search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எடியூரப்பா"

    • கொரோனா கால நிவாரண நிதியில் முறைகேடு செய்ததாக அந்த சமயத்தில் எடியூரப்பா தலைமையில் ஆட்சியில் பாஜக மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • இதுதொடர்பாக கடந்த ஆண்டு நீதிபதி மைக்கேல் டி'குன்ஹா தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

    கர்நாடகாவில் ஆளும் காங்கிரசை சேர்ந்த முதலவர் சித்தராமையா சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டது இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், முறைகேட்டில் முதல்வர் சித்தராமையாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் எழுந்த குற்றச்சாட்டு கர்நாடக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

    இந்நிலையில் கொரோனா கால நிவாரண நிதியில் முறைகேடு செய்ததாக அந்த சமயத்தில் எடியூரப்பா தலைமையில் ஆட்சியில் பாஜக மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு நீதிபதி மைக்கேல் டி'குன்ஹா தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. பலகோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது என்றும், பல கோப்புகள் காணாமல் போயுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக ரூ.1000 கோடி வரை கொரோனா நிவாரண நிதியில் ஊழல் நடந்திருப்பதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதற்கிடையே இந்த அறிக்கை தொடர்பாகச் சட்டமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்ட நிலையில் அடுத்த குளிர்கால கூட்டத்தொடர் வரை இன்னும் 6 மாதங்களுக்குக் குழு இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் என்று தெரிவித்துள்ளார். 

    • எடியூரப்பாவுக்கு வெட்கம் இருக்குமென்றால், அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
    • குமாரசாமிக்கு என்ன தார்மீக உரிமை உள்ளது?. ஜந்தாகல் சுரங்க வழக்கை மறந்துவிட்டாரா?

    முடா முறைகேடு தொடர்பாக சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர்கள் மைசூரு நோக்கி (Mysuru Chalo) நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, "என்னை கேள்வி கேட்பதற்கு பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சி தலைவர்கள் யாருக்கும் தார்மீக உரிமை கிடையாது. மக்கள் அவர்களை விரட்ட வேண்டும்" என்றார்.

    மேலும் சித்தராமையா கூறியதாவது:-

    ஆங்கிலேயர்களை இந்தியாவிலிருந்து விரட்டியடிக்கும் வரலாற்று சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு தினம் ஆகஸ்ட் 9 ஆகும். பிற்படுத்தப்பட்ட, சுரண்டப்படும் மக்களை சகித்துக்கொள்ள முடியாத மனுவாதிகளையும், சாதிவெறியர்களையும், நிலப்பிரபுக்களையும் எதிர்க்க வேண்டும், கண்டிக்க வேண்டும்.

    எடியூரப்பாவுக்கு வெட்கம் இருக்குமென்றால், அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அவருக்கு 82 வயதாகிறது. போக்சோ சட்டத்தின்கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர் என்னை ஆகஸ்ட் 10-க்குள் ராஜினாமா செய்ய வேண்டும் என சொல்கிறார்.

    அவருக்கு என்ன தார்மீக பொறுப்பு இருக்கிறது? அவர் ஒன்றிரண்டு மோசடிகள் மட்டுமா செய்தார்? 18 முதல் 20 மோசடிகளில் பிடிபட்டுள்ளாளர். விஜயேந்திராவும் பல மோடிசகளில் சிக்கியுள்ளார். பாஜக-வின் விஜயபுரா எம்எல்ஏ யட்னால், விஜயேந்திரா ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    குமாரசாமிக்கு என்ன தார்மீக உரிமை உள்ளது?. ஜந்தாகல் சுரங்க வழக்கை மறந்துவிட்டாரா? 20 நிறுவனங்கள் புதுப்பிக்க நீங்கள் அனுமதி கொடுத்தீர்கள். என்னை ராஜினாமா செய்ய சொல்ல உங்களுக்கு வெட்கமில்லையா?

    அவர்கள் இப்போது பதில் சொல்ல வேண்டும். வெறுப்பு மற்றும் பழிவாங்கும் அரசியலை நான் ஒருபோதும் பின்பற்றவில்லை. நான் அப்படி இருந்திருந்தால் முதலில் இப்படி ஒரு நிலை வந்திருக்காது. சிறைக்கு சென்றிருப்பார்கள்.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

    • மக்களவை தேர்தலில் பாஜக 19 இடங்களில் வெற்றி பெற்றது.
    • இந்த 19 இடங்களில் வெற்ற பெற்றதுடன், 142 சட்டமன்ற இடங்களில் அதிகமான வாக்குகள் பெற்றோம்.

    கர்நாடக மாநில மக்கள் பயனற்ற வாக்குறுதிகள், பண பலம் மற்றும் அதிகார பலத்தை புறந்தள்ளியுள்ளனர். மக்களவை தேர்தலில் மக்கள் பாஜவை தேர்ந்தெடுத்துள்ளனர். தற்போது தேர்தல் நடத்தப்பட்டால் 150 இடங்களில் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக எடியூரப்பா கூறியதாவது:-

    சித்தராமையாவுக்கு தைரியம் இருந்தால் சட்டமன்றத்தை கலைத்துவிட்டு, மீண்டும் தேர்தல் நடத்த தயாரா? என சாவல் விடுகிறேன். அதன்பிறகு உங்களுடைய நிலை என்ன? என்பது உங்களுக்கு தெரியவரும். தேர்தல் நடத்தப்பட்டால் பாஜக 140-ல் இருந்து 150 வரையிலான இடங்களை பிடிக்கும்.

    மக்களவை தேர்தலில் பாஜக 19 இடங்களில் வெற்றி பெற்றது. மேலும் 142 சட்டமன்ற இடங்களில் அதிகமான வாக்குகளை பெற்றோம். ஒரு வருடத்திற்கு முன்னதாக 134 இடங்களில் வெற்றி பெற்று கார்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. தற்போது சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட பல அமைச்சர்களின் சட்டமன்ற இடங்களில் பாஜக உடன் குறைவான வாக்குகளை பெற்றுள்ளது.

    இது ஊழலில் ஈடுபட்டு, மக்களின் நலனை புறந்தள்ளி ஒரு வருடத்திற்குள் மக்கள் ஆதரவை இழந்துள்ளது என்பதை காண்பிக்கிறது. இதன்மூலம் ஆட்சியில் தொடர் தார்மீக உரிமை இல்லை. மக்கள் பண அதிகாரம் உள்ளிட்டவைகளை புறந்தள்ளி, மோடியின் மீது தங்கள் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

    பயனற்ற வாக்குறுதிகள் காரணமாக அனைத்து பொருட்களின் விலைவாசியையும் அதிகரித்து விட்டது. பணவீக்கத்திற்கு அடித்தளத்தை அமைத்தது.

    இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.

    • எடியூரப்பா மீது சிஐடி போலீசார் நேற்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
    • பெண்னின் வீட்டுக்குச் சென்று தாயையும் மகளையும் தங்களின் இடத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.

    பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கர்நாடகா மாநில முன்னாள் முதல்வருமான 81 வயதான எடியூரப்பா தனது 17 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அவர் மீது போக்சோ வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக துரித நடவடிக்கை மேற்கொள்ள வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட்டது.

    அதன்படி சிஐடி போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் எடியூரப்பா மீது சிஐடி போலீசார் நேற்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில், பாதிக்கப்பட்ட 17 வயது பெண்ணும் அவரது தாயும் தங்களுக்கு நேர்ந்தது குறித்து வாய் திறக்காமல் இருக்க எடியூரப்பா மற்றும் அவரது சகாக்கள் 3 பேர் அவர்களுக்கு பணம் கொடுத்துள்ளனர் என்று சிஐடி அம்பலப்படுத்தியுள்ளது.

    கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் பேஸ்புக்கில் எடியூரப்பாவை குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில், எடியூரப்பாவின் சகாக்களான அருண், ருத்ரேஷ், மாரிச்சாமி ஆகியோர் அப்பெண்னின் வீட்டுக்குச் சென்று தாயையும் மகளையும் தங்களின் இடத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.

    அங்கு வைத்து பெண்ணின் தாய் பேஸ்புக்கில் பதிவிட்ட வீடியோவை நீக்க வறுபுறுத்தியுள்ளனர். மேலும் எடியூரப்பாவின் கட்டளைப்படி அவர்களுக்கு ரூ. 2 லட்சம் ரொக்கமாக அளித்துள்ளனர் என்று அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கடந்த மாதம் நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

    • பெங்களூரு நீதிமன்றம் எடியூரப்பாவிற்கு எதிராக ஜாமினில் வரமுடியாத கைது வாரன்ட் பிறப்பிப்பு.
    • ஜூன் 17ம் தேதி வரை கைது செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவரது தாயார், எடியூரப்பா மீது புகார் அளித்தார். இதனடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கான இது தொடர்பான வழக்கை கர்நாடக மாநில டிஜபி, சிஐடி-க்கு மாற்றினார்.

    சிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி எடியூரப்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் எடியூரப்பா சிஐடி முன் ஆஜராகவில்லை.

    இந்த நிலையில் பெங்களூரு நீதிமன்றம் எடியூரப்பாவிற்கு எதிராக ஜாமினில் வரமுடியாத கைது வாரன்ட்-ஐ பிறப்பித்துள்ளது. இதனால் சிஐடி போலீசாரால் எடியூரப்பா கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், எடியூரப்பாவுக்கு எதிரான பிடிவாரண்ட்டுக்கு இடைக்கால தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பிடிவாரண்டுக்கு எதிராக எடியூரப்பா தரப்பு கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், ஜூன் 17ம் தேதி வரை கைது செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • 17 வயது சிறுமிக்கு பாலியல தொந்தரவு கொடுத்ததாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • சிஐடி போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில், நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தனர்.

    17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவரது தாயார், எடியூரப்பா மீது புகார் அளித்தார். இதனடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கான இது தொடர்பான வழக்கை கர்நாடக மாநில டிஜபி, சிஐடி-க்கு மாற்றினார்.

    சிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி எடியூரப்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் எடியூரப்பா சிஐடி முன் ஆஜராகவில்லை.

    இந்த நிலையில் பெங்களூரு நீதிமன்றம் எடியூரப்பாவிற்கு எதிராக ஜாமினில் வரமுடியாத கைது வாரன்ட்-ஐ பிறப்பித்துள்ளது. இதனால் சிஐடி போலீசாரால் எடியூரப்பா கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எடியூரப்பா பாஜக கட்சியின் பாராளுமன்ற குழு உறுப்பினராக உள்ளார். தற்போது அவர் டெல்லியில் உள்ளார். கர்நாடகா திரும்பிய பிறகு சிஐடி விசாரணைக்கு செல்வார் என, அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்ததன. இந்த நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    81 வயதான எடியூரப்பா பெண்ணின் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்த நிலையில், சட்டப்பூர்வமாக இந்த வழக்கை எதிர்கொள்வேன் எனத் தெரிவித்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் சிஐடி அதிகாரிகள் எடியூரப்பாவின் குரல் மாதிரியை சேகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக கர்நாடக மாநில உள்துறை மந்திரி ஜி. பரமேஷ்வரா "ஜி. பரமேஷ்வரா கூறியதாவது:-

    நடைமுறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை ஜூன் 15-ந்தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். சிஐடி போலீசார் அதற்கு முன்னதாகவே குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து விடுவார்கள். அதன்பின் அவர்கள் நடைமுறையை பின்பற்றுவார்கள்.

    எடியூரப்பாவின் வாக்குமூலத்தை பெறுவார்கள். அவசியம் என்றால் சிஐடி போலீசாரால் எடியூரப்பா கைது செய்யப்படுவார். அது அவசியமா என்று என்னால் சொல்ல முடியாது. சிஐடி அதிகாரிகள் சொல்வார்கள். அவர்கள் அவசியம் என்று உணர்ந்தால், அதை செய்வார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

    • 17 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் ஒருவர் புகார்.
    • கர்நாடகா மாநில போலீசார் இந்த வழக்கை சிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

    பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கர்நாடகா மாநில முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மீது பெண் ஒருவர் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது 17 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குறிப்பிட்டிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் அந்த பெண் புகார் அளித்திருந்தார்.

    அதன்அடிப்படையில் அவர் மீது போக்சோ வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கர்நாடக மாநில டிஜிபி அலோக் மோகன் இது தொடர்பான வழக்கை சிஐடி-க்கு மாற்றினார்.

    சிஐடி போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் எடியூரப்பா கைது செய்யப்படுவாரா? என கேட்கப்பட்ட கேள்விக்கு கர்நாடக மாநில உள்துறை மந்திரி ஜி. பரமேஷ்வரா பதில் அளித்தார்.

    இது தொடர்பாக ஜி. பரமேஷ்வரா கூறியதாவது:-

    நடைமுறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை ஜூன் 15-ந்தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். சிஐடி போலீசார் அதற்கு முன்னதாகவே குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து விடுவார்கள். அதன்பின் அவர்கள் நடைமுறையை பின்பற்றுவார்கள்.

    எடியூரப்பாவின் வாக்குமூலத்தை பெறுவார்கள். அவசியம் என்றால் சிஐடி போலீசாரால் எடியூரப்பா கைது செய்யப்படுவார். அது அவசியமா என்று என்னால் சொல்ல முடியாது. சிஐடி அதிகாரிகள் சொல்வார்கள். அவர்கள் அவசியம் என்று உணர்ந்தால், அதை செய்வார்கள்.

    இவ்வாறு ஜி. பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

    எடியூரப்பா பாஜக கட்சியின் பாராளுமன்ற குழு உறுப்பினராக உள்ளார். தற்போது அவர் டெல்லியில் உள்ளார். கர்நாடகா திரும்பிய பிறகு சிஐடி விசாரணைக்கு செல்வார் என, அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    எடியூரப்பாக மீது புகார் அளித்த 54 வயதான பெண், கடந்த மாதம் தனியார் மருத்துவமனையில் நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

    81 வயதான எடியூரப்பா பெண்ணின் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்த நிலையில், சட்டப்பூர்வமாக இந்த வழக்கை எதிர்கொள்வேன் எனத் தெரிவித்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் சிஐடி அதிகாரிகள் எடியூரப்பாவின் குரல் மாதிரியை சேகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எடியூரப்பா மீது 17 வயது சிறுமியின் தாயார் பாலியல் புகார் அளித்துள்ளார்.
    • எடியூரப்பா மீது பெங்களூரு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா. இவர் பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் மீது 17 வயது சிறுமியின் தாயார் சதாஷிவநகர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் எடியூரப்பா மீது போக்சா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தனது மகள் உடன் எடியூரப்பாவை கல்வி உதவித் தொகை தொடர்பாக சந்திக்க சென்றதாகவும், அப்போது தனது மகளை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அந்த சிறுமியின் தாயார் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    17 வயது சிறுமியின் தாயாரின் புகார் அடிப்படையில் பெங்களூரு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை சிஐடிக்கு மாற்றப்பட்டது.

    இந்நிலையில், புகாரளித்த சிறுமியின் தாயார் இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    நுரையீரல் புற்றுநோய் பிரச்சனை காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்துபோனதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மரணமடைந்த சிறுமியின் தாயார் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் பாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும் "நாளை எடியூரப்பாவை சந்திக்க சிறுமியின் தாயார் நேரம் கேட்டிருந்தார். ஆனால் தற்போது அவர் மரணமடைந்துள்ளார். அவரது மரணத்தின் மீது சந்தேகம் இருக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் ஒருவர் புகார்.
    • புகார் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பெங்களூரு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக எடியூரப்பா கூறியதாவது:-

    சில தினங்களுக்கு முன்னதாக பெண் ஒருவர் எனது வீட்டிற்கு வந்தார். அவர் அழுது கொண்டே சில பிரச்சனைகளை கூறினார். என்ன பிரச்சனை என்று அவரிடம் நான் கேட்டேன். அத்துடன் தனிப்பட்ட முறையில் போலீஸ் கமிஷனருக்கு போன் செய்து, இது தொடர்பாக பேசினேன். மேலும் அந்த பெண்ணிற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டேன்.

    பின்னர், அந்த பெண் எனக்கு எதிராக பேசத் தொடங்கிவிட்டார். இந்த விவகாரத்தை நான் போலீஸ் கமிஷனர் கவனத்திற்கு கொண்டு சென்றேன். நேற்று எனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இதற்கு பின்னால் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக என்னால் கூற முடியாது.

    இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

    கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தனது மகள் உடன் எடியூரப்பாவை கல்வி உதவித் தொகை தொடர்பாக சந்திக்க சென்றதாகவும், அப்போது தனது மகளை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகவும் பெண் ஒருவர் எடியூரப்பா மீது புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • கல்வி உதவித்தொகை தொடர்பாக உதவி கேட்க சென்றபோது சம்பவம் நடைபெற்றதாக சிறுமியின் தாய் புகார்.
    • பெங்களூரு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

    கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா. இவர் பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் மீது 17 வயது சிறுமியின் தாயார் சதாஷிவநகர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் எடியூரப்பா மீது போக்சா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தனது மகள் உடன் எடியூரப்பாவை கல்வி உதவித் தொகை தொடர்பாக சந்திக்க சென்றதாகவும், அப்போது தனது மகளை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அந்த சிறுமியின் தாயார் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    17 வயது சிறுமியின் தாயாரின் புகார் அடிப்படையில் பெங்களூரு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • ஒவ்வொரு முகக்கவசம் (Mask) 45 ரூபாய்தான். ஆனால், எடியூரப்பா அரசு 485 ரூபாய் என கணக்கு எழுதியது.
    • படுக்கைகளுக்கு கொடுத்த வாடகை பணத்தில் சொந்தமாக வாங்கியிருக்கலாம் எனக் குற்றச்சாட்டு.

    கொரோனா காலத்தில் முதல்வராக இருந்த எடியூரப்பா 40 கோடி ரூபாய் ஊழல் மோசடியில் ஈடுபட்டார் என பா.ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. பகனாகவுடா பாட்டீல் யாத்னால் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

    விஜயபுரா தொகுதியில் இருந்து பா.ஜனதா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இது தொடர்பாக விசாரணை தேவை எனவும் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோது, கொரோனா காலத்தில் எத்தனை கோடி ரூபாய் ஊழல் நடந்தது என்று உங்களுக்கு தெரியுமா?. கொரோனா தலைவிரித்தாடிய காலத்தில் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றது.

    பா.ஜனதா அரசு மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டது. இந்த குற்றச்சாட்டை நான் தெரிவிப்பதால் அவர்கள் நோட்டீஸ் அனுப்பி, என்னை கட்சியில் இருந்து நீக்க முயற்சித்தால், அவர்களின் மோசடியை வெளிப்படுத்துவேன்.

    ஒவ்வொரு முகக்கவசம் (Mask) 45 ரூபாய்தான். ஆனால், எடியூரப்பா அரசு 485 ரூபாய் என கணக்கு எழுதியது. பெங்களூருவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 10 ஆயிரம் படுக்கைகள் தயார் செய்ததாக கூறினார்கள். அவைகள் அனைத்தும் வாடகைக்கு எடுக்கப்பட்டது.

    ஆனால் அவற்றை விலை கொடுத்து வாங்கினால் ஒரு நாள் வாடகைக்கான தொகையில் இரண்டு படுக்கைகள் (Beds) வாங்கியிருக்கலாம். ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் வாடகையாக செலுத்தினார்கள். அதற்கு இரண்டு நல்ல படுக்கைகளை வாங்கியிருக்கலாம். கொரோனா காலத்தில் ஒரு நாளைக்கு அவர்கள் எவ்வளவு செலவு செய்தார்கள் தெரியுமா?.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    சொந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரே எடியூரப்பா மற்றும் கட்சி மீது ஊழல் மோசடி குறித்து வெளிப்படையாக குற்றம்சாட்டிய விவகாரம் கர்நாடக அரசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் முதலமைச்சர் எடியூரப்பா, எம்.எல்.ஏ. பசனாகவுடா பாட்டீல் யாட்னால் அறிக்கை கொரோனா காலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் மோசடிக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் சிகிச்சை மற்றும் கட்டுப்படுத்துதல் பெயரில் எடியூரப்பா அரசு 4 ஆயிரம் கோடி அளவில் ஊழல் செய்ததாக காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆவணங்களுடன் குற்றம்சாட்டியதாகவும் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடகா மாடல் என மற்ற மாநிலங்களில் கூறி வரும் காங்கிரஸ், உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவதில் தோல்வி.
    • தெலுங்கானா மக்களை ஏமாற்றுவதற்கான 6 உத்தரவாத திட்டங்களை காங்கிரஸ் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. சந்திரசேகர ராவ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்துள்ளார். அவரிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் நினைக்கிறது. இதற்கிடையே தெலுங்கானாவில் காலூன்ற பா.ஜனதா விரும்புகிறது.

    மூன்று கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தெலுங்கானாவில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததில் இருந்து, கர்நாடக மாடல் என மற்ற மாநிலங்களிலும் பிரசாரம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், பா.ஜனதா தலைவரும்மான எடியூரப்பா தெலுங்கானாவில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது எடியூரப்பா கூறியதாவது:-

    கர்நாடகாவில் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, ஐந்து முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் எனத் தெரிவித்த காங்கிரஸ், அதை நிறைவேற்றாமல் கர்நாடக மக்களை ஏமாற்றியுள்ளது.

    கர்நாடகா மாடல் என மற்ற மாநிலங்களில் கூறி வரும் காங்கிரஸ், உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் கர்நாடகா மக்களை ஏமாற்றியுள்ளது.

    தெலுங்கானா மக்களை ஏமாற்றுவதற்கான 6 உத்தரவாத திட்டங்களை காங்கிரஸ் கட்சி அதன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொய்கள் மற்றும் வெற்று வாக்குறுதிகளால் ஏமாற வேண்டாம் என தெலுங்கானா மக்களை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

    ×