search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 130486"

    • வாழப்பாடி அடுத்த பழனியாபுரம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடை பெற்றது.
    • சேலம், நாமக்கல் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 500-க்கும் அதிகமான காளைகள் பங்கேற்று, வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பழனியாபுரம் கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடை பெற்றது. இதில் சேலம், நாமக்கல் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 500-க்கும் அதிகமான காளைகள் பங்கேற்று, வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. காளைகளை அடக்க 300 மாடு பிடி வீரர்கள் களமிறங்கினர். இதில் 25 பேர் காயமடைந்தனர்.

    காளைகளை அடக்கி வெற்றி வாகை சூடிய மாடு பிடி வீரர்களுக்கும், பிடி படாது சீறிப்பாய்ந்த காளை களின் உரிமையாளர்க ளுக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டது. வாழப்பாடி தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் பழனியாபுரம் மாதேஸ்வரன் தலைமையிலான குழுவினர் ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடுகளை செய்திருந்தனர்.

    சேலம் ஆர்.டி.ஓ மாறன், சேலம் போலீஸ் எஸ்.பி சிவக்குமார், வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், வாழப்பாடி டி.எஸ்.பி ஹரி சங்கரி, காவல் ஆய்வாளர் உமாசங்கர், வருவாய் ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் ஜல்லிக்கட்டை கண்காணித்தனர். பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமையிலான மருத்துவ குழுவினர் காயமடைந்த மாடுபிடி வீரர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

    மேலும், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கூடி நின்று மிகுந்த ஆரவா ரத்தோடு ஜல்லிக்கட்டை கண்டு களித்தனர்.

    • பெரும்பாலான காளைகளை அடக்கி, தங்களது பலத்தை களத்தில் நிரூபித்து பார்வையாளர்களின் கரவொலியை பெற்றனர் காளையர்கள்.
    • சில காளைகள், மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் போக்கு காட்டின.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உலிபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியினை ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா, ஆத்தூர் டி.எஸ்.பி நாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    ஜல்லிக்கட்டில் ஆத்தூர், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கீரிப்பட்டி, கெங்கவல்லி, மல்லியக்கரை, வீரகனூர், வாழப்பாடி, அயோத்தியாபட்டணம், வேலூர், மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 460 காளைகள் பங்கு பெற்றது. மேலும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கு அரசு மருத்துவ குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டது. இதேபோல் கால்நடை மருத்துவர்களும் காளைகளை பரிசோதனை செய்தனர். மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்ட பிறகு மைதானத்துக்குள் இறங்க அனுமதிக்கப்பட்டனர். முதலில், வாடிவாசலில் இருந்து ஊர் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    அதன்பிறகு ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் வாடிவாசலில் இருந்து களத்துக்குள் இறங்கின. ஜல்லிக்கட்டு காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். சீறிப்பாய்ந்து வந்த சில முரட்டு காளைகளை கண்டு மாடுபிடி வீரர்கள் மிரண்டு ஓடினர். திமிலை உயர்த்தி திமிராய் சில காளைகள் களத்தில் நின்று விளையாடின.

    பெரும்பாலான காளைகளை அடக்கி, தங்களது பலத்தை களத்தில் நிரூபித்து பார்வையாளர்களின் கரவொலியை பெற்றனர் காளையர்கள். அதேநேரத்தில் சில காளைகள், மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் போக்கு காட்டின.

    அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை மடக்கி பிடித்த வீரர்களுக்கும் குக்கர், சேர், நான்ஸ்டிக் தவா, வெள்ளி நாணயம், ரொக்க பரிசு மற்றும் சிறந்த காளைகளுக்கு சிறப்பு பரிசு, மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

    உலிபுரம், தம்மம்பட்டி, ஆத்தூர் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் ஜல்லிக்கட்டை பார்த்தனர்.

    • ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
    • ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையினர் வலியுறுத்தினர்.

    மதுரை

    திருப்பரங்குன்றத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் சமீபத்தில் உயிரிழந்த பேரவையின் தலைவர் ஜி.ஆர். ஜெயகார்த்தியின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரது திருவுருவப் படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கூட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடை இல்லை என அறிவித்த உச்சநீதிமன்றத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு உரிமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் போது வருவாய் துறையினர்கள் மாடு வளர்ப்பவர்கள், மாடுபிடி வீரர்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்ளக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையின் புதிய தலைவராக ராமமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். நிர்வாகிகள் பிரகாஷ், மணி, மார்க்கெட் ராமமூர்த்தி, கோபால், சோனைமுத்து உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

    • தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு திருப்தியாக இல்லை என்று தி.மு.க. கூட்டணி கட்சியில் உள்ள திருமாவளவன் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.
    • தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது தான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தவறியது மற்றும் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதை கண்டித்தும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு திருப்தியாக இல்லை என்று தி.மு.க. கூட்டணி கட்சியில் உள்ள திருமாவளவன் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது. ஏற்கனவே தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் மௌனமாக இருப்பதாக குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது திருமாவளவன் வாய் திறந்து பேசி இருப்பது பாராட்டுதலுக்கு உரியது.

    தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது தான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பை தி.மு.க.வினர் கொண்டாடுவதற்கு தார்மீக அடிப்படையில் உரிமை உள்ளதா, இல்லையா என்பது அவர்களின் மனசாட்சிக்கே தெரியும். ஜல்லிக்கட்டு தீர்ப்பு என்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தீர்ப்பு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மானாமதுரை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாய்ந்ததில் 20 வீரர்கள் காயமடைந்தனர்.
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரைஅருகே உள்ள பெரும்பச்சேரி சமய கருப்பணசுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மேட்டுமடை, பெரும்பச்சேரி கிராம மக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு நடந்தது.

    சமய கருப்பணசுவாமி கோவிலில் பூஜைகள் நடத்தி ஜல்லிக்கட்டு தொடங்கி வைக்கப்பட்டது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட

    400-க்கும் மேற்பட்ட காளைகள் ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

    பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்த மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், சேர், சில்வர் அண்டா, சைக்கிள், வெள்ளிக்காசு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டில் களத்தில் நின்று சிறப்பாக களமாடிய சிறந்த காளைகளுக்கும், அதிக காளைகளை பிடித்த வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.இதில் காளைகளை அடக்க முயன்ற 20 வீரர்கள் காயமடைந்தனர்.

    மானாமதுரை வட்டாட்சியர் ராஜா மேற்பார்வையில் நடந்த இந்த ஜல்லிக்கட்டில் காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • தா.பழூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது
    • போட்டியில் சுமார் 650 மாடுகள் பங்கேற்றன

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள நடுவலூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் மற்றும் மரிய சூசை ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கடலூர், மதுரை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 650 மாடுகள் பங்கேற்றன. மாடுகளை பிடிக்க 300 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் நடுவலூர் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் போட்டியை கண்டுகளித்தனர். இதில் பிடிபடாத காளைகளுக்கும், மாடுகளை பிடித்த வீரர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், சேர், டேபிள், குவளை, குடம், தங்கநாணயம், டிவி, பண முடிச்சுகள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது. இதில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • ஜல்லிக்கட்டு மைதான பணிகளை முதன்மை செயலாளர் ஆய்வு செய்தார்.
    • கலெக்டர் சங்கீதா, யூனியன் ஆணையாளர் வள்ளி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் கட்டப்பட்டு வரும் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு மைதானம் கட்டுமான பணிகளை பொதுபணித்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, யூனியன் ஆணையாளர் வள்ளி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • மதுரை மாவட்ட கிராமப்புற பகுதிகளில் விவசாயிகள் ஜல்லிக்கட்டுக்காக என்று தனியாக காளைகளை வளர்த்து வருகிறார்கள்.
    • சிறு வயது முதலே காளைகளை போட்டிக்கு பயன்படுத்தும் வகையில் மண் குத்துதல், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை வழங்குவார்கள்.

    திருமங்கலம்:

    தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் ஒன்றாக கருதப்படுவது ஜல்லிக்கட்டு. இந்த ஜல்லிக்கட்டு தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு ஊர்களில் நடத்தப்படும்.

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மிகவும் புகழ்பெற்றதாகும். உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளை வளர்ப்பவர்கள், அதனை தனி அக்கறை எடுத்து வளர்த்து வருகிறார்கள்.

    குறிப்பாக மதுரை மாவட்ட கிராமப்புற பகுதிகளில் விவசாயிகள் ஜல்லிக்கட்டுக்காக என்று தனியாக காளைகளை வளர்த்து வருகிறார்கள். சிறு வயது முதலே காளைகளை போட்டிக்கு பயன்படுத்தும் வகையில் மண் குத்துதல், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை வழங்குவார்கள்.

    இதன் காரணமாக குடும்பத்தோடு ஒன்றிவிடும் அந்த காளைகள் பாசத்தோடு வளர்கின்றன. வளர்ப்போரின் சொல்படி கேட்கும் அளவுக்கு அந்த பாசப்பிணைப்பு இருக்கும். இதனால் காளைகளை தங்களது குழந்தைகளை போல பேணி பாதுகாத்து வளர்த்து வருகிறார்கள். எந்தவித வருமான ஆதாயத்திற்காக இல்லாமல் பாரம்பரிய விளையாட்டை பாதுகாக்கும் நோக்கில் காளை இனங்களை பாதுகாக்கும் வகையில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் சிறு வயது முதலே காளையை தனது சகோதரன் போல் வளர்த்த இளம்பெண் ஒருவர், திருமணம் முடிந்த பின்பு அதனை பிரிய மனமில்லாமல் புகுந்த வீட்டுக்கு அந்த காளையையும் அழைத்துச் சென்ற நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுகப்பிரியா. இவரது வீட்டில் ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வந்தனர். அந்த காளை மீது அவரது குடும்பத்தினர் மிகவும் பாசமாக இருந்துள்ளனர். சுகப்பிரியா அந்த காளையை அன்பாக வளர்த்து வந்துள்ளார். இந்தநிலையில் அவருக்கு நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ராஜபாண்டி என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    அதன்படி அவர்கள் இருவருக்கும் நாகமலை புதுக்கோட்டையில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் புகுந்த வீட்டிற்கு தனது ஜல்லிக்கட்டு காளையையும் சுகப்பிரியா அழைத்துச்சென்றார். அதனை மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர். இந்த சம்பவம் திருமணத்திற்கு வந்திருந்த அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.

    முன்னதாக மணப்பெண் சுகப்பிரியா, திருமணம் நடப்பதற்கு முன்னதாக தான் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளையை மணமேடைக்கு அழைத்து வந்தார். பின்பு காளைக்கு முத்தமிட்டு அதனை மணமகன் ராஜபாண்டிக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்பு அந்த காளையுடன் மணமக்கள் இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    • என்னால் கொண்டு வரப்பட்ட 2017-ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் செல்லும் என தீர்ப்பளித்து உள்ளது.
    • தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து, என்னால் கொண்டு வரப்பட்ட 2017-ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் செல்லும் என தீர்ப்பளித்து உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி. தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி.

    தமிழ்நாடு அரசின் 2017- ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இடைப்பட்ட காலத்தில் கட்டுப்பாடுகள் என்ற போர்வையில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற விளையாட்டுகளுக்கான குழு உறுப்பினர்கள் மீதும், காளைகளின் உரிமையாளர்கள் மீதும், விளையாட்டு வீரர்கள் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள காளை உரிமையாளர்களும், ஜல்லிக்கட்டு வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்பதை ரத்து செய்யவும் தி.மு.க. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சேலம் மாவட்டம் நிலவாரப்பட்டியில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியினை மாவட்ட கலெக்டர் கார்மேகம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
    • இப்போட்டியில் பல்வேறு ஊர்களில் இருந்து 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் நிலவாரப்பட்டியில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியினை மாவட்ட கலெக்டர் கார்மேகம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் பல்வேறு ஊர்களில் இருந்து 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டுப் போட்டியில் அரசு விதிமுறைகள் குறித்து பின்பற்ற வேண்டிய உறுதிமொழியினை கலெக்டர் கார்மேகம் வாசிக்க, தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    முன்னதாக ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

    108 அவசர சிகிச்சை வாகனம், காவல்துறை பாதுகாப்பு, பார்வையா ளர்களுக்கான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வா கத்தால் மேற்கொள்ளப்பட்டு ள்ளன. நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்ப டுவதை உறுதி செய்யும் வகையில் ஜல்லிக்கட்டுப் போட்டி முழுவதையும் வீடியோ பதிவு செய்யப்படு கிறது.

    மேலும், விழாக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள், காளை களின் உரிமையாளர்கள் அரசின் அனைத்து விதி முறைகளையும் முழுமை யாகக் கடைபிடித்திட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இவ்விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பு மாறன், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது.
    • ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் சட்டத்தை இயற்றுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு உரிமை உள்ளது என தீர்ப்பு வழங்கப்பட்டது.

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திய நிலையில், தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது. இதன் காரணமாக தற்போது தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

    அதேசமயம், ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி விசாரிக்க தொடங்கியது.

    விலங்குகளுக்கு அடிப்படை உரிமை என்ற தீர்ப்பு தவறானது என்றும், ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோரும் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடாது என்பதே விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் நோக்கம் என பீட்டா தரப்பு வாதிட்டது.

    இதையடுத்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் சட்டத்தை இயற்றுவதற்கு தமிழ்நாடு அரசுக்கு உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இந்த தீர்ப்பை பலரும் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து நடிகர் சூர்யா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ஜல்லிக்கட்டு நம் கலாசாரத்துடன் ஒருங்கிணைந்தது என்பதை உணர்த்தும்படி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    • தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அலங்காநல்லூர்

    ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்ப ளித்துள்ளது. இதை வரவேற்று கொண்டும் வகையில் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் முன்பு ஜல்லிக்கட்டு விழா குழுவை சேர்ந்த ரகுபதி, கோவிந்தராஜ், பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி தலைவர் மலை சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதி தங்கமணி மற்றும் விழா குழுவினர், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், கிராம மக்கள் பட்டாசு வெடித்தும் காளை களுக்கும், பொதுமக்க ளுக்கும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ் ச்சியை வெளிப்படுத்தினர்.

    இதுகுறித்து ஜல்லிக்கட்டு விழா குழுவை சேர்ந்த ரகுபதி, கோவிந்தராஜ் கூறுகையில், பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கு காரணமாக ஜல்லிக்கட்டுக்கு தடை வந்து விடுமோ என்ற அச்சத்துடன் இருந்தோம். எங்களுக்கு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்றனர்.

    ×