search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 204655"

    • வாகனத்தையும் பறிகொடுத்து நடுவழியில் தவிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு
    • குமரி மாவட்டம் முழுவதும் தினமும் நடைபெறும் அதிரடி சோதனை

    நாகர்கோவில் :

    தமிழகத்தின் தென்கோடி யில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருச்சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.

    தமிழகத்தில் விற்பனை யாகும் இருச்சக்கர வாகனங்களின் எண்ணிக்கையில் 25 சதவீதம் வாகனங்கள் குமரி மாவட்டத்தில் தான் விற்பனை ஆகிறது.

    அதி வேகத்தில் செல்லும் நவீன ரக இருச்சக்கர வாகனங்கள் மற்றும் அதிக ஒலி எழுப்பி செல்லும் வாகனங்களும் இங்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

    வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இம்மாவட்டத்தில் வாகன விபத்துக்களும் அதிகம் நடக்கிறது. குறிப்பாக இருச்சக்கர வாகன விபத்துக்கள் அதிகம் நடக்கிறது.

    மக்கள் அதிகம் நடமாடும் சாலைகளிலும், புறநகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையிலும் சாகசம் செய்யும் மாணவர்கள், வாலிபர்கள் இருச்சக்கர வாகன விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கன்னியா குமரி மாவட்டத்தில் விபத்துகள் மூலமாக 28 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்களுக்கு அதிக வேகம் மற்றும் குடி போதையில் வாகனங்களை ஓட்டி சென்றதே காரணம் என்பதை போக்குவரத்து போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.

    இதுபோன்ற சாலை விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து போலீ சாரும் இணைந்து தற்போது அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.

    அதன்படி மாவட்டம் முழுவதும் ஹெல்மெட் சோதனையை தீவிரப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண்பிர சாத் உத்தரவிட்டுள்ளார்.

    இதுபோல மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் இருச்சக்கர வாகனங்களில் வரும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து வரவேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். அவ்வாறு ஹெல்மெட் அணியாமல் வருவோருக்கு உடனடியாக ரூ.1000 அபராதம் விதிக்கலாம் என்றும் போலீ சாருக்கு உத்தரவிட்டார்.

    இப்படி மாவட்ட நிர்வாகமும், போலீஸ் சூப்பிரண்டும் ஒரே சேர விடுத்த உத்தரவை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், தக்கலை, மார்த்தாண்டம் என அனைத்து பகுதிகளி லும் இருச்சக்கர வாகன சோதனை தீவிரம் அடைந்தது.

    இதில் ஹெல்மெட் அணியாமல் வந்தால் ரூ.1000, லைசென்ஸ் இல்லையென்றால் ரூ.5 ஆயிரம், நம்பர் பிளேட் இல்லாமல் இருந்தால் ரூ.1500, ஒரே வண்டியில் 3 பேர் சென்றால் ரூ.1000 என அபராத தொகை வசூலிக்கப்படுகிறது. இதில் போலீசாரிடம் சிக்கும் வாலிபர்கள் பலரும் மொத்தமாக ரூ. 8 ஆயிரம் வரை அபராதம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது.

    முன்பெல்லாம் போலீசார் ஸ்பாட் பைன் விதித்தாலும் பணம் இல்லை என்றால் ஒரு செல்லாைன எழுதி கொடுப்பார்கள். அதனை கோர்ட்டில் செலுத்தி கொள்ளலாம்.

    இப்போது சோதனையில் சிக்குவோருக்கு செல்லான் கொடுப்பது கிடையாது. மாறாக ஆன்லைன் மூலம் அபராதத்தை உடனடியாக கட்டியாக வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படு கிறது. பணம் கட்ட வழி யில்லா விட்டால் வாக னத்தை போலீசார் பறி முதல் செய்து விடுவார்கள்.

    அபராத தொகையை கட்டிய பின்பு தான் வாகனத்தை எடுத்து செல்ல முடியும் என்பதால் சோதனையில் சிக்கிய மாணவர்கள் பலரும் நடுவழியில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்காக போலீசார் யாரும் மனம் இரங்கக்கூடாது என்று உயர் அதிகாரிகள் அறி வுறுத்தி உள்ளனர். போக்கு வரத்து விதிகளை மதிக்கவேண்டும் என்பதை அவர்களின் பெற்றோர், தங்கள் மகன், மகள்களுக்கு கற்று கொடுக்க வேண்டும் என்றும் இல்லையேல் இதுபோன்று அபராதம் கட்டி பணத்தை இழக்க வேண்டியதிருக்கும் என்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதில் வேதனை என்னவென்றால் வாலி பர்களுக்கு இணையாக இளம்பெண்களும் இச்சோதனையில் சிக்கி கொள்கிறார்கள். முன்பு இவ்வாறு சிக்கி கொள்ளும் பெண்களை போலீசார் எச்சரித்து அனுப்பி விடுவார்கள்.

    இப்போது அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. பணம் இல்லை யென்றால் பெற்றோருக்கு போன் செய்து அவர்களை வந்து அபராதத்தை கட்டி செல்லும்படி கூறுகி றார்கள். இதனால் நாகர் கோவில், தக்கலை பகுதி களில் இளம் பெண்களும் நடுவழியில் தவித்தப்படி நிற்கும் காட்சிகளை பார்க்க முடிகிறது.

    ஹெல்மெட் சோதனை ஒருபுறம் நடக்க அதிக ஒலி எழுப்பும் கருவிகளை பொருத்தியபடி வலம் வரும் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    குறிப்பாக அந்த வாகனங்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்று அதில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளை அகற்றிய பின்பு அதற்கும் அபராதம் பெறப்பட்ட பின்னரே அந்த வாகனங்கள் விடுவிக்கப்படுகிறது.

    • ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
    • வாகன சோதனையின் போது லைசென்ஸ் இல்லாமல் வருபவர்களும் சிக்கி வருகிறார்கள்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்குள் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்க கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். இதையடுத்து போக்குவரத்து பிரிவு போலீசார் தினமும் கலெக்டர் வளாகத்தின் முன் பகுதியில் அதிரடி வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. வாகன சோதனையின் போது லைசென்ஸ் இல்லாமல் வருபவர்களும் சிக்கி வருகிறார்கள். அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யும் போலீசார் அவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதித்து வருகிறார்கள். போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையிலான போலீசார் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனார். அப்போது அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிளின் நம்பர் பிளைட் அரசின் விதிமுறைக்கு உட்படாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதனால் அந்த மோட்டார் சைக்கிளில் முன் பகுதியில் வீல் லாக்கை மாட்டிவிட்டு சென்றனர்.

    போலீசார் சென்றதும் அந்த வாலிபர் அந்த லாக்கை உடைத்து விட்டு தனது மோட்டார் சைக்கிளை எடுத்துச்சென்றார். போலீசார் இது தொடர்பான சி.சி.டி.வி. ஆதாரங்களுடன் வடசேரி போலீசில் புகார் அளித்தனர். சம்பந்தப்பட்ட நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் வெள்ளமடி பகுதியை சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வடசேரி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    • அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் ஓட்டுபுற தெருவை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 51), பெயிண்டர்.

    இவர் நேற்று வடசேரி பஸ் நிலையத்திற்கு சென்றபோது, அங்கு வந்த அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பலியானார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு குமார், வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில், சுதர்சன், மதுபோதையில் பஸ் நிலையத்தில் சுற்றியதாகவும், அப்போது அங்கு வந்த கன்னியாகுமரியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபருடன் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதன்பிறகு அவர், பஸ் நிலையத்தில் நிலைதடுமாறி விழுந்தபோது அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பலியாகி உள்ளார்.

    இதனை தொடர்ந்து விபத்து தொடர்பாக அருமனையை சேர்ந்த பஸ் டிரைவர் ஸ்ரீரெங்கநாதன் (50) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    • சந்தேகம் அடைந்த போலீசார் டாரஸ் லாரியை சோதனை செய்தனர்.
    • உறுதிப்படுத்த அருகில் உள்ள எடை மேடைக்கு கொண்டு சென்று அதிக பாரம் இருந்ததை உறுதி செய்தனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தக்கலை அருகே பரைக்கோடு பகுதியில் ஒரு டாரஸ் லாரி எம் சண்ட் ஏற்றி வந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் டாரஸ் லாரியை சோதனை செய்தனர். அதில் அதிக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.

    மேலும் இதனை உறுதிப்படுத்த அருகில் உள்ள எடை மேடைக்கு கொண்டு சென்று அதிக பாரம் இருந்ததை உறுதி செய்தனர். உடனே போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் காவல்கிணறு பகுதியில் இருந்து ஏற்றி கேரளா மாநிலம் செங்கவிளை பகுதிக்கு கொண்டு செல்ல இருந்தது தெரிய வந்தது.

    இது சம்பந்தமாக தக்கலை போலீசார் லாரி டிரைவர் கேரளா மாநிலம் ஆற்றிங்கல் பகுதியை சேர்ந்த சுஜித் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்ற மகன் மீது போலீசார் வழக்கு

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரி ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் ஜான்போஸ்கோ (வயது 44), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மரிய கொரட்டி பிறீடா (40). இவர்களுக்கு ஜான் பிஜோ (17), ஜான் பினோ (7) என 2 மகன்கள் உள்ளனர்.

    ஜான் போஸ்கோ தனது பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டி வருவதால், தற்போது அப்பகு தியிலுள்ள வேறு ஒரு வீட்டில் வாடகைக்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் மேக்காமண்ட பத்தில் தனது தாய் இறந்த தால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மரிய கொரட்டி பிறீடா மகன்களுடன் அங்கு தங்கி இருந்தார்.

    நேற்று அவர், கணவருக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு, தனது மகன் ஜான் பிஜோவுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். குலசேகரம் நாகக்கோடு சந்திப்பு அருகே அரசு பஸ் சென்று கொண்டிருந்ததால், ஜான் பிஜோ திடீரென்று மோட்டார் சைக்கிளை பிரேக் போட்டு நிறுத்தினார். இதில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது.

    இந்த விபத்தில் மரிய கொரட்டி பிறீடா சாலையில் விழுந்தார். அப்போது அங்கு வந்த பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய அவர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அப்பகுதியினர் அவரை மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மரிய கொரட்டி பிறீடா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற ஜான் பிஜோ லேசான காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் கடையாலுமூடு குழிக்கால விளையை சேர்ந்த தபசிமுத்துவிடம் (55) விசாரணை நடத்தினர்.

    குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று மரிய கொரட்டி பிறீடாவின் உடல் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. அதன்பி றகு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது. இதற்கிடையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற ஜான் பிஜோ மீது குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மணலி புதுநகர் வழியாக வரும் கனரக வாகனங்கள் சர்வீஸ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன.
    • சர்வீஸ் சாலையில் வைக்கப்பட்டு உள்ள தடுப்பு கற்களை அகற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    பொன்னேரி:

    திருெவாற்றியூர்-மீஞ்சூர் இடையே மணலி புதுநகர் வழியாக வரும் கனரக வாகனங்கள் சர்வீஸ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன.

    இதனை தடுக்க சர்வீஸ்சாலை பிரியும் இடங்களான கொண்டக்கரை, நாபாளையம், வல்லூர், மணலி புதுநகர், ஆண்டார் மடம் உள்ளிட்ட இடங்களில் சிமெண்டு தடுப்பு கற்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் கனரக வாகனங்கள் சர்வீஸ் சாலையில் நிறுத்தப்படுவது தடுக்கப்பட்டது.

    எனினும் அந்த தடுப்பு கற்களை சிலர் நகர்த்தி விட்டு கனரக வாகனங்களை தற்போது நிறுத்தி வருகின்றனர். இதையடுத்து செங்குன்றம் போக்குவரத்து உதவி கமிஷனர் மலைச்சாமி போக்குவரத்து ஆய்வாளர் சோபிராஜ் ஆகியோர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். சர்வீஸ் சாலையில் வைக்கப்பட்டு உள்ள தடுப்பு கற்களை அகற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக திருவொற்றியூர் முதல் மீஞ்சூர் வரை நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பாக விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • மாணவி மாயமானார்.
    • சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகேயுள்ள குன்னூர் ராஜீவ் காலனியை சேர்ந்த 17 வயதுடைய பெண் கிருஷ்ணன் கோவிலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் அரசு இறுதித்தேர்வில் தோல்வியடைந்தார். இதனால் குடும்பத்தினர் கண்டித்தனர். இதில் விரக்தியடைந்த மாணவி சம்பவத்தன்று மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி ரிசர்வ்லைன் நேருஜி நகரை சேர்ந்தவர் கணேஷ்கு மார்(33). கடந்த சில மாதங்களாக இவருக்கும், இவரது மனை விக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த கணேஷ்குமார் திடீரென மாயமானார். சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • வாகன ஓட்டிகளிடம் விசாரணை நடத்தினர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ஜவகர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். இதை தொட ர்ந்து அவர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று குற்ற செயல்கள் தடுப்பது குறித்து போலீ சாருக்கு அறிவுரை கூறி ஆய்வு செய்து வருகிறார்.

    இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜவகர் மாவட்டத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம், லாட்டரி சீட்டுகள் விற்ப னை, குட்கா மற்றும் ரவுடிகள் செயல்பாடு போன்ற சட்ட விரோத செயல்களை ஒழிக்கவும், மேலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களை தடுக்க மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் போலீ சார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

    மேலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்துகிறார்களா? என்பதை போலீசார் தீவிரமாக கண்காணித்து அதை தடுக்க நடவடிக்கை வேண்டும். இதே போல் பொதுமக்கள் புகார் மற்றும் அவர்களது பிரச்சினைகள் குறித்து விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு உத்தரவின் படி புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் பு.புளியம்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வரும் வாகனங்களை கண்காணித்து வாகன ஓட்டிகளிடம் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து பவானிசாகர் ரோடு, கோவை ரோடு, நால்ரோடு, சோதனை சாவடி பகுதி, நம்பியூர் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியை தீவிர ப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே வடகரையாத்தூர் ஊராட்சி வி.கரப்பா ளையம் பகுதியில் கடந்த மார்ச் 11-ந் தேதி இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
    • போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி உண்மை யான குற்றவாளி களை கைது செய்ய வேண்டும் என ஜேடர்பா ளையம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே வடகரையாத்தூர் ஊராட்சி வி.கரப்பா ளையம் பகுதியில் கடந்த மார்ச் 11-ந் தேதி இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டைகையில் பணிபு ரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும், வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரியும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், வட மாநில தொழி லாளர்கள் பணிபுரியும் வெல்ல ஆலை கொட்ட கைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி பஸ் போன்றவற்றிற்கு தீ வைப்பு சம்பவங்களும் நடந்து வந்தது.

    இதையடுத்து, ஜேடர்பா ளையம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி இரவு, வி.புதுப்பாளையம் பகுதியில் முத்துசாமி என்பவரது வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகையில் தூங்கிய வட மாநில தொழிலா ளர்கள் 4 மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த பரபரப்பு அடங்கு வதற்குள், நேற்று முன்தினம் இரவு ஜேடர்பா ளையம் பகுதியைச் சேர்ந்த முரு கேசன் என்ப வர் தோப்பில் இருந்த 600-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் சில பாக்கு கன்றுகளை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். வாழை தோப்பின் உரிமையாள ரான முருகேசன், முத்துசாமியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து தகவல் அறிந்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமை யிலான போலீசார் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும் மொளசி மற்றும் ஜேடர்பா ளையம் பகுதிகளை சேர்ந்த, படுகொலை செய்யப்பட்டு இளம்பெண்ணின் சமூகத்தை சேர்ந்த 5-க்கும் மேற்பட்ட இளைஞர்களை பிடித்து, போலீசார் ரகசிய இடத்தில் வைத்து நேற்று இரவு முதல் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே வட மாநில தொழிலாளர்கள் மீது தீ வைத்த சம்பவத்தன்று, நள்ளிரவு 2.30 மணி அளவில் கரப்பாளையம் பகுதியில் குடியிருக்கும் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் உறவினர்கள் வீடுகளுக்கு சென்ற போலீசார், அங்கு தூங்கிக் கொண்டிருந்த வர்களை தட்டி எழுப்பி, அவர்களது கைகள், துணி, உடலை நுகர்ந்து பார்த்து சோதனை செய்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி யடைந்த அவர்கள், ஏன் எங்கள் சமூகத்தை மட்டும் குறி வைத்து இது போன்ற தேவையற்ற முறையில் தொந்தரவு செய்கிறீர்கள்? என்று போலீசாரிடம் கேட்டனர். ஆனால் போலீ சார் அதற்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

    இப்பகுதியில் எந்த அசம்பாவித சம்பவங்கள் நடந்தாலும் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் சமூ கத்தை சேரந்தவர்களை மட்டும் குறிவைத்து சம்பந்தப்பட்ட வழக்கு களில் கைது செய்து சிறை யில் அடைத்து வருவதாக கரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் போலீசார் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

    போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி உண்மை யான குற்றவாளி களை கைது செய்ய வேண்டும் என ஜேடர்பா ளையம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது போன்ற தவறான செயல்பாடுகளால் பொதுமக்கள் போலீசார் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழந்து விடு கின்றனர். இதனால் தேவை யற்ற போராட்டங்களை போலீ சார் சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்றனர்.

    • அரிசி ஆலையில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
    • புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு ரேஷன் அரிசியை கடத்தும் கும்பலை பிடித்து வருகின்றனர்.

    இந்நிலையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் அருண் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி, ஈரோடு சரக காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் ஈரோடு மாவட்ட இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் சென்னிமலையில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர் பொருள் வாணிபக்கழக அரிசி ஆலையில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து மற்ற பகுதியில் உள்ள அரிசி ஆலைகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரேஷன் அரிசி சம்பந்தமாக முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருக்க அரிசி உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

    இது தொடர்பாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

    • கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக வாட்ஸ் அப்பில் புகார் தெரிவிக்கலாம்
    • கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

    கன்னியாகுமரி :

    விழுப்புரம், செங்கல் பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயத்திற்கு பலியானவர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் ஆஸ்பத்திரி களில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய தடுப்பு வேட்டையில் போலீசார் இறங்கியுள்ளனர். குமரி மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் விற்பனை எதுவும் நடைபெறுகிறதா என்பது குறித்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர விட்டார்.

    இதைத்தொடர்ந்து நாகர்கோவில், தக்கலை மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை மேற் கொண்டனர். குறிப்பாக மலையோர கிராமங்களில் ஏற்கனவே கள்ளச்சாராய விற்பனை தொடர்பான வழக்குகள் உள்ளது. அந்த பகுதிகளில் போலீசார் மீண்டும் சோதனை மேற் கொண்டனர். ஆனால் கள்ளச்சாராயம் எதுவும் சிக்கவில்லை.

    கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பான தகவல் தெரிந்தால் பொது மக்கள் 70103 63173 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் தகவல் தெரி விக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

    • திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டு நடந்தது.
    • தென்கரை, கும்மங்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தென்கரை கிராமத்தில் ஆகாச கருப்பர் அந்த நாச்சி அம்மன் கோவிலில் பூச்செரிதல் மற்றும் பால்குட சித்திரை திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய மஞ்சுவிரட்டு நடந்தது. முன்னதாக தென்கரை, கும்மங்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் கண்மாய் மற்றும் வயல்வெளி பகுதிகளில் அவிழ்த்து விடப்பட்டது. திரளோனோர் இதில் கலந்துகொண்டு அவிழ்த்து விடப்பட்ட காளைகளை அடக்க முயன்றனர். விழாவிற்கான பணிகளை வாசுதேவன் அம்பலம், தலைவர் சுப்பிரமணியன், சொக்கலிங்கம், ராமராஜன், கவுதமன் மற்றும் ஊர் மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமையில் திருப்பத்தூர் நகர் காவல் ஆய்வாளர் கலைவாணி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    ×