search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஸா"

    • முகாம்களில் தங்களின் துயர நிலையிலும் இறுக்கமான மனதுடன் பாலஸ்தீன மக்கள் கொண்டாடும் பக்ரீத் இது.
    • 3 கட்ட பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தத்தை எட்ட முடியும் என்பதை நான் தீவிரமாக நம்புகிறேன்.

    உலகம் முழுவதும் இன்று (ஜூன் 17) திங்கட்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக தொடங்கியுள்ளது. உலகெங்கிலும் பரந்து விரிந்த அதிக மக்களைக் கொண்ட இரண்டாவது பெரிய மதம் இஸ்லாம் (முதலாவது கிறிஸ்துவம்) ஆகும் . இந்நிலையில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி தேசியத் தலைவர்களும் உலகத் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

    தற்போது உள்ள உலக நடப்பின்படி இஸ்லாமிய மக்களைக்கொண்ட பாலஸ்தீன நாட்டின்மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரில் இதுவரை சுமார் 37,000 மக்கள் பலியாகியுள்ளனர். வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்ட மசூதிகளே காஸாவில் மிஞ்சுகின்றன. முகாம்களில் தங்களின் துயர நிலையிலும் இறுக்கமான மனதுடன் பாலஸ்தீன மக்கள் கொண்டாடும் பக்ரீத் இது. தற்காலிகமாக தாக்குதலை இஸ்ரேல் நிறுத்திவைத்துள்ளதால் சற்று ஆசுவாசப்பட அவர்களுக்கு கிடைத்துள்ள நேரம் இது.

     

    அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் வர உள்ளதால் காஸா போர் நிறுத்தத்துக்கு அதிபர் ஜோ பைடன் அழுத்தம் கொடுக்கத்  தொடங்கியுள்ள நிலையில் இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முக்கியத்துவம் வாய்ந்த வாழ்த்துச் செய்தி  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இந்த போரின் கொடூரங்களை நிறுத்துவதற்கான சரியான மற்றும் சிறந்த வழி இதுதான். ஆயிரக்கணக்கான குழந்தைகளும் அப்பாவி மக்களும் இந்த போரில் கொல்லப்பட்டுள்ளனர். தங்களின் வீடுகளையும் சொந்தங்களையும் இழந்து நிற்கும் அம்மக்களின் வலி மிகவும் ஆழமானது.

    3 கட்ட பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தத்தை எட்ட முடியும் என்பதை நான் தீவிரமாக நம்புகிறேன். இதற்கு ஹமாஸும், இஸ்ரேல் அரசும் உடன்பட்டு இந்த வன்முறை வெறியாட்டங்களை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும். இறைத்தூதர் இப்ராஹிம் கடவுளுக்காக தனது மகனையே தியாகம் செய்ய முன்வந்த இந்த பக்ரீத் திருநாளில் காஸாவில் தற்காலிகமாக நிலவி வரும் அமைதி நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேலின் போர் 7 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது.
    • இந்த தாக்குதல் குறித்து சமூக வலைத்தளங்கலில் 'All Eyes On Rafah" 2என்ற புகைப்படம் அனைவராலும் பகிரப்பட்டு வந்தது.

    பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேலின் போர் 7 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. இருத்தரப்பினரும் அமைதி ஒப்பந்தத்திற்கு வராமல் போர் தொடுத்து வருகின்றனர்.

    நேற்று இஸ்ரேலி டிஃபன்ஸ் ஃபோர்ஸ் ரஃபாபில் உள்ள அகதிகள் முகாமில் ஏவுகனைகளை வீசினர், இந்த தாக்குதலில் சிறு குழந்தைகள் உட்பட 45 பேர் மரணமடைந்தனர். இந்த தாக்குதல் குறித்து சமூக வலைத்தளங்களில் 'All Eyes On Rafah" என்ற புகைப்படம் அனைவராலும் பகிரப்பட்டு வந்தது.

    இதுவரை இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுக்குறித்து 'All Eyes On Rafah" புகைப்படத்தை பகிர்ந்து இந்திய திரையுலக பிரபலங்கள் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    ஆலியா பட், டியா மிர்ஸா, கரீனா கபூர், ரிச்சா, வருண் தவான்,ராஷ்மிகா மந்தனா, திரிஷா, சமந்தா, பார்வதி, துல்கர் சல்மான் போன்றவர்கள் அவர்களது சமூக வலைத்தளங்களில் 'All Eyes On Rafah" படத்தை பதிவிட்டு தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • காசாவுக்கு பொலிவியாவும் மனிதாபிமான உதவிகளை அனுப்ப தயாராகி வருகிறது என்று தெரிவித்தது.
    • பொலிவியா மக்களும், அரசாங்கமும் இஸ்ரேல் அரசுடன் தூதரக உறவுகளை முறித்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

    இஸ்ரேலுடனான தூதரக தொடர்பை துண்டித்து கொள்வதாக பொலிவியா நாடு அறிவித்துள்ளது. இது தொடர்பாக பொலிவியன் தகவல் முகமை கூறும்போது, பாலஸ்தீன மக்களுக்கு எதிரான மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இதனால் இஸ்ரேலுடனான தூதரக உறவுகளை பொலிவியா துண்டித்து கொள்கிறது.

    காசாவுக்கு பொலிவியாவும் மனிதாபிமான உதவிகளை அனுப்ப தயாராகி வருகிறது என்று தெரிவித்தது. மேலும் ஐ.நா.வுக்கான பொலிவியா பிரதிநிதி டியாகோபாரி, ஐ.நா. சபையில் பேசும்போது, பொலிவியா மக்களும், அரசாங்கமும் இஸ்ரேல் அரசுடன் தூதரக உறவுகளை முறித்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். மக்களின் வாழ்க்கை, சர்வதேச சட்டம் அல்லது சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மதிக்காத அரசாக இஸ்ரேலை நாங்கள் கருதுகிறோம் என்றார்.

    இதற்கிடையே கொலம்பியா, சிலி ஆகிய நாடுகள் தங்களது இஸ்ரேலுக்கான தூதர்களை ஆலோசனைக்காக திரும்ப அழைத்துள்ளன. இதுதொடர்பாக சிலி வெளியுறவு அமைச்சகம் கூறும்போது காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் ஏற்றுக்கொள்ள முடியாத மீறல்களைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலுக்கான சிலி தூதர் ஜார்ஜ் கர்வாஜலை சாண்டியாகோவிற்கு திரும்ப அழைக்க சிலி அரசு முடிவு செய்துள்ளது" என்று தெரிவித்தது.

    • இஸ்ரேல் தனது வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.
    • எரி பொருள் தீர்ந்து விட்டதால் காசாவில் அனைத்து மருத்துவமனைகளும் முடங்கியுள்ளன.

    டெல்அவிவ்:

    இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பு கடந்த 7-ந்தேதி தாக்குதல் நடத்தியது.

    இதையடுத்து போர் பிரகடனத்தை அறிவித்த இஸ்ரேல், காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று 19-வது நாளாக தாக்குதல் நடந்து வருகிறது.

    இதற்கிடையே காசா மீது இடைவிடாத தாக்குதல் நடத்தப்படும் என்று இஸ்ரேல் ராணுவம் நேற்று அறிவித்தது. அதன்படி இஸ்ரேல் தனது வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் இஸ்ரேல் தாக்குதலில் 704 பேர் பலியானார்கள். இதுகுறித்து பாலஸ்தீன அதிகாரிகள் கூறும்போது, காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 704 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது" என்றார்.

    ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் மூலம் குண்டு மழை பொழிந்து வருகிறது. நேற்று 400-க்கும் மேற்பட்ட ஹமாஸ் இலக்குகளை தாக்கியதாகவும், ஏராளமான ஹமாஸ் அமைப்பினரை கொன்றதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

    இதற்கிடையே காசாவின் சுகாதார அமைச்சகம் கூறும்போது, இஸ்ரேலின் தாக்குதலில் காசா பகுதியில் 2360 குழந்தைகள் உள்பட 5791 பேர் பலியாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.

    காசாவில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகி உள்ளன. இடி பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

    இஸ்ரேல் தாக்குதல்களால் காசாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதற்கிடையே எரி பொருள் தீர்ந்து விட்டதால் காசாவில் அனைத்து மருத்துவமனைகளும் முடங்கியுள்ளன.

    இதனால் சிகிச்சை பெறுபவர்கள் கடும் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இதனால் காசாவுக்குள் எரி பொருளை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலை உலக நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

    அதே போல் காசாவில் தண்ணீர் பற்றாக்குறையும் நிலவி வருகிறது.

    • இஸ்ரேலை சேர்ந்த பெரும்பாலானோர் அவர்கள் குடும்பத்தினர் முன் வைத்தே கொலை
    • ஹமாஸ் தாக்குதலுக்கு உயிரிழந்த இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது

    ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ந்தேதி (சனிக்கிழமை) திடீரென இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். 20 நிமிடத்திற்குள் 5 ஆயிரம் ஏவுகணைகள் இஸ்ரேல் நோக்கி சீறிப்பாய்ந்து தாக்கின. மேலும், ராக்கெட் லாஞ்சர், துப்பாக்கி ஆகியவற்றைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்கினர்.

    ஒவ்வொரு வீட்டையும் குறிவைத்து தாக்கினர். இதனால் வீட்டிற்குள் இருந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். வீட்டிற்குள் நுழைந்து ஒரு குடும்பத்தில் உள்ளவர்களை பிணைக் கைதிகளாக பிடிக்கும் முன், அந்த குடும்பத்தின் சிலரை அவர்கள் கண்முன்னே சுட்டுக்கொலை செய்தனர். இப்படி பலரை ஈவிரக்கம் இன்றி கொலை செய்துள்ளனர்.

    அந்த வகையில் நாகின் டி.வி. தொடரில் நடித்துள்ள நடிகை மதுரா நாயக்கின் சகோதரி (உறவினர்) மற்றும் அவரது கணவர் ஆகியோர் அவர்களது குழந்தைகள் கண்முன்னே கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது. இந்த வேதனையான செய்தியை மதுரா நாய்க் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ''நான் மதுரா நாயக். இந்தியவாழ் யூதர் (Jew). இந்தியாவில் நாங்கள் மொத்தம் 3 ஆயிரம் பேர் உள்ளோம். அக்டோபர் 7-ந்தேதி, நாங்கள் மகள் மற்றும் மகனை எங்களது குடும்பத்தில் இருந்து இழந்துள்ளோம். என்னுடைய உறவினர் (சகோதரி) ஒடாயா மற்றும் அவரது கணவர் ஆகியோர், அவர்களின் இரண்டு குழந்தைகள் முன் வைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.


    துக்கம் மற்றும் உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. தற்போது இஸ்ரேல் வலியில் உள்ளது. ஹமாஸின் தாக்குதலில் எங்களது குழந்தைகள், பெண்கள், தெருக்கள் எரிகின்றன. பெண்கள், குழந்தைகள், முதியவர்களை இலக்காக வைத்து தாக்கியுள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளார்.

    • போரை தொடங்கியது நாங்கள் அல்ல, ஆனால் முடித்து வைப்போம் என இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
    • நான்கு முறை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் டெலிபோனில் பேசியுள்ளார்

    ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது எதிர்பாராத வகையில் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் கடுமையான வகையில் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

    நேரடியாக போரில் குதிக்கவில்லை என்றாலும், ஆயுதங்கள் வழங்குவதற்கு தயாராக இருந்தது. ஈரான், லெபனானை மிரட்டும் வகையில் போர்க்கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்தது.

    இந்த நிலையில் அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுடன் முதல் விமானம் தெற்கு இஸ்ரேலில் தரையிறங்கியுள்ளது. இந்த தகவலை இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. என்றாலும், என்னென்ன ஆயுதங்கள் என்ற விவரத்தை வெளியிட மறுத்துள்ளது.

    இந்த போர் நேரத்தில் இருநாட்டு ராணுவ ஒத்துழைப்பு எங்கள் பகுதியின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரதன்மைக்கு முக்கியமானது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு நான்கு முறை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் டெலிபோனில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காசா எல்லையில் அமைந்துள்ளதால் ஹமாஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு எளிதாக உள்ளாக்கப்பட்டது
    • பொதுமக்கள் வீடுகளிலேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்

    ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை திடீரென இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் கொன்று குவித்தனர்.

    காசா எல்லையில் இருந்து சில நிமிடங்களில் சென்றடையும் தூரத்தில் இருக்கும் இஸ்ரேல் கிராமம் க்ஃபர் அஜா. சுமார் 700 பேர் கொண்ட இந்த கிராமம், பண்ணைகளால் சூழ்ந்தது. ஒரு பள்ளிக்கூடம், தேவாலயத்துடன் செழிப்பான இடமாக இருந்தது.

    கடந்து சனிக்கிழமை இந்த கிராமத்திற்குள் புகுந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் குண்டுகளால் வீடுகளை தாக்கி, வீட்டில் இருந்த குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள் என அனைவரையும் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனால் இந்த கிராமத்தில் எந்த வீட்டிற்குள் சென்றாலும் இறந்தவர்கள் உடல்களாக காட்சியளிக்கின்றன.

    இஸ்ரேல் உடனடியாக பதிலடி கொடுத்ததில் பல ஹமாஸ் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். தெருக்களில் இவர்களின் உடல்கள் சிதறிக்கிடக்கின்றன.

    இதனால் ஒரு செழிப்பான கிராமம், இந்த போரினால் பிணங்களாக குவிந்து காட்சியளிக்கின்றன. ஒரு பக்கம் ரத்தம் படிந்து சுவர்கள், வீடுகள். மறுபக்கம் அடையாளம் காணப்படுவதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ள உடல்கள் என காட்சியளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • இஸ்ரேலில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது
    • காசா பகுதியில் 900 பேர் உயிரிழந்துள்ளனர்

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது.

    இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய 4-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலில் 1,008 பேர் உயிரிழந்துள்ளனர். 3,418 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    காசாவில் 900 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 4,250 பேர் காயம் அடைந்துள்ளனர். இஸ்ரேல் மண்ணில் 1500 ஹமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேல் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. வெஸ்ட் பேங்க் (மேற்கு கரை) பகுதியில் 21 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 130 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    • இஸ்ரேலில் பல்வேறு நாட்டினர் உயிருக்கு பயந்த நிலையில் உள்ளனர்
    • மந்திரி மந்திர தலையிட்டு இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள்

    ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதால், கோபம் அடைந்த இஸ்ரேல் உச்சக்கட்ட தாக்குதலை நடத்தி வருகிறது. காசா முனை மீது ஏவுகணைகளை தொடர்ந்து வீசி வருகிறது. ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இதனால் இஸ்ரேல் மற்றும் காசா முனையில் பல்வேறு நாட்டினர் தவித்து வருகின்றனர். அவர்கள் உயிரை கையில் பிடித்தபடி இருந்து வருகின்றனர். சைரன் சத்தம், குண்டு மழைக்கு இடையில், தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    இந்தியாவைச் சேர்ந்த ஏராளமானோர் இஸ்ரேலில் வசித்து வருகிறார்கள். குறிப்பாக கேரளாவைச் சேர்ந்த 7 ஆயிரம் பேர் வசித்து வருவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தவர்கள் மற்றும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

    அவர் தனது வேண்டுகோளில் ''இஸ்ரேலில் உள்ள எங்கள் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, சாத்தியமான எல்லா வழிகளிலும் தலையிடுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்'' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஏற்கனவே, சனிக்கிழமை ஹமாஸ் நடத்திய தாக்குதலில் கேரள மாநில நர்ஸ் ஒருவர் காயம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹமாஸ் தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலி
    • காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது

    ஹமாஸ் நடத்திய எதிர்பாராத தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மண்ணில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தி வருகிறது. அதேபோல் ஹமாஸ் எல்லையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

    3 லட்சம் ராணுவ வீரர்களை தயார் செய்து வைத்துள்ளது. கடல் வழியாக தற்போது தாக்குதலை தொடங்கியுள்ளது. காசாவில் இருந்து மக்களை வெளியேறும்படி வலியுறுத்தியுள்ளது.

    காசாவை கட்டுக்குள் கொண்டுவர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல் மண்ணில் 1500 ஹமாஸ் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், எல்லை பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    அதேவேளையில் லெபனான் நாட்டின் எல்லையிலும் ராணுவத்தை குவித்து வருகிறது. இஸ்ரேல் நாட்டின் தெற்கு பகுதியை முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    நேற்று இரவில் இருந்து எல்லைத்தாண்டி ஹமாஸ் பயங்கரவாதிகள் வரவில்லை என்று ராணுவ செய்தி தொடர்பாளர் ரிச்சார்ட் தெரிவித்துள்ளார்.

    • முடக்கி வைத்திருந்த நிதியை ஈரானுக்கு அளித்ததால் பைடன் மீது விமர்சனம்
    • குழந்தைகள், இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது கொடியது

    ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து அதிரடி தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர்.

    ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஜோ பைடன் அரசை விமர்சித்துள்ளார். சமீபத்தில் கைதிகள் பரிமாற்றம் செய்ததுடன், ஈரானின் 6 பில்லியன் டாலர் பணத்தை பரிமாற்றம் செய்ய அமெரிக்கா சம்மதம் தெரிவித்ததை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

    இந்த நிலையில் இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-

    கொடியது. குழந்தைகள், இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நான் உங்களுடைய அதிபராக இருந்தபோது, வலிமையின் காரணமாக நாம் அமைதியை பெற்றிருந்தோம். தற்போது நமக்கு பலவீனம், சிக்கல், குழப்பம் உள்ளது. நான் அதிபராக இருந்திருந்தால், இஸ்ரேலில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அட்டூழியங்கள் ஒருபோதும் நடந்திருக்காது'' என்றார்.

    • இஸ்ரேல் தரப்பில் 700 பேர் உயிரிழந்த நிலையில் 2,300 பேர் காயம்
    • காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது

    ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. 3 லட்சம் வீரர்களை திரட்டியுள்ளது. 1973-ம் ஆண்டு நடைபெற்ற யோம் கிப்பர் போருக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் ராணுவ வீரர்களை முதல்முறையாக இஸ்ரேல் திரட்டியுள்ளது.

    இருதரப்பிலும் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பலரை ஹமாஸ் பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளை பிடித்து வைத்துள்ளனர். இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

    இந்த நிலையில், இன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியதாவது:-

    இஸ்ரேல் போரில் உள்ளது. நாங்கள் இந்த போரை விரும்பவில்லை. இது மிகவும் கொடூரமான, காட்டுமிராண்டித்தனம் வழியாக எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் போரை தொடங்காத போதிலும், இஸ்ரேல் போரை முடிக்கும்'' என்றார்.

    ஏற்கனவே, இதற்கு ஹமாஸ் விலை கொடுப்பார்கள். நீண்ட நாட்களுக்கு இது நினைவில் இருக்கும் வகையில் இருக்கும் என எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×