search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீகார்"

    • பீகாரில் கடந்த அடுத்தடுத்து 5 பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாலம் இடிந்துவிழுந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
    • இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

    பீகாரில் கடந்த நாட்களில் அடுத்தடுத்து 5 பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாலம் இடிந்துவிழுந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கடந்த 10 நாடிகளில் இடிந்த 6 வது பாலம் இதுவாகும். கனமழையால் பீகார் மாநிலம் கிசான்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தாக்கூர்கஞ்ச் நகரின் பண்ட் ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்ததால் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் ஒரு திடீரென கீறல்கள் விழுந்து ஒரு பகுதி கீழ் இறங்கியதால் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. சில நாடுகளுக்கு முன்புதான் பீகாரில் மதுபானி பகுதியில் கட்டப்பட்டுவந்த 75 மீட்டர் நீளமுடைய பாலம் இடிந்து விழுந்துள்ளது.

    முன்னதாக கடந்த வாரம் கிஷன்கஞ்ச் நகரில் 2011 ஆம் ஆண்டு ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட 70 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட பாலம், தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இடிந்து விழுந்தது. அதற்கு முன்னர் ஆராரியாவில் உள்ள பக்ரா ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், படேதா - கரோலி கிராமங்களை இணைக்கும் சிறிய பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையில் ஜார்கண்ட் மாநிலத்திலும் நேற்று கனமழையால் கிரிதிக் மாவட்டத்தில் உள்ள ஆர்கா நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. 

     

    • 2 வாரங்களுக்குள் 5 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்துள்ளது.
    • தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

    பாட்னா:

    பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள மாதேபூர் நகரில் பூதாஹி ஆற்றின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. மதுபானியை சுபால் மாவட்டத்துடன் இணைக்கும் வகையில் 75 மீட்டர் நீளத்துக்கு பாலம் கட்டப்பட்டு வந்தது.

    கடந்த 2021-ம் ஆண்டு முதல் பீகார் அரசின் ஊரகப் பணிகள் துறையின் மேற்பார்வையில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வந்தன.

    இந்த நிலையில் இந்த பாலம் நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    கனமழையால் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து நீரோட்டம் அதிகரித்ததால் பாலம் இடிந்து விழுந்ததாகவும், நீர்மட்டம் குறைந்த பிறகு பாலம் கட்டும் பணிகள் மீண்டும் தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பீகாரில் கடந்த 11 நாட்களில் நடந்த 5-வது சம்பவம் இதுவாகும்.

    18-ந் தேதி அராரியா மாவட்டத்தில் ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்தது.

    22-ந் தேதி சிவான் மாவட்டத்தில் கண்டக் கால்வாயின் மீது 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிறிய பாலம் இடிந்து விழுந்தது.

    23-ந் தேதி, கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் கட்டுமான பணிகள் நடந்து வந்த பாலம் இடிந்து விழுந்தது.

    26-ந் தேதி கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் மதியா ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது.

    2 வாரங்களுக்குள் 5 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்த சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனிடையே இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், நிதிஷ் குமார் அரசை கடுமையாக சாடினார்.

    இதுப்பற்றி அவர் கூறுகையில், ''நிதிஷ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது, இதன் விளைவாக மாநிலத்தில் அனைத்து கட்டுமானப் பணிகளிலும் தரமற்ற பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்" என்று அவர் குற்றம் சாட்டினார்.

    • ரூ. 3 கோடி செலவில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த பாலம் கட்டப்பட்டு வந்துள்ளது.
    • இடிபாடுகளை தார்பாய்களைக் கொண்டு அதிகாரிகள் மூடி வைத்துள்ளனர்.

    பீகாரில் கடந்த நாட்களில் அடுத்தடுத்து 4 பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாலம் இடிந்துவிழுந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. பீகார் மாநிலம் மதுபானி பகுதியில் கட்டப்பட்டுவந்த 75 மீட்டர் நீளமுடைய பாலம் இடிந்து விழுந்துள்ளது.

    ரூ. 3 கோடி செலவில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த பாலம் கட்டப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஆற்றின்  தண்ணீர் மட்டம் உயர்ந்ததால் 25 மீட்டர் உயரம் கொண்ட பாலத்தின் தூண்கள் இடிந்து பாலத்தின்பகுதி தரைமட்டமாகியுள்ளது. இடிபாடுகளை தார்பாய்களைக் கொண்டு அதிகாரிகள் மூடி வைத்துள்ளனர்.

    முன்னதாக நேற்று முந்தினம் வியாழக்கிழமைதான் கிஷன்கஞ்ச் நகரில் 2011 ஆம் ஆண்டு ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட 70 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட பாலம், தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இடிந்து விழுந்தது. அதற்கு முன்னர் ஆராரியாவில் உள்ள பக்ரா ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், படேதா - கரோலி கிராமங்களை இணைக்கும் சிறிய பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

    இந்த சம்பவங்களுக்கு ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த தலைவர் தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கடந்தாண்டு பீகார் மாநிலம் பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1717 கோடி செலவில் கட்டப்பட்ட பாலத்தின் இரண்டு பகுதிகள் திடீரென ஆற்றில் உடைந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. 

    • தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாலம் இடிந்து விழுந்துள்ளது.
    • புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது

    பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் நகரில் 13 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்துள்ளது. இதனால் பல கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    2011-ம் ஆண்டு ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட 70 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட பாலம், தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இடிந்து விழுந்துள்ளது.

    இது பீகார் மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் இடிந்து விழுந்த 4 ஆவது பாலமாகும். பீகார் மாநிலத்தில் தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சில நாட்களுக்கு பீகார் மாநிலம் ஆராரியாவில் உள்ள பக்ரா ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், படேதா - கரோலி கிராமங்களை இணைக்கும் சிறிய பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இதனால் இரு கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடந்தாண்டு பீகார் மாநிலம் பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1717 கோடி செலவில் கட்டப்பட்ட பாலத்தின் இரண்டு பகுதிகள் திடீரென ஆற்றில் உடைந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

    • நேற்று பிரதமர் மோடி மற்றும் 279 பேர் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர்.
    • சாம்பவி சவுத்ரி தான் பீகார் சமஸ்திபூர் தொகுதியின் முதல் பெண் எம்.பி. ஆவார்.

    18-வது மக்களவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இடைக்கால சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

    நேற்று பிரதமர் மோடி மற்றும் 279 பேர் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். அப்போது, இந்தியாவின் இளம் வயது எம்பிக்களில் ஒருவரான சாம்பவி சவுத்ரி பதவியேற்று கொண்டார்.

    26 வயதான சாம்பவி சவுத்ரி சேலை அணிந்து வந்து எந்த பேப்பரையும் பார்த்து படிக்காமல் உறுதிமொழி எடுத்து கொண்டார்.

    சிராக் பாஸ்வானின் எல்.ஜே.பி, கட்சியை சேர்ந்த சாம்பவி பீகார் மாநிலம் சமஸ்திபூர் தொகுதியின் முதல் பெண் எம்.பி. ஆவார்.

    • பேர் முறைகேடு செய்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.
    • சி.பி.ஐ. அதிகாரிகள் ஆவணங்களை திரட்ட திட்டமிட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடத்தப்பட்டது. தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) இந்த நுழைவுத் தேர்வை நடத்தியது.

    வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்கள் மற்றும் இந்தியாவில் 557 நகரங்கள் என மொத்தம 571 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 4,750 மையங்களில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த நீட் தேர்வை எழுதினார்கள்.

    கடந்த 4-ந்தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதற்கிடையே நீட் தேர்வு எழுதியவர்களில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் கொடுத்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதையடுத்து அந்த 1,563 பேருக்கு நேற்று மறுத்தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் அந்த தேர்வை 813 பேர் தான் எழுதினார்கள். மற்றவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

    நீட் தேர்வு முறைகேடு களில் ராஜஸ்தான், மராட்டி யம், குஜராத், பீகார் மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருப்பது விசா ரணையில் தெரிய வந்தது. குறிப்பாக பீகாரில் நிறைய பேர் முறைகேடு செய்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து நீட் தேர்வு முறைகேடுகள் பற்றி விரிவாக விசாரணை நடத்த சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்திய தண்டனை சட்டத் தின் 120பி (குற்ற சதி), 420 (மோசடி) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    நீட் முறைகேடுகள் தொடர்பாக பீகார் மாநிலத்தில் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்பு இருப்பதை அந்த மாநில போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அங்கு 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதுபோல மராட்டியம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களை சேர்ந்தவர்களும் கைதாகி இருக்கிறார்கள்.

    இவர்களிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இதற்காக பல்வேறு குழுக்களை சி.பி.ஐ. அமைத்து இருக்கிறது.

    அந்த சி.பி.ஐ. சிறப்பு குழுக்கள் குஜராத், பீகார் மாநிலங்களுக்கு விரைந்து உள்ளன. குஜராத் மாநிலம் கோத்ராவில் நீட் முறைகேடு தொடர்பாக கைதானவர்கள் மற்றும் விசாரணை வளையத்தில் இருப்பவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் வாக்கு மூலம் பெற திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    அதுபோல பீகாரில் பாட்னா நகரில் நீட் தேர்வு முறைகேடு நடந்த இடங்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் சந்தித்து தகவல்களை திரட்ட உள்ளனர். இந்த முறைகேடுகளில் நடந்துள்ள ஆள் மாறாட்டம், நம்பிக்கை மீறல், ஆதாரங்கள் அழிப்பு ஆகியவை தொடர்பாகவும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆவணங்களை திரட்ட திட்டமிட்டுள்ளனர்.

    • புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது.
    • இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பீகார் மாநிலம் ஆராரியாவில் உள்ள பக்ரா ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தரமற்ற பொருட்களை கொண்டு பாலம் கட்டப்பட்டதால் தான் இடிந்து விழுந்துள்ளது என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், பீகார் மாநிலத்தில் இன்னொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது.

    பீகார் மாநிலத்தில் படேதா - கரோலி கிராமங்களை இணைக்கும் சிறிய பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இதனால் இரு கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்தாண்டு பீகார் மாநிலம் பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1717 கோடி செலவில் கட்டப்பட்ட பாலத்தின் இரண்டு பகுதிகள் திடீரென ஆற்றில் உடைந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

    • 7 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பாலம் இன்னும் திறக்கப்படவில்லை
    • பாலம் இடிந்து விழுந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பீகார் மாநிலம் ஆராரியாவில் உள்ள பக்ரா ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி இன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது.

    இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    7 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பாலம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தரமற்ற பொருட்களை கொண்டு பாலம் கட்டப்பட்டதால் தான் இடிந்து விழுந்துள்ளது என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    கட்டுமான நிறுவனத்தின் அலட்சியத்தால் தான் பாலம் இடிந்து விழுந்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் விஜய்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

    பீகார் மாநிலத்தில் பாலங்கள் இடிந்து விழுவது ஒன்றும் புதிதல்ல. கடந்தாண்டு பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1717 கோடி செலவில் கட்டப்பட்ட பாலத்தின் இரண்டு பகுதிகள் திடீரென ஆற்றில் உடைந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

    • அந்த அறையில் என்னுடன் பல இளம் பெண்கள் இருந்தனர்.
    • எங்களை அடைத்து வைத்து தினமும் அடித்து பாலியல் சித்திரவதை செய்யத் தொடங்கினர்.

    பீகார் மாநிலம் முஸாபர்பூரில் உள்ள ஒரு கும்பல் பல பெண்களை அடைத்து வைத்து மாதக்கணக்கில் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சமூக வலைதளங்களின் மூலம் இந்த பெண்களை குறிவைத்த அந்த கும்பல் தங்களின் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை தருவதாக ஆசை வார்த்தை காட்டி வரவழைத்து அவர்களை அடைத்து வைத்து இந்த வெறிச்செயல்களில் ஈடுபட்டுள்ளது.

    அவர்களிடம் இருந்து தப்பித்த ஒரு பெண் நேராக சென்று காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து இந்த குட்டு வெளிப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்கள் அடைத்துவைக்கப்பட்ட இடத்துக்கு சென்ற போலீசார் பெண்களை மீட்டனர். குற்றத்தில் ஈடுபட்ட 9 பேர் கொண்ட அந்த குமபல் அங்கிருந்து கம்பி நீட்டிய நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிந்து போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    இடதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த வாக்குமூலம் நெஞ்சைப் பதற வைப்பதாக உள்ளது. அவர்களில் ஒரு பெண் தனது வாக்குமூலத்தில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் என்னைத் தொடர்புகொண்டு வேலை தருவதாக உறுதியளித்த அந்த கும்பலை நம்பி சென்றபோது, என்னை ஒரு அறையில் காத்திருக்க சொன்னார்கள்.

    அந்த அறையில் என்னுடன் பல இளம் பெண்கள் இருந்தனர். பின்னர் எங்களை வேறொரு இடத்துக்கு கூட்டிச் சென்ற அவர்கள், மேலும் பல பெண்களிடம் போன் செய்து அதிக சம்பளத்தில் வேலை இருப்பதாக சொல்லக் சொன்னார்கள். இப்படியாக பல பெண்கள் சேர்ந்ததும் எங்களை அடைத்து வைத்து தினமும் அடித்து பாலியல் சித்ரவதை செய்யத் தொடங்கினர். அதனால் உருவான எங்களின் கருவையும் கலைத்தனர் என்று தெரிவித்துள்ளார். 

    • விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.
    • 17 நாடுகளின் தூதர்கள் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

    புதுடெல்லி:

    பிரதமராக கடந்த 9-ந்தேதி பதவியேற்ற மோடி வாரணாசிக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) செல்கிறார்.

    மாலை 5 மணியளவில் நடைபெறும் விவசயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு விவசாயிகள் நிதி உதவி திட்டத்தின் கீழ் 926 கோடி விவசாயிகளுக்கு 17-வது தவணையாக ரூ.20 ஆயிரம் கோடியை அவர் விடுவிக்க உள்ளார்.

    அத்துடன் வேளாண் தோழிகள் (கிருஷி சகி) திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 30 ஆயிரம் பெண்களுக்கு சான்றிதழ் வழங்க உள்ளார்.

    பின்னர் தசாசுவமேத படித்துறையில் கங்கை ஆரத்தியில் பங்கேற்கும் பிரதமர், காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

    தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க பிரதமர் மோடி வாரணாசிக்கு வருவதாக மாவட்ட பா.ஜ.க. ஊடகப் பிரிவு பொறுப்பாளர் அரவிந்த் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

    விவசாயிகளுக்கு வருவாய் ரீதியில் ஆதரவளிக்கும் நோக்கில் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 11 கோடிக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்களுக்கு இதுவரை ரூ.3 லட்சம் கோடி நிதி நேரடி பலன் பரிமாற்ற முறையின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் வெற்றியை அடுத்து நாட்டின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்ற பின் இத்திட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரம் கோடியை விடுவிப்பதற்கான கோப்பில் தான் மோடி முதல் கையொப்பமிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாரணாசியை தொடர்ந்து நாளை (புதன்கி ழமை) பீகார் மாநிலத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, ராஜ்கிர் பகுதியில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை திறந்து வைக்கிறார்.

    இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டு ஒத்துழைப்பில் உருவாகி உள்ள இந்த வளாகத்தின் திறப்பு விழாவில் 17 நாடுகளின் தூதர்கள் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இரண்டு கட்டப்பிரிவுகளுடன் கூடிய இவ்வளாகத்தில் மொத்தம் 1,200 இருக்கை வசதியுடன் 40 வகுப்பறைகளும் தலா 300 இருக்கைகளுடன் இரு கலை அரங்குகளும் உள்ளன.

    550 மாணவர்கள் தங்கும் வசதி கொண்ட விடுதி, சர்வதேச மையம், 2 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையிலான திறந்த வெளி அரங்கம், ஆசிரியர் மன்றம், விளையாட்டு வளாகம் உள்ளிட்டவை அமைந்து உள்ளன.

    சூரிய மின்உற்பத்தி அமைப்பு, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் மறுசுழற்சி நிலையம், சுமார் 700 ஏக்கரில் நீர்நிலைகள் உள்பட சுற்றுச்சூழலுக்கு உகந்த வசதிகளுடன் 100 சதவீத பசுமை வளாகமாக அமைக்கப்பட்டு உள்ளது.

    • விடுதியில் தயாரிக்கப்படும் 90 சதவீத உணவுகள் கெட்டுபோனவை.
    • மாணவர்கள் போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    பீகாரில் உள்ள அரசுக் கல்லூரியின் தங்கும் விடுதியில் சமைக்கப்பட்ட மெஸ் உணவில் இறந்த பாம்பின் உடல் பாகங்கள் கிடந்த சம்பவம் மாணவர்களின் போராட்டத்தை அடுத்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த உணவை சாப்பிட 10 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பீகார் மாநிலம் பாங்காவில் உள்ள அரசுப் பொறியியல் கால்லூரி தங்கும் விடுதியில் கடந்த வாரம் வியாழனன்று சமைக்கப்பட்ட இரவு உணவில் இறந்த பாம்பின் பாகங்கள் கிடந்துள்ளது. இதனையடுத்து போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் குறித்து அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளனர். விடுதியில் தயாரிக்கப்படும் 90 சதவீத உணவுகள் கெட்டுப்போனவை. அவற்றை சாப்பிடாவிட்டாலோ, மெஸ் கட்டணம் செலுத்தாவிட்டாலோ தேர்வு எழுத அனுமதிக்க மாட்டார்கள் என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

     

    இதன் உச்சமாகவே தற்போது பாம்பு கிடந்த உணவு பரிமாறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மாணவர்களின் போராட்டத்தை அடுத்து பூதாகரமான நிலையில் மாவட்ட நிர்வாகம் இது குறித்த விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும் மாணவர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். 

     

    • 5 நாட்களாக எந்த சிகிச்சையும் அளிக்கப்படாமல் உடைந்த காலில் அட்டைப்பெட்டி கட்டுடன் படுக்கையில் இருந்துள்ளார் நிதிஷ் குமார்.
    • இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சஞ்சீவ் என்பவர் பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

    பீகார் மாநிலத்தில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞருக்கு கார்ட்போர்டு அட்டைப்பெட்டியை வைத்து அரசு மருத்துவர்கள் கட்டுப் போட்டுவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் உடைந்த காலில் அட்டைப்பெட்டி கட்டுடன் மருத்துவமனை படுக்கையில் உள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    இரு சக்கர வாகன விபத்தில் சிக்கிய நிதிஷ் குமார் என்ற அந்த இளைஞர் முஸாபர்பூர் மாவட்டத்தில் உள்ள மினாபூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அட்டைப்பெட்டிகளை வைத்து கட்டுப் போடப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து அவர் முஸாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக்கல்லூரி அரசு மருத்தவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 5 நாட்களாக எந்த சிகிச்சையும் அளிக்கப்படாமல் உடைந்த காலில் அட்டைப்பெட்டி கட்டுடன் படுக்கையில் இருந்துள்ளார் நிதிஷ் குமார்.

    இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சஞ்சீவ் என்பவர் பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், நிதிஷ் குமாருக்கு விரைவில் உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அரசு மருத்துவர்களின் மெத்தனப் போக்குக்கு கடுமையான கண்டனங்கள் குவிந்து வருகிறது. 

    ×