search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105098"

    • விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை சங்கடஹர சதுர்த்தி விழா நடக்கிறது.
    • 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர்.

    மதுரை

    மதுரை திருப்புவனம் அருகே வைகை ஆற்றுப்பாலத்தை அடுத்த மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்கு முக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. இந்த மாதம் சங்கடஹர சதுர்த்தி விழா, இந்த கோவிலில் நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவரும், பிரபல ஜோதிடருமான கரு.கருப்பையா தலைமை தாங்குகிறார்.

    பொதுவாக விநாயருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாத்தி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்துள்ளார்.

    • விநாயருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள்.
    • இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாத்தி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர்.

    மதுரை அருகே திருப்புவனம் அருகே வைகை ஆற்றுப்பாலத்தை அடுத்த மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. இந்த மாதம் சங்கடஹர சதுர்த்தி விழா, இந்த கோவிலில் நாளை(புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    விழாவுக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவரும், பிரபல ஜோதிடருமான கரு.கருப்பையா தலைமை தாங்குகிறார். பொதுவாக விநாயருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாத்தி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர்.

    இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்துள்ளார்.

    • ஒவ்வொரு பிரதோஷ காலத்திலும் விசேஷ அபிஷேகமும் நந்தி பெருமானுக்கு ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன.
    • காஞ்சி ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் 1967-ல் இத்தலத்துக்கு வருகை புரிந்து ஸ்ரீ சக்கரத்தினை அபிதகுசாம்பாள் சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

    இந்த சன்னதி ஆலயத்தின் தென் மேற்கு மூலையில் அமைந்துள்ளது. ஆவணி மாதம் வளர்பிறை நாளில் வரும் சதுர்த்தி திருநாளில் இவ்விஜய விநாயகருக்கு காலை அபிஷேகம், சந்தன காப்பு மாலை ஸ்ரீமூஷிக வாகனத்தில் சுவாமி வீதி புறப்பாடும் ஸ்ரீ விநாயக சதுர்த்தி அன்று நடைபெற்று வருகிறது.

    பவுர்ணமிக்கு அடுத்த ஐந்தாவது நாள் தேய்பிறையில் வரும் சங்கடஹரசதுர்த்தி அன்று மாலை அபிஷேகமும் தூப தீப ஆராதனைகளும் பூஜைகளும் நடைபெற்று, சுவாமி உற்சவ மூர்த்தி திருக்கோவிலை வலம் வருவார்.

    இத்திருக்கோவிலின் மூலவரான அருள்மிகு அருணாசலேசுவரருக்கு, ஒவ்வொரு பிரதோஷ காலத்திலும் விசேஷ அபிஷேகமும் நந்தி பெருமானுக்கு ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன.

    இத்திருக்கோவிலில் பிரதோஷ வேளையில் நெய் விளக்கேற்றி வெல்லம் கலந்த அரிசியை நந்தி பெருமானுக்கு நிவேதிக்கிறார்கள்.

    அருகம்புல் ஆராதனையும், வில்வதளத்தில் அர்ச்சனையும் அலங்காரமும் வெகு விமரிசையாக பிரதோஷ காலத்தில் பக்த கோடிகளால் நடைபெறும். இத்திருக்கோவிலில் பிரதோஷ காலத்தில் பிரதோஷ நாயனார் ரிஷப வாகனத்தில் குடை மற்றும் வெண்சாமரங்களுடன் தேவாரம் மற்றும் மங்கல பண் இன்னிசையோடு திருக்கோவிலினை பக்தர்கள் சூழ பவனி வருவர்.

    பக்த கோடிகள் பவுர்ணமியில் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்ய இயலாதோர் இவ்அருணாசலேசுவரரை தரிசித்து வேண்டும் வரத்தினையும் வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுவதாக நம்புகின்றனர்.

    இத்தலத்தில் சிவராத்திரி மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது. இரவு நான்கு கால பூஜைகளும் வில்வத்தால் அர்ச்சிக்கப்பட்டு அனைத்து வித அபிஷேகங்களும், நடைபெற்று ஒவ்வொரு காலத்திற்கும் வெவ்வேறு வஸ்திரங்களுடன் ஈசன் காட்சி அளித்து அருள்பாளித்து வருகிறார்.

    அருள்மிகு அபிதகுசாம்பாள் சன்னதி

    இத்திருக்கோவிலில் சதுர் புஜத்துடன் வீற்றிருக்கும் அருள்மிகு அபீதகுசாம்பாள் வேறெங்கும் இல்லாத அளவிற்கு சுமார் 6 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காணப்படுகிறாள்.இந்த அம்பிகை தெற்கு முகமாக வீற்றிருந்து சாந்தமாக தினம் ஒரு விதமான முகத்தோற்றத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது குறிப்பிடத்தக்கது.

    ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பகல் வேலையில் சிறப்பு பூஜையும், அபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் மகளிரால் செய்யப்படுகிறது.

    வெள்ளிக் கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளில் ராகு காலத்தில் சிறப்பு வழிபாடும், கூட்டுப் பிரார்த்தனையும், கோ பூஜையும் வெகு விமரிசையாக நடைபெற்று வரப்படுகிறது.

    அவ்வப்போது அம்பாளுக்கு பூச்சொரிதல், சந்தனகாப்பு, 108 பால்குட அபிஷேகம், நிறை பணி காட்சி போன்ற வைபவங்கள் பக்தகோடிகளால் செய்து வரப்பட்டு அம்மனின் பரிபூர்ண அருளை பெற்றுவருவதாக நம்பப்படுகிறது.

    காஞ்சி ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் 1967-ல் இத்தலத்துக்கு வருகை புரிந்து ஸ்ரீ சக்கரத்தினை அபீதகுசாம்பாள் சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

    வியாபாரத்திலும், தொழிலிலும் சிறந்த லாபங்களை பெற்று வளமடைய அதிர்ஷ்ட தேவியாக இத்திருத்தலத்தில் உள்ள அம்பாள் விளக்குகிறாள்.

    இந்த அம்பாளை மனம் உருகி வழிபட்டால் மாணவர்கள் கல்வியில் மேம்படவும், குடும்பத்தில் அதிர்ஷ்டம், ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் முதலியனவற்றை பெறலாம்.

    • காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும், தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது.
    • மூலவர் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் அம்பாள் சந்நிதிக்கு மேற்க்குப் பக்கத்தில் குருபகவானின் தனி சந்நிதி தனி விமானத்துடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

    சனிபகவான் திட்டை தலத்திற்கு எழுந்தருளி வேதாகம முறைப்படி வேதமுதல்வனைப் பூஜித்து ஆயிரம் ஆண்டுகாலம் கடும் தவம் புரிந்தார் என்பது சிறப்பு. இத்தலத்தில் உள்ள ஈசனைத் தவமிருந்து பாவ விமோசனம் பெற்றார் சந்திரன். பசு, குதிரை, மான் தாகம் தீருவான் வேண்டி பசு தீர்த்தத்தைச் சிருஷ்டித்துக் கொடுத்தார் ஈசன். விஷ்ணு அரசமரமாகவும, லக்ஷ்மி வில்வமரமாகவும் இருந்து இறைவனுக்கும், இறைவிக்கும் திருத்தொண்டு செய்தனர். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம்.. கௌதமர், ஆதிசேடன், காமதேனு பூசித்த திருவூர்.

    சுமாலி என்பவர் தேர் அழுந்திய இடமாதலின் 'ரதபுரி' என்றும் காமதேனு வழிபட்டதால் 'தேனுபுரி' என்றும் ரேணுகை வழிபட்டதால் 'ரேணுகாபுரி' என்றும் இத்தலம் வழங்கப்படுகிறது.

    காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும், தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது. புராண காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது, பூலேகமே நீரில் அமிழ்ந்திருந்தபோது திட்டை என்ற இவ்விடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்தது. இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புவாக ஒரு லிங்க உருவில் எழுந்தருளினார். இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவது லிங்கமாக சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார். இவ்வாறு ஐந்து லிங்கங்கள் இருப்பதால் இத்தலத்தை 'பஞ்சலிங்கஷேத்திரம்' என்று கூறுவர். இந்த ஒரு தலத்தை வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பஞ்சபூத திருத்தலங்களுக்கு சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மூலவர் கருவறையின் மேல் விதானத்தில் ஒரு 'சந்திரகாந்தக்கல்' பொருத்தப்பட்டிருக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி சுமார் ஒரு நாழிகைக்கு ஒருமுறை மூலவர் சிவலிங்கத்திருமேனியில் ஒரு சொட்டு நீர் விழும்படி இக்கல் பொருத்தப்பட்டுள்ளது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது. ராஜகோபுரம் வழியாக சிலபடிகள் ஏறிச் சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவர் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடையில் அம்பாள் சந்நிதிக்கு மேற்க்குப் பக்கத்தில் குருபகவானின் தனி சந்நிதி தனி விமானத்துடன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

    இத்திருக்கோவிலில் குருபகவான் தனி சந்நிதியில் காட்சி தருகிறார். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் புதல்வர் ஆவார். ஒரு காலத்தில் தென்குடித்திட்டை என்ற பெயரால் விளங்கிய இவ்வூர் தற்போது திட்டை என்று அழைக்கப்படுகிறது. இத்திருத்தலத்தில் கொடிமரம், கோபுரகலசம், சுவாமிபுஷ்கரணி, கருங்கற்களால் அமைந்தகோவில் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். பிரகாரத்தில் விநாயகர், முருகன், அண்ணாமலையார், சண்டிகேசுவரர், பைரவர், குருபகவான் முதலிய சந்நிதிகள் உள்ளன.

    அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

    ரயில் நிலையம் : திட்டை

    பஸ் வசதி : உண்டு

    தங்கும் வசதி : இல்லை

    உணவு வசதி : இல்லை

    • இந்த கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக மண்டபங்கள் உள்ளன.
    • விநாயகருக்கு அபிஷேகம் செய்து பிரார்த்தனை நிறைவேற்றப்படுகிறது.

    தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் ஏந்தல் நீலகண்டப்பிள்ளையார் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலுக்கு தினமும் பேராவூரணி மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

    கி.பி. 1825-ம் ஆண்டு தஞ்சையை ஆண்டு வந்த துளசேந்திர மகாராஜாவின், அமைச்சர் நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். ஆதலால் சிகிச்சைக்காக திருப்பெருந்துறை (ஆவுடையார்கோவில்) செல்வதற்காக பேராவூரணி வழியாக தனது அரச பரிவாரங்களுடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது இரவு நேரம் ஆகிவிட்டதால் பேராவூரணியில் உள்ள ஒரு அரச மரத்தடியில்

    தனது பரிவாரங்களுடன் தங்கினார். அப்போது பேராவூரணி ஏந்தல் நீலகண்டப்பிள்ளையாருக்கு சங்கரன்கள் 2 பேர் பூஜை செய்வதையும், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதையும் அமைச்சர் பார்த்தார். உடனே கோவிலுக்கு அவரும் சென்றார். பின்னர் தனக்கு உள்ள நோயை பற்றி சங்கரன்களிடம் கூறினார்.

    உடனே அவர்கள் இன்று இரவு நீங்கள் இங்கு தங்கி விட்டு, மறுநாள் காலையில் கோவிலுக்கு அருகே உள்ள குளத்தில் நீராடி விட்டு, நீலகண்டப்பிள்ளையாரை வணங்கி திருநீறு பூசுங்கள். உங்கள் நோய் உடனே குணமாகும் என்றனர். அவர்கள் கூறிய படி அமைச்சரும் இரவில் தனது பரிவாரங்களுடன் கோவிலில் தங்கினார். மறுநாள் காலையில் கோவில் குளத்தில் குளித்து விட்டு, நீலகண்டப்பிள்ளையாரை நினைத்து திருநீறு பூசினார். உடனே நீரழிவு நோய் முற்றிலுமாக குணமானதாக தலவரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

    பின்னர் இதுகுறித்து அமைச்சர், துளசேந்திர மகாராஜாவிடம் கூறினார். உடனே மகாராஜா, நீலகண்டப்பிள்ளையார் கோவிலுக்கு அருகே உள்ள நிலத்தை தானமாக கோவிலுக்கு எழுதி வைத்தார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து நீலகண்டப்பிள்ளையார், துளசேந்திர மகாராஜாவின் கனவில் தோன்றி தனக்கு பூந்தோட்டம், பழத்தோட்டம் வேண்டும் என கேட்டதாகவும், ஆதலால் பேராவூரணி ரெயில்நிலையத்தின் அருகில் உள்ள செங்கொல்லை எனப்படும் நிலத்தினை தானமாக எழுதிக்கொடுத்ததாகவும் தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து சிறிய கூரைக்கொட்டகையில் இருந்த நீலகண்டப்பிள்ளையாருக்கு சிறிய கோவிலையும் அவர் கட்டி கொடுத்தார்.

    தலவிருட்சம் துளசேந்திர மகாராஜாவால் சிறிய கோவிலாக அமையப்பெற்ற இந்த கோவில் பின்னர் பலரின் முயற்சியால் சிறிது, சிறிதாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஒரு விமானம், சிறிய ராஜகோபுரத்துடன் கட்டப்பட்டு கடந்த 2000-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. பின்னர் 2014-ம் ஆண்டு உபயதாரர்கள் மூலம் 2 பெரிய முன்மண்டபங்களுடன் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மிகப்பெரிய கோவிலாக அமைக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. கோவிலுக்கு வடக்கு புறத்தில் தீர்த்த குளம் உள்ளது. இந்த குளத்தில் நீராடி, நீல கண்டப்பிள்ளையாரை வணங்கினால் தீராத நோய்கள் அனைத்தும் குணமாகும் என்பது ஐதீகம். ஆதலால் இந்த பிள்ளையாருக்கு "தீராத வினை தீர்க்கும் திருநீலகண்டப்பிள்ளையார்" என்ற சிறப்பு பெயரும் உண்டு.

    பல்லி சொல்

    இக்கோவிலில் சில பக்தர்கள் திருமண பொருத்தம் மற்றும் சில நல்ல காரியங்களுக்கு விடியற்காலையில் கவுளி (பல்லி சொல்) கேட்பதற்காகவே வந்து செல்வார்கள். கிழக்கு நோக்கிய இந்த கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக மண்டபங்கள் உள்ளன.

    கோவிலின் பின்புறம் தல விருட்சமாக அரசும், வேம்பும் இணைந்து கம்பீரமாக காட்சி தருகிறது. காரியங்களில் தடை ஏற்பட்டால் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. விநாயகருக்கு அபிஷேகம் செய்து பிரார்த்தனை நிறைவேற்றப்படுகிறது.

    விநாயகருக்கு அமைந்த தனி கோவில்களில் இது முக்கியமானது. முகூர்த்த நாட்களில் இங்கு ஏராளமான திருமணங்களும் நடக்கின்றன.

    பேராவூரணியில் அநேகமாக வீட்டுக்கு ஒரு குழங்தைக்காவது நீலகண்டன், நீலவேந்தன், நீலா, நீலவேணி என்று முதல் எழுத்து நீ என பிள்ளையாரை நினைத்து பெயர் சூட்டுவது வழக்கமாக உள்ளது. மேலும் பெண்கள் வெள்ளிக்கிழமை தோறும் கோவில் மண்டபத்தில் இரவு தங்கியிருந்து காலையில் திருக்குளத்தில் நீராடி நீலகண்ட பிள்ளையாரை வழிபடுபவர்கள்.

    • இன்று விநாயகருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது
    • தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரிவினைகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும்.

    ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறைகளுக்கு அடுத்த 4-ம் நாள் சதுர்த்தி திதி வரும். இந்த சதுர்த்தி திதியானது விநாயகப்பெருமானை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள் ஆகும்.

    'விநாயகர்' என்றால் 'தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்' என்று பொருள். விநாயகர் முழு முதற்கடவுள் ஆவார். கணங்களின் தலைவரான கணபதியை உள்ளன்போடு வணங்குபவர்களுக்கு வில்லங்கங்கள், இடையூறுகள் ஏதும் ஏற்படாமல் காப்பாற்றுகிறார். எனவே தான் அன்று தொட்டு இன்றுவரை விநாயகர் பூஜையை முதலில் செய்கிறோம்.

    இன்று விநாயகருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று பிள்ளையாருக்கு பல வகையான மலர்கள் சூட்டி அழகுப்படுத்தலாம். பலவகைப் பூக்கள் கொண்ட கதம்பம், வெள்ளெருக்கம்பூ, அருகம்புல், மல்லிகைப்பூ, சாமந்திப்பூ என பல வகைப் பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.

    அடுத்து... பழங்கள். பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்ய பல வகையான பழங்களை வைத்துக்கொள்ளவேண்டும். பழங்களுக்கு அடுத்ததாக, விநாயகருக்கு மிகவும் பிடித்த மோதகத்தை, கொழுக்கட்டையை சமைத்து நைவேத்தியமாக வைத்துக்கொள்ளவேண்டும். தேங்காய், வெல்லச்சூரணம் கொண்டு ஒரு கொழுக்கட்டை. இன்னொன்று காரக் கொழுக்கட்டை. உப்புக்கொழுக்கட்டை என்றும் பருப்புக் கொழுக்கட்டை என்றும் சொல்லுவார்கள்.

    இப்போது எல்லாம் தயாராகிவிட்டது. விநாயகர் துதி பாடலாம். கணபதியின் திருநாமங்களைச் சொல்லலாம். விநாயகர் அகவல் படித்து வணங்கலாம்.

    முறையே விரதம் அனுஷ்டித்து, கணபதியை ஆராதித்து வணங்கினால், வாழ்வில் எல்லா வளமும் நலமும் தந்து அருளுவார் ஆனைமுகத்தான்!

    விநாயகர் சதுர்த்தி அல்லது சங்கடஹர சதுர்த்தி அன்னிக்கு விரதம் இருக்கறதால மனநலம் மேன்மையடையும். உடல் ஆரோக்கியம் வளரும். எல்லா

    வளங்களும் நிறையும். இது விரதம் இருக்கறவங்களுக்கு மட்டுமில்லே. அவங்க குடும்பத்தினருக்கு, அவங்களைச் சார்ந்தவங்களுக்கும்தான்.

    சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் குடும்பத்தில் இருக்கும் பொருளாதார கஷ்ட நிலை நீங்கும்.

    தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரிவினைகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். நீண்ட காலமாக நோய்களால் அவதிப்படுபவர்கள் நோய்கள் நீங்கி பூரண உடல் நலம் பெறுவார்கள்.

    வேலை தேடி அலைந்தவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும். திருமணம் தாமதமாகும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

    • பங்குனி சங்கடஹர சதுர்த்தியில் விநாயகப் பெருமானை வணங்கி வழிபடுவோம்.
    • நம் தொல்லைகளையும் துக்கங்களையும் தீர்த்தருளுவார் தும்பிக்கையான்.

    பங்குனி மாதம் வழிபாட்டுக்கான மாதம். பூஜைகளும் பிரார்த்தனைகளும் செய்வதற்கு உகந்த மாதம். தெய்வங்கள் பலவற்றுக்கும் திருமணங்கள் அரங்கேறிய மாதம். எனவே இந்த மாதத்தில் தெய்வங்கள் முழு சாந்நித்தியத்தை வெளிப்படுத்தி, பிரபஞ்சத்தையும் மக்களையும் அமைதிப்படுத்தி ஆனந்தத்திலும் நிறைவிலுமாக ஆழ்த்துவார்கள் என்பது ஐதீகம்.

    பங்குனி மாதத்தில், ஐயப்பனின் அவதார தினமும் வரும். ஸ்ரீராமபிரானின் அவதார நன்னாளும் வரும். ஸ்ரீவள்ளி அவதரித்ததும் பங்குனி மாதத்தில்தான். இத்தனைப் பெருமையும் புண்ணியமும் நிறைந்த மாதத்தில், விநாயகப் பெருமானை தினமும் வழிபட்டு வந்தாலே உன்னத பலன்கள் நமக்குக் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    எந்த தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரை வழிபட வேண்டும் என்று விவரிக்கிறது தர்மசாஸ்திரம். ஆகம விதிப்படியும் ஆலயங்களில், முதலில் பிள்ளையாரை வணங்குகிறோம். அதன் பின்னரே மூலவரை தரிசிக்கிறோம்.

    விநாயகர், முழுமுதற் கடவுள் என்று போற்றப்படுகிறார். பிரமாண்டமான கோயிலிலும் பிள்ளையாரைத் தரிசிக்கலாம். தெருமுனைக் கோயிலிலும் கணபதி காட்சி தருவார். ஆற்றங்கரையிலும் குளக்கரையிலும் கூட, அரசமரத்தடி நிழலில் கூட பிள்ளையாரப்பா அற்புதமாகக் காட்சி தந்து, நமக்கு அருளையும் பொருளையும் அள்ளித்தந்தருளுகிறார் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

    நம் விக்னங்களையெல்லாம் தீர்த்து அருளுகிறார். அதனால்தான் அவருக்கு விக்ன விநாயகர் என்றே திருநாமம் அமைந்தது. கணங்கள் என்றால் பொழுதுகள் என்று அர்த்தம். நம்முடைய ஒவ்வொரு கணத்துக்கும் அதிபதி பிள்ளையார்தான். அதனால்தான் அவருக்கு கணபதி எனும் திருநாமமும் அமைந்தது என்று சொல்லிச் சிலிர்க்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    இத்தனை பெருமைகள் கொண்ட பிள்ளையாருக்கு உகந்தது சங்கட ஹர சதுர்த்தி நன்னாள். நாளை, சங்கடஹர சதுர்த்தி. பங்குனி மாதத்தின் சங்கடஹர சதுர்த்தி. இந்த நன்னாளில், விரதம் இருந்து பிள்ளையாரை தரிசிப்போம். விநாயகர் அகவல் பாராயணம் செய்வோம். மகா கணபதி மந்திரம் ஜபித்து வேண்டிக்கொள்வோம்.

    விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சார்த்தி வேண்டிக் கொள்வது ரொம்பவே மகத்துவம் மிக்கது. அதேபோல், பிள்ளையாருக்கு வெள்ளெருக்கு மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், நம் விக்னங்களெல்லாம் பறந்தோடும். கவலைகள் அனைத்தும் காணாமல் போகும். துக்கங்களையெல்லாம் போக்கித் தருவார் தும்பிக்கையான்!

    சங்கடஹர சதுர்த்தியில் ஆனைமுகத்தானை மனதார பிரார்த்திப்போம்.

    • பங்குனி மாத சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாரில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள விநாயகருக்கு பங்குனி மாத சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது .அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். அதேபோல் பரமத்திவேலூர் பஞ்சமுக விநாயகர்,கோப்ப ணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநா யகர், பேட்டை விநாயகர், பாண்டமங்கலம் விநாயகர், ஆனங்கூர் விநாயகர், அய்யம்பாளையம் விநாயகர் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்க ளில் சதுர்த்தியை முன்னி ட்டு சிறப்பு அபி ஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதி களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள்பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • இந்த கற்பகவிநாயகருக்கு பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன.
    • கற்பக விநாயகருக்கு முன்பாக 16 திரிகளை கொண்ட ஷோட விளக்குகள் எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும்.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலும், திருப்பத்தூரில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 73 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது பிள்ளையார்பட்டி. இங்குள்ள கற்பக விநாயகர் கோவில் கருவறை கோவிலாக உள்ளது. இந்த கற்பகவிநாயகருக்கு பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன.

    கற்பக விநாயகருக்கு முன்பாக 16 திரிகளை கொண்ட ஷோட விளக்குகள் எப்போதும் எரிந்து கொண்டே இருப்பதை பக்தர்கள் காணலாம். இவ்வாறு பக்தர்களுக்கு 16 வகையான பேறுகள் கிடைக்க நமக்கு உணர்த்தவே இந்த 16 திரிகள் மூலம் விளக்கு ஏற்றப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு மற்றும் தமிழ் புத்தாண்டுகளில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.

    இதேபோல் ஆண்டிற்கு ஒரு முறை ஆவணியில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சதுர்த்திக்கு 9 நாட்களுக்கு முன்பாக காப்புக்கட்டி 10 நாட்கள் நடைபெறும் விழாவில் 2 முதல் 8-ம் திருநாள் காலையில் வெள்ளி கேடயத்தில் சுவாமி புறப்பாடும், இரவு பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். 6-ம் நாளில் கஜமுக சூரசம்ஹாரம், 9-வது நாளில் தேரோட்டம் நடைபெறும்.

    அன்றைய தினத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் மூலவர் விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார். 10-ம் திருநாள் காலையில் கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரியும், மதியம் மூலவருக்கு முக்குறுணி கொலுக்கட்டை படையல், இரவு பஞ்சமூக சுவாமிகளின் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். இது தவிர சித்திரை தமிழ் வருட பிறப்பின் போதும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.

    • 9 சங்கடஹர சதுர்த்திக்கு விநாயகர் ஆலயம் சென்று வணங்கி வந்தால் சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.
    • ஜாதகத்தில் சந்திரன், செவ்வாய் பலம் குன்றியிருப்பவர்கள், கட்டாயம் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை கடைபிடிக்கவேண்டும்.

    மாசிமாதம் புண்ணிய மாதமாகக் கருதப்படுகிறது. உத்திராயண புண்ணியகாலத்தில் வரும் இந்த மாசி மாதத்தில் செய்யும் நோன்புகள், வழிபாடுகள் எல்லாம் பலமடங்கு பலன்களை அருளும் என்பது ஆன்றோர் வாக்கு. இந்த மாதத்தில் வரும் அனைத்து விரதங்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த மாதத்தில் வரும் விரதங்களைக் கடைப்பிடித்தால, ஆண்டுமுழுவதும் விரதங்களை கடைப்பிடித்த நற்பலன் கிடைக்கும். அப்படி இந்த மாதத்தின் இறுதியில் நமக்கு வாய்த்திருக்கிறது, சங்கட ஹர சதுர்த்தி விரதம்.

    சங்கட ஹர சதுர்த்தி விரதம், விநாயகப் பெருமானுக்குரியது. விநாயகரை வழிபடுவது என்பது அனைத்துவிதமான பிரச்னைகளுக்குமான தீர்வை அளிப்பது. பிரச்னைகள் தீரப் பல வழிகளைத் தேடி அலைந்து கொண்டிருப்பவர்கள் கடைப்பிடித்துப் பயன்பெற வேண்டிய விரதம் இது.

    இன்று அதிகாலையில் நீராடி, விநாயகரை வழிபட்டு விரதத்தைத் தொடங்கலாம். உபவாசம் இருக்க முடிபவர்கள் நாள் முழுவதும் உண்ணா நோன்பிருந்து விரதமிருக்கலாம். இயலாதவர்கள் ஒருவேளை உணவு உண்டு விரதமிருக்கலாம். மாலையில் மீண்டும் நீராடி, விநாயகர் வழிபாட்டில் ஈடுபடலாம்.

    வீட்டில் விநாயகரை வழிபடுபவர்கள், ஏற்கெனவே வீட்டில் விநாயகர் விக்கிரகமோ படமோ இருந்தால் அதற்குப் பூஜைகள் செய்யலாம். இருந்தாலும் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதற்குப் பூஜை செய்து, அதற்குப் பின் படம் அல்லது விக்கிரகத்துக்குப் பூஜை செய்ய வேண்டும். விநாயகருக்குரிய அஷ்டோத்திரங்களைச் சொல்லி வழிபடலாம். இயலாதவர்கள், விநாயகர் அகவல் போன்ற பாடல்களைப் பாடலாம். விநாயகரின் நாமங்களைச் சொல்லி அருகம்புல்லால் அர்ச்சனை செய்ய வேண்டும். விநாயகருக்கு எளிய நைவேத்தியங்களே பிரியம். தனியாகப் பிரசாதங்கள் செய்ய நேரம் வாய்க்காதவர்கள் பொரி, கடலை, வெல்லம் முதலியன வைத்து வழிபடலாம். முடிந்தவர்கள் மோதகம் செய்து நைவேத்தியம் செய்யலாம்.

    ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்பவர்கள், விநாயகருக்கு செய்யப்படும் அபிஷேக ஆராதனைகளைத் தரிசனம்செய்வது மிகவும் சிறப்பு மிக்கதாகும். விநாயகருக்கு செய்யப்படும் அபிஷேகங்களை பக்தியோடு தரிசனம் செய்தாலே மனக்கஷ்டங்கள் அத்தனையும் தீர்ந்துவிடும். விநாயகருக்கும் சந்திரனுக்கும் செய்யப்படும் தீபாராதனைகளைத் தரிசனம் செய்ய, நம் கஷ்டங்கள் எல்லாம் தீரும். தொடர்ந்து 9 சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகர் ஆலயம் சென்று வணங்கிவந்தால் சகல துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

    சங்கடஹர சதுர்த்தி தினத்தில்தான், சந்திரனும் செவ்வாயும் விநாயகரை வழிபட்டு சகல நன்மைகளையும் அடைந்தனர். எனவே, ஜாதகத்தில் சந்திரன் மற்றும் செவ்வாய் பலம் குன்றியிருப்பவர்கள், கட்டாயம் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை மேற்கொள்ளவேண்டியது அவசியம்.

    • பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றிதான் வழிபடுவார்கள்.
    • இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாற்றி வழிபடுகின்றனர்.

    மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்று பாலத்தை அடுத்த மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்கு முக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.

    இந்த மாதம் சங்கடஹர சதுர்த்தி விழா நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றிதான் வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாற்றி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். விழாவுக்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்து வருகிறார்.

    • தைப்பூச விழா நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் வெகுவிமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது.
    • உணவு வகைகளை ஒருவொருக்கொருவர் பறிமாறி நிலாச்சோறு உண்டு வந்தனர்.

    திருப்பூர் :

    அனுப்பர்பாளையம் கே.பி.எஸ். காலனியில் தைப்பூச விழாவையொட்டி விநாயகருக்கு வெள்ளைப்பூ ண்டு ரசம் படைத்து வழிபாடு செய்த பெண்கள்-குழந்தைகள் கும்மியடித்தது கோலாகலமாக இருந்தது.

    தைப்பூச விழா நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் வெகுவிமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது. தைப்பூச விழாவையொட்டி திருப்பூர் அனுப்பர்பாளையம் கே.பி.எஸ். காலனியில் உள்ள விநாயகர் கோவிலில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் கடந்த 1 வாரமாக தினமும் பூஜை செய்து வழிபட்டு வந்தனர். மேலும் தினமும் வீடுகளில் இருந்து பல்வேறு உணவு வகைகளை விநாயகர் கோவிலுக்கு கொண்டு வந்து சாமி முன்பு படைத்து, பாட்டு பாடி கும்மியடித்து, பின்னர் அங்கேயே அனைவரும் கொண்டு வந்த உணவு வகைகளை ஒருவொருக்கொருவர் பறிமாறி நிலாச்சோறு உண்டு வந்தனர். நேற்று முன்தினம் தைப்பூச விழாவையொட்டி விநாயகருக்கு மாவு, பழம் உள்ளிட்டவற்றை படைத்து வழிபட்டனர். இந்த நிலையில் நேற்று மாவு, பழம் சாப்பிட்ட விநாயகருக்கு செமிக்கும் வகையில் வெள்ளைப்பூண்டு ரசமும், சாதமும் படைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

    இதில் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டு விநாயகருக்கு படைக்கப்பட்ட உணவு வகைகள் முன்பு கும்மி யடித்து, விநாயகரை வழிபட்டனர். முடிவில் அனைவரும் வெள்ளைப்பூண்டு ரசத்துடன் நிலாச்சோறு உண்டனர். இன்று (செவ்வாய்கிழமையுடன்) தைப்பூச விழா நிறைவடை கிறது.

    ×