search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்டனை"

    பட்டாக்கத்தியால் கேக் வெட்டி ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தோப்புக்கரணம் போட வைத்து நூதன தண்டனை வழங்கினர்.
    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கத்தில் தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் பிரிவு உபசார நிகழ்ச்சியின் போது பட்டா கத்தியால் ‘கேக்’ வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோ திருச்சி மாநகர போலீசாரின் கவனத்திற்கும் சென்றது.

    இதையடுத்து ஸ்ரீரங்கம் போலீசார் அந்த கல்லூரிக்கு சென்று, பட்டா கத்தியால் ‘கேக்’ வெட்டிய மாணவர்கள் யார்? என விசாரித்தனர். இதில் எம்.காம். 2-ம் ஆண்டு வகுப்பை சேர்ந்த 9 மாணவர்கள் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் வீடியோ பதிவில் உள்ளதையும் ஒப்பிட்டு அவர்களை போலீசார் உறுதி செய்தனர்.

    இதைத்தொடர்ந்து மாணவர்களை ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களது பெற்றோர்களையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர்.

    மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தால் அவர்களது படிப்பு மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் போலீசார் நூதன தண்டனை அளித்தனர். அதன்படி 9 மாணவர்களையும் தோப்புக்கரணம் போடவைத்தனர். குறிப்பிட்ட எண்ணிக்கையில் தோப்புக்கரணம் போட்டதும் அவர்களுக்கு தகுந்த அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். #tamilnews
    பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #pollachiissue

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அனைத்திந்திய இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றம் சார்பில், பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மீது கூட்டு பாலியலில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஓசூர் ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், தளி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டி.ராமச்சந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் லகுமய்யா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

    மேலும் இதில் இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.

    பெண்கள் மீதும், சிறுமிகள் மீதும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமை தொடராமல் இருக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. #pollachiissue

    அமெரிக்காவில் குற்றம் செய்யாமலே 39 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தவருக்கு ரூ.150 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது. #CraigColey
    கலிபோர்னியா:

    அமெரிக்காவில் கலிபோர்னியாவை சேர்ந்தவர் கிரைக் கோலே (71). கடந்த 1978-ம் ஆண்டு தனது காதலி ரோன்டா விச்ட். அவரது 4 வயது மகன் டொனால்டு ஆகிய 2 பேரை கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தான் குற்றவாளி இல்லை என அவர் வாதிட்டார்.

    இருந்தும், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் பரோல் எதுவுமின்றி தண்டனை அனுபவித்தார். இந்த நிலையில் 39 ஆண்டுகளுக்கு பிறகு அவரை கலிபோர்னியா கவர்னர் ஜெர்ரி பிரவுன் கருணை அடிப்படையில் கடந்த 2017-ம் ஆண்டில் விடுதலை செய்தார்.

    அதன்பின்னர் அவர்தான் குற்றம் அற்றவர் என்பதை நிரூபிக்க ஆதாரங்களை திரட்டி வாதாடினார். அதில் அவர் குற்றமற்றவர் என்றும், செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்தவர் என்றும் தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து அவருக்கு ரூ.150 கோடி (21 மில்லியன் டாலர்) இழப்பீடு வழங்க நஷ்டஈடு வாரியம் உத்தரவிட்டது. எனவே அவருக்கு அந்த தொகை வழங்கப்பட்டது. #CraigColey   
    லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். #Bribe #maduraicourt
    சென்னை:

    லஞ்சம் தொடர்பான வழக்கின் விசாரணை ஒன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:- 

    லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும், சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். மின்வாரிய உதவி பொறியாளர் பணி நியமன விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும். லஞ்சம் வாங்குவோர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். கடுமையான தண்டனை வழங்கினால் தான் லஞ்சம் வாங்குவது குறையும்.

    கடும் தண்டனை அளித்தால் தான் லஞ்சம் வாங்குவது இயல்பானது என்ற நினைப்பை மாற்ற முடியும். லஞ்சம் வாங்கும் பழக்கம் முழுமையாக ஒழிய வேண்டும் என்றால் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 

    இவ்வாறு  உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன்-சுந்தர் அடங்கிய அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. #Bribe #maduraicourt
    கனடாவில் 8 பேரை அடுத்தடுத்து கொலை செய்த சைக்கோ கொலையாளிக்கு 8 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #CanadaSerialKiller
    டொரண்டோ:

    கனடாவில் 2010ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை டொரண்டோவில் உள்ள ஒரே பாலினத்தாருக்கான பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து 8 பேர் மர்மமான முறையில் மாயமானார்கள். அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே ஆண்ட்ரூ  கின்ஸ்மேன் என்பவர் மாயமானதையடுத்து, அவரது நண்பரான புரூஸ் மெக் ஆர்தர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து புரூஸ் மெக் ஆர்தரின் நடவடிக்கைகளை கண்காணித்த போலீசார், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒரே பாலினத்தாருக்கான பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்கள் உள்பட 8 பேரை அடுத்தடுத்து கொலை செய்தது தெரியவந்தது. 

    அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், கொலை செய்யப்பட்டவர்களின் எஞ்சிய உடல் பாகங்கள், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. கொலை செய்யப்பட்டவர்களுடன் அவர் எடுத்த புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டன.

    இதையடுத்து அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது, புரூஸ் மெக் ஆர்தர், 8 பேரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து புரூஸ் மெக் ஆர்தருக்கு (வயது 67), 8 ஆயுள் தண்டனைகள் விதித்து கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அவர் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அதேசமயம், அவர் 25 ஆண்டுகளுக்கு பரோல் பெற முடியாது என்றும் தெரிவித்தார். இதையடுத்து புரூஸ் மெக் ஆர்தர், சிறையில் அடைக்கப்பட்டார். #CanadaSerialKiller
    சிறுமியை பலாத்காரம் செய்த 15 வயது சிறுவனுக்கு 2 ஆண்டு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

    கோவை:

    பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் நிறுவன குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    இவர் கடந்த 2016-ம் வீட்டின் அருகே வசித்து வந்த 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சிறுமியை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சோதனை செய்தனர். சோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து ராமநாதபுரம் போலீசார் 13 வயது சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். பின்னர் சிறுவன் ஜாமீனில் வெளியே வந்தான்.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிறுவர்களுக்கான விசாரணை ஆணையத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிறுவனுக்கு 2 ஆண்டு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து சிறுவன் மீண்டும் சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.

    பீகார் மாநிலத்தில் வேறு சாதி வாலிபருடன் ஓடிப்போனதற்கு தண்டனையாக சிறுமியை சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #HinduBiy #MuslimGirl #Nawada
    பாட்னா:

    பீகார் மாநிலம் நவாடா பகுதியில் உள்ள ஜோகியா மாரன் கிராமத்தை சேர்ந்த சிறுமி வேறு சாதி வாலிபரை காதலித்தாள். அதை அறிந்த பெற்றோர் அவளை கண்டித்தனர்.

    இந்த நிலையில் அவள் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தாள். இதனால் ஆத்திரம் அடைந்த அவளது தந்தையும் ஜோகியா மாரன் கிராம மக்களும் சேர்ந்து அந்த சிறுமியை தேடிப்பிடித்து இழுத்து வந்தனர்.



    பின்னர் கிராமத்தினர் கூடி கட்ட பஞ்சாயத்து பேசினர். முடிவில் அந்த சிறுமியை ஒரு மரத்தில் கட்டி வைத்தனர். வேறு சாதி வாலிபருடன் ஓடிப்போனதற்கு தண்டனையாக சிறுமியை சரமாரியாக அடித்து உதைத்தனர். கிராம மக்களுடன் சிறுமியின் தந்தையும் அவளை தாக்கினார்.



    இது பற்றிய தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கிராமத்தினரின் பிடியில் இருந்து 5 மணி நேரத்துக்கு பிறகு சிறுமியை மீட்டனர்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #HinduBiy #MuslimGirl #Nawada
    மில்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    வேடசந்தூர்:

    வேடசந்தூரில் பணிபுரியும் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் மணிமேகலை மற்றும் உறுப்பினர்கள் பிரதமருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

    பஞ்சாலைகளில் தொழிலாளர்கள் சுமங்கலி திட்டம் மற்றும் இதர திட்டங்களின் வாயிலாக விடுதிகளில் தங்க வைக்கப்படுகின்றனர். இவர்கள் அதிகபடியான நேரங்களில் குறைவான ஊதியத்தில் பணி புரிகின்றனர். பல இடங்களில் இளம் பெண்கள் வேலைக்காக கடத்தப்பட்டு வருகின்றனர்.

    இதனால் அவர்களது பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பெண்கள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளும் வீட்டு வேலைக்காகவும், கட்டாய தொழிலாளியாகவும் மாற்றப்படும் நிலை உள்ளது. இவர்கள் பல சமயங்களில் பாலியல் அடிமைகளாக ஆளாக்கப்படுகின்றனர்.

    நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில் வெளி நாடுகளில் இருந்து வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வருடத்துக்குள் நீதி கிடைத்து விடுகிறது. மேலும் தவறு செய்தவர்களின் சொத்துகளும் முடக்கப்படுகிறது.

    எனவே இந்தியாவிலும் இது போன்று ஆள்கடத்தல் மற்றும் பெண் தொழிலாளர்களின் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் தண்டனை வழங்க சட்டத்திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 3 ஆண்டுகளில் வெறும் 27 சதவீத வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டு இருப்பதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் தலித் பிரிவினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் தொடர்பாக எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் இதுதொடர்பாக ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், தண்டனை வழங்கப்படுவது மிகவும் குறைவு என தெரியவந்துள்ளது.

    அந்தவகையில் கடந்த 2014 முதல் 2016 வரையிலான 3 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் அவற்றில் வழங்கப்பட்ட தண்டனை விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. இதில் 2014-ம் ஆண்டில் நாடு முழுவதும் 40,208 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 28.4 சதவீத வழக்குகளிலேயே தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

    2015-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 38,510 வழக்குகளில் 27.2 சதவீத வழக்குகளிலும், 2016-ம் ஆண்டு பதிவான 40,718 வழக்குகளில் 25.8 சதவீத வழக்குகளிலும் தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த 3 ஆண்டுகளில் வெறும் 27 சதவீத வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டு இருப்பதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    வழக்கு பதிவு செய்வதில் ஏற்படும் தாமதம், போதிய சாட்சியம் இல்லாமை, இருக்கும் சாட்சியங்களும் பல்டியடிப்பது போன்ற பல்வேறு காரணங்கள் இதன் பின்னணியில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 
    ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் நவாசுடன் இன்று கைது ஆகிறார். அவர்களை அடியலா சிறையில் அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. #NawazSharif #Maryam
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பிரதமராக இருந்து வந்த நவாஸ் ஷெரீப், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு இதே ஜூலை மாதம் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவர் பிரதமர் பதவியையும் இழந்தார்.

    அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் ஊழல் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தவும் சுப்ரீம் கோர்ட்டு அப்போது உத்தரவிட்டது.

    இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் ஊழல் பணத்தில் சொகுசு வீடுகள் வாங்கியதாக நவாஸ் ஷெரீப் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ‘அவென்பீல்டு’ வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில், நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோர் குற்றவாளிகள் என அந்த கோர்ட்டு முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், மரியம் நவாசுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டும் சிறைத்தண்டனை விதித்து கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இதற்கிடையே லண்டன் நகரில் புற்றுநோயால் அவதியுற்று வருகிற மனைவி குல்சூம் நவாசை சந்திப்பதற்காக நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாசுடன் அங்கு சென்றார்.

    அங்கு குல்சூம் நவாஸ் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் நவாஸ் ஷெரீப், மகள் மரியம் நவாசுடன் இன்று (வெள்ளிக்கிழமை) நாடு திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்கிடையே லாகூர் அல்லது இஸ்லாமாபாத்தில் விமானத்தில் வந்து இறங்கியதும் நவாஸ் ஷெரீப்பையும், மகள் மரியம் நவாசையும் கைது செய்ய தேசிய பொறுப்புடைமை முகமை நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அவர்களை கைது செய்து ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைப்பதற்கு முடிவு செய்து, ஏற்பாடு ஆகி உள்ளது.

    நவாஸ் ஷெரீப்பையும், மரியம் நவாசையும் கைது செய்து சிறைக்கு அழைத்துச் செல்வதற்காக 2 ஹெலிகாப்டர்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் ஒன்று லாகூர் விமான நிலையத்திலும், மற்றொன்று இஸ்லாமாபாத் விமான நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தபோது எந்த ஹெலிகாப்டரை தனது பயணங்களின் போது பயன்படுத்தினாரோ அதே ஹெலிகாப்டரில் அவர் சிறைக்கு கொண்டு செல்லப்படுவார் என தகவல்கள் கூறுகின்றன.

    கேப்டன் சப்தார் ஏற்கனவே அடியலா சிறையில் அடைக்கப்பட்டு விட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

    லண்டனில் இருந்து நாடு திரும்புவதையொட்டி நவாஸ் ஷெரீப் நேற்று முன்தினம் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “குல்சூம் நவாசுக்கு இன்னும் செயற்கை சுவாசம்தான் அளிக்கப்படுகிறது. அவரை நினைவு திரும்பிய நிலையில் பார்க்க விரும்புகிறேன். இப்போதைக்கு அவரை விட்டு விட்டு பாகிஸ்தான் திரும்புகிறேன்” என கூறினார்.

    மேலும், “நான் என் நாட்டுக்காக போராடுகிறேன். சிறையோ, தண்டனையோ என்னை தடுத்து நிறுத்தி விட முடியாது. பாகிஸ்தான் மிகப்பெரும் கஷ்டத்தில் உள்ளது. நான் என் நாட்டை காக்கவே அங்கு செல்கிறேன்” என கூறியது குறிப்பிடத்தக்கது.    #NawazSharif #Maryam #Tamilnews
    குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் சம்பந்தப்பட்ட நபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என கலெக்டர் கணேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    தொழிலாளர் நலத்துறையின் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. கலெக்டர் கணேஷ் கையெழுத்து இட்டு இயக்கத்தினை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    குழந்தை தொழிலாளர் முறை சட்டப்படி குற்றமாகும். எந்த சூழ்நிலையிலும் ஒரு குழந்தையை வேலைக்கு அமர்த்துவது கூடாது. குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளுக்கு தவறாமல் கல்வி அளிக்க வேண்டும். குழந்தைகள் சிறந்த முறையில் கல்வி கற்கும் வகையில் தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை கடைகளிலோ, உணவகங்களிலோ மற்றும் பிற வணிக நிறுவனங்களிலோ வேலைக்கும் அமர்த்துதல் கூடாது.

    14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதும், வேலை செய்ய அனுமதிப்பதும் தண்டனைக்குறிய குற்றமாகும். இவற்றை மீறினால் சம்பந்தப்பட்ட நபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. எனவே குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றி தமிழகத்தை குழந்தை தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக மாற்ற நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கையெழுத்து இயக்கத்தில் தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் தங்கராஜ், முத்திரை ஆய்வாளர்கள் ஜெயராஜ், அறிவின்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Tamilnews
    குமரி மாவட்டத்தில் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த துணைநின்ற மாவட்ட கலெக்டர், மற்றும் துப்பாக்கியால் சுட்ட காவல்துறையினருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.#SterliteProtest
    நாகர்கோவில்:

    தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என குமரி மாவட்ட அனைத்து சமூக அமைப்பு சார்பில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு அளிக்கப்பட்டது.

    குமரி மாவட்ட அனைத்து சமூக அமைப்பு சார்பில், கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில், குமரி மாவட்ட திருவருட்பேரவை பொதுச்செயலாளர் ஜேம்ஸ் ஆர்.டேனியல் உள்பட பலர் தூத்துக்குடி பிரச்சினை தொடர்பாக, குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுப்புகையினால் சுற்றுச்சூழல் மாசுபட்டு புற்றுநோய் போன்ற பல்வேறு உயிர்கொல்லும் நோய்களினால் பாதிக்கப்பட்டு உயிர்களை பலி கொடுத்து வரும் மக்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தின் 100-வது நாளில் நீதி கேட்டு பேரணியாகச் சென்ற வேளையில் காவல்துறை அத்துமீறி, வன்முறைத் தாக்குதல் நடத்தி எந்தவித முன் எச்சரிக்கையும் இன்றி துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் இறந்தனர். சுமார் 100 பேர் படுகாயம் அடைந்தனர்.

    காவல்துறையின் இந்த வன்முறைத் தாக்குதல் மனிதநேயமுள்ள யாராலும் ஏற்றுக்கொள்ள இயலாதது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

    கொல்லப்பட்டவர்கள், காயம் அடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சமூக நீதி அடிப்படையில் தகுந்த இழப்பீட்டு தொகை மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்கிட வேண்டும். வேறு பல மாநிலங்களில் இயங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு தமிழக மக்களின் எதிர்ப்புகளையும் மீறி தூத்துக்குடி மாவட்டத்தில் கால் பதித்திருக்கும் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படவேண்டும்.

    துப்பாக்கிச் சூடு நடத்துவதற்குப் பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் எதையும் கடைப்பிடிக்காமல் முரட்டுத்தனமாக துப்பாக்கி சூடு நடத்த துணைநின்ற மாவட்ட கலெக்டர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் துப்பாக்கியால் சுட்ட காவல்துறை வீரர்கள் கோர்ட்டில் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். காணாமல் போன மக்களைக் கண்டறிந்து அவர்களை மீட்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ், குமரி மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவை ராஜ், குமரி மாவட்ட திருவருட்பேரவை ஒருங்கிணைப்பாளர் மரியவின்சென்ட், மரியவிக்டர், பங்கிராஸ், ஸ்டீபன், அகமது உசேன் ஆகியோர் உடன் சென்றனர். #SterliteProtest
    ×