search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎன்பிஎல்"

    • திருச்சி அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை எடுத்து
    • 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாருக்கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    கோவை:

    கோவையில் நடைபெற்று வரும் டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கோவை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் இறங்கிய திருச்சி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோவை அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் 35 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து திருச்சி அணி தத்தளித்தது.

    சஞ்சய் யாதவ், ஜாபர் ஜமால் ஜோடி நிதானமாக ஆடியது. 7வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில் சஞ்சய் யாதவ் 34 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை எடுத்தது. ஜாபர் ஜமால் அதிரடியாக ஆடி 41 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    கோவை அணி சார்பில் கேப்டன் ஷாருக் கான் மற்றும் முகமது ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 125 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்கியது. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய சுரேஷ்குமார் டக் அவுட்டாகி வெளியேற அடுத்ததாக வந்த சாய் சுதர்சன் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். 7 ரன்னிற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து கோவை தடுமாறியது. அப்போது களத்தில் இருந்த சுஜய் - முகிலேஷ் ஜோடி நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர்.

    16.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை சேர்த்து கோவை அணி எளிதாக இப்போட்டியில் வென்றது. நிதானமாக விளையாடிய முகிலேஷ் 63 ரன்களும் சுஜய் 48 ரன்களும் அடித்தனர்.

    சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாருக்கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    • பேட்டிங்கில் எங்களது ஷாட்கள் தவறாக இருந்தது.
    • கோவை அணி கேப்டன் ஷாருக்கான் பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்தி எங்களை கட்டுப்படுத்தினார்.

    கோவை:

    டி.என்.பி.எல். போட்டியில் நெல்லை அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. கோவையில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நெல்லை ராயல் கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்தது.

    கேப்டன் அருண் கார்த்திக் 38 பந்தில் 47 ரன்னும் (பவுண்டரி, 2 சிக்சர்) சோனு யாதவ் 26 பந்தில் 43 ரன்னும் (1 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். கேப்டன் ஷாருக்கான், எம்.முகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் 18.3 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சச்சின் 48 பந்தில் 76 ரன்னும் (8 பவுண்டரி, 3 சிக்சர்), சுரேஷ் குமார் 55 பந்தில் 63 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    வெற்றி குறித்து கோவை கிங்ஸ் கேப்டன் ஷாருக்கான் கூறியதாவது:-

    டி.என்.பி.எல். தொடரில் தொடர்ந்து 10-வது வெற்றியை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல் 2 போட்டியில் கடுமையாக போராடி வென்றோம். இனி வரும் போட்டிகளிலும் எங்களின் முழு திறமையை வெளிப்படுத்தி மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். சொந்த ஊரான கோவையில் வெற்றி பெறுவது எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் முதல் தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் அருண் கார்த்திக் கூறும்போது, 'மழை பெய்ததால் பந்து வீச்சாளர்கள் பந்து வீச மிகவும் சிரமப்பட்டனர்'. பேட்டிங்கில் எங்களது ஷாட்கள் தவறாக இருந்தது. கோவை அணி கேப்டன் ஷாருக்கான் பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்தி எங்களை கட்டுப்படுத்தினார். இனி வரும் போட்டிகளில் சிறப்பாக ஆடுவோம் என்றார்.

    இன்று நடைபெறும் 'லீக்' ஆட்டங்களில் சேலம் ஸ்பார்ட்ன்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் (மாலை 3.15), சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிரா கன்ஸ் (இரவு 7.15) அணிகள் மோதுகின்றன.

    • "ஈஷாவின் சூழல் தரும் அனுபவம் வெறும் வார்த்தைகளில் கூற முடியாது, அதனை உணரத் தான் முடியும்" எனக் கூறினார்.
    • ஈஷாவில் சூர்யகுண்டம், லிங்கபைரவி, தியானலிங்கம் மற்றும் ஆதியோகி ஆகிய இடங்களில் தரிசனம் செய்தனர்.

    தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) எனும் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான போட்டிகள் இம்மாதம் துவங்கி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.


    இந்நிலையில் TNPL தொடரில் ஆடும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர், கேப்டன் மற்றும் சக வீரர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழு ஈஷாவிற்கு வருகை புரிந்தனர். அவர்கள் ஈஷாவில் சூர்யகுண்டம், லிங்கபைரவி, தியானலிங்கம் மற்றும் ஆதியோகி ஆகிய இடங்களில் தரிசனம் செய்தனர்.

    திண்டுக்கல் அணியின் பயிற்சியாளர் இவ்வருகை குறித்து கூறுகையில், "தற்போது TNPL தொடரில் ஆடி வருகிறோம். லீக் விளையாட்டுகளில் ஆடுவதற்காக கோவை வந்துள்ளோம். ஈஷாவிற்கு எப்போது வந்தாலும் இந்த மொத்த சூழலுமே மிக அருமையாக இருக்கிறது. அதனால் அமைதியாகவும், மன குவிப்புத்திறன் அளிக்க கூடியதாகவும் மற்றும் மிகவும் ரிலாக்ஸாகவும் இருக்கிறது. இது எங்களுக்கு எப்போதும் உதவியாக இருக்கும். இந்த அனுபவத்தை வெறும் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதனை உணரத்தான் முடியும்" எனக் கூறினார்.


    கோவை ஈஷா யோகா மையம், தமிழகத்தில் மிக முக்கிய ஆன்மீகத் தலமாக இருந்து வருகிறது. ஈஷாவிற்கு ஆண்டுதோறும் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து ஆதியோகியை தரிசிக்கவும், யோகப் பயிற்சிகள் மேற்கொள்ளவும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

    • நெல்லை வேகப்பந்து வீச்சாளர் சோனு யாதவ் 30 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.
    • சேலத்துக்கு 2-வது தோல்வியாகும்.

    8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு சேலத்தில் நடந்த 9-வது லீக்கில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி, சேலம் ஸ்பார்டன்சை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த சேலம் அணி 19.2 ஓவர்களில் 141 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ராபின் பிஸ்ட் 23 ரன்னும், கேப்டன் ஷிஜித் சந்திரன் 20 ரன்னும் எடுத்தனர். நெல்லை வேகப்பந்து வீச்சாளர் சோனு யாதவ் 30 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.

    அடுத்து களம் இறங்கிய நெல்லை அணி 18.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. அஜிதேஷ் 45 ரன்னும், சூர்யபிரகாஷ் 43 ரன்னும் (நாட்-அவுட்) விளாசினர். நெல்லைக்கு இது 2-வது வெற்றியாகும். சேலத்துக்கு 2-வது தோல்வியாகும்.

    போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். அடுத்த கட்ட ஆட்டங்கள் கோவையில் நடைபெறுகிறது. கோவையில் நாளை நடைபெறும் ஆட்டங்களில் மதுரை பாந்தர்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் (மாலை 3.15 மணி), கோவை கிங்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் (இரவு 7.15 மணி) அணிகள் சந்திக்கின்றன.

    • 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 9 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்தது.
    • விவேக் நிலைத்து நின்று மட்டையை சுழற்றி தங்கள் அணியின் வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டார்.

    8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப்- 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் நேற்றிரவு நடந்த 6-வது லீக்கில் திண்டுக்கல் டிராகன்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் சந்தித்தன. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த திண்டுக்கல் அணிக்கு திருப்திகரமான தொடக்கம் கிடைக்கவில்லை. ஷிவம் சிங் 2 ரன்னிலும், கேப்டன் ஆர்.அஸ்வின் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விமல்குமார் (47 ரன்), பாபா இந்திரஜித் (51 ரன், 34 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். பின்வரிசையில் தினேஷ் ராஜ் (20 ரன்) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தனர். 20 ஓவர் முடிவில் திண்டுக்கல் அணி 9 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்தது.

    அடுத்து களம் இறங்கிய சேலம் அணிக்கு எஸ்.அபிஷேக்கும் (28 ரன்), விக்கெட் கீப்பர் கவினும் (41 ரன்) அதிரடியான தொடக்கம் தந்தனர். இதன் பின்னர் ஆர்.விவேக் நிலைத்து நின்று மட்டையை சுழற்றி தங்கள் அணியின் வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டார்.

    சேலம் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விவேக் 51 ரன்களுடன் (28 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார்.

    திண்டுக்கல் சுழல் சூறாவளிகள் ஆர்.அஸ்வினும் (4 ஓவரில் 24 ரன்), வருண் சக்ரவர்த்தியும் (27 ரன்னுக்கு ஒரு விக்கெட்) ரன்வேகத்தை ஓரளவு கட்டுப்படுத்தினாலும், அவர்களால் விக்கெட் வேட்டை நடத்த முடியாமல் போனது பின்னடைவாக அமைந்தது.

    2-வது லீக்கில் ஆடிய சேலத்துக்கு இது முதலாவது வெற்றியாகும். தொடக்க ஆட்டத்தில் மதுரையிடம் தோற்றிருந்தது. திண்டுக்கல் அணிக்கு இது முதலாவது தோல்வியாகும்.

    இன்றைய ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்- திருச்சி கிராண்ட் சோழாஸ் (இரவு 7.15 மணி) அணிகள் மோதுகின்றன.

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.
    • கோவை கிங்ஸ்-ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சேலம்:

    8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று சேலத்தில் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக கோவை கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.15 மணிக்கு திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. திண்டுக்கல் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், பாபா இந்திரஜித், வருண் சக்ரவர்த்த்தி, ஷிவம்சிங், சந்தீப் வாரியர், விமல்குமார் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    திருச்சி அணியில் கங்கா ஸ்ரீதர் ராஜ்குமார், அந்தோணி தாஸ், சஞ்சய் யாதவ், டேவிட்சன், ஈஸ்வரன், சரவணகுமார் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப் பரீட்சை நடத்துகின்றன. மதுரை அணியில் ஹரி நிசாந்த், சசிதேவ், சதுர்வேத், கவுசிக், அஜய் கிருஷ்ணா, அலெக்சாண்டர், முருகன் அஸ்வின், சரவணன், ஸ்வப்னில்சிங் ஆகியோர் உள்ளனர்.

    சேலம் அணியில் அபி ஷேக், கவின், விவேக், கணேஷ்மூர்த்தி, ஹரீஷ் குமார், பொய்யா மொழி, சச்சின்ரதி ஆகிய வீரர்கள் உள்ளனர்.


    நாளையும் இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் மாலை 3.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தனது தொடக்க ஆட்டத்தில் கோவையிடம் தோற்றது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் கேப்டன் பாபா அபராஜித், ஜெகதீசன், பிரதோஷ் ரஞ்சன்பால் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    ஆல்-ரவுண்டர்கள் அபிஷேக் தன்வர், சதீஷ், பந்து வீச்சில் பெரியசாமி, ரஹில்ஷா, சிலம்பரசன் ஆகியோர் உள்ளனர்.

    நெல்லை அணியில் அருண் கார்த்திக், அஜிதேஷ், ராஜகோபால், சூரியபிர காஷ், சோனு யாதவ், கவுதம், ஹரீஷ், ஆர்.சிலம்பரசன், மோகன் பிரசாத் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    நாளை இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    • 20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் 128 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
    • அதிகபட்சமாக பிரதோஷ் ரஞ்சன் பால் 40 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    சேலம்:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 8-வது தொடர் சேலத்தில் இன்று தொடங்கியது. இதில் கோவை கிங்ஸ்- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ்குமார் 4 ரன்னிலும், சுஜய் குமார் 6 ரன்னிலும் அவுட்டாகினர். கேப்டன் ஷாருக் கான் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அப்போது கோவை அணி 3 விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

    அடுத்து பால சுப்ரமணியன் சச்சினுடன் முகிலேஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில் முகிலேஷ் 31 ரன்னில் வெளியேறினார். ராம் அரவிந்த் 12 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்களை எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய சச்சின் அரை சதமடித்து 63 ரன்னில் ஆட்டமிழந்தார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சார்பில் அபிஷேக் தன்வர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதனையடுத்து சேப்பாக் அணியின் தொடக்க வீரர்களாக சந்தோஷ் குமார்- ஜெகதீசன் ஆகியோர் களமிறங்கினர். 2-வது பந்திலேயே சந்தோஷ் குமார் டக் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து வந்த பாபா அப்ரஜித் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மறுமுனையில் தடுமாற்றத்துடன் விளையாடிய ஜெகதீஷன் 22 பந்தில் 18 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் அப்ரஜித் 38 ரன்னில் அவுட் ஆனர்.

    அடுத்து வந்த டேரில் ஃபெராரியோ வித்தியசமான முறையில் ஆட்டமிழந்தார். மந்தமாக விளையாடிய ஜிதேந்திர குமார் 21 பந்தில் 14 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில் சதீஷ் மற்றும் அபிஷேக் தன்வர் வெற்றிக்காக போராடினார். ஆனால் 20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் 128 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கோவை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய கோவை 142 ரன்களை எடுத்தது.

    சேலம்:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 8-வது தொடர் சேலத்தில் இன்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.

    இன்றைய முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ், அதிக முறை சாம்பியன் ஆன சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, கோவை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ்குமார் 4 ரன்னிலும், சுஜய் குமார் 6 ரன்னிலும் அவுட்டாகினர். கேப்டன் ஷாருக் கான் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அப்போது கோவை அணி 3 விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

    அடுத்து பால சுப்ரமணியன் சச்சினுடன் முகிலேஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில் முகிலேஷ் 31 ரன்னில் வெளியேறினார். ராம் அரவிந்த் 12 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்களை எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய சச்சின் அரை சதமடித்து 63 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சார்பில் அபிஷேக் தன்வர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    • 8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

    தமிழ்நாட்டில் நகரங்கள் மட்டுமின்றி கிராமத்து அளவிலும் திறமையான இளம் வீரர்களை கண்டறிந்து, அவர்களை உலகறியச் செய்வதற்கான வாய்ப்பினை வழங்கும் ஒரு அடித்தளமாக தமிழ்நாடு பிரிமீயர் லீக் என்படும் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடங்கப்பட்டது.

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். கிரிக்கெட் 2016-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. இதுவரை 7 சீசன் நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 முறை சாம்பியன் கோப்பையை கைப்பற்றி வெற்றிகரமான அணியாக விளங்குகிறது. தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய அணிகளும் பட்டம் வென்றுள்ளன. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கலக்கும் வீரர்களுக்கு ஐ.பி.எல்.-ல் ஆடும் அதிர்ஷ்டம் அடிப்பதால் இளம் வீரர்கள் எப்போதும் தங்களது முழு திறமையை வெளிக்காட்ட முயற்சிப்பார்கள். வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன், சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, ஆல்-ரவுண்டர் ஷாருக்கான் உள்ளிட்டோர் டி.என்.பி.எல்.-ல் அபாரமாக ஆடியதாலேயே ஐ.பி.எல். ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் 8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. சேலம், நெல்லை, கோவை, நத்தம் (திண்டுக்கல்), சென்னை ஆகிய 5 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். 2-வது தகுதி சுற்று மற்றும் இறுதிப்போட்டி மட்டும் சென்னை சேப்பாக்கத்தில் அரங்கேறும். இறுதிப்போட்டி ஆகஸ்டு 4-ம்தேதி நடக்கிறது.

    இந்த சீசனில் ஜெகதீசன், பாபா அபராஜித், பிரதோஷ் ரஞ்சன் பால் (3 பேரும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்), ஷாருக்கான், சாய் சுதர்சன், எம்.சித்தார்த் (கோவை), வாஷிங்டன் சுந்தர், முருகன் அஸ்வின், அலெக்சாண்டர் (மதுரை), கடந்த ஆண்டில் ஒரு சதத்துடன் 385 ரன் குவித்து முதலிடம் பிடித்தவரான அஜிதேஷ், அருண் கார்த்திக் (நெல்லை), டெஸ்டில் 516 விக்கெட் வீழ்த்திய சாதனையாளரான சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின், ஐ.பி.எல்.-ல் கொல்கத்தா அணிக்காக சுழலில் மிரட்டிய வருண் சக்ரவர்த்தி, பாபா இந்திரஜித், சந்தீப் வாரியர் (4 பேரும் திண்டுக்கல்), சர்வதேச போட்டியில் ஆடிய அனுபவசாலிகளான விஜய் சங்கர், டி.நடராஜன், சாய் கிஷோர் (3 பேரும் திருப்பூர்), ஹரிஷ்குமார் (சேலம்), ரூ,22 லட்சத்துக்கு ஏலம் போன ஆல்-ரவுண்டர் சஞ்சய் யாதவ், அதிசயராஜ் டேவிட்சன் (திருச்சி) உள்ளிட்ட நட்சத்திர வீரர்களின் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஜிம்பாப்வே தொடரில் விளையாட சென்று இருப்பதால் அவர்கள் டி என் பி எல் -ல் தொடக்ககட்ட ஆட்டங்களில் விளையாட மாட்டார்கள்.

    நடப்பு டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் முதல்சுற்று ஆட்டங்கள் சேலத்தில் நடக்கிறது. சேலம் அருகே வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவை கிங்சும், முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    சென்னை அணியில் கேப்டன் பாபா அபராஜித், ஜெகதீசன், ரஞ்சன் பால், பெரியசாமி, ரஹில் ஷா, ஷாஜகான், அபிஷேக் தன்வர், சிலம்பரசன் ஆகியோர் நன்றாக ஆடக்கூடியவர்கள். இதேபோல் கோவை அணிக்கு கேப்டன் ஷாருக்கான், முகிலேஷ், தாமரைக் கண்ணன், சித்தார்த், சுரேஷ்குமார், முகமது உள்ளிட்டோர் வலு சேர்க்கிறார்கள்.

    இரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 6-ல் சேப்பாக் சூப்பர் கில்லீசும், 3-ல் கோவையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. ஏறக்குறைய சரிசம பலத்துடன் வெற்றியோடு தொடங்கும் உத்வேகத்துடன் மல்லுக்கட்டுவதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

    சேப்பாக் கேப்டன் பாபா அபராஜித் நிருபர்களிடம் கூறுகையில், 'இந்த ஆண்டு சேப்பாக் அணிக்கு கேப்டனாக செயல்படவுள்ளது எனக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். அதுவும் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரு அணியை வழிநடத்துவது மிகப்பெரிய பொறுப்பாக உணர்கிறேன். எங்கள் அணியில் அனுபவமிக்க வீரர்களும், பல கவனிக்கத்தக்க இளம் வீரர்களும் நிறைந்துள்ளனர். இந்த சீசன் நன்றாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த முறை எங்கள் அணி சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை வெல்லும்' என்றார்.

    கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாருக்கான் அளித்த பேட்டியில், 'இந்த போட்டி தொடரில் விளையாட ஆர்வமாக இருக்கிறோம். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மட்டுமின்றி எல்லா அணிகளும் திறமையான அணிகள் தான். இந்த சீசன் முழுவதும் நன்றாக விளையாட வேண்டும். கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது போல் இந்த முறையும் வெல்வோம் என்று நம்பிக்கை இருக்கிறது' என்று தெரிவித்தார்.

    இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ,1.7 கோடியாகும். இதில் மகுடம் சூடும் அணிக்கு ரூ,50 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.30 லட்சமும் வழங்கப்படுகிறது.

    போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: பாபா அபராஜித் (கேப்டன்), ஆந்த்ரே சித்தார்த், வி.அருணாசலம், அஸ்வின் கிறிஸ்ட், டேரில் பெராரியோ, அய்யப்பன், என்.ஜெகதீசன், ஜிதேந்திர குமார், மதன்குமார், ஜி.பெரியசாமி, பிரேம்குமார், பிரதோஷ் ரஞ்சன் பால், சந்தோஷ்குமார், ஆர்.சதீஷ், ரஹில் ஷா, ஷாஜகான், சிபி, எம்.சிலம்பரசன், பி.சூர்யா, அபிஷேக் தன்வர்.

    கோவை கிங்ஸ்: ஷாருக்கான் (கேப்டன்), சுரேஷ்குமார், சுஜய், அதீக் ரகுமான், திவாகர், கவுதம் தாமரைக் கண்ணன், ஹேம் சரண், மீரான் ரஹில் ரகுமான், முகிலேஷ், ஓம் பிரகாஷ், ராம் அரவிந்த், சாய் சுதர்சன், எம்.சித்தார்த், ஜதாவேத் சுப்பிரமணியன், வித்யூத், ஜி.வி.விக்னேஷ், யுதீஸ்வரன், மணிஷ், சச்சின்.

    இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • சென்னை, சேலம், கோவை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 5 இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது.
    • மதுரை பேந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    கோவை:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) தலைவர் சஞ்சய் கும்பட் மற்றும் நிர்வாகிகள் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    டி.என்.பி.எல். 8-வது கிரிக்கெட் போட்டித் தொடர் ஜூலை 5-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை, சேலம், கோவை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 5 இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது.

    லீக் போட்டிகள் ஜூலை 5-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை சேலத்திலும், ஜூலை 13-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை கோவையிலும், ஜூலை 20-ந்தேதி முதல் 24-ந் தேதி வரை நெல்லையிலும், ஜூலை 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை திண்டுக்கல்லிலும் நடைபெற உள்ளன.

    குவாலிபையர் 1, எலிமினேட்டர் போட்டிகள் ஜூலை 30 மற்றும் 31-ந் தேதி திண்டுக்கலில் நடக்கிறது. 2-வது குவாலிபையர் மற்றும் இறுதிப்போட்டிகள் ஆகஸ்டு 2 மற்றும் 4-ந் தேதிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

    இரவு 7.15 மணிக்கு போட்டிகள் தொடங்கும். இரண்டு போட்டிகள் நடக்கும் சமயத்தில் மதியம் 3.15 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.

    இந்த தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், எஸ்.கே.எம். சேலம் ஸ்பார்ட்டன்ஸ் சீகம், மதுரை பேந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    பேட்டியின்போது தமிழ் நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஐ.பழனி, இணை செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபா உள்பட கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம், சென்னை ஆகிய நகரங்களில் போட்டி நடைபெற உள்ளது.
    • ஆகஸ்ட் 4ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதி போட்டி.

    நடப்பாண்டின் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, வரும் ஜூலை 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை டிஎன்பிஎல் நடைபெறுகிறது.

    நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம், சென்னை ஆகிய நகரங்களில் போட்டி நடைபெற உள்ளது.

    சேலத்தில் நடைபெறும் முதல் போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகிறது.

    ஆகஸ்ட் 4ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதி போட்டி நடைபெறுகிறது.

    • டி.என்.பி.எல். கோப்பையை 4 முறை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 11 வீரர்களை தக்க வைத்துள்ளது.
    • நடப்பு சாம்பியனான கோவை கிங்ஸ் அதிகபட்சமாக 17 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு பிரிமீயர் 'லீக்' என்று அழைக்கப்படும் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் இதுவரை 7 சீசன்கள் முடிந்து விட்டது. இந்த ஆண்டு நடைபெறும் டி.என்.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நாளை நடக்கிறது. சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது.

    விடுவிக்கப்பட்ட வீரர்கள், டி.என்.பி.எல். போட்டியில் விளையாட தகுதி பெற்றவர்கள் ஏலத்துக்கான இணையதளத்தில் பதிவு செய்து இருந்தனர். ஏலப்பட்டியலில் 690 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 62 வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    டி.என்.பி.எல். போட்டியில் விளையாடும் 8 அணிகளும் தக்க வைத்துக் கொண்ட வீரர்களையும், விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரத்தையும் ஏற்கனவே அறிவித்து விட்டன. 8 அணிகளும் மொத்தம் 98 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளன.

    டி.என்.பி.எல். கோப்பையை 4 முறை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 11 வீரர்களை தக்க வைத்துள்ளது. பி.அபராஜித், என்.ஜெகதீசன், அருணாச் சலம், அய்யப்பன், ஜிதேந்தர் குமார், லோகேஷ் ராஜ், மதன்குமார், பிரதோஷ் ரஞ்சன் பவுல், ரஹீல்ஷா, சிபி, சிலம்பரசன் ஆகி யோரை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதற்காக ரூ.28.70 லட்சம் செலவழித்து உள்ளது. 8 வீரர்களை விடுவித்துள்ளது.

    நடப்பு சாம்பியனான கோவை கிங்ஸ் அதிகபட்சமாக 17 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

    ஒவ்வொரு அணியும் 20 வீரர்களை தேர்வு செய்யலாம். இதற்காக ரூ.70 லட்சம் செலவழிக்கலாம். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கைவசம் ரூ.41.30 லட்சம் இருக்கிறது. அந்த அணி ஏலத்தில் 9 வீரர்களை தேர்வு செய்யலாம்.

    சேலம் அணியில் தான் அதிகபட்சமாக 11 வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும். அந்த அணியின் கைவசம் தான் அதிகபட்சமாக ரூ.46.70 லட்சம் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக திருப்பூர் அணியிடம் ரூ.45.90 லட்சம் உள்ளது. அந்த அணி 10 வீரர்களை தேர்வு செய்யலாம்.

    ×