search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருநங்கை"

    • இந்தியா, பிரேசில், கம்போடியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த திருநங்கைகள் கலந்துகொண்டனர்.
    • மிஸ் யுனிவர்ஸ் டிரான்ஸ் பட்டம் வென்ற திருநங்கை தீர்த்தா பல்வேறு சோதனைகளை கடந்து இந்த சாதனையை படைத்திருக்கிறார்.

    திருவனந்தபுரம்:

    திருநங்கைகளுக்கான மிஸ் யுனிவர்ஸ் டிரான்ஸ்-2023 போட்டி டெல்லியில் நடந்தது. இதில் இந்தியா, பிரேசில், கம்போடியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த திருநங்கைகள் கலந்துகொண்டனர்.

    27 வயதான கேரள மாநிலம் எர்ணாகுளம் தெற்கு பரவூரை சேர்ந்த திருநங்கை தீர்த்தா என்பவரும் பங்கேற்றார். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பொது அறிவு, நடத்தை மற்றும் திட்டங்கள் தயாரிக்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக போட்டிகள் நடத்தப்பட்டது.

    போட்டி மொத்தம் 4 நாட்கள் நடைபெற்றது. இறுதியில் அந்த போட்டியில் கேரள திருநங்கை தீர்த்தா வெற்றி பெற்று கர்வி மிஸ் யுனிவர்ஸ் டிரான்ஸ் பட்டத்தை வென்றார். அவருக்கு சக போட்டியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    மிஸ் யுனிவர்ஸ் டிரான்ஸ் பட்டம் வென்ற திருநங்கை தீர்த்தா பல்வேறு சோதனைகளை கடந்து இந்த சாதனையை படைத்திருக்கிறார். திருநங்கை என்பதால் அவர் பள்ளி நாட்களில் பல்வேறு கேலிகளை சந்தித்துள்ளார். 

    பள்ளி வாழ்க்கையை போன்று கல்லூரியில் என்ஜினீயரிங் படித்த போதும் பல கசப்பான அனுபவங்களை அனுபவித்து இருக்கிறார். அதன் மத்தியில் படித்து என்ஜினீயரிங் பட்டம் பெற்றார். கடைசியாக தனது தோழிகள் சிலருடன் குடியேறினார்.

    அவர்களின் மூலமாகவே மெட்ரோவில் தீர்த்தாவுக்கு வேலை கிடைத்தது. 2020-ல் தான் பாலியல் அறுவை சிகிச்சை அவருக்கு முழுமையான முடிந்திருக்கிறது. தன்னை கேலி பேசியவர்கள் மத்தியில் வெற்றி பெற்றவராக திகழ வேண்டும் என்பதை தீர்த்தா தனது நோக்கமாக கொண்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அதுவே தன்னை திருநங்கைகளுக்கான மிஸ் யுனிவர்ஸ் டிரான்ஸ் போட்டியில் பட்டத்தை வெல்ல செய்திருக்கிறது என்று தீர்த்தா தெரிவித்திருக்கிறார். தனக்கு சினிமாவில் நடிப்பது, தனது வாழ்க்கை அனுபவங்களை ஆங்கிலத்தில் விவரிக்கும் புத்தகம் எழுதுவது என்ற இரு கனவுகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

    4 கட்டங்களாக நடைபெறும் ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில் கோரேய் தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளராக காஜல் நாயக் என்ற திருநங்கை களமிறக்கப்பட்டுள்ளார். #BSPtransgendercandidate #transgendercandidate #Odishaassembly #Odishapolls #KajalNayak
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநில சட்டசபைக்கான தேர்தலில் 147 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக கோரேய் தொகுதியில் காஜல் நாயக் என்ற திருநங்கை போட்டியிடுகிறார். ஜாஜ்பூர் பகுதியை சேர்ந்த காஜல் நாயக், திருநங்கையர் சங்கத்தலைவராகவும் சமூகச் செயற்பாட்டாளராகவும் உள்ளார்.



    நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்பி பல கட்சிகளை அணுகினேன். ஆனால், யாரும் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. என்னை வேட்பாளராக அறிவித்த பகுஜன் சமாஜ் கட்சி தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என காஜல் நாயக் குறிப்பிட்டுள்ளார். #BSPtransgendercandidate  #transgendercandidate #Odishaassembly #Odishapolls #KajalNayak
    தாய்லாந்து பிரதமர் தேர்தலில் 3 பிரதான வேட்பாளர்களில் ஒருவராக, முதல் திருநங்கை வேட்பாளர் களமிறங்கி உள்ளார். #Thailand #Transgender #PrimeMinister
    பாங்காக்:

    தாய்லாந்தில் அடுத்த மாதம் (மார்ச்) 24-ந்தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்காக அங்குள்ள பிரதான கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன. இதில் நாட்டின் பிரபல கட்சிகளில் ஒன்றான மகாசோன் கட்சி, பவுலின் காம்ப்ரிங் (வயது 52) என்ற திருநங்கையை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி உள்ளது. கடந்த 3 ஆண்டுக்கு முன்பு வரை பினித் காம்ப்ரிங் என்ற பெயரில் ஆணாக இருந்து 2 குழந்தைகளுக்கு தந்தையாகவும் இருந்த இவர், பத்திரிகையாளராகவும், தொழிலதிபராகவும் இருந்தார். கால்பந்து ரசிகர் கூட்டமைப்பை நிறுவி தாய்லாந்து விளையாட்டு துறையிலும் புகழ்பெற்று விளங்கினார். பின்னர் பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறி தனது பெயரையும் பவுலின் என மாற்றிக்கொண்டார்.

    தாய்லாந்து பிரதமர் தேர்தலில் 3 பிரதான வேட்பாளர்களில் ஒருவராகவும், முதல் திருநங்கை வேட்பாளராகவும் களமிறங்கி இருக்கும் பவுலின் காம்ப்ரிங் தனது பிரசாரத்தை தொடங்கி உள்ளார். தான் வெற்றி பெறவில்லை என்றாலும், அடுத்த தலைமுறையிலாவது திருநங்கை ஒருவர் நாட்டின் தலைவராக வருவார் என்று அவர் கூறினார். #Thailand #Transgender #PrimeMinister
    தூத்துக்குடியில் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருநங்கையை ரெயில்வே ஒப்பந்த ஊழியர் திருமணம் செய்துகொண்டார். மணமக்களுக்கு கல்லூரி மாணவிகள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர். #TransgenderMarriage
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்துநகர் தாய்நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் அருண்குமார் (வயது 22). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் ரெயில்வேயில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    தூத்துக்குடி-எட்டயபுரம் ரோட்டில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஸ்ரீஜா (20). திருநங்கையான இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார்.

    இவரும், அருண்குமாரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து 2 பேரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு அருண்குமார் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி ஸ்ரீஜாவை திருமணம் செய்ய அருண்குமார் முடிவு செய்தார்.

    அதன்படி, அக்டோபர் 31-ந் தேதி (நேற்று) தூத்துக்குடி சிவன் கோவிலில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்தனர்.

    இதையடுத்து, மணமக்கள் நேற்று காலை சிவன் கோவிலுக்கு வந்தனர். அவர்களுடன் ஸ்ரீஜாவின் கல்லூரி தோழிகள், அருண்குமாரின் சில உறவினர்கள் மற்றும் நண்பர்களும், ஏராளமான திருநங்கைகளும் வந்து இருந்தனர். அருண்குமாரின் பெற்றோர் வரவில்லை.

    மணமக்கள் கோவில் அலுவலகத்துக்கு சென்றபோது, இந்த திருமணத்தை நடத்த அனுமதிக்க முடியாது என்று அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். இந்து திருமண சட்டப்படி ஒரு ஆண், பெண்ணைத்தான் திருமணம் செய்ய முடியும் என்றும் திருநங்கையை திருமணம் செய்ய முடியாது என்றும் அவர்கள் திட்டவட்டமாக கூறினர்.

    ஆனால், திருநங்கையை திருமணம் செய்ய அரசு அங்கீகாரம் அளித்து உள்ளதாகவும், எனவே சட்டப்படி இந்த திருமணத்தை நடத்தலாம் என்றும் கூறி திருமண வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் திடீரென திருநங்கைகள் கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். பின்னர் அவர்கள், திருமணத்தை வேண்டுமானால் கோவிலில் நடத்திக் கொள்ளுங்கள். அதற்கான பதிவு சான்றிதழை தரமுடியாது என்று கூறினார்.

    ஆனால், அதனை ஏற்க மறுத்த திருநங்கைகள் இந்த திருமணத்தை சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்றும் முறைப்படி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அருண்குமாரிடம், திருநங்கையை திருமணம் செய்ய அரசு அங்கீகாரம் அளித்ததற்கான அரசாணை நகல் இருந்தால் கொடுங்கள், அதிகாரிகளிடம் பேசி திருமணத்தை நடத்த அனுமதி பெறலாம் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் அருணிடம் அதற்கான நகல் ஏதும் இல்லை.

    அதே நேரத்தில் முகூர்த்த நேரம் முடியும் சூழல் உருவானது. எனவே திருமணத்தை முதலில் முடித்துவிட்டு, சான்றிதழ் விவகாரத்தை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என மணமக்கள் முடிவு செய்தனர்.



    அதன்படி காலை 11.40 மணிக்கு மணமக்கள் மாலை மாற்றினர். பின்னர் திருநங்கை ஸ்ரீஜா கழுத்தில் அருண்குமார் தாலி கட்டினார். அப்போது அங்கு கூடி இருந்த திருநங்கைகள் உற்சாகமாக ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மணமக்களுக்கு கல்லூரி மாணவிகள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதுகுறித்து திருநங்கைகள் கூறும்போது, ‘தற்போது திருமணம் நடந்து உள்ளது. இந்த திருமணத்தை முறைப்படி பதிவு செய்வதற்கான நடவடிக்கை எடுப்போம்’ என்று தெரிவித்தனர்.  #TransgenderMarriage

    திருநங்கை தமிழ்ச்செல்விக்கு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பட்டயப் படிப்பில் சேர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. #Transgender #VelloreMedicalCollege

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அருகே உள்ள புளியங்கண்ணு கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது22). திருநங்கையான இவர். பிளஸ்-2 தேர்வில் 757 மதிப்பெண் பெற்றார்.

    இவருக்கு செவிலியர் பட்டயப் படிப்பில் சேர்க்கை அளிக்க வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான புகார் மீது மருத்துவக் கல்வி இயக்குநர், தமிழ்நாடு நர்சிங் கவுன்சில், இந்திய நர்சிங் கவுன்சில் ஆகியவையும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டிலும் மாநில மனித உரிமை ஆணையத்திலும் தமிழ்ச்செல்வி மனுதாக்கல் செய்தார்.

    இதன்மீது விசாரணை நடத்திய நீதிபடி ஜெயச்சந்திரன், நடப்பு கல்வியாண்டிலேயே வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பட்டயப் படிப்பில் தமிழ்ச்செல்விக்கு இடம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    இதன்படி, மருத்துவக் கல்வி இயக்ககம் தமிழ்ச் செல்விக்கு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பட்டயப் படிப்பில் இடம் ஒதுக்கீடு செய்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

    இதையடுத்து, திருநங்கை தமிழ்ச்செல்விக்கு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை அளிக்கப்பட்டது. அதற்கான சேர்க்கை கடிதத்தை தமிழ்ச்செல்வியிடம் கல்லூரி டீன் சாந்திமலர் வழங்கினார்.

    மிகுந்த சட்டப் போராட்டத்துக்கு பிறகு செவிலியர் பட்டயப் படிப்பில் சேர்க்கை கிடைத்திருப்பது குறித்து திருநங்கை தமிழ்ச்செல்வி கூறியதாவது:-

    பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகே திருநங்கையான எனக்கு செவிலியர் பட்டயப் படிப்பில் சேர சேர்க்கை அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி நன்றாக படித்து சிறந்த முறையில் பணியாற்றுவதுடன், திருநங்கை சமூக முன்னேற்றத்துக்கும் உரிய பங்களிப்பை செய்வேன்.

    திருநங்கைகள் தடையின்றி படிக்கவும், அரசு வேலைவாய்ப்பு பெறவும் மத்திய, மாநில அரசு இதுவரை சட்டம் வகுக்கவில்லை. அதற்கான சட்ட அனுமதி அளிக்கும்பட்சத்தில் திருநங்கைகள் சமூகமும் எல்லா துறைகளிலும் நல்ல நிலைக்கு உயர முடியும், என்றார் அவர்.

    அவரது தாயார் அமுதா கூறுகையில், ‘எனது கணவர் சீனிவாசன் 15 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அதன்பிறகு கூலி வேலை செய்தே குடும்பம் நடத்தி வந்தேன். தமிழ்ச்செல்வி திருநங்கையாக மாறியது குறித்து ஊரார் பலரும் கேலி செய்தனர்.

    எனினும், எனது குழந்தை என்பதைவிட இந்த மண்ணில் பிறந்த ஒரு ஜீவன், அதைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்ச்செல்வியை நல்லமுறையில் வளர்த்து அவர் விரும்பியதைப் படிக்க வைத்தேன்.

    சமூகத்தில் திருநங்கைகள் குறித்து மாறுபட்ட கண்ணோட்டம் உள்ளது. அவ்வாறு இல்லாமல் அவர்களும் சக மனிதர்களே என்ற கண்ணோட்டம் ஏற்பட்டால் திருநங்கைகள் சமூகம் மேம்பட வழிவகை ஏற்படும்’ என்றார்.

    கல்லூரி டீன் சாந்தி மலர் கூறும்போது, ‘ஒரு காலத்தில் பெற்றோர்களே திருநங்கைகளை வெறுத்து ஒதுக்கினர். இதனால், பொதுமக்களும் அவர்களை வேண்டா வெறுப்பாக நடத்தும் நிலை இருந்தது. இப்போது, திருநங்கைகளை அனைவரும் ஏற்கும் நிலை வந்துவிட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி திருநங்கைகள் சிறப்பாக படித்து சமுதாயத்துக்கு சேவை செய்ய வேண்டும்.

    இக்கல்லூரியில் தமிழ்ச்செல்வி எந்தவித பாகுபாடின்றி மற்ற மாணவிகளை போல் சமமாக நடத்தப்படுவார். இவருக்கு விடுதியில் இடம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விடுதியில் கிடைக்காத பட்சத்தில் காலியாக உள்ள டாக்டர்கள் தங்கும் அறையை இவருக்கு ஒதுக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது’ என்றார். #Transgender #VelloreMedicalCollege

    தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே இளம்பெண்ணை கடத்தி சென்றதாக திருநங்கை மீது போலீசில் புகார் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருச்சிற்றம்பலம்:

    தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஒட்டங்காடு ஊராட்சி , மதன்பட்டவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மனைவி காந்திமதி.

    சம்பவத்தன்று சுமார் 30 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர், காந்திமதியின் கால் வலிக்கு நாட்டு வைத்தியம் பார்ப்பதாக கூறி அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இரவு நேரம் ஆனதால், திருநங்கை காந்திமதி வீட்டிலேயே தங்கி விட்டார்.

    மறுநாள் அதிகாலையில் வீட்டில் தூங்கிய திருநங்கையும், காந்தி மதியின் மகள் அதிர்ஷ்டமேரியும் (வயது21) காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த காந்திமதி பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் அவர்கள் 2 பேரையும் காணவில்லை.

    இந்த நிலையில், திருநங்கை விட்டுச் சென்ற செல்போன் சிம்கார்டை பரிசோதனை செய்து பார்த்த போது திருநங்கையின் படமும் அவரது பெயர் முனியம்மா என்பதும் தெரியவந்தது. அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?என்ற விவரம் தெரியவில்லை.

    இந்த சம்பவம் குறித்து காந்திமதி திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் செய்தார். திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அதிர்ஷ்டமேரியை கடத்தி சென்ற திருநங்கை முனியம் மாவை தேடி வருகிறார்கள். #tamilnews
    ஓரின சேர்க்கை தண்டணைக்குரிய குற்றம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு சென்னை, தருமபுரியில் ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
    தருமபுரி:

    ஓரின சேர்க்கை தண்டணைக்குரிய குற்றம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு சென்னை, தருமபுரியில் ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து சென்னை சூளைமேட்டை சேர்ந்த சகோதரன் அமைப்பு பொது மேலாளர் ஜெயா கூறியதாவது:-

    வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட 16 அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி இருப்பது பெரிய வி‌ஷயமாகும்.

    இதனை நாங்கள் வரவேற்கிறோம். பல அமைப்புகளின் முயற்சியினாலும், ஆதரவாளர்களாலும், தன்னார்வலர்களின் உதவிகளினாலும் இந்த நீதி கிடைத்துள்ளது. அவர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இனிவரும் காலங்களில் யார் எல்லாம் இதனை ஏற்க மறுத்தார்களோ அவர்கள் அனைவரும் ஏற்கக்கூடிய வகையிலும், புரிந்து கொள்ளுதலும் உருவாகியுள்ளது.

    நாங்கள் மறைத்து, பயந்து வெளியில் சொல்ல தயங்கினோம். இனி தைரியத்துடன் வெளியே வரலாம்.

    எங்களை பெற்றோர்கள் ஏற்க மறுத்த நிலையில் அவர்களும் இனி அங்கீகரிப்பார்கள். இனிவரும் காலம் வசந்த காலம். எங்களுக்கு சமூக அந்தஸ்து கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையை சேர்ந்த மணிமாலா (ஓரின சேர்க்கையாளர்) கூறியதாவது:-

    மறைந்து வாழ்க்கை நடத்திய எங்களுக்கு ஒரு வெளிப்படையான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

    பெற்றோருக்கு மறைந்து, பயந்து இனி வாழத்தேவையில்லை. பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

    இனி சுதந்திரமாக வெளியே வர முடியும். மன உளைச்சல் ஏற்படாது. நிம்மதியுடன் சந்தோ‌ஷமாக வாழலாம். இதனால் தேவையற்ற இறப்பு நடைபெறாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையை சேர்ந்த திருநங்கை பிரியங்கா கூறியதாவது:-

    இந்த தீர்ப்பு எங்கள் வாழ்க்கைக்கு மிகவும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது. வரலாற்றில் சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம் வெட்கி, தலை குனியாமல் பெருமையுடன் வாழ்வோம். 30 வருடமாக போராடி கிடைத்த வெற்றி இது.

    இந்த செய்தி வந்தது முதல் ரொம்ப சந்தோ‌ஷமாக இருக்கிறது. இனிமேல் தற்கொலை போன்ற விபரீத முடிவுகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையை சேர்ந்த கார்த்திக் (ஒரினசேர்க்கையாளர்) கூறியதாவது:-

    தீர்ப்பு வந்தது முதல் மிகவும் சந்தோ‌ஷமாக இருக்கிறோம். இதை செக்ஸ் ஆக கருதாமல் உணர்வாக கருதி நல்ல தீர்ப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    செக்சை தாண்டி, உணர்வு சம்பந்தப்பட்ட தீர்ப்பாகும். ஓரின சேர்க்கை தவறு, குற்றம் என்று கூறிய இந்த சமுதாயத்தில் இனி நாங்கள் தலைநிமிர்த்து வாழ்வோம். இனிமேல் நிறைய பேர் வெளியே வருவார்கள்.

    இந்த தீர்ப்பு காலம் கடந்து வந்து இருக்கிறது. பல ஆண்டுகளாக போராடி பெற்ற வெற்றியாகும்.

    இந்த நாளை, வருடத்தை மறக்க மாட்டோம். ஒவ்வொரு வருடமும் இந்த நாளை கொண்டாடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தருமபுரி மாவட்ட திருநங்கைகள் அன்பின் நல சங்க தலைவர் கிரிஜா, ஜமாத் தலைவர்கள் சாரதா, கீதா, முனியம்மாள் ஆகியோர் கூறியதாவது:-

    ஒரின சேர்க்கையாளர் வி‌ஷயத்தில் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

    இந்த வி‌ஷயத்தில் பல்வேறு சமயத்தில் வழக்குகள் நடந்துள்ளது. தற்போது சுப்ரீம் கோர்ட்டில் 10 முறைக்கு மேல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு தற்போது தீர்ப்பு வந்துள்ளது.

    எல்லா எதிர்ப்புகளையும் மீறி வந்துள்ள இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இதற்காக தருமபுரி மாவட்ட திருநங்கைகள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பேட்டியின் போது செயலாளர், பொருளாளர், நிர்வாக உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

    தருமபுரி மாவட்ட திருநங்கைகள் அன்பின் நல சங்கத்தின் 415 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு அரசு வீடு கட்டி கொடுத்துள்ளது குறிப்பிடதக்கது. #tamilnews
    ஓரின சேர்க்கை தண்டணைக்குரிய குற்றம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு சென்னையில் ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    ஓரின சேர்க்கை தண்டணைக்குரிய குற்றம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு சென்னையில் ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து சூளைமேட்டை சேர்ந்த சகோதரன் அமைப்பு பொது மேலாளர் ஜெயா கூறியதாவது:-

    வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட 16 அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி இருப்பது பெரிய வி‌ஷயமாகும்.

    இதனை நாங்கள் வரவேற்கிறோம். பல அமைப்புகளின் முயற்சியினாலும், ஆதரவாளர்களாலும், தன்னார்வலர்களின் உதவிகளினாலும் இந்த நீதி கிடைத்துள்ளது. அவர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இனிவரும் காலங்களில் யார் எல்லாம் இதனை ஏற்க மறுத்தார்களோ அவர்கள் அனைவரும் ஏற்கக்கூடிய வகையிலும், புரிந்து கொள்ளுதலும் உருவாகியுள்ளது.

    நாங்கள் மறைத்து, பயந்து வெளியில் சொல்ல தயங்கினோம். இனி தைரியத்துடன் வெளியே வரலாம்.

    எங்களை பெற்றோர்கள் ஏற்க மறுத்த நிலையில் அவர்களும் இனி அங்கீகரிப்பார்கள். இனிவரும் காலம் வசந்த காலம். எங்களுக்கு சமூக அந்தஸ்து கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

    மணிமாலா(ஓரின சேர்க்கையாளர்) :-

    மறைந்து வாழ்க்கை நடத்திய எங்களுக்கு ஒரு வெளிப்படையான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

    பெற்றோருக்கு மறைந்து, பயந்து இனி வாழத்தேவையில்லை. பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

    இனி சுதந்திரமாக வெளியே வர முடியும். மன உளைச்சல் ஏற்படாது. நிம்மதியுடன் சந்தோ‌ஷமாக வாழலாம். இதனால் தேவையற்ற இறப்பு நடைபெறாது.

    இந்த தீர்ப்பு எங்கள் வாழ்க்கைக்கு மிகவும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது. வரலாற்றில் சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம் வெட்கம், தலை குனியாமல் பெருமையுடன் வாழ்வோம். 30 வருடமாக போராடி கிடைத்த வெற்றி இது.

    இந்த செய்தி வந்தது முதல் ரொம்ப சந்தோ‌ஷமாக இருக்கிறது. இனிமேல் தற்கொலை போன்ற விபரீத முடிவுகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

    கார்த்திக் (ஒரினசேர்க்கையாளர்):-

    தீர்ப்பு வந்தது முதல் மிகவும் சந்தோ‌ஷமாக இருக்கிறோம். இதை செக்ஸ் ஆக கருதாமல் உணர்வாக கருதி நல்ல தீர்ப்பை வழங்கியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    செக்சை தாண்டி, உணர்வு சம்பந்தப்பட்ட தீர்ப்பாகும். ஓரின சேர்க்கை தவறு, குற்றம் என்று கூறிய இந்த சமுதாயத்தில் இனி நாங்கள் தலைநிமிர்த்து வாழ்வோம். இனிமேல் நிறைய பேர் வெளியே வருவார்கள்.

    இந்த தீர்ப்பு காலம் கடந்து வந்து இருக்கிறது. பல ஆண்டுகளாக போராடி பெற்ற வெற்றியாகும்.

    இந்த நாளை, வருடத்தை மறக்க மாட்டோம். ஒவ்வொரு வருடமும் இந்த நாளை கொண்டாடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    சேலம் புதிய பஸ்நிலையத்தில் இளம்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய திருநங்கை கைது செய்யப்பட்டார்.
    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் தினமும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் பவானிக்கு செல்லும் பஸ்சில் பயணிகள் அமர்ந்திருந்தனர். அப்போது ஒரு திருநங்கை அந்த பஸ்சிற்கு வந்து அங்கிருந்த பயணிகளிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதைப்பார்த்த அந்த பஸ்சில் இருந்த மாஜிஸ்திரேட்டு ஒருவர், திருநங்கையிடம் ஏழை, எளிய மக்களிடம் இவ்வாறு பணம் கேட்டு தொந்தரவு செய்ய கூடாது என அறிவுரை கூறினார். இதைகேட்காமல் அந்த திருநங்கை மாஜிஸ்திரேட்டிடம் தகராறு செய்துள்ளார். இதையடுத்தும் சேலம் குகை பகுதியை சேர்ந்த சத்யா (வயது 28) என்ற பெண்ணிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தார்.

    இதைத்தொடர்ந்து சத்யா பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் அந்த திருங்கையை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், பெரமனூர் நாகம்மாள் தோட்டம் பகுதியை சேர்ந்த திருநங்கையான ஜாவீத் (27) என்பதும், பயணியிடம் பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது. பின்னர் அவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் கைது செய்தார்.

    இதுகுறித்து பயணிகள் கூறுகையில், சேலம் புதிய பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர், பிற மாவட்டங்களுக்கு செல்வதற்காக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வரும் பயணிகளிடம் சிலர் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். இரவு நேரத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளிடம் தொந்தரவு செய்து வருகின்றனர். எனவே பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
    நாடாளுமன்ற மக்களவையில் திருநங்கையரை பற்றி ‘மற்றொருவர்’ என்று குறிப்பிட்டதற்காக மன்னிப்பு கேட்டார். #ManekaGandhi #OtherOnes #Transgender
    புதுடெல்லி:

    மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தி, நாடாளுமன்ற மக்களவையில், ஆள் கடத்தல் தடுப்பு மசோதா பற்றிய விவாதத்துக்கு பதில் அளித்து பேசினார். அப்போது, திருநங்கையரை பற்றி ‘மற்றொருவர்’ என்று குறிப்பிட்டார். அதற்கு எம்.பி.க்களிடையே சிரிப்பொலி எழுந்தது.

    ‘மற்றொருவர்’ என்று குறிப்பிட்டதற்காக, மேனகா காந்திக்கு திருநங்கைகள் தரப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. மேஜையை தட்டியபடி சிரித்த மேனகா காந்தியும், எம்.பி.க்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

    இந்நிலையில், மேனகா காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “மற்றொருவர் என்று குறிப்பிட்டதற்காக மன்னிப்பு கோருகிறேன். நான் சிரிக்கவில்லை. திருநங்கைகள் பற்றிய அதிகாரபூர்வ சொல் எனக்கு தெரியாது. அதுவே எனக்கு தர்மசங்கடத்தை உண்டாக்கி விட்டது. இனிமேல், அதிகாரபூர்வ தகவல் தொடர்பில், திருநங்கையர் ‘டி.ஜி.’ என்று குறிப்பிடப்படுவார்கள்” என்று கூறியுள்ளார். #ManekaGandhi #OtherOnes #Transgender #Tamilnews
    குடியாத்தம் அருகே லாரி டிரைவர் திருநங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்க்கு பின் வீட்டுக்கு அழைத்து செல்லாததால் திருநங்கை போலீசில் புகார் அளித்துள்ளார்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் மொர்சபல்லி கிராமத்தை சேர்ந்த ஒரு திருநங்கைக்கும், மவுசன்பேட்டையை சேர்ந்த லாரி டிரைவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நெருக்கம் இருக்கமானதால் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்தனர்.

    கடந்த ஜனவரி 15ம் தேதி திருநங்கையான தனது காதலியை லாரி டிரைவர் திருமணம் செய்து கொண்டார்.

    பின்னர், தனது வீட்டுக்கு திருநங்கையை அழைத்துச் செல்லாமல் தனி குடித்தனம் வைத்தார். மாமியார் வீட்டுக்கு சென்ற பிறகு தான், இல்லற வாழ்க்கையை தொடங்க வேண்டும் என திருநங்கை முடிவு செய்திருந்தார். ஆனால் திருநங்கை ஆசை நிராசையானது. திடீரென திருநங்கையை விட்டு லாரி டிரைவர் ஒரே அடியாக விலகிவிட்டார்.

    இந்த நிலையில் மனம் நொந்துபோன திருநங்கை, கணவன் வீட்டிற்கு நியாயம் கேட்க சென்றார். எனக்கும் மனம் இருக்கிறது. ஆரம்பத்திலேயே நான் திருநங்கை என தெரியும். திருமணம் செய்த பிறகு என்னை வெறுப்பது எந்த விதத்தில் நியாயம் என்றார்.

    பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கிய காதல் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் திருநங்கையை அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது.

    மேலும் திரும்ப வந்தால் கொன்று விடுவோம் என மிரட்டினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட திருநங்கை, தனது கணவருடன் சேர்த்து வைக்குமாறு குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரில், நானும் காதல் கணவனும் உண்மையாக காதலித்தோம்.

    திருமணத்திற்கு பிறகு குடும்பத்தினரின் பேச்சை கேட்டுக் கொண்டு காதலை தூக்கி எறிந்துவிட்டார்.மீண்டும் என் காதல் கணவருடன் சேர்த்து வையுங்கள். அவருடன் இல்லற வாழ்க்கையை தொடங்க வேண்டும் என கூறியுள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார். வித்தியாசமான வழக்கு என்பதால் குழம்பி நிற்கின்றனர். #tamilnews
    சென்னையில் ஆதார் அட்டை பெற 3 ஆண்டுகளாக போராடிய திருநங்கைக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் தீர்வு காணப்பட்டது.
    சென்னை:

    சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் கனிமொழி(வயது 33). திருநங்கையான இவர் பெற்றோரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். திருநங்கைகளுக்கான சலுகைகளை பெற விண்ணப்பித்த அவரிடம் அதிகாரிகள் ஆதார் அட்டை கேட்டனர். உரிய ஆவணங்கள் இல்லாததால் ஆதார் அட்டை பெறமுடியாமல் 3 ஆண்டுகளாக தவித்து வந்தார். இதுபற்றி சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான ஜெயந்தியை சந்தித்து கனிமொழி முறையிட்டார்.

    அவரது கோரிக்கையை பரிசீலித்த நீதிபதி, உரிய அதிகாரிகளிடம் பேசியதை தொடர்ந்து அரசு இசேவை மையம் மூலம் கனிமொழி குறித்த அனைத்து விவரங்களையும் அதிகாரிகள் ஆதார் அமைப்பில் பதிவு செய்து அதற்கான ஒப்புகைச்சீட்டை வழங்கினர். சில வாரங்களில் ஆதார் அட்டை அவரது முகவரிக்கு கிடைத்துவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக திருநங்கை கனிமொழி நீதிபதி ஜெயந்தியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். #tamilnews
    ×