search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடவடிக்கை"

    • இப்பூங்காவில் வெகு விரைவில் மிகப்பெரும் நிறுவனங்கள் வரவுள்ளன.
    • தென் மாவட்டங்களில் விமான நிலையம் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியில் கட்டப்பட்டு வரும் டைடல் பூங்கா கட்டுமானப் பணியை இன்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த டைடல் பூங்கா கட்டுமான பணி இப்போது முடிவடையும் தருவாயில் உள்ளது.

    எனவே, இப்பூங்காவில் வெகு விரைவில் மிகப்பெரும் நிறுவனங்கள் வரவுள்ளன.

    டெல்டா பகுதியில் படித்த இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் இங்கேயே தொழில் தொடங்குவதற்கு ஸ்டார்ட் அப் மையமாக இப்பூங்கா அமையும்.

    குறிப்பாக, இப்பூங்கா தஞ்சாவூர் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

    டெல்டா மாவட்டங்களில் எந்த காலத்தி லும் விவசாயிகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக தொழில்கள் வராது.

    அதே சமயம், இங்கு விவசாயம் சார்ந்த தொழில்பேட்டைகள் நிச்சயமாக கொண்டு வரப்படும்.

    படித்த இளைஞர்க ளுக்கு அடுத்த கட்ட வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதில், தமிழக முதல்-அமைச்சர் முக்கிய நோக்க மாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

    எனவே, டெல்டா பகுதியில் எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுத்தாத தொழில்பேட்டைகளைக் கொண்டு வரும் பணி நடைபெறுகிறது.

    தமிழகம் முழுவதும் வளர்ச்சி பரவ வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    இதன் அடிப்படையில் ஓசூர், தென் மாவட்டங்களில் விமான நிலையம் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதே போல தஞ்சாவூரிலும் விமான நிலையம் அமைப்பதற்கான முதல் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி

    நீலமேகம், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • கழிவுநீர் வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    • பொது இடங்களில் கழிவுநீரை கொட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் கழிவுநீர் வாகனங்களை இயக்கும் வாகன உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆணையர் சரவணகுமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

    தஞ்சை மாநகராட்சிக்கு ட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் நச்சுத்தொட்டி சுத்தம் செய்தல் மற்றும் பராமரித்தலின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனத்தில் அனைத்துவித பாதுகாப்பு இன்சூரன்சு, விபத்து காப்பீடு, பணியாளர் மருத்துவசான்றிதழ், ஓட்டுனர் உரிமம் பயன்பாட்டில் உள்ளவாறு அரசுவிதி களின்படி புதுப்பித்திருக்க வேண்டும்.மாநகராட்சி கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன விவரத்தினை இம்மாநகராட்சியில் கண்டிப்பாக பதிவுசெய்து மாநகராட்சி உரிமம் பெற்றிருக்க வேண்டும். 1 ஆண்டுக்கு ஒருமுறை பதிவுசெய்து தேவையான ஆவணங்களுடன் ரூ.2000 செலுத்தி அதனை வாகனத்தின் முகப்பில் ஒட்டி இருக்க வேண்டும்.

    கழிவுநீரை மாநகராட்சிக்கு சொந்தமான மாரிகுளம் நீருந்து நிலையத்திற்கு கொண்டு சென்று அகற்றிட்டு உரிய ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செல்லாமல் நீர் நிலைகள் மற்றும் இதர பொது இடங்களில் கழிவுநீரை கொட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். கழிவுநீர் வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதால் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது கட்டிடத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு மனிதர்களை பயன்படுத்தாமல் நவீனரக கழிவுநீர் வாகனங்கள் மூலமாக சுத்தம் செய்ய வேண்டும். கட்டிடங்களில் கழிவுநீர் தொட்டி நிறைந்திருந்தாலும் உடனடியாக அவற்றை சுத்தம் செய்து உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றாமல் ஏதேனும் அசாதாரணமான விபத்துகள் நிகழ்ந்தால் அதற்கு அந்த கட்டிட உரிமையாளரே முழு பொறுப்பு ஆகும். அந்த கட்டிட உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும்.

    தவிர அதற்கான நஷ்ட ஈடு இழப்புகள் அனைத்தும் கட்டிட உரிமையாளர்களிடமிருந்தே பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் செயற்பொறியாளர் ஜெகதீசன், மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக விசாரணை அறிக்கை கிடைத்ததும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். #MinisterVijayabaskar #HIVBlood
    சென்னை:

    சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து உறுப்பினர்கள் பேசினார்கள்.

    வி.பி.பரமசிவம் (அ.தி.மு.க.):- 8 மாதம் நிரம்பிய கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட நிகழ்வு இதுபோல் இனி வேறு எங்கும் நடைபெறக் கூடாது. இந்த தவறுக்கு அரசு நிர்வாகம் காரணமா? அல்லது தனிப்பட்ட நபர்களின் கவனக்குறைவு காரணமா? என்னைப் பொறுத்தவரை லேப் டெக்னீசியன் மற்றும் கண்காணிப்பாளரின் குறைபாடுகளால் நடந்திருக்கலாம் என கருதுகிறேன்.

    ஆண்டுக்கு 10 லட்சம் கர்ப்பிணி பெண்களுக்கு ரத்தம் ஏற்றப்படுகிறது. 8 லட்சம் பேர் ரத்த தானம் செய்கிறார்கள். இதில் பரிசோதனை செய்கிற ‘கிட்’டில் குறை இருக்குமோ? என்ற ஐயப்பாடு எழுகிறது. இதே போன்ற ஒரு நிகழ்வு கேரளாவிலும் நடந்துள்ளது.

    இனி வரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    சாத்தூர் ராமச்சந்திரன் (தி.மு.க.):- கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட வி‌ஷயத்தில் எங்கே தவறு நடந்துள்ளது என்பதை அரசு தீவிரமாக ஆராய்ந்து இனி வரும் காலங்களில் தவறு ஏற்படாத அளவுக்கு பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ள வேண்டும்.

    இதில் ரத்தம் கொடுத்த அந்த நபர் மனசாட்சி உள்ளவராகவே தெரிகிறது. ஏனென்றால் அவரே முன் வந்து தனது ரத்தத்தில் எச்.ஐ.வி. உள்ளதாக தனியார் ஆய்வகத்தில் கூறி இருக்கிறார். எனவே எனது ரத்தத்தை வேறு யாருக்கும் செலுத்த வேண்டாம் என்று தானே ஆஸ்பத்திரிக்கு வந்து சொல்லி இருக்கிறார்.

    அதன் பிறகுதான் வி‌ஷயம் வெளியே தெரிய வந்துள்ளது. அவரைப் பற்றிய செய்தியும், படமும் வெளியே வந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். அவருக்கு தகுந்த கவுன்சிலிங் கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் அவர் வி‌ஷம் குடித்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    இப்போது அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் பெற்றெடுக்கும் குழந்தைக்கு எச்.ஐ.வி. வர வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். அது போக போகத்தான் தெரியும்.

    இந்த பெண் வாழ்நாள் முழுவதும் எச்.ஐ.வி. பாதித்த பெண்ணாகதான் இருப்பார். சமுதாயத்தில் அவருக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படும். மற்றவர்கள் வேலை கொடுக்க கூட யோசிப்பார்கள். எனவே அரசு உரிய நிவாரணம் வழங்கி தேவையான மருத்துவ வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

    கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்):- இதில் தவறு செய்ததாக லேப் டெக்னீசியன் உள்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்து கூறியதாவது:-

    கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட வி‌ஷயம் தெரிந்ததும் இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் தீவிரமாக விசாரிக்கப்பட்டனர். அரசு செயலாளர் தலைமையில் விசாரணை மேற்கொண்டோம்.

    அதில், எச்.ஐ.வி. ரத்தம் வழங்கியவர் ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பும் ரத்தம் கொடுத்து இருந்தவர். அவருக்கு எச்.ஐ.வி. இருந்தது தெரிந்தும் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் பெங்களூரில் இருப்பதாக தகவல் தெரிவித்து விட்டார்.

    அதன் பிறகு அவரை தொடர்ந்து கண்காணிக்க முடியாமல் போனதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதில் லேப் டெக்னீசியன் உள்பட 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டிருந்தனர். அதன் பிறகு நிரந்தரமாக இப்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இன்னும் யார் யாரெல்லாம் கண்காணிக்க தவறினார்கள் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் மாதவி தலைமையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    அவர் விரைவில் அறிக்கை தருவார். அதில் தவறு இழைத்தவர்கள் உயர்பதவியில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். டாக்டர்கள், நர்சு என யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.

    தற்போது கர்ப்பிணி பெண்ணுக்கு 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவினர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். இனி இது போன்று தவறு ஏற்படாமல் இருக்க ரத்த பரிசோதனையை துல்லியமாக கண்டுபிடிக்கும் வகையில் ரூ.2 கோடி மதிப்பில் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் புதிய மருத்துவ கருவி நிறுவப்பட்டுள்ளது. அதன் மூலம் ‘ஐ.டி. நாட்’ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.



    மு.க.ஸ்டாலின்:- இதில் கீழ்மட்ட ஊழியர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?

    அமைச்சர் விஜயபாஸ்கர்:- விசாரணை குழுவின் அறிக்கை கிடைத்ததும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். #MinisterVijayabaskar #HIVBlood

    ‘ஸ்கேன்’ மையங்களில் பாலினம் குறித்த தகவல் தெரிவித்து இருப்பதாக உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடந்தது.

    இதில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்துகொண்டு ரூ.1 கோடி 15 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனை பட்டாக்களை 210 பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் 25 பேருக்கு ரூ.1 லட்சத்துக்கான நிதி உதவி வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பேசியதாவது:-

    தமிழ்நாட்டிலேயே திருவள்ளூர் மாவட்டத்தில் குறிப்பாக ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, திருத்தணி போன்ற எல்லைப் பகுதிகளில் பெண் குழந்தைகள் பிறப்பு சதவீதம் குறைவாக உள்ளது. இதற்கு காரணம் பெண் குழந்தைகள் பெற்றுக்கொள்ள தாய்மார்கள் ஆர்வம் காட்டுவது இல்லை என்று தெரிகிறது.

    ஸ்கேன் மையங்களில் பாலினம் குறித்த தகவல் தெரிவித்து விடுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. பணத்துக்கு ஆசைப்பட்டு ‘ஸ்கேன்’ மையங்களில் பாலினம் குறித்த தகவல் தெரிவித்து இருப்பதாக உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாநிலம் முழுவதும் புதிதாக 1 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.

    இத்திட்டத்தின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகமானோருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்க உத்தேசித்து உள்ளோம்.

    ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு முறை முழுமையாக அமலுக்கு வர உள்ளது. இதற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்.

    பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக சணல் மற்றும் துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பேசினார்.

    நிகழ்ச்சியில் விஜயகுமார் எம்.எல்.ஏ., தாசில்தார் இளங்கோவன், துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், துயர் துடைப்பு தாசில்தார் லதா, வட்ட வழங்கல் அலுவலர் ஜெயசிலன், தலைமை எழுத்தர் ரவி கலந்து கொண்டனர்.

    காரைக்குடி பகுதியில் பன்றிக்காய்ச்சலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.
    காரைக்குடி:

    காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 8 மாதமாக மர்ம காய்ச்சல் பரவி ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஆனாலும் நோயின் தாக்கம் இன்னமும் குறைந்தபாடில்லை. எதனால் காய்ச்சல் வந்தது நோய்க்கான பெயர் என்ன அதற்கான சிகிச்சை முறை என்ன என்று மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவிப்பது இல்லை. இதுகுறித்து கேட்டபோது மாவட்ட சுகாதாரத் துறையின் வாய்மொழி உத்தரவு இதற்கு காரணம் இது பற்றி வேறு எதுவும் கருத்து கூற இயலாது என டாக்டர்கள் கூறுகிறார்களாம்.

    இதனால் இதற்கு பெயர் மர்ம காய்ச்சல் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இக்காய்ச்சல் ஓரளவு குறைந்து வரும் நிலையில் தற்போது பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவும் சங்கராபுரம் ஊராட்சி பகுதியிலேயே பரவிவருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இக்காய்ச்சலினால் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் ஏற்பட்டது.

    தற்போது பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் சூழலில் இதற்கான சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் நோயாளியிடமோ அவர்களின் குடும்பத்தாரிடமோ டாக்டர்கள் காய்ச்சல் குறித்து எதுவும் கூற மறுத்து வருகின்றனர். மேலும் இதுகுறித்து கேட்டால் இதற்கு மாவட்ட சுகாதாரத் துறையின் வாய்மொழி உத்தரவு என்று டாக்டர்கள் கூறுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். நோயாளிகளின் நிலைமை மோசமாக இருக்கிற போது அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறும் வாய்மொழி உத்தரவு உள்ளது என தனியார் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் வந்த நோய் என்ன சிகிச்சை முறை என்ன என்பது குறித்து மருத்துவர்கள் யாரும் கூறுவதில்லை. இது மருத்துவ உலக தர்மத்திற்கு எதிரானது என மருத்துவர்களே கூறுகின்றனர்.

    இது குறித்து தி.மு.க. கட்சி சார்பில் தொழிற்சங்க நிர்வாகி மலையரசன் கூறியதாவது:- நோயாளியிடமோ அவர்களது குடும்பத்தினரிடமோ நோயின் தன்மையை அதற்கான சிகிக்சை முறையை கூற மறுப்பது மனித உரிமை மீறல். இது இந்திய தண்டனை சட்டப்படி குற்றமாகும். சுகாதாரத்துறையின் வாய்மொழி உத்தரவு உண்மையானால் அது கண்டிக்கத்தக்கது. ஏழை எளிய மக்களிடம் நற்பெயர் பெற்று உள்ள மாவட்ட கலெக்டர் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளிலும் மாவட்ட சுகாதாரத்துறை ஈடுபடுவது சரியான செயலாகும். இதனை விடுத்து சுகாதாரத் துறை மனித உரிமை மீறலை தொடர்ந்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை தொடர்பாக சோனியா, ராகுல் காந்தியின் வருமான கணக்குகளை மறுமதிப்பீடு செய்ய வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட் இன்று அனுமதி அளித்துள்ளது. #NationalHerald #SoniaITcase #RahulITcase
    புதுடெல்லி:

    அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) என்ற நிறுவனத்திற்கு சொந்தமான நேஷனல் ஹெரால்ட் என்ற பத்திரிகை முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவால் துவக்கப்பட்டது.

    மொத்தம் 1057 பங்குதாரர்களை கொண்ட இந்த நிறுவனத்தின் ரூ.90 லட்சம் முதலீட்டில் ரூ.89 லட்சம் பெரிய மற்றும் சிறிய முதலீட்டாளர்கள் கொடுத்த பணமாகும்.

    பெருத்த நஷ்டத்தை சந்தித்துவந்த இந்த பத்திரிகையின் வெளியீடு 2008ம் வருடம் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த நிறுவனத்திற்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் உண்டு.

    இந்த நிறுவனத்திற்கு உதவி செய்வதாக கூறி காங்கிரஸ் கட்சி  ரூ.90.21 கோடி கடனாக கொடுத்தது. அப்பொழுது காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மோதிலால் வோரா மற்றும் பலர்.

    2010-ம் வருடம் யங் இந்தியன் என்ற ஒரு நிறுவனம் துவங்கப்பட்டது. இதில் 38% சோனியா காந்திக்கும், 38% ராகுல் காந்திக்கும் மீதம் 24% நேரு குடும்பத்திற்கு நெருக்கமான மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னான்டஸ் ஆகியோருக்கும் உரிய பங்காகும்.

    யங் இந்தியன் நிறுவனத்திடமிருந்து காங்கிரஸ் கட்சி வெறும் 50 லட்சம் பெற்றுக்கொண்டு தமக்கு AJL நிறுவனத்திடமிருந்து வர வேண்டிய ரூ. 90.21 கடனை சோனியா காந்தி குடும்பத்தின் யங் இந்தியன் நிறுவனத்திற்கு தாரைவார்த்து கொடுத்தது.

    அதாவது யங் இந்தியன் நிறுவனம் ரூ.50 லட்சம் காங்கிரஸ் கட்சிக்கு செலுத்தி ரூ 90.21 கோடி மதிப்புள்ள வரவேண்டிய கடனை தனக்கு சாதகமாக பெற்றது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் ரூ. 89.71 கோடி சத்தமில்லாமல் சோனியா காந்தி குடும்பத்தின் யங் இந்தியன் நிறுவனத்திற்கு கைமாறியது.

    தனக்கு கொடுக்க வேண்டிய கடனை பங்கு முதலீடாக மாற்றுமாறு யங் இந்தியன் கேட்டதிற்கிணங்க, தனது பங்குதாரர்களை முறைப்படி கலந்து ஆலோசிக்காமல்  AJL நிறுவனம் மேற்கண்ட பணத்தை பங்கு முதலீடாக மாற்றியது.

    இதன்மூலம் AJL என்ற நிறுவனத்தின் 99% பங்குகள் சோனியா காந்தியின் குடும்ப நிறுவனமான யங் இந்தியன் கைக்கு மாறியது.

    2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களை உடைய AJL நிறுவனம் வெறும் 50 லட்சம் ரூபாய் செலவில் சோனியா காந்தியின் குடும்பத்தின் கையில் வந்துள்ளது என்பதை கண்டுபிடித்த பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணிய சாமி இதுதொடர்பாக 2012-ம் வருடம் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரி டெல்லி ஐகோர்ட்டில் சோனியா சார்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியாகி விட்டது. இந்நிலையில், சொத்து கைமாறியதில் ஏற்பட்ட பண மோசடிகளை கண்டுபிடிப்பதற்காக அமலாக்க பிரிவு விசாரணையை துவக்கியது.

    இதற்கிடையில், கடந்த  2011-12 நிதியாண்டில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ஆஸ்கர் பெர்னான்டஸ் ஆகியோரின் வருமானம் தொடர்பான கணக்கு விபரங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்த மேற்கண்டவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

    இதற்கு தடை விதிக்ககோரி டெல்லி ஐகோர்ட்டில் இவர்கள் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், ஏ.கே.சாவ்லா ஆகியோரை கொண்ட அமர்வு 9-10-2018 அன்று உத்தரவிட்டது.



    இதைதொடர்ந்து, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் தடை கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனுவின்மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதிகள் இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததுதானா? என்பது தொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தனர்.

    மேலும், கடந்த 2011-12 ஆண்டுக்கான சோனியா, ராகுல் காந்தியின் வரவு-செலவு கணக்குகளை மறுமதிப்பீடு செய்ய வருமான வரித்துறைக்கு அனுமதி அளித்தனர். எனினும், தற்போது இங்கு விசாரணையில் உள்ள இந்த வழக்கு முடியும்வரை இந்த உத்தரவை அமல்படுத்த கூடாது என்று நிபந்தனையும் விதித்துள்ளனர். #NationalHerald #SoniaITcase #RahulITcase

    டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவான விளக்கம் அளிக்காத சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. #DengueFever #ChennaiCorporation
    சென்னை:

    சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ஓராண்டுக்கு பின் சென்னை மாநகராட்சி சார்பில் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சியின், இந்த காலதாமதத்திற்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்தது.

    பின்னர் நடைபெற்ற விசாரணையின்போது, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்காக கழிவுநீர் அப்புறப்படுத்தப்பட்டதாக கூறினார். கால்வாய்கள் தூர்வாரவும், அதற்காக எந்திரங்கள் வாங்குவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை குறிப்பிட்டார். இதுதவிர பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் கூறினார்.



    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘நிதி ஒதுக்கீடு செய்தது சரிதான், என்ன பணிகள் செய்தீர்கள்? என்பது தெளிவாக தெரியப்படுத்தப்படவில்லை. எனவே, டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து 18ம் தேதிக்குள் தெளிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க நேரிடும்’ என எச்சரித்தனர். மேலும் வழக்கு விசாரணையை 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். #DengueFever #ChennaiCorporation
    நீர்நிலைகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    பொன்னேரி:

    பொன்னேரி வருவாய் கோட்டத்தில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இதை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார்.

    அப்போது, மக்கள் நேரடியாக கலெக்டரிடம் மனு அளித்து, அதற்கான தீர்வுகளை உடனடியாக பெற்று கொள்ள வலியுறுத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட மனுதாரர்கள், தங்களது குறைகளை மனுவாக அளித்தனர்.

    இதில் பெரும்பாலான மனுக்களுக்கு அங்கேயே தீர்வு காணப்பட்டது. மேலும், பயனாளிகளுக்கு பட்டா மற்றும் விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் மகேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தாலோ, நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

    இந்த முகாமில் பொன்னேரி ஆர்.டி.ஓ. நந்தகுமார் தாசில்தார்கள் புகழேந்தி சுரேஷ்குமார், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை தொடர்பான வருமான வரித்துறை நடவடிக்கைக்கு எதிரான ராகுல், சோனியா முறையீட்டு வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது. #NationalHerald #SoniaITcase #RahulITcase
    புதுடெல்லி:

    அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) என்ற நிறுவனத்திற்கு சொந்தமான நேஷனல் ஹெரால்ட் என்ற பத்திரிகை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் துவக்கப்பட்டது.

    மொத்தம் 1057 பங்குதாரர்களை கொண்ட இந்த நிறுவனத்தின் ரூ.90 லட்சம் முதலீட்டில் ரூ.89 லட்சம் பெரிய மற்றும் சிறிய முதலீட்டாளர்கள் கொடுத்த பணமாகும்.
     
    பெருத்த நஷ்டத்தை சந்தித்துவந்த இந்த பத்திரிகையின் வெளியீடு 2008ம் வருடம் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த நிறுவனத்திற்கு சுமார் 2000 கோடி ரூபாய்க்குமேல் பெருமானமுள்ள அசையா சொத்துக்கள் உண்டு.

    இந்த நிறுவனத்திற்கு உதவி செய்வதாக கூறி காங்கிரஸ் கட்சி  ரூ.90.21 கோடி கடனாக கொடுத்தது. அப்பொழுது காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மோதிலால் வோரா மற்றும் பலர்.

    2010-ம் வருடம் யங் இந்தியன் என்ற ஒரு நிறுவனம் துவங்கப்பட்டது. இதில் 38% சோனியா காந்திக்கும், 38% ராகுல் காந்திக்கும் மீதம் 24% நேரு குடும்பத்திற்கு நெருக்கமான மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னான்டஸ் ஆகியோருக்கும் உரிய பங்காகும்.

    காங்கிரஸ் கட்சி யங் இந்தியன் நிறுவனத்திடமிருந்து வெறும் 50 லட்சம் பெற்றுக்கொண்டு தமக்கு AJL நிறுவனத்திடமிருந்து வர வேண்டிய ரூ. 90.21 கடனை சோனியா காந்தி குடும்பத்தின் யங் இந்தியன் நிறுவனத்திற்கு தாரைவார்த்து கொடுத்தது.

    அதாவது யங் இந்தியன் நிறுவனம் ரூ.50 லட்சம் காங்கிரஸ் கட்சிக்கு செலுத்தி ரூ 90.21 கோடி பெருமானமுள்ள வரவேண்டிய கடனை தனக்கு சாதகமாக பெற்றது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் ரூ. 89.71 கோடி சத்தமில்லாமல் சோனியா காந்தி குடும்பத்தின் யங் இந்தியன் நிறுவனத்திற்கு கைமாறியது.

    தனக்கு கொடுக்க வேண்டிய கடனை பங்கு முதலீடாக மாற்றுமாறு யங் இந்தியன் கேட்டதிற்கிணங்க, தனது பங்குதாரர்களை முறைப்படி கலந்து ஆலோசிக்காமல்  AJL நிறுவனம் மேற்கண்ட பணத்தை பங்கு முதலீடாக மாற்றியது.

    இதன்மூலம் AJL என்ற நிறுவனத்தின் 99% பங்குகள் சோனியா காந்தியின் குடும்ப நிறுவனமான யங் இந்தியன் கைக்கு மாறியது.

    ரூ. 2000 கோடி பெருமானமுள்ள அசையா சொத்துக்களை உடைய AJL நிறுவனம் வெறும் ரூ. 50 லட்சம் செலவில் சோனியா காந்தியின் குடும்பத்தின் கையில் வந்துள்ளது என்பதை கண்டுபிடித்த பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணிய சாமி இதுதொடர்பாக 2012-ம் வருடம் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் சோனியா சார்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியாகி விட்டது. இந்நிலையில், சொத்து கைமாறியதில் ஏற்பட்ட பண மோசடிகளை கண்டுபிடிப்பதற்காக அமலாக்க பிரிவு விசாரணையை துவக்கியது.

    கடந்த  2011-12 நிதியாண்டில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ஆஸ்கர் பெர்னான்டஸ் ஆகியோரின் வருமானம் தொடர்பான கணக்கு விபரங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்த மேற்கண்டவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

    இதற்கு தடை விதிக்ககோரி டெல்லி ஐகோர்ட்டில் இவர்கள் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், ஏ.கே.சாவ்லா ஆகியோரை கொண்ட அமர்வு 10-9-2018 அன்று உத்தரவிட்டது.



    இதனைதொடர்ந்து,  சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ஆஸ்கர் பெர்னான்டஸ் சார்பில் வருமான வரித்துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவின்மீது உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னர் தங்களது கருத்தை கேட்க வேண்டும் என வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.அப்துல் நசீர் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் மற்றும் வருமான வரித்துறை தரப்பு வக்கீல்கள் வாதத்துக்காக டிசம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #NationalHerald #SoniaITcase #RahulITcase
    சுகாதார பணிகளை மேற்கொள்ளாத தனியார் சேவை மையத்திற்கு அரசு விதிகளின் கீழ் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கொசு ஒழிப்பு நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகிறார். சுகாதாரத்தை பராமரிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    சுகாதாரத்தை பேண தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    நேற்று காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு இடங்களில் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தி அறிகுறிகள் உள்ளதா என்று ஆய்வுகள் மேற்கொண்டார்.

    அப்போது சுகாதார பணிகளை மேற்கொள்ளாத தனியார் சேவை மையத்திற்கு அரசு விதிகளின் கீழ் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். டெங்கு உற்பத்தி அறிகுறிகளை அழிக்கவும் உத்தரவிட்டார். மாவட்ட கலெக்டருடன் சுகாதார அதிகாரிகள் சென்றனர்.

    பொதுமக்களிடம் ஜாதி, மத ரீதியான பகைமை உணர்வை தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 8.9.2018-ம் தேதி முதல் சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதியை பேணும் பொருட்டும், இரு பிரிவு சமூகத்தைச் சேர்ந்தவர்களும், அவரவர் நிகழ்ச்சிகளை எந்தவித சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படாமல் நடத்தவும் மாவட்டம் முழுவதும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நெறிமுறைகள் வரையறுக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

    சமீபகாலமாக, 14.10.2018-ம் தேதியன்று முதுகுளத்தூர் மற்றும் பார்த்திபனூர் பகுதிகளை சேர்ந்த சில நபர்கள், குறிப்பாக இளைஞர்கள் பிற சமுதாய மக்களை தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசியும், சமூக வலைதளங்களில் காணொளி செய்தியாக வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக, முதுகுளத்தூர் மற்றும் பார்த்திபனூர் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தகாத பதிவுகளை வெளியிட்ட நபர்கள் சட்டப்படி கைது செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    சில வி‌ஷமிகள் செய்யும் தேவையற்ற, சட்டத்திற்கு புறம்பான செயல்களினால் அமைதியாக வசித்து வரும் பல்வேறு சமுதாய மக்களிடையே பிரச்சினை ஏற்பட்டு, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுவதுடன், சட்டம் ஒழுங்கும் பாதிப்படையும் வாய்ப்புள்ளது.

    இதுபோன்று வரும் வதந்திகளை குறுஞ்செய்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.

    மேலும் தவறாக அனுப்பும் குறுஞ்செய்திகளை யாரும் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்றும், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் குழு தலைவர் அந்த செய்திகளையும் அந்த நபரையும் குழுவில் இருந்து நீக்கம் செய்வதுடன் அதுபற்றி காவல் துறைக்கு புகார் செய்ய வேண்டும்.

    இவ்வாறு தவறும் பட்சத்தில் குறுஞ்செய்திகளை பகிர்பவர்கள் மீதும், அந்த குழு தலைவர் மீதும் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் செய்வதற்கு உடந்தையாக இருந்ததாகவும் கருதப்பட்டு அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகின்றது.

    பொதுமக்களிடம் ஜாதி, மத ரீதியான பகைமை உணர்வை தூண்டுவது, பல்வேறு சமுதாய மக்களிடம் நிலவி வரும் ஒற்றுமை மற்றும் பொது அமைதியை சீர்குலைப்பது, சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவது போல் உணர்வை தூண்டுவது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேற்கண்டவாறு அந்த எச்சரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பயிர்கள் கருகவில்லை, வயல்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.
    திருவாரூர்:

    திருவாரூர் சட்டமன்ற தொகுதி வளர்ச்சிக்கான கலந்துரையாடல் கூட்டம் வர்த்தக சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன், முன்னாள் பொதுச்செயலாளர் பிரபாகரன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, நுகர்வோர் அமைப்பின் தலைவர் அண்ணாதுரை, செயலாளர் ரமேஷ். ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பு நிர்வாகி கனகராஜ், தொழிலதிபர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது தொகுதி மேம்பாட்டிற்கு தேவையானவை குறித்து கருத்து தெரிவித்தனர். கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

    திருவாரூர் தொகுதி வளர்ச்சிக்கான கலந்துரையாடல் கூட்டம் உள்நோக்கத்துடன் நடைபெறுவதாக கருத வேண்டாம். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் இல்லாத காரணத்தால் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் என்ற முறையில் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். இங்கு சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து தெரிவித்துள்ளர்கள். அனைத்து தேவைகளும் முதல்-அமைச்சர் ஒப்புதல் பெற்று நிறைவேற்றப் படும்.

    திருவாரூரில் விரைவில் தொழிற்பேட்டை அமைக்கப்படும். திருவாரூர் விளமல் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படும். ஓடம்போக்கி ஆறு தூர்வாரப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பயிர்கள் கருகவில்லை. தற்போது சம்பா விதைப்பு நடைபெற்று வரும் சூழலில் விவசாயிகளுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. வயல்களுக்கு தண்ணீரைகொண்டு செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முதல்-அமைச்சரின்் உத்தரவின்படி எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஓரிரு நாட்களில் தண்ணீர் பிரச்சினை சரியாகி விடும். இவ்வாறு அமைச்சர் கூறினார். 
    ×