search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளையன்"

    ஆலந்தூர் அருகே போலீஸ்காரர் முகத்தில் மயக்க மருந்து அடித்த கொள்ளையனிடமிருந்து 87 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை போலீசார் மீட்டனர்.
    ஆலந்தூர்:

    சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் சுந்தரம் (34). இவர் ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், பழவந்தாங்கல் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து வந்தான்.

    எனவே இவனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அதைஅறிந்த அவன் திருப்பூரில் பதுங்கி இருந்தான். கடந்த 1-ந்தேதி மடிப்பாக்கம் டான்சி நகரில் கொள்ளையடிக்க வந்த அவன் அங்கு சுற்றித் திரிந்தான்.

    அப்போது அவனை பிடிக்க முயன்ற போலீஸ்காரர் விஜயகாந்த் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரேயை அடித்து விட்டு தப்பி ஓட முயன்றான். அவனை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அவனிடம் விசாரித்த போது கொள்ளையடித்த நகைகளை கோவையில் உள்ள ஒரு அடகு கடையில் விற்றதாக தெரிவித்தான். உடனே அங்கு சென்ற போலீசார் 87 பவுன் நகைகளை மீட்டனர்.

    மேலும் ரூ.3 லட்சம் ரொக்கம், ஒரு லேப்- டாப், காமிரா, செல்போன் மற்றும் ஒரு விலை உயர்ந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த காரில் சென்று தான் கொள்ளையில் இவன் ஈடுபட்டு வந்தான். கைது செய்யப்பட்ட இவன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். #tamilnews
    திண்டுக்கல்லில் வாக்கிங் சென்ற பெண்ணிடம் நகையை பறித்து சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்தவர் ரவிசந்திரன். அவரது மனைவி சாவித்திரி (வயது 60). இவர் தினசரி அதிகாலை நேரத்தில் வாக்கிங் சென்று வருவது வழக்கம்.

    அதன்படி இன்று சாவித்திரி வாக்கிங் சென்றார். ஏ.எம்.சி. சாலையில் சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மர்ம நபர் வந்தார். அவர் ஹெல்மெட் அணிந்து இருந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர் சாவித்திரி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தார்.

    அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். ஆனால் அதற்குள் மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

    இதுகுறித்து நகர் வடக்கு பகுதி போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

    ராயபுரத்தில் வியாபாரியிடம் வழிப்பறி செய்த கொள்ளையனுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

    ராயபுரம்:

    பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் பாலமுருகன் வியாபாரி. இவர் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு ராயபுரம் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தார்.

    அப்போது வண்ணாரப்பேட்டை சிமெண்ட் ரோடு பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவர் வியாபாரி பால முருகனை கத்தியால் குத்து 2 பவுன் நகையை பறித்து தப்பினார்.

    இதுகுறித்து ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஜார்ஜ் டவுன் 19-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து நீதிபதி சத்யா தீர்ப்பு அளித்தார். அதில் குற்றவாளி சுகுமாருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 5 ஆயிரத்து 500 அபராத மும் விதித்தார்.

    சங்கரன்கோவிலில் மளிகை கடை நடத்தி வந்த பெண்ணிடம் 4 பவுன் செயினை வாலிபர் பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சாந்திநகரை சேர்ந்தவர் துரை. இவரது மனைவி செல்வம் (வயது 36). இவர்கள் கழுகுமலை சாலையில் ஒரு மளிகை கடை நடத்தி வருகின்றனர். நேற்று கடையில் செல்வம் இருந்துள்ளார். அப்போது கடைக்கு 24 மதிப்புள்ள வாலிபர் வந்து பொருட்கள் கேட்டுள்ளார். அதனை செல்வம் எடுப்பதற்காக திரும்பியுள்ளார்.  அப்போது  திடீரென அந்த வாலிபர் செல்வம் கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டார். 

    இது குறித்து செல்வம் சங்கரன்கோவில் டவுண் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற கொள்ளையனை தேடி வருகின்றனர்.
    ஈரோட்டில் நடந்து சென்ற ரெயில்வே பெண் ஊழியரிடம், கொள்ளையன் நகையை பறிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஈரோடு:

    நீலகிரியை சேர்ந்தவர் பழனி. இவரது மகள் அமிர் தவல்லி (வயது 26). சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள மாவேலி பாளையம் ரெயில் நிலையத்தில் ஸ்டேசன் போர்ட்டராக பணி புரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் சொந்த வேலையாக அமிர்தவல்லி ஈரோடு வந்திருந்தார்.

    பிறகு அவர் இரவில் ஈரோடு ரெயில்வே காலனி பார்சல் ரோடு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது இருட்டு பகுதியில் மறைந்திருந்த ஒரு மர்ம ஆசாமி திடீரென வந்து அமிர்தவல்லியை மறித்தான். பிறகு அவரை மிரட்டி கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றான்.

    ஆனால் நகையை பறிக்க விடாமல் அவர் கொள்ளையனுடன் போராடினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கொள்ளையன் அமிர்த வல்லியை தாக்கினான். முகத்தில் கையால் குத்தினான்.

    இதில் நிலை குலைந்த அவர் கீழே விழுந்தார். எனினும் நகையை பறிக்க விடாமல் நகையை கையால் இருக்கி பிடித்து கொண்டார். மேலும் திருடன்... திருடன்.. என கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்டதும் அங்கு சிலர் ஓடி வந்தனர். அவர்களிடம் சிக்கி கொள்ளாமல் அந்த கொள்ளையன் தப்பி ஓடி விட்டான்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த துணிகர சம்பவம் பற்றி சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

    தாம்பரத்தில் செல்போனை பறிக்கும் முயற்சியில் போலீஸ்காரரை கொள்ளையன் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேளச்சேரி:

    தாம்பரம், லட்சமி நகரில் வசித்து வருபவர் ஞானசேகர். ஆயுதப்படை போலீசில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு அவர் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். உடன் சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றும் கலைச்செல்வனும் தனியாக மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    தாம்பரம் ரெயில் நிலையம் அருகே வந்த போது போலீஸ்காரர் ஞானசேகர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிப்பதற்காக தண்டவாளம் அருகே தனியாக நடந்து சென்றார்.

    அப்போது அங்கு பதுங்கி நின்ற வாலிபர் திடீரென ஞானசேகரை மிரட்டி செல்போனை கொடுக்கும்படி கேட்டான். அதிர்ச்சி அடைந்த அவர் செல்போனை கொடுக்க மறுத்து கொள்ளையனை மடக்கி பிடிக்க முயன்றார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஞானசேகரின் கையில் வெட்டினான். இதில் அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த உடன் வந்த மற்றொரு போலீஸ்காரர் கலைச்செல்வன் அங்கு விரைந்து சென்றார். உடனே கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

    கையில் பலத்த காயம் அடைந்த ஞானசேகர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்போனை பறிக்கும் முயற்சியில் போலீஸ்காரரை கொள்ளையன் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தாம்பரம் ரெயில் நிலையம் அருகே இரவு நேரங்களில் தனியாக செல்பவர்களை மிரட்டி நகை, செல்போன் பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    சென்னையில் பெண் டாக்டரிடம் சங்கிலி பறித்த கொள்ளையனை பிடித்து கொடுத்த வாலிபருக்கு தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக் வேலை கிடைத்துள்ளது.
    சென்னை:

    சென்னையில் பெண் டாக்டரிடம் சங்கிலி பறித்த கொள்ளையனை பிடித்து கொடுத்த வாலிபருக்கு தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக் வேலை கிடைத்துள்ளது. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார்.

    சென்னை அண்ணாநகர் டி பிளாக்கில் வசிப்பவர் டாக்டர் அமுதா (வயது 50). கடந்த ஏப்ரல் மாதம் 17-ந்தேதி தனது கிளினிக்கில் டாக்டர் அமுதா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சிகிச்சை பெறுவதுபோல் வந்த ஒருவர் திடீரென்று கத்தியைக்காட்டி மிரட்டினார்.

    டாக்டர் அமுதாவின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். அதிர்ச்சியடைந்த டாக்டர் அமுதா கூச்சல் போட்டுக்கொண்டே கொள்ளையனை விரட்டிச் சென்றார். அப்போது அங்கு வந்த சூர்யா என்ற இளைஞர் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற கொள்ளையனை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தார்.

    பின்னர் அந்த கொள்ளையன் அண்ணாநகர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் அந்த கொள்ளையன் திருவள்ளூர் மாவட்டம் கண்டிகையை சேர்ந்த ஜானகிராமன் (26) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து, 10 பவுன் சங்கிலியையும் மீட்டனர்.

    கொள்ளையனை பிடித்த சூர்யாவை தனது அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்தார். சூர்யா தனக்கு வேலை இல்லை என்றும், ஆனால் ஏ.சி.மெக்கானிக் தொழில் தெரியும் என்றும் போலீஸ் கமிஷனரிடம் கூறினார்.

    உரிய வேலை வாங்கித்தருவதாக சூர்யாவுக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதி நேற்று நிறைவேற்றப்பட்டது.

    கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஏற்பாட்டின்பேரில் சென்னை டி.வி.எஸ். நிறுவனத்தில் சூர்யாவுக்கு ஏ.சி.மெக்கானிக் வேலை கிடைத்தது. இதற்கான பணி நியமன ஆணையை டி.வி.எஸ். நிறுவனத்தின் பொது மேலாளர் சீனிவாசன் போலீஸ் கமிஷனர் முன்னிலையில் சூர்யாவிடம் நேற்று வழங்கினார்.

    மேலும், சூர்யாவுக்கு பாராட்டு தெரிவித்து எஸ்.ஆர்.எம்.குழுமத்தின் சேர்மன் ரவிபச்சமுத்து ரூ.1 லட்சம் வழங்கினார். சென்னை டவர்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் சூர்யாவுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது. இதுதொடர்பான வங்கி காசோலைகளும் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் முன்னிலையில் சூர்யாவிடம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் ஜெயராம், சாரங்கன், இணை கமிஷனர் விஜயகுமாரி, அண்ணாநகர் துணை கமிஷனர் டாக்டர் சுதாகர் ஆகியோரும் கலந்து கொண்டனர். 
    ஒடிசா மாநிலம் ரூர்கேலா பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் துப்பாக்கிகளுடன் வந்த கொள்ளையர்கள் 45 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். #bankrobbery #odisha
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது ரூர்கேலா நகரம். இந்த நகரத்தின் பஜார் பகுதியில் பிரபல இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை அமைந்துள்ளது. இன்று காலை 3 இரு சக்கர வாகனங்களில் வந்த 7 கொள்ளையர்கள் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்து வங்கி அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களை துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர்.

    இதையடுத்து வங்கி ஊழியர்களை தாக்கி அவர்களிடம் இருந்து வங்கியின் கஜானா சாவியை பறித்துக்கொண்ட கொள்ளையர்கள், 45 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும், வங்கியில் உள்ள 
    சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகும் ஹார்ட் டிஸ்குகளையும் கைப்பற்றி பின் தப்பிசென்றுள்ளனர்.



    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக சம்பவம் தொடர்பான விசாரணையில் கொள்ளையர்கள் இந்தி மொழியில் பேசிக்கொண்டதாக சம்பவ இடத்தில் இருந்த வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து,  அண்டை மாநிலங்களை சேர்ந்த கொள்ளை கும்பலாக இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பட்டப்பகலில் நகரத்தின் முக்கிய பகுதியில் உள்ள வங்கியில் நடைபெற்ற இந்த துணீகர கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #bankrobbery #odisha
    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே லாரியை கடத்திய சென்ற கொள்ளையனை பொதுமக்கள் மற்றும் சக டிரைவர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே படவீட்டில் சிமெண்ட் ஆலை உள்ளது. இதன்அருகே ஒரு லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    நேற்று இரவு இந்த லாரியை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி உரிமையாளர் ஜி.பி.ஆர்.எஸ். கருவி மூலம் லாரி எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை கண்காணித்தார்.

    அப்போது ஈரோடு மாவட்டம் பவானி அருகே அந்த லாரி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மற்றும் சகடிரைவர்கள் அங்கு விரைந்து சென்று லாரியை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர்கள் லாரியை மீட்டு கொள்ளையனையும் குமாரபாளையத்திற்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் போலீசில் அவரை ஒப்படைப்பதற்காக அங்குள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்தனர். இதைப்பற்றி கேள்விப்பட்ட டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு வந்து கொள்ளையனுக்கு தர்ம அடி கொடுத்தனர்.இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கொலையுண்ட கொள்ளையன் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இச்சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×