search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 111885"

    • திருச்சி உறையூரில் அழகிய மணவாளப் பெருமாள் கோவில் உள்ளது.
    • இது தேவர்களுக்கும் அருள்பாலிக்கும் திருத்தலம்.

    திருச்சி உறையூரில் அழகிய மணவாளப் பெருமாள் கோவில் உள்ளது. பெயருக்கேற்றபடியே பெருமாள், கண்ணுக்கும் மனதுக்கும் இனியவராகவே காட்சியளிக்கிறார் நின்ற நிலையில் சேவை சாதிக்கும் திருக்கோலம் சங்கு சக்கராயுதம் தரித்த இறைவன் சக்கராயுதத்தைப் பிரயோகிக்கும் நிலையில் இருக்கும் கோலம், சோழ மன்னரின் திருமகளான கமலவல்லிக்கும்', அழகிய மணவாளப் பெருமாள் மீது அளவுகடந்த காதல்.

    மணந்தால் பெருமாளைத்தான் மணப்பேன் என்று கூறி கடுமையான விரதம் பூண்டாள். தீவிரமாக தவம் செய்தாள். நாட்கள் செல்ல செல்ல விரதத்தின் வேகம் அதிகரித்தது. பலர் தடுத்தும் கேட்காமல் விரதம் எல்லை மீறிபோய்க் கொண்டிருந்தது. கமலவல்லியை இனியும் சோதிக்கக் கூடாது என்றெண்ணிய இறைவன் மனம் நெகிழ்ந்து கமலவல்லியை ஒரு பங்குனி உத்திரத் திருநாளான்று மணம் செய்து கொண்டார்.

    ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திரத்துக்கு முதல் நாள் ஸ்ரீரங்கத்திலிருந்து ஸ்ரீரங்கநாத உத்சவமூர்த்தி வருகை தந்து மறுநாள் பங்குனி உத்திரத்தன்று அழகிய மணவாளப்பெருமாள்-கமலவல்லி நாச்சியார் கல்யாண உத்சவம் கண்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

    இங்குள்ள கல்யாண தீர்த்தம், சூரிய புஷ்கரணி, குடமுருட்டி ஆறு- ஆகியவை இந்தக் கோவிலின் தீர்த்தங்களாகும்.

    கோவில் விமானம் கல்யாண விமானம், எனப்படும். இது தேவர்களுக்கும் அருள்பாலிக்கும் திருத்தலம். தோஷம் காரணமாக திருமணமாகாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் விதிவசத்தால் பிரிந்து வாழும் தம்பதியர்களுக்கும் அனுக்கிரகம் அருளும் தலம். இத்தலத்துக்கு புதன், சனிக்கிழமைகளில் வந்து தரிசனம் செய்தால் மறுபிறவி இல்லை என்கிறார்கள்.

    • திருமால் திருவோண நட்சத்திரத்தில்தான் அவதரித்தார்.
    • வைணவர்கள், மாதந்தோறும் திருவோண விரதத்தை மேற்கொள்வது வழக்கம்.

    வைணவர்கள், மாதந்தோறும் திருவோண விரதத்தை மேற்கொள்வது வழக்கம். ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்கு உரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே 'திரு' என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது.

    வாமன அவதாரம் எடுத்தபோது, திருமால் திருவோண நட்சத்திரத்தில்தான் அவதரித்தார். மஹாபலியின் ஆணவத்தை அடக்கி மூன்று அடி மட்டுமே மண் கேட்டார் வாமனர். பலியும் கொடுத்தவுடன் வாமனர் பிரம்மாண்ட உருவெடுத்தார். பின்னர் மஹா பலியை மன்னித்து பாதாள லோகத்தின் சக்கரவர்த்தியாக நியமித்தார் பரமாத்மா.

    கேரள மக்களை அதாவது தன் மக்களை பார்க்க வருடம் ஒருமுறை பூமிக்கு வருகிறார் மஹா பலி சக்ரவர்த்தி. அதை ஓணம் பண்டிகையாக கேரள மக்கள் கொண்டாடுகின்றனர்.

    மேலும், மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக அவதரித்த பூமிப்பிராட்டியை ஒப்பிலியப்பர் பெண் கேட்டு வந்தது, பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தன்றுதான்.

    பிராட்டியை ஒப்பிலியப்பன் மணந்துகொண்டதும், ஐப்பசி மாத திருவோண நட்சத்திர தினத்தில்தான். எனவே, ஒப்பிலியப்பர் கோயிலிலும் இந்த திருவோண விழா மாதாமாதம் சிறப்பாக நடைபெறுகிறது.

    திருவோண தினத்தில் விரதம் மேற்கொள்பவர்கள், எல்லா வளங்களும் பெற்று, பிறப்பில்லா பேறுடன் வைகுண்ட பதவியை அடைவார்கள் என்று விஷ்ணு புராணம் மற்றும் சிவ புராணங்கள் கூறுகின்றன. முக்கியமாக, குழந்தைப்பேறு இல்லாதவர்கள் குழந்தை வரம் பெறுவார்கள்.

    • மூலவர் பெருமாள் தனது இடது பாதத்தை வான் நோக்கி தூக்கி உலகளந்த பெருமாளாக காட்சி தருகிறார்.
    • வைகாசி மாத பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் 28-வது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் என்னும் திருவிக்ரம நாராயணப்பெருமாள் கோயில் உள்ளது.

    மூலவர் பெருமாள் தனது இடது பாதத்தை வான் நோக்கி தூக்கி உலகளந்த பெருமாளாக காட்சி தருகிறார்.

    பிரசித்தி பெற்ற இக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்வாக தெப்ப திருவிழா நடைபெற்றது.

    முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, புஷ்ப அலங்காரம் நடைபெற்றது, தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை சுற்றிவந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    இதனை காண ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • தேனூர் கிராமத்தில் கள்ளழகர் தோற்றத்தில் சுந்தரராஜ பெருமாள் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது.
    • ஆற்றில் உள்ள மண்டகப்படியில் கள்ளழகர் தங்கினார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே தேனூர் கிராமத்தில் உள்ள சுந்தரராஜபெருமாள் (கள்ளழகர்) கோவிலில் வைகாசி பெருந்திருவிழா நடந்தது. இதையொட்டி இன்று காலை சுந்தரராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் கள்ளழகர் தோற்றத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு வீதிஉலா வந்தார்.

    அப்போது வழி நெடுக கள்ளழகரை பக்தர்கள் வரவேற்று பூஜை செய்து செம்பில் சக்கரை தீபம் ஏற்றி வணங்கினார்கள். இதைத்தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். பூஜைகள் நடந்து வைகை ஆற்றில் உள்ள மண்டகப்படியில் கள்ளழகர் தங்கினார்.

    இன்று மாலை ஸ்ரீதேவி பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதைத் தொடர்ந்து வெளியூர் கிராமப்பெண்கள் திரு விளக்கு பூஜை நடைபெறும்.இரவு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மாலை திருமஞ்சனமாகி, தேனூர் வைகை ஆற்றில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தல் நடைபெற உள்ளது.

    இதைத்தொடர்ந்து உள்ளூர் பெண்கள் திருவிளக்கு பூஜை நடை பெறுகிறது. 2 நாள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் பெண்க ளுக்கு புத்தாடை வழங்கப் படுகிறது. இரவு ராஜாங்க அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலிக்க உள்ளார்.

    இதையொட்டி பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும். நாளை மறுநாள் அதிகாலை வைகை ஆற்றில் இருந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் பல்லக்கில் அலங்காரமாகி வீதி உலா நடக்கிறது. சுவாமி கோவில் வந்து சேருவார். பரம்பரை தர்மகர்த்தா நெடுஞ்செழிய பாண்டியன் பொருளாளர் கவுதமன் உள்பட நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • ஒவ்வொரு மாதத்திலும் இரு ஏகாதசிகள் வருகின்றன.
    • வருடத்திற்கு 24 ஏகாதசிகள் உள்ளன.

    ஆனி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி நிர்ஜல ஏகாதசி என போற்றப்படுகிறது. பீமனே அனுஷ்டித்த விரதம் என்பதால் இந்த விரதம் 'பீம விரதம்' என்றும் பீம ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது.

    இன்று தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்கம் தானம் செய்த பலன் பெறுகிறார்கள். இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்பவர்கள் வைகுண்ட பதம் அடைவார்கள். மகத்துவம் நிறைந்த இந்த நாளில் ஒரு குடம் ஏன் ஒரு வாட்டர் பாட்டில் தண்ணீராவது தவித்த வாய்க்கு தானமாக கொடுத்து பாருங்கள் அப்புறம் உங்களுக்கு நடக்கும் நன்மைகளை நீங்கள் அறிவீர்கள்.

    நிர்ஜல ஏகாதசி விரதமிருப்போர் எமதர்மராஜாவை சந்தித்து அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்லி தண்டனை அனுபவிக்க வேண்டாம். வைகுண்டத்தின் தூதுவர்கள் இறப்பிற்கு பின் நேரடியாக வைகுண்டத்திற்கு அழைத்து செல்வார்கள். புனித நதிகளில் நீராடிய பலனும், பலவிதமான தானங்களை அளித்த பலனும் இந்த ஏகாதசி விரதத்தின் மூலம் கிடைக்கும்.

    நிர்ஜல ஏகாதசியின் மகிமையைப் பற்றி கேட்பவருக்கு சூரிய கிரகணத்தில் வரும் அமாவாசை திதியில் சிரார்த்தம் செய்த பலன் கிட்டும். ஒரு பிராமணனை கொன்ற பாபம், தொடர்ந்து பொய் சொன்ன பாபம், மது அருந்திய பாபம், தன் குருவை மதிக்காமல் ஏளனம் செய்த பாபம் இவற்றிலிருந்து விடுபடலாம்.

    இந்த ஏகாதசி விரதமிருப்போர் தங்கள் பாபத்திலிருந்து விடுபடுவார்கள்.அவர்களின் நூறு தலைமுறைக்கான மூதாதையர்களும் தங்கள் பாப சுமையிலிருந்து விடுபடுவார்கள். இன்று நீங்களும் பெருமாளை நினைத்து விரதம் இருந்து ஒரு குடம் தண்ணீர் யாருக்காவது தானமாக கொடுங்களேன்.

    • வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு நிர்ஜலா ஏகாதசி எனப்பெயர்.
    • அனைத்து பாவங்களும்-துன்பங்களும் விலகும்.

    வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசிக்கு நிர்ஜலா ஏகாதசி எனப்பெயர். கலி தோஷத்தால் ஏற்படும் பாபங்களையும் துன்பங்களையும் போக்கும் சக்தி ஏகாதசி உபவாசத்துக்கு உண்டு. ஆகவே தான் 8 வயது முதல் 80 வயது வரையுள்ள ஆண்கள், பெண்கள் அனைவரும் ஏகாதசியன்று எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்த்திரம்.

    பஞ்சபாண்டவர்களுக்குள் பீமன் மிகவும் பலம் பொருந்தியவர். அதற்குத் தக்க பலமான ஆகாரம் சாப்பிட்டுப் பழக்கப்பட்டவர். ஒரு சமயம் பீமன் வேதவ்யாஸ் மகரிஷியிடம் சென்று 'எனது வீட்டில் சகோதரர்களும், தாயாரும், மனைவியும் ஏகாதசி உபவாசம் அனுஷ்டிக்கின்றனர். அவர்கள் என்னையும் அனுஷ்டிக்குமாறு கூறுகின்றார்கள். எனக்கும் ஏகாதசி உபவாசம் அனுஷ்டிக்க வேண்டும் என்று விருப்பம். ஆனால் என்னால் உணவு உண்ணாமல் உபவாசம் இருப்பது என்பது இயலாத காரியம் என்ன செய்வது? என்று கேட்டார் பீமன்.

    ஸ்ரீவேதவியாசரும் சிரித்துக்கொண்டே, பீமா! உன்னால் ஆண்டு முழுவதும் வரும் 25 ஏகாதசியிலும் உபவாசம் இருக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனி மாத சுக்லபட்ச (நிர்ஜலா) ஏகாதசியன்று மட்டும் தண்ணீர் கூட அருந்தாமல் உபவாசம் இரு. அதுவே ஆண்டு முழுவதும் அனைத்து ஏகாதசிகளிலும் உபவாசம் இருந்த பலனை உனக்குத்தரும் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறியதை பீமனிடம் கூறினார்.

    பீமனும் அவ்வாறே நிர்ஜல ஏகாதசியன்று சுத்த உபவாசம் இருந்து துவாதசியன்று சாப்பிட்டார். அது முதல் இந்த நாளுக்கு பீம ஏகாதசி என்றும், நிர்ஜல ஏகாதசி என்றும் பெயர் ஏற்பட்டது. ஆகவே நாளை எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருப்பதால் ஓரு வருடம் முழுவதும் ஏகாதசியன்று உபவாசம் இருந்த பலன் கிட்டும். அனைத்து பாவங்களும்-துன்பங்களும் விலகும்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • நாளை நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    • வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான ஒரு ஏகாதசி தினமாக வருதினி ஏகாதசி தினம் இருக்கிறது.

    வைகாசி மாதத்தில் முருகப் பெருமான் மற்றும் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள், உற்சவங்கள் நடைபெறும். மற்ற எல்லா மாதங்களில் வரும் ஏகாதேசி தினங்களைப் போலவே, வைகாசி மாதத்தில் வருகின்ற ஏகாதசி தினங்களும் பல சிறப்புகளைக் கொண்டதாக இருக்கின்றன. அப்படி இந்த வைகாசி மாதத்தில் வருகின்ற வைகாசி தேய்பிறை ஏகாதசி தினத்தின் மகிமையை குறித்தும், அந்த தினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    வைகுண்ட ஏகாதசிக்கு நிகரான ஒரு ஏகாதசி தினமாக இந்த வருதினி ஏகாதசி தினம் இருக்கிறது. மற்ற எந்த ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியவில்லை என்றாலும் இந்த வருதினி ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பானது என வைணவ பிரிவு பெரியோர்கள் கூறுகின்றனர். முற்காலத்தில் மந்தத்தன் என்கிற அரசன் இந்த வருதினி ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து மிகச் சிறப்பான பலன்களை தன் வாழ்வில் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

    இந்த வருதினி ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு வீட்டின் பூஜை அறையில் இருக்கும் பெருமாள் மற்றும் லட்சுமி படத்திற்கு மஞ்சள் மற்றும் குங்குமம் பொட்டிட்டு, தாமரை பூ சமர்ப்பித்து, கிருஷ்ண துளசி இலைகள் மற்றும் பசும் தயிர் நைவேத்தியம் வைத்து, தூபங்கள் கொளுத்தி, தீபமேற்றி பெருமாள் லட்சுமி ஸ்தோத்திரங்கள், மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.

    பொதுவாக எந்த ஒரு ஏகாதசி விரத தினத்தன்றும் காலை முதல் இரவு வரை உணவு ஏதும் உண்ணாமல் இருப்பது மிகுந்த பலன்களை தரும். எனினும் தற்காலத்தில் பலருக்கும் வேலை நிமித்தம் மற்றும் உடல்நிலை காரணமாக உணவு ஏதும் உண்ணாமல் இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. எனவே அப்படிப்பட்டவர்கள் உப்பு சேர்க்காத எளிமையான உணவுகள் மற்றும் பால், பழங்கள் போன்றவற்றை சாப்பிட்டு இது ஏகாதசி விரதம் மேற்கொள்ளலாம். ஏகாதசி விரத தினத்தன்று நீங்கள் மற்றும் உங்கள் வீட்டிலிருப்பவர்கள் போதை பொருட்கள் உபயோகித்தல், புலால் உணவுகள் சாப்பிடுதல் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் சிறப்பான பலன்களை தரும்.

    மாலையில் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, தீபமேற்றி வழிபட வேண்டும். பின்பு வீட்டுக்கு திரும்பியதும் பூஜையறையில் பெருமாளுக்கு நைவேத்தியம் வைக்கப்பட்ட துளசி இலைகள் மற்றும் தயிரை குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் சிறிதளவு பிரசாதமாக தந்து, விரதம் மேற்கொண்டவர்களும் அப்பிரசாதத்தை சிறிது சாப்பிட்டு, பெருமாளுக்கான ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும்.

    வைகாசி மாத தேய்பிறை ஏகாதசி விரதம் அல்லது வருதினி ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்களுக்கு உடல் மற்றும் மன நலம் சிறக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலை எப்போதும் இருக்கும் தம்பதிகளிடையே அன்பு ஒற்றுமை மேலோங்கும் எதிர்பாராத விபத்துக்கள் ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும் தொழில் வியாபாரங்களில் நஷ்டமடைந்தவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால் மீண்டும் லாபங்களை பெறலாம் மகாவிஷ்ணுவின் அருளால் நினைத்த காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கும்

    • சோமேஸ்வரர் மற்றும் சென்னகேசவப் பெருமாள் கோவில் சித்தி ரைத் தேர் திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்து டன் தொடங்கியது.
    • மாலை சிறிய தேரில் ஆஞ்சநேய சாமியை, முக்கிய வீதி வழியாக பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சென்று பெரிய தேர் அருகில் கொண்டு சென்று நிறுத்தினர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககி ரியில் உள்ள சோமேஸ்வரர் மற்றும் சென்னகேசவப் பெருமாள் கோவில் சித்தி ரைத் தேர் திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்து டன் தொடங்கியது.

    தினசரி இரவு சாமி அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், அன்னபக்ஷி, சிங்கம், அனுமந்தம், கருடம், சேஷம், யானை ஆகிய வாகனங்களில் வீதி உலா நடந்தது.

    7-ம் நாள் சாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. 8-ம் நாள் குதிரை வாகனத்தில் வீதி உலா, 9-ம் நாளான நேற்று காலை சாமியை தேருக்கு கொண்டு சென்று அபிஷேக ஆராதனை செய்தனர். மாலை சிறிய தேரில் ஆஞ்சநேய சாமியை, முக்கிய வீதி வழியாக பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சென்று பெரிய தேர் அருகில் கொண்டு சென்று நிறுத்தினர்.

    தொடர்ந்து பெரிய தேரில் சென்னகேசவ பெருமாள் சாமிக்கு அபிஷேக ஆராதனை செய்தனர். இதில் முன்னாள் அமைச்சரும், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான டி.எம்.செல்வகணபதி தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து தேர்வீதி, மலையடிவாரம், முஸ்லீம்தெரு வழியாக இழுத்து சென்று, நிலை நிறுத்தினர். திருத்தேர் உற்சவத்தில், ஸ்ரீதேவி, பூதேவி உடன் சென்னகேசவப் பெருமாள் அருள்பாலித்தார்.

    விழாவில் சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி, ஆர்.டி.ஓ(பொ) தணிக்காசலம், டி.எஸ்.பி ஆரோக்கியராஜ், தாசில்தார் அறிவுடைநம்பி, சங்ககிரி பேரூராட்சி மன்றத் தலைவர் மணிமொழி, துணைத்தலைவர் அருண்பிரபு, செயல்அ லுவலர் சுலைமான்சேட், அறநிலையத்துறை செயல் அலுவலர் சங்கரன், திருவிழா ஆலோசனை குழுவினர் சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சுந்தரம், சங்ககிரி லாரி உரிமையா ளர்கள் சங்கத் தலைவர் கந்தசாமி, சங்ககிரி பேரூர் தி.மு.க செயலாளர் முருகன், பக்காளியூர் சரவணன், சண்முகசுந்தரம் சுந்தரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தாயாரை மணந்துகொள்ள இத்தலத்திற்கு சாரங்கபாணி தேரில் வந்தார்.
    • சுவாமி சன்னதி தேர் அமைப்பில் இருக்கிறது.

    சித்திரை திருவிழா, தை மாதத்தில் சங்கரமண உற்சவம், வைகாசியில் வசந்த உற்சவம், மாசி மக தெப்பம், வைகுண்ட ஏகாதசி ஆகியவை முக்கிய விழாக்கள் ஆகும். காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். மூலஸ்தானத்தில் ஹேமரிஷி புத்திரியான கோமளவல்லி மற்றும் மகாலட்சுமியுடன் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

    நாபியில் பிரம்மா, தலை பகுதியில் சூரியன் உள்ளனர். சுவாமியின் கருவறையை சுற்றி நரசிம்ம அவதார சிலைகள் மிக அருமையாக செதுக்கப்பட்டுள்ளன. தாயாரை மணந்துகொள்ள இத்தலத்திற்கு சாரங்கபாணி தேரில் வந்தார். எனவே சுவாமி சன்னதி தேர் அமைப்பில் இருக்கிறது. தேரின் இருபுறங்களிலும் உத்ராயண, தெட்சிணாயன வாசல்கள் உள்ளன. தேர் சக்கரம் பிரம்மாண்டமாகவும், சுற்றுப்புற சுவர்களில் அழகிய சிலைகளும் வடிக்கப்பட்டுள்ளன.

    இந்த தேரின் அமைப்பை புகழ்ந்து திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். இந்த பாடல், "ரதபந்தம்' என்று அழைக்கப்படுகிறது. கருவறைக்கு முன்பாக சந்தான கிருஷ்ணன் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். கும்பகோணம் சாரங்கபாணி பெருமாளுக்கு பயத்தம்பருப்பு வெல்லம், நெய் கொண்டு தயாரித்து படைக்கும் நைவேத்தியத்தின் பெயர் கும்மாயம்.

    உத்தான சயன பெருமாள்

    பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் தலங்களில் பலவிதமான சயனங்களில் காட்சி தருவார். இங்கு "உத்தான சயன' கோலத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். இத்தலத்திற்கு வந்த திருமழிசையாழ்வார், சுவாமியை வணங்கி மங்களாசாசனம் செய்தார். அப்போது அவர், "நடந்த கால்கள் வலிக்கிறது என்றா பள்ளி கொண்டிருக்கிறாய்!' என்ற பொருளில் பாடினார். அவருக்காக சுவாமி எழுந்தார். திருமாலின் அருளைக்கண்டு மகிழ்ந்த திருமழிசையாழ்வார், "அப்படியே காட்சி கொடு!' என்றார். சுவாமியும் அவ்வாறே அருளினார். முழுமையாக பள்ளி கொண்டிராமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை "உத்தான சயனம்' என்பர்.

    • மிக பழமை வாய்ந்தது சாரங்கபாணி கோவிலாகும்.
    • ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம் ஆகும்.

    கும்பகோணத்தில் உள்ள வைணவக்கோவில்களில் மிக பழமை வாய்ந்தது சாரங்கபாணி கோவிலாகும். இது ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம் ஆகும். இக்கோவிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள கோபுரத்தில் நாட்டிய சாஸ்திரத்தின் 108 கரண வகைகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டிருப்பதாகும். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.

    தஞ்சை நாயக்க மன்னர்களால் இக்கோவில் கலைநயம் மிகுந்த சிற்பங்கள், தூண்கள் கொண்ட மண்டபங்கள், ராஜ கோபுரங்களால் கட்டப்பட்டவையாகும். இது 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. சோழ நாட்டு பனிரெண்டாவது திருத்தலம் ஆகும்.

    இக்கோவில் நாலாயிரத்திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக்கருதப்படும் பெருமையுடையது. ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமாளை குடந்தை கிடந்தான் என்று அழகுற அழைக்கின்றனர். இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சாரங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார். திருவரங்கனின் புகழைக் கூறும் பஞ்சரங்க திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது.

    இக்கோவிலில் நடைபெறும் சித்திரை தேர்த்திருவிழா சிறப்புடையது. இதற்காக இந்தக்கோவிலின் பெரிய தேர் சித்திரை தேர் என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கோவில் தேர்களில் இது மூன்றாவது பெரிய தேராகும்.

    இது திருவாரூர் ஆழித்தேருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேருக்கும் இணையாக புகழ் பெற்றதாகும். இப்பெரிய மரத்தேரின் எடை 500 டன் ஆகும். இத்தேரின் அடிப்பாகம் 25 அடியாகவும், மேல்தட்டு 35 அடியாகவும், உயரம் 30 அடியாகவும் உள்ளது. இத்தேர் அலங்கரிக்கப்படும் போது 110 அடியாக இருக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த சித்திரை தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) நடந்தது.

    தேரோட்டத்தை முன்னிட்டு தேரோட்டத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீயணைப்பு துறையினர் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

    • சுவாமிக்கு துளசி சாத்தி பழங்கள் முதலியன நிவேதனம் செய்ய வேண்டும்.
    • நாள் முழுவதும் நாராயணனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும்.

    சகல பாவங்களையும் நீக்கி நம்பிக்கை ஒளியை ஏற்ற வல்ல அற்புத தினமே ஏகாதசி விரதம். சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் ஏகாதசி "காமதா ஏகாதசி" எனப்படுகிறது. இந்த ஏகாதசி அன்று விரதத்தைக் கடைப்பிடித்தால் அது ஏழு ஜன்மப் பாவங்களையும் போக்கிவிடும் என்று கூறுகிறது புராணம்.

    புராணங்களின் படி லலிதன் என்ற கந்தர்வன், ஒரு சாபத்தின் காரணமாக ராட்சஸனாக மாறினான். அவனது மனைவியான லலிதை சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் இந்த காமதா ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து, பெருமாளின் அருளால் கணவனின் சாபம் நீங்க செய்தாள். நீங்கள் விரும்பியதை எல்லாம் நிறைவேற்றும் விரதம் இது. எனவே மிகுந்த நம்பிக்கையோடு இந்த விரதம் இருப்பவர்களுக்கு நன்மைகள் பல ஏற்படும் என்பது பெரியோர்களின் வாக்காகும்.

    இந்த சித்திரை வளர்பிறை ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளை வழிபட்ட பின்பு, வீட்டிற்கு வந்து பெருமாள் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபமேற்ற வேண்டும். உடல் நிலை நன்கு உள்ளவர்கள் இத்தினத்தில் காலை முதல் மாலை வரை எதுவும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் அல்லது துளசி இலைகள் ஊறவைத்த தீர்த்த நீரை அருந்தி விரதம் இருக்கலாம்.

    சுவாமிக்கு துளசி சாத்தி பழங்கள் முதலியன நிவேதனம் செய்ய வேண்டும். அன்றைய நாள் முழுவதும் நாராயணனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும்.

    அன்றைய நாள் முழுவதும் பெருமாளுக்குரிய மந்திரங்கள், விஷ்ணு புராணம், விஷ்ணு சகஸ்கர நாமம் போன்றவற்றை பாராயணம் செய்வது நல்லது. மாலையிலும் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்பு வீட்டிற்கு திரும்பி பால், பழம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

    சாஸ்திரப்படி அன்று பகல் இரவு இருவேளையும் தூங்கக் கூடாது. கண்டிப்பாகப் பகலில் தூங்கவே கூடாது. நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் தவிப்பவர்களுக்கு திருமணம் சீக்கிரம் நடக்கும். குடும்ப பொருளாதார நிலை உயரும்.

    இன்று `ஜய ஜய ஸ்ரீ சுதர்ஸனா... ஜய ஜய ஸ்ரீ சுதர்ஸனா' என்று 108 முறை உச்சரிப்பது நல்லது. இதன் மூலம் தீமைகள் தீர்ந்து நன்மைகள் அதிகரிக்கும்.

    • சயனத் திருக்கோலங்கள் 8 வகைப்படும்.
    • இந்த சயன கோலங்களைப் பற்றி சிறிய குறிப்பாக இங்கே பார்க்கலாம்.

    தர்மத்தை நிலைநாட்டவும், அதர்மத்தை அழிக்கவும் கடவுள் எத்தனையோ அவதாரங்கள் எடுத்துள்ளார். பக்தர்கள் இந்த அவதாரங்களை எப்படி எல்லாம் காண வேண்டுமோ, அதற்கு இணங்க அந்த அவதாரங்களாகக் காட்சியளித்துள்ளார். எம்பெருமானின் சில திருத்தலங்களில் திருமால் நின்றகோலத்திலும், சில திருத்தலங்களில் இருந்த கோலத்திலும், சிலவற்றில் கிடந்த கோலத்திலும், சிலவற்றில் இயங்கியும் சேவை சாதிக்கின்றார். இவை ஸ்தானக மூர்த்தம் (நின்ற கோலம்); ஆச மூர்த்தம் (அமர்ந்த திருக்கோலம்); சயன மூர்த்தம் (கிடந்த திருக்கோலம்); யானக மூர்த்தம் (இயங்கும் திருக்கோலம்).

    இவற்றில் சயனத் திருக்கோலங்கள் 8 வகைப்படும். அவை:

    1. உத்தியோக சயனம், 2. தர்ப்ப சயனம், 3. தல சயனம், 4. புஜங்க சயனம், 5. போக சயனம், 6.மாணிக்க சயனம், 7. வடபத்ர சயனம், 8. வீரசயனம்

    இந்த சயன கோலங்களைப் பற்றி சிறிய குறிப்பாக இங்கே பார்க்கலாம்.

    உத்தியோக சயனம்

    திருக்குடந்தை (கும்பகோணம்) சாரங்கபாணி பெருமாள், ஆராவமுதன் என்னும் திருநாமத்துடன் பள்ளிகொண்டுள்ளார் (கிடந்த சயனம்). திருமழிசை ஆழ்வார் இவ்விடம் வந்தபோது சுவாமி தம்மைக் கவனிக்காமல் 'என்ன களைப்பில் தூங்குகிறாரோ' என்று பாடியுள்ளார்.

    தர்ப்ப சயனம்

    திருப்புல்லாணியில் தர்ப்பைப் புல்லின் மேல் சயன திருக்கோலத்தில் ஸ்ரீராமர் சேவை சாதிக்கிறார். பட்டாக்கத்தியுடன் வீர சயனராகப் பெருமாள் காட்சியளிக்கிறார். திருவடியில் ராவணனின் தூதுவரான சுகர், சாரணனும், பிருகுமுனிவர், வீர ஆஞ்சநேயரும் காட்சியளிக்கின்றனர்.

    தலசயனம்

    திருக்கடல்மல்லையில் திருமால் வெறுந்தரையில் சயனித்திருப்பதால் இது தலசயனமாகும்.

    புஜங்க சயனம்

    ஆதிசேஷன் மீது பெருமாள் பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது (புஜங்க சயனம், புஜங்க - பாம்பு) பாம்பு போல் இருப்பதால் அது பாம்பணை எனப்பட்டது. எம்பெருமாள் பாற்கடலில் பாம்பணை மேல் பள்ளிக்கொண்டிருப்பது அவன் விந்து, நாத தத்துவங்களுக்கு மேற்பட்டவன் என்பதையும், அவற்றை இயக்க வல்லவன் அவனே என்பதையும் தெரிவிப்பது.

    உந்தியில் நான்முகனது தோற்றம் படைப்பை உணர்த்துகிறது. மிகப்பெரிய அனந்த சாயியை திருமயத்திலும், திருவனந்தபுரத்திலும், நாமக்கல்லிலும் தரிசிக்கலாம். செஞ்சிக்கு வடக்கிலுள்ள (சிங்கபுரம்) சிங்கவரம் என்னும் ஊரில் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட கோவிலில், அரங்கநாதர் பள்ளிகொண்டு விண்ணைப் பார்த்த வண்ணம் யோக சயனத்தில் உள்ளார். இவரது வலப்புறம் திரு மார்பில் திருமகள், கொப்பூழ்க்கொடித் தாமரையில் பிரம்மன், அருகில் கந்தருவர், திருவடிப்பக்கம் பிரகலாதன், பூதேவி ஆகியோர் காட்சியளிக்கின்றனர். திருவரங்கப் பெருமாளைப் பற்றி, தொண்டரடிப் பொடியாழ்வார் புகழ்ந்து பாடியுள்ளார். அதற்கேற்ற முறையில் பள்ளிகொண்டுள்ளார். 108 திவ்ய தேசங்களில் `கோவில்' என்று கூறப்படுவது இதுவே.

    போக சயனம்

    திருச்சித்திரக்கூடத்தில் மூர்த்தி, 4 திருக்கரங்களுடன் திடமான திருமேனியுடன் கரிய வண்ணத்துடன் காட்சியளிக்கிறார். சுவாமி திருமுடி அருகே திருமகள் அமர்ந்திருக்கிறாள். இடபுறத்தில் சிவபிரான் இருக்கிறார். இவ்வாறு அனைத்துப் பரிவாரங்களுடன் காட்சியளிக்கும் திருவுருவமே போக சயன மூர்த்தியாகும்.

    வடபத்ர சயனம் (திருவில்லிபுத்தூர்)

    வடபத்ரம் ஆலிலை மீது பள்ளிகொண்டது கிழக்கு நோக்கிய சயனம். வடபத்ர ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவில் அருகே உள்ளது. சுவாமியின் மேல்புறத்தில் கந்தருவர் தேவர் உள்ளார்.

    வீரசயனம் (திருஇந்தளூர்)

    இம்மூர்த்தி நான்கு திருக்கரம் கொண்டுள்ளார். வலக்கரங்களில் சக்கரமும், தலையணையும் இருக்கிறது. இடக்கரங்களில் ஒன்று சங்கேந்தியும், மற்றொன்று திருமேனிக்கு இணையாகவும் பரந்திருக்கும். முன் சொன்ன மூர்த்திகள், மதுகைடபர் போன்றோரை காண முடியும்.

    மாணிக்க சயனம் (திருநீர்மலை)

    மலையின்மேல் திருவரங்கநாதர் மாணிக்க சயனமாகப் பள்ளிகொண்டுள்ளார். தாயார் ஸ்ரீரங்கநாயகி, பிருகு முனிவர், மார்க்கண்டேயருக்குக் காட்சியளித்தவர்.

    இவை தவிர யோக சயனம் என்று ஒன்று உண்டு. இரு திருக்கரங்களை உடைய இம்மூர்த்தி அனந்தன் மீது சயனித்துள்ளார். இடத் திருவடி சற்றே மடிந்தும், வலத் திருவடி நீண்டும் இருக்கும். திருவடிக்கு அருகில் மதுகைடபர் இருப்பர். பிருகு, மார்க்கண்டேயர் அருகில் இருப்பார்கள். நாபிக் கமலத்தில் பிரம்மன், பின்புறச் சுவரில் ஆயுதபுருஷர்கள், 7 முனிவர், கருடன், விஷ்வக்சேனர் ஆகியோர் வணங்கி நிற்பர். இடப்புறத்தில் சிவபிரான் இருப்பார். இவ்வாறு அனைத்துப் பரிவாரங்களுடன் காட்சியளிக்கும் திருவுருவமே யோக சயன மூர்த்தியாகும்.

    -எம். நிர்மலா, புதுச்சேரி.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    ×