search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்காளர்"

    • 823 ஓட்டுக்கள் நீக்கப்பட்டிருந்ததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ஓட்டுப் போட முடியவில்லை.
    • தி.மு.க. தற்போது நல்ல ஓட்டுகளை முறைகேடு செய்து தமிழகம் முழுக்க ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளியிருக்கிறது.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் வாக்களிக்கச் சென்ற பலர் ஏமாற்றத்துக்கு ஆளானதாகவும் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி விளக்கம் அளித்திருந்தார்.

    ஆனால் கலெக்டரிடம் விளக்கம் திருப்தி அளிப்பதாக இல்லை என பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. இதுகுறித்து பா.ஜ.க. விவசாயிகள் பிரிவு மாநில தலைவர் ஜி.கே. நாகராஜ் கூறியிருப்பதாவது:-

    கோவை பாராளுமன்ற தொகுதி கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி எண் 214 அங்கப்பா பள்ளியில் 823 ஓட்டுக்கள் நீக்கப்பட்டிருந்ததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் ஓட்டுப் போட முடியவில்லை.

    அவர்கள் அனைவரும் 30 ஆண்டுகளாக ஓட்டளித்து வருபவர்கள். சொந்த வீட்டில் வசிப்பவர்கள். நல்லாட்சியை விரும்பி ஓட்டளிக்க கூடிய ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

    அதேபோல் தெப்பக்குளம் பகுதி வாக்குச்சாவடி எண் 158-ல் 40 ஓட்டுகளும், 157-ல் 45 ஓட்டுகளும், 156-ல் 20 ஓட்டுகளும், 155-ல் 40 ஓட்டுகளும், 154-ல் 30 ஓட்டுகளும், 153-ல் 25 ஓட்டுகளும் என 200 ஓட்டுகள் நீக்கப்பட்டிருந்தன.

    இவர்கள் அனைவரும் வடமாநிலத்தவர்கள். பிரதமர் மோடிக்கு ஆதரவாக ஓட்டளிப்பவர்கள். இப்படி கோவையில் மட்டும் 5 சதவீத ஓட்டுகள். அதாவது 21 லட்சம் ஓட்டுகளில் ஏறக்குறைய 1 லட்சம் ஓட்டுகள் எந்த முன்னறிவிப்போ, கள விசாரணையோ இன்றி கலெக்டரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தேர்தல் பிரிவு பணியாளர்கள் பெயர்களை நீக்கி உள்ளனர்.

    இதுதொடர்பாக கலெக்டரை நேரடியாக சந்திக்க அவரது அலுவலகத்துக்கு சென்றோம். அங்கு அவர் இல்லை. போனில் தொடர்பு கொண்டோம். சேலஞ்ச் ஓட்டு போட சட்டத்தில் இடமில்லை என்று கூறினார்.

    அங்கப்பா மேல்நிலைப்பள்ளியில் 1,353 ஓட்டுகள் இருந்த நிலையில் 823 ஓட்டுகள் குறைந்தபோது விழித்திருக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் மவுனம் காத்து தி.மு.க.வின் விஞ்ஞான முறைகேட்டுக்கு துணை போய் இருக்கிறது.

    கலெக்டர் உரிய நடை முறைகளை பின்பற்றியே வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது என்கிறார். ஆனால் வாக்குச்சாவடி எண் 214-ல் ஓட்டுகள் மறுக்கப்பட்டது வாக்காளர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. கலெக்டர் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.

    இதுசம்பந்தமாக மனு கொடுத்தோம். அப்போதும் வக்கீல்களை நீண்ட நேரம் காக்க வைத்து தேர்தல் முடிந்தபின்பே மனுவை பெற்றுக் கொண்டார். இது தி.மு.க.வின் முறைகேட்டிற்கு மாவட்ட நிர்வாகம் துணை போவதை காட்டு கிறது.

    தி.மு.க. தற்போது நல்ல ஓட்டுகளை முறைகேடு செய்து தமிழகம் முழுக்க ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளியிருக்கிறது. இதை இத்துடன் பா.ஜ.க. விடாது. ஜனநாயக ரீதியில் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பதற்றமான வாக்குச் சாவடிகளில் தலா 4 துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணி மேற்கொள்கிறார்கள்.
    • வாக்குச்சாவடிகளில் மொத்தம் 7,470 அரசு ஊழியர்கள் தேர்தல் வாக்குப் பதிவு பணியில் ஈடுபடுகின்றனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடை பெறுகிறது. இதையொட்டி அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நெல்லை பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை இங்குள்ள 6 தொகுதிகளிலும் மொத்தமாக 8 லட்சத்து 6 ஆயிரத்து 96 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 44 ஆயிரத்து 254 பெண் வாக்காளர்களும், 152 இதர பாலினத்தவர் என மொத்தம் 16 லட்சத்து 50 ஆயிரத்து 532 வாக்காளர்கள் உள்ளனர்.

    நெல்லை சட்டமன்ற தொகுதியில் 314 வாக்குச் சாவடிகளும், பாளையில் 270 வாக்குச்சாவடிகளும், நாங்குநேரியில் 306 வாக்குச் சாவடிகளும், ராதாபுரத்தில் 307 வாக்குச்சாவடிகளும், ஆலங்குளத்தில் 319 வாக்குச் சாவடிகளும், அம்பையில் 294 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1,810 வாக்குச் சாவடிகள் உள்ளன.

    இதில் 333 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அந்த வாக்குச்சாவடிகளில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 13 மிக பதற்றமான வாக்குச் சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    பதற்றமான வாக்குச் சாவடிகளில் தலா 4 துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணி மேற்கொள்கிறார்கள்.

    நெல்லை பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள், தலா ஒரு கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் எந்திரங்கள் வீதம் மொத்தம் 4,354 வாக்குப்பதிவு எந்திரங்களும், 2177 கட்டுப்பாட்டு எந்திரங்களும், அதே எண்ணிக்கையில் வி.வி.பேட் எந்திரங்களும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் உள்ள தாலுகா அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    அவை அனைத்தும் இன்று போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவை 249 வாகனங்களில் இன்று எடுத்துச்செல்லப்படுகிறது. மொத்தம் உள்ள 1,810 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு பணியில் 9,236 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 7 லட்சத்து 13 ஆயிரத்து 388 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 44 ஆயிரத்து 826 பெண் வாக்காளர்கள், 216 பேர் 3-ம் பாலினத்தவர்கள் என மொத்தம் 14 லட்சத்து 58 ஆயிரத்து 430 பேர் வாக்களிக்க தயாராக உள்ளனர்.

    இதற்காக தொகுதி முழுவதும் மொத்தம் 1,624 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவை முழுவதுமாக போலீசாரின் தீவிர கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக 8,026 அரசு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    பாராளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏற்கனவே சட்டமன்ற தொகுதிகளில் உள்ள தாலுகா அலுவலகங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில், இன்று அவை வாக்குச்சாவடிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது.

    இதற்காக துணை தாசில்தார் தலைமையில் 136 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 136 வாகனங்கள் மூலமாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.

    தென்காசி(தனி) பாராளுமன்ற தொகுதியில் 7 லட்சத்து 42 ஆயிரத்து 158 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 73 ஆயிரத்து 822 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலினத்தவர்கள் 203 பேர் என மொத்தம் 15 லட்சத்து 16 ஆயிரத்து 183 வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1,743 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    இதில் 106 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும், 14 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டு உள்ளது. அந்த வாக்குச் சாவடிகளில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    மேலும் சி.சி.டி.வி. கேமிராக்களும் பொருத்தப்பட்டு போலீசாரின் நேரடி கண்காணிப்பில் இருந்து வருகிறது. இந்த வாக்குச்சாவடிகளில் மொத்தம் 7,470 அரசு ஊழி யர்கள் தேர்தல் வாக்குப் பதிவு பணியில் ஈடுபடுகின்றனர்.

    நாளை வாக்குப்பதிவையொட்டி இன்று தாலுகா அலுவலகங்களில் இருந்து அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு போலீசாரின் பாதுகாப்புடன் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து செல்லப்படுகிறது.

    • இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது முதலே, தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக தீவிர பிரசாரம் களைகட்டியது.
    • பெண்கள் வீடுகளில் கட்சி சின்னங்களை கோலமாக வரைந்தும் வேட்பாளர்களை கவருகிறார்கள்.

    வாக்காள பெருமக்களே.. மறந்தும் இருந்து விடாதீர்கள்... என்ற வாகன பிரசாரம் வீடுகளுக்குள் இருந்தாலும் தற்போது காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அந்த அளவுக்கு இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

    நாளை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.

    இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது முதலே, தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக தீவிர பிரசாரம் களைகட்டியது.

    தி.மு.க. தலைமையிலான இண்டியா கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுவதால், தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    அரசியல் கட்சியினருக்கு இணையாக சுயேட்சை வேட்பாளர்களும் வரிந்து கட்டிக்கொண்டு பிரசாரம் செய்கின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் வேட்பாளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதி, வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    இதனால், திரும்பிய பக்கமெல்லாம் வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் காணப்பட்டனர். மேள தாளங்கள் அடித்தப்படி ஊர்வலமாக சென்றனர்.

    பிரசார வாகனங்களில் கட்சிகளின் தொண்டர்களும் தங்கள் கட்சிக் கொடிகளை அசைத்து, நடனமாடினர்.

    பாடல்கள் ஒலிபரப்பிக்கொண்டு ஆட்டோ முன் செல்ல, வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தனர். அவர்களுடன் தொண்டர்கள் கையில் பதாதைகளை ஏந்தி நடனமாடிக் கொண்டே பின்தொடர்ந்து சென்றனர்.

    குறிப்பாக மலைக் கிராமங்கள், சாலை வசதியற்ற மற்றும் நீண்ட தொலைவில் உள்ள குக்கிராமங்களுக்கு வேட்பாளர்கள் சென்று குக்கிராமங்களிலும், வேட்பாளர்கள் வராத பகுதிகளிலும் வாக்காளர்களை கவரும் வகையில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஈடுபட்டனர்.

    எங்கு பார்த்தாலும் அரசியல் கட்சியினரின் தலைகளாக காட்சி அளிக்கிறது. இதே போல் அரசியல் கட்சி தொண்டர்கள் தலைவர்கள் போல் வேடம் அணிந்து பிரசாரத்தில் ஈடுபட்டு அவர்கள் போல் பேசி பொதுமக்களை கவர்ந்தனர்.

    பெரியார் போல் வேடம் அணிந்து வருபவர்கள் சுய மரியாதை, பெண் விடுதலை குறித்தும் கருணாநிதி போல் வருபவர்கள் அவரது வசனம் மற்றும் கொள்கைகள் குறித்தும் பேசினர்.

    மேலும் எம்.ஜி.ஆர். போல் வேடம் அணிந்து வருபவர்கள் அவரது கொள்கைகள் குறித்தும் மற்றும் எம்.ஜி.ஆர். பாடிய பாடல்களை பாடி அவர் போல் நடித்து பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும் வருகிறது. மேலும் மேள தாளங்கள் முழங்க சினிமா பாடல்கள், அரசியல் கட்சி பாடல்கள் மூலம் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்தினர்.

    தொண்டர்கள் கட்சி சின்னங்களை உடலில் வரைந்து ஓட்டு கேட்டனர்.

    சைக்கிள், இருசக்கர வாகனங்களில் கட்சி சின்னங்களை வைத்து கொண்டு பல பகுதிகளில் சுற்றினர்.

    பெண்கள் வீடுகளில் கட்சி சின்னங்களை கோலமாக வரைந்தும் வேட்பாளர்களை கவருகிறார்கள்.

    வேலூரில் சிலர் கரகாட்டம் ஆடுபவர்களை அழைத்து வந்தனர். அவர்கள் வீதி வீதியாக சென்று வாக்காளர்களை கவரும் வகையில் கரகாட்டம் ஆடினர். மோகினி ஆட்டம், கதகளி ஆட்டமும் நடந்தது.

    இதை பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பார்த்து ரசித்தனர்.

    இறுதிகட்ட பிரசாரத்தில் எங்கு பார்த்தாலும் தாரைதப்பட்டை ஆட்டம் என திருவிழா போல் காட்சி அளித்தது.

    • பெரியாறு புலிகள் சரணாலய பிரச்சினையிலும், தமிழக உரிமையை காவு கொடுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
    • எதற்காக தேர்தலில் நிற்கிறோம் என்றே தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி களம் காண்கிறார். யார் பிரதமர் என்று தெரியாது.

    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி. தினகரனை ஆதரித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று தேனியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது,

    தமிழக உரிமைகளை காவுகொடுத்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் டி.டி.வி. தினகரனை குறிவைத்து பிரசாரம் செய்து வருகின்றனர். அப்போதிலிருந்தே இவரது வெற்றி உறுதியாகிவிட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்த முயற்சி மேற்கொண்டவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இந்த அணை பிரச்சினையில் கேரள அரசு தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாடை எடுத்தபோது அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி போராட்டம் நடத்த போவதாக கூறினார்.

    ஆனால் அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் மந்திரி ஜெயராம் ரமேஷ் போராட்டம் நடத்தினால் 2ஜி வழக்கில் கனிமொழி, ராசா ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்ததால் அமைதியாகிவிட்டார். இதேபோல் பெரியாறு புலிகள் சரணாலய பிரச்சினையிலும், தமிழக உரிமையை காவு கொடுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.


    மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1000 ஊக்கத்தொகை கொடுக்கப்படும் என்றார். இதுவரை எந்த குடும்பத்திற்காவது அவர் பணம் கொடுத்தாரா?. ஆனால் தேர்தலுக்காக ரூ.500 முதல் ரூ.1000 வரை பணம் கொடுக்க தி.மு.க.வினர் வருவார்கள். அப்போது வாக்காளர்களாகிய நீங்கள் கஞ்சா விற்ற பணம் எங்களுக்கு வேண்டாம் என கூறவேண்டும்.

    தி.மு.க. மீண்டும் பழைய புராணத்தை பாடி வருகிறது. வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்கிறார்கள். 50 வருடமாக ஆட்சி செய்த காங்கிரஸ்தான் இதற்கு காரணம். தற்போது அந்த கட்சியுடன்தான் கூட்டணி வைத்துள்ளனர். தமிழகத்திற்கு எதுவுமே மத்திய அரசு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை தி.மு.க. வைக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு மட்டும் ரூ.10 லட்சத்தி 76 ஆயிரம் கோடி நிதி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    மத்திய பா.ஜ.க. ஆட்சியில் தான் சிலிண்டருக்கு மானியம், முத்ரா கடன் திட்டம், ஆவாஜி யோசனா திட்டம் மூலம் குடும்பத்திற்கு நேரடியாக நிதிஉதவி அளித்து வருகிறது. அந்த நிதியை தி.மு.க. அரசு எங்களுக்கு தெரியாமல் எப்படி கொடுக்கலாம் என தடுக்கப் பார்க்கின்றனர். தமிழகத்திற்கு 15 மருத்துவ கல்லூரிகளை கொடுத்துள்ளோம். இதையெல்லாம் மக்களிடமிருந்து மறைத்து தி.மு.க. பொய் பிரசாரம் செய்து வருகிறது.

    எதற்காக தேர்தலில் நிற்கிறோம் என்றே தெரியாமல் எடப்பாடி பழனிச்சாமி களம் காண்கிறார். யார் பிரதமர் என்று தெரியாது. யார் ஆட்சி அமைக்கிறார்களோ அவர்களிடம் தமிழக உரிமையை வலியுறுத்துவதாக கூறுகிறார். தற்போது அ.தி.மு.க.வில் உண்மையான தொண்டர்களுக்கு சீட்டு வழங்கப்படவில்லை. கான்ட்ராக்டர்களுக்கும், ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கும் தான் சீட் வழங்கப்படுகிறது. அவர் கட்சி நடத்துவதே கான்ட்ராக்டர்களுக்காக தான். ஜூன் 4ம் தேதி டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்ற பின்பு உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் இவரது பின்னால் வருவார்கள்.

    தமிழகத்தில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது. இவர்கள் அனைவரும் போட்டிபோட்டு லஞ்சம் வாங்கி அதனை கப்பம்கட்டி வருகின்றனர். ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளதாக பி.டி.ஆர். பழனிவேல் ராஜனே கூறியுள்ளார். எனவே அந்த பணத்தை வைத்து தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர். யார் பிரதமர் என்பதே தெரியாமல் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க போகிறோம் என்கிறார்கள்.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மன்மோகன்சிங் என்ற பொம்மை பிரதமரை அமர்த்தி ரூ.12 லட்சம் கோடி கொள்ளையடித்ததை போல மீண்டும் ஒரு கொள்ளையை அரங்கேற்ற இந்த கூட்டணி தயாராகி வருகிறது. எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • பெரும்பாக்கத்தில் 30,000 வாக்காளர் பெயர் நீக்கப்பட்டது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
    • தபால் வாக்களிக்கும் முறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 6.32 கோடி வாக்காளர்களில் நேற்று வரை 4.36 கோடி வாக்காளர்களுக்கு அதாவது 70 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது.

    சி.விஜில் செயலி மூலம் இதுவரை 3605 புகார்கள் பெறப்பட்டுள்ளது. 74.52 கோடி ரூபாய் வருமான வரித்துறை மூலம் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தபால் வாக்களிக்கும் முறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி திருச்சியில் மாநில அளவிலான ஒருங்கிணைந்த மையம் தபால் வாக்கிற்கு என அமைக்கப்படும். அங்கிருந்து தபால் வாக்குகள் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும்.

    எடுத்துக்காட்டுக்கு சென்னையில் பணிபுரியும் ஒருவரின் வாக்கு கன்னியாகுமரியில் இருந்தால் சென்னையிலிருந்து ஒரு அதிகாரி கன்னியாகுமரிக்கு சென்று அந்த தபால் வாக்கு சீட்டுகளை அளித்துவிட்டு வருவார்.

    தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டு அனைத்தும் ஒருங்கிணைந்த மையமான திருச்சிக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

    பெரும்பாக்கத்தில் 30,000 வாக்காளர் பெயர் நீக்கப்பட்டது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் அளிக்க எந்தவித தடையும் இல்லை.

    தொடர்ச்சியாக செயல்படுத்தி வரும் திட்டங்களை தொடரலாம் என்று தேர்தல் ஆணையத்தில் விதி உள்ளது. இதற்கு தேர்தல் ஆணையத்திடம் எந்தவித அனுமதி பெற தேவையில்லை. இன்று மதியம் இந்திய தேர்தல் ஆணையர் தலைமையில் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் இதுவரை ரூ.305.74 கோடியை வருமானவரித்துறை கைப்பற்றியுள்ளது.
    • நீலகிரி உதவி செலவின பார்வையாளர் புகார் எங்களுக்கு வரவில்லை.

    தமிழகத்தில் 70 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. நாளைக்குள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் இதுவரை ரூ.305.74 கோடியை வருமானவரித்துறை கைப்பற்றியுள்ளது.

    நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்பட்ட மைக் சின்னம் தான் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

    நீலகிரியில் வேட்பாளரின் செலவு கணக்கை குறைத்து காட்ட சொன்னதாக மாவட்ட தேர்தல் அதிகாரி மீது பார்வையாளர் புகார் தெரிவித்துள்ளார்.

    ஆனால், நீலகிரி உதவி செலவின பார்வையாளர் புகார் எங்களுக்கு வரவில்லை. இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.

    • சென்னை நீலாங்கரையில் ஆறு ஸ்கூபா டைவர்ஸ் ஆழ் கடலில் இறங்கினர்.
    • அறுபது அடி ஆழ நீருக்கு அடியில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை செயல்படுத்தினர்.

    நாட்டில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. பொதுத் தேர்தலில் வாக்களிக்க கிட்டத்தட்ட 97 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், சென்னை ஸ்கூபா டைவர்ஸ் நீருக்கடியில் தனித்துவமா முறையில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

    வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சென்னை நீலாங்கரையில் ஆறு ஸ்கூபா டைவர்ஸ் ஆழ் கடலில் இறங்கி வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை தெரிவிக்கும் வகையில், அறுபது அடி ஆழ நீருக்கு அடியில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை செயல்படுத்தினர்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) வாக்குப்பதிவு விழிப்புணர்வு பதாகைகளுடன் போலி மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தை ஏந்தி கடலில் மூழ்கினர்.

    "எனது வாக்கின் வலிமை எனக்குத் தெரியும்" மற்றும் "எனது நாடு, என் வாக்கு" என்று பலகையில் எழுதப்பட்டிருந்தது.

    ஓட்டு போடுவது நமது கடமையும் உரிமையும் என்பதை உணர்த்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக டைவர்ஸ் ஒருவர் தெரிவித்தார்.

    ஆழமான டைவிங் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஸ்கூபா டைவ் பயிற்றுவிப்பாளரும் டெம்பிள் அட்வென்ச்சர் இயக்குநருமான எஸ்.பி அரவிந்த் தருண்ஸ்ரீ ஏற்பாடு செய்தார்.

    • தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் அதிக அளவில் மீறப்படுவதாகவும் புகார் தெரிவித்தார்.
    • புகாரை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு ஊரக தொகுதியில் காங்கிரஸ் சார்பில் துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாரின் சகோதரரும் தற்போதைய எம்.பி.யுமான டி.கே. சுரேஷ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் டாக்டர் சி.என்.மஞ்சுநாத் போட்டியிடுகிறார். இந்நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேஷ் ஆகியோர் வாக்காளர்களுக்கு அதிகளவில் குக்கர் விநியோகம் செய்யப்படுவதாக ஜனதாதளம் (எஸ்) மாநில தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டினார். இந்த தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் அதிக அளவில் மீறப்படுவதாகவும் புகார் தெரிவித்தார்.

    மேலும் பெங்களூரு ஊரக தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.சுரேஷ் வாக்காளர்களுக்கு கொடுக்க அவரது புகைப்படத்துடன் கூடிய சுமார் 10 லட்சம் பிரஷர் குக்கர் விநயோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 4 லட்சம் குக்கர் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகாரை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கினர்.

    இதற்கிடையே குமாரசாமி புகாரை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள பிரபல வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ள னர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, வாக்காளர்களுக்கு குக்கர் விநியோகம் செய்யப்பட்டது குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் குக்கர் உற்பத்தி நிறுவனத்திடம் விசாரணை நடத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். கடந்த ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போதும் இதே போன்ற புகாரின் பேரில் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடதக்கது.

    • வீட்டில் இருந்தே வாக்களிக்கும் விருப்பத்தை தெரிவித்தால் அவர்களது வீட்டுக்கு சென்று வாக்கு பதிவு செய்யப்படும்.
    • தபால் ஓட்டை தேர்தல் அதிகாரி வாக்காளரிடம் இருந்து பெற்று கொள்வார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு சலுகை வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி அவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்த முறை ஏற்கனவே பல பகுதிகளில் செயல் படுத்தப்பட்டது. தற்போது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

    இதில் 12-டி படிவம் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதில் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் விருப்பத்தை தெரிவித்தால் அவர்களது வீட்டுக்கு சென்று வாக்கு பதிவு செய்யப்படும்.


    மத்திய பிரதேசம், மேற்கு வங்காள மாநில சட்டசபை தேர்தல்களில் இந்த வசதி அளிக்கப்பட்டு 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்களித்திருந்தனர். அதில் மாவட்ட தேர்தல் அதிகாரி தேர்தல் நாளுக்கு முன்பாக வீட்டில் இருந்தே வாக்களிக்கும் நாளை நிர்ணயிப்பார். வாக்கார்களின் வீட்டுக்கு தபால் ஓட்டு வழங்கப்படும். அதில் அவர்கள் தாங்கள் விரும்பும் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும்.

    அதன்பின் அந்த தபால் ஓட்டை தேர்தல் அதிகாரி வாக்காளரிடம் இருந்து பெற்று கொள்வார்.

    தேர்தல் அதிகாரிகள், ஒரு வீடியோகிராபர் மற்றும் போலீசார் ஆகியோர் கொண்ட குழுவினர் வாக்குப் பெட்டி மற்றும் தனி உரிமைக்கான வசதியுடன் வாக்காளர் வீட்டுக்கு செல்வார்கள். அங்கு வாக்குப்பதிவு வீடியோ எடுக்கப்படும். இது சுமார் 20 நிமிடங்களில் முடிந்து விடும். அவர்கள் வாக்குகள் தபால் வாக்கு மூலம் எண்ணப்படும்.

    • வாக்காளர்கள் அந்தந்த முகாம்களில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
    • அமைதியாக தேர்தலில் பங்கேற்க வேண்டும்.

    வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் உள்ள முகாம்களில் வசிக்கும் மக்கள், வரும் மக்களவை தேர்தலில் முகாம்களில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது மணிப்பூர் குறித்த கேள்விக்கு பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், "நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம்" என்றார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    நாங்கள் ஒரு திட்டத்தை வடிவமைத்துள்ளோம். அதை நாங்கள் அறிவித்துள்ளோம். முகாமில் உள்ள வாக்காளர்கள் முகாமில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கிறோம்.

    ஜம்மு-காஷ்மீர் புலம்பெயர்ந்தோருக்கு ஒரு திட்டம் உள்ளது போல, மணிப்பூரில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

    வாக்காளர்கள் அந்தந்த முகாம்களில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். கீழ் தொகுதியில் இருந்து மேல் பகுதிக்கும், உயரத்திலிருந்து தாழ்ந்த பகுதிக்கும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

    வாக்காளர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், வாக்குச்சீட்டின் மூலம் முடிவு அறிவோம். அமைதியாக தேர்தலில் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • சுறா சுமன் பலத்த காயங்களுடன் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 116-வது வார்டு அயோத்திக் குப்பம் பகுதியில் பா.ஜனதாவை சேர்ந்த சுறா சுமன் மற்றும் நிர்வாகிகள் வாக்காளர் பெயர் சரிபார்ப்பு முகாம் நடத்தினார்கள்.

    மேஜை அமைத்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தி.மு.க. வட்ட செயலாளர் தலைமையிலான கும்பல் திடீரென்று வந்து அங்கு இருந்த பா.ஜனதாவினர் மீது தாக்கு தல் நடத்தினார்கள்.

    அவர்களை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினார்கள்.

    இதில் சுறா சுமன் பலத்த காயங்களுடன் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற நிர்வாகிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    இதையடுத்து மெரினா போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • வாக்காளர் சிறப்பு முகாமில் பொதுமக்களுக்கு அ.தி.மு.க.வினர் உதவிட ஆர்வம் காட்ட வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்றூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக வாக்காளர் சிறப்பு முகாம் மதுரையில் நாளை (சனிக்கிழமை) நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்கள் நடைபெறுகிறது. மதுரை மாநகர் மாவட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    இந்த முகாம்களில் புதிதாக வாக்காளர்களை சேர விரும்புபவர்கள் மற்றும் முகவரி மாற்றம் திருத்தம் உள்ளிட்ட பணிக ளுக்காக சிறப்பு முகாம்க ளுக்கு வரும் பொது மக்களுக்கு கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மேலான ஆணைக்கிணங்க அந்தந்த பகுதி, வட்ட, பூத் கமிட்டி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆர்வத்துடன் உதவிட வேண்டும்.

    பொது மக்களுக்கு தேவையான விண்ணப்ப படிவங்களை பெற்று தருவதிலும் அதை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஒப்படைக்கும் பணியிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கவனத்துடன் செயல்பட்டு வருகிற பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் புதிய வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கும் வகையில் அனைத்து பணிகளையும் முன்னின்று செய்திட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×