search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 119246"

    • அதே திசையில் முன்னால் ஜல்லி ஏற்றிக் கொண்டு சென்ற லாரி மீது கோழி ஏற்றி சென்ற சரக்கு வேன் மோதியது.
    • இடிபாடுகளில் சிக்கி சரக்கு வேனை ஓட்டி சென்ற‌ டிரைவர் பிரதீபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்துள்ள வல்லம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காவல் நகர் அருகே வைத்தீஸ்வரன் கோயில், வடபாதி எடகுடியை சேர்ந்த ஜெயராமன் என்பவரது மகன் பிரதீபன் (வயது 29) என்பவர் சரக்கு வேனில் கோழிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அதே திசையில் முன்னால் ஜல்லி ஏற்றிக் கொண்டு சென்ற லாரி மீது கோழி ஏற்றி சென்ற சரக்கு வேன் பலமாக மோதியது.

    இதில் சரக்கு வேன் முன்பக்கம் நொறுங்கியது. இதில் இடிபாடுகளில் சிக்கி சரக்கு வேனை ஓட்டி சென்ற‌ டிரைவர் பிரதீபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பிரதீபனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வல்லம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இத்தாலியில் மாணவர்களை ஏற்றிச்சென்ற பள்ளி பேருந்தை டிரைவரே கடத்தி தீ வைத்ததில் 12 மாணவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். #SchoolBusHijacked #RefugeeDeaths #Italy
    ரோம்:

    இத்தாலியின் மிலன் நகரில் நேற்று 51 மாணவர்களுடன் பள்ளிப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. மாகாண சாலையில் சென்றபோது, பேருந்தின் டிரைவர் திடீரென மாணவர்களை நோக்கி கத்தியுள்ளார். ‘எல்லாவற்றுக்கும் இன்று முடிவு கட்ட விரும்புகிறேன். மத்திய தரைக்கடல் பகுதியில் நடக்கும் அகதிகள் மரணங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்’ என்று கூறிய அவர், பேருந்தினுள் சிறிது பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளார்.

    இதனால் மாணவர்கள் பயத்தில் கூச்சலிட்டனர். ஒரு மாணவன் தனது தந்தையிடம், பேருந்து கடத்தப்பட்ட விவரத்தை கூற, அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த பேருந்தை துரத்திச் சென்று மடக்கினர். பின்னர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இருந்த மாணவர்களை மீட்டனர். மாணவர்களை மீட்ட சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் எரிந்து கரிக்கட்டையானது. ஒரு காரும் தீயில் கருகியது.



    மீட்கப்பட்ட மாணவர்களில் 12 மாணவர்கள் மூச்சுத்திணறலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பேருந்தை கடத்தி மாணவர்களை கொல்ல முயன்ற 47 வயது நிரம்பிய டிரைவரையும் கைது செய்தனர்.

    அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் செனகல் நாட்டை பூர்வீகமாக கொண்ட இத்தாலியர் என்பது தெரியவந்தது. மத்திய தரைக்கடல் பகுதியில் அகதிகள் மரணம் அடைவதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், இத்தாலிய உள்துறை மந்திரி மற்றும் துணை பிரதமரின் கடுமையான அகதிகள் விரோத கொள்கைகளை கண்டிக்கும் வகையிலும் பேருந்தை கடத்தி தீ வைத்ததாக அவர் கூறியுள்ளார். அவர் மீது கடத்தல், கொலை முயற்சி, பயங்கரவாதம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட நபர், குடிபோதையில் வாகனம் ஓட்டியது, பாலியல் தொந்தரவு போன்ற குற்றச்செயல்களில் தண்டிக்கப்பட்டு விடுதலையானவர் என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் எப்படி பள்ளி பேருந்தை ஒப்படைத்தார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    உள்நாட்டுப் போர், வறுமை, வன்முறை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட பலர் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இதற்காக, சட்டவிரோத ஆட்கடத்தல் கும்பல்களின் உதவியுடன் மத்திய தரைக்கடல் வழியாக ஆபத்தான வகையில் படகில் பயணம் மேற்கொள்ளும்போது படகு மூழ்கி ஏராளமான அகதிகள் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. #SchoolBusHijacked #RefugeeDeaths #Italy
    டெல்லியில் விபத்தில் காயமடைந்த டிரைவரிடம் பணம் பறித்தது தொடர்பாக 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். #DelhiAccident #ConstablesSuspended
    புதுடெல்லி:

    டெல்லியின் கோத்வாலி பகுதியில், சனிக்கிழமை இரவு ஒரு லாரி விபத்துக்குள்ளானது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, போலீசார் வைத்திருந்த பேரிகார்டுகளை இடித்து தள்ளிவிட்டு, எதிரே வந்த சில வாகனங்கள் மீது மோதி பின்னர் கவிழ்ந்தது. இதில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் காயமடைந்தார்.

    போலீசார் அங்கு சென்று டிரைவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    ஆனால், விபத்தில் காயமடைந்த டிரைவரிடம் போலீசார் மிரட்டி அவரிடம் இருந்து 3000 ரூபாய் பணத்தை பறித்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு, காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று அடித்ததாகவும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட 2 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். #DelhiAccident #ConstablesSuspended
    வாகனங்களை ஓட்டி வரும் டிரைவர்களின் சோர்வை குறைக்கும் வகையில் தேநீர் வழங்கி புத்துணர்ச்சி ஏற்படுத்தி பின்னர் வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டு விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆணைக்கிணங்க ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி ஆலோசனையின் பேரில், போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தா.பழூர் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சார்பில் தா.பழூர் கடைவீதியில் நள்ளிரவுக்கு மேல் வரும் அனைத்து கனரக, இலகுரக மற்றும் இரு சக்கர வாகனங்களை ஓட்டி வரும் டிரைவர்களின் சோர்வை குறைக்கும் வகையில், அவர்களை முகத்தினை கழுவ செய்து தேநீர் வழங்கி புத்துணர்ச்சி ஏற்படுத்தி பின்னர் வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டு விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குறிப்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகப்படியான வாகனங்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல வேண்டியிருப்பதாலும், மீண்டும் ஊரிலிருந்து சென்னை உள்ளிட்ட வெளியூர் செல்ல இருப்பதாலும் அதன் ஓட்டுனர்களுக்கு சோர்வை நீக்கும் வகையில் நள்ளிரவுக்கு மேல் வரும் வாகனங்களை நிறுத்தி அவர்களின் முகங்களை கழுவ செய்து தேநீர் வழங்கி புத்துணர்ச்சி ஏற்படுத்தி விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தினேஷ்குமார், ராமதாஸ் உள்பட போலீசார் கலந்துகொண்டு விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள டிரைவர்களிடம் அறிவுரை வழங்கினர்.

    போலீசாரின் இத்தகைய செயலைக்கண்டு டிரைவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வியந்தனர். மேலும் இதேபோல் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, உடையார்பாளையம் உள்ளிட்ட ஜெயங்கொண்டம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் விபத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
    நாகர்கோவில் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் போலீஸ் அதிகாரியின் தாய் பலியானார். இது குறித்து லாரி டிரைவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஆசாரி பள்ளத்தைச் சேர்ந்தவர் திரவியம்(வயது74). இவர் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவருடைய மனைவி விஜயலெட்சுமி(66).

    இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஒரு மகன் கோபால். இவர் சென்னையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். நேற்று திரவியம் தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு நாகர்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார்.

    ராணித்தோட்டம் போக்குவரத்து பனிமனை முன்பு வந்த போது அவருக்கு முன்னாள் சென்ற ஆட்டோவை முந்திச் செல்ல முயன்றார். அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக அவரது மோட்டார் சைக்கிளில் மோதியது.

    இதில் நிலை தடுமாறி திரவியம் மற்றும் அவரது மனைவி விஜயலெட்சுமி கீழே விழுந்தனர். அப்போது லாரியின் சக்கரத்தில் விஜயலெட்சுமி சிக்கிக் கொண்டார்.

    இதில் விஜயலெட்சுமி மீது லாரி ஏறி இறங்கியது. சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அவர் இறந்தார். திரவியம் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான விஜயலெட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் லாரியை ஓட்டி வந்தது சுங்கான்கடை களியங்காடு பகுதியைச் சேர்ந்த குமார் என்பது தெரிய வந்தது. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    நெகமம் அருகே ரூ.20 லட்சம் மதிப்புள்ள தேங்காயுடன் கூடிய லாரியை கடத்தி சென்ற கும்பலை ஜி.பி.எஸ். கருவி மூலம் போலீசார் கைது செய்தனர்.
    நெகமம்:

    சென்னை போரூரை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 39). லாரி உரிமையாளர்.

    இவரிடம் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த மனோகர் (30) டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 11-ந் தேதி மனோகர் கோவைக்கு லோடு ஏற்ற லாரியில் வந்தார். பொள்ளாச்சியை அடுத்துள்ள மீனாட்சிபுரத்தில் இருந்து 10½ டன் தேங்காயை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு புறப்பட்டார்.

    இரவு 9.30 மணி அளவில் நெகமம் அருகே சென்ற போது ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் லாரியை வழி மறித்து ஆயுதங்களை காட்டி மனோகரனை மிரட்டினர்.

    பின்னர் மனோகரனை காரில் ஏற்றிக் கொண்டு லாரியை ஓட்டிச் சென்றனர். கார் பல்லடம்-திருச்சி ரோட்டில் சென்ற போது மனோகரனை கீழே தள்ளி விட்டு கும்பல் தப்பிச் சென்றது. அதிர்ச்சியடைந்த மனோகரன் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குக்கு சென்று லாரி உரிமையாளர் பிரகாசை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை கூறினார். அவர் போலீசில் புகார் செய்தார்.



    கடத்தி செல்லப்பட்ட லாரியில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டிருந்தது. அதன் மூலம் போலீசார் நடத்திய விசாரணையில் லாரி பல்லடம்-திருச்சி ரோட்டில் உள்ள ஒரு குடோனுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்ற போது அங்கு சிலர் லாரியில் இருந்து தேங்காய்களை இறக்கிக் கொண்டிருந்தனர்.

    அங்கிருந்த 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ்குமார் (25), ஹரிபிரசாத்(26), பொள்ளாச்சியை சேர்ந்த கோகுல் (25), மணிகண்டன் (23), அப்துல் ரகுமான் (23), சந்தோஷ்(20) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    இதில் வெங்கடேஷ்குமார், ஹரிபிரசாத் ஆகியோர் டிரைவர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களுக்கு பொள்ளாச்சி பகுதியில் இருந்து வெளிமாவட் டங்களுக்கு பொருட்கள் லோடு ஏற்றிச் செல்லும் விவரங்கள் தெரிந்துள்ளது.

    சமீபகாலமாக இவர்கள் வேலையில்லாமல் இருந்துள்ளனர். சம்பவத்தன்று வெங்கடேஷ்குமார் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, செலவுக்காக லாரியை கடத்தி தேங்காய்களை விற்று பணத்தை பங்கு போட்டுக் கொள்ளலாம் என கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து 6 பேரும் சேர்ந்து திட்டம் தீட்டி லாரியை கடத்தியதை ஒப்புக் கொண்டனர்.

    இவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள லாரி மற்றும் தேங்காய்களை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    கோவையில் தனியார் பஸ்சில் இருந்து தவறி விழுந்த காவலாளி பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர், கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை:

    கோவை கணபதி அருகே உள்ள விலாங்குறிச்சியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 68). இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று வேலைக்கு செல்வதற்காக கணபதியில் இருந்து தனியார் பஸ்சில் ஏறினார்.

    பஸ் ஜி.கே.எஸ்.நகர் பகுதியில் வளைவு பகுதியில் வேகமாக சென்றதாக கூறப்படு கிறது. அப்போது பஸ் படிக்கட்டு அருகே நின்ற அர்ஜூனன் எதிர்பாராத விதமாக பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே பயணிகள் சத்தம் போட்டு பஸ்சை நிறுத்தினர். பின்னர் அர்ஜூனனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அர்ஜூனன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக பஸ் டிரைவரான அன்னூரை சேர்ந்த லோகேஸ்(24), கண்டக்டர் வடிவேல்(28) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    திருவான்மியூர் அரசு பஸ் டிரைவரும், கண்டக்டரும் தங்கள் இருக்கைக்கு மேல் பகுதியில் குடை வைத்த படி வேலை பார்பதை பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
    குடையை பிடித்தபடி ஓட்டினாலாவது ஓட்டையை சரி செய்றாங்களா... பார்ப்போம்...!

    இப்படி ஒரு எண்ணம் மாநகர அரசு போக்குவரத்து கழக பஸ் டிரைவரான ஜானகி ராமனுக்கும், நடத்துனர் சம்சுதீனுக்கும்.

    அரசு பஸ் என்றாலே பராமரிப்பு இல்லாமல் ஓட்டை, உடைசலாகவும் குப்பை கூழங்களுடனும் தான் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

    மழைக்காலங்களில் சொல்லவே வேண்டியதில்லை. பஸ் முழுவதும் ஒழுகும். இருக்கையில் அமர முடியாது. ஜன்னல்களை பூட்ட முடியாதபடி சிக்கி இருக்கும்.

    டிரைவர் ஜானகிராமன் ஓட்டிய திருவான்மியூர் பஸ்சும் இதே ரகம்தான். டிரைவர், கண்டக்டர் இருக்கையிலும் ஒழுகி இருக்கிறது. இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போது அவருக்குள் தோன்றியது தான் இந்த எண்ணம்.

    டிரைவரும், கண்டக்டரும் தங்கள் இருக்கைக்கு மேல் பகுதியில் குடையை விரித்து கட்டி வைத்திருந்தனர். அந்த குடைக்குள் அமர்ந்த படியே வேலை பார்த்தனர்.

    பஸ் ஏற சென்ற பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். சிலர் நேரடியாகவே கேட்பார்கள். அப்போது தான் அவர்கள் விவரத்தை கூறினார்கள்.

    நாள் ஒன்றுக்கு பஸ் பராமரிப்புக்கு ரூ.3,500 முதல் ரூ.4,000 வரை செலவிடுவதாக கணக்கு சொல்கிறது. ஆனாலும் பராமரிப்பு....?

    புது பஸ்கள் வந்தால்தான் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்கிறார்கள். ஆனால் புது பஸ்கள் வாங்கினாலும் ஓரிரு நாட்கள் சுத்தம் செய்யப்படும். அதன் பிறகு அந்த பஸ்களும் பராமரிப்பு இல்லாத இந்த நிலைக்கு ஆளாகிவிடுமே. அதன் பிறகும் இதே நிலைக்கு தானே வரும். #TNGovernment
    செந்துறை அருகே கடன்தொகை செலுத்தாததால் டிராக்டர் பறிமுதல் செய்த டிரைவரை அரிவாளால் வெட்டிய விவசாயி கைது செய்யபட்டார்.
    செந்துறை:

    செந்துறை அருகே உள்ள கோசுகுறிச்சியை சேர்ந்தவர் பக்கீர்அகமது (வயது 23). விவசாயி. இவர், கம்பத்தை சேர்ந்த ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று டிராக்டர் வாங்கி இருந்தார். இதற்காக, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை நிதிநிறுவனத்துக்கு செலுத்தி வந்தார்.

    இந்தநிலையில் கடந்த 4 மாதங்களாக அவர் கடன்தொகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நிதிநிறுவனத்தினர் 4 பேர், டிராக்டரை பறிமுதல் செய்வதற்காக நேற்று முன்தினம் கோசுகுறிச்சிக்கு வந்தனர். அப்போது பக்கீர்அகமது, அவருடைய தம்பி மீரான் (21) ஆகியோருக்கும், நிதிநிறுவன ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதற்கிடையே நிதிநிறுவன ஊழியர்களுடன் வந்திருந்த டிரைவர் சரவணன் என்பவர், அங்கு நின்று கொண்டிருந்த டிராக்டரை பறிமுதல் செய்து எடுத்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பக்கீர்அகமது, தான் வைத்திருந்த அரிவாளால் சரவணனை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து பக்கீர்அகமதுவை கைது செய்தார். இதற்கிடையே நிதிநிறுவன ஊழியர்கள் தாக்கியதில் காயம் அடைந்ததாக கூறி, துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் மீரான் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #tamilnews
    நாகர்கோவிலிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவகத்தில் தன்னை ஏமாற்றி கற்பழித்த டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நர்சு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று மதியம் இளம்பெண் ஒருவர் மனு கொடுக்க வந்தார்.

    அப்போது அவர் திடீரென தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவரை தடுத்து மண்எண்ணை கேனை பறிமுதல் செய்தனர். தற்கொலைக்கு முயன்ற அந்த பெண்ணை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிக்சைக்காக அனுப்பி வைத்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காதலன் கற்பழித்து ஏமாற்றியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அந்த பெண் தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

    அந்த பெண் தக்கலை குமாரகோவில் அருகே உள்ள பிரம்மபுரத்தைச் சேர்ந்தவர். அவருக்கு 21 வயது ஆகிறது. தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றுகிறார். இவருடன் அருமநல்லூர் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் நர்சாக பணியாற்றினார். அவரை பார்க்க அவரது சகோதரர் வினித் (24) அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு வந்து சென்றார்.

    அப்போது பிரம்மபுரத்தைச் சேர்ந்த நர்சுக்கும், வினித்துக்கும் பழக்கம் ஏற்பட்டது. வினித், நர்சை காதலிப்பதாக கூறினார். அதை நம்பி நர்சு, அவருடன் செல்போனில் பேசி மகிழ்ந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வினித், காதலியான நர்சை அங்கு வரவழைத்தார். நர்சை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வினித் அவரை கற்பழித்தார். இதேபோல பலமுறை வினித், நர்சை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தார்.

    சமீபகாலமாக வினித், நர்சை சந்திப்பதை தவிர்த்தார். மேலும் நர்சை திருமணம் செய்து கொள்ளவும் அவர் மறுத்தார். இதனால் ஏமாற்றம் அடைந்த நர்சு, போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தார். புகாரை போலீசார் ஏற்காததால் மனம் உடைந்து அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

    இதையடுத்து நர்சின் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசாருக்கு சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் விசாரணை நடத்தி நர்சை ஏமாற்றி கற்பழித்த வினித் மீது வழக்குப்பதிவு செய்தார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 417, 376 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    போலீசார் வினித்தை தேடிச் சென்றபோது அவர் தலைமறைவாகி இருந்தார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
    மதுராந்தகம் அருகே ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த போது ரூ.25 லட்சம் பணத்துடன் ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுராந்தகம்:

    காரைக்காலை சேர்ந்தவர் பாலமுருகன். ரியல் எஸ்டேட் அதிபர். இவர் தனது காரில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் முகமது யூசுப் ஓட்டினார். முதலியார் குப்பம் என்ற இடத்தில் இருவரும் ஓட்டலில் சாப்பிட்டனர். டிரைவர் முகமது யூசுப் முதலில் ஓட்டலை விட்டு வெளியேறி காரில் இருந்த ரூ.25 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு காருடன் தப்பிச் சென்றார்.

    கூவத்தூர் என்ற இடத்தில் காரை விட்டு விட்டு பணத்துடன் தலைமறைவாகி விட்டார். இது குறித்து கூவத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. #tamilnews
    புதுவையில் பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார் பாளையம் பவளக்காரன் சாவடியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 27). டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளது.

    இந்த நிலையில் கார்த்திகேயன் அதே பகுதியில் பிளஸ்-2 படிக்கும் ஒரு மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார்.

    இதுபற்றி அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து குழந்தைகள் நல குழுவிடம் முறையிட்டனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட குழந்தைகள் நலக்குழு சீனியர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தது.

    அதனை ஏற்ற சீனியர் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராகுல் அலுவால் இந்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய ரெட்டியார் பாளையம் போலீசாருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் ரெட்டியார் பாளையம் போலீசார் கார்த்திகேயன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×