search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்காணிப்பு"

    இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியாக கூடங்குளம் அணுமின் நிலையம் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #SriLankablasts
    கன்னியாகுமரி:

    இலங்கையில் கிறிஸ்தவ ஆலயம் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தது. தீவிரவாதிகள் நடத்திய இந்த பயங்கர தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தனர்.

    இதைத்தொடர்ந்து இலங்கையையொட்டி உள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவும் அபாயம் இருப்பதாலும், அவர்களால் தமிழகத்திலும் தாக்குதல் நடைபெறலாம் என்ற முன் எச்சரிக்கை காரணமாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    நேற்று குமரி மாவட்டத்தின் கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தமிழகம் வருகையை யொட்டியும் கடல் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி இன்று குமரி கடல் பகுதியில் ‘சவுகாஜ்’ என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஈடுபட்டனர்.

    குமரி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் உத்தரவின்படி சப்-இன்ஸ்பெக்டர்கள் நீலமணி, நாகராஜன், சுடலைமணி மற்றும் அனில்குமார், சுப்பிரமணி ஆகியோர் அதிநவீன படகு மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கூடங்குளம் அணுமின் நிலையம் கடல் பகுதி வரை குமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாரின் பாதுகாப்பு எல்லை உள்ளது. இதனால் கூடங்குளம் அணுமின் நிலையம் பகுதியில் அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் இன்று ஈடுபட்டனர்.

    அதேப்போல குமரி மாவட்டத்தின் ஆரோக்கிய புரம் முதல் நீரோடி வரை உள்ள 48 கடற்கரை கிராமங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து வாகனம் மூலம் ரோந்துப்பணியும் நடத்தப்பட்டது.

    இந்த பகுதியில் உள்ள 72 கிலோ மீட்டர் தூர கடல் பகுதியில் படகு மூலமும் கண்காணிப்பு நடந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசாரின் கட்டுப்பாட்டில் கன்னியாகுமரி, சின்ன முட்டம், மகாதானபுரம், தேங்காய்பட்டணம் உள்பட 11 இடங்களில் சோதனைச் சாவடிகள் உள்ளது. இந்த வழியாக செல்லும் அனைத்து வாகனகளும் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன. நாளை காலை 10 மணி வரை இந்த கண்காணிப்பு பணி நீடிக்கும்.  #SriLankablasts

    தேர்தல் காரணமாக வருமானவரித்துறை மூலம் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் நடக்கும் பணப் பரிமாற்றமும் கண்காணிக்கப்படுகிறது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். #LSPolls #SatyabrataSahoo #IncomeTax
    சென்னை:

    தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

    தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும்போது வாகனத்தில் கட்சி கொடியை பொருத்துவதற்கு தேர்தல் நடத்தும் அதிகாரியின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். கூட்டணி கட்சியின் கொடிகளையும் அனுமதி பெற்று வாகனங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    பொதுவாக வாகனங்களில் கொடிகள் உள்ளிட்ட இதர உபகரணங்களை பொருத்தும்போது மோட்டார் வாகன சட்டப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியையும் பெற்றிருக்க வேண்டும்.

    சென்னையில் அனைத்து வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வங்கி கணக்கு மற்றும் பணப் பரிமாற்றங்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    வங்கிகளில் இருந்து ஏ.டி.எம். எந்திரங்களுக்கு பணம் எடுத்துச்செல்வதற்கு பல்வேறு விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வகுத்தளித்துள்ளது. ஆனாலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மாவட்ட தேர்தல் அதிகாரியின் சான்றைப் பெற்றுச்செல்ல வேண்டும்.



    வங்கிக் கணக்குகளில் ரூ.10 லட்சத்துக்கு மேல் வரும் வரவுகள் பற்றி வருமானவரித்துறையின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம். ஆயிரக்கணக்கில் பணப்பரிமாற்றம் செய்யப்படும் வங்கிக் கணக்குகளில் திடீரென்று ஒரு லட்சத்துக்கும் மேல் பணம் புரளத்தொடங்கினால் அதுவும் வருமான வரித்துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

    இந்த காலகட்டத்தில் பணப் பரிமாற்றத்தில் வித்தியாசங்கள் காணப்படும் வங்கிக் கணக்குகள், சந்தேகப்பட்டியலில் வைக்கப்பட்டு கண் காணிக்கப்படும்.

    திடீரென்று நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருக்கும் வங்கிக்கணக்கில் திடீர் பண வரவு குறித்து கண்காணித்து அது குறித்த தகவல்களை வருமான வரித்துறை தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் பணப்பரிமாற்றங்களும் வருமான வரித்துறையின் கண்காணிப்பில் உள்ளன.

    தமிழகத்தில் இதுவரை தேர்தல் நடவடிக்கையில் ரூ.12 கோடியே 80 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 19-ந் தேதியன்று மட்டும் ரூ.3 கோடியே 76 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கரூரில் ரூ.5 கோடியே 63 லட்சம் மதிப்புள்ள 94 கிலோ கட்டித் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது மதுரையைச் சேர்ந்த கிருபாகரனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 1.8 கிலோ வெள்ளி, மதுபான பாட்டில்கள் மற்றும் சிறிய பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றோடு கைத்துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 3,166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அரசு சொத்துக்களில் செய்யப்பட்டிருந்த 1.61 லட்சம் சுவர் விளம்பரங்களும், தனியார் சொத்துகளில் செய்யப்பட்டிருந்த 1.28 லட்சம் சுவர் விளம்பரங்களும் அப்புறப்படுத்தப்பட்டு 336 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    வேட்பாளர் இடம்பெறும் தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு செய்து தரப்படும் குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள், அந்தந்த வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும். வேட்பாளர் இல்லாத கூட்டம் என்றால், அரசியல் கட்சியின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும்.

    வரும் 24-ந் தேதியன்று 3 லட்சத்து 45 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு முதல் கட்டமாக தேர்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களை அதிகரிப்பது குறித்து இதுவரை எந்த தகவலும் தேர்தல் ஆணையத்தில் இருந்து வரவில்லை. இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள மையங்களில் உள்ள மற்ற அறைகளில் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

    சி விஜில் செல்போன் செயலி மூலம் பொதுமக்கள் புகார்களை அளிக்கலாம். இதில் பதிவாகும் புகார் பற்றிய விவரங்கள் மின்னணு முறையில் பதிவாகி இருக்கும். எனவே, பழைய பதிவுகளை இதில் பதிவேற்றம் செய்தால் அது நிராகரிக்கப்பட்டு விடும்.

    அந்த வகையில் இதுவரை 470 வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 154 புகார்கள் தேவையற்றவை என்று நீக்கப்பட்டுவிட்டன. 78 புகார்கள் மீது விசாரணை நடந்து வருகிறது. 119 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #SatyabrataSahoo #IncomeTax
    நாட்டில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணித்து தகவல்களை ஆய்வு செய்ய 10 அமைப்புகளுக்கு அனுமதி அளித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. #CentralGovernment #ComputerMonitoring
    புதுடெல்லி:

    பயங்கரவாதிகள் தங்களது நாச வேலை திட்டங்களை செல்போன்கள் மற்றும் இ.மெயில்கள் மூலம் பரிமாறிக் கொள்வதை தடுப்பதற்காக புலனாய்வு அமைப்புகளுக்கு மத்திய அரசு அதிகாரம் வழங்கி உள்ளது.

    செல்போன் உரையாடல்களை உளவுத்துறையினர் இடைமறித்து கேட்பதன் மூலம் பல நாசவேலை திட்டங்கள் முறியடிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் உளவுத்துறை அமைப்புகளுக்கும், விசாரணை அமைப்புகளுக்கும் தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்வது மட்டுமின்றி, நாட்டில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர் பதிவுகளையும் ஆய்வு செய்யும் கூடுதல் அதிகாரம் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டது.

    நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் இதுதொடர்பான புதிய அறிவிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. உள்துறை செயலாளர் ராஜீவ் கோபா வெளியிட்டுள்ள அந்த அறிவிக்கையில் 10 அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    அந்த 10 அமைப்புகள் விவரம் வருமாறு:-

    1. உளவுத்துறை (ஐ.பி.)

    2. போதைபொருள் கட்டுப்பாட்டுத் துறை

    3. அமலாக்கத்துறை

    4. மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம்

    5. வருவாய் உளவுத்துறை

    6. சி.பி.ஐ.

    7. தேசிய விசாரணை ஆணையம்

    8. ‘ரா’ உளவு அமைப்பு

    9. சிக்னல் உளவுத்துறை

    10. டெல்லி போலீஸ் கமி‌ஷனர்

    இந்த 10 அமைப்புகளுக்கும் கம்ப்யூட்டர்களை கண்காணிக்கவும், தகவல்களை ஆய்வு செய்யவும், தகவல் பரிமாற்றங்களை இடைமறித்து பார்க்கவும், தகவல்களை அளிக்கவும், ஏற்கனவே அழிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் கண்டுபிடித்து ஆய்வு செய்வது உள்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டு உள்ளன.

    மத்திய உள்துறை வழங்கி உள்ள இந்த கூடுதல் அதிகாரங்கள் மூலம் நாட்டில் உள்ள எந்த கம்ப்யூட்டரில் வைக்கப்பட்டு உள்ள தகவல்களையும் பறிமுதல் செய்ய முடியும். மேலும் தனிநபர்கள், நிறுவனங்கள் உள்பட அனைத்து பிரிவினரின் அனைத்து கம்ப்யூட்டர்களையும் உளவு பார்க்க முடியும்.

    இது தவிர ஒரு கம்ப்யூட்டரில் இருந்து மற்றொரு கம்ப்யூட்டருக்கு அனுப்பப்படும் தகவல்களை மேற்கண்ட 10 அமைப்புகளாலும் எளிதில் பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது. அதுபோல வெளிநாடுகளில் இருந்து தனிநபர்களின் கம்ப்யூட்டர்களுக்கு வரும் அனைத்து தகவல்களையும் கண்காணித்து பறிமுதல் செய்ய மற்றும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    10 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு உள்ள இந்த அதிகாரங்கள் மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் கம்ப்யூட்டரையும் உளவு அமைப்புகளால் மிக எளிதாக உளவு பார்க்க முடியும். இதுவரை கம்ப்யூட்டர்களில் பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை கண்காணிக்கும் உரிமைகளை மட்டுமே இந்த 10 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு இருந்தது.

    தற்போது வழங்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரங்கள் மூலம் ஒருவரது தகவல் பரிமாற்றத்தை உளவு அமைப்புகள் கைப்பற்ற முடியும். மேலும் அந்த தகவல்களை உடனுக்குடன் அழிக்கவும் முடியும்.

    அமலாக்கத்துறையை பொறுத்தவரை எந்த இடத்திலும் ஆவணங்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் இல்லாமல் இருந்தது. தற்போது முதல் முறையாக அமலாக்கத்துறைக்கும் கம்ப்யூட்டர் பதிவு தகவல்களை கைப்பற்றும் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

    மேலும் அமலாக்கத்துறையினர் தகவல் பரிமாற்றங்களில் தலையிடும் அதிகாரத்தையும் பெற்று உள்ளனர். 10 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு உள்ள இந்த அதிகாரங்கள் நாடு முழுவதும் மாறுபட்ட கருத்துக்களை உருவாக்கி உள்ளன.



    தனி நபர்களின் கம்ப்யூட்டர் தகவல்களை கண்காணிக்கவும், பறிமுதல் செய்யவும் மத்திய அரசு உத்தரவிட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் இதுபற்றி கூறுகையில், “மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஏற்க இயலாது. இந்தியாவை அடக்கி ஆள மோடி முயற்சி செய்வது போல உள்ளது” என்று கூறியுள்ளார்.

    மார்க்சிஸ்டு கம்ப்யூனிஸ்டு தலைவர் சீத்தாராம் யெச்சூரி கூறுகையில், “ஒவ்வொரு இந்தியரையும் கிரிமினல் போல் நடத்துகிறீர்கள். தனி நபர்களின் விவகாரங்களில் தலையிடுவது சட்ட விரோதமானது” என்று கூறியுள்ளார்.

    தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர்அப்துல்லா, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் ஒவைசி ஆகியோரும் மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். ஒவைசி வெளியிட்டுள்ள டுவிட்டர் தகவலில், “மக்களின் தகவல் தொடர்பை மோடி முடிக்க நினைக்கிறார்” என்று கூறி உள்ளார்.

    இந்த நிலையில் கம்ப்யூட்டர் தகவல்கள் கண்காணிப்பு ஏன் என்பதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பயங்கரவாதிகள் கம்ப்யூட்டர் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்வதை கண்டுபிடிக்கவே இந்த அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்புக்கான 10 அமைப்புகளும் தங்களுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தன. அதைத்தான் தற்போது நடைமுறைப்படுத்தி உள்ளோம்.

    சாதாரண மக்களுக்கு இந்த உத்தரவால் எந்த இடையூறும் ஏற்படப்போவதில்லை. சந்தேகப்படும் நிலையில் உள்ளவர்களின் கம்ப்யூட்டர்கள் மட்டுமே ஆய்வு செய்யப்படும். எனவே இதுபற்றி பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கம்ப்யூட்டர் தகவல்களை 10 அமைப்புகளும் ஆய்வு செய்ய அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய உள்துறையின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஒத்துழைக்காத பட்சத்தில் அபராதமும், 7 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்படும் என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. #CentralGovernment
    #ComputerMonitoring
    நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை கண்காணிக்க 45 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் சேகர் கூறினார்.
    நாமக்கல்:

    தமிழக பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பயிற்சி) டாக்டர் சேகர், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அப்போது பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு தனியாக வார்டு அமைக்கப்பட்டு இருப்பதை பார்வையிட்ட அவர், அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும், நோயாளிகளிடமும், சிகிச்சை முறைகள், மருந்து, மாத்திரை எடுத்துக் கொள்ளும் விதம், டாக்டர்களின் கவனிப்பு குறித்தும் கேட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில், அவர்கள் குணமாகி வீடு திரும்புவார்கள்.

    அதேபோல், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனும் அனுமதிக்கப்பட்டு உள்ளான். அவனும், நல்ல நிலையில் இருக்கிறான். விரைவில் குணமாகி வீடு திரும்புவான்.

    அடுத்த 2 மாதங்களுக்கு டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை கண்காணித்து தடுப்பு நடவடிக்கையை தொடரும் வகையில், 45 மருத்துவ குழுவினர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த குழுவில் ஒரு டாக்டர், நர்சு உள்பட 5 பேர் இடம் பெற்று உள்ளனர். இவர்கள் மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வார்கள்.

    பன்றி காய்ச்சலுக்கு உரிய 15 ஆயிரம் மாத்திரைகள் இருப்பு உள்ளது. அதேபோல், ஊசியும் 2 ஆயிரம் இருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு, பன்றி காய்ச்சல் என்ற அச்சுறுத்தல் இல்லை. மேலும், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 76 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் உஷா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 
    மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை அரசு மணல் குவாரியில் நவீன கேமரா மூலம் கண்காணிப்பதால் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    மானாமதுரை:

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக அரசு மணல் குவாரி செயல்படாததால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து அரசு உத்தரவுப்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வைகை ஆற்றில் குவாரி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி மானாமதுரை பகுதியில் வாகுடி, செய்களத்தூர், தெ.புதுக்கோட்டை ஆகிய 3 இடங்களில் வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக தெ.புதுக்கோட்டையில் கடந்த 13-ந்தேதி தாசில்தார் சுந்தரராஜன் தலைமையில் குவாரி தொடங்கப்பட்டது. அப்போது 13 லாரிகளில் மணல் அள்ளி பொதுப்பணித்துறை குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின் குவாரியில் மின் இணைப்பு, கண்காணிப்பு கேமரா பொருத்துவது போன்ற பணிகள் நடந்து வந்தன.

    இந்தநிலையில் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது குவாரியில் மணல் அள்ளி லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் கூறியதாவது:-

    பொதுப்பணித்துறை சார்பில் குவாரி செயல்பட தொடங்கியுள்ளது. இதில் லாரிகள் உள்ளே வரும் பாதை, வெளியே செல்லும் பாதை, குவாரி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறையில் பதிவு செய்யப்பட்ட லாரிகளில் மட்டும் மணல் ஏற்றப்படும். மணல் ஏற்றப்பட்ட லாரி ஜி.பி.எஸ். கருவி மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். பொதுப்பணித்துறை குடோனில் இருந்து மணல் ஏற்றுவதற்கு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். இதுவரை 4 ஆயிரத்து 700 லாரிகளை பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு சிவகங்கை அருகே காயாங்குளம் பொதுப்பணித்துறை குடோன் மூலம் மணல் விற்பனை செய்யப்பட உள்ளது.

    குவாரி அலுவலகத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. குவாரியில் இருந்து வெளியே செல்லும் லாரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து கண்காணிக்க முடியும். குவாரியில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராவை சென்னையில் இருந்து இயக்கி கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் முறைகேடுகள் எதுவும் நடக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். 
    கோவை வனக்கோட்டத்தில் உள்ள வனவிலங்குகளை கண்காணிக்க ஆளில்லாத குட்டி விமானம் கோவை வந்தது. அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்து இதை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    கோவை:

    கோவை வனக்கோட்டத்தில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள், காட்டெருமைகள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

    இதில் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் காட்டு யானைகள், மலையடிவார பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அவற்றை தடுக்க அகழி வெட்டப்பட்டாலும், ஆழம் குறைந்த பகுதி வழியாக காட்டு யானைகள் அகழியை கடந்து வனப்பகுதியை விட்டு வெளியே வந்து விடுகின்றன.

    அவற்றை கண்காணித்து மீண்டும் வனப்பகுதிக்குள் துரத்தும் பணியில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டு வந்தாலும், சில நேரங்களில் யானை- மனித மோதல் நடந்து வருகிறது. இதனால் மலையடிவார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தாலும், அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் துரத்தும்போது, அவைகள் வனப்பகுதிக்குள் சென்று விட்டதா அல்லது அவை எங்கு நிற்கின்றன என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அத்துடன் வனப்பகுதிக்குள் எந்த இடங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது என்பதையும் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

    எனவே காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் துரத்துவதற்காகவும், வனவிலங்குகளை கண்காணிப்பதற்காகவும் ஆளில்லாத குட்டி விமானம் வேண்டும் என்று வனத்துறை சார்பில் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டது. தற்போது அதற்கான அனுமதி அளித்து, ஆளில்லாத குட்டி விமானமும் கோவை வந்துள்ளது.

    இதை இயக்க அதிகாரிகள் யாரை நியமிப்பது? என்பது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள். அதன் பின்னர் அதை பயன்படுத்து வது எப்படி? என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் அந்த ஆளில்லாத குட்டி விமானத்தை பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவைக்கு கொடுக்கப்பட்டு உள்ள ஆளில்லாத குட்டி விமானத்தில் பல்வேறு வசதிகள் உள்ளன. வீடியோ பதிவு செய்வதுடன், புகைப்படமும் எடுக்கும். அதுபோன்று அதில் தேனீக்கள் போன்று சத்தம் எழுப்பும் வசதியும் உள்ளது. பெரும்பாலும் தேனீக்களின் சத்தம் கேட்டதும் காட்டு யானைகள் ஓடிவிடும்.

    வனப்பகுதிக்கு மேல் இந்த குட்டி விமானத்தை இயக்கி, கண்காணிக்கும்போது, வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக யாராவது நடமாடுகிறார்களா? என்பதையும் கண்காணிக்க முடியும். அத்துடன் எந்தெந்த பகுதிகளில், எந்தெந்த வகையான வனவிலங்குகள் இருக்கின்றது என்பது குறித்தும் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

    இந்த ஆளில்லாத குட்டி விமானத்தை இயக்க பயிற்சி அளித்த பின்னர், அதன் பயன்பாடு குறித்து பரிசோதனை செய்யப்படும். இந்த ஆளில்லாத குட்டி விமானம் வித்தியாசமானதாக, எடை அதிகம் கொண்டதாக இருக்கிறது. எனவே வனப்பகுதியை விட்டு வெளியே வந்து தொந்தரவு செய்யும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் துரத்த மிகவும் உதவியாக இருக்கும். அதுபோன்று அந்த காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டதா? அல்லது வன எல்லையில்தான் நிற்கிறதா? என்பது குறித்தும் அறிய முடியும்.

    மேலும் இதை வனப்பகுதிக்கு மேல் இயக்கும்போது, வனப்பகுதிக்குள் காயத்துடன் ஏதாவது வனவிலங்குகள் சுற்றுகிறதா? என்பதையும் உடனடியாக கண்டறிய முடியும். எந்தப்பகுதியில் வனவிலங்குகளின் தொந்தரவு இருக்கிறதோ அங்கு உடனடியாக ஆளில்லாத குட்டி விமானத்தை எடுத்துச்சென்று கண்காணிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்
    புதுச்சேரி, சென்னைக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வருகையையொட்டி கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    கடலூர் முதுநகர்:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாட்கள் சென்னை, புதுச்சேரியில் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக அவர் புதுச்சேரியில் தங்கி உள்ளார். அவர் வருகையையொட்டி கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் நவீன், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் கடலூர் மாவட்டம் கிள்ளை முதல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வரை படகில் சென்று கடற்கரையோரம் தீவிரமாக கண்காணித்தனர். மேலும் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களிடம் விசாரணை நடத்தி, சந்தேகப்படும் படியாக யாராவது வந்தால் உடனடியாக கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர். இந்த ரோந்து பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை தொடர்ந்து நடைபெறும் என்று கடலோர காவல் படையினர் தெரிவித்தனர். 
    பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் இன்று காலை 72.15 அடியாக உள்ளது. அணை நிரம்பி வருவதையடுத்து உதவி பொறியாளர் தலைமையில் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது.

    மார்த்தாண்டம் பகுதியில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டன. திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    நாகர்கோவிலில் கொட்டித்தீர்த்த மழையினால் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, கோட்டார் சாலை, செம்மாங்குடி ரோடு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பள்ளி சென்ற மாணவ, மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர்.

    களியல், பேச்சிப்பாறை, குலசேகரம், பெருஞ்சாணி, குழித்துறை, தக்கலை, களியக்காவிளை, கொல்லங்கோடு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மயிலாடி, ஆரல்வாய்மொழி, கீரிப்பாறை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலையில் விட்டு, விட்டு மழை பெய்தது.

    திற்பரப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாகவும், பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரின் காரணமாகவும் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    மலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் பெய்து வரும் மழையினால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக் கூடிய நீர்வரத்து கணிசமாக உயர்ந்தது.

    ஆனால் பேச்சிப்பாறை அணையில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் அதிக தண்ணீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டியதை அடுத்து அணையில் இருந்து பரளியாற்றில் தண்ணீர் திறந்துவிடப்படும். வலியாற்று முகம், அருவிக்கரை, திருவட்டார், மூவாற்றுமுகம், குழித்துறை, தேங்காய்பட்டணம் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் இன்று காலை 72.15 அடியாக உள்ளது. அணைக்கு 774 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நிரம்பி வருவதையடுத்து உதவி பொறியாளர் தலைமையில் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

    பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் சானல்களில் ஷிப்ட் முறையில் விடப்பட்டு உள்ளது. சானல்களிலும், ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டம் முழுவதும் உள்ள 2040 குளங்களில் 39 குளங்கள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 291 குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    1115 குளங்கள் 75 சதவீதமும், 422 குளங்கள் 50 சதவீதமும், 123 குளங்கள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளது. பாசன குளங்கள் நிரம்பி வருவதை அடுத்து கன்னிப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி உள்ளனர்.

    வழக்கமாக 6,500 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டு இதுவரை 1000 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விவசாயிகள் நாற்று நடவும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.




    தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆளில்லா விமானம் மூலம் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரில் 7 பேரின் உடல்கள் ஐகோர்ட் உத்தரவுப்படி நேற்று மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதனை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி நேற்று மாலை தொடங்கி இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    உடலை வாங்க கூட்டமாக திரண்டு வரக்கூடாது எனவும், குடும்பத்தினர் மட்டுமே வந்து உடலை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உடலை வாங்க வரும் உறவினர்களிடம் மட்டும் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். மற்றவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை.

    குடியிருப்பு பகுதியில் பறந்த குட்டி விமானம்.

    மேலும் அரசு ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேவையில்லாமல் யாரேனும் கூட்டமாக நிற்கின்றனரா? அல்லது திரண்டு வருகிறார்களா? என்று போலீசார் ரோந்து சுற்றி கண்காணித்து வருகின்றனர். மேலும் கேமிரா பொருத்திய ஆளில்லா குட்டி விமானத்தை பறக்க செய்து அதன் மூலம் வீடியோ எடுத்து கண்காணித்து வருகிறார்கள்.

    அந்த விமானம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தின் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் பறக்கவிடப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. #ThoothukudiGovtHospital

    ×