search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காயம்"

    • காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தாக்குதல் நடத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் துப்பாக்கிச்சூடுஅமெரிக்காவின் கென்டக்கி மாகாணம் லெக்சிங்டனுக்கு தெற்கே கிராமப்புற பகுதியில் உள்ள இன்டர்ஸ்டேட் 75 நெடுஞ்சாலையில் வாலிபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவர் சரமாரியாக சுட்டதில் 7 பேர் காயம் அடைந்தனர். பின்னர் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் நடத்திய நபரை போலீசார் தேடி வருகிறார்கள். இதையடுத்து சாலையின் இருபுறமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. துப்பாக்கி சூடு நடத்திய நபர் 32 வயதான ஜோசப் ஏ. கூச் என்பது தெரியவந்துள்ளது.

    • ரஷியாவின் பெல்கோரோட் நகர் மீது உக்ரைன் ராணுவம் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்கியது.
    • தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் பெரிய அளவில் பொருள் சேதங்கள் ஏற்பட்டதாக பெல்கோரோட் பிராந்திய கவர்னர் தெரிவித்தார்.

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 2½ ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இரு தரப்பும் அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்வராமல் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

    குறிப்பாக ரஷியா மீதான தாக்குதலை உக்ரைன் அண்மை காலமாக தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷிய தலைநகர் மாஸ்கோவின் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதலை உக்ரைன் நடத்தியது.

    இந்த நிலையில் உக்ரைன் எல்லையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ரஷியாவின் பெல்கோரோட் நகர் மீது உக்ரைன் ராணுவம் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்கியது.

    பெல்கோரோட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் மற்றும் பெரிய அளவில் பொருள் சேதங்கள் ஏற்பட்டதாக பெல்கோரோட் பிராந்திய கவர்னர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்தார்.

    இதுப்பற்றி அவர் கூறுகையில், "உக்ரைனின் குண்டு வீச்சில் ஒரு பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 6 சிறுவர்கள் உள்பட 37 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது" என்றார்.

    • ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக வருவார் என்று கணிக்கப்பட்டவர்.
    • வில் பொக்கோஸ்கி 22-வது வயதில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இளம் வயதில் அணியில் இடம் கிடைப்பது மிகப்பெரிய விஷயாமாக பார்க்கபடும் நிலையில் 20 வயதில் தேசிய அணியில் விளையாட வில் பொக்கோஸ்கிக்கு வாய்ப்பு கிடைத்தது.

    உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இளம் வயதிலேயே தொடர்ந்து சதம் சதமாக அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். 36 உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2350 ரன்கள் அடித்திருந்தார். இதில் 7 சதம் அடங்கும். அதுமட்டுமல்லாமல் இவருடைய சராசரி 45 என்ற அளவில் இருந்தது.

    தன்னுடைய திறமை காரணமாக 22-வது வயதில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2020-21-ம் ஆண்டு அறிமுகமானார். சிட்னி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 62, இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன்கள் அடித்தார்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக வருவார் என்று கணிக்கப்பட்ட நிலையில் பேட்டிங் செய்யும்போது தொடர்ந்து பந்து தலையை தாக்கிக் கொண்டு இருந்தது. இதனால் அவருக்கு பலமுறை காயம் ஏற்பட்டு போட்டியிலிருந்து பாதியில் விலகி இருக்கிறார். 

    ஒரு முறை இரண்டு முறை அல்ல காயம் அடைந்து மீண்டும் குணம் அடைந்து களத்திற்கு வரும்போது மீண்டும் தலையில் பந்து தாக்கி அவர் ஓய்வு பெற்று விடுவார். இப்படியே தொடர்கதையாக இருந்தது. இவருக்கு தொடர்ந்து எப்படி ஒரே இடத்தில் பந்து படுகிறது என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.

    இதில் பந்து தலையை தாக்கி விடுமோ என்ற பயத்தில் அவர் விளையாடுவதால் தான் பேட்டிங் யுத்தியை அவர் மறந்து விடுவதாக மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். கடைசியாக ஒரு முறை கிரிக்கெட்டில் சாதித்து விடலாம் என வில் பொக்கோஸ்கி வந்தபோது கடந்த மார்ச் மாதம் மீண்டும் தலையில் பந்து அடிபட்டு அவர் காயமடைந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தொடர்ந்து பந்து தலையைத் தாக்கியதால் அது அவருக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாகவும், இதனால் வில் பொக்கோஸ்கி இனி விளையாடவே முடியாது என்றும் மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர். இதனையடுத்து வில் பொக்கோஸ்கி கிரிக்கெட் விளையாடும் தகுதியை இழந்து விட்டதாகவும் அவர் ஓய்வு பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

    இதனால் வில் பொக்கோஸ்கி தற்போது வெளிநாடுகளில் சுற்றுலா சென்று இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் விக்டோரியா நிர்வாகி மோரிஸ், சில மருத்துவ குழு நிபுணர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர் கிரிக்கெட் பக்கமே திரும்பவில்லை. அவர் பயிற்சி செய்ய கடந்த மூன்று மாதங்களாக வரவில்லை. தற்போது அவர் வெளிநாட்டில் சுற்றுலாவில் இருக்கின்றார். மருத்துவர்களின் அறிக்கை எங்களுக்கு எந்த ஒரு ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை என்று மோரிஸ் கூறியிருக்கிறார்.

    • மதியம் சுமார் 12.30 மணியளவில் உணவு இடைவேளையின்போது திடீரென இடிந்து விழுந்தது.
    • வகுப்பில் சுவர் இடிந்தபோது சுவரின் அருகே இருந்த மாணவனும் சுவரோடு கீழே விழும் காட்சிகள் வெளியாகி காண்போரை அதிரச் செய்து வருகிறது.

    குஜராத் மாநிலத்தில் 7 ஆம்  வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த  பள்ளியின் வகுப்பறை இடிந்து விழுந்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் உள்ள வதோதராவில் இயங்கி வரும் ஸ்ரீ நாராயண் குருகுல் பள்ளியின் முதல் தளத்தில் இருந்த 7 வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த வகுப்பறையின்  பக்கவாட்டுச் சுவர் நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் உணவு இடைவேளையின்போது திடீரென இடிந்து விழுந்தது.

    வகுப்பறையில் இருந்த மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு தலைமையாசிரியர் உட்பட  அனைவரும் அங்கு ஓடி வந்து  மாணவ்ர்களை அங்கிருந்து மீட்டனர். இந்த விபத்தில் ஒரு மாணவனுக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வகுப்பறையின் சுவரானது கீழ் தளத்தில் இருந்த, மாணவர்கள் சைக்கிள் நிறுத்தும் இடத்த்தின்மீது விழுந்துள்ளது.

    வகுப்பில் சுவர் இடிந்தபோது  சுவரின் அருகே இருந்த மாணவனும் கீழே விழும் காட்சிகள் வெளியாகி காண்போரை அதிரச் செய்து வருகிறது. இதற்கிடையில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து  பள்ளிக் கட்டடங்களின் தரம் குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. 

    • கடந்த மே மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகினர்.
    • உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான் காலநிலை மாற்றத்தின் பாதிப்பு காரணமாக இயற்கை பேரிடர் சம்பவங்களுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    ஆப்கானிஸ்தானில் நேற்று மாலை இடியுடன் கூடிய பெய்த பலத்த மழையால் ஜலாலாபாத் மற்றும் நங்கர்ஹர் மாகாணத்தில் மரங்கள், சுவர்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்ததில் 35 பேர் உயிரிழந்தனர். மேலும் 230 பேர் படுகாயமடைந்தனர்.

    காயம் அடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் நங்கர்ஹார் பிராந்திய மருத்துவமனை மற்றும் பாத்திமா-துல்-சஹ்ரா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் உடல்களும் இதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டன.

    இதுகுறித்து தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் துயரத்தில் நாங்கள் பங்கு கொள்கிறோம். இஸ்லாமிய எமிரேட்டின் தொடர்புடைய நிறுவனங்கள் விரைவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் மருந்துகளை வழங்குவார்கள்," என்றார்.

    கடந்த மே மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகினர். மேலும் விவசாய நிலங்கள் சேதமாயின. உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான் காலநிலை மாற்றத்தின் பாதிப்பு காரணமாக இயற்கை பேரிடர் சம்பவங்களுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    • காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • விபத்து குறித்து தகவல் அறிந்த உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத், மீட்பு பணிக்காக உயர் அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் இன்று அதிகாலையில் டபுள் டக்கர் பேருந்து ஒன்று பால் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

    லக்னோ- ஆக்ரா விரைவுச் சாலையில் பீகாரில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த டபுள் டக்கர் பேருந்து, பால் கண்டெய்னர் லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட தகவலின்படி, விபத்தில் 18 பேர் இறந்திருக்கலாம் என்றும் 19 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத், மீட்பு பணிக்காக உயர் அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

    • பராமரிப்பாளர்கள் யானைகளை வழிக்கு கொண்டுவர வாலை பிடித்து இழுத்தால் அவை பயந்துள்ளது என்று கூறப்படுகிறது.
    • மக்கள் அலறியடித்து பயந்து சிதறிய இந்த சம்பவதின் வீடியோ இணையதளத்தில் பரவி வைரழகை வருகிறது

    இலங்கை தலைநகர் கொழும்பு -வுக்கு தெற்கே 280 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கதிர்காமம் பகுதியில் நேற்று நடந்த இந்து மத கோவில் நிகழ்ச்சியில் யானைகள் அழைத்துவரப்பட்டன.  இரவு கொண்டாட்டங்களின்போது திடீரென பாகனின் கட்டுப்பாட்டை இழந்த யானைகள் அச்சத்தில் பிளிறியதால் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தினர்

    இதனால் ஏற்பட்ட நெரிசலில் 12 பேர் காயமடைந்துள்ளனர். சிவப்பு, நீல ஆடைகளுடன் அலங்கரிக்கப்பட்டு நிகழ்ச்சிக்கு அழைத்து  அழைத்துவரப்பட்ட  யானைகள் மணி இசையாலும், பராமரிப்பாளர்கள் அதை வழிக்கு கொண்டுவர வாலை பிடித்து இழுத்தாலும் யானை பயந்துள்ளது என்று கூறப்படுகிறது.

    மக்கள் அலறியடித்து பயந்து சிதறிய இந்த சம்பவதின் வீடியோ இணையதளத்தில் பரவி வைரழகை வருகிறது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யானை துன்புறுத்தப்பட்டதற்கு விலங்குகள் நல ஆர்வர்களிடமிருந்து கண்டங்கள் குவிந்து வருகிறது.

    • குரங்குக்கு வாழை இலையில் தடல் புடல் சாப்பாடு விருந்து வழங்கப்பட்டது.
    • வயிறு நிறைந்ததும் அது தனக்குரிய வேலையை காட்ட தொடங்கியது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹிரிசாவே நுகேஹள்ளி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமண விழா நடைபெற்றது. விழாவில் மணமகன் வீட்டார், மணமகள் வீட்டார் ஏராளமானோர் குவிந்தனர்.

    திருமணம் முடிந்ததும் மண்டபத்தில் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் சுட சுட சுவையான உணவு விருந்து பரிமாறப்பட்டது. அப்போது குரங்கு ஒன்று மண்டபத்திற்குள் புகுந்து மாப்பிள்ளையின் அருகில் அமர்ந்தது.

    அந்த குரங்குக்கு வாழை இலையில் தடல் புடல் சாப்பாடு விருந்து வழங்கப்பட்டது. அது ஹாயாக பந்தியில் உட்கார்ந்து ருசிக்க, ருசிக்க சாப்பிட்டது. வயிறு நிறைந்ததும் அது தனக்குரிய வேலையை காட்ட தொடங்கியது.

    பந்தியில் சாப்பிட்டு கொண்டிருந்த மற்றவர்களின் வாழை இழைகளை பிடித்து இழுத்தும், அதில் இருந்த உணவுகளை கீழே இழுத்து போட்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டது.

    மேலும் நாற்காலியிலும், மேஜையிலும் தாவி, தாவி குதித்து இலையில் இருந்த உணவுகளை தூக்கி வீசியது.

    மேலும் திருமண விழாவிற்கு வந்திருந்த சுசீலாம்மா, லீலாவதி, நிங்ககவுடா, கவுரம்மா, கிரிஜாம்மா மற்றும் மஞ்சுஸ்ரீ என்ற 7 வயது சிறுமி ஆகியோரை துரத்தி துரத்தி கடித்து குதறி காயப்படுத்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த திருமணத்திற்கு வந்த 2 வீட்டார் உறவினர்களும் அங்கும், இங்குமாக ஓடினர்.

    பின்னர் அங்கிருந்து வெளியே வந்த குரங்கு அதே சாலையில் உள்ள மாவு ஆலைக்குள் புகுந்து ஹொன்ன ஹள்ளியை சேர்ந்த கிரிகவுடா, திம்மே கவுடா ஆகியோைரயும் கடித்து குதறியது. இவர்கள் அனைவரும் ஹிரிசாவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் 4 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதால் மேல்சிகிச்சைக்காக ஹாசன் மற்றும் ஆதிசுஞ்சனகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் குரங்கு புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

    • துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், பந்துவார்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (45), நடுச்சூரங்குடியைச் சேர்ந்த மாரிச்சாமி (40), வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (35) மற்றும் மோகன் (30) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

    மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • வகுப்பு ஆசிரியர் மாணவியை தூக்கிக்கொண்டு முதல் உதவி சிகிச்சை அளித்தார்.
    • மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள சீலையம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டி மகள் ரித்திகா (வயது8) என்பவர் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவி தனது வகுப்பறையில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தார். அப்போது இந்த வகுப்பறையில் பழுதான மேற்கூரை கட்டிடம் இடிந்து மாணவியின் தலை மீது விழுந்தது. இதில் மாணவிக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்ததும் அருகில் இருந்த மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    உடனே வகுப்பு ஆசிரியர் மாணவியை தூக்கிக்கொண்டு முதல் உதவி சிகிச்சை அளித்தார். பின்னர் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அலறியடித்துக் கொண்டு பள்ளிக்கு ஓடி வந்தனர். பின்னர் நடந்த விபரத்தை கேட்டு அழுதபடியே மாணவியை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் பள்ளியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    பள்ளிகள் திறப்புக்கு முன்பு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிமாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தயாராக செய்து கொடுக்க வேண்டும். பழுதடைந்த கட்டிடங்கள், சுவர்கள் ஆகியவற்றை இடித்து பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டும் பெரும்பாலான பள்ளிகள் இதனை பின்பற்றுவதில்லை. எனவே இனிமேலாவது அதிகாரிகள் பள்ளிகளில் பாதுகாப்பு வசதிகள் சரியான முறையில் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • எத்தனை நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் தரப்பில் இருந்து கூறப்படவில்லை.
    • அடுத்தடுத்து நிகழும் துப்பாக்கி சூடு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

    கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவின் தெற்கு ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள போர்டைஸ் என்ற பகுதியில் சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்த நிலையில், தாக்குதலை நடத்தியவர் யார், துப்பாக்கி சூடு கடைக்கு வெளியே நடந்ததா அல்லது உள்ளே நடந்ததா உள்ளிட்ட விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.

    சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு நடந்த ஒரு நாள் கழித்து கென்டக்கி லூயிஸ்வில்லியில் உள்ள நைட் கிளப்பிற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் காயமடைந்தனர்.

    சனிக்கிழமை நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயங்களுடன் இருவர் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. மேலும் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

    மேலும் எத்தனை நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் தரப்பில் இருந்து கூறப்படவில்லை.

    அடுத்தடுத்து நிகழும் துப்பாக்கி சூடு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

    • புதிய தரவரிசையில் முதலிடத்தையும் இழக்கிறார்.
    • காயத்துக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய ஜோகோவிச் முடிவு செய்துள்ளார்.

    பாரீஸ்:

    உலகின் 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீரரும், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) பிரெஞ்சு ஓபனில் வலது கால்முட்டியில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் 4-வது சுற்றில் 5 செட் வரை போராடி வெற்றி பெற்றார்.

    முட்டியில் வலி அதிகமானதால் ஸ்கேன் எடுத்து பார்த்த போது, ஜவ்வு கிழிந்திருப்பது தெரியவந்தது. இதனால் பிரெஞ்சு ஓபனில் காலிறுதிக்கு முன்பாக வெளியேறியதுடன், வருகிற 10-ந்தேதி வெளியாகும் புதிய தரவரிசையில் முதலிடத்தையும் இழக்கிறார்.

    இந்த நிலையில் காயத்துக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய ஜோகோவிச் முடிவு செய்துள்ளார். ஆபரேஷனுக்கு பிறகு அதில் இருந்து மீள்வதற்கு 3 முதல் 6 வாரங்கள் ஆகும். எனவே அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை தவற விடும் ஜோகோவிச், அதே மாத கடைசியில் நடக்கும் பாரீஸ் ஒலிம்பிக்கிலும் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.

    ×