search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141057"

    • 3 மணி நேரம் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு செல்போனில் செல்பி எடுத்து கொடுத்தார்.
    • மாணவர்கள் தாங்கள் எடுத்த செல்பி போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சி சார்பில் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் உள்ளிட்டருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

    பின்பு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்ள வந்த நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது மாணவர்கள் கலெக்டரிடம், தங்களது செல்போனை கொண்டு வந்து கொடுத்து செல்பி எடுக்க கூறினர். சற்றும் சளைக்காமல் புன்னகையுடன் 3 மணி நேரம் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு செல்போனில் செல்பி எடுத்து கொடுத்தார்.

    மாணவர்கள் தாங்கள் எடுத்த செல்பி போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சுமார் 3 மணி நேரம் செல்பி எடுத்து மாணவர்களை மகிழ்வித்த கலெக்டர் அருண்தம்புராஜ்க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    • மாணவ- மாணவிகளை கல்வி சுற்றுலா கட்டாயம் அழைத்து செல்ல வேண்டும்.
    • தாங்கள் வசிக்கும் பகுதிகளில் விளையாட்டு பூங்கா வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபராமபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 12 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளை உறுப்பினராக கொண்டு பாலர்சபை கூட்டம் நடத்தப்பட்டது.

    இந்த பாலர் சபையில் சிறப்பு பார்வையாளராக நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கலந்து கொண்டு பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பள்ளி மேம்பாடு, பகுதி வாழ் மேம்பாடு மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து அதற்குண்டான தீர்வுகளை விரைந்து செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    பிரதாபராமபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, செருதூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி, புனித மிக்கெல் அரசினர் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த குழந்தைகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். பள்ளி மேலாண்மை குழுவில் மாணவ பிரதிநிதிகளும் இடம் பெற வேண்டும், பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள், நூலகம் மற்றும் கழிப்பறைகள் வேண்டும் வேண்டும்,

    அரசு போட்டித் தேர்வுகளுக்கு பள்ளியில் பயிற்சி அளிக்க வேண்டும், மாணவ மாணவிகளை கல்வி சுற்றுலா கட்டாயம் அழைத்து செல்ல வேண்டும், தாங்கள் வசிக்கும் பகுதிகளில் விளையாட்டு பூங்கா வேண்டும் போன்ற பல கோரிக்கைகள் குழந்தைகளால் பாலர் சபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இதில் நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ், கிராம ஊராட்சி தலைவர் சிவராசு, துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    • எட்டயபுரம் பாரதி ஆவண காப்பகம் சார்பில் பாரதி விழா நடந்தது.
    • விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    விளாத்திகுளம்:

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் பாரதி மணிமண்டபம் வளாகத்தில் உள்ள பாரதி ஆவண காப்பகம் சார்பில் பாரதி விழா நடந்தது. விழாவிற்கு நாகர்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய இயக்குனர் ஸ்டீபன் தலைமை தாங்கினார்.

    மனோன்மணியம் சுந்தரனார் தமிழியல் துறை தலைவர் (பொறுப்பு) ஜாஸ்மின் சுதா வரவேற்று பேசினார். விழாவில் பாரதியும், சூழலிலும் என்ற தலைப்பில் பேராசிரியர் அப்துல் சமது பேசினார். விழாவில் பல்கலைக்கழக எல்கைகுட்பட்ட அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக தமிழியல் துறை உதவி பேராசிரியர் ஜோதி முருகன் நன்றி கூறினார். இதில் உதவி பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடலாடி அருகே கருப்பு பேட்ஜ் அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.
    • புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே 42 ஆண்டு பழமையான அரசு பள்ளிக்கூடம் உள்ளது. அது தற்போது சேதமடைந்த நலையில் உள்ளது.

    இதனால் மாணவ- மாணவிகள் புதிய கட்டிடம் கட்டித் தரக்கோரி பெற்றோர்களுடன் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு வருகை தந்தனர். வகுப்பறையில் கருப்பு பேஜ் அணிந்து பாடங்களை கற்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடலாடி அருகே ஆதஞ்சேரி கிராமத்தில் மீனவர்கள், கூலி தொழிலாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்த கிரா மத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளி கட்டிடம் கடந்த 42 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டிடம் என்பதால் சேதமடைந்துள்ளது. எனவே தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாணவர்கள் கருதுகின்றனர்.

    பல முறை ேகாரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு வந்தனர். இவர்கள் போராட்டத்துக்கு பெற்றோர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இவர்கள் கோரிக்கையை ஏற்று புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி நடந்தது
    • போட்டியில் பங்குபெற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழிங்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்,

    விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழகம், ஜி.எஸ். இந்து மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜி.எஸ். பாய்ஸ் வாலிபால் கிளப் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது.

    இந்து மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியினை பள்ளியின் செயலர் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். போட்டியில் 15 பள்ளி அணிகள் பங்கு பெற்றனர். இறுதிப் போட்டியில் இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி அணியினரும், ஸ்ரீவில்லிபுத்தூர் குருஞான சம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி அணியினரும் விளையாடினர். இதில் இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி அணி மாணவர்கள் 3-க்கு 2 என்ற கணக்கில் முதலிடம் பெற்று கோப்பையை வென்றனர். குருஞான சம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இராண்டாமிடம் வென்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சபரிநாதன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். போட்டியில் பங்குபெற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழிங்கப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாய்களை விரட்ட அல்ட்ரா சவுண்ட் எழுப்பும் சிறிய பெட்டி ஒன்றை உருவாக்கினர்.
    • நாய் துரத்தும்போது கருவியின் பட்டனை அழுத்தினால் அதில் இருந்து எழும் ஒலி, நாயை விரட்டிவிடும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தெரு நாய்களின் தொல்லை அதிகம். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பலரும் தெருநாய்களால் கடிக்கப்பட்டு காயம் அடைந்துள்ளனர்.

    இதுபோல அலுவலகங்களுக்கு செல்வோர் மற்றும் தொழிலாளிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் விடப்பட்டன.

    இந்த நிலையில் கோழிக்கோட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் படித்து வரும் மாணவன் ஆண்டோ ஜாய் மாணவி பிரார்த்தனா கோஷ் ஆகியோர் தெருநாய்களை துரத்த என்ன செய்யலாம் என ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

    இதன் பலனாக நாயை துரத்தும் கருவி ஒன்றை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டனர்.

    இதற்காக தங்கள் பள்ளியின் ஆசிரியை ஒருவர் துணையுடன் அவர்கள் 45 நாட்களாக ஆய்வு செய்தனர். இதில் அல்ட்ரா சவுண்ட் எழுப்பும் கருவி ஒன்றை உருவாக்கினர். இந்த கருவியில் இருந்து எழும் அல்ட்ரா சவுண்ட்டை கேட்டால் நாய்கள் தெறித்து ஓடுவதை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து நாய்களை விரட்ட அல்ட்ரா சவுண்ட் எழுப்பும் சிறிய பெட்டி ஒன்றை உருவாக்கினர். இதனை பல இடங்களில் அவர்கள் பயன்படுத்தி பார்த்தனர். அதில் நல்ல பலன் கிடைத்தது.

    இந்த கருவியை பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் புத்தக பையில் இணைத்து கொள்ளலாம். நாய் துரத்தும்போது கருவியின் பட்டனை அழுத்தினால் அதில் இருந்து எழும் ஒலி, நாயை விரட்டிவிடும்.

    இந்த கருவியை தேசிய குழந்தைகள் அறிவியல் கண்டுபிடிப்புக்கான கருத்தரங்கில் வெளியிட மாணவர்கள் ஆண்டோ மற்றும் பிரார்த்தனா முடிவு செய்தனர். இதன்மூலம் கருவிக்கான காப்புரிமையை பெறவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    • மாணவர்களால் உருவாக்கப்பட்ட உயர்திறன் தொலைநோக்கி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
    • தொலைநோக்கியின் மூலம் காண வேண்டிய அம்சங்களையும், விளக்கங்களையும் மாணவர்களுக்கு விளக்கினார்.

    சீர்காழி:

    சீர்காழி சுபம் வித்யா மந்திர் பள்ளியில் சாராபாய் விண்வெளி கழகத்தின் சார்பில் அதிநவீன தொலைநோக்கி மூலம் சிறப்பு விண்வெளி காணொளி காட்சி பள்ளியில் இரண்டாவது முறையாக நடைபெற்றது.

    இந்த பள்ளி மாணவ- மாணவிகளால் உருவாக்கப்பட்ட உயர் திறன் தொலைநோக்கி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

    இதன் மூலம் இரவில் அனைவரும் முழு சந்திரனையும் விண்வெளி கோள்கள் மற்றும் கிரகங்களையும் கண்டு வியப்புற்றனர். சங்கத்தின் முதல் கூட்டத்தின் ஒரு அங்கமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சங்கத்தின் வழிகாட்டியும் இஸ்ரோ விஞ்ஞானியுமான இங்கர்சால், தமிழ்நாடு அறிவியல் பேரவை தலைவர் விழிநாதன் மற்றும் ராஜேந்திரன் கலந்து கொண்டு விண்வெளியில் அதிசயங்களையும் தொலைநோக்கின் மூலம் காண வேண்டிய அம்சங்களையும் அதற்கான விளக்கங்களையும் மாணவ -மாணவியர்களுக்கு விளக்கி அவர்களின் சந்தேகங்களை அறிவியல் பூர்வமாக தெளிவுபடுத்தினர்.

    இது போன்ற விண்வெ ளியை, தொலைநோக்கி மூலம் பார்க்கும் நிகழ்வுகள் மாதம் ஒருமுறை விண்வெளியை காணும் உகந்த நேரங்களில் ஏற்பாடு செய்யப்படும் என்று பள்ளியின் தாளாளர் சுதீஷ் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் வித்யா, முதுகலை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக அதிகாரி அன்பழகன் கலந்து கொண்னர்.

    சுபம் வித்யா மந்திர் பள்ளி சாராபாய் விண்வெளி சங்கத்தின் தலைவர் மாணவர் விஷ்வந்த், 9-ம் வகுப்பு மற்றும் மாணவர் மணிகண்டன் ஆகியோர் முதுகலை ஆசிரியர் ரியாஸ் மற்றும் முதுகலை ஆசிரியர் சுப்ரமணியம் ஆகியோரின் வழிகாட்டலில் கழக உறுப்பினர்களை கொண்டு இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

    • மாணவர்களுக்கான தனித்திறன் போட்டி இஸ்லாமியா பள்ளியில் நடக்கிறது.
    • போட்டியில் கலந்து கொள்பவர்களின் பெயர்களை நாளை (11-ந் தேதி)-க்கு முன்னர் 04567-241565, 244588 மற்றும் மின்னஞ்சல்: islamiahmatric@gmail.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.

    கீழக்கரை

    கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம் கூறியதாவது:-

    கீழக்கரை ரோட்டரி சங்கம், இந்தியன் ரெட்கி ராஸ் சொசைட்டி ராமநாத புரம் கிளை மற்றும் கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் நடத்தும் சமத்துவ பொங்கல் திருவிழா இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் வருகிற 13-ந்தேதி மாலை 3 மணியளவில் நடைபெறுகிறது.

    முன்னதாக கீழக்கரை யில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு தனித்திறன் போட்டிகள் 13-ந்தேதி நடைபெறும். 5,6,7-வது வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ஓவியம் வரைதல் போட்டி (தலைப்பு பொங்கல்), 8,9.10-வது வகுப்பு மாணவிகளுக்கு பானை அலங்காரம், 8,9.10 வகுப்பு மாணவர்களுக்கு விவசாயம் காப்போம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெறுகிறது. ஒரு பள்ளிக்கு 2 மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

    பெற்றோர்களுக்கான வினாடி-வினா போட்டியும் நடைபெறும். பெயர்களை நாளை (11-ந் தேதி)-க்கு முன்னர் 04567-241565, 244588 மற்றும் மின்னஞ்சல்: islamiahmatric@gmail.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • துணிச்சலான ஆசிரியர்கள் சிலர் மாணவர்களிடம் பணம் கொடுத்து மாணவர்களை முடித்திருக்கும் கடைக்கு அனுப்பி வைத்து சொந்த செலவில் முடி வெட்ட வைத்துள்ளனர்.
    • தனியார் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவது குறைவாக உள்ளது.

    வேலூர்:

    அரசு பள்ளிகளில் சில மாணவர்கள் சமீபகாலமாக பஸ்களில் படிக்கட்டில் பயணம் செய்வது, வகுப்பறையில் நடனம் ஆடுவது, ஆசிரியர்களை மிரட்டுவது உள்ளிட்ட ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

    மாணவர்கள் முடிவெட்டும்போது, தலைமுடியில் கோடு போடுதல், பாக்ஸ் கட்டிங், ஒன் சைடு, வி கட், ஸ்பைக் என புள்ளிங்கோ மாதிரி வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வருகின்றனர்.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இதுபோன்ற அலங்காரங்களை தவிர்த்து, பள்ளி சூழலுக்கு ஏற்ப மாணவர்கள் சிகை அலங்காரம் செய்யுங்கள் என அறிவுறுத்தப்பட்டது. இது போன்ற மாணவர்களுக்கு முடி அலங்காரம் செய்யக்கூடாது என வேலூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளி திரும்பிய மாணவர்கள் பலர் புள்ளிங்கோ கட்டிங் உடன் பள்ளிக்கு வந்துள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் சிகை அலங்காரம் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுற்றியுள்ள அரசு பள்ளிகளில் வரும் மாணவர்கள் தலைமுடியை வித்தியாசமான கோணத்தில் வெட்டியும் கலர் அடித்தும் வருகின்றனர்.

    அவர்களை பார்த்த அரசு பள்ளி ஆசிரியர்கள் எப்படி அவர்களை கண்டிப்பது அறிவுரை வழங்குவது என திகைத்துப்போய் நிற்கின்றனர்.

    துணிச்சலான ஆசிரியர்கள் சிலர் மாணவர்களிடம் பணம் கொடுத்து மாணவர்களை முடித்திருக்கும் கடைக்கு அனுப்பி வைத்து சொந்த செலவில் முடி வெட்ட வைத்துள்ளனர்.

    தனியார் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவது குறைவாக உள்ளது.

    ஆனால் அரசு பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் வரை இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். தட்டிகேட்கும் ஆசிரியர்களையும் முறைக்கும் அவல நிலையும் உள்ளது.

    மாணவர்களை கண்டிக்க பயந்துபல ஆசிரியர்கள் தங்களுக்கு ஏன் வம்பு என்று இருக்கின்றனர். மேலும் இதுபோல சில மாணவர்களின் செயல்பாட்டால் பல ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

    ஆசிரியர்கள் கண்டிக்க கூடாது, அடிக்க கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ள கல்வித்துறை இப்பேற்பட்ட மாணவர்களை எப்படி கையாள்வது அவர்களை எப்படி திருத்துவது என்பதை ஆசிரியர்களுக்கு போதிக்க வேண்டும்.

    அல்லது சரியான கட்டுப்பாட்டு வழிமுறைகளை கல்வித்துறை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
    • வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து சோதனை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை பாலாஜி தியேட்டர் எதிரே உள்ள சாந்திநகர் விரிவு 2-வது குறுக்கு தெருவில் நேற்றிரவு 9.30 மணியளவில் பயங்கர சத்தம் கேட்டது.

    உடனே அங்கிருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தபோது சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்த பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் வாகனத்தின் கண்ணாடி சேதமடைந்திருந்தது. இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அந்த வாகனத்தின் அருகே கூழாங்கற்கள் சில சிதறி கிடந்தது. வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து சோதனை நடத்தினர். அந்த இடத்தில் கூழாங்கற்கள் மற்றும் பட்டாசு வெடிமருந்தை தவிர வேறு எதுவும் இல்லாததால் வெடிக்கப்பட்டது நாட்டு வெடிகுண்டா என்பதில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை சோதனையிட்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்த 8 கேமராக்களை சோதனையிட்டதில் 6 சிறுவர்கள் வெடிகுண்டு வெடித்த சில நிமிடங்களில் வேகமாக ஓடுவதும், சிறிது தூரம் சென்று நடந்து சென்றதும் பதிவாகி இருந்தது.

    இதனையடுத்து அந்த கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவான 6 சிறுவர்களின் அடையாளங்களை கொண்டு போலீசார் கோவிந்தசாலை, திடீர் நகர் உள்ளிட்ட இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இறுதியில் அவர்கள், கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்களில் 4 பேரை போலீசார் நேற்று இரவே மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்பது தெரியவந்தது. வீட்டில் தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகள் மீதம் இருந்தபோது, அதை வேறு விதத்தில் எப்படி பயன்படுத்தலாம் என யூடியூப் பார்த்துள்ளனர்.

    அதில் சிறிய ரக வெடிகுண்டு தயாரிக்கலாம் என வந்துள்ளது. உடனே அதை பார்த்து அதில் கூழாங்கற்கள், வெடிமருந்து, துணிகள் சுற்றி 2 வெடிகுண்டுகளை தயாரித்துள்ளனர். ஒரு வெடிகுண்டை அவர்கள் வீசி பார்த்தபோது சத்தம் வராமல் வெளிச்சம் மட்டும் வந்துள்ளது. மற்றோரு வெடிகுண்டை வீசியபோது தான் சத்தத்துடன் வெடித்துள்ளது.

    இதனையடுத்து 4 பேரையும் போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மேலும் 2 சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
    • வகுப்பறையில் பயிலும் மாணவர்களிடம் படிப்பு சம்பந்தமாக கலந்துரையாடினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றியம், இளையாளூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.12 இலட்சம் செலவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சைக்கிள் நிறுத்தும் கூடம் கட்டும் பணியும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.70 இலட்சம் செலவில் இ.ஏ.ஹச் நகரில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், பள்ளிக் கட்டடங்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.17.32 இலட்சம் செலவில் அகரங்குடி ஊராட்சி ஒன்றிய உதவிபெறும் பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டி முடிவு பெற்றதை பார்வையிட்டு வகுப்பறையில் பயிலும் மாணவர்களிடம் படிப்பு சம்பந்தமாக கலந்துரையாடல் செய்தனர்.

    15-வது மானிய நிதி குழுத் திட்டத்தின் கீழ் (வி.பி.) ரூ.7.25 இலட்சம் செலவில் அகரங்குடி ஊராட்சி காயித மில்லத் தெருவில் தார்சாலை அமைக்கும் பணியினையும், அரங்கக்குடியில் ஊரா ட்சி ஒன்றிய உதவிபெறும் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை சாப்பிட்டு ஆய்வு செய்தும், பள்ளிக் கட்டடங்கள் மேம்பாட்டுத் திட்டங்கள் (2021-2022) திட்டத்தின் கீழ் ரூ.94 ஆயிரம் செலவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டடம் பழுது பார்க்கும் பணி என பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும், துரிதமாகவும் முடிக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது செம்பனார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி துணை அலுவலர் ஜனகர், ஊராட்சி மன்ற தலைவர் சுக்ரியா பர்வீன் தமிமுல் அன்சாரி, சம்பந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவிலான 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான ஹாக்கி போட்டியில் முதலிடம் பிடித்து தகுதி பெற்றனர்.
    • சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஹாக்கி வீரர்கள் மயிலாடுதுறை வருவாய் மாவட்டத்திற்காக கலந்து கொள்ள இருக்கின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான மாநில ஹாக்கி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    சென்ற மாதம் மயிலாடுதுறையில் நடைபெற்ற மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவிலான 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான ஹாக்கி போட்டியில் முதலிடம் பிடித்து தகுதி பெற்றனர்.

    தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள டான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 17 வயது உட்பட்ட பிரிவு மாணவர்களுக்கான மாநில குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

    இந்த விளையாட்டுப் போட்டியில் 38 மாவட்ட அணிகளும் மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) அணியும் ஆக 39 அணிகள் பங்கு பெற உள்ளது.

    இந்த மாநில அளவிலான குழு விளையாட்டு போட்டியில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஹாக்கி வீரர்கள் மயிலாடுதுறை வருவாய் மாவட்டத்திற்காக கலந்து கொள்ள இருக்கின்றனர்.

    இச்சாதனை புரிந்த புரிந்த மாணவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர்.முரளிதரன், உடற்கல்வி ஆசிரியர்கள்.முரளி, .மார்கண்டன், .சக்திவேல், ஹரிஹரன், ராகேஷ் ஆகியோர்களை பள்ளியின் முன்னாள் செயலர்.பாலசுப்பிரமணியன், பள்ளியின் செயலர் .இராமகிருஷ்ணன், பள்ளியின் குழு தலைவர் சொக்கலிங்கம், பள்ளி தலைமையாசிரியர் .அறிவுடைநம்பி, உதவி தலைமை ஆசிரியர்கள்.

    துளசிரங்கன், .வரதராஜன், பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பாராட்டி வழி அனுப்பி வைத்தனர்.

    ×