search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • தடுப்புகளினால் மேட்டுப்பாளையம் நகராட்சி குடிநீர் திட்டம் பாதிக்கப்படும்.
    • மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சாமன்னா நீர் ஏற்று நிலையத்தின் அருகே பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் எடுக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

    இந்த பணிக்காக தண்ணீரினை அதிகமாக மோட்டார் மூலம் உறுஞ்சி எடுக்க அந்த பகுதியில் பவானி ஆற்றின் நடுவே கற்களை கொண்டு தடுப்புகளும் அமைக்கப்பட்டது.

    இந்த தடுப்புகளினால் மேட்டுப்பாளையம் நகராட்சி குடிநீர் திட்டம் பாதிக்கப்படுவதாகவும், மேட்டுப்பாளையம் மக்களுக்கு கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.

    எனவே இதனை அகற்ற வேண்டும் என மேட்டுப்பாளையம் நகராட்சி அ.தி.மு.க கவுன்சிலர்கள் கடந்த 2 தினங்களுக்கு முன் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

    இருப்பினும் அந்த தடுப்புகள் அகற்றப்படாமல் இருந்த நிலையில் நேற்று அந்த பகுதியை மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அவருடன் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்களும் சென்றனர்.

    ஆய்வில் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் மேட்டுப்பாளையம் நகராட்சி குடிநீர் திட்டம் மட்டுமின்றி அதற்கு கீழ் பகுதியில் உள்ள திட்டங்களும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறிய அவர், உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தடுப்புகளை அகற்றுமாறு அறிவுறுத்தினார். இதனையடுத்து ஆற்றில் அமைக்கப்பட்ட தடுப்புகள் ஜே.சி.பி எந்திரத்தின் உதவியுடன் அகற்றப்பட்டது.

    • மின்வேலி அமைப்பது இந்தியா மின்சார சட்டம் 2003-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
    • தரமான ஐ.எஸ்.ஐ. குறியீடு பெற்ற மின்சாதனங்களை உபயோகிக்கவும்.

    கோவை,

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கோவை மண்டல தலைமை பொறியாளர் வினோதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விவசாய நிலங்களில் காட்டு விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தவிர்க்கவும், மனிதர்கள் விவசாய நிலங்களில் அத்துமீறி நுழைவதை தடுக்கவும், சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைக்கப்பட்டதினால் மின்வேலிகளில் மனிதர்களும், விலங்குகளும் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

    மின் வேலி அமைப்பது இந்தியா மின்சார சட்டம் 2003-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். விவசாய நிலங்களில் மின் வேலி அமைத்தால் சம்பந்தப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். எனவே விவசாய நிலங்களில் மின் வேலி அமைக்கக் கூடாது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அந்த அறிவிப்பில் கூறி உள்ளார்.

    பொதுமக்கள் மின் விபத்துகளை தவிர்ப்பது குறித்து அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தரமான ஐ.எஸ்.ஐ. குறியீடு பெற்ற மின்சாதனங்களை உபயோகிக்கவும், மின் பணிகளை அங்கீகரிக்கப்பட்ட எலக்ட்ரீசியனை கொண்டு பணி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

    மின் கம்பிகள் மற்றும் இழுவை கம்பிகளில் ஈரத்துணிகளை உலர்த்தக்கூடாது. மின் நுகர்வோர்கள் தங்களது மின் வயரிங்குகளை முறையாக ஆய்வு செய்து பழுதடைந்த வயரிங்குகளை புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மின் நுகர்வோர் தங்களது வீடுகள், வளாகத்தில் மின் இணைப்பில் ஆர்சிடி, இஎல்சிபி-யை பொருத்து மாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் போது அருகில் மின் பாதைகள் இருப்பின் உரிய இடை வெளியோடும், உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியும் பணிகள் மேற்கொண்டு விபத்தினை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் வந்தனர்.
    • கும்பலில் ஒருவர் கீழே கிடந்த கல்லை எடுத்து இசக்கிதுரையின் தலையில் பலமாக தாக்கினார்.

    கோவை,

    கேரள மாநிலத்தை சேர்ந்தவர் இசக்கிதுரை (வயது 32). இவர் கோவை போத்தனூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து நிறுவனத்தின் அருகே அறை எடுத்து தங்கி உள்ளார்.

    இந்த நிலையில், அவர் போத்தனூர் ரெயில்வே பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 4 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் இசக்கிதுரையிடம் இப்போது மணி என்ன ஆகிறது? என கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்காமல் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் அவரை தகாத வார்த்தைகளால் பேசி தீட்டினர். பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் அந்த கும்பலில் ஒருவர் கீழே கிடந்த கல்லை எடுத்து இசக்கிதுரையின் தலையில் பலமாக தாக்கினார். இதில் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் அவர் கூச்சலிட்டதால், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த அவர் தனது நண்பரை அழைத்து கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார்.

    பின்னர் இதுகுறித்து அவர் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். பொதுமக்கள் அதிகமாக நடமாட்டம் உள்ள பொது இடத்தில் 4 பேர் கொண்ட கும்பல் வாலிபரை கல்லால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விநாயகர் மற்றும் மகாலட்சுமி சிலைகள் பிரதிஷ்டை செய்து கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
    • கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை மற்றும் எதி பூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள எண்.4.வீரபாண்டி பேரூராட்சி மற்றும் கூட லூர் கவுண்டம்பாளையம் நகராட்சி இந்து முன்னணி நடத்தும் 2-ம் ஆண்டு மாபெரும் 1508 திருவிளக்கு பூஜை விழா வீரபாண்டி மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது.

    விநாயகர் மற்றும் மகாலட்சுமி சிலைகள் பிரதிஷ்டை செய்து கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இந்த விழாவில் முதலாவதாக சிலம்பாட்ட நிகழ்ச்சி, ஒயிலாட்டம் மற்றும் பரதநாட்டியம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    அதனைத் தொடர்ந்து கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை மற்றும் எதி பூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    திருவிளக்கு பூஜையை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதனை ஸ்ரீ வாராஹி மந்திராலயத்தை சேர்ந்த மணிகண்ட சுவாமிகள் மற்றும் சிவ நாசர் இந்த பூஜையை நடத்தி வைத்தார்.

    இந்த பூஜையில் கலந்து கொண்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விளக்கு, பூக்கள், எண்ணை, மஞ்சள், குங்குமம், வளையல், கண்ணாடி, சிப்பு, வெற்றிலை மற்றும் பாக்குகளை விழா குழுவினர் வழங்கினர்.

    இதனையடுத்து அனைத்து பக்தர்களும் விநாயகருக்கு பூஜை செய்து விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். அதன்பிறகு ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற்றன.இறுதியாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் வீரபாண்டி, கூடலூர் கவுண்டம்பாளையம், நாயக்கனூர், சாமநாயக்கன்பாளையம், காளிபாளையம், திரு மலைநாயக்கன்பாளையம் உள்ளிட்ட ஊர்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • திருவிழா நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • நாளை மகா கணபதி ஹோமம், முகூர்த்த கால், சிறப்பு அபிஷேகம், பம்பை உடுக்கை நிகழ்ச்சி நடக்கிறது.

    கோவை,

    கோவை அவினாசி ரோடு தண்டுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா, நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    கோவை அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி நாளை (திங்கட்கிழமை) மகா கணபதி ஹோமம், முகூர்த்த கால், சிறப்பு அபிஷேகம், கிராம சாந்தி, பம்பை உடுக்கை நிகழ்ச்சி நடக்கிறது.

    வருகிற 20-ந் தேதி அக்னிசாட்சி நிகழ்ச்சி, 21-ந் தேதி திருவிளக்கு வழிபாடு, வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 22-ந் தேதி குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 23-ந் தேதி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 24-ந் தேதி திருவிளக்கு வழிபாடு, அன்ன வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 25-ந் தேதி திருக்கல்யாண உற்சவம், மலர் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா, 26-ந் தேதி சக்தி கரகம், அக்னி சாட்டு புறப்பாடு நிகழ்ச்சி ஆகியன நடக்கிறது.

    27-ந் தேதி மகா அபிஷேகம், மஞ்சள் நீர், கொடி இறக்குதல், கம்பம் கலைத்தல், 28-ந் தேதி தமிழில் லட்சார்ச்சனை, 30-ந் தேதி சங்காபிஷேகம், வசந்த உற்சவம், ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மேலும் திருவிழா காலங்களில் தினமும் காலை 7 மணிக்கு அபிஷேக பூஜைகளும், மாலை 4 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகளும் நடைபெறுகிறது. தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது.

    • ெபாதுமக்கள் உக்கடம் முதல் டவுன்ஹால் வரை சி.சி.டி.வி காமிரா அமைக்க வேண்டும் என்றனர்.
    • இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

    குனியமுத்தூர்.

    கோவை சுந்தராபுரத்தை 32 வயது வாலிபர். இவர் நேற்று பொள்ளாச்சி செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் உக்கடம் பஸ் நிலையம் வந்தார். பின்னர் பஸ் நிலையம் அருகே உள்ள உக்கடம் போலீஸ் நிலையம் காம்பவுண்ட் சுவரின் அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு பொள்ளாச்சி சென்றார்.

    அங்கு தனது வேலைகளை முடித்து விட்டு மீண்டும் உக்கடம் வந்து, மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றார். பின்னர் வாகனத்தை எடுத்து இயக்க முயற்சித்த போது அவரால் முடியவில்லை.

    இதையடுத்து அவர் மோட்டார் சைக்கிளை பார்த்தார். அப்போது பெட்ரோல் டேங்க் திறந்து கிடந்தது. உள்ளே பார்த்த போது பெட்ரோல் சுத்தமாக இல்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால் காலையில் தான் அவர் 3 லிட்டர் பெட்ரோல் நிரப்பி கொண்டு வந்துள்ளார்.

    ஆனால் முற்றிலும் பெட்ரோல் இல்லாமல் துடைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதனால் யாரோ பெட்ரோலை திருடி இருந்தது தெரியவந்தது. பின்னர் அவர் சிறிது தூரம் மோட்டார் சைக்கிளை உருட்டி சென்று அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பி கொண்டு மீண்டும் சென்றார்.

    கோவையில் அண்மை காலங்களாக மோட்டார் சைக்கிள் உள்பட பல வாகனங்களிலும் பெட்ரோல் திருடப்படுவது அதிகரித்துள்ளது.இதுகுறித்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கூறியதாவது:-

    உக்கடம் பஸ் நிலையத்தையொட்டிய பகுதி 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். உக்கடம் பஸ் நிலையத்திலிருந்து டவுன்ஹால் வரை கடைகள் அடர்த்தியாக நெருக்கமாக இருக்கும். கடைகளுக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் கூட அந்த இடத்தில் நின்று விட்டு பேசிக் கொண்டிருப்பார்கள்.

    அப்படி இருந்தும் இப்பகுதியில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் தொடர் பெட்ரோல் திருட்டு நடப்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

    சிலர் வெளியில் சொல்கிறார்கள். பலர் அதனை வெளியே சொல்ல முடியாமல் மவுனமாக சென்று விடுகின்றனர். பெரிய திருட்டு நடந்தால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கலாம். ஆனால் இந்த பெட்ரோல் விஷயத்துக்காக புகார் கொடுப்பதா என்று பலரும் ஏமாற்றத்துடன் இருசக்கர வாகனத்தை உருட்டிக் கொண்டு செல்வதை காண முடிகிறது.

    எனவே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும் உக்கடம் முதல் டவுன்ஹால் வரை சி.சி.டி.வி காமிரா அமைக்க வேண்டும். அவ்வாறு பல்வேறு விழிப்புணர்வுடன் செயல்பட்டால் பெட்ரோல் திருட்டு தடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • ராகுல் காந்தி எம்.பி. தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ரெயில் மறியல் போராட்டம்
    • போலீசார் 5 பெண்கள் உள்பட 75 பேரை கைது செய்தனர்.

    கோவை,

    கோவையில் ராகுல் காந்தி எம்.பி. தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் 80-க்கும் மேற்பட்டோர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

    அவர்கள் கோஷமிட்டபடி கோவை ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    போராட்டக்காரர்கள் போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.

    ஆனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர்.

    அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் ரெயில் நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பழிவாங்கும் நடவடிக்கையாக ராகுல் காந்தி எம்.பி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 75 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி அருகில் உள்ள தனியார் மண்டபத்தி்ற்கு கொண்டு சென்றனர். காங்கிரஸ் கட்சியினரின் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • இளம் பெண்ணுக்கு மிஸ்டு கால் மூலமாக வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • கணவர் தனது மனைவியை மீட்டுத் தருமாறு வடக்கி பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் வடக்கிபாளையம் அருகே உள்ள செல்லாண்டி கவுண்டன்புதூரை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண்.

    இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை.

    இந்நிலையில் இளம் பெண்ணுக்கு மிஸ்டு கால் மூலமாக வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இதனை இளம் பெண்ணின் கணவர் கண்டித்தார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று இளம் பெண்ணின் கணவர் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

    வேலை முடிந்ததும் மதியம் வீட்டுக்கு திரும்பிய இளம்பெண்ணின் கணவர் தனது மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அவர் இது குறித்து கள்ளக்காதலனுடன் ஓடிய தனது மனைவியை மீட்டுத் தருமாறு வடக்கி பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • மகள் மனவளர்ச்சி குன்றியவராக இருந்ததாக தெரிகிறது.
    • பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை பேரூர் அருகே ஆறுமுககவுண்டனூரை சேர்ந்தவர் 37 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    இவரது மகள் மனவளர்ச்சி குன்றியவராக இருந்ததாக தெரிகிறது. இதனால் இளம்பெண் தனது குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து கவலையடைந்து உறவினர்களிடம் புலம்பி வந்தார்.

    சம்பவத்தன்று இளம்பெண் வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் அவரது உடலை பார்த்து கதறி அழுதார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பேரூர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த 2 ஆண்டுகளிலும் எந்த வேலைகளும் நடக்கவில்லை.
    • கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    கோவை,

    அ.தி.மு.க சார்பில் கோவை குனியமுத்தூர், இடையர்பாளையம், சுகுணாபுரம், சுண்டக்காமுத்தூர், மதுக்கரை ஆகிய இடங்களில் நீர்-மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு நீர்-மோர் பந்தலை திறந்து வைத்ததுடன், பொதுமக்களுக்கு தர்ப்பூசணி, இளநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

    குனியமுத்தூரில் நீர்-மோர் பந்தலை திறந்து வைத்ததுடன், அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, நீர்-மோர் பந்தல் அருகே அம்பேத்கரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த உருவப்படத்துக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருப ர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர்-மோர் பந்தல் திறக்கப்பட்டு உள்ளது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த 2 ஆண்டுகளிலும் எந்த வேலைகளும் நடக்கவில்லை.

    கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் கனவு திட்டமான அவினாசி-அத்திக்கடவு திட்டம், மேம்பாலங்கள் அமைப்பது, சாலைகள் போடுவது போன்ற அனைத்து திட்டங்களுமே மெதுவாக நடந்து வருகிறது.

    மேலும் கோவைக்கு புதிதாக எந்த திட்டங்களும் கொண்டு வரவில்லை. எனவே கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    நாங்கள் ஆட்சியில் இருந்த போது கொரோனா காலத்தில் எல்லா இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் இப்போது எந்த ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட வில்லை.

    சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் மக்களின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து எடுத்து கூறிகிறார். அவை எல்லாம் வெளியே தெரிவது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கண்காட்சி கோவை வ.உசி. மைதானத்தில் கடந்த 7-ந் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது.
    • கண்காட்சியை அமைச்சர் செந்தில்பாலாஜி, நடிகர் தம்பிராமையா உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    கோவை,

    எங்கள் முதல்வர், எங்கள் பெருமை என்ற புகைப்பட கண்காட்சி கோவை வ.உசி. மைதானத்தில் கடந்த 7-ந் தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது.நிறைவு நாளான நேற்று புகைப்பட கண்காட்சியை அமைச்சர் செந்தில்பாலாஜி, நடிகர் தம்பிராமையா உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தனது கையில் கட்டி உள்ள வாட்சிற்கான பில் காண்பித்ததை மனசாட்சி இருக்கும் யாருமே அதை பில்லாக ஏற்று கொள்ள மாட்டார்கள். இந்த எக்ஸ்.எல். சீட் தயாரிக்கவா 4 மாதம் ஆனது? எனக்கு எதுவுமே கிடையாது. எல்லாமே எனது நண்பர்கள் தான் கொடுக்கின்றனர் என அண்ணா மலை தெரிவிக்கிறார்.

    அண்ணாமலை குடியிருக்கும் வீட்டின் வாடகை மாதம் ரூ.3.75 லட்சம் ஆகும். மாதம், மாதம் இந்த வாடகையை யார் கொடுக்கிறார்கள் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும்.

    ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு பணம் அனைத்தும் வெளியில் இருந்து வருகிறது என்றால், பணம் எங்கே வார்ரூம்மில் இருந்து வருகிறதா ? வார் ரூமில் செய்யப்படும் வசூல் தான் அவரது நண்பரா ?, யார் செலவு செய்கின்றனர் என்ற பட்டியலை வெளியிட வேண்டும்.

    அண்ணாமலை கூறிய நபர் வாட்ச் வாங்கினது ரூ.4.50 லட்சம் எனவும், அதை ரூ.3 லட்சத்துக்கு தனக்கு கொடுத்ததாக அண்ணாமலை கூறுகிறார். கிடைக்காத அரிய பொருளின் மதிப்பு கூடுமே தவிர குறையாது, வாட்ச் நம்பரையும் அண்ணாமலை மாற்றி மாற்றி சொல்கிறார், அதில் இருக்கும் தகவல்களை மாற்றி சொல்கிறார். ஒரு வெகுமதியை மறைக்க ஆயிரம் பொய்யை சொல்கிறார் அண்ணாமலை. பரிசாக கொடுத்தார்கள் என சொல்வதில் அண்ணா மலைக்கு என்ன தயக்கம்?

    அண்ணாமலை வெளியிட்ட பட்டியலில் எதுவுமே இல்லை. தேர்தல் ஆணையத்தில் கொடுத்து இருக்கும் சொத்து ஆவணங்களை தொகுத்து வெளியிட்டு இருக்கிறார். ஒரு ஆதாரம், ஒரு அடையாளம் ஒன்றும் அண்ணாமலை வெளியிட்டதில் இல்லை. தூய்மையாக இருக்கிறீர்கள் என்றால் ஏன் அடுத்தவன் சொத்தில் வாழுகிறீர்கள். படையப்பா படத்தில் ரஜினி காந்த் பேசும் டயலாக்போல மாப்பிள்ளை அவர்தான் என்பதைபோல பயன்படுத்துவது எல்லாம் நான் தான். ஆனால் கொடுப்பது எல்லாம் அவர்கள் என்பதை போல இருக்கிறது அவரது பேச்சு.

    என்னை பற்றியும் அவர் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அனுமதி பெற்று நானே கோர்ட்டில் அண்ணாமலை மீது வழக்கு தொடர இருக்கிறேன். தமிழகத்தில் நேற்று ஒரு நாள் அதிகபட்ச மின் நுகர்வு 400 மில்லியன் யூனிட்டை கடந்து இருக்கிறது. முதல் முறையாக இந்த அளவு கடந்து இருந்தாலும் எந்தவித மின்தடையும் இல்லாமல் மின்வாரியம் செயல்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர்பேசினார்.

    அப்போது மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றி செல்வன் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் எம்.பி.நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த மாதம் அவினாசி- அத்திக்கடவு திட்டம் முழுமை அடைந்து வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
    • இத்திட்டம் நிறைவேறியதற்கு, அம்மன் சுவாமிக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து அபிஷேகம் செய்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    அவினாசி-அத்திக்கடவு திட்டம் நிறைவேறியதை அடுத்து, போராட்ட குழுவினர் பவானி ஆற்றில் தீர்த்தம் எடுத்து, அம்மனுக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து அபிஷேகம் செய்தனர்.

    அவினாசி-அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் நிறைவேற காலதாமதம் ஆனதை அடுத்து, விவசாயிகள், பொதுமக்கள் அவிநாசி-அத்திக்கடவு திட்ட போராட்ட குழுவை ஏற்படுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

    அதில் ஒன்றாக அந்தந்த கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள், மேட்டுப்பாளையம் அடுத்த வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்து, பவானி ஆற்றில் தீர்த்தம் எடுத்து சென்றனர்.

    அந்தந்த கிராமங்களில் கோவிலில் உள்ள அம்மன் சுவாமி உள்பட பல்வேறு சுவாமிகள் மீது தீர்த்தத்தை ஊற்றி, திட்டம் விரைவில் நிறைவேற வேண்டும் என 8 ஆண்டுகளாக அபிஷேகம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் அவினாசி- அத்திக்கடவு திட்டம் முழுமை அடைந்து வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, அவிநாசி, அன்னூர் தாலுகாவை சேர்ந்த ராய்கவுண்டன்புதூர், வடுகனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் வாகனங்களில் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றுக்கு வந்தனர்.

    ஆற்றில் தீர்த்தம் எடுத்து குடத்திற்கு மாலையிட்டு பூஜை செய்தனர். பின்பு விநாயகர், வனபத்ரகாளியம்மனை வழிபட்டனர்.

    பின்னர் அவரவர் கிராமத்திற்கு சென்று, அங்குள்ள கோவில்களில் உள்ள அம்மன் உள்ளிட்ட சுவாமிகள் மீது தீர்த்தத்தை ஊற்றி, திட்டம் நிறைவேறியதற்கு, அம்மன் சுவாமிக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து அபிஷேகம் செய்தனர்.

    ×