search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 152272"

    • கணவருடன் தகராறு செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் பி.டி. ராஜன் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது30). இவரது மனைவி அம்சவள்ளி (26). திருமண மாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 2 வயதில் மகன் உள்ளார்.

    பால்பாண்டி கோவை யில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவன்-மனைவி இருவரும் திருமங்கலத்தில் உள்ள பால்பாண்டியின் பெற்றோர் வீட்டிற்கு வந்த னர். பின்னர் மனைவியை தனது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு பால்பாண்டி மட்டும் கோவைக்கு சென்று விட்டார்.

    இந்தநிலையில் சம்பவ த்தன்று சமயநல்லூரில் நடந்த உறவினர் நிகழ்ச்சி யில் பால்பாண்டி தனது மனைவியுன் கலந்து கொண்டார். அங்கு பால்பாண்டி, அம்சவள்ளிக்கும் தகராறு ஏற்பட்டது.

    அப்போது பால்பாண்டி மனைவியை திட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அம்சவள்ளி பாதியிலேயே அங்கிருந்து சென்றுவிட்டார். திருமங்கலம் வந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். திருமங்கலம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

    • மிளகாய் பொடியை தூவி இளம்பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
    • கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி விட்டனர்.

    காரியாபட்டி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள சிறுவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகள் குருதேவியை (வயது 19) மதுரை செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

    அ.முக்குளம் அருகே புல்வாய்க்கரை மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது பின்னால் மோட்டர் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் நரிக்குடிக்கு எந்த வழியாக செல்ல வேண்டும்? என்று கேட்டனர்.

    இதற்கு கார்த்திக் நீங்கள் வந்த வழியாகவே செல்லுங்கள் என்று கூறினார். அப்போது மர்ம நபர்கள் திடீரென்று கையில் வைத்திருந்த மிளகாய்பொடியை கார்த்திக் மற்றும் குருதேவி மீது தூவினர்.

    இதில் நிலைகுலைந்த குருதேவியின் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி விட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

    • சித்தோடு அருகே வயிற்று வலி குணமாகவில்லை என கூறி வாழ்க்கையில் வெறுப்படைந்த இளம்பெண் டீயில் எலி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சித்தோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த சக்தி மூவேந்தர் நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சோபனா (37). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சரவணன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் சோபனாவுக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் வயிற்றுவலி குணமாகவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சோபனா தற்கொலை செய்ய முடிவு எடுத்து சம்பவத்தன்று டீயில் எலி மருந்தை கலந்து குடித்துள்ளார்.

    இதையடுத்து சோபனாவை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் அவர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

    அதன் பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சோபனா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார்.
    • குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு கணவரின் தம்பியுடன் ஓடிய இளம் பெண்ணை தேடி வருகிறார்கள்.

    கோவை:

    மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இவர்கள் குடும்பத்துடன் ஆர்.எஸ்.புரத்தில் வசித்து வருகின்றனர். இளம் பெண்ணின் கணவர் உணவு சமைத்து அந்த பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வரும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அந்தப் பகுதியில் வசித்து வந்த கணவரின் தம்பி உடன் பழக்கம் ஏற்பட்டது நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

    2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று இளம் பெண்ணின் கணவர் வெளியே சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த இளம்பெண் மாயமாகி இருந்தார். அக்கம்பக்கத்தில் தேடியபோது இளம்பெண் தனது தம்பியுடன் ஓடியது தெரிய வந்தது.

    இதுகுறித்து அவர் ஆர்எஸ் புரம் போலீசில் புகார் செய்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு கணவரின் தம்பியுடன் ஓடிய இளம் பெண்ணை தேடி வருகிறார்கள்.

    • இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது புகார் வந்துள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வாலிபரை தேடி வருகின்றனர்.

     விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பகுதியை சேர்ந்த இளம்பெண் பிளஸ்-1 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். அவரும், முத்து லட்சுமி என்ற பெண்ணும் தோழிகளாக பழகி வந்தனர்.

    இதனால் இளம்பெண் அடிக்கடி தோழி முத்துலட்சுமி வீட்டுக்குச் சென்று வருவார். அப்போது முத்துலட்சுமியின் அண்ணன் தலைமலை என்பவரும், இளம் பெண்ணும் நட்பாக பழகி வந்துள்ளனர். இந்த நட்பு காதலாக மாறியது.

    கடந்த ஏப்ரல் 15-ந் தேதி இளம் பெண் வீட்டுக்குச் சென்றபோது தலைமலை அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்தார். இதில் இளம் பெண் கர்ப்பமானார்.

    இதுபற்றி பெற்றோருக்கு தெரியவந்ததால் இளம்பெண் கடந்த 16-ந் தேதி குருணை மருந்தை(விஷம்) குடித்து விட்டார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண்அருப்புக் கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் தலைமலை மீது புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தலைமலையை தேடி வருகின்றனர்.

    • கணவருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
    • போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கன்னியாகுமரி, ஜூன்.17-

    அருமனையை அடுத்த அண்டுகோடு, ஈந்திகாலை பகுதியை சேர்ந்தவர் கிஷோர். கார் டிரைவர்.

    இவரது மனைவி சகி (வயது 42). இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். மனைவியின் நடத்தையில் கிஷோருக்கு சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சகியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சகி, தனது மகளுடன் வீட்டில் உள்ள ஒருஅறையில் தனியாக படுப்பது வழக்கம்.

    வழக்கம் போல நேற்றிரவும் சகி வீட்டில் உள்ள தனி அறையில் படுக்க சென்றார். அவருடன் மகளும் தூங்கினார். இன்று அதிகாலை இவர்களின் அறையில் இருந்து கரும்புகை வந்தது.

    அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி சென்றனர். வீட்டின் கதவை திறந்து பார்த்த போது அங்கு சகி தீயில் கருகி பிணமாக கிடந்தார்.

    சகியின் மகள் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதற்கிடையே சம்பவம் பற்றி அப்பகுதி மக்கள் அருமனை போலீசாருக்கு தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சகியின் சாவுக்கு காரணம் என்ன? அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    • குழந்தைகளுடன் இளம்பெண் மாயமானார்.
    • கடந்த 13-ந் தேதி மதியம் 2 குழந்தைகளுடன் வெளியே சென்ற நிர்மலா, அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.

    மதுரை

    மதுரை பெத்தானி யாபுரம், அண்ணா மெயின் வீதி, இந்திரா தெருவை சேர்ந்தவ் கனகராஜ். இவரது மனைவி நிர்மலா (வயது 26). இவர்களுக்கு 5 வயதில் கவிப்பிரியா என்ற மகளும், 2 வயதில் அக்சயன் என்ற மகனும் உள்ளனர்.

    கடந்த 13-ந் தேதி மதியம் 2 குழந்தைகளுடன் வெளியே சென்ற நிர்மலா, அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து நிர்மலாவின் தந்தை கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் தாரணி (வயது21). இவர் தனது பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 13-ந் தேதி தாரணி யாரிடமும் சொல்லாமல் மாயமாகிவிட்டார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து தாரணியின் தந்தை சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பொதுமக்கள் தங்களது கோரிக்கை சம்பந்தமான மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர்.
    • 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் திடீரென நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

    கோவை:

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. பொதுமக்கள் தங்களது கோரிக்கை சம்பந்தமான மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர்.

    இந்த நிலையில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் திடீரென நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெண்ணிடம் விசாரணை நடத்தினார். அப்போது, அவர் கூறியதாவது:-

    எனது பெயர் கவுரி(வயது30). நரசிம்ம நாயக்கன் பாளையத்தில் வசித்து வருகிறேன். கடந்த ஆண்டு பாலாஜி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில் பாலாஜிக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது சிறிது காலத்திற்கு முன்பு தான் எனக்கு தெரிய வந்தது. என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    கோவை மாவட்ட சூப்பிரண்டு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவரை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவர் கலெக்டரிடம் மனு அளித்தார்.

    • எந்தவிதமான ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாக தங்கி இருப்பது தெரியவந்தது.
    • சென்னை புழல் சிறையில் அடைக்க அந்தப் பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணர் பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் உத்தரவின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கள்ளக்கிணர் மேற்கு தெருவில் இளவரசன் என்பவரது வீட்டில் தங்கி இருந்த வங்கதேசம், டாக்கா நகரைச் சேர்ந்த முகமது சபோலா என்பவரது மகள் சுமி என்கிற லீமா பேகம்(வயது 20) என்பவரை பிடித்து விசாரித்தபோது அவர் எந்தவிதமான ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாக தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை புழல் சிறையில் அடைக்க அந்தப் பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • புகைப்படம் எடுப்பதில் மோகம்
    • போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

     கோவை:

    கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகள் அனுசியா (வயது 19). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    அனுசியாவிற்கு புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம். அதற்காக இயற்கை அழகுகளை, தனது நண்பர்களை புகைப்படம் எடுத்து கொடுப்பார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுசியா தான் புகைப்படம் எடுப்பதற்காக நண்பர்களிடம் உதவி கேட்டதாக தெரிகிறது.

    இதனை அவரது தந்தை கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். சம்பவத்தன்று அனுசியா மீண்டும் நண்பர்களிடம் புகைப்படம் எடுப்பது குறித்து பேசினார். இதனை அறிந்த அவரது பெற்றோர் அவருக்கு அறிவுரை கூறி கண்டித்தனர்.

    இதனால் விரக்தி அடைந்த அனுசியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி அருகே இளம்பெண் மாயமானார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த மன்னாய்க்கன்பட்டி பகுதியை சேர்ந்த செல்லமுத்து மகள் கோமதி (வயது 19).நேற்று முன்தினம் காலை பால் சொசைட்டிக்கு பால் ஊற்ற செல்வதாக தெரிவித்து சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் தோழிகள் வீடுகளில் தேடியும் கிடைக்காத நிலையில், தனது மகளை கண்டுபிடித்து தருமாறு கோமதியின் தந்தை செல்லமுத்து வாழப்பாடி போலீஸில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 2 கல்லூரி மாணவிகள்- இளம்பெண் திடீர் மாயமானார்கள்.
    • சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் மாயமாவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் ஒரே நாளில் 3 பெண்கள் மாயமானது தொடர்பாக புகார்கள் வந்துள்ளன. அதன் விவரம் வருமாறு.

    சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் தேவாங்கர் தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் மாலதி (வயது 20). இவர் சிவகாசியில் உள்ள அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதனால் பதற்றமடைந்த பெற்றோர் கல்லூரிக்கு சென்று பார்த்தனர். ஆனால் அங்கு அவர் வரவில்லை என தெரியவந்தது. இதையடுத்து மாலதியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் பலன் இல்லை. இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி விஜயலட்சுமி காலனியைச் சேர்ந்தவர் சீமா. இவரது மகள் மாரீஸ்வரி (20). இவர் ஆலங்குளம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாரீஸ்வரி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இதுகுறித்த புகாரின்பே ரில் ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெ க்டர் சுந்தரபா ண்டியன் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்.

    தாயில்பட்டி அருகே உள்ள பேர்நாயக்கன்பட்டி முத்தாலம்மன் நகரை சேர்ந்தவர் மாரியப்பன்‌ இவரது மகள் முருக லட்சுமி (19). இவர் கோமாளிபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற முருக லட்சுமி மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×