search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி"

    • ஆதார் கார்டுக்கு பதிய போட்டோ எடுக்கும்போது ஒரு சிறுமி அழகழகாக போஸ் கொடுக்கும் வீடியோ இணையத்தையே கலக்கி வருகிறது.
    • மற்ற நடைமுறைகள் அனைத்தும் முடிந்த பிறகு போட்டோ எடுக்க அந்த சிறுமியை கேமரா முன்னர் நிற்க வைத்துள்ளனர்.

    இந்தியர்களின் அத்தியாவசிய அடையாள அட்டையாக மாறிப்போன ஆதார் கார்டு போட்டோ நன்றாக இல்லை என்ற கவலை பலருக்கு உண்டு. இருட்டடித்த போட்டோக்களும், நேரில் இருக்கும் மனிதர்க்கு சுத்தமாக சம்பந்தமாக இல்லாத வகையில் ஆதார் கார்டில் அவரது போட்டோ உள்ளது என்ற அபிப்பிராயங்கள் பரவலாக உள்ளன.

    இந்நிலையில் ஆதார் கார்டுக்கு பதிய போட்டோ எடுக்கும்போது ஒரு சிறுமி அழகழகாக போஸ் கொடுக்கும் வீடியோ இணையத்தையே கலக்கி வருகிறது. முதல் முதலாக அந்த சிறுமிக்கு ஆதார் கார்டு பதிய ஆதார் சேவை மையத்துக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

    அங்கு மற்ற நடைமுறைகள் அனைத்தும் முடிந்த பிறகு ஆதார் கார்டுக்கு போட்டோ எடுக்க அந்த சிறுமியை கேமரா முன்னர் நிற்க வைத்துள்ளனர். அப்போது தனது கன்னத்தில் கை வைத்தும் பல வழிகளில் அந்த சிறுமி உற்சாகமாக போஸ் கொடுத்த்து அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார். இந்த வீடியோ இஸ்டாகிராமில் 18  மில்லயன் பார்வைகளைத் தாண்டி கலக்கி  வருகிறது.

    • எடியூரப்பா மீது சிஐடி போலீசார் நேற்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
    • பெண்னின் வீட்டுக்குச் சென்று தாயையும் மகளையும் தங்களின் இடத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.

    பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கர்நாடகா மாநில முன்னாள் முதல்வருமான 81 வயதான எடியூரப்பா தனது 17 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அவர் மீது போக்சோ வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக துரித நடவடிக்கை மேற்கொள்ள வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட்டது.

    அதன்படி சிஐடி போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் எடியூரப்பா மீது சிஐடி போலீசார் நேற்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில், பாதிக்கப்பட்ட 17 வயது பெண்ணும் அவரது தாயும் தங்களுக்கு நேர்ந்தது குறித்து வாய் திறக்காமல் இருக்க எடியூரப்பா மற்றும் அவரது சகாக்கள் 3 பேர் அவர்களுக்கு பணம் கொடுத்துள்ளனர் என்று சிஐடி அம்பலப்படுத்தியுள்ளது.

    கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் பேஸ்புக்கில் எடியூரப்பாவை குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில், எடியூரப்பாவின் சகாக்களான அருண், ருத்ரேஷ், மாரிச்சாமி ஆகியோர் அப்பெண்னின் வீட்டுக்குச் சென்று தாயையும் மகளையும் தங்களின் இடத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.

    அங்கு வைத்து பெண்ணின் தாய் பேஸ்புக்கில் பதிவிட்ட வீடியோவை நீக்க வறுபுறுத்தியுள்ளனர். மேலும் எடியூரப்பாவின் கட்டளைப்படி அவர்களுக்கு ரூ. 2 லட்சம் ரொக்கமாக அளித்துள்ளனர் என்று அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கடந்த மாதம் நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

    • செல்போன் உபயோகிக்கும் நேரத்தை கணக்கெடுத்து பார்த்தால் குறைந்தது 3-4 மணிநேரமாவது ஸ்கிரீனில் கழிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.
    • ஸ்மார்ட்போன் செயலியின் தயவோடு தான் இன்றைய இளம் தலைமுறையினர் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

    தற்போதைய இளைஞர்கள் எந்நேரமும் செல்போனில்தான் அதிக நேரம் செலவிடுகிறார்கள். ஒவ்வொருத்தரின் செல்போன் உபயோகிக்கும் நேரத்தை கணக்கெடுத்து பார்த்தால் குறைந்தது 3-4 மணிநேரமாவது ஸ்கிரீனில் கழிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.

    இன்றைய இளம் பருவத்தினர், சக மனிதர்களிடம் முகம் கொடுத்து பேசுவதை விட போன் மெசெஜ் மூலம் மற்றவர்களிடம் பேசுவதை விரும்புகிறார்கள். இதனாலேயே மொபைல் செயலிகளான இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக், ஸ்னாப்சாட் போன்றவை அதிகம் பிரபலமாக உள்ளன.

    ஸ்மார்ட்போன் செயலியின் தயவோடு தான் இன்றைய இளம் தலைமுறையினர் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார்போல் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் லட்சக்கணக்கான ஆப்ஸ்கள் கிடைக்கின்றன.

    இதுபோன்று கிடைக்கும் செயலிகளை பெரும்பாலானோர் உபயோகித்து வருகின்றனர். இந்த நிலையில், மெசெஜிங் செயலியால் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

    மகாராஷட்ராவில் உள்ள தானே மாவட்டத்தில் வசித்து வந்த 16 வயது சிறுமி, அவருடைய தந்தை மொபைலில் ஸ்னாப்சாட் செயலியை தரவிறக்கம் செய்ய அனுமதிக்காததால் கோபம் அடைந்தார். இதையடுத்து சம்பவ நாளன்று குடும்பத்தில் அனைவரும் உறங்கியப்பின் அவளது பெட்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சிறுமி தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை அதிகாரிகள், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொழில்நுட்ப வளர்ச்சி பல எல்லைகளை கடந்து வரும் சூழலில், அதன் மீது கொண்ட காதலால் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் துயரம் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


    தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் தோன்றினால் உடனே இந்த 9152987821 எண்ணுக்கு டயல் செய்யுங்கள்.

    • இதை வெளியே சொல்லக்கூடாது என்று சிறுமியை மிரட்டி பயமுறுத்தி வைத்துள்ளனர்.
    • கத்த முயன்ற சிறுமியை அவர்கள் அடித்துச் சித்திரவதை செய்துள்ளனர்

    பள்ளியில் நடத்தப்பட்ட குழந்தைகளுக்கான பாலியல் விழுப்புணர்வான குட் டச் பேட் டச் பயிற்சியின்மூலம் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள பள்ளியொன்றில் நடந்த குட் டச் பேட் டச் விழுப்புணவர்வின்போது அப்பள்ளியில் பயின்று வரும் 13 வயது சிறுமி தான் தனது தந்தையாலும், ஒன்றுவிட்ட சகோதரனாலும், உறவினறாலும் தொடர்ச்சியாக வன்புணர்வு செய்யப்பட்டதாக கூறியது ஆசிரியர்களை அதிச்சிக்குள்ளாக்கியது.உடனே இதுகுறித்து போலீசிடம் தெரிவிக்கப்பட்டது.

    சிறுமியின் தந்தையும், ஒன்றிவிட்ட சகோதரனும், உறவுக்கார அங்கிள்- உம் தொடர்ச்சியாக சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்துள்ளனர். மேலும் இதை வெளியே சொல்லக்கூடாது என்று சிறுமியை மிரட்டி பயமுறுத்தி வைத்துள்ளனர்.

    துன்புறுத்தலின்போது கத்த முயன்ற சிறுமியை அவர்கள் அடித்துச் சித்திரவதை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த மூவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

    • தன்னிடம் அவர் அத்துமீறுவதை அறிந்த சிறுமி கத்திக் கூச்சல் போட்டுள்ளார்
    • அந்த இளைஞனிடம் நடத்திய விசாரணையில் குட்டு வெளிப்பட்டுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹரோதி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கேட்போருக்கு நடுக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்த கொலை சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த கிராமத்தில் 8 வயது சிறுமி தனியாக இருக்கும்போது பாலியல் வன்புணர்வு செய்யும் நோக்கத்தில் குடிபோதையில் இருந்த உறவுக்கார இளைஞர் அருகே நெருங்கியுள்ளார்.

    தன்னிடம் அவர் அத்துமீறுவதை அறிந்த சிறுமி கத்திக் கூச்சல் போட்டுள்ளார். இதனால் மாட்டிகொள்வோமோ என்ற பயத்தில் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்து கரும்புக் காட்டில் உடலை மறைத்து வைத்துள்ளார். சிறுமி திடீரென காணாமல் போனதால் அனைவரும் தேடி வந்த நிலையில் கரும்புக்காட்டில் இலைகளால் மறைக்கப்பட்ட சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக குழந்ததையின் தந்தை அதே கிராமத்தில் வசித்து வரும் உறவுக்கார இளைஞன் மீது சந்தேகம் தெரிவித்து போலீசிடம் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த இளைஞனிடம் நடத்திய விசாரணையில் குட்டு வெளிப்பட்டுள்ளது. எனவே அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

    • உயிரிழந்த இளம்பெண் பினாயுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்தபோது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது.
    • பெண்ணை கடுமையாக டிரோல் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக தெரிகிறது.

    கேரளாவில் தனது காதல் பிரேக் அப்பை நெட்டிசன்கள் கிண்டல் செய்ததால் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மைனர் பெண் இன்ஸ்டாகிராம் இன்புலுயென்சர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வந்த ஆதித்யா நாயர் என்ற அந்த இளம்பெண் கடந்த வாரம் ஜூன் 10 ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக  ஆதித்யாவை காதலித்து ஏமாற்றிய 21 வயதாகும் பினாய் என்ற மற்றொரு இன்ஸ்டாகிராம் கன்டென்ட் கிரியேட்டர் போக்சோ சட்டத்தின்கீழ் நேற்று கைது செய்யப்பட்டார். உயிரிழந்த  ஆதித்யா, பினாயுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்துபோது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது.

     

    ரீல்ஸ் செய்வதில் அதிக கவனம் செலுத்தியதால் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆதித்யா 2 பாடங்களில் தோல்வியடைந்துள்ளார். இதற்கிடையில் திடீரென இவர்களின் காதல் பிரேக் அப்பில் முடித்த நிலையில் பினாயின் இன்ஸ்ட்டாகிராம் ஃபாலோவர்கள் இணையத்தில் ஆதித்யாவை கடுமையாக டிரோல் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக தெரிகிறது.

     

    இந்நிலையில் மைனரான தனது பெண்ணை பினாய் இன்ஸ்டாகிராம் மூலம் பேசி மயக்கி ஏமாற்றியதாகபெண்ணின் தாய் தெரிவித்துள்ளார். மேலும் பினாய் மற்றும் உயிரிழந்த ஆதித்யாவின் மொபைல் போன்களை ஆராய்ந்ததன் மூலம் பினாய்க்கு எதிரான பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 

    • பாலியல் வன்கொடுமையால் அப்பெண்ணுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
    • குற்றவாளிக்கு 15 நாள் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கர்நாடகாவில் 16 வயது சிறுமியை 23 வயது இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன்மூலம் அப்பெண்ணுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பாலியல் வன்கொடுமை செய்தவர் தான் அந்த குழந்தையின் அப்பா என்று டி.என்.ஏ சோதனையில் தெரிய வந்துள்ளது.

    இது சம்பந்தமான வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 18 வயது ஆனவுடன் திருமணம் செய்து கொள்வதாக பாலியல் வன்கொடுமை செய்தவர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.

    இதனையடுத்து குற்றவாளிக்கு 15 நாள் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூலை 3 ஆம் தேதி காவல்நிலையத்தில் சரணடைய வேண்டும் என்றும் ஜூலை 4 ஆம் தேதி திருமண சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், இளம் வயதில் தாயாகியுள்ள பெண் மற்றும் அவரது குழந்தையின் நலனை கருத்தில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • விவசாயத் தொழிலாளியின் ஒன்றரை வயது மகள், தோட்டத்தில் திறந்திருந்த ஆழ்துளைக்கிணற்றில் விழுந்துள்ளார்.
    • பல மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

    இன்றைய காலகட்டத்தில் ஆழ்துளை கிணறு கொஞ்சம் கொஞ்சமாக கிராமங்களில் மூடப்பட்டு வரும் நிலையில், அதற்குள் விழுந்து பலியாகும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அந்த வகையில், குஜராத் மாநிலத்தில் 45-50 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்க பல மணிநேரம் நடைபெற்ற மீட்பு பணி வீணானது.

    அம்ரேலியில் உள்ள சுர்கபாரா கிராமத்தை சேர்ந்த விவசாயத் தொழிலாளியின் ஒன்றரை வயது மகள், தோட்டத்தில் திறந்திருந்த ஆழ்துளைக்கிணற்றில் விழுந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அம்ரேலி மீட்புக்குழுவினரும், 108 அவசரக் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன.

    45 முதல் 50 அடி ஆழத்தில் சிறுமி சிக்கியிருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து 108 அவசர குழு ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமிக்கு முதலில் ஆக்ஸிஜனை வழங்கத் தொடங்கியது. மீட்புக்குழுவினர் கேமராக்களைப் பயன்படுத்தி மீட்புப் பணியைத் தொடங்கினர். இதையடுத்து நடைபெற்ற பல மணி நேரம் நடைபெற்ற மீட்பு பணியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

    முன்னதாக, இச்சம்பவம் குறித்து மீட்பு குழுவை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:- ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சிறுமியை மீட்க மீட்புக் குழுவினர் தீவிர முயற்சி செய்து வருகிறது. குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் கீழ்நோக்கி சிக்கியுள்ளது. சிறுமியின் முகம் மட்டுமே தெரிகிறது என்றார்.

    • ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் மாவட்டத்தில் வசித்து வருபவர் இர்ஃபான், இவர் இன்ஸ்டாகிராமில் பேசி பெண்களை கவர்வதை தொழிலாக பார்த்து வருகிறார்.
    • அந்த சிறுமியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து அந்த சிறுமியை மிரட்ட துவங்கினார்.

    ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் மாவட்டத்தில் வசித்து வருபவர் இர்ஃபான், இவர் இன்ஸ்டாகிராமில் பேசி பெண்களை கவர்வதை தொழிலாக பார்த்து வருகிறார். இம்முறை 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் இன்ஸ்டாகிராமில் நண்பர் ஆனார். இதைத் தொடர்ந்து அந்த சிறுமியின் இன்ஸ்டாகிராம் தரவுகளை பெற்றுள்ளார்.

    பிறகு, அந்த சிறுமியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து அந்த சிறுமியை மிரட்ட துவங்கினார். மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிடாமல் இருக்க 5 லட்சம் ரூபாய் கொடுக்குமாறு இர்ஃபான் சிறுமியை மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த சிறுமி வீட்டிற்கு தெரியாமல் பணத்தை திருடி இர்ஃபானிடம் கொடுத்துள்ளார்.

    மார்ச் மாதம் இவ்வாறு இர்ஃபானிடம் பணத்தை கொடுக்கும் போது இர்ஃபான், தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளார். இச்செய்தி யாருக்கும் வெளியே தெரியாமல் இருக்க 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று சிறுமியை மீண்டும் மிரட்டியுள்ளார்.

    இதையறிந்த அந்த பெண்ணின் தந்தை காவல் துறையிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரித்த காவல் துறை அதிகாரி, இர்ஃபான் மற்ற அவனது கல்லூரி மற்றும் பள்ளி பெண்களுடனும் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

    இர்ஃபான் இதை தனியாளாக செய்யவில்லை இவருக்கு பின் ஒரு கூட்டமே செயல்பட்டு வந்துள்ளது. இர்ஃபானால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களின் விவரத்தை தெரிந்துக்கொள்ள காவல்துறை முயற்சித்து வருகின்றனர்.

    இர்ஃபானும் அவனுக்கு உடந்தையாக இருந்த நண்பரையும் கைது செய்த போலீசார், இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • வழக்கை வாபஸ் பெற பெண்ணின் குடும்பம் திட்டடவடமாக மறுத்த நிலையில் அன்றிலிருந்து அந்த குடுமபத்தை சோகம் நாலாபுறப்பும் சூழத் தொடங்கியது.
    • தனது மகனைக் காப்பாற்றுவதற்காக அவர்களின் முன்னிலையில் தனது ஆடைகளை சிறுவனின் தாய் களைந்து நின்ற கொடூரமும் நிகழ்ந்தது.

    மத்திய பிரதேச மாநிலம் சாகர் பகுதியில் வசித்து வரும் தலித் சமூகத்தைச் சேர்ந்த 15 வயது இளம்பெண் கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் அளித்திருந்தார்.

    அப்பகுதியைச் சேர்ந்த நால்வர் தன்னை அடித்துத் துன்புறுத்தி வன்கொடுமை செய்து, போலீசிடம் சென்றால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளதாக அவர் தனது புகாரில் கூறியிருந்தார்.

    இந்த விவகாரம் அந்த சமயத்தில் அரசியல் ரீதியாக பூதாகரமாக வெடித்த நிலையில் வழக்கு மீதான விசாரணை இன்று வரை நடந்து வருகிறது. வழக்கை வாபஸ் பெறும்படி பெண்ணின் குடும்பத்துக்கு உறவினர்கள் மூலமும் ஊர்க்காரர்கள் மூலமும் அழுத்தம் கொடுக்கப்பட்டது வந்தது.

    ஆனால் வழக்கை வாபஸ் பெற பெண்ணின் குடும்பம் திட்டவட்டமாக மறுத்த நிலையில் அன்றிலிருந்து அந்த குடுமபத்தை சோகம் நாலாபுறப்பும் சூழத் தொடங்கியது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பாதிக்கப்பட்ட பெண்ணின் 18 வயது தம்பியை 9 பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொன்றது. தனது மகனைக் காப்பாற்றுவதற்காக அவர்களின் முன்னிலையில் தனது ஆடைகளை சிறுவனின் தாய் களைந்து நின்ற கொடூரமும் நிகழ்ந்தது.

    இந்த சம்பவத்தில் 9 பேர் மீதும் சிறுபான்மையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலையை நேரில் பார்த்த சிறுவனின் உறவினரை கடந்த மே 25 ஆம் தேதி சமாதானம் பேசுவதாக அழைத்து வழக்கில் சம்பந்தமுடையவர்கள் கொலை செய்துள்ளனர்.

    இதைதொடரந்து பாதிக்கபட்ட பெண்ணும் உயிரிழந்த உறவினரின் உடலுடன் கடந்த மே 26 ஞாயிறுக்கிழமை வேனில் வரும்போது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கடந்த 6 வருடங்களாக நடந்து வரும் இந்த பிரச்சனையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தொடந்து கொலை செய்யப்பட்டு, அந்த பெண்ணும் உயிரிழந்துள்ளது நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகம் காட்டியதாக ஆளும் பாஜக கட்சியை எதிரிக்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 

    • கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திரவ நைட்ரஜன் பான் சாப்பிட 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • வயிற்றில் உள்ள துளை விரிவடைவதைத் தடுக்க சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுமியின் வயிற்றின் ஒரு பகுதி, சுமார் 4×5 செ.மீ அளவு, அகற்றப்பட்டது.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திரவ நைட்ரஜன் பான் சாப்பிட 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிப்பு பீடா வகையான பான் என்பது வட இந்தியாவில் பிரசித்தி பெற்ற பாரம்பரிய பண்டம் ஆகும். சமீப காலங்களில் தென்னிந்தியாவிலும் இந்த பான் வகைகள் விரும்பி உண்ணப்பட்டு வருகின்றன. ஐஸ் பான் முதல் ஃபயர் பான் வரை பான் வகைகள் உருவாகி இளைஞர்களின் விருப்பத்தை தூண்டியுள்ளது.

     

    இதில் புகையுடன் கூடிய திரவ நைட்ரஜன் பான் வகை உண்ணும்போது திரில் ஆன அனுபவத்தை தருவதால் சிறுவர்கள் அதனை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் அதுவே ஒரு சிறுமிக்கு கொடுங்கனவாக மாறியுள்ளது. பெங்களூருவில் 12 வயது சிறுமி திரவ நைட்ரஜன் பான் சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்திலேயே சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மருதுவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமியின் வயிற்றில் துளை உருவாகியுள்ளதை கண்டறிந்துள்ளனர்.

    இந்த துளை உருவாகுதலுக்கு பெர்ஃபோரேஷன் பெரிட்டோனிடிஸ் (perforation peritonitis) என்பது மருத்துவப் பெயர் ஆகும். வயிற்றில் உள்ள துளை விரிவடைவதைத் தடுக்க சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுமியின் வயிற்றின் ஒரு பகுதி, சுமார் 4×5 செ.மீ அளவு, அகற்றப்பட்டது. சிகிச்சைக்குப் பின் சிறுமி உடல் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் உணவில் திரவ நைட்ரஜனை பயன்படுத்துவது கடுமையான விளைவுகளைத் ஏற்படுத்தும். திரவ நைட்ரஜனில் ஆவியாகும் இரசாயனமே இதற்கு காரணம் ஆகும். இந்த நீராவிகளை உள்ளிழுப்பது சுவாசிப்பதில் சிரமத்திற்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

     

     

    • ராஜஸ்தான் மாநிலத்தில் பெற்றோர்களின் அலட்சியத்தால் 3 வயது பெண் குழந்தை காருக்குள் சிக்கி மூச்சுத்திணரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • பிரதீப் நாகர் என்பவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் ஜோரவார்புரா கிராமத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு காரில் வந்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பெற்றோர்களின் அலட்சியத்தால் 3 வயது பெண் குழந்தை காருக்குள் சிக்கி மூச்சுத்திணரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜாதான் மாநிலம் கோட்டா நகருக்கு அருகில் உள்ள ஜோரவார்புரா என்ற கிராமத்தில் நேற்று (மே 15) மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

     

    பிரதீப் நாகர் என்பவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் ஜோரவார்புரா கிராமத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு காரில் வந்துள்ளார். அவரின் மனைவியும் மூத்த மகளும் காரிலிருந்து இறங்கி அருகில் இருந்த பூங்காவுக்கு சென்ற நிலையில், பிரதீப், தனது இளைய மகள் கோர்விகா சாகர் மனைவியுடன் இறங்கி சென்றுவிட்டதாக கருதி மகள் உள்ளே இருப்பதை அறியாமல் காரை லாக் செய்துவிட்டு பூங்காவுக்கு சென்றுள்ளார்.

    அவரின் மனைவியோ மகள் கணவருடன் வந்துகொண்டிருக்கிறாள் என்று நினைத்து அலட்சியமாக இருந்துள்ளார். இதனிடையே சுமார் 2 மணி நேரம் கழித்தே குழந்தையை காணவில்லை என்று பெற்றோர்கள் உணர்ந்து காருக்கு சென்று பார்க்கையில், குழந்தை மூச்சுத்திணறி மயங்கிய நிலையில் காருக்குள் இருந்துள்ளது. உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு குழந்தையை பெற்றோர்கள் தூக்கிச்சென்றுள்ளனர். ஆனால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

     

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் காவல்துறையினர், பெற்றோர்கள் குழந்தையின் பிரேத பரிசோதனை செய்யவும், போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் மறுக்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.

    ×