஆகிய 7 மாநிலங்களும் , சண்டிகார் யூனியன் பிரதேசமும் அடக்கம். இந்த 57 தொகுதிகளிலும் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்தநாத், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் காலையிலேயே வந்து வாக்களித்த நிலையில் பிகார் முன்னாள் முதலாவரும் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மனைவி ராபிரி தேவி மகள் ரோகினி ஆச்சார்யா ஆகியோருடன் பிகார் தலைநகர் பாட்டனாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
ஆர்ஜேடி எம்.பியாக உள்ள ரோகினி ஆச்சார்யா வாக்களித்தபின் பேசுகையில், மணிப்பூரில் உள்ள தனது சகோதரிகளுக்காக வாக்களித்ததாக தெரிவித்தார். பிகார் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பாட்டனா ராஜ் பவனில் தனது வாக்கினை செலுத்தினார்.
மேலும் ஆம்ஆத்மி எம்.பியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான அர்பஜன் சிங் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவரும் தயவு செய்து வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்திய சினிமாவின் மூத்த நடிகரும் பாஜக தலைவருமான மிதுன் சக்கரவர்த்தி, கல்கத்தாவில் இன்று வாக்களித்தார். அதன்பின் செய்திலயாளர்களிடம் அவர் பேசுகையில், வரிசையில் 40 நிமிடம் காத்திருந்து எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். ஒரு இந்திய குடிமகனாக அது எனது தலையாய கடமை என்று தெரிவித்தார்.
- ஜூன் 1-ம் தேதி 7-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
- இந்த 57 தொகுதிகளிலும் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், ஜூன் 1-ம் தேதி 7-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
முதல் கட்ட தேர்தலில் 66.14 சதவீதம், 2-ம் கட்ட தேர்தலில் 66.71 சதவீதம், 3-ம் கட்ட தேர்தலில் 65.68 சதவீதம், 4-ம் கட்ட தேர்தலில் 69.16 சதவீதம், 5-ம் கட்ட தேர்தலில் 62.20 சதவீதம், 6-ம் கட்ட தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
கடைசி கட்ட தேர்தலில் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 57 தொகுதிகளும் பீகார் (8), இமாச்சல பிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3), ஒடிசா (6), பஞ்சாப் (13), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (9), ஆகிய 7 மாநிலங்களில் உள்ளன. சண்டிகார் யூனியன் பிரதேசத்துக்கும் அன்று தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்த 57 தொகுதிகளிலும் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
7-வது கட்ட தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதியில் அவர் 3-ம் முறையாக போட்டியிடுகிறார் . மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடுகிறார்.
இந்த 57 தொகுதிகளிலும் கடந்த 17-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கடந்த இரு வாரங்களாக அனல் பறக்கும் வகையில் பிரசாரம் நடைபெற்றது.
இந்நிலையில் 7-ம் கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.
தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில், கன்னியாகுமரிக்கு வந்துள்ள பிரதமர் மோடி 3 நாட்கள் விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானம் செய்ய போகிறார்.
ஜூன் 4-ம் தேதி வாக்குப்பதிவு முடிவுகள் வெளியாகிறது.
- மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக சமீபத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.
- கடந்த இரு வாரங்களாக அனல் பறக்கும் வகையில் பிரசாரம் நடந்து வருகிறது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடந்து வரும் தேர்தலில் இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து உள்ளது.
கடந்த மாதம் 19, 26, கடந்த 7, 13, 20, 25-ந்தேதிகளில் முதல் 6 கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
முதல் கட்ட தேர்தலில் 66.14 சதவீதம், 2-ம் கட்ட தேர்தலில் 66.71 சதவீதம், 3-ம் கட்ட தேர்தலில் 65.68 சதவீதம், 4-ம் கட்ட தேர்தலில் 69.16 சதவீதம், 5-ம் கட்ட தேர்தலில் 62.20 சதவீதம், 6-ம் கட்ட தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
7-வது இறுதி கட்ட தேர்தல் வருகிற 1-ந்தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 57 தொகுதிகளில் அன்று ஓட்டுப்பதிவு நடைபெறும். இந்த 57 தொகுதிகளும் பீகார் (8), இமாச்சல பிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3), ஒடிசா (6), பஞ்சாப் (13), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (9), ஆகிய 7 மாநிலங்களில் உள்ளன. சண்டிகார் யூனியன் பிரதேசத்துக்கும் அன்று தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்த 57 தொகுதிகளிலும் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
7-வது கட்ட தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியும் உள்ளது. 3-வது முறையாக இந்த தொகுதியில் களம் இறங்கி இருக்கும் பிரதமர் மோடி இந்த தடவை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று ஆதரவு திரட்டி வருகிறார்.
மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக சமீபத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அந்த தொகுதி தேர்தல் முடிவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த 57 தொகுதிகளிலும் கடந்த 17-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கடந்த இரு வாரங்களாக அனல் பறக்கும் வகையில் பிரசாரம் நடந்து வருகிறது. 57 தொகுதிகளிலும் நாளை (வியாழக்கிழமை) மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய இருக்கிறது.
அந்த வகையில் ஆதரவு திரட்ட சில மணி நேரங்களே அவகாசம் இருப்பதால் 57 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுலும் போட்டி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று (புதன்கிழமை) அவர்கள் இருவரும் ஒடிசாவில் ஒரே பகுதியில் பிரசாரத்தில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
நாளை (வியாழக்கிழமை) பிரதமர் மோடி வாரணாசியில் பிரசாரத்தை நிறைவு செய்ய உள்ளார்.
- ஒடிசாவில் நடந்த 6 ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது பாஜக வேட்பாளர் EVM இயந்திரத்தை உடைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
- ஒருகட்டத்தில் பொறுமை இழந்த பிரசாந்த் மேசையில் இருந்த EVM இயந்திரத்தைக் கீழே இழுத்துள்ளார்.
ஒடிசாவின் குர்த்தா மாவட்டத்தில் நேற்று (மே 25) நடந்த 6 ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் போது பாஜக வேட்பாளர் EVM இயந்திரத்தை உடைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒடிசாவில் பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நேற்று நடந்த நிலையில், குர்தா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக எம்எல்ஏவான பிரசாந்த் ஜக்தேவ், நேற்று பிரசாந்த் ஜக்தேவ் தனது மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார்.
வாக்களிக்க நீண்ட வரிசையில் அவர் காத்திருந்த நிலையில் EVM இயந்திரம் பழுதடைந்ததால் வாக்குப்பதிவு மேலும் தாமதமானது. இதனால் பொறுமை இழந்த அவர், தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒருகட்டத்தில் பொறுமை இழந்த பிரசாந்த் மேசையில் இருந்த EVM இயந்திரத்தைக் கீழே இழுத்துள்ளார். இதனால் EVM இயந்திர விழுந்து உடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் பிரசாந்த் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை இன்று (மே 26) கைது செய்துள்ளனர். அப்பகுதியில் செல்லாக்கு மிக்க பாஜக வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீதத்தை மட்டுமே தேர்தல் ஆணையம் வெளியிட்டு வந்தது.
- வாக்குப்பதிவு முடிந்துள்ள தொகுதிகளுக்கு தற்போது முழு விவரங்களையும் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் 39 தொகுதிகளில் பதிவான வாக்குகள், வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டது
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் மொத்தமுள்ள வாக்குகள், பதிவான வாக்குகள் மற்றும் வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதுவரை நடந்து முடிந்துள்ள 5 கட்ட வாக்குப்பதிவிலும், தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீதத்தை மட்டுமே தேர்தல் ஆணையம் வெளியிட்டு வந்தது
வாக்குப்பதிவு விவரங்களை முழுமையாக வெளியிடாதது தொடர்பான விமர்சனங்களை அடுத்து, வாக்குப்பதிவு முடிந்துள்ள தொகுதிகளுக்கு தற்போது முழு விவரங்களையும் வெளியிட்டுள்ளது.
அதன் முழு விவரம் வருமாறு:-
1. அரக்கோணம்
மொத்த வாக்குகள் - 1562871
பதிவான வாக்குகள் -1159441
வாக்குப்பதிவு சதவீதம் - 74.19
2. ஆரணி
மொத்த வாக்குகள் - 1496118
பதிவான வாக்குகள் -1133520
வாக்குப்பதிவு சதவீதம் - 75.76
3. சென்னை சென்ட்ரல்
மொத்த வாக்குகள் - 1350161
பதிவான வாக்குகள் -728614
வாக்குப்பதிவு சதவீதம் - 53.96
4. சென்னை வடக்கு
மொத்த வாக்குகள் - 1496224
பதிவான வாக்குகள் - 899367
வாக்குப்பதிவு சதவீதம் - 60.11
5. சென்னை தெற்கு
மொத்த வாக்குகள் - 2023133
பதிவான வாக்குகள் - 1096026
வாக்குப்பதிவு சதவீதம் - 54.17
6. சிதம்பரம்
மொத்த வாக்குகள் - 1519847
பதிவான வாக்குகள் - 1160762
வாக்குப்பதிவு சதவீதம் - 76.37
7. கோயம்புத்தூர்
மொத்த வாக்குகள் - 2106124
பதிவான வாக்குகள் - 1366597
வாக்குப்பதிவு சதவீதம் - 64.89
8. கடலூர்
மொத்த வாக்குகள் - 1412746
பதிவான வாக்குகள் - 1025298
வாக்குப்பதிவு சதவீதம் - 72.57
9. தருமபுரி
மொத்த வாக்குகள் - 1524896
பதிவான வாக்குகள் - 1238184
வாக்குப்பதிவு சதவீதம் - 81.20
10. திண்டுக்கல்
மொத்த வாக்குகள் - 1607051
பதிவான வாக்குகள் - 1143196
வாக்குப்பதிவு சதவீதம் - 71.14
11. ஈரோடு
மொத்த வாக்குகள் - 1538778
பதிவான வாக்குகள் - 1086287
வாக்குப்பதிவு சதவீதம் - 70.59
12. கள்ளக்குறிச்சி
மொத்த வாக்குகள் - 1568681
பதிவான வாக்குகள் - 1242597
வாக்குப்பதிவு சதவீதம் - 79.21
13. காஞ்சிபுரம்
மொத்த வாக்குகள் - 1748866
பதிவான வாக்குகள் - 1253582
வாக்குப்பதிவு சதவீதம் - 71.68
14. கன்னியாகுமரி
மொத்த வாக்குகள் - 1557915
பதிவான வாக்குகள் - 1019532
வாக்குப்பதிவு சதவீதம் - 65.44
15. கரூர்
மொத்த வாக்குகள் - 1429790
பதிவான வாக்குகள் - 1125241
வாக்குப்பதிவு சதவீதம் - 78.70
16. கிருஷ்ணகிரி
மொத்த வாக்குகள் - 1623179
பதிவான வாக்குகள் - 1160498
வாக்குப்பதிவு சதவீதம் - 71.50
17. மதுரை
மொத்த வாக்குகள் - 1582271
பதிவான வாக்குகள் - 981650
வாக்குப்பதிவு சதவீதம் - 62.04
18. மயிலாடுதுறை
மொத்த வாக்குகள் - 1545568
பதிவான வாக்குகள் - 1083243
வாக்குப்பதிவு சதவீதம் - 70.09
19. நாகப்பட்டினம்
மொத்த வாக்குகள் - 1345120
பதிவான வாக்குகள் - 967694
வாக்குப்பதிவு சதவீதம் - 71.94
20. நாமக்கல்
மொத்த வாக்குகள் - 1452562
பதிவான வாக்குகள் - 1136069
வாக்குப்பதிவு சதவீதம் - 78.21
21. நீலகிரி
மொத்த வாக்குகள் - 1428387
பதிவான வாக்குகள் - 1013410
வாக்குப்பதிவு சதவீதம் - 70.95
22. பெரம்பலூர்
மொத்த வாக்குகள் - 1446352
பதிவான வாக்குகள் - 1119881
வாக்குப்பதிவு சதவீதம் - 77.43
23. பொள்ளாச்சி
மொத்த வாக்குகள் - 1597467
பதிவான வாக்குகள் - 1124743
வாக்குப்பதிவு சதவீதம் - 70.41
24. ராமநாதபுரம்
மொத்த வாக்குகள் - 1617688
பதிவான வாக்குகள் - 1103036
வாக்குப்பதிவு சதவீதம் - 68.19
25. சேலம்
மொத்த வாக்குகள் - 1658681
பதிவான வாக்குகள் - 1296481
வாக்குப்பதிவு சதவீதம் - 78.16
26. சிவகங்கை
மொத்த வாக்குகள் - 1633857
பதிவான வாக்குகள் - 1049887
வாக்குப்பதிவு சதவீதம் - 64.26
27. ஸ்ரீபெரும்புதூர்
மொத்த வாக்குகள் - 2382119
பதிவான வாக்குகள் - 1435243
வாக்குப்பதிவு சதவீதம் - 60.25
28. தென்காசி
மொத்த வாக்குகள் - 1525439
பதிவான வாக்குகள் - 1031961
வாக்குப்பதிவு சதவீதம் - 67.65
29. தஞ்சாவூர்
மொத்த வாக்குகள் - 1501226
பதிவான வாக்குகள் - 1024949
வாக்குப்பதிவு சதவீதம் - 68.27
30. தேனி
மொத்த வாக்குகள் - 1622949
பதிவான வாக்குகள் - 1133513
வாக்குப்பதிவு சதவீதம் - 69.84
31. தூத்துக்குடி
மொத்த வாக்குகள் - 1458430
பதிவான வாக்குகள் - 975468
வாக்குப்பதிவு சதவீதம் - 66.88
32. திருச்சிராப்பள்ளி
மொத்த வாக்குகள் - 1553985
பதிவான வாக்குகள் - 1049093
வாக்குப்பதிவு சதவீதம் - 67.51
33. திருநெல்வேலி
மொத்த வாக்குகள் - 1654503
பதிவான வாக்குகள் - 1060461
வாக்குப்பதிவு சதவீதம் - 64.10
34. திருப்பூர்
மொத்த வாக்குகள் - 1608521
பதிவான வாக்குகள் - 1135998
வாக்குப்பதிவு சதவீதம் - 70.62
35. திருவள்ளூர்
மொத்த வாக்குகள் - 2085991
பதிவான வாக்குகள் - 1430738
வாக்குப்பதிவு சதவீதம் - 68.59
36. திருவண்ணாமலை
மொத்த வாக்குகள் - 1533099
பதிவான வாக்குகள் - 1138102
வாக்குப்பதிவு சதவீதம் - 74.24
37. வேலூர்
மொத்த வாக்குகள் - 1528273
பதிவான வாக்குகள் - 1123715
வாக்குப்பதிவு சதவீதம் - 73.53
38. விழுப்புரம்
மொத்த வாக்குகள் - 1503115
பதிவான வாக்குகள் - 1150164
வாக்குப்பதிவு சதவீதம் - 76.52
39. விருதுநகர்
மொத்த வாக்குகள் - 1501942
பதிவான வாக்குகள் - 1054634
வாக்குப்பதிவு சதவீதம் - 70.22
- டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது.
- பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்து வருபவர்களின் தலையீட்டை இந்தியா சகித்துக்கொள்ளாது என்றார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகள், அரியானாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது.
6-வது கட்ட மக்களவை தேர்தலை முன்னிட்டு டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.
அதன்பின் அவர் கூறுகையில், என்னுடைய தந்தை, மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்து வாக்கு செலுத்தினேன். என்னுடைய தாயார் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் செல்ல முடியவில்லை. சர்வாதிகாரம், வேலைவாய்ப்பின்மை, பணவீக்கத்துக்கு எதிராக வாக்களித்து இருக்கிறேன். நீங்களும் சென்று வாக்கை செலுத்துங்கள் என தெரிவித்தார்.
இதற்கிடையே, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ஆட்சியின்போது மந்திரியாக இருந்த பவத் உசைன் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், வெறுப்பு மற்றும் பயங்கரவாதம் ஆகிய சக்திகளை அமைதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவை வீழ்த்தட்டும் என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்து கூறுகையில், சவுத்ரி அவர்களே, எங்களுடைய விவகாரங்களை கையாள்வதற்கு நானும், என்னுடைய நாட்டு மக்களும் முழு அளவில் திறன் படைத்தவர்களாக இருக்கிறோம். உங்களுடைய டுவிட் பதிவு தேவையற்றது. பாகிஸ்தானில் இப்போதுள்ள நிலைமையோ மிக மோசம். நீங்கள் உங்களுடைய நாட்டை கவனித்து கொள்ளுங்கள். இந்தியாவில் நடைபெறும் தேர்தல் எங்களுடைய உள்நாட்டு விவகாரம். பயங்கரவாதத்திற்கு பெரிய அளவில் ஆதரவு அளித்து வருபவர்களின் தலையீட்டை இந்தியா சகித்துக்கொள்ளாது என தெரிவித்தார்.
- 58 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
- மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஆறாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று டெல்லி, அரியானா உள்பட ஆறு மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
58 தொகுதிகளில் 1 மணி நிலவரப்படி 39.13 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
இந்நிலையில், 3 மணி நிலவரப்படி 49.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
மாநிலம் வாரியாக பீகார் - 45.21 சதவீதம், டெல்லி - 44.58 சதவீதம், அரியானா - 46.26 சதவீதம், ஜம்மு காஷ்மீர் - 44.41 சதவீதம், ஜார்க்கண்ட் - 54.34 சதவீதம், ஒடிசா - 48.44 சதவீதம், உத்தர பிரதேசம் - 43.95 சதவீதம், மேற்கு வங்கம் - 70.19 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
- 58 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
- மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஆறாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று டெல்லி, அரியானா உள்பட ஆறு மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், 58 தொகுதிகளில் 1 மணி நிலவரப்படி 39.13 சதவீத வாக்குப்பதிவு.
மாநிலம் வாரியாக பீகார் - 36.48 சதவீதம், டெல்லி - 34.37 சதவீதம், அரியானா - 36.48 சதவீதம், ஜம்மு காஷ்மீர் - 35.22 சதவீதம், ஜார்க்கண்ட் - 42.54 சதவீதம், ஒடிசா - 35.69 சதவீதம், உத்தர பிரதேசம் - 37.23 சதவீதம், மேற்கு வங்கம் - 54.80 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
- இந்த தேர்தலில் பல விளையாட்டு பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர்.
- கவுதம் கம்பீர் டெல்லியில் உள்ள தங்களது வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
நாடு முழுவதும் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நாட்டின் பல்வேறு முக்கிய தொகுதிகளில் 5 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளான இன்று (மே 25) டெல்லி, அரியானா, பீகார், உத்தர பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஜம்மு-காஷ்மீர் ஆகியவற்றில் உள்ள மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி காலை முதலே விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த தேர்தலில் பல விளையாட்டு பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி வாக்களித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் கவுதம் கம்பீர் , கபில்தேவ் ஆகியோர் டெல்லியில் உள்ள தங்களது வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
- வெயில் அதிகமாக இருந்தாலும், வீட்டில் உட்கார வேண்டாம் என்று அனைத்து வாக்காளர்களுக்கும் தயவுசெய்து வாக்களிக்கவும் என்று கோரிக்கை விடுத்தார்.
- டெல்லியில் இன்று 7 மக்களவைத் தொகுதிகளுக்கு நடக்கும் வாக்குப்பதிவில் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு டெல்லி, ஹரியானா, ஒடிசா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று (மே 25) காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டெல்லியில் இன்று 7 மக்களவைத் தொகுதிகளுக்கு நடக்கும் வாக்குப்பதிவில் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர்.
அந்த வகையில் மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளி வந்துள்ள ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதா மற்றும் குடும்பத்தினருடன் வாக்குச்சாவடிக்கு வந்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஜெய் பிரகாஷ் அகர்வாலுக்கு வாக்களித்தார்.
வாக்களித்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், எனது தந்தை, மனைவி மற்றும் எனது குழந்தைகள் இருவரும் வாக்களித்தனர். எனது தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் இன்று வர முடியவில்லை. பணவீக்கம் மற்றும் வேலையின்மைக்கு எதிராக நான் வாக்களித்துள்ளேன் என்று தெரிவித்தார்.
மேலும் வெயில் அதிகமாக இருந்தாலும், வீட்டில் உட்கார வேண்டாம் என்று அனைத்து வாக்காளர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். தயவுசெய்து வாக்களிக்கவும் என்று கோரிக்கை விடுத்தார். கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் ஜூன் 1-ம் தேதி நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ராகுல் காந்தி, அவரது தாய் சோனியா காந்தி ஆகியோர் டெல்லியில் நிர்மான் பவன் வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை செலுத்தினர்.
- ராகுல் காந்தி பிரச்சாரம் ஒன்றில், தான் டெல்லியில் தான் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பேன் என்றும் கெஜ்ரிவால் காங்கிரஸுக்கு வாக்களிப்பார் என்றும் கூறியிருந்தார்.
நாடு முழுவதும் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நாட்டின் பல்வேறு முக்கிய தொகுதிகளில் 5 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளான இன்று (மே 25) டெல்லி, அரியானா, பீகார், உத்தர பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஜம்மு-காஷ்மீர் ஆகியவற்றில் உள்ள மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி காலை முதலே விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஜனாதிபதி திரௌபதி முர்மு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ஆகியோர் டெல்லியில் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். இதைத்தொடர்ந்து இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, அவரது தாய் சோனியா காந்தி ஆகியோர் டெல்லியில் நிர்மான் பவன் வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை செலுத்தினர். பின் வாக்குச்சாவடிக்கு வெளியில் வந்த இருவரும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
முன்னதாக உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் போட்டியிடும் ராகுல் காந்தி பிரச்சாரம் ஒன்றில், தான் டெல்லியில் தான் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பேன் என்றும் கெஜ்ரிவால் காங்கிரஸுக்கு வாக்களிப்பார் என்றும் கூறியிருந்தார்.
மேலும் ஒடிசா மாநில முதல்வரும் பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக் இன்று தனது வாக்கினை செலுத்தினார். அதன்பின் பேசிய அவர், இளைஞர்கள் வாக்களிக்க ஆர்வமுடன் முன் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
- டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்கியது.
- அரியானா மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஐந்து கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஆறாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று டெல்லி, அரியானா உள்பட ஆறு மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வந்தது.
இன்று காலை வாக்குப்பதிவு மையங்களில் அதிகாரிகள் வாக்கு இயந்திரங்களுடன் தயாராக இருந்தனர். இந்த நிலையில் காலை ஏழு மணிக்கு 58 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்