search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வனப்பகுதி"

    • நகம், முடி மற்றும் ரத்த மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
    • வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாக்க கம்பு வழங்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அலிப்பிரி மற்றும் ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதைகளில் நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த மாதம் தனது பெற்றோர்களுடன் நடந்து சென்ற 4 வயது சிறுவனை சிறுத்தை ஒன்று கவ்வி இழுத்துச் சென்றது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் பக்தர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

    இதையடுத்து சிறுத்தை சிறுவனை விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் ஓடியது. பெற்றோர்களுடன் அலிபிரி நடைபாதையில் நடந்த சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்து கொன்றது.

    சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு அமைக்கப்பட்டது. அடுத்தடுத்து 4 சிறுத்தைகள் கூண்டில் சிக்கியது. இந்த சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் நடைபாதையில் செல்வதை தவிர்த்தனர். இதனால் நடைபாதையில் செல்லும் பக்தர்களின் கூட்டம் கணிசமாக குறைந்தது.

    கூண்டில் சிக்கிய 4 சிறுத்தைகளில் சிறுமியை கொன்ற சிறுத்தை எது என்பதை கண்டுபிடிக்க அவைகளின் நகம், முடி மற்றும் ரத்த மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மரபணு பரிசோதனை வர தாமதம் ஆகி வருகிறது.

    மரபணு பரிசோதனை அறிக்கையில் கூண்டில் சிக்கிய 4 சிறுத்தைகளும் சிறுமியை கொல்லவில்லை என்பது தெரிய வந்தால் மீண்டும் சிறுத்தைகளை வனப்பகுதியில் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    நேற்று முன்தினம் அலிபிரி நடைபாதை அருகே சிறுத்தை ஒன்று நடமாடியது. இதனைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை சார்பில் மீண்டும் கூண்டு வைக்கப்பட்டுள்ளன. வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாக்க கம்பு வழங்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி 15 ஆயிரம் கம்புகள் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளன. கம்புகள் வந்த பிறகு பக்தர்களுக்கு அலிபிரி நடைபாதையில் கம்புகள் வழங்கப்படும்.

    முழங்கால் மெட்டு என்ற பகுதியில் பக்தர்களிடம் இருந்து கம்பு மீண்டும் பெறப்பட்டு அலிபிரி நடைபாதைக்கு கொண்டு வரப்பட்டு மீண்டும் பக்தர்களிடம் வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதியில் நேற்று 81,655 பேர் தரிசனம் செய்தனர். 38,882 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3. 84 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    டி.என்.பாளையம் வனப்பகுதியில் சந்தன மரம் வெட்டியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டிஎன்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டிஎன்.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கணக்கம் பாளையம் வனப் பகுதியையொட்டிய பகுதியில் சந்தனம் மரம் வெட்டி எடுப்பதாக வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    டிஎன்.பாளையம் வனசரகர் ஆலோசனையின் பேரில் வனவர் தலைமையில் வனப் பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது கணக்கம் பாளையம் வனப்பகுதியையொட்டிய இடத்தில் சென்ற போது சுமார் 57 வயது மதிக்கத்தக்க ஒருவர் வனப் பகுதியில் சந்தன மரத்தின் வேர்க்கட்டையை தோண்டி கொண்டிருந்தது தெரிய வந்தது.

    உடனே அந்த நபரை வனப் பணியாளர்கள் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் பங்களாபுதூர் அருகே உள்ள எருமைக்குட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பழனியப்பன் (வயது 57) என்பது தெரியவந்தது.

    மேலும் விசாரணை நடத்தியதில் சந்தன மரத்தின் வேர்க்கட்டையை விற்பனை செய்வதற்கு வெட்டி எடுப்பதை வனசரக அலுவலரிடம் அவர் ஒப்பு கொண்டார்.

    இதையடுத்து பிடிபட்ட பழனியப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் ஜெயில் அடைக்க உத்தரவிடப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    டிஎன்.பாளையம் வனப்பகுதிக்குட்பட்ட இடத்தில் சந்தன மரம் வெட்டி எடுத்த தகவல் அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. வனப்பகுதியில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    எஸ்.கைகாட்டியில் கூண்டில் சிக்காத கரடிகள் குடியிருப்புக்குள் புகுந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே உள்ள எஸ்.கைகாட்டியில் கடந்த சில மாதங்களாக 3 கரடிகள் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிகின்றன. மேலும், அந்த பகுதியில் உள்ள பேக்கரி கதவை 3 முறை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை தின்றுவிட்டு பொருட்களை சேதப்படுத்திவிட்டு சென்றன.

    வனத்துறையினர் கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இருப்பினும் தொடர்ந்து அந்த கரடிகள் குடியிருப்புக்குள் நடமாடி வந்தன. கடந்த வாரம் கக்குளா மாரியம்மன் கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்து கரடிகள் அட்டகாசம் செய்தன.

    இதையடுத்து கரடிகளை பிடிக்க கோவில் வளாகத்தில் வனத்துறையினர் கடந்த 19-ந் தேதி கூண்டு வைத்தனர். அதில் ஒரு கரடி மட்டும் சிக்கியது. மற்ற 2 கரடிகளும் கூண்டில் சிக்காமல் அந்த கூண்டை சுற்றி சுற்றி வந்ததுடன் ஆக்ரோஷத்துடன் சத்தம் போட்டன. இதை அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து 2 கரடிகளை விரட்டினர். பின்னர் கூண்டில் சிக்கிய கரடியை அவலாஞ்சி வனப்பகுதியில் விட்டனர்.

    இந்த நிலையில் கூண்டில் சிக்காத மற்ற 2 கரடிகளும் குடியிருப்பு பகுதியிலேயே சுற்றித்திரிகின்றன. இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடிகள் சண்டையிட்டு கொள்கின்றன. கரடிகளின் தொடர் அட்டகாசத்தால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

    எனவே வனத்துறையினர் விரைந்து அந்த கரடிகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் உணவுக்காக தன்னை தே(நா)டி வரும் குரங்குகளுக்கு பழம், கரும்பு போன்றவைகளை விவசாயி வழங்கி வரும் காட்சி தினமும் நடந்து வருகிறது. #monkeys

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள புது வட வள்ளி பண்ணாரியம்மன் நகரில் வசித்து வருபவர் ராமலிங்கம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். விவசாயி. இவரது வீட்டின் எதிரே கால்நடை துறைக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. இதில் ஏராளமான மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன.

    அருகே வனப்பகுதி உள்ளதால் அங்கிருந்து ஏராளமான குரங்குகள் இந்த இடத்தில் நமக்கு ஏதாவது உணவு மற்றும் தண்ணீர் கிடைக்குமா? என வந்து செல்லும்.

    இதை கண்ட ராமலிங்கம் அந்த குரங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுக்க எண்ணினார்.

    குரங்குகளுக்கு முதலில் குடிப்பதற்கு தண்ணீர் வழங்கி வந்த ராமலிங்கத்திடம் குரங்குகள் அன்பாக பழக தொடங்கியது. அவரும் குரங்குகளுக்கு தோழனாகி விட்டார்.


    தண்ணீர் மட்டும் வழங்கி வந்த ராமலிங்கம் பிறகு தன்னை தே(நா)டி வரும் குரங்குகளுக்கு பழம், கரும்பு போன்ற உணவுகளையும் வழங்கி வருகிறார்.

    மேலும் அந்த குரங்குகள் விளையாட ஊஞ்சலும் கட்டி உள்ளார். உணவை ருசித்த குரங்குகள் அந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆடி உற்சாகமாக விளையாடுகிறது.

    தினமும் அங்கு 20 குரங்குகள் வருகிறது. ராமலிங்கம் கொடுக்கும் உணவை சாப்பிட்டு அவரது தோளில் உரிமையுடன் உட்கார்ந்து அவர் ஊட்டும் உணவை சாப்பிடுகிறது.

    இந்த அபூர்வ காட்சி தினமும் நடந்து வருகிறது.  #monkeys

    அந்தியூர் அருகே வனப்பகுதியில் இருந்து ஒரு யானை ஊருக்குள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்துள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளி திருப்பூர் அடுத்த மூலையூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 44).விவசாயி.

    வனப்பகுதியையொட்டி உள்ள இவர் தன் வீட்டு முன் வாழைகள் மரங்கள் பயிரிட்டுள்ளார். மேலும் அருகே இவருக்கு சொந்தமான 2½ ஏக்கர் தோட்டமும் உள்ளது. தோட்டத்தில் 10 மாடுகளை வளர்த்து வருகிறார். தோட்டத்தில் மாடுகளை கட்டி விட்டு மாடுகளுக்கு செடி- கொடி, தழைகளை போட்டு செல்வார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து ஒரு யானை ஊருக்குள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருவதாக அந்த பகுதி பொதுமக்கள் வனத்துறையினரிடம் கூறி வந்தனர்.

    இதற்கிடையே அந்த யானை நேற்று இரவும் ஊருக்குள் புகுந்தது.

    விவசாயி செல்வராஜ் வீட்டு முன் உள்ள வாழைகளை தின்றது. பிறகு தோட்டத்துக்குள் புகுந்த யானை அங்கு மாடுகளுக்கு தீனியாக வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களையும் கபாளீகரம் செய்தது. பிறகு அங்கிருந்து காட்டுக்குள் புகுந்தது.

    இன்று காலை இதை கண்ட செல்வராஜ் அதிர்ச்சி அடைந்தார். அவரும் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களும் மீண்டும் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தொடர்ந்து ஊருக்குள் புகும் யானையை வர விடாமல் தடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.

    அரூர் நகரில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். எனவே குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
    அரூர்:

    அரூர் திருவிகநகர், பெரியார் நகர், தில்லை நகர், பாட்சாபேட்டை மற்றும் பரசுராமன் தெரு ஆகிய பகுதிகளில் குரங்குகள் பொதுமக்களுக்கு பெரும் தொல்லை கொடுத்து வருகிறது.

    வீட்டுக்குள் வரும் குரங்குகளை விரட்டினால் கடிக்க வருவதுடன் பொருட்களை தூக்கி கொண்ட சென்று விடுகிறது. குழந்தைகளையும் குரங்குகள் கடித்துள்ளது. மேலும், கேபிள் லைன், தொலைபேசி வயர்களையும் துண்டித்து விடுகிறது. 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டமாக வருகிறது. கதவு திறந்திருக்கும் சமயம் பார்த்து உள்ளே நுழைந்து விடும் குரங்குகள் வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி சென்று விடுகிறது. மேலும், கடைகளில் மாட்டி வைக்கப்பட்டுள்ள திண்பண்டங்களை பாக்கெட்டுடன் அப்படியே தூக்கி சென்று விடுகிறது. இதனால் மக்கள் பெரும் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர்.

    எனவே, குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என வனத்துறையினரை பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
    தேன்கனிக்கோட்டை அருகே 2 சிறுத்தை புலிகள் நுழைந்து உள்ளதால் வனப்பகுதியையொட்டி உள்ள கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், ஜவுளகிரி அய்யூர், நொகனூர், உரிகம், அஞ்செட்டி, பெட்டமுகிலாளம ஆகிய கிராமங்கள் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காட்டையொட்டி அமைந்து உள்ளன. ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் வரை ராகிப்போரை குறிவைத்து 100-க்கும் அதிகமான யானை கும்பல் நுழைவதும் வழக்கமான ஒன்று.

    வருடம் முழுவதும் யானைகள் மேற்கண்ட காப்புக்காடுகளில் தஞ்சம் அடைவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கண்காணிப்பு கேமிராவில் கர்நாடக மாநிலமான பன்னேர்கட்டா வனப்பகுதியில் இருந்து 2 சிறுத்தை புலிகள் ஜவுளகிரி காப்புக் காட்டுக்குள் நுழையும் காட்சி பதிவாகி உள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் தீபக் பில்ஜிக்கு கிடைத்த அதிகாரப்பூர்வமான செய்தியின் அடிப்படையில் ஜவுளகிரி காப்புக்காட்டுக்குள் நுழைந்த 2 சிறுத்தை புலிகளின் நடமாட்டம் குறித்து கண்காணிக்க ஜவுளகிரி வனச்சரகர் முருகேசனுக்கு உத்தரவிட்டார். அவரின் உத்தரவுப்படி ஜவுளகிரி வனச்சரகர் முருகேசன் மற்றும் வனத்துறையினர் இரவு பகலாக கண்காணிப்பு கேமராவில் பதிவான சிறுத்தை புலிகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் தீபக்பில்ஜி பொதுமக்களுக்கு விடுத்து உள்ள வேண்டுகோளில் கூறி இருப்பதாவது:-

    காப்புக்காட்டின் அருகில் வசிக்கும் பொதுமக்கள் ஆடு, மாடுகளை வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக அனுப்ப வேண்டாம். அப்படி வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    2 சிறுத்தை புலிகள் நுழைந்து உள்ளதால் வனப்பகுதியையொட்டி உள்ள கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
    அரூர் அருகே வனப்பகுதியில் கள்ளத்துப்பாக்கியால் காட்டெருமையை கொன்று கறியை பங்கு போட்டு எடுத்து 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை வனச்சரசம் மாம்பாடி பகுதியில் தீர்த்தமலை வனச்சரகர் தண்டபாணி தலைமையில் வனவர் வேலு, வனக்காப்பாளர்கள் முகமது வக்கீல், மணி, ஜான்அந்தோணி ஆகியோர் அடங்கிய குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

    அப்போது மல்லூத்து பகுதியில் சத்தம் கேட்டு சென்று கொண்டிருந்த போது கும்பலாக வந்த சிலர் வனத்துறையினரை பார்த்தவுடன் ஓடி விட்டனர். அதில் 2 பேரை மட்டும் வனத்துறையினர் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில்  மாம்பாடி நரிமேட்டை பகுதியை சேர்ந்த 12 பேர் அடங்கிய கும்பல் கள்ளத்துப்பாக்கியால் காட்டெருமையை கொன்று கறியை பங்கு போட்டு எடுத்து வந்தது தெரியவந்தது.  

    பிடிப்பட்ட ரத்தினம் (வயது 47), கோவிந்தன் (60) 2 பேரையும் தருமபுரி மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி, அரூர் நீதிமன்ற நடுவர் இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தப்பியோடிய 10 பேரையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரியில் தோட்டத்தில் புகுந்த 11 அடி மலைப்பாம்பை வனத்துறையில் பிடித்து வன பகுதியில் கொண்டு விட்டனர்.
    வேப்பனஅள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, பட்டா குருபரபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா (வயது50). இவரது தோட்டத்தில் திடீரென சத்தம் கேட்டது. அப்போது அந்த பகுதியில் அவர் சென்று பார்த்த போது 11 அடி நீள மலைப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    இது குறித்து வனத்துறையினருக்கு  தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பு பிடிக்கும் குச்சியை வைத்து அந்த மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் செப்டிபள்ளி வன பகுதியில் கொண்டு விட்டனர்.

    தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே காலில் அடிபட்டு கிடந்த மானை வனத்துறையினர் சிகிச்சை அளித்து காட்டில் கொண்டு விட்டனர்.
    இண்டூர்:

    தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பாரப்பட்டி, தொப்பூர் ஆகிய வனப்பகுதிகளில் மான், காட்டெருமை போன்ற வனவிலங்குகள் உலாவி வருகின்றன. வனப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை இன்றி ஏரி மற்றும் குளங்கள் வறண்டு கிடக்கின்றன. இதனால் வனப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகள் அடிக்கடி தண்ணீர் மற்றும் இரையை தேடி நகருக்குள் புகுந்து விடுவது வழக்கம் தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள பேடரஅள்ளி கிராமத்தில் இன்று காலில் அடிப்பட்டு காயமடைந்த நிலையில் மான் ஒன்று மயங்கி கிடந்தது.

    இதனை அப்பகுதியில் இருந்த நாய்கள் ஒன்று திரண்டு வந்து குரைத்தது. சத்தம் கேட்டு வெளியே வந்த அந்த பகுதி மக்கள் நாய்களை விரட்டி விட்டனர். இதுகுறித்து உடனே அவர்கள் இண்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து மானை மீட்டு பாப்பாரப்பட்டி அரசு கால்நடை மருத்துவ மனைக்கு மானை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அடிப்பட்ட மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அங்கு வந்த வனசரக அலுவலர் சுப்பிரமணி மானை மீட்டு மொரப்பூர்- பாப்பாரப்பட்டி இடையே உள்ள வனப்பகுதியில் விட்டனர்.
    கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளில் நக்சலைட்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3-ல் ஒரு பங்கு வனப்பகுதி உள்ளன. குறிப்பாக ஆந்திரா, கர்நாடக மாநில எல்லைப்பகுதியையொட்டிய வனப்பகுதிகளும் கிருஷ்ணகிரி மாவட்டத்தையொட்டி அமைந்துள்ளன.

    இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில எல்லையில் உள்ள வனப்பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் எதுவும் உள்ளதா? என நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் கிருஷ்ணகிரி, பர்கூர், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட வனப்பகுதிகளில் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது வனப்பகுதியையொட்டி உள்ள கிராமமக்களிடம் சந்தேகத்திற்கு இடமான வகையில் யாராவது நடமாடினால் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். 
    ஆந்திர மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த தனது மனைவியை ஊரார் உதவியுடன் காட்டுப்பாதை வழியே 12 கிலோ மீட்டர் தூரம் கணவர் தூக்கி சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #AndhraPradesh #NHRC
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் சாலை வசதிகள் முறையாக இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கலக்கமடைந்த கணவர் சாலை வசதி இல்லாததால் கிராமத்து மக்கள் உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தார். 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்கு தனது மனைவியை தூக்கிச் சென்றுள்ளார்.



    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களிலும் விமர்சிக்கப்பட்டது.

    இதையடுத்து, தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை செய்ய முடிவு செய்துள்ளது. சாலை வசதி குறைபாட்டால் கர்ப்பிணிப் பெண் 12 கிலோ மீட்டர் தூக்கிச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆந்திர மாநில அரசுக்கும், தலைமை செயலருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. #AndhraPradesh #NHRC
    ×