search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து"

    • இங்கிலாந்து தனது எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கும் தருணம் இது.
    • தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல தயாராக இருக்கிறோம்.

    இங்கிலாந்தில் வரும் ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். அவர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பொதுத் தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    இதுகுறித்து பிரதமர் ரிஷி சுனக் கூறும்போது, "பாராளுமன்றத்தை கலைக்க இங்கிலாந்து மன்னர் சார்லசிடம் கோரினேன். இந்த கோரிக்கையை மன்னர் ஏற்றுக்கொண்டார். ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தலை நடத்துவோம். இங்கிலாந்து தனது எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கும் தருணம் இது" என்றார்.

    இங்கிலாந்தில் 2025-ம் ஆண்டு ஜனவரிக்குள் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும். இது தொடர்பாக பிரதமர் ரிஷி சுனக் 2024-ம் ஆண்டு பிற்பகுதியில் தேர்தல் நடைபெறும் என்று கூறிவந்தார். இதற்கிடையே தேர்தல் தேதி வெளியாகி உள்ளது. 

    இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின் பிரதமராக பொறுப்பேற்றார். ரிஷி சுனக், பிரதமராக முதல் முறையாக சந்திக்கும் தேர்தல் இதுவாகும். 2016-ம் ஆண்டு பிரெக்சிட் வாக்கெடுப்புக்குப் பின்னர் நடைபெற உள்ள 3-வது பொதுத் தேர்தலாகும்.

    இதனிடையே எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தேர்தலுக்கு எப்போதும் தயாராக இருப்பதாக கூறியிருந்தது.

    இது தொடர்பாக தொழிலாளர் கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, "தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல தயாராக இருக்கிறோம். எங்களிடம் ஒரு முழுமையான ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரக்குழு தயாராக உள்ளது. நாடு தற்போது பொதுத் தேர்தல் வேண்டும் என்று விரும்புகிறது என்று நாங்கள் நினைக்கிறோம்" என்றார்.

    • இந்திய பெண்னை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபரை கைது செய்தனர்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இங்கிலாந்தில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா முகே (வயது 66). இவர் தேசிய சுகாதார சேவையில் மருத்துவ செயலாளராக பகுதி நேரமாக பணியாற்றி வந்தார்.

    இவர் வடமேற்கு லண்டனில் உள்ள எட்க்வேர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் திடீரென்று கத்தியால் அனிதாவை சரமாரியாக குத்தினார். மார்பு, கழுத்து ஆகிய பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்ட அனிதா பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்திய பெண்னை கத்தியால் குத்திக் கொன்ற வாலிபரை கைது செய்தனர். அவர் 22 வயதான ஜலால் டெபெல்லா என்பது தெரிய வந்தது.

    அவர் மீது கொலை மற்றும் தாக்குதல் ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் எதற்காக இந்திய பெண்ணை கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அனிதா முகேவின் குடும்பத்தினர் கூறும்போது, அனிதா முகே தனது குடும்பத்திற்காக அர்ப்பணிப்புடன் இருந்தார். அவரது மரணம் எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது என்றனர்.

    • கவுன்சிலர்களை தேர்வு செய்ய உள்ளாட்சி தேர்தல் நடந்தது.
    • உள்ளாட்சித் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது.

    இங்கிலாந்தில் சமீபத்தில் கவுன்சிலர்களை தேர்வு செய்ய உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லண்டன் மேயர் தேர்தலில் தொழிலாளர் கட்சியின் சாதிக் கான் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். ஆளும் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் சூசன் ஹாலை 11 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சுயேட்ச்சையாக போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தருண் குலாட்டியும் தோல்வியை சந்தித்தார்.

    அதேபோல் இங்கிலாந்து உள்ளாட்சித் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது. அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. பல இடங்களில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.மேலும் இங்கிலாந்தின் வடமேற்கில் உள்ள பிளாக்பூல் சவுத் பாராளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது.

    • டி20 உலகக் கோப்பை தொடரின் மூலம் ரி என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
    • பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் துவங்குகிறது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இணைந்து நடத்தும் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஜாஸ் பட்லர் கேப்டனாக செயல்பட இருக்கிறார்.

    இவருடன் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பில் சால்ட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோரும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் உள்ள ஜோஃப்ரா ஆர்ச்சர் டி20 உலகக் கோப்பை தொடரின் மூலம் ரி என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

     


    2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி:

    ஜாஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, ஹாரி புரூக், சாம் கர்ரன், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், க்ரிஸ் ஜார்டன், லியம் லிவிங்ஸ்டன், ஆதில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டாப்லி மற்றும் மார்க் வுட்

    உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் மே 22 ஆம் தேதி துவங்கி மே 30 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி தனது முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை ஜூன் 4 ஆம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது.

    • கேள்விகளுக்கு வரும் நாட்களில் முடிவு தெளிவாகி விடும்.
    • உலகக் கோப்பை தொடருக்கான டி20 அணியை அறிவித்து வருகின்றன.

    இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. லீக் சுற்று போட்டிகளை தொடர்ந்து எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற போகின்றன என்ற கேள்விகளுக்கு வரும் நாட்களில் முடிவு தெளிவாகி விடும்.

    இந்த நிலையில், ஐ.பி.எல். பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் யாரும் விளையாட மாட்டார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. வருகிற ஜூன் மாதம் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருப்பதை ஒட்டி ஒவ்வொரு அணியும் உலகக் கோப்பை தொடருக்கான டி20 அணியை அறிவித்து வருகின்றன.

    இதையொட்டியே இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ஐ.பி.எல். தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய அறிவிப்பு காரணமாக ஐ.பி.எல். அணிகள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

    • இங்கிலாந்து நாட்டு பணத்தின் தாள்களான 5,10,20 மற்றும் 50 பவுண்டுகளில் மன்னரின் படம் அச்சிடப்பட்டுள்ளன.
    • மறைந்த ராணி எலிசபெத் படத்துடன் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பண நோட்டுகளுக்கு பாதிப்பு இருக்காது.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைந்த பிறகு மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக பொறுப்பேற்றார். இதனிடையே மன்னர் சார்லசின் படத்துடன் இங்கிலாந்து பணமான பவுண்டு வெளியாகும் என இங்கிலாந்து வங்கி அறிவித்தது.

    இந்தநிலையில் மன்னர் சார்லஸ் படத்துடன் கூடிய இங்கிலாந்து நாட்டின் பவுண்டு தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன. இங்கிலாந்து வங்கியின் கவர்னர் ஆண்ட்ரூ பெய்லி பக்கிங்காம் அரண்மனைக்கு நேரடியாக சென்று மன்னர் சார்லசிடம் அதனை காட்டி ஒப்புதலை பெற்றார்.

    இங்கிலாந்து நாட்டு பணத்தின் தாள்களான 5,10,20 மற்றும் 50 பவுண்டுகளில் மன்னரின் படம் அச்சிடப்பட்டுள்ளன. வரும் ஜூன் மாதம் முதல் புழக்கத்திற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மறைந்த ராணி எலிசபெத் படத்துடன் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பண நோட்டுகளுக்கு பாதிப்பு இருக்காது எனவும் தெரிவித்துள்ளனர்.

    • 2012-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் எந்த டெஸ்ட் தொடரையும் இந்திய அணி இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
    • விராட் கோலி இத்தொடரில் விளையாடாததற்கு இங்கிலாந்து ரசிகர்கள் நன்றி தெரிவிப்பார்கள் என அந்த அணியின் ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

    இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது.

    2012-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் எந்த டெஸ்ட் தொடரையும் இந்திய அணி இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

    முன்னதாக இந்த தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விலகினார். சொல்லப்போனால் தன்னுடைய 12 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு முழுமையான தொடரில் விராட் கோலி விளையாடாமல் விலகியது இதுவே முதல் முறையாகும். ஆனால் ஜெய்ஸ்வால், துருவ் ஜுரேல் போன்ற இளம் வீரர்களே அவர் இல்லாத குறை தெரியாத அளவுக்கு சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைத்துள்ளனர்.

    இந்நிலையில் விராட் கோலி இத்தொடரில் விளையாடாதது குறித்து இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பேசியுள்ளார்.

    அதில், "விராட் கோலி இந்த தொடரில் விளையாடாமல் சென்றதற்கு இங்கிலாந்து ரசிகர்கள் நன்றி தெரிவிப்பார்கள் என்று கணிக்கிறேன். ஏனெனில் அவர் அந்தளவுக்கு தரமானவர். ஆனால் எங்களுடைய கண்ணோட்டத்தில் நீங்கள் எப்போதும் சிறந்தவர்களுக்கு எதிராக உங்களுடைய திறமையை சோதிக்க விரும்புவீர்கள். அந்த வகையில் பல ஆண்டுகளாக அவருக்கு எதிராக பந்து வீசுவது எனக்கு கடினமாக இருந்தது. அப்படிப்பட்ட அவரை இத்தொடரில் எதிர்கொள்ள முடியாமல் போனது அவமானம்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • கிரிக்கெட் பற்றிய துருவ் ஜுரலின் அணுகுமுறையும் ஆட்டத்தின் போக்கைக் கணித்து ஷாட்களை விளையாடுவது ஆச்சரியமாக உள்ளது
    • இவரைப் பார்க்கும் போது அடுத்த எம்.எஸ். தோனி உருவாவது போல் தோன்றுகிறது

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. அதில் 307 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் துரூவ் ஜுரல் 90 ரன்கள் சேர்த்துத் தடுமாறிய இந்திய அணியை ஓர் அளவிற்கு ரன்கள் சேர்க்க உதவினார். இந்த அசத்தலான ஆட்டத்தின் மூலம் துருவ் ஜுரல் தனது முதல் டெஸ்ட் அரைச்சதத்தைப் பதிவு செய்தார்.

    இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துத் தடுமாறி இருந்த போது தான் துருவ் ஜுரல் களத்திற்கு வந்து, இந்திய அணியை ஓர் நல்ல ரன்களை எடுக்க உதவியாக இருந்தார்.

    துருவ் ஜுரலின் இந்த ஆட்டத்தை பார்த்து வியந்த சுனில் கவாஸ்கர் அவரை முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனியோடு ஒப்பிட்டுப் பாராட்டி உள்ளார்.

    இது குறித்து பேசிய கவாஸ்கர், "கிரிக்கெட் பற்றிய துருவ் ஜுரலின் அணுகுமுறையும் ஆட்டத்தின் போக்கைக் கணித்து ஷாட்களை விளையாடுவது ஆச்சரியமாக உள்ளது. இவரைப் பார்க்கும் போது அடுத்த எம்.எஸ். தோனி உருவாவது போல் தோன்றுகிறது" இவ்வாறு சுனில் கவாஸ்கர் துருவ் ஜுரலை பாராட்டியுள்ளார்.

    • இந்திய அணி வெற்றி பெற 192 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இங்கிலாந்து அணி.
    • இந்திய அணி 3-ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது.

    ராஞ்சி:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய துருவ் ஜுரல் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லி 3 விக்கெட்டும், ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கிராலி 60 ரன்கள் அடித்தார்.

    இந்திய அணி சார்பில் அஷ்வின் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், , ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்திய அணி வெற்றி பெற 192 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இங்கிலாந்து அணி. பின்னர் 2வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 3-ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 24 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    • தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழந்தது
    • இப்போட்டியின் மூலம் இந்திய மண்ணில் 354* டெஸ்ட் விக்கெட்டுகளை அஷ்வின் கைப்பற்றியுள்ளனர்.

    ராஞ்சி:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் தங்கள் விக்கெட்டுகளை இழந்ததால், இந்திய அணி திணறியது.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிதானமாக ஆடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய துருவ் ஜுரல் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லி 3, ஆண்டர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கிராலி 60 ரன்கள் அடித்தார்.

    இந்திய அணி சார்பில் அஷ்வின் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், , ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ரவிசந்திரன் அஷ்வின். இப்போட்டியின் மூலம் இந்திய மண்ணில் 354* டெஸ்ட் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளனர்.

    • இந்திய மண்ணில் 354* டெஸ்ட் விக்கெட்டுகளை அஷ்வின் கைப்பற்றியுள்ளனர்.
    • இந்திய மண்ணில், அனில் கும்ப்ளே 350 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

    இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ரவிசந்திரன் அஷ்வின்.

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் அஷ்வின் 4 விக்கெட் எடுத்துள்ளார். இதன் மூலம் இந்திய மண்ணில் 354* டெஸ்ட் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளனர்.

    இதுவரை இந்திய மண்ணில், அனில் கும்ப்ளே 350 விக்கெட்டுகளும் ஹர்பஜன் சிங் - 265 விக்கெட்டுகளும் கபில் தேவ் -219 விக்கெட்டுகளும் ஜடேஜா - 211* விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர். 

    அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற இமாலய சாதனையை அஷ்வின் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டெஸ்ட் தொடரில் 7 இன்னிங்சில் விளையாடிய ஜெய்ஸ்வால் 618 ரன்கள் அடித்துள்ளார்.
    • டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஜெய்ஸ்வால் இதுவரை 934 ரன்கள் அடித்துள்ளார்.

    5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில், 600 ரன்களை கடந்து இளம் வீரர் ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார். ராஞ்சியில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் இச்சாதனையை அவர் படைத்துள்ளார்.

    இந்த டெஸ்ட் தொடரில் 7 இன்னிங்சில் விளையாடிய ஜெய்ஸ்வால் 618 ரன்கள் அடித்துள்ளார். இதில் 2 அரை சதம் மற்றும் 2 இரட்டை சதமும் அடங்கும்

    சுனில் கவாஸ்கர், திலிப் தர்தேசாய், ராகுல் டிராவிட் வீராட் கோலிக்கு அடுத்தபடியாக 5-வது இந்திய வீரராக இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

    1971-ம் ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுனில் கவாஸ்கர், 4 சதங்கள், 3 அரை சதங்களுடன் 774 ரன்கள் குவித்ததே இதுவரை தனிப்பட்ட இந்திய வீரரின் சாதனையாக உள்ளது. இதனை முறியடிக்க ஜெய்ஸ்வாலுக்கு 156 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

    மேலும், டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஜெய்ஸ்வால் இதுவரை 934 ரன்கள் அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை அடிப்பதற்கு அவருக்கு 66 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

    ×