search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 109311"

    • மணப்பெண்ணுக்கு உரிய திருமண வயது ஆகவில்லை.
    • சிறுமிக்கு குழந்தைகள் திருமணம் குறித்த விழிப்புணர்வு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே சாலியமங்கலம் கீழ ரெயில்வே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், கரூர் மாவட்டம் சுக்காம்பட்டியை சேர்ந்த 22 வயது வாலிபருக்கும் தஞ்சையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று காலை திருமண நடக்க இருந்தது.

    மணப்பெண்ணுக்கு உரிய திருமண வயது ஆகவில்லை என்பதால் திருமணத்தை நிறுத்த கோரி மாவட்ட சமூக அலுவலகத்துக்கு புகார் சென்றது.

    இதையடுத்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் படி மாவட்ட சமூக நல அலுவலகம் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி விமலா மற்றும் குழுவினர் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்திற்கு விரைந்து சென்றனர்.

    மேலும் தஞ்சை அனைத்து மகளிர் போலீசாரும் பாதுகாப்பிற்கு சென்றனர்.

    தொடர்ந்து சிறுமியிடம் குழந்தைகள் நல குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து திருமணத்தை தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டு மாவட்ட குழந்தைகள் நல குழுவினரிடம் ஒப்படைத்தனர்.

    அங்கு சிறுமிக்கு குழந்தைகள் திருமணம் குறித்த விழிப்புணர்வு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    காளையார்கோவில் அருகே பாலத்தின் தடுப்புச் சுவரின் மீது கார் மோதியதில் சிறுமி, முதியவர் பரிதாபமாக இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    காளையார்கோவில்:

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள பெத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 50). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சபீதா என்ற மனைவியும், நசீன் பாத்திமா (14) என்ற மகளும் உள்ளனர்.

    வெளிநாட்டில் இருந்த இஸ்மாயில் நேற்று விமானம் மூலம் ஊருக்கு புறப்பட்டார். திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கும் அவரை அழைத்து வருவதற்காக சபீதா, தனது மகள் நசீன் பாத்திமா, உறவினர் ராஜா முகமது (60) ஆகியோருடன் காரில் நேற்று இரவு திருச்சிக்கு புறப்பட்டார். காரை பரமக்குடியைச் சேர்ந்த செல்வம் (37) என்பவர் ஓட்டினார்.

    விமானத்தில் வந்து இறங்கிய இஸ்மாயிலை அழைத்துக் கொண்டு இன்று அதிகாலை 2 மணியளவில் அவர்கள் ஊருக்கு காரில் புறப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தை அடுத்துள்ள புல்லுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி பாலத்தின் தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது.

    இதில் கார் நொறுங்கியது. உள்ளே இருந்தவர்கள் படுகாயம் அடைந்து கூக்குரலிட்டனர். இந் விபத்தில் நசீன் பாத்திமா, ராஜா முகமது ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இஸ்மாயில், சபீதா, டிரைவர் செல்வம் ஆகியோரை அந்தப் பகுதி மக்கள் மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து குறித்து காளையார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக கோவில் பூசாரியை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவையை அடுத்த கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 61).

    மளிகை கடை நடத்தி வரும் இவர் அப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பூசாரியாகவும் உள்ளார்.

    சம்பவத்தன்று அதேபகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் தண்டபாணியின் கடைக்கு சாக்லெட் வாங்க சென்றார். அப்போது தண்டபாணி சிறுமியிடம் நைசாக பேசி வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி வலியால் துடித்து அலறியபடி வெளியே ஓடினார்.

    மறுநாள் பள்ளியில் வைத்து சிறுமி வலியால் துடித்ததை பார்த்த ஆசிரியை அவரிடம் விசாரித்த போது நடந்த சம்பவங்களை சிறுமி கூறினார். அதிர்ச்சியடைந்த ஆசிரியை, சிறுமியின் பெற்றோரை தொடர்பு கொண்டு விவரங்களை கூறினர். பின்னர் சிறுமியை சிகிச்சைக்காக கேரளாவுக்கு அழைத்து சென்றனர்.

    இந்நிலையில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவரது உறவினர் ஒருவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு தொடர்பு கொண்டு புகார் செய்தார். இதுகுறித்து அவர்கள் கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து சிறுமியின் தாயாரிடம் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் விசாரணை நடத்தினார். மேலும், அவர் அளித்த புகாரின்பேரில் தண்டபாணியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு சட்டத்தின் (போக்கோ) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.
    உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் 4 இளைஞர்கள் துப்பாக்கி முனையில் சிறுமியை கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #UPGirlMolested
    முசாபர்நகர்:

    உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் மன்சூர்பூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கால்நடைகளுக்கு தீவனம் சேகரிப்பதற்காக நேற்று வயல்வெளிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு சென்ற 4 இளைஞர்கள், அந்த சிறுமியை அருகில் உள்ள கரும்புத் தோட்டத்திற்கு தூக்கிச் சென்றுள்ளனர்.

    அங்கு துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, சிறுமியை நான்குபேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளனர்.

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 இளைஞர்களையும் தேடி வருகின்றனர். அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. #UPGirlMolested
    இறச்சகுளம் அருகே பிறந்தநாள் விழாவின் போது 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் மீது போஸ்கோ சட்டப்படி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    நாகர்கோவில்:

    குலசேகரம் பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் கணவரை பிரிந்து 4 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

    அந்த பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. இவர்களின் குழந்தைக்கு சமீபத்தில் பிறந்த நாள் வந்தது.

    இதற்காக குழந்தையை பெண்ணின் கணவர் இறச்சகுளம் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

    இறச்சகுளம் பகுதியில் உள்ள கணவரின் உறவினர் வீட்டில் சிறுமியின் பிறந்த நாள் விழா நடந்தது. விழா முடிந்த பின்பு சிறுமியை அவரது தாயாரிடம் கணவர் ஒப்படைத்தார்.

    அப்போது சிறுமி, தாயாரிடம், கணவரின் உறவினர் வீட்டில் தனக்கு பாலியல் தொல்லை நடந்ததாக கூறி அழுதார்.

    அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் இது பற்றி பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதில் பிறந்த நாள் விழாவுக்குச் சென்ற இடத்தில் கணவரின் உறவுக்கார சிறுவன், தனது 4 வயது மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்தார்.

    13 வயதே ஆன அந்த சிறுவன் மீது பூதப்பாண்டி போலீசார் போஸ்கோ சட்டப்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    திருக்கனூர் அருகே ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தனியார் பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    பாகூர்:

    திருக்கனூர் அருகே காட்டேரிகுப்பம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி லாஸ்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் தினமும் காலையில் தனியார் பஸ்சில் வேலைக்கு வருவது வழக்கம். மேலும் வேலை முடிந்து அதே பஸ்சில் ஊர் திரும்புவார். அப்போது அந்த பஸ்சின் டிரைவரான கிளியனூரை சேர்த சூரியா (20)-க்கும், அந்த சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    சூர்யா அவ்வப்போது ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை விராம்பட்டினம் பீச் மற்றும்வெளியூர்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்து வந்தார். இதில் அந்த சிறுமி 7 மாத கர்ப்பிணியானாள். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் புதுவை குழந்தை நல குழு அதிகாரி ராஜேந்திரனிடம் முறையிட்டனர்.

    இதையடுத்து நலக்குழு அதிகாரி ராஜேந்திரன் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சூரியாவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சூரியாவை ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் பதுங்கி இருப்பதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ஆந்திர மாநிலத்துக்கு சென்று சூரியாவை கைது செய்தனர். பின்னர் புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். #tamilnews
    திருப்பூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டெய்லரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் செந்தில் குமார்(வயது 39). இவர் பனியன் நிறுவனங்களில் இருந்து துணி பெற்று தைத்துக்கொடுக்கும் வேலை செய்து வருகிறார்.

    இவர் குடும்பத்துடன் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் செந்தில்குமார் மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 9 வயதுடைய 4-ம் வகுப்பு மாணவி, வீட்டில் தனியாக இருந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்தனர்.

    இதை கவனித்த செந்தில்குமார் அந்த சிறுமியிடம் நைசாக பேச்சுக்கொடுத்து தனது வீட்டுக்குள் அழைத்துச்சென்று, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. பின்னர் சிறுமி அங்கிருந்து வெளியே வந்துள்ளாள்.

    இந்த நிலையில் வேலைக்கு சென்று விட்டு சிறுமியின் பெற்றோர் இரவு வீடு திரும்பியுள்ளனர். சிறுமியும் தூங்கினாள். அதன் பிறகு அதிகாலையில் சிறுமி தனக்கு நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியுள்ளாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சந்திரமோகன், சப்-இன்ஸ்பெக்டர் கலாவதி, ஏட்டு வனஜா மற்றும் போலீசார், செந்தில்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
    தர்மபுரி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக கைதான தொழிலாளியை போலீசார் சிறையில் அடைத்தனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அழகர் (வயது 37), கூலித் தொழிலாளி.

    அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர், தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    இதன் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் அழகரை போலீசார் கைது செய்தனர்.

    கைதான அழகரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர். #tamilnews
    14 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்தியது விவகாரம் குறித்து பானுப்பிரியாவிடம் குழந்தைகள் ஆணைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். #Bhanupriya
    சென்னை:

    நடிகை பானுப்பிரியா வீட்டில் வேலை பார்த்து வந்த சிறுமியின் தாயார் பானுப்பிரியா தன் மகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.

    பிரபாவதி என்ற பெண் ஆந்திர போலீசில் இது குறித்து புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஆந்திர போலீசார் பானுப்பிரியா குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் பானுப்பிரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் அந்த சிறுமியின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த சிறுமி நகை உள்ளிட்ட பொருட்களை திருடியதாக கூறப்படுகிறது. சிறுமியின் தாயார் திருடப்பட்ட பொருட்கள் தனது வீட்டில் இருப்பதாகவும், அதை எடுத்து தருவதாகவும் கூறிச் சென்றார். ஆனால் அவர் சொன்னபடி பொருட்களை ஒப்படைக்காமல் மகளை பானுப்பிரியா குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக ஆந்திர மாநில போலீசில் பொய் புகார் செய்தார்’ என்று பானுப்பிரியா தரப்பில் கூறப்பட்டது.

    அந்த சிறுமி தற்போது கெல்லீசில் உள்ள காப்பகத்தில் உள்ளார். கடந்தவாரம் அவரிடம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விசாரணை மேற்கொண்டார். விசாரணை அறிக்கை சமூக பாதுகாப்பு துறை ஆணையருக்கும், தொழிலாளர் நல ஆணையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சிறுமியை பணிக்கு அமர்த்தியது தொடர்பாக தொழிலாளர் நல ஆணையம் பானுப்பிரியா மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

    இன்று காலை முதல் நடிகை பானுப்பிரியாவிடம் குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இந்த விசாரணை நடந்து வருகிறது. 14 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்தியது பற்றி பானுப்பிரியாவிடம் விசாரித்து வருகின்றனர். #Bhanupriya
    ஈரோட்டில் கருணாநிதி சிலையை திமுக தலைவர் முக ஸ்டாலின் நாளை மாலை திறந்து வைக்கிறார். சிலை திறப்புக்காக 3-ம் வகுப்பு மாணவி சிறுமி சோபிகா தனது உண்டியல் பணத்தை கொடுத்துள்ளார். #Karunanidhi #DMK
    ஈரோடு:

    ஈரோடு முனிசிபல் காலனியில் சென்னை கலைஞர் அறிவாலயத்தில் உள்ளது போல் முழு உருவ கருணாநிதி சிலை வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சிலையை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (30-ந் தேதி) மாலை திறந்து வைக்கிறார். இந்த சிலை திறப்பு நிகழ்ச்சிக்காக கொடுமுடி அருகே உள்ள சாண்டாம்பாளையம் மேலூரை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவி சிறுமி சோபிகா தனது உண்டியல் பணத்தை கொடுத்துள்ளார்.

    இந்த மாணவி தனது தந்தையிடம் வாங்கும் பணத்தை உண்டியலில் சிறுக... சிறுக சேர்த்து வைத்திருந்தார். இந்த உண்டியல் பணத்தை தான் சிறுமி சோபிகா வழங்க முடிவு செய்தார்.

    உண்டியலை திறந்து பார்த்தபோது அதில் ரூ.1104 இருந்தது. அந்த பணத்துடன் பெற்றோருடன் ஈரோடு வந்த சிறுமி சோபிகா முன்னாள் அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான முத்துசாமியை சந்தித்து வழங்கினார்.

    அந்த சிறுமி கூறும்போது, ‘‘எனக்கு கலைஞர் தாத்தா ரொம்ப பிடிக்கும். கலைஞர் தாத்தா சிலை திறப்புக்காக இந்த பணத்தை கொடுத்துள்ளேன்’’ என்று கூறினார்.  #Karunanidhi #DMK
    மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவினுள் நுழைந்த கவுதமாலா நாட்டைச் சேர்ந்த அகதிகளில் 7 வயது சிறுமி ஒருத்தி அமெரிக்க காவலில் இருந்தபோது பரிதாபமாக மரணம் அடைந்தாள்.
    வாஷிங்டன் :

    ஹோண்டுராஸ், கவுதமாலா, எல் சல்வடார் போன்ற மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள், தங்கள் நாட்டில் நிலவுகிற வறுமை, வன்முறை, துன்புறுத்தல் போன்றவற்றின் காரணமாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

    அவர்கள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவினுள் நுழைந்து அகதிகளாக தஞ்சம் கேட்க முடியாதபடிக்கு ஜனாதிபதி டிரம்ப் நிர்வாக உத்தரவு போட்டார். ஆனால் அதற்கு, சான்பிரான்சிஸ்கோ கோர்ட்டு தடை போட்டது. இருப்பினும் அமெரிக்காவினுள் நுழைகிற மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த வாரம் கவுதமாலா நாட்டைச் சேர்ந்தவர்கள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவினுள் நுழைந்தனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 7 வயது சிறுமி ஒருத்தியும், அவளது தந்தையும் அடங்குவர்.

    ஆனால் அந்த சிறுமி அமெரிக்க காவலில் இருந்தபோது பரிதாபமாக மரணம் அடைந்தாள். அவள் பல நாட்களாக உணவோ, தண்ணீரோ கிடைக்காத நிலையில்தான் மரணம் அடைந்திருக்கிறாள் என்ற நெஞ்சை உலுக்கும் தகவலை எல்லை அதிகாரிகள் கூறியதாக செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

    இருப்பினும் அந்தச் சிறுமியின் மரணம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் முறைப்படி அறிக்கை எதுவும் வெளியிடவில்லை. இந்த சம்பவம், அகதிகள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். #pocsoact
    தூத்துக்குடி:

    நெல்லை மாவட்டம் முக்கூடலை சேர்ந்த ஒரு தொழிலாளிக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் 13 வயதில் ஒரு பெண் உள்ளனர். இந்த சிறுமி நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். தொழிலாளியின் மனைவி மற்றும் அவரது மகன் இருவரும் தூத்துக்குடியில் தங்கி இருந்து அங்குள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் வேலை பார்த்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று சிறுமி விடுமுறையில் தாயை பார்ப்பதற்காக வந்துள்ளார். இதையடுத்து அவரது தாய், சிறுமியை அழைத்து கொண்டு வேலை பார்க்கும் கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடைக்கு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பாப்பனாபுரத்தை சேர்ந்த விக்டர் ராஜா (49) என்பவர் வந்துள்ளார். அப்போது அங்கு நின்ற சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனை பற்றி அவர் தாயிடம் கூறியுள்ளார்.

    இது குறித்து மத்தியபாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்டர்ராஜாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விக்டர்ராஜா ஓய்வு பெற்ற ராணுவவீரர் என்பது குறிப்பிடத்தக்கது. #pocsoact
    ×