search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகுல்காந்தி"

    • நேரு நினைவு அருங்காட்சியகம் பிரதமர் நினைவு அருங்காட்சியகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
    • காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் பிரதமர் நினைவு அருங்காட்சியகம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

    இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றுவதால் நேருவின் பங்களிப்பை பிரதமர் மோடி பறித்துவிட முடியாது. இது சிறுப் பிள்ளைதனமானது என்று காங்கிரஸ் சாடி இருந்தது.

    இந்நிலையில் நேரு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் தொடர்பாக ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

    ராகுல்காந்தி 2 நாள் பயணமாக இன்று காலை காஷ்மீர் புறப்பட்டு சென்றார். விமானநிலையத்தில் அவர் இதுதொடர்பாக கூறும்போது, "நேருவின் செயல்கள் தான் அவரது அடையாளம். அவரது பெயர் அல்ல" என்றார்.

    • கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் என இரு முறை சென்றும் லடாக் பகுதிக்கு செல்லவில்லை.
    • ராகுல்காந்தி அடுத்த மாதம் ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், நார்வே, பிரான்சுக்கு செல்கிறார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார்.

    அதன்பின்னரும் தான் செல்லாத பகுதிகளுக்கு சென்று மக்களிடம் பேசி வருகிறார். அந்த வகையில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர், ஜம்மு ஆகிய பகுதிகளுக்கு கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் என இரு முறை சென்றும் லடாக் பகுதிக்கு செல்லவில்லை.

    இந்த நிலையில் ராகுல்காந்தி 2 நாள் பயணமாக இன்று காலை காஷ்மீர் புறப்பட்டு சென்றார். லடாக் மற்றும் அங்குள்ள லே பகுதிகளுக்கு அவர் செல்கிறார். இதைத்தொடர்ந்து ராகுல்காந்தி அடுத்த மாதம் ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், நார்வே, பிரான்சுக்கு செல்கிறார்.

    • திரும்பி வந்ததில் மகிழ்ச்சி, ஆனால் உம்மன் சாண்டியை இங்கு காணவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
    • வெள்ளத்தில் வீடு இழந்தவர்களுக்கு புதிய வீட்டின் சாவிகளை ராகுல்காந்தி வழங்கி ஆறுதல் கூறினார்.

    திருவனந்தபுரம்:

    மோடி சமுதாயம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனை தொடர்ந்து எம்.பி. பதவியை மீண்டும் பெற்ற அவர், நேற்று தனது தொகுதியான கேரள மாநிலம் வயநாடுக்கு வந்தார். அவருக்கு தொகுதி மக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    பின்னர் கல்பெட்டா பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், சகோதர, சகோதரிகளே என்று தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    4 மாதங்களுக்கு பிறகு இங்கு வந்துள்ளேன்... உங்கள் எம்.பி.யாக வயநாடுக்கு வந்துள்ளேன். திரும்பி வந்ததில் மகிழ்ச்சி, ஆனால் உம்மன் சாண்டியை இங்கு காணவில்லை என்பது வருத்தமளிக்கிறது. அவர் கேரளாவின் தலைவராக இருந்தவர். அவரது இறுதி ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்றது அவர் மீது கொண்டிருந்த அன்பையும் மரியாதையையும் காட்டியது. கேரளா வுக்காக அவர் செய்ததற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்.

    என்னை தகுதி நீக்கம் செய்ய பாரதிய ஜனதா 100 முறை முயன்றாலும், மோடி மற்றும் அவரது கூட்டாளிகளின் திட்டம் பலிக்காது. இந்தியாவின் நோக்கமே மக்களிடம் அமைதியை நிலைநாட்டுவது தான். வன்முறையும் வெறுப்பும் இருந்தால் அது இந்தியா அல்ல.

    பாராளுமன்றத்தில் அவர் (மோடி) 2 மணி 13 நிமிடங்கள் பேசினார். சிரித்தார்...கேலி செய்தார்.... அவரது அமைச்சரவை சிரித்தது.. ஆனால் அதில் மணிப்பூர் பற்றி பேசியது 2 நிமிடங்கள் தான். மணிப்பூரில் பாரதிய ஜனதாவும் அதன் தலைமையிலான அரசும் இந்தியா என்ற எண்ணத்தை கொன்றுவிட்டன.

    ஆயிரக்கணக்கான குடும்பங்களை அழித்துவிட்டீர்கள். ஆயிரக்கணக்கான பெண்களை பாலியல் செய்ய அனுமதித்தீர்கள். அங்கு அப்படி நடந்த பிறகு நாட்டின் பிரதமராக நீங்கள் சிரிக்கிறீர்களா?

    இந்தியா என்ற கருத்தை கொலை செய்யும் எவரும் தேசியவாதியாக இருக்க முடியாது. பாரத மாதா கொலையை பற்றி 2 நிமிடம் பேசினீர்கள். இந்தியா என்ற எண்ணத்தை எப்படி நிராகரிக்க முடியும்?.

    மணிப்பூருக்கு நான் சென்ற போது, எங்கும் ரத்தம்..., எங்கும் கொலை ..., எங்கும் பாலியல் பலாத்காரங்கள் என மக்கள் கூறினர். இது தான் மணிப்பூரின் நிலவரம்.

    கடந்த 4 மாதங்களாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஏன் மணிப்பூர் செல்லவில்லை? ஏன் வன்முறையைத் தடுக்க முயற்சிக்கவில்லை? ஏனென்றால் நீங்கள் ஒரு தேசியவாதி இல்லை. இந்தியா என்ற எண்ணத்தை கொலை செய்யும் எவரும் தேசியவாதியாக முடியாது.

    வயநாட்டுக்கு நான் வந்திருக்கிறேன். இப்போது நான் என் குடும்பத்திற்கு வந்திருக்கிறேன். யாரோ ஒருவர் நம் குடும்ப உறுப்பினர்களை பிரிக்க முயற்சிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், யாரோ ஒருவர் இரண்டு சகோதரர்களை ஒருவரையொருவர் பிரிக்க முயற்சிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், யாரோ ஒரு தந்தையை தனது மகளிடமிருந்து பிரிக்க முயற்சிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், யாராவது ஒரு குடும்பத்தை பிரிக்க முயன்றால், குடும்பம் வலுவடைகிறது; ஒருவன் தந்தையையும், மகனையும் பிரிக்க முயன்றால், தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான உறவு வலுவடைகிறது... தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான அன்பு வலுவடைகிறது." பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கு குடும்பம் என்றால் என்ன என்று புரியவில்லை. நாட்டை அழிப்பதே அவர்களது நோக்கம்.

    இந்தியா ஒரு குடும்பம்.. பிரித்தெடுக்க நினைக்கிறார்கள்; மணிப்பூர் ஒரு குடும்பமாக இருந்தது. அதை அழிக்க முயன்றார்கள்.. மணிப்பூரில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பா.ஜ.க.வின் கொள்கை களால் அழிக்கப்பட்டுள்ளன. அதனால், அவர்கள் அழிக்கிறார்கள். குடும்பங் கள், அவை மக்களிடையேயான உறவை அழிக்கின்றன, நாங்கள் மக்களை ஒன்றிணைக்கிறோம், குடும்பங்களை பலப்படுத்துகிறோம், மக்களிடையேயான உறவை பலப்படுத்துகிறோம்.

    உங்களையும் என்னையும் எவ்வளவு அதிகமாக பிரிக்க முயல்கிறார்களோ, அவ்வளவு நெருக்கமாகி விடுவோம் என்று அவர்களுக்கு புரியவில்லை. அவர்கள் நினைக்கிறார்கள் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தால், வயநாட்டுடனான அவரது உறவு முறிந்துவிடும். இல்லை! நீங்கள் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தால், அவருடைய உறவு. வயநாடு மேலும் வலுவடையும், வயநாட்டு மக்கள் மீதான அவரது அன்பு மேலும் வலுவடையும், மேலும் வயநாட்டு மக்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பு மேலும் வலுவடையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீட்டின் சாவிகளை ராகுல்காந்தி வழங்கினார்.

    • 23 ஐகோர்ட்டு நீதிபதிகளை வேறு மாநில உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரையை வழங்கி உள்ளது.
    • பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டு நீதிபதி ராஜ் மோகன் சிங்கை மத்திய பிரதேச ஐகோர்ட்டுக்கு மாற்றவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான கொலீஜியம் கடந்த 3-ந்தேதி கூடி, 23 ஐகோர்ட்டு நீதிபதிகளை வேறு மாநில உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரையை வழங்கி உள்ளது.

    அதன்படி, அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி விவேக்குமார் சிங், குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி குமாரி கீதாகோபி ஆகிய இருவரையும் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றவும், அவதூறு வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்தி வைக்க மறுத்த குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி ஹேமந்த் பிரச்சக்கை, பாட்னா ஐகோர்ட்டுக்கு மாற்றவும், குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி அல்பேஷ் ஒய். கோக்ஜேவையும், பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டு நீதிபதி அரவிந்த் சிங் சங்வானை அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றவும், குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி சமீர் ஜே.தவே, பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டு நீதிபதி அருண் மோங்காவை ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்றவும், பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டு நீதிபதி ராஜ் மோகன் சிங்கை மத்திய பிரதேச ஐகோர்ட்டுக்கு மாற்றவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

    இதுபோல, 14 ஐகோர்ட்டு நீதிபதிகளை வேறு உயர்நீதிமன்றங்களுக்கு மாற்ற மீண்டும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமேதி தொகுதியில் ஸ்மிருதி இராணியிடம் 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.
    • மீண்டும் எம்.பி. பதவி கிடைத்ததால் அமேதியில் காங்கிரஸ் தொண்டர்கள் 51 கிலோ எடையுள்ள லட்டுவை வெட்டி, பட்டாசுகளை வெடித்து கொண்டாடினார்கள்.

    லக்னோ:

    2019 பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார்.

    இதில் வயநாட்டில் 4 லட்சத்து 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இராணியிடம் 55,120 வாக்குகள் வித்தி யாசத்தில் தோற்றார்.

    அவதூறு வழக்கில் 2 ஆண்டு ஜெயில் தண்டனை யால் ராகுல்காந்தியின் வயநாடு எம்.பி. பதவி பறிபோனது. இந்த தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டதால் ராகுல்காந்தி மீண்டும் எம்.பி.யானார். 137 நாட்கள் இடைவெளிக்கு பிறகு அவர் நேற்று பாராளுமன்றத்துக்கு சென்றார்.

    இந்நிலையில் 2024 பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ராகுல்காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று உத்தர பிரதேச காங்கிரஸ் விரும்புகிறது.

    அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைத்ததால் அமேதியில் காங்கிரஸ் தொண்டர்கள் 51 கிலோ எடையுள்ள லட்டுவை வெட்டி, பட்டாசுகளை வெடித்து கொண்டாடினார்கள்.

    2024 தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிட வலியுறுத்துவதற்காக உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர்கள் குழு டெல்லி செல்கிறது. பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிந்த பிறகு அவர்கள் ராகுல்காந்தியை சந்திப்பார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    கடைசியாக நடந்த 4 பாராளுமன்ற தேர்தலில் அமேதியில் 3 முறை ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இதேபோல உத்தரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி தொடர்ச்சியாக 4 முறை வெற்றி பெற்றார்.

    அமேதி தொகுதி பா.ஜனதா எம்.பி.யும், மத்திய மந்திரியுமான ஸ்மிருதி- இராணி அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளது.

    அவர் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக அமேதியில் முகாமிட்டு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மட்டும் அவர் தனது தொகுதிக்கு 50 முறை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கூட்ட தொடரில் மணிப்பூர் கலவர பிரச்சினை முக்கிய அம்சமாக எதிரொலித்தது.
    • ராகுல்காந்தி உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருத்துக்கள் தெரிவித்து பேசிய நிலையில் நேற்று பிரதமர் மோடி பதில் அளித்தார்.

    புதுடெல்லி:

    பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளை சந்தித்த பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது. பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து நேற்றுடன் 16 நாள் நிறைவு பெற்று இன்று (வெள்ளிக்கிழமை) 17-வது நாளுடன் நிறைவு பெற உள்ளது.

    இந்த கூட்ட தொடரில் மணிப்பூர் கலவர பிரச்சினை முக்கிய அம்சமாக எதிரொலித்தது. கூட்டம் தொடங்கிய நாள் முதல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தது வரை எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற 2 அவைகளையுமே ஸ்தம்பிக்க செய்தன.

    எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்த பின்னர் நடைபெற்ற முதல் கூட்டம் என்பதால் அனைத்து பிரச்சினைகளிலும் எதிர்க்கட்சிகள் சேர்ந்தே குரல் கொடுத்தன. அதற்கு முத்தாய்ப்பாக மோடி குறித்த சர்ச்சை பேச்சு வழக்கில் பெற்ற ராகுல்காந்தியின் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டு அவர் எம்.பி. பதவியை தக்கவைத்த நிகழ்வு எதிர்க்கட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்தது.

    எதிர்க்கட்சிகள் ஒரு பக்கம் அணி திரண்டாலும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சிறிதும் தயங்காமல் எதிர்க்கட்சிகளை எதிர்கொண்டன. காரசார விவாதங்களுக்கு மத்திய மந்திரிகள் சளைக்காமல் பதிலளித்து எதிர்க்கட்சிகளை திணறடித்தனர். மணிப்பூர் கலவர பிரச்சினையில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.

    மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நாள் முதல் , மணிப்பூர் விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், விரிவான விவாதத்திற்கு கடைசி வரையில் சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.

    இதை தொடர்ந்து எதிர்க் கட்சிகள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானம் மீதான விவாதம் கடந்த 8-ந்தேதி தொடங்கி நடைபெற்றது.

    ராகுல்காந்தி உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருத்துக்கள் தெரிவித்து பேசிய நிலையில் நேற்று பிரதமர் மோடி பதில் அளித்தார். சுமார் இரண்டரை மணிநேரம் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசியதும், தொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததும் இந்த கூட்டத்தொடரின் முக்கிய அம்சமாகும். தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

    டெல்லி நிர்வாக சீர்திருத்த சட்டம் இந்த கூட்ட தொடரில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. முன்னதாக நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ராகுல்காந்தி பங்கேற்று பேசியது, அவர் பேசி நிறைவு செய்ததும் பறக்கும் முத்தம் கொடுத்ததால் எழுந்த சர்ச்சை போன்றவையும் இந்த கூட்ட தொடரின் நிகழ்வாக இருந்தது.

    ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமனம், சேவைகளின் நிபந்தனைகள் மற்றும் பதவி காலம் குறித்த மசோதா, டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா உள்ளிட்டவையும் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன.

    இதன் தொடர்ச்சியாக நிறைவுநாளான இன்று ஆன்லைன் விளையாட்டுகள், சூதாட்ட விடுதிகள், குதிரை பந்தய கிளப்புகளில் கட்டப்படும் தொகைக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வசூலிக்கும் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ராகுல்காந்தி மீண்டும் எம்.பி.யாக பொறுப்பேற்று, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டார்.
    • அடைக்கலப்பட்டணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளிமுருகன் தலைமை தாங்கினார்.

    தென்காசி:

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி ராகுல்காந்திக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதால், மீண்டும் எம்.பி.யாக ராகுல்காந்தி பொறுப்பேற்று, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டார். இதை கொண்டாடும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். கீழப்பாவூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் அடைக்கலப்பட்டணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளிமுருகன் தலைமை தாங்கினார். வட்டார பொறுப்பாளர் மகாராஜா, செல்லப்பா, ஜெயபால், ஞானசெல்வன், சாலமோன்டேவிட், யேசுவடியான், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் தங்கரத்தினம் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

    மாநில இலக்கிய அணி தலைவர் ஆலடி சங்கரய்யா, மாவட்ட துணைத்தலைவர் ச.செல்வன், மாநில இலக்கிய அணி செயலாளர் பொன் கணேசன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் பால்துரை, வடக்கு வட்டார பொறுப்பாளர் தாயார்தோப்பு ராமர், ஆலங்குளம் வட்டார தலைவர் ரூபன்ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், ஐ.என்.டி.யூ.சி.வைகுண்டராஜா, கீழப்பாவூர் பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர், ஒன்றிய கவுன்சிலர் ராதா குமாரி, மாரிமுத்து, வட்டார செயலாளர் மாரியப்பன், சொல்லின்செல்வன், ரத்தினவேல்சாமி, சிவகுமார், ரத்தினசாமி, வேல்பாண்டி, மாரிச்செல்வம், சீவலப்பேரியான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
    • ட்டார காங்கிரஸ் கமிட்டியினர்ஆற்றூர் சந்திப்பில் நேற்று மாலை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    கன்னியாகுமரி:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவரது எம்.பி. பதவி பறிபோனது. இதையடுத்து ராகுல்காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

    இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 2 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியினர்ஆற்றூர் சந்திப்பில் நேற்று மாலை பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    வட்டார தலைவர் வக்கீல் ஜெபா தலைமை தாங்கினார். ஆற்றூர் நகர தலைவர் ஜாண் வெர்ஜின் முன்னிலை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் ஜாண் இக்னோஷிஸ், மாவட்ட செயலாளர்கள் ஆற்றூர் குமார், தங்க நாடார், வட்டார செயலாளர்கள் வக்கீல் ராஜேஸ், ராஜாதாஸ், செறுகோல் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் அச்சுதன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    பொன்மனை நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக பொன்மனை சந்திப்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார். பேரூராட்சி விவசாய பிரிவு தலைவர் வினு, பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் ஜாண் போஸ்கோ, ஓ.பி.சி. பிரிவு தலைவர் அபினேஷ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் அனிஷ் ராஜ், வார்டு தலைவர் சுஜின் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். திங்கள்நகர் காமராஜர் பஸ் நிலையத்தில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

    குளச்சல் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜேக்கப் தலைமை தாங்கினார். திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கி ணைப்பாளர் லாரன்ஸ், குமரி கிழக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் ஜாண் சவுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். மேலும் திங்கள் நகர் பேரூர் துணை தலைவர் ரீத்தம்மாள், ரீத்தாபுரம் பேரூராட்சி துணை தலைவர் விஜூமோன், தக்கலை ஒன்றிய கவுன்சிலர் கோல்டன் மெல்பா, ஜேக்கப் அருள்பால், தேவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    குளச்சல் அண்ணாசிலை சந்திப்பில் நகர தலைவர் சந்திரசேகர் தலைமையிலும், பீச் சந்திப்பில் மாவட்ட மீனவர் காங்.தலைவர் ஸ்டார்வின் தலைமையிலும் பட்டாசு வெடித்து இனிப் புக்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயல் தலைவர் முனாப், மாநில செயற்குழு உறுப்பி னர் யூசுப்கான், கவுன்சிலர் ரமேஷ், மாநில மீனவர் காங்.துணைத்தலைவர் பிரான்சிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கேரளாவில் தங்கியிருந்து ஆயுர் வேத சிகிச்சை பெற அவர் ஏற்கனவே முடிவு செய்திருந்தார்.
    • வருகிற 29-ந்தேதி வரை ராகுல்காந்தி அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்று கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ராகுல்காந்தி வந்திருந்தார்.

    அவர் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி புனித ஜார்ஜ் ஆர்ததோடக்ஸ் தேவாலயத்தில் நடந்த உம்மன்சாண்டி இறுதிச் சடங்கில் நேற்று கலந்து கொண்டார். அவர் கேரளாவில் தங்கியிருந்து ஆயுர் வேத சிகிச்சை பெற அவர் ஏற்கனவே முடிவு செய்திருந்தார்.

    அதன்படி கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சைக்கு பிரசித்தி பெற்ற கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலையில் தங்கியிருந்து அவர் ஆயுர்வேத சிகிச்சை பெறுகிறார். அந்த வைத்திய சாலையின் தலைமை மருத்துவ நிபுணர் மாதவன்குட்டி வாரியரன் மேற்பார்வையில் ராகுல் காந்திக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    உம்மன்சாண்டியின் இறுதிசடங்கில் பங்கேற்று விட்டு, நேற்று இரவிலேயே அவர் கேட்டக்கல் ஆரிய வைத்திய சாலைக்கு சென்றார். அங்கு அவருக்கு இன்று முதல் சிசிச்சை அளிக்கப்படுகிறது. வருகிற 29-ந்தேதி வரை ராகுல்காந்தி அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்று கூறப்படுகிறது.

    • எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
    • டெல்லியிலும், பெங்களூரிலும் போட்டிக் கூட்டம் நடப்பதால் கட்சி தலைவர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடை பெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் ஓரணியில் திரளதிட்டமிட்டுள்ளனர்.

    இதன்படி எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த மாதம் 23-ந்தேதி பாட்னாவில் நடை பெற்றது. பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் முயற்சியால் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, தி.மு.க., ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டீரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் எதிர்க் கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதற்கான ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் மீது ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் சில கருத்துக்களை தெரிவித்தனர். குறைந்தபட்ச செயல் திட்டம் குறித்தும் விரிவாக பேசப்பட்டது. ஆனால் இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    இதைத் தொடர்ந்து மீண்டும் அடுத்த கூட்டத்தில் இது பற்றி பேசலாம் என முடிவு செய்தனர். அதன்படி அடுத்த கூட்டத்தை இமாச்சல பிரதேசத்தின் தலை நகரான சிம்லாவில் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டது.

    ஆனால் கன மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டது. ஜெய்ப்பூர் அல்லது ராய்ப்பூரில் கூட்டத்தை நடத்தலாமா? என்றும் ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆேலாசனை கூட்டம் பெங்களூரில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி கலந்து கொள்கிறார்கள்.

    உடல்நிலை பாதிப்பு காரணமாக முதல் கூட்டத்தில் பங்கேற்காத சோனியாகாந்தி, இக்கூட்டத்தில் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது.

    இதே போல் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி மூத்த தலைவர் லல்லு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்ப வார் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    இது தவிர தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அனைத்து இந்திய பர்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் பங்கேற்க உள்ளன. இதற்காக இந்த கட்சிகளின் தலைவர்கள் உள்பட 24 கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடந்த வாரம் கடிதம் எழுதி இருந்தார்.

    நமது ஜனநாயக கொள்கைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முடிந்ததாலும், அடுத்த பொதுத் தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொள்ள ஒருமனதான முடிவு எட்டப் பட்டதாலும் முதல் கூட்டம் வெற்றிகரமாக அமைந்தது.

    இந்த விவாதத்தை தொடர்வதும், நாம் உரு வாக்கிய ஒற்றுமையை கட்டி எழுப்புவதும், மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.

    நமது நாடு சந்திக்கும் சவால்களுக்கான தீர்வுகளுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்.

    அதன் தொடர்ச்சியாக ஜூலை 17-ந்தேதி பெங்களூரில் நடக்கும் கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடக்கும் இரவு விருந்திலும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன். கூட்டம் 18-ந்தேதி முற்பகல் 11 மணிக்கு மீண்டும் தொடங்கும். உங்கள் அனைவரையும் பெங்களூர் கூட்டததில் சந்திக்கிறேன்.

    இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறி இருந்தார்.

    இதைத் தொடர்ந்து பெங்களூர் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் யார்? என்பதை முடிவு செய்ய மீண்டும் ஆலோசிக்கிறார்கள். இதில் ஒருமித்த கருத்து எட்டப்படுமா? என்பது நாளை தெரிந்துவிடும்.

    இன்று சோனியாகாந்தி அளிக்கும் விருந்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த்சோரன், சிவசேனா உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த விருந்தில் பங்கேற்காமல் நாளைய கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது.

    பெங்களூரில் இன்று முக்கிய கட்சிகளின் தலைவர்கள் வருவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

    இந்த நிலையில் எதிர்க் கட்சிகளின் இந்த திட்டத்தை முறியடிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து டெல்லியில் நாளை (18-ந்தேதி) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டத்தை நடத்துகிறது.

    நாளை மாலை நடைபெறும் இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    நாளை மாலை நடை பெறும் இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இந்த கூட்டணியில் உள்ள அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா. கட்சிகளுக்கும் அழைப்பு வந்துள்ளது.

    அதன்படி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை டெல்லி செல்கிறார்.

    டெல்லியில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்குமாறு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.

    இதனை ஏற்று பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் பங்கேற்க உள்ளன.

    மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி அஜித்பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் அணி ஆகியவையும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றன.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர் பாக கூட்டணி கட்சிகளுடன் பாரதிய ஜனதா கட்சி முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளது.

    மாநிலங்களில் இருக்கும் கூட்டணி கட்சிகளை அர வணைத்து போதிய இடங்களை ஒதுக்கி தேர்தலை சந்தித்து வெற்றி பெற இக்கூட்டத்தில் வியூகம் வகுக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    டெல்லியிலும், பெங்களூரிலும் போட்டிக் கூட்டம் நடப்பதால் கட்சி தலைவர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

    • ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கின் முழு நோக்கமும் அவரை பாராளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்காகத்தான்.
    • இந்திய தண்டனை சட்டம் அமலில் உள்ள 162 ஆண்டுகளில், அவதூறு வழக்குக்கு நீதிமன்றம் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் தண்டனை விதித்துள்ளது.

    சென்னை:

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கின் முழு நோக்கமும் அவரை பாராளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்காகத்தான். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற அனைத்தும் அந்த தகுதி நீக்கத்தை நியாயப்படுத்தும் முயற்சியாகும். நான் முன்பு கூறியதை மீண்டும் சொல்கிறேன்.

    இந்திய தண்டனை சட்டம் அமலில் உள்ள 162 ஆண்டுகளில், அவதூறு (வாய்மொழி அவதூறு) வழக்குக்கு நீதிமன்றம் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் தண்டனை விதித்துள்ளது. வழக்கு பற்றிய அனைத்தையும், கோர்ட்டு தீர்ப்பும் அந்த உண்மையை கூறுகிறது. ஒரு நாள் நீதி கிடைக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூபி ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடை பெற்றது.
    • குழந்தைகளின் தாய்க்கு பழத்தட்டுடன் புடவையும் பரிசாக வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நாங்குநேரி ஓசன்னா அன்பு இல்லம், மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளர் ரூபி ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று ராகுல் காந்தி பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடை பெற்றது.

    தொடர்ந்து, மறுவாழ்வு மையத்தில் இருக்கும் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அனைவருக்கும் உணவு பரிமாறினார். அதைப்பார்த்ததும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

    அதனைத்தொடர்ந்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தங்க மோதிரம் அணிவித்தார். குழந்தைகளின் தாய்க்கு பழத்தட்டுடன் புடவையும் பரிசாக வழங்கினார்.

    மேலும் அதே மருத்துவ மனைகளில் அதற்கு முன் தேதிகளில் பிறந்த குழந்தை களுக்கும் பரிசு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், வட்டார தலைவர்கள், கிராம கமிட்டி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×