search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவமனை"

    • அந்த வீடியோவை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும்.
    • மருத்துவமனை நிர்வாகம் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    சீனாவில் 5 மாதங்களுக்கு முன்பு கோவா என்ற பெண்ணுக்கு மார்பகத்தை பெரிதுபடுத்தும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

    இந்நிலையில், இந்த அறுவை சிகிச்சையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. அந்த வீடியோவில் கோவாவின் முகம் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்து கோவா அதிர்ச்சியடைந்துள்ளார்.

    என்னுடைய தனியுரிமையை மருத்துவமனை நிர்வாகம் மீறியுள்ளதாக கூறியுள்ள கோவா, அந்த வீடியோவை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அவரின் கோரிக்கையை மறுத்துவிட்டது. இந்த வீடியோவை நாங்கள் எடுக்கவில்லை எனவும், மருத்துவமனையில் உள்ள 3 மாதங்களுக்கு மேலான சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளது. ஆகவே யார் இந்த வீடியோவை எடுத்தார்கள் என்று கண்டுபிடிக்க இயலாது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

    மேலும், இந்த அறுவை சிகிச்சை வீடியோவை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்குவதற்கு வேண்டுமானால் உதவி செய்ய முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த பதிலை கோவா ஏற்கவில்லை. "ஆபரேஷன் தியேட்டருக்குள் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதனை கண்டிப்பாக வெளியில் உள்ளவர் எடுத்திருக்க முடியாது. மருத்துவமனையில் உள்ள ஒருவர் தான் எடுத்திருக்க வேண்டும். ஆகவே அந்த வீடியோவை எடுத்தவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து அந்த வீடியோவை எடுத்தவர் வேலையை விட்டு சென்று விட்டதாகவும் அவரது தகவல்கள் தங்களிடம் இல்லை என்றும் கடைசியாக மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

    பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக அப்பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இளம் வயதில் இருந்து முதியவர் வரை பெரும்பலானோருக்கு மாரடைப்பு ஏற்படுவது சகஜமாகிவிட்டது.
    • இதயத்தில் 100 சதவீத அடைப்பு ஏற்பட்ட நோயாளி ஒருவர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

    சமீப காலங்களில் இளம் வயதில் இருந்து முதியவர் வரை பெரும்பலானோருக்கு மாரடைப்பு ஏற்படுவது சகஜமாகிவிட்டது. பல இளம் வயது நபர்கள் இதில் பலியாகின்றனர். இக்கால வாழ்க்கை முறையும், உணவு பழக்க வழக்கங்களும், மன அழுத்தம், சமூதாய சூழல் மற்றும் பல காரணங்கள் மாரடைப்புக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

    பெரும்பாலும் ஒருவரின் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டால் மருத்துவர்கள், அவர்களுக்கு முதலில் செய்யும் ஒரு சிகிச்சை ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி. இதில் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் எந்த இரத்த குழாயில் அடைப்பு இருக்கிறது என்பதை கண்டறிந்து அதில் ஸ்டெண்ட் வைத்து அந்த அடைப்பை அகற்றுவர். இதில் இரத்த குழாயில் எந்தளவுக்கு அடைப்பு இருக்கிறது என்பதைப் பொறுத்து மருத்துவர் சதவீத அளவை கணக்கிடுவர்.

    இதயத்தில் 100 சதவீத அடைப்பு ஏற்பட்ட நோயாளி ஒருவர் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். பொதுவாக 100 சதவீத அடைப்பு ஏற்பட்டவர்கள் உயிர்பிழைப்பது மிகவும் கடினம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த நிலையை புரட்டிப் போடும் வகையில், மருத்துவர்கள் ஒரு மனம் நெகிழும் சம்பவத்தை நடத்தியுள்ளனர்.

    இதயத்தின் பெரிய இரத்தக்குழாயில் 100 சதவீதம் அடைப்பு ஏற்பட்ட 58 வயதான வழக்கறிஞர் எம்.ஸ்டாலின் மணி என்பவரை மருத்துவர்கள் குணப்படுத்தி உள்ளனர். இதற்காக அவருக்கு சிறப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, ரத்தக்குழாயில் "ஸ்டென்ட்" பொருத்தி அடைப்பை சரி செய்துள்ளனர். இதன் மூலம் அவர் மறுவாழ்வு பெற்றுள்ளார்.

    பூரண குணமடைந்ததிற்கு பின் அவர் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் , மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதியை சந்தித்து சால்வை அணிந்து நன்றி தெரிவித்தார். தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கூட செய்யத் தயங்கும் அறுவை சிகிச்சையை அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து நடத்தி வெற்றி பெற்று இருப்பது பாராட்டை குவித்து வருகிறது.

    மேலும், இதுபோன்ற செயல்கள் நடக்கும் போது அரசு மருத்துவனை மீதும் அரசு மருத்துவர்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • பா.ம.க. பிரமுகர் சங்கரை வெட்டி கொல்ல முயன்ற சம்பவத்தால் கடலூர் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் எஸ்.என்.சாவடியை சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் சங்கர் (வயது 43). வன்னியர் சங்க முன்னாள் நகர தலைவரான சங்கர், பா.ம.க. பிரமுகராக உள்ளார். நேற்று மதியம் சங்கர், தனது மனைவி தனலட்சுமியுடன் வீட்டின் முன்பு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் கொண்டமர்மகும்பல் அங்கு வந்தது.பின்னர் அந்த கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் சங்கரை கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனே அந்த கும்பல் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் ஏறி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கண் முன்னே தனது கணவரை மர்மகும்பல் வெட்டியதால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி கதறி அழுதார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த சங்கரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னா் அவா் மேல்சிகிச்சைக்காக புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் எஸ்.என்.சாவடியை சோந்த் மகாலிங்கம் மகன்கள் சங்கா், விஜய், பிரபு ஆகியோருக்கும் அதே பகுதியை சோ்ந்த தங்கபாண்டியன், சதிஷ், வெங்கடேசன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. இதன்காரணமாக சங்காின் தம்பி பிரபுவை (35) சதிஷ் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து கடந்த 28.2.2021 அன்று தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர்.

    இந்த வழக்கில் சங்கர் முக்கிய சாட்சியாக இருப்பதாலும், வழக்கை முன்னின்று நடத்துவதாலும் அவா் மீது விரோதம் கொண்ட சதிஷ், வெங்கடேசன் உள்ளிட்டோா் சங்கரை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளது தெரியவந்தது.

    இந்த நிலையில் சங்கரை வெட்டி கொல்ல முயன்ற கும்பல் யார் என்பதை கண்டுபிடிக்க போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சங்கரை அரிவாளால் வெட்டியவர்கள் மோட்டார் சை்ககிளில் தப்பி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதனை வைத்து தற்போது 4 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே பா.ம.க. பிரமுகர் சங்கரை வெட்டி கொல்ல முயன்ற சம்பவத்தால் கடலூர் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டார்.
    • ராஜ்குமார் உயிரிழந்துள்ளது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கோட்டக்கரையில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றபோது இளைஞர் ராஜ்குமார் தீக்குளித்து ஓடி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கடந்த 4ம் தேதி ஆக்கிரப்பு வீட்டை வருவாய்த் துறையினர் அகற்ற முயன்றபோது எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் ராஜ்குமார் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, எளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழி வி.ஏ.ஓ. பாக்கிய ஷர்மா ஆகிய 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் 85சதவீதம் தீக்காயங்களுடன் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் ராஜ்குமார் உயிரிழந்தார்.

    ராஜ்குமார் உயிரிழந்துள்ளது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆம்ஸ்ட்ராங்கின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
    • கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிகோரி மாநகராட்சியிடம் மனு அளிக்கப்பட்டது.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பிரேத பரிசோதனைக்கு பிறகு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்ஸ்ட்ராங் உடல் உறவினர்களிடம் இன்று இரவு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, ஆம்ஸ்ட்ராங்கின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

    சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உடல் ஏற்றப்பட்ட வாகனம் அவரது இல்லத்திற்கு புறப்பட்டது.

    இந்நிலையில், ஆம்ஸ்வ்ராங் உடல் கட்சி அலுவலத்தில் அடக்கம் செய்வது தொடர்பாக அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதிகோரி மாநகராட்சியிடம் மனு அளிக்கப்பட்டது.

    அனுமதி கோரி மாநகராட்சியிடம் அளித்த கோரிக்கை மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கு தொடர்பாக நாளை காலை 9 மணிக்கு காணொலி காட்சி மூலம் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தாக்கல் செய்த வழக்கை நீதிபதி அனிதா சுமந்த் விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

    ஆனால், நீதிபதி அனிதா சுமந்த் விசாரிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து ஆம்ஸ்ட்ராங் தரப்பு வழக்கறிஞர்கள் கடும் அதிருப்தி தெரிவித்ததுடன், போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

    அதனால், ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்க வழக்கை மாநகராட்சிகளுக்கான நீதிபதியே விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி கொலை செய்தது.
    • கொலை வழக்கில், 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட கோகுல், விஜய், சிவசக்தி என்ற 3 பேரிடம் போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.

    • ஆம்ஸ்ட்ராங் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    • குடும்பத்தினரை தவிர வேறு யாருக்கும், ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு வர அனுமதியில்லை.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், பிரேத பரிசோதனைக்கு பிறகு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்ஸ்ட்ராங் உடல் உறவினர்களிடம் இன்று இரவு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, ஆம்ஸ்ட்ராங்கின் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

    சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உடல் ஏற்றப்பட்ட வாகனம் அவரது இல்லத்திற்கு புறப்பட்டது.

    நாளை காலை 9 மணிக்கு நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை பொறுத்து ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் நடைபெறும் என பூவை ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    குடும்பத்தினரை தவிர வேறு யாருக்கும், ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு வர அனுமதியில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • பாமக பிரமுகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் கடலூரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
    • கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை.

    கடலூர் மாவட்டம் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியில் வசித்து வருபவர் பாமகவை சேர்ந்த சிவசங்கர்.

    இவர் மீது 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிவசங்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சிவசங்கர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பாமக பிரமுகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் கடலூரில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    • உயிரிழந்த 21 குழந்தைகளில் 19 குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளது.
    • இதே மருத்துவமனையில் கடந்தாண்டு ஒரு நாளில் 18 பேர் உயிரிழந்தனர்.

    மகராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள சத்திரபதி சிவாஜி மகாராஜ் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் பிறந்த 21 குழந்தைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கல்வா மருத்துவமனை என அறியப்படும் இந்த மருத்துவமனையில் பிறந்த 15 குழந்தைகளும், இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்ட 6 குழந்தைகளும் கடந்த மாதம் உயிரிழந்தது.

    உயிரிழந்த 21 குழந்தைகளில் 19 குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

    இந்தாண்டு மட்டும் இந்த மருத்துவமனையில் பிறந்த 110 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஜனவரி - 17, பிப்ரவரி - 10, மார்ச் - 22, ஏப்ரல் - 24, மே - 16 ஜூன் - 21, குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஜூலை மாதத்தில் எத்தனை குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல்கள் கிடைக்கவிலை. ஆனால் நேற்று 2 குழந்தைகள் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமின் படேல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், குழந்தைகளின் மரணத்திற்கு யார் பொறுப்பேற்பது, மகாராஷ்டிரா அரசா? மருத்துவமனை நிர்வாகமா? அத்தியாவசிய மருந்துகள் கிடைக்காததால் தான் குழந்தைகள் உயிரிழந்தது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சுகாதார அமைச்சர் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    இதே மருத்துவமனையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு நாளில் 18 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • கடற்கரை பகுதியான அல்- மவாசி பகுதியில் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள கூடாரங்களின்மீது நேற்று இரவு இஸ்ரேல் குண்டு மழை பொழிந்துள்ளது.
    • சுமார் 2000 பவுண்டுகள் [சுமார் 1000 கிலோ] எடையிலான 10,000 ஆயுதங்களையும், மிசைல்கலையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பிவைத்துள்ளது

    பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் ஓய்ந்தபாடலில்லை. இந்த போரில் இதுவரை 37,718 பேர் உயிரிழந்துள்ள நிலையில் காசா நகரம் முற்றிலும் உருக்குலைந்துள்ளது. பாலஸ்தீன மக்கள் அதிகம் வாழும் மற்றொரு நகரமான ரஃபா மீது இஸ்ரேல் தற்போது குறிவைத்து தாக்குதல்களை நடத்திவருகிறது. மக்கள் தஞ்சமடைந்துள்ள முகாம்கள், மருத்துவமனைகள் என வகைதொகை இன்றி கண்மூடித்தனமாக இஸ்ரேல் நடத்தி வரும் இந்த தாக்குதல்களுக்கு உலக நாடுகள் கண்டம் தெரிவித்து வருகின்றன.

    இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவது எட்டாக்கனியாக இருந்து வரும் நிலையில் ரஃபா நகரில் உள்ள கடற்கரை பகுதியான அல்- மவாசி பகுதியில் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள தற்காலிக கூடாரங்களின் மீது நேற்று இரவு இஸ்ரேல் குண்டு மழை பொழிந்துள்ளது. இந்த தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் தாக்குதலுக்குள்ளான  கூடாரங்களில் இருந்த 40 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

     

     

    இஸ்ரேலின் பீரங்கிகள் அப்பகுதியில் முன்னேறிவந்துள்ள நிலையில் அங்குள்ள மக்களிடம் பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று கூறபடுகிறது. இதற்கிடையில் போர் தொடங்கிய கடந்த அக்டோபர் மாதம் முதல் இன்றுவரை அதிக சேதத்தை ஏற்படுத்தும் சுமார் 2000 பவுண்டுகள் [சுமார் 1000 கிலோ] எடையிலான 10,000 ஆயுதங்களையும், மிசைல்கலையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பிவைத்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

     

    • முஜாஹித்தின் பிறப்புறுப்பை நீக்கி, பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
    • தற்போது பெண்ணாக மாறியதால் தற்போது என்னுடன் வசிக்க வேண்டும் ஓம் பிரகாஷ் கட்டயப்படுத்துகிறார்.

    சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு வாலிபரின் கட்டாயத்தின் பேரில் அவருடன் சேர்ந்து டாக்டர்கள் மற்றொரு வாலிபரின் பிறப்புறுப்பை நீக்கி பெண்ணாக மாற்றிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது . மன்சூர்பூரில் உள்ள பெக்ராஜ்பூர் மருத்துவ கல்லூரில் முஜாஹித் (வயது 20) என்ற வாலிபருக்கு நடந்த இந்த சம்பவத்தின் அதிர்ச்சிப் பின்னணி தற்போது தெரியவந்துள்ளது.

    முன்னதாக முஜாஹித்திற்கு உடல்நிலை சரியில்லை என பொய் கூறி வலுக்கட்டாயமாக அவரை ஓம்பிரகாஷ் என்பவர் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்குள்ள மருத்துவர்களிடம் முஜாஹித்தின் பிறப்புறுப்பை நீக்கி, பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.முஜாஹித் மருத்துவமனையில் தூங்கிக் கொண்டிருக்கும்போது மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

    இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முஜாஹித் தனக்கு நடந்த இந்த கொடூரத்தைக் குறித்து பேசியபோது, இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பிருந்தே ஓம் பிரகாஷ் என்னை நிர்வாணமாக படம்பிடித்து தான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் அவற்றை இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். நான் வசித்து வந்த குடியிருப்பில் வைத்து என்னை ஓம் பிரகாஷ் பலமுறை பாலியல் துன்புறுத்தல் செய்தார்.

    இந்நிலையில் அவரது சூழ்ச்சியால் தற்போது பெண்ணாக மாறியதால் தற்போது என்னுடன் வசிக்க வேண்டும் ஓம் பிரகாஷ் கட்டயப்படுத்துகிறார். மேலும் எனது தந்தையை கொன்றுவிடுவேன் என்று ஓம் பிரகாஷ் மிரட்டுகிறார் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து ஓம் பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வெறும் தண்ணீரையே வேகமாக காயத்தின் மீது அடித்து கழுவலாம்.
    • மருத்துவமனைக்கு உடனடியாக சென்று முதல் டோஸ் ரேபீஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும்.

    நாய் கடித்துவிட்டால் நம்மில் பலர் உடனே மருத்துவமனைக்கு செல்வதையே முதலில் செய்கின்றனர். மருத்துவமனைக்கு சென்று ரேபீஸ் தடுப்பூசி செலுத்துவது முக்கியம்தான். ஆனால் அதற்கு முன்பு நாம் கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அதிலும் முதல் ஒரு மணிநேரத்தில் நாம் செய்யும் விஷயங்கள்தான் நம் உயிரை காப்பாற்றும்.

    நாய் கடித்தால் அது ரேபீஸ் பாதித்த நாயா அல்லது சாதாரண நாயா என்ற ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை. நாய் கடித்த உடனேயே அருகில் எங்காவது டேப் (Tap) இருந்தால் அதனை திறந்து நாய் கடி காயங்களில் தண்ணீரை வேகமாக அடித்து கழுவ வேண்டும். ஒரு நிமிடம் வெறும் தண்ணீரில் கழுவிய பின்னர், சோப்பை காயத்தின் மீது நன்கு தடவி பிறகு அதே போல தண்ணீரை விட்டு கழுவ வேண்டும். 15 நிமிடங்கள் இதனை செய்ய வேண்டும். ஒருவேளை சோப்பு இல்லாவிட்டால், வெறும் தண்ணீரையே வேகமாக காயத்தின் மீது அடித்து கழுவலாம்.


    நாய் பற்கள் பட்டு துளை போல காயம் ஏற்பட்டிருந்தால் அந்த காயத்துக்குள் தண்ணீரை வேகமாக அடித்து கழுவ வேண்டியது அவசியம். அதன் பின்னர் டெட்டால் போன்றவற்றை காயத்தின் மீது ஊற்றி நன்றாக கழுவிவிட வேண்டும். இப்படி செய்யும் போது காயங்களின் மேற்பரப்பில் இருக்கும் ரேபீஸ் வைரஸ்கள் 80 சதவீதம் அழிந்துவிடும்.

    இதையடுத்து, மருத்துவமனைக்கு உடனடியாக சென்று முதல் டோஸ் ரேபீஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும். முதல் டோஸ் தடுப்பூசியை எவ்வளவு சீக்கிரமாக எடுக்கிறோமோ அந்த அளவுக்கு ரேபீஸ் கிருமியை நாம் அழித்துவிடலாம். அதன் பின்னர் மருத்துவர் கூறும் நாட்களில் சென்று அடுத்தடுத்து 3 டோஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும். நாய் கடி காயங்களுக்கு பொதுவாக தையல் போட மாட்டார்கள். காயம் காற்றோட்டமாக இருக்க வேண்டும்.

    ×