என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பீகார்"
- ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனராக இருக்கும் மருத்துவர் சஞ்சய் குமார் என்பவரும் அவரது சகாக்கள் இருவரும் நர்ஸை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.
- நர்ஸ் உபயோகித்த பிளேடு, ரத்தம் தோய்ந்த துணிகள், மூன்று கைபேசிகள், அரை பாட்டில் சாராயம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு பலர் போராடி வரும் அதே வேளையில் பீகாரில் உள்ள மருவத்துவமனையில் நர்ஸை டாக்டர் உட்பட மூவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
பீகாரின் கங்காபூரில் உலா RBS ஹெல்த் கேர் என்ற தனியார் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை இரவு, ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனராக இருக்கும் மருத்துவர் சஞ்சய் குமார் என்பவரும் அவரது சகாக்கள் இருவரும் சேர்ந்து குடிபோதையில் அங்கு பணியாற்றி வந்த நர்ஸ் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடிய நர்ஸ், டாக்டர் சஞ்சய் குமாரின் பிறப்பு உறுப்பை கையில் கிடைத்த பிளேடால் அறுத்துவிட்டுள்ளார்.
அதன்பின் மருத்துவமனையில் இருந்து தப்பித்த நர்ஸ், அருகில் இருந்த இடத்தில் மறைந்துகொண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்துக்கு விரைத்த போலீஸ் நர்ஸை மீட்டு டாக்டர் சஞ்சய் குமார் உட்பட அந்த மூவரையும் கைது செய்துள்ளனர். நர்ஸை பலாத்காரம் செய்ய முடுவெடுத்ததும் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்களை டாகடர் அணைத்துள்ளார் என்றும் சம்பவ இடத்தில் இருந்து நர்ஸ் உபயோகித்த பிளேடு, ரத்தம் தோய்ந்த துணிகள், மூன்று கைபேசிகள், அரை பாட்டில் சாராயம் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போலி மருத்துவர் தலைமறைவானார்.
- இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் பித்தப்பை கல்லை அகற்றுவது எப்படி என யூடியூபைப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவரால் 15 வயது சிறுவன் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
தங்களது ஒப்புதலின்றி 'மருத்துவர்' அஜித்குமார் பூரி அறுவை சிகிச்சையைத் தொடங்கியதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போலி மருத்துவர் தலைமறைவானார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
- அவருக்கு ஜிடிபி என்பதற்கும் ஜிடிபி வளர்ச்சி என்பதற்கும் கூட வித்தியாசம் தெரியாது.
- 9 ஆம் வகுப்பு ஃபெயில் ஆன ஒருவர் பீகாரின் வளர்ச்சிக்கான பாதையைக் காட்டுகிறாராம்.
தேர்தல் வியூக நிபுணராக இருந்த பிரசாந்த் கிஷோர் புதிதாகத் தொடங்கியுள்ள ஜன் சுராஜ் கட்சி அடுத்த வருடம் நடக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளது. இந்நிலையில் பீகாரில் உள்ள போஜ்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரசாந்த் கிஷோர் ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவை 9 ஆம் வகுப்பு ஃபெயில் ஆனவர் என்று சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.
'வசதிகள் இல்லாததால் சிலர் படிக்க முடியாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் முதலமைச்சரின் மகனாக இருந்துகொண்டு 10 ஆம் வகுப்பை கூட தாண்ட முடியாமல் ஒருவர் இருந்தால் அது கல்வி குறித்த அவரின் கண்ணோட்டத்தையே உணர்த்துகிறது. 9 ஆம் வகுப்பு ஃபெயில் ஆன ஒருவர் பீகாரின் வளர்ச்சிக்கான பாதையைக் காட்டுகிறாராம்.
அவருக்கு [தேஜஸ்வி யதாவுக்கு] ஜிடிபி என்பதற்கும் ஜிடிபி வளர்ச்சி என்பதற்கும் கூட வித்தியாசம் தெரியாது. அப்படி இருக்கும்போது, பீகார் வளரும் என்று அவர் எப்படிச் சொல்ல முடியும். பீகார் முதல்வராகத் தனது தந்தை லாலு பிரசாத் சம்பாதித்த புகழைச் சார்ந்தே தேஜஸ்வி இருக்கிறார். அவர் மெரிட்டில் வந்த தலைவர் கிடையது. 10 நாட்களுக்கு டியூசன் சென்றாலும்கூட எந்த பேப்பரையும் பார்க்காமல் 'சோசியலிசம்' பற்றி 5 நிமிடம் கூட அவரால் [தேஜஸ்வியால்] பேச முடியாது' என்று பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.
- தங்களது இடத்துக்கு வரவழைத்த பசு பாதுகாப்பு கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
- கடந்த 2015 முதல் பசுவைக் கொள்வதும், உண்பதும் தடை செய்யப்பட்ட நிலையில் பசு பாதுகாப்பு கும்பல்கள் சட்டத்தை தங்களின் கையில் எடுத்து இதுபோன்ற வெறிச் செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.
அரியானாவில் மாட்டுக் கறி சாப்பிட்டதாக எண்ணிப் பசுப் பாதுகாப்பு குண்டர்களால் இளைஞன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவில் புலம்பெயர் தொழிலாளியாக வேலைக்கு வந்த பீகாரைச் சேர்ந்த சாபிர் மாலிக் என்ற இளைஞன் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி தனது நண்பருடன் சேர்ந்து தான் தங்கியிருந்த குடிசைப் பகுதியில் மாட்டுக் கறி சமைத்தாக சிலர் போலீசில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ் வீட்டில் இருந்த இறைச்சியை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது.
இதற்கிடையில், அன்றைய தினமே காலி பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்க வரும்படி மாலிக் மற்றும் இன்னொரு நபரை தங்களது இடத்துக்கு வரவழைத்த பசு பாதுகாப்பு கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. படுகாயமடைந்த சாபிர் மாலிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
#WATCH :In Badhra of #CharkhiDadri , some youths killed a #migrant worker who sold scrap by #beating him with sticks, accusing him of cooking, eating and selling beef. The youth was identified as #SabirMalik #Umar , 26 years, and was living in a slum in Badhra. The family alleges… pic.twitter.com/r9QTBGQfVf
— Indian Observer (@ag_Journalist) August 31, 2024
இந்நிலையில் சாபிரை தாக்கிய பசு பாதுகாப்பு கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அரியானா மாநிலத்தில் கடந்த 2015 முதல் பசுவைக் கொள்வதும், உண்பதும் தடை செய்யப்பட்ட நிலையில் பசு பாதுகாப்பு கும்பல்கள் சட்டத்தை தங்களின் கையில் எடுத்து இதுபோன்ற வெறிச் செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.
- நாய்கள் உடல் முழுவதும் பலமுறை கடித்து குதறியது.
- அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ் துலாரி சின்கா (வயது 76). இவர், ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார்.
இவரது மகள், அமித்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு கணவருடன் பெங்களூரு ஜாலஹள்ளி விமானப்படை கிழக்கு பிரிவுக்கு உட்பட்ட 7-வது குடியிருப்பில் வசித்து வருகிறார்.
அமித்குமார் இந்திய விமானப்படை வீரராக பணியாற்றி வருகிறார். இதன் காரணமாக விமானப்படைக்கு சொந்தமான குடியிருப்பில் அவருக்கு வீடு வழங்கப்பட்டு இருந்தது.
சமீபத்தில் ராஜ் துலாரி சின்கா தனது மகள்-மருமகனை பார்ப்பதற்காக பீகாரில் இருந்து பெங்களூருக்கு சமீபத்தில் வந்திருந்தார்.
இந்த நிலையில் தனது மருமகன் குடியிருப்புக்கு அருகே காலை 6.30 மணி அளவில் அவர் நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது சுமார் 10 முதல் 12 தெருநாய்கள் திடீரென கூட்டமாக சேர்ந்து ராஜ் துலாரி சின்கா மீது பாய்ந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நாய்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை.
நாய்கள், அவரது உடல் முழுவதும் பலமுறை கடித்து குதறியது. இதை கவனித்த ஒருவர் விரைந்து சென்று நாய்களை விரட்டி விட்டு படுகாயங்களுடன் இருந்த ராஜ் துலாரி சின்காவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து உதவி செய்தார். ஆனாலும் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கங்கமனகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சோக சம்பவம் குறித்து பெங்களூரு மாநராட்சி கமிஷனர் துஷார் கிரி நாத் நிருபர்களிடம் கூறுகையில், மாநகராட்சி சார்பில் தெருநாய்களை கட்டுப்படுத்த கருத்தடை, தடுப்பூசி உள்ளிட்ட ஊசிகள் பயன்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
மனித உயிர்கள் முக்கியம். மேலும் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இறந்தவரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றார்.
- இதற்கு முன்னரும் ஜெய்ஸ்வால் மீது புகார் அளித்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- ஆபீஸ் ரூமில் வைத்து மது அருந்துவதும், மாடியில் படுத்து மசாஜ் செய்து கொள்வதுமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
பீகாரில் பெட்டியா [Bettiah] பகுதியில் இயங்கி வரும் அரசு நர்சிங் GNM டிப்ளமோ படிப்புகளுக்கான பறிச்சி மையத்தின் பிரின்சிபல் ஆபீஸில் மது அருந்தியும் மசாஜ் செய்தும் ஒய்யாரமாக பொழுதைக் கழிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . பிரின்சிபல் ஜெய்ஸ்வால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை படம்பிடித்து அங்கு பயின்று வரும் மாணவர்கள் அம்மாநில முதலமைச்சர் அமைச்சர் அலுவலகத்துக்கும் சுகாதார அமைச்சகத்துக்கும் புகார் கடிதத்துடன் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதற்கு முன்னரும் ஜெய்ஸ்வால் மீது புகார் அளித்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால் இவை தனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் பொருட்டு ஜோடிக்கப்பட்டவை என்று ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். பீகாரில் மதுவிலக்கு அமலில் இருக்கும் நிலையில் அரசு பயிற்சி மையத்தின் தலைவரே ஆபீஸ் ரூமில் வைத்து மது அருந்துவதும், மாடியில் படுத்து மசாஜ் செய்து கொள்வதுமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
- பீகார் தலைநகர் பாட்னாவில் போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
- உதவி கலெக்ட்ரை போலீஸ் அடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பு.
உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசிற்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக பீகார் மாநிலத்தின் பலவேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
பீகார் தலைநகர் பாட்னாவில் போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். போலீசார் நடத்திய தடியடியில், அடையாளம் தெரியாமல் உதவி கலெக்டர் ஸ்ரீகாந்தை காவலர் ஒருவர் லத்தியால் தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் சுற்றியிருந்த போலீசார் அவர் யார் தெரியுமா அவர்தான் உதவி கலெக்டர் என்று அடித்த போலீசாரிடம் விளக்கினர். பின்னர் அந்த இடத்தில் இருந்து உதவி கலெக்டர் சென்றார்.
உதவி கலெக்ட்ரை போலீஸ் அடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
SDM पर भी लाठीचार्ज ! pic.twitter.com/Ag25sd0WDt
— News18 Bihar (@News18Bihar) August 21, 2024
- வீட்டின் மாடியில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு பாம்பு வந்துள்ளது
- குழந்தை தனது வாயில் பாம்பை வைத்து மென்று கொண்டிருப்பதை பார்த்து தாய் அதிர்த்துள்ளார்
பீகாரில் விளையாட்டு பொம்மை என நினைத்து ஒரு வயதுக் குழந்தை பாம்பைக் கடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலம் கயாவில் உள்ள ஜாமுகர் [Jamuhar] கிராமத்தில் கடந்த வாரம் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த ஆண் குழந்தை அங்கு வந்த பாம்பை விளையாட்டுப் பொருள் என்று கருதி கையில் எடுத்து வாயில் வைத்து கடித்துள்ளது.
குழந்தை தனது வாயில் பாம்பை வைத்து மென்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்த தாய், குழந்தையிடம் இருந்து பாம்பைப் பிடுங்கி வீசிவிட்டு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
குழந்தை கடித்ததில் உடலின் ஒரு பகுதி நைந்த நிலையில் அந்த பாம்பு உயிரிழந்துள்ளது. பாம்புக்கு விஷத்தன்மை இல்லாததால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படவில்லை. அப்பகுதியில் மழைக்காலத்தில் அவ்வகை பாம்புகள் அதிகம் காணப்படுவது வழக்கமாக உள்ளது.
- இன்று ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
- மரக்கன்றுகளை நடுவதில் பீகார் அரசு கவனம் செலுத்துகிறது.
ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒரு மரத்திற்கு ராக்கி கயிறு கட்டினார். பின்னர் மரக்கன்றுகளை அவர் நட்டார்.
இந்த நிகழ்வில் அவருடன் பீகார் துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் இருந்தனர்.
இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பீகாரின் பசுமையை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மாநில அரசு 2012-ம் ஆண்டு முதல் ரக்ஷா பந்தன் பண்டிகையை 'பீகார் விருக்ஷ் சுரக்ஷா திவாஸ்' ஆக கடைபிடித்து வருகிறது. நாம் மரங்களை நட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். மரக்கன்றுகளை நடுவதில் மாநில அரசு கவனம் செலுத்துகிறது. மாநிலத்தில் சுற்றுச்சூழல் சுற்றுலாவை அரசு ஊக்குவித்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
रक्षा बंधन एवं 'बिहार वृक्ष सुरक्षा दिवस' के अवसर पर आज पटना स्थित राजधानी वाटिका में वृक्ष को रक्षा सूत्र बांधा। साथ ही इस अवसर पर राजधानी वाटिका में पौधारोपण भी किया।जलवायु परिवर्तन के नकारात्मक प्रभावों को कम करने के लिए वृक्षारोपण करना अतिआवश्यक है। हमलोग जल-जीवन-हरियाली… pic.twitter.com/e5crMTjQ3g
— Nitish Kumar (@NitishKumar) August 19, 2024
- 9 ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்ட பாலத்தின் கட்டுமானப் பணி ஆமை வேகத்தில் நடத்து வருகிறது.
- கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போதே கடந்த ஆண்டுகளில் 2 முறை இடிந்து விழுந்தது
பீகாரில் கங்கை ஆற்றின் குறுக்கே 9 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் பாலம் 3 வது முறையாக இடிந்து விழுந்ததுள்ளது. பீகார் மாநிலம் கஹரியா மாவட்டத்தில் சுல்தான்கஞ்ச் - குவானி கட் பகுதிகளை இணைக்கும் வகையில் கங்கை ஆற்றின் குறுக்கே இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. 9 ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்ட பாலத்தின் கட்டுமானப் பணி ஆமை வேகத்தில் நடத்து வருகிறது.
கட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போதே கடந்த ஆண்டுகளில் 2 முறை இடிந்து விழுந்த இந்த பாலத்தின் பகுதி இன்று 3 வது முறையாக இடிந்து கங்கை ஆற்றில் விழுந்தது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீப காலங்களாகவே பீகாரில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து வரும் நிலையில் தற்போது இந்த பாலம் கங்கை ஆற்றில் இடிந்து விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
अगुवानी सुल्तानगंज में गंगा पे निर्माणाधीन पुल फिर तीसरी बार गिरा ।पूरा system भ्रष्टाचार में लिप्त हैं ।मैं लगातार बोल रहा था कि फिर गिरेगा लेकिन आज तक किसी पे कोई कार्यवाही नहीं हुईं।ना अधिकारी पे ,ना एस.पी सिंघला कंपनी पे ,ना रोडिक कन्सल्टेंसी पे। @narendramodi @nitin_gadkari pic.twitter.com/HLnA3EkaXB
— Dr.Sanjeev Kumar MLA Parbatta,Bihar (@DrSanjeev0121) August 17, 2024
- பாம்பும் கீரியும் சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
- தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள பாம்பு படமெடுத்து கொத்தியது.
பாம்புக்கும் கீரிக்கும் இடையே தீராத பகை உள்ளது. பாம்புக்கும் கீரிக்கும் இடையேயான சண்டையை பற்றி நாம் பல கதைகளில் படித்திருப்போம்.
இந்நிலையில், உண்மையிலேயே பாம்பும் கீரியும் சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பீகாரின் பாட்னா விமான நிலையத்தின் ஓடுதளப் பாதையில் இருந்த ஒரு பாம்புடன் 3 கீரிகள் சண்டையிட்டு கொண்டது.
ஒரு பாம்பை 3 கீரிகள் சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தியதால், தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள பாம்பு படமெடுத்து கொத்தியது.
- பராபர் மலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாபா சித்தேஸ்வர் கோவிலில் சாவன் மாத சிற்பபுப் பூஜைகள் நடந்தன
- கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லத்தியால் பக்தர்களை தாக்கியுள்ளனர்.
பீகார் மாநிலம் பராபர் மலையில் அமைந்துள்ள பாபா சித்தேஸ்வர் கோவிலில் இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் ஜெகன்னாபாத் மாவட்டத்தில் பராபர் மலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாபா சித்தேஸ்வர் கோவிலில் வருடந்தோறும் சாவன் புனித மாதத்தில் நடக்கும் சிறப்புப் பூஜைகளில் ஏராளமானோர் கலந்துகொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் அதிகபடியான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்த நிலையில் பூக்கடை அருகில் சிறிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனைக் கட்டுப்படுத்த போலீசார் லத்தியால் பக்தர்களை தாக்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து கூட்டநெரிசல் ஏற்பட்டதாக உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை போலீஸ் தரப்பு மறுத்துள்ளது.
இந்த கூட்டநெரிசலில் 3 பெண்கள் உட்பட உயிரிழந்த 7 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கூட்டநெரிசலில் சிக்கி 9 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்